Jump to content

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி 2014


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டி

 

எதிர்வரும் ஆனி மாதம் 12 ம் திகதி பிரேசில் நாட்டின் சௌ பௌலோ நகரில் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்க உள்ளது.

இறுதி ஆட்டம் 13 ம் திகதி ஆடி மாதம் ரியோ டெ ஜெனீரோ நகரில் நடைபெறும். பிரேசில் நாட்டின் 12 நகரங்களில் விளையாட்டுக்கள் நடைபெற உள்ளன.

 

பிரேசில் உதைபந்தாட்டச் சம்மேளனம் தனது நூற்றாண்டு விழாவைக் காணூம் நிலையில் இரண்டாவது முறையாக பிரேசிலில் நடைபெறும் உலகக் கிணத்திற்கான போட்டிகளுக்கு சகல நாடுகளும் தங்கள் ஆதரவைத் தெரிவித்திருந்தன.

தென் அமெரிக்காவில் இது ஐந்தாவது முறையாக நடைபெறுகின்றது.

1978 ஆம் ஆண்டில் ஆர்ஜெண்டீனாவில் நடைபெற்றது.

 

இம்முறை நடைபெறும் போட்டிகளில் ஒரு முக்கியத்துவம் உள்ளது.

நடைபெறும் விளையாட்டுக்கள் அனைத்திலும் கோல் கம்பக் கோடுகளை

அவதானிப்பதற்கான புதிய தொழில் நுட்பத்தை நடைமுறைப் படுத்துகின்றனர்.

இந்தத் தொழில் நுட்பத்தினால் மத்தியஸ்த்தர்களால் களவாடப்படும் கோல்களுக்கு இனி இடம் இருக்காது. கோல்க்கம்பக் கோடுகளை முற்றாகப் பந்து தாண்டிவிட்டால் கோல்க் கம்பத்தில் பொருத்தப்பட்டிருக்கும் ஏழு கமெராக்களும் உடன்செயற்பட்டு ஒரு நிமிடத்தில் மத்தியஸ்த்தர் கைகளில் கட்டியிருக்கும் கருவிக்குத் தகவலை அனுப்பிவிடும்.

 

உலகக்கிண்ணத்திற்காக 32 நாடுகள் முதற்சுற்றில் குழு நிலையில் போட்டியிடுகின்றன.

இரண்டாவது சுற்றில் குழுநிலையில் முதல் இரண்டு இடங்களையும் பெறும்16 நாடுகள் தொடர்ந்து விளையாடும் தகுதியினைப் பெறுகின்றன.

இரண்டாவது சுற்றில் வெற்றிபெறும் 8 அணிகள் காலிறுதியிலும் தொடர்ந்து 4 அணிகள் அரையிறுதி 2 அணிகள் இறுதி ஆட்டம் எனத் தொடர்ந்து முன்னேறலாம்.

 

முதற்சுற்றுக்குத் தெரிவான அணிகள்

 

ஐரோப்பா 13 அணிகள்

பெல்ஜியம் கிரேக்கம் ரஸ்யா,பொஸ்னியாவும் ஹெர்செகோவினா,

இத்தாலி,சுவிஸ்,ஜேர்மனி,குரோசியா,ஸ்பெயின்,இங்கிலாந்து,

ஒல்லாந்து, பிரான்ஸ், போத்துக்கல்

 

தென் அமேரிக்கா 6 அணிகள்

பிரேசில்,ஆர்ஜென்ரீனா,சிலி,எக்குவடோர், கொலம்பியா,உருகுவே

 

ஆபிரிக்கா 5 அணிகள்

அல்ஜீரியா, நைஜீரியா, கானா, கமேரூன், ஐவரி கோஸ்ற்

 

ஆசியா 4 அணிகள்

அவுஸ்திரேலியா ஜப்பான்,ஈரான்,தென் கொரியா

 

வட அமேரிக்கா 4 அணிகள்

 

கோஸ்ரா றிக்கா , ஹொண்டூராஸ், மெக்சிக்கோ,அமேரிக்கா

 

 

குழு நிலை விபரம்

 

குழு ஏ

பிரேசில்,குராசியா,மெக்சிக்கோ,கமேரூன்,

 

குழு பி

 

ஸ்பெயின்,ஒல்லாந்து,சிலி,அவுஸ்திரேலியா

 

குழு சி

கொலம்பியா,கிரேக்கம்,ஐவரி கோஸ்ற் ,ஜப்பான்

 

குழு டி

 

உருகுவே, கோஸ்ரா றிக்கா , இங்கிலாந்து, இத்தாலி

 

குழு ஈ

சுவிஸ், எக்குவாடோர்,பிரான்ஸ்,ஹொண்டூராஸ்

 

குழு எவ்

ஆர்ஜென்ரீனா, பொஸ்னியாவும் ஹீர்செகோவினாவும்,ஈரான், நைஜீரியா

 

குழு ஜி

 

ஜேர்மனி,போத்துக்கல்,கானா,அமேரிக்கா

 

குழு எச்

பெல்ஜியம் ,அல்ஜீரியா, ரஸ்யா,தென் கொரியா

 

 

முதற்சுற்று

 

1)பிரேசில் - குராசியா

2)மெக்சிகோ - கமேரூன்

3)ஸ்பெயின் - ஒல்லாந்து

4)சிலி - அவுஸ்திரேலியா

5)கொலம்பியா - கிரேக்கம்

6)ஐவரி கோஸ்ற் - ஜப்பான்

7)உருகுவே - கோஸ்ரா றிக்கா

8)இங்கிலாந்து - இத்தாலி

9)சுவிஸ் - எக்குவாடோர்

10)பிரான்ஸ் - ஹொண்டூராஸ்

11)ஆர்ஜென்ரீனா - போஸ்னியா ஹெர்செகோவினா

12)ஈரான் - நைஜீரியா

13)ஜேர்மனி - போத்துக்கல்

14)கானா - அமேரிக்கா

15)பெல்ஜியம் - அல்ஜீரியா

16)ரஸ்யா - தென் கொரியா

17)பிரேசில் - மெக்சிக்கோ

18)கமெரூன் - குராசியா

19)ஸ்பெயின் - சிலி

20)அவுஸ்திரேலியா - ஒல்லாந்து

21)கொலம்பியா - ஐவரி கோஸ்ற்

22)ஜப்பான் - கிரேக்கம்

23)உருகுவே - இங்கிலாந்து

24)இத்தாலி - கோஸ்ரா றிக்கா

25)சுவிஸ் - பிரான்ஸ்

26)ஹொண்டூராஸ் - எக்குவாடோர்

27)ஆர்ஜென்ரீனா - ஈரான்

28)நைஜீரியா - பொஸ்னியா ஹெர்செகோவினா

29)ஜேர்மனி - கானா

30)அமேரிக்கா - போத்துக்கல்

31)பெல்ஜியம் - ரஸ்யா

32)தென் கொரியா - அல்ஜீரியா

33)கமெரூன் - பிரேசில்

34)குராசியா - மெக்சிக்கோ

35)அவுஸ்திரேலியா - ஸ்பெயின்

36)ஒல்லாந்து - சிலி

37)ஜப்பான் - கொலம்பியா

38)கிரேக்கம் - ஐவரி கோஸ்ற்

39)இத்தாலி - உருகுவே

40)கோஸ்ரா றிக்கா - இங்கிலாந்து

41)ஹொண்டூராஸ் - சுவிஸ்

42)எக்குவாடோர் - பிரான்ஸ்

43)நைஜீரியா - ஆர்ஜென்ரீனா

44)பொஸ்னியா ஹெர்செகோவினா - ஈரான்

45)அமேரிக்கா - ஜேர்மனி

46)போத்துக்கல் - கானா

47)தென் கொரியா - பெல்ஜியம்

48)அல்ஜீரியா - ரஸ்யா

 

 

 

 

இரண்டாவது சுற்று

 

 

49)வெற்றியாளர் குழு ஏ - இரண்டாமிடம் குழு பி

50)வெற்றியாளர் குழு சி - இரண்டாமிடம் -கு ழு டி

 

53)வெற்றியாளர் குழு ஈ - இரண்டாமிடம் குழு எவ்

54)வெற்றியாளர் குழு ஜி -இரண்டாமிடம் குழு எச்

 

 

 

 

51)வெற்றியாளர் குழு பி -இரண்டாமிடம் குழு ஏ

52)வெற்றியாளர் குழு டி - இரண்டாமிடம் குழு சி

 

55)வெற்றியாளர் குழு எவ் - இரண்டாமிடம் குழு ஈ

56)வெற்றியாளர் குழு எச் - இரண்டாமிடம் குழு ஜி

 

 

 

கால் இறுதி ஆட்டம்

 

57)வெற்றியாளர் 53 - வெற்றியாளர் 54

58)வெற்றியாளர் 49 - வெற்றியாளர் 50

 

 

59)வெற்றியாளர் 55 - வெற்றியாளர் 56

 

60)வெற்றியாளர் 51 - வெற்றியாளர் 52

 

 

அரை இறுதி ஆட்டம்

 

61)வெற்றியாளர் 57 - வெற்றியாளர் 58

62)வெற்றியாளர் 59 - வெற்றியாளர் 60

 

 

 

மூன்றாவது இடத்துக்கான ஆட்டம்

 

63)தோல்வியடைந்தவர் 61 - தோல்வியடைந்தவர் 62

 

 

இறுதி ஆட்டம்

 

64)வெற்றியாளர் 61 - வெற்றியாளர் 62

 

இத்திரியில் உங்கள் கருத்துக்களையும்.....

நான் வேறு திரியில் ஆரம்பிக்க இருக்கும் யாழ் கள உறவுகளுக்கிடையிலான உலகக்கிண்ண உதைபந்தாட்டப் போட்டி சம்பந்தமான வினா விடை போட்டியில் உங்கள் ஆதரவையும் தாருங்கள்

 

 

 

Link to comment
Share on other sites

  • Replies 561
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆட்டம் ஆரம்பிக்கட்டும்  வாத்தியார்...! :D

Link to comment
Share on other sites

எனது ஆதரவு பொதுவில் பிறசில் அணிக்குத்தான்.. :D எப்பவும் ஜேர்மனி, இத்தாலி அணிகளுக்கு எனது ஆதரவு இருந்ததில்லை.  :huh:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
ஒரே கொலையும் கொள்ளையுமா இருக்கு போவோமா விடுவோமா என்று யோசிக்கிறேன்.
பல வருடங்கள் முன்பு போவது என்று எண்ணி இருந்தேன் ....... இப்போ அங்கிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இல்லை.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகைக்கு நன்றி சுவி அண்ணா


அர்ஜுன் அண்ணா நுழைவுச் சீட்டும் வாங்கி விட்டார் என் நினைக்கிறேன்.


எனது ஆதரவு பொதுவில் பிறசில் அணிக்குத்தான்.. :D எப்பவும் ஜேர்மனி, இத்தாலி அணிகளுக்கு எனது ஆதரவு இருந்ததில்லை.  :huh:  :D

 

பிரேசில் எப்போதும் சீரான விளையாட்டு நடத்துவதில்லை.
விளையட்டு வீரர்களின் மன நிலையே அவர்களின் விளையாட்டை தீர்மானிக்கின்றது.

 

இந்த முறை அமேரிக்கா ஜேர்மனிய பயிற்சியாளருடன் களமிறங்குகின்றார்கள். அதுவும் ஜேர்மனியக் குழுவிலேயே இருப்பதால் விளையாட்டுக்கள் சுவாரசியமாக இருக்கும். 
 


 

ஒரே கொலையும் கொள்ளையுமா இருக்கு போவோமா விடுவோமா என்று யோசிக்கிறேன்.
பல வருடங்கள் முன்பு போவது என்று எண்ணி இருந்தேன் ....... இப்போ அங்கிருந்து வரும் செய்திகள் நல்லவையாக இல்லை.

 

 

உதைபந்தாட்டம் நடக்கும் பொழுது எல்லோரும் அமைதியாகிவிடுவார்கள் என நினைக்கிறேன். :)
 
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=5_FF9qhvo3g

 

 

இந்தக் காணொளியில் முதலில்  மஞ்சள் நிறத்துடன் விளையாடும் டோற்முண்ட் அணியினர் அடித்த கோலை நடுவர் ஏற்றுக்கொள்ளவில்லை. அதன் பின்னர் நேர நீடிப்பின் பின்னர் எதிரணியினர் (முனிச்) 2 . 0 கோல்களால் ஜேர்மன் கிண்ணத்தைக் கைப்பற்றினர்.
கமெராக்களைப் பொருத்திப் புதிய தொழில் நுட்பத்தை ஏற்படுத்தியிருந்தால் இந்த நிலை வந்திருக்காது.

ஒரு மைதானத்திற்கான இந்தப் புதிய தொழில் நுட்பத்திற்கான செலவு  அண்ணளவாக 500.000 யூரோக்கள் ஆகும்.
ஜேர்மனியில் உள்ள 36 விளையாட்டுக்கழகங்களில் அரைவாசிக்கு மேற்பட்ட கழகங்கள் பொருளாதாரப் பிரச்சனையால் இந்தத் தொழில் நுட்பத்தை ஆதரிக்கவில்லை
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2.miroslav klose ஜேர்மனி
22.david  villa ஸ்பெயின்
35. diego  forlan உருகுவே  
35. thierry  henri பிரான்ஸ்

இதுவரை உலகக்  கிண்ணப்போட்டிகளில்  அதிக கோல்களை அடித்தவர்களின் தரவரிசையில் மேலே குறிப்பிட்ட இடங்களில் இருக்கும்  அந்த நாட்டு வீரர்களும் இந்த  முறை விளையாடுகின்றனர்.

 

Link to comment
Share on other sites

இந்தமுறை பிறசில் அணியில் நேமார் தவிர வேறு நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லை.. மற்ற நாடுகள் எல்லாம் வாய் பார்க்க பிறசில் அள்ளிக்கொண்டு போகப்போகுது.. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Group A

403482961.jpg

பிரேசிலை தவிர மற்ற ஏனைய மூன்று அணிகளும் திறமையில் சமமான அணிகள். இந்த மூன்று அணிகளும் தங்களுக்குள் அடிபட்டு புள்ளிகளை பெற்றால் தான் உண்டு. பிரேசிலிற்கு குழுவில் முதலாவது இடம் தவிர்க்கமுடியாத இடமாக அமைய வேண்டும் என்பது கட்டாயம். இதுவே அவர்களின் சறுக்கலிற்கும் இடமளிக்கலாம் (அப்படி நடக்க சந்தர்ப்பங்கள் குறைவு). 

குழுநிலை ஆட்டத்திற்கு பின்னர் பிரேசில் மோத வேண்டிய அணிகள் Spain அல்லது Netherland. இங்கேயே ஒரு பெரிய அணி வெளியேறவுள்ளது. இந்த நிலையை தாண்டுகின்ற அணி இறுதியாட்டம் வரை முனறேலாம் என்பது எனது கணிப்பு. 

Group B

2659115522.jpg

பலமான அணிகளை கொண்ட குழுவில் இதுவும் ஒன்று. 2010ஆம் ஆண்டு இறுதியாட்டத்தில் மோதிய அணிகள் மீண்டும் மோதவுள்ளன. Spain மற்றும் Netherland அணிகள புதிய பல வீரர்களுடன் களமிறங்குகின்றார்கள். முதலாவது இடத்திற்கு இந்த அணிகள் இரண்டும் மோதிக்கொள்ளும் என எதிர்பார்க்கலாம். Chile நாடு இரண்டாவது இடத்திற்கு முயன்றுபார்கும். 

Australia இந்த உலகக்கிண்ணத்தில் அனுபவத்தை தவிர வேறெதையும பெறமுடியாது.

 

Group C
3098624675.jpg

1998ஆம் ஆண்டிற்கு பின்னர் Colombia மீண்டும் களமிறங்குகிறது. உலகக்கிண்ணத்திற்கான தெரிவில் இவர்கள் மிகவும் திறமையாக விளையாடினார்கள். எனவே இந்த குழுவில் முதலாவதாக வருவதற்குரிய திறமை இவர்களிடம் எதிர்பார்க்கப்படுகிறது. Japan மற்றும் Ivorcoast அணிகளிடம் திறமையான வீரர்கள் இருந்தாலும் முக்கியமான ஆட்டங்களில் ஏமாற்றத்தையே தந்துள்ளார்கள். இரண்டாமிடத்திற்கு இந்த இரு அணிகளும் மோதலாம். Greece ஏனைய மூன்று அணிகளிடமும் தட்டிப்பறிக்கும் புள்ளிகளை பொறுத்தே இந்த குழுவில் 2-3ஆம் இடங்கள் தீர்மானிக்கப்படலாம். 

 

Group D

785793613.jpg

Group B ற்கு பிறகு கடினமான குழுவாக இதனை சொல்லலாம். 2010ஆம் ஆண்டு அரையிறுதி ஆட்டத்தில் ஆடிய Uruguay அணியில் பல திறமையான வீரர்கள் உள்ளனர். அத்துடன் இது அவர்களின் கண்டத்தில் நடப்பதால் இந்த குழுவில் 1-2 இடங்களிற்கு இவர்களிற்கே சந்தர்ப்பம் அதிகமுள்ளது. இத்தாலி அல்லது இங்கிலந்த குழுநிலையிலயே நின்றுவிடுவதற்கான வாய்ப்புக்கள் அதிகம். ழூன்று முன்னால் உலகசம்பியன்கள் ஒரு குழுவுக்குள் சந்திப்பதும் இதுவே முதல் முறை. Costa Rica அணிக்கு இது ஒரு விளம்பர பயணமாக அமையலாம். 

 

Group E

1842576466.jpg

சவுத் அமெரிக்காவில் தெரிவான அணிகளில் பலவீனமான அணி Ecuador மற்றும் உலககிண்ணத்தில் இதுவரை ஒரு ஆட்டத்திலும் வெற்றி பெறாத அணி Hoduras ஆகியன இந்த குழுவில் உள்ளன. 

 

Switzerland   மற்றும் France  ஆகிய அணிகள் அடுத்த சுற்றுக்கு தெரிவாகலாம். இந்த இரண்டு அணிகளும் எப்பொழுது எப்படி விளையாடுவார்கள் என்பதை கணிப்பது கடினம். Zidane காலத்திற்கு பின்னர் France  அணி தனது "வல்லரசு" பட்டத்தை இழந்துவிட்டது. சுவிசின் நிலை இதுவரை பெரிய அணிகளுடன் திறமையாக விளையாடிவிட்டு சிறிய அணிகளுடன் தோல்வியை தழுவியுள்ளனர். 2010 ஆண்டு Spain நாட்டை தோற்கடித ஒரே அணி என்பது குறிப்பிடத்தக்கது.

 

Group F

523961745.jpg

தெரிவான 32 கழகஙகளில் Iran மிகவும் பலவீனமான அணி. Nigeria ஆபிரிக்கா கிண்ணத்தை கைப்பற்றியிருந்தாலும் Argentinienவிடம் முதலாவது இடத்தை இழக்கும் என்று எதிர்பார்க்கலாம்.இந்த இரண்டு கழகங்களையும் சீண்டிபபார்க்க வருவது Bosnia அணி. முதல் முறையாக ஒரு உலகக்கிண்ணத்தில் பங்குபெற்றுகிறார்கள். சற்று முயன்றால் 2 இடத்தை எட்டிப்பிடிககலாம். 

 

Group G

1339751036.jpg

Germany இந்த குழுவில் முதலிடத்தை பெறும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது.  Portugal சென்ற ஆண்டின் சிறந்த உதைபந்தாட்ட வீரருடன் களமிறங்குகின்றது. அதுமட்டுமல்லாமல் அனைவரும் பல முக்கியமான கழகங்களில் விளையாடுகிறவர்கள். Germanyயை பொறுத்தவரை "Tournament luck" என்பது அவர்களிற்கு எப்பொழுதுமே கைகொடுத்துள்ளது. Ghana சிறந்த அணியாக இருந்தாலும் வந்து மாட்டியுள்ள இடம் வெளியேற முடியாதபடி உள்ளது. Boateng சகோதரர்கள் ஒருவர் Germany அணிக்கும் மற்றவர் Ghana  அணிக்கும் விளையாடுவது குறிப்பிடதக்கது. USA விற்கு குழுநிலையுடன் ஆட்டம் முடிந்துவிடும். இதன் பயிற்சியாளர் Germany நாட்டவர். 2006ஆம் ஆண்டு Germany அணிக்கு பயிற்சியாளராக இருந்தவர். பல சுவாரஸ்யமான தகவல்கள் அடங்கிய குழு இது. 

 

Group H

2760887878.jpg

Belgium  உலகக்கிண்ணத்திற்கான தெரிவு போட்டிகளில் மிகவும் திறமையாக விளையாடியது குறிப்பிடத்தக்கது. நீண்ட நாள் பயணததின் பின்னர் மிகவும் திறமையான வீரர்களுடன் கழமிறங்குகின்றார்கள். பல முன்னனி கழங்களில் இவர்களின் வீரர்கள் விளையாடுகின்றார்கள். எனவே குழுநிலையில் அனைத்து போட்டிகளையும் இவர்கள் வெல்வார்கள் என எதிர்பார்க்கலாம். South Korea மற்றும்  Russia  இரண்டாவது இடத்திற்கு மோதிக்கொள்ளும். Algeria வந்தவழியே திரும்ப வேண்டியது தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலக கிண்ணத்தின் மறுபக்கம்

 

இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில் பிரேசில் மக்களின் அதிகமானோர் இந்த உலககிண்ண போட்டிகளிற்கு எதிராக திரும்பிக்கொண்டிருக்கின்றனர். 
ஒதுக்கப்பட்ட நிதிகளில் மோசடி, ஊழல் என்று இந்தியாவிற்கு நிகரான நடைமுறைகள் காணப்படுகின்றன. 

 

சென்ற ஆண்டு நடாத்தப்பட்ட "சிறிய உலகக்கிண்ணப்போட்டி"யில் (Confederation Cup) இரண்டு லட்சத்திற்கு அதிகமான மக்கள் போராட்டங்களை நடத்தியிருந்தார்கள். இதில் முக்கியமாக இளையர்வகளின் பங்கே அதிகம். பிரேசில் நாட்டவர்களின் உதைபந்தாட்ட மோகம் என்பது எழுதித்தெரியவேண்டியதில்லை. ஆனால் பிரேசில் அரசாங்கமும் FIFAவும் நடந்துகொள்ளும் விதம் இவர்களை போராட்டக்காரர்களாக்கியது. 

 

wm-fussball-ausschreitungen-proteste.jpg

 

2008ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை நடாத்துவதற்கு பிரேசில் தெரிவாகியபோது அனைத்து மக்களும் மகிழ்ச்சிக்ககடலில் முழ்கினார்கள். உதைபந்தாட்ட ரசிகர்கள் பிரேசில் கிண்ணத்தை கைப்பற்றுவது உறுதி என்று கொண்டாடினார்கள். சாதாரண மக்கள் வரப்போகும் முதலீடுகள் தங்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தும் என மகிழ்ந்தார்கள். அப்போழுது பிரதமராக இருந்த Lula da Silva வின் பங்கு மிகவும் முக்கியமானது. பிரேசில் நாட்டை நல்ல வளர்ச்சிப்பாதையில் கொண்டுசென்றவர். ஏழ்மையை ஒளிப்பதற்கு சிறப்பாக பங்காற்றியவர். உலகக்கிண்ணம் பிரேசில் நாட்டிற்கு வழங்கப்பட்டதை அறிந்து இவர் ஆற்றிய உரையில் கண்ணீரும் கலந்தது (இப்பொழுது இவர் ஆட்சியில் இல்லை).

 

ஆனால் இன்றைய நிலமையோ வேறு.

 

மைதானங்கள் கட்டுவதற்காக மக்கள் தங்களின் இருப்பிடங்களைவிட்டு விரட்டியடிக்கப்பட்டார்கள். அப்படியிருந்தும் சில மைதானங்கள் இன்னும் முழுமைபெறவில்லை. இதுவரை நடந்த உலககிண்ணபோட்டிகளில் எந்த ஒரு நாடும் இப்படி பின் தங்கியிருக்கவில்லை. ஒவ்வொரு மைதானத்திற்கும் சிறப்பு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. 

போதைபொருள் கும்பல் ஒளிப்பு என்ற பெயரில் பல அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். ஆரம்பத்தில் வன்முறைகலாச்சாரத்தை ஒளிப்பதற்கு மக்களின் ஆதரவு இருந்தே வந்தது. அப்பாவிகள் கொல்லப்படும் போது எதிர்ப்பு அரசாங்கம் பக்கம் திரும்பியது. முதலில் சுட்டுவிட்டு பின்னர் இறந்தவர் பற்றி ஆராய்வதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. இதிலும் கறுத்த இளைஞர்கள் பலியாவதே மக்களை இன்னும் ஆத்திரமடைய செய்தது. 

 

பல நகரங்களில் அரச மருத்துவமனைகள் மிகவும் மோசமான நிலையில் காணப்படுகின்றன. பிசா வெளியிட்ட பட்டியலில் பிரேசில் 58இடத்தில் உள்ளது. மின்வெட்டு இங்கே இன்னொரு பிரச்சனை. மணிக்கணக்காக பேரூந்துகளில் நின்ற வண்ணம் பயணம் செய்து வெலைக்கு செல்லும் இளைஞர்கள். இப்படி பல அடிப்படை பிரச்சனைகளை தீர்க்க அரசு முன்வரவில்லை. மாறாக FIFAவை திருப்திப்படுத்துவதிலயே அரசாங்கம் அக்கறை செலுத்துகின்றது. இதனால் எழுந்த அமைதியான போராட்டங்களையும் அரசு வன்முறைகொண்டு நசுக்கமுயன்றது. 

 

Demonstrators-confront-Brazilian-riot-po

 

பிரேசில் மக்களின் போராட்டம் அரசாங்கத்தை மட்டும் எதிர்க்கவில்லை. FIFAவையும் சேர்த்தே எதிர்க்கின்றது. FIFAவின் தன்னிச்சையான போக்கே இதற்கு காரணம். முக்கியமான இடங்களில் FIFAதனது கடைகளை விரிவுபடுத்தி கொள்ளை லாபம் அடிக்கபோகின்றது. உள்நாட்டு மக்களிற்கு இதில் எதுவும் மிஞ்சாது எனலாம். ஒரு வருடத்திற்கு முன் 65வீதம் மக்கள் ஆதரவு தெரிவித்த நிலையில் தற்பொழுதும் வெறும் 48வீதமாக சுருங்கியுள்ளது. பலர் போராட்டக்காரர்களின் பக்கமே திரும்பிவிட்டனர். 

"இதுவரை நடைபெற்ற உலகக்கிண்ணங்களில் இதுவே சிறந்ததாக அமையும்" என்று அரசாங்கம் கொக்கரிக்க மறுமுனையில் "இங்கே உலகக்கிண்ணம் நடைபெறபோவதில்லை" என்று மக்கள் குரல் வலுக்கின்றது. மக்களின் கேள்விகளிற்கு அரசாங்கம் பதிலளிப்பதாக இல்லை. மாறாக உதைபந்தாட்ட ரசிகர்களால் வரப்போகும் வளர்ச்சி மற்றும் முதலீடுகளை உதாரணம் காட்டி தப்பிக்க முயல்கின்றது. 

இந்த ரசிகர்களின் வரவை எதிர்பார்த்து விலைவாசி பல மடங்கு உயர்ந்துவிட்டது. இதனால் அதிகம் பாதிக்கப்பபட்டது நடுத்தர மக்களே. 

 

இன்னொரு வேடிக்கை என்னவென்றால் FIFA 8 மைதானங்கள் மட்டுமே போதும் என்றது. ஆனால் அரசாங்கமோ 12 மைதானங்கள் கட்டிக்கொண்டிருக்கின்றது. மைதானம் கட்டும் பணிகளில் இதுவரை 8 ஊழியர்கள் உயிரழந்துள்ளனர். இந்த போட்டிகள் முடிந்தவுடன் இதில் பல மைதானங்கள் பாவனையற்றே போகும் வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளன. Manaus, Cuiabá மற்றும் Brasília போன்ற இடங்களில் இரண்டாவது லீக் அணிகள் கூட இல்லாத நிலையில் இந்த மைதானங்களை யார் பாவிக்கப்போகின்றார்கள் என்ற கேள்வி பதிலில்லாமல் உள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் தென்ஆபிரக்கா. பல மைதானங்களின் தற்போதைய பராமரிப்புச்செலவு முயல் வேகத்தில் செல்ல வருமானமோ ஆமை வேகத்தில் வந்துகொண்டுள்ளது. 

இதற்கு முதல் இருந்த அரசாங்கம் இந்த மைதானத்திற்கான செலவை தனியார் நிறுவனங்களிடமிருந்து பெறப்போவதாக அறிவித்தது. ஆனால் தற்பொழுது இதற்கான செலவு மக்களின் வரிப்பணத்திலே தங்கியுள்ளது. இந்த உலகக்கிண்ண போட்டிக்கான செலவு எவ்வளவு என்பதையும் அரசாங்கம் வெளிப்படையாக அறியதரவில்லை. 

 

ஒன்று மட்டும் தெளிவாக விளங்கிக்கொள்ள முடிகின்றது. FIFA கொள்ளை லாபம் பார்த்துவிட்டு இடத்தை காலிசெய்யப்போகின்றது. பின்விளைவுகளை பற்றி அது கவலைப்படபோவதில்லை. 

தனிப்பட்ட முறையில் இந்த உலகக்கிண்ண்போட்டியை நான் புறக்கணிக்கின்றேன். நேரில் சென்று பார்ப்பதாக ஒரு காலத்தில் திட்டமிட்டிருந்தேன். அதனை கைவிட்டு பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அங்கு போராடும் மக்களிற்கான ஆதரவாகவும் எனது மனதிருப்திக்காகவும் இந்த முடிவு. 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை பிறசில் அணியில் நேமார் தவிர வேறு நட்சத்திர ஆட்டக்காரர்கள் இல்லை.. மற்ற நாடுகள் எல்லாம் வாய் பார்க்க பிறசில் அள்ளிக்கொண்டு போகப்போகுது.. :lol:

 

இந்தமுறையும் கிண்ணம் ஐரோப்பாவில் தான் இருக்கும்

இருக்கின்ற பிரச்சனைக்குள் பிரேசில் இரண்டாவது சுற்றுத் தாண்டுமோ தெரியாது. :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மேலதிக இணைப்பிற்கும் விபரங்களுக்கும்  நன்றி ஊர்க்காவலன்
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசிலைப் பொறுத்தமட்டில்  காதலியா கால்பந்தாட்டமா என்றால் யோசிக்காமல் கால்பந்தாட்டத்தின் பக்கம் போய் விடுவார்கள் !

 

பிரான்ஸ் காதலியின் கரத்தைப் பற்றிக் கொண்டே  கால் பந்தாட்டத்தையும் ஒரு கை பார்ப்பார்கள். இம்முறை  வெற்றிக்கிண்ணம் பிரான்சுக்கே ! அந்தக் கிண்ணத்தில் சம்பெயின் நிரப்பி அத்தனைபேரும் ஆடுவதைப் பொறுத்திருந்து பாருங்கள் மக்களே...! :D

Link to comment
Share on other sites

நான் பிரேசிலுக்கு போகவில்லை வாத்தியார் .இரு மருமக்கள் போகின்றார்கள் .போன தடவை தென்னாபிரிக்காவிற்கும் போனார்கள் .

எங்களால் எதையும் செய்ய முடியாதற்கு  எங்களில் என்ன பிழை என்று இன்னமும் புரியவில்லை .  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

g_01_01,property=original.jpg

 

ஜேர்மன் அணி வெற்றிவாகை சூட என் வாழ்த்துக்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரேசில் 2014

உலக கோப்பை பைனலுக்கு அதிக முறை முன்னேறிய அணிகள் வரிசையில் பிரேசில் மற்றும் ஜெர்மனி அணிகள் முதலிடம் பிடித்தன. இவ்விரு அணிகள் தலா 7 முறை பைனலுக்கு முன்னேறின.

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஸ்காட்லாந்து அணி, எட்டு முறை (1954, 1958, 1974 முதல் 1990, 1998) பங்கேற்றது. இந்த அனைத்திலும் முதல் சுற்றுடன் திரும்பியது. இப்படி, 8 முறை முதல் சுற்றுடன் கிளம்பிய ஒரே அணி ஸ்காட்லாந்து மட்டுமே.

உலக கோப்பை தொடரில் அதிகமான கோல் அடித்து வெற்றி பெற்ற அணி என்ற சாதனை ஹங்கேரிக்கு உண்டு. 1982ல் எல் சால்வடார் அணியை, ஹங்கேரி 10–1 என்ற கோல்கணக்கில் வீழ்த்தியது.

இதுவரை நடந்த 19 உலக கோப்பை தொடர்களில், ஜெர்மனி அணி 1930, 1950 தவிர, 17ல் பங்கேற்றது. இதில் 11 முறை, அரையிறுதிக்கு முன்னேறியது. உலக கோப்பை கால்பந்து தொடரில், அதிகமுறை அரையிறுதிக்கு முன்னேறிய அணி ஜெர்மனி தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1998 இல் உலகக்கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2002 இல் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் குழு நிலையில் வெளியேறினார்கள் :D

2006 இல் உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி 2010 இல்  குழு நிலை விளையாட்டுக்களில் எதையும் வெல்ல முடியாமல் முதற் சுற்றுடன் வெளியேறினார்கள் :)





 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

1988 இல் உலகக்கிண்ணத்தை வென்ற பிரான்ஸ் 2002 இல் ஒரு கோல் கூட அடிக்க முடியாமல் குழு நிலையில் வெளியேறினார்கள் :D

2006 இல் உலகக்கிண்ணத்தை வென்ற இத்தாலி 2010 இல்  குழு நிலை விளையாட்டுக்களில் எதையும் வெல்ல முடியாமல் முதற் சுற்றுடன் வெளியேறினார்கள் :)

 

 

1998 ஆம் ஆண்டு வாத்தியார். . 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்

நடைபெற்ற 64 விளையாட்டுக்களில் 27 சிவப்பு மட்டைகள் காட்டப்பட்டது.

இதுவும் ஒரு சாதனையே

 

1998 இல் பிரான்சில் அதிகளவான 345 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.
2010 இல் 11 சிவப்பு அட்டைகளும் 104 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டன.
நன்றி ஊர்க்காவலன்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2006 இல் ஜேர்மனியில் நடந்த உலகக்கிண்ணப் போட்டியில்

நடைபெற்ற 64 விளையாட்டுக்களில் 27 சிவப்பு மட்டைகள் காட்டப்பட்டது.

இதுவும் ஒரு சாதனையே

 

1998 இல் பிரான்சில் அதிகளவான 345 மஞ்சள் அட்டைகள் வழங்கப்பட்டன.

2010 இல் 11 சிவப்பு அட்டைகளும் 104 மஞ்சள் அட்டைகளும் வழங்கப்பட்டன.

நன்றி ஊர்க்காவலன்

 

 

இனி வாத்தியாரோடை எட்டத்தை நிண்டுதான் கதைக்கோணும்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக்  கிண்ணப்  போட்டிக்கு 20 நாட்கள் இருக்கும் நிலையில் தனது பரீட்சார்த்த விளையாட்டில் ஸ்லோவாக்கியாவை 1 .0 எனும் நிலையில் ரஸ்ய அணி வெற்றிபெற்றுள்ளது.

ரஸ்ய அணிக்கு fabio capello  பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கிண்ணத்திற்கான உதைபந்தாட்டப் போட்டிகள் ஆரம்பிக்க இன்னும் 15 நாட்கள் உள்ள நிலையில் பிரான்ஸ் அணி தனது பாரீட்சார்த்தப் போட்டிகளில் ஒன்றான நோர்வே அணிக்கு எதிரான விளையாட்டில் 4:0 வெற்றிபெற்றுத் தனது அணி நிலையை உறுதி செய்துள்ளது. பிரான்ஸ் அணி இந்தமுறை பிரேசிலில் ஒரு பலமான அணியாகத் திகழ வாய்ப்புக்கள் உண்டு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
மே மாதம் நடைபெற்ற போட்டிகள்
 
GER.png          -       POL.png         0:0
Germany               Poland
 
 
NED.png         -       ECU.png           1:1
Netherlands         Ecuador
 
 
IRN.png         -       BLR.png           0:0
Iran                     Belarus
 
RUS.png         -       SVK.png           1:0
Russia                Slovakia
 
 
MKD.png          -      CMR.png           0:2
Macedonia       Cameroon
 
 
AUS.png          -      RSA.png            1:1
Australia         South Africa
 
 
BEL.png          -     LUX.png               5:1
Belgium          Luxembourg
 
 
USA.png          -      AZE.png              2:0
USA                   Azerbaijan
 
 
JPN.png          -       CYP.png             1:0
Japan                    Cyprus
 
 
FRA.png           -       NOR.png             4:0
France                  Norway
 
 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • @goshan_che உங்களுக்கு ஊரிலிருந்து வரும் பொருட்கள் Food Grade bags இல் பொதி செய்யப்பட்டனவா? நிச்சயமாக இல்லை. இவை கூட நோய்களுக்கான காரணியாக அமையலாம். மேலும் சிறீலங்காவில் ஓர்கானிக் பயிர்ச் செய்கை என்றால்  இரசாயனக் கிருமிநாசினிகள் பாவனையற்று விவசாயம் செய்தால் போதும் என்ற நிலையே காணப்படுகிறது. ஆனால் மாட்டு எரு பயன்படுத்தப்பட்டால் மாட்டின் உணவு கூட ஓர்கானிக் ஆக இருத்தல் வேண்டும். அதேபோல் தாவரக் கழிவுகள் பயன்படுத்தப்படும் போது அந்த தாவரங்கள் ஓர்கானிக் முறையில் வளந்திருக்க வேண்டும். இது ஓர் சங்கிலித் தொடர்…. 100% ஓர்கானிக் உங்களுக்கு பாரிய விவசாயத்தில்  கிடைக்காது.  
    • மிக்க நன்றி, உங்கள் ஆழமான கருத்துக்கு  "அறை வாங்கினேன் மறு கன்னத்திலும் ஏசுவே இனி என்ன செய்ய? குறை கூறும் சமூகத்தில் இருக்கும் வரை  ஏசுவே இனி என்ன செய்ய? கறை பிடித்த வம்பு பேசு பவர்களால்  ஏசுவே  நிம்மதி இழந்தாளே என்னவள்? சிறை வாழ்வு கொண்டு நான் இங்கு  ஏசுவே நிம்மதியைத் தேடுகிறேன்?"    
    • "The House of Representatives voted overwhelmingly to legalize same-sex marriage. The bill now goes to Thailand’s Senate. This would make Thailand the first country or region in Southeast Asia to pass such a law and the third in Asia, after Taiwan and Nepal. Mar 27 / 28, 2024 [CBC News, The new york times, The diplomat ::Asia, : AL JAZEERA .. etc ]" "ஒருபால் திருமணம்" / பகுதி 04  [நீங்கள் வேறு கருத்துகள் / நம்பிக்கைகள் கொண்டிருக்கலாம். நான் எனது தனிப்பட்ட கருத்தை இங்கு கூறுகிறேன். நான் எவரையும் அல்லது எந்த நம்பிக்கையையும் திறனாய்வு செய்யவில்லை. இதில் கூறியுள்ள கருத்துக் களின் தவறுகளை ஆக்கபூர்வமாக அறிவியல் கண்ணோட்டத்துடன்  விமர்சியுங்கள், அத்துடன் இதில் காணப்படும் கேள்விகளுக்கான, சந்தேகங்களுக்கான பதில்களை தரவுகளுடன் கூறுங்கள்]   விவசாய சமுதாயம் உலகில் முதல் எழுச்சி பெறும் பொழுது, உதாரணமாக, சுமேரியாவில், சமுதாயம் ஒரு நிலையான, ஓர் இடத்தில் தொடர்ந்து வாழக்கூடிய அமைப்பாக மாறியது. அதனால், குடும்ப வரிசையின் தொடர்ச்சியை உறுதிசெய்து, நிலையான சமூக அமைப்பை அந்த சமூகம் கோரவேண்டிய சூழ்நிலை உருவாகியது [the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability]. அதாவது திருமணத்தின் முதன்மை நோக்கம் உயிரியல் ரீதியாக அது அவரின் குழந்தை என்பதை உறுதிப் படுத்துவதே ஆகும் [to ensure that the man’s children are biologically his].   எனவே, சுமேரியாவின் தொடர்ச்சியான பண்டைய பாபிலோனில் [Babylon] பாலியல் உண்மையில் மிகவும் தாராளமாக பரந்த கொள்கையுடன் இருந்தாலும், அது ஒற்றை நபர்களுக்கு [single persons] மட்டுமே அங்கு காணப்பட்டது. ஆனால், திருமணம் ஒரு சமூக செயல்பாடாக, கடுமையாக, நெகிழ்வு தன்மையற்று கட்டுப்படுத்தப்பட்டது [marriage was rigidly stiff and controlled, as a social function]. சுமேரியன் காதல் பாடல்கள் இவ்வற்றை உறுதி படுத்துகின்றன. உதாரணமாக, கிமு 2000 ஆண்டுகளுக்கு முன் செய்யுள் வடிவத்தில் களிமண் பலகைகளில் எழுதப்பட்ட, உலகில் தோன்றிய முதல் இலக்கியமான கில்கமெஷ் காப்பியத்தில் [Epic of Gilgamesh/ written c. 2150 - 1400 BCE], முக்கிய கதாபாத்திரம் அங்கு கூறிய ஒன்றை ஒரு மேற்கோளாக காட்டலாம்.   “உங்கள் வயிறு நிரம்பட்டும் , உங்கள் உடைகள் சுத்தமாகட்டும் , உங்கள் உடல், தலை கழுவட்டும்; இரவும் பகலும் மகிழுங்கள், ஆடி பாடி மகிழுங்கள்; உங்கள் கைபிடிக்கும் குழந்தையை பாருங்கள், உங்கள் மனைவி உங்கள் மடியில் மகிழட்டும் ! இதுதான் மனிதர்களின் விதி”   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   இந்த பாடல் வரிகள் பாபிலோனியர்களின் காதல் பற்றிய எண்ணத்தை எமக்கு படம் பிடித்து காட்டுகிறது. ஆனால் இந்த 5000 ஆண்டு எண்ணம், இன்றைய எண்ணத்தில் இருந்து பெரிய வேறுபாடு ஒன்றையும் காட்டவில்லை. உதாரணமாக அன்றைய இன்னும் ஒரு பாடல் ஒன்று :   “தூக்கமே களைந்து விடு என் கைகள் காதலியை தழுவட்டும் ! நீ என்னுடன் பேசுவதால், நான் மடியும் மட்டும் இதயம் பூரிக்கும்! என் அன்பே, உன்னை நினைத்து நேற்று இரவு இமைகள் மூட மறுத்ததால் இரவு முழுவதும் விழித்திருந்தேன்!"   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   என்று கூறுகிறது. குழந்தைகளின் அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து, அதை உறுதிப்படுத்த வேண்டிய, ஒரு அமைப்பு ஒன்றை எவராவது வடிவமைக்க வேண்டின் அது கட்டாயம் அதிகமாக இரு பெற்றோர் அமைப்பு ஒன்றுக்கே வர நேரிடும். இது குழந்தைகளுக்கு இரண்டு பெரியவர்களின் நேரம் மற்றும் பணம் போன்றவற்றை அடையக்கூடிய வசதி இருப்பதை உறுதி செய்வது மட்டுமல்ல, தரமான பெற்றோர்சார்ந்த இயல்புகளையும் அவர்கள் அனுபவிக்கக் கூடிய ஒரு பொருத்தமான சூழ்நிலையையும் அவர்களுக்கு வழங்குகிறது [it also would provide a system of checks and balances that promoted quality parenting].   இங்கு நீங்கள் கவனிக்கக் கூடிய தன்மை என்னவென்றால், இரு பெற்றோர்களும், அந்த பிள்ளையின் உயிரியல் பெற்றோர் என்பதால், கட்டாயம், அதிகமாக, அவர்கள் குழந்தையுடன் நெருக்கமாக உறவு வைத்திருப்பதுடன், அந்தக் குழந்தைக்காக தியாகம் செய்யவும் தயாராக இருப்பார்கள். அது மட்டும் அல்ல, யாராவது ஒரு பெற்றோர் குழந்தையை துஷ்பிரயோகம் செய்யக்கூடிய சாத்தியத்தை குறைக்கிறது. நீங்கள் மனித வரலாற்றை நுணுக்கமாக பார்த்தால், பழமையான கலாச்சாரத்தில், திருமணம் என்பது, மனித இனப்பெருக்கத்தின், ஒரு தர்க்கரீதியான நீட்டிப்பாகும் [Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction]. எனவே, குடும்பமும் குடும்பங்களை சுற்றி அமைக்கப்பட்ட சமுதாயமும் நிலைத்து உயிர்வாழ்வதற்கு இது உதவுகிறது.   எப்படியாகினும், கடந்த நூறு ஆண்டுகளில் எம் மனித இனம் வியத்தகு மாற்றம் அடைந்துள்ளது. நாம் இன்று வேட்டுவ உணவுதிரட்டிகள் அல்லது விவசாய அடிப்படை சமூகங்கள் [hunter-gatherers or agriculturally based communities] அல்ல. நாங்கள் உயர் தொழில்நுட்பம் கொண்ட சமூகமாக இருக்கிறோம். இன்று எம்மிடம் தொலைபேசி, வானொலி, தொலைகாட்சி, விமானங்கள், ரயில்கள், கார்கள், மேம்பட்ட மருந்துகள், மரபணுப் பொறியியல் [genetic engineering], இணையம், பிறப்பு கட்டுப்பாடு, கருக்கலைப்பு, குளோனிங் அல்லது நகலி [cloning], சோதனைக் குழாய் குழந்தைகள், மற்றும் பல இருக்கின்றன.   நாம் இன்று கூடிய ஆண்டு உயிர் வாழ்கிறோம். பல காரணங்களால் இன்று மனித இனம் முன்னதை காட்டிலும் வேறு பட்டுள்ளது. அந்த வேறுபாடுகள் இன்று திருமணம் என்ற கட்டுக்கோப்பை பாதிக்கிறது அல்லது மாற்றுகிறது. உதாரணமாக, எம்மை இறப்பு பிரிக்கும் மட்டும் ["till death do us part"] என்ற அர்ப்பணிப்பு இன்று இல்லை. மேலும் அவர்கள் குடும்பமாக இருந்தாலும், தனித்தனியாக அல்லது வெவேறாக பல விடயங்களை கையாள முடியும். எனவே உங்கள் துணையை பெரிய கட்டுப்பாடுகள் அற்று தேர்ந்து எடுக்க முடியும். உதாரணமாக ஒரு பால் துணை.   ஆனால் என்னை பொறுத்த வரையில், ஒரு பால் கூட்டுக்கும் 'திருமணம்' என்று அழைப்பது தவறு என்று எண்ணுகிறேன். ஏன் என்றால் அதற்கு ஒரு தனித்துவமான நீண்ட காலம் ஏற்றுக்கொள்ளப்பட்ட மற்றும் வரையறுக்கப்பட்ட கருத்து உண்டு.   மேலும் marriage என்ற ஆங்கில சொல்லை எடுத்தால், அதில் உள்ள "MARRY" என்ற சொல் லத்தீன் சொல்லான maritus (married) ஆகும். இந்தோ ஐரோப்பியன் மூல சொல் mari இளம் பெண்ணை (young woman) குறிக்கிறது. “mother” [தாய்] க்கான பிரெஞ்சு சொல் mere or Matri , மேலும் திருமணத்திற்கான சொல் matrimony, இது matri+mony , என்று பிரிக்கலாம்.   இதில் mony , செயல், நிலை அல்லது நிபந்தனையை குறிக்கிறது. எனவே ஒரு பெண் தாய்மை அடைவதற்கான துவக்கத்தை உண்டாக்கும் நிலையை தெரியப்படுத்தும் சடங்கு எனலாம் [matrimony = matri + mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood].   பொதுவாக ஒரு இல்லறவாழ்வு அல்லது மண வாழ்க்கைக்குரிய உறவு [conjugal relations], பெண் தாய்மை அடைதல் ஆகும். அதனால் தான், ஒருபால் உறவை சட்டபூர்வமாக வலுப்படுத்தி, தெரிவிக்கும் சடங்குக்கு ஒரு பால் கூட்டு அல்லது அது மாதிரி இன்னும் ஒரு சொல்லை தேர்ந்து எடுக்கலாம் என்கிறோம்.   அல்லாவிட்டால் ஒரு குழப்ப நிலை மட்டும் அல்ல மனித சமுதாயமே தேங்கும் நிலைக்கு வரலாம் ?     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]  முற்றிற்று   "same-sex marriages" / Part 04     [You may have different opinions / beliefs from me. Your "comments" / "Answers" for any of my questions with facts and statistics as well as reasons concerning relevant issues are welcome. This will improve our understanding / knowledge further as well as correct our thoughts / actions. Please note that, I am not criticised any particular person / belief, only sharing my thought.]     With the introduction of agricultural civilisation, Such as Sumeria, the society demanded for stable arrangements because it ensured the continuation of the family line and provided social stability, in other words the primary purpose of the marriage is to ensure that the man’s children are biologically his. So, While sexuality in ancient Babylon was actually extremely liberal, that was only for single persons, and marriage was rigidly stiff and controlled, as a societal function.   `Sumerian love songs’ also attests to the commonality of deep romantic attachment between couples. In The Epic of Gilgamesh (dates back to Ancient Sumer), one of the first surviving written works of the human race itself, the main character can be quoted as saying:   “Let your belly be full, your clothes clean, your body and head washed; enjoy yourself day and night, dance, sing and have fun; look upon the child who holds your hand, and let your wife delight in your lap! This is the destiny of mortals.”   This line from The Epic of Gilgamesh paints a clearer picture of what the Babylonians thought of love. But love in Ancient Mesopotamia wasn’t at all that different from what it is today, also, as so writes a poet nearly 5,000 years ago:   “Sleep, begone! I want to hold my darling in my arms! When you speak to me, you make my heart swell till I could die! I did not close my eyes last night; Yes, I was awake all night long, my darling, thinking of you.”   Again during the third Tamil Sangam. We found marriage as a System in the ancient Tamil Grammar Book, Tholkappiyam, written by Tholkappiar, around 700 BC. Here he say "பொய்யும் வழுவும் தோன்றிய பின்னர் யர் யாத்தனர் கரணம் என்ப (1091)", meaning: He states that the society was being ruined by indiscriminate copulation, involving Lies, frauds. Hence the learned organised the system of marriage.   The historian Bertman writes, Among both the Sumerians and the Babylonians marriage was fundamentally an arrangement designed to assure and perpetuate an orderly society. Its prime intent was not only companionship but procreation; not only personal happiness in the present but communal continuity for the future. So marriage, as man & woman come together to form a family, is part of the culture more than 5000 years. Above all, Sumerians [ancestors of Tamils ?] were the first inventor of marriage system, as other first inventions such as writings,The Wheel, plow, sailboat, Agriculture and Irrigation.   A large and growing body of scientific evidence indicates that the intact, married family is best for children. If we were asked to design a system for making sure that children's basic needs were met, we would probably come up with something quite similar to the two-parent ideal. Such a design, in theory, would not only ensure that children had access to the time and money of two adults, it also would provide a system of checks and balances that promoted quality parenting.   The fact that both parents have a biological connection to the child would increase the likelihood that the parents would identify with the child and be willing to sacrifice for that child, and it would reduce the likelihood that either parent would abuse the child.   Further in Primitive culture, marriage was a logical extension of human reproduction and that society organised around the family to survive and for society to survive. It created a recognition of the idea of couples committing for life and raising children together and sharing the struggles of survival.   In general, these social rules had more benefits to society and helped our cultures and species survive. However in the last 100 years, the human race has dramatically changed. No longer we are tribes of hunter-gatherers or agriculturally based communities. We are a society of high technology. Now have telephones, radio, TV, airplanes, trains, cars, advanced medicine, genetic engineering, the Internet, birth control, abortion, cloning, test tube babies, and other things that affect society in general. We live twice as long as people did 200 years ago. In many significant ways, we are not really the same species of human as we were then.   Yes, genetically we are almost identical compared to 200 years ago, but with our new technologies, and the resulting cultural changes, there are a lot of significant differences. And those differences have made changes that directly affect marriage. For example, "till death do us part" is a lot longer commitment than it used to be. Also there is nothing that restricts individuals from committing to each other and deciding between themselves, that they are a couple, and that they intend to share their lives together. This includes people of the same sex as well as marriages between more than two people. These personal commitments are between individuals and we have freedom to choose whom we live with and whom we commit to without the State or society interfering in our personal lives.   Having said all this, my personal belief is that the title of marriage, and the word marriage, refers to the union of one man and one woman and that the word properly belongs to the heterosexual community. I base this on the biological fact of sexual reproduction and thousands of years of tradition and the biological family as the basis for my opinion.   If we open up the definition of marriage to include same sex union, then why limit it to two people? Why not three, four, or five people. Why not let people marry their pets? After all, your cat is much more likely to make a life long commitment to you than a human will and can be trusted to be more loyal and respectful of the relationship. Whatever two women / men choose to do in their private lives is nobody’s business but their own. Married love is not the same as the love between parent and child, or the love and affection between brother and sister, or other deep and lasting friendships. Sexual intercourse — not simply sexual stimulation — remains an essential element of marriage.   Where sexual intercourse is not possible in principle, marriage cannot exist. Same-sex partnerships, like friendships, can be deep and lasting, but they cannot be marriages because they lack the capacity for conjugal union. We see this truth clearly in the very etymology of the word marriage.   The word "MARRY" is from Latin maritus (married), from Indo-European “root” mari (young woman). French word for “mother” is mere or Matri [matrimony=matri+mony, Here, mony, a suffix indicating “action, state, or condition. ”Hence Matrimony refers to that that rites wherein a woman enters the state that inaugurates an openness to motherhood.].   The natural outcome of conjugal relations is that the woman becomes a mother, thus the connection between the words “conjugal” and “marriage.”   That is why we have no problem with civil partnerships, a new institution with a new purpose for same sex couples and any others.     [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna]   Ended         
    • முத‌ல் 5 இட‌த்தின் நிக்கும் அணிக‌ளில் 4அணிக‌ள் உள்ள‌ போகும்  மீத‌ம் உள்ள‌ அணிக‌ள் வெளிய‌..............................   ஜ‌பிஎல்ல‌ கோப்பை தூக்காத‌ அணிக‌ள் என்றால்   வ‌ங்க‌ளூர் ப‌ஞ்சாப் டெல்லி ல‌க்னோ இந்த‌ 4 அணிக‌ள்......................................    
    • வாழ்க்கை என்பது அவ்வளவு இலகுவானதல்ல. நாங்கள் இருவர் தான். எந்த மூன்றாவது நபருடைய உட்புகுதலும் கருத்துக்களும் வாழ்வை திரிபு படுத்திவிடும். அடுத்த வீட்டை பார்த்து எப்பொழுது நாம் எம் வாழ்வை அமைத்துக் கொள்ள முயல்கிறோமோ அத்துடன் எம் வாழ்வு கலைந்து விடும். அவனவன் கவலைகளை அவரவர் தலையணைகளே அறியும். நன்றி. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.