Jump to content

இந்தியா கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சி


Recommended Posts

இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் பயிற்சியளிக்கவுள்ளது. இதுதவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் மன்மோகன் சிங் பிரேஸிலில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். பிரேசில் அதிபர் லூயிஸ் இனசியோ லுலா டிசில்வாவை அவர் சந்தித்து பேசினார். இருதரப்பு விவகாரங்கள் மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து இருதலைவர்களும் பேச்சு வார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சு வார்த்தைக்குப் பின்னர் இரு தலைவர்களும் இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கையில், ஐ.நா. அமைப்பை சீர்திருத்த வேண்டும். தற்போதைய உலக சூழ்நிலைகளுக்கேற்ப ஐ.நாவின் செயல்பாடுகள் அமைய வேண்டியது அவசியம்.

இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய நாடுகள் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் நிரந்தர உறுப்பினர் அந்தஸ்து பெற தொடர்ந்து பாடுபடுவோம்ம்.

அதிக அதிகாரம் படைத்த, ஜனநாயக ரீதியிலான அமைப்பாக ஐ.நா. உருவெடுத்தால் மட்டுமே மாறி வரும் உலக சூழ்நிலைக்கேற்ப ஐ.நாவால் திறம்பட செயல்பட முடியும் என இந்தியாவும், பிரேசிலும் நம்புகின்றன என இரு தலைவர்களும் கூறியுள்ளனர்.

பின்னர் மன்மோகன் சிங்கும், பிரேசில் அதிபரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது மன்மோகன் சிங் கூறுகையில், பிரேசில் நாட்டு சுற்றுப்பயணம் எனக்கு மிகுந்த நிறைவையும், மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் மீது எப்போதும் எனக்கு அன்பு உண்டு. இந்தியாவைப் போலவே பிரேசிலும் பரந்து விரிந்த மிகப் பெரிய ஜனநாயக நாடாகும். இந்தியாவைப் போலவே பன்முகம் கொண்ட ஜனநாயக நாடு பிரேசில். பிரேசில் அதிபர் லுலா இந்தியாவின் சகோதரர், நண்பர் மாதிரி. மிகத் திறமையுடன் பிரேசில் நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறார் லுலா.

அவரது தலைமையில் பிரேசில் வளமை பெற்று வருகிறது. மிகச் சிறந்த தலைவராக லுலா விளங்குகிறார். இந்தியாவும், பிரேசிலும் இணைந்து செயல் படவேண்டும் என்பதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகிறார் லுலா. இது எனக்கு பெரும் மகிழ்ச்சி தருகிறது. நமக்கு முன்பு மிக நீண்ட பயணமும், பாதையும் காத்துள்ளது. தூரத்தைப் பற்றிக் கவலைப்படாமல் இரு நாடுகளும் இணைந்து பயணத்தை தொடரும் என நான் நம்புகிறேன்.

பிரேசிலுக்கு நான் வருவது இதுவே முதல் முறை. ஆனால் இங்கு வந்த பின்னர் பிரேசில் மக்களின் அன்பு என்னை வெகுவாக கவர்ந்து விட்டது. என் இதயத்தின் ஒரு பகுதியை இங்கேயே விட்டுச் செல்கிறேன் என்றார் மன்மோகன் சிங்.

இதற்கிடையே, இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்காகியுள்ளன. அதில் ஒன்றாக இந்திய கால்பந்து அணிக்கு பிரேசில் நாட்டு பயிற்சியாளர் நியமிக்கப்படவுள்ளார்.

இது தவிர இந்தியாவும், பிரேசிலும் கால்பந்து வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை பரிமாற்றம் செய்து கொள்ளவும் ஒப்பந்தத்தில் வழி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கால்பந்தில் கோலோச்சி வரும் பிரேசில் நாட்டின் உயரிய பயிற்சியும், அனுபவமும் இந்திய கால்பந்து வீரர்களுக்குக் கிடைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் நடந்து முடிந்த ஜெர்மனி உலகக் கால்பந்து போட்டியில், போர்ச்சுகல், ஜப்பான் ஆகிய அணிகளுக்கு பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர்கள் தான் பயிற்சியாளர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் ஈஸ்ட் பெங்கால் கால்பந்து அணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்த கார்லோஸ் ரொபர்டோ பெரைரா சமீபத்தில் தான் நியமிக்கப்பட்டார் என்பது நினைவிருக்கலாம். விரைவில் இந்திய அணியின் பயிற்சியாளராக பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர் நியமிக்கப்படும் சூழ்நிலை தற்போது உருவாகியுள்ளது.

நிச்சயமாக இது இந்திய கால்பந்து ரசிகர்களுக்கு பெரும் சந்தோஷம் தரும் செய்தியாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.

http://thatstamil.oneindia.in/news/2006/09.../13/brazil.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்?  
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.