Jump to content

காய்,கனிகள் பிணி தீர்க்கும்.


Recommended Posts

நீரி­ழி­வைக் ­கட்­டுப்­ப­டுத்தும் கொய்யா.

 

கொய்­யாக்­க­னியின் சுவையை அறி­யா­த­வர்கள் யாரும் இருக்க முடி­யாது. கொய்யா முக்­க­னி­யான மா, பலா, வாழை இவற்­றிற்கு இணை­யாக வர்­ணிக்­கப்­படும் பழ­மாகும். மிகக் குறைந்த விலையில் அதிக சத்­துக்­களைத் தன்­ன­கத்தே கொண்ட பழம் இது.
1618524_234132356772773_1116495435_n.jpg
 
கொய்யா கோடைக்­கா­லங்­களில் தான் அப­ரி­மி­த­மாக விளையும். தற்­போது உயிரி தொழில் நுட்ப முறையில் வருடம் முழு­வதும் உற்­பத்தி செய்­யப்­பட்டு விற்­ப­னைக்கு வரு­கி­றது.
 
கொய்­யாவில் பல­வ­கைகள் உள்­ளன. தற்­போது விற்­ப­னைக்கு வரும் பழங்­களில் உள் சதைப்­ப­குதி வெள்ளை மற்றும் சிவப்பு நிறங்­களில் உள்­ளன. ஒரு சில வகை கொய்­யாவின் சதைப்­ப­குதி ரோஸ் நிறத்தில் காணப்­படும். இவை அனைத்தின் மருத்­துவப் பயனும் ஒன்­றுதான். கொய்­யாக்­க­னியின் சுவையைப் போல் அதன் மணமும் ரம்­மி­ய­மாக இருக்கும். இதில் அதி­க­ளவு விட்­டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்­துள்­ளன. குறிப்­பாக நெல்­லிக்­க­னிக்கு அடுத்த நிலையில் விட்­டமின் சி சத்து கொண்ட பழம் கொய்­யாதான்.
 
மருத்­துவப் பயன்கள்
 
மலச்­சிக்கல் தீரும்: நோயின் ஆரம்­பமே மலச்­சிக்­கல்தான். அனைத்து நோய்­களின் தாக்­கமும் மலச்­சிக்­கலில் இருந்­துதான் ஆரம்­பிக்கும். மலச்­சிக்­கலைப் போக்­கி­னாலே நோயில்லா நல்­வாழ்வு வாழலாம் என்­பது சித்­தர்­களின் கூற்று. நன்கு கனிந்த கொய்யாப் பழத்தை இரவு உண­வுக்­குப்பின் சாப்­பிட்டு வந்தால் மலச்­சிக்கல் நீங்கும். குடலின் செரி­மான சக்தி அதி­க­ரிக்கும்.
 
வயிற்­றுப்புண் ஆறும்: தற்­போ­தைய உண­வு­களில் அதிகம் வேதிப் பொருட்கள் கலந்­தி­ருப்­பதால் அவை அஜீ­ர­ணத்தை உண்­டாக்கி வயிற்றுப் புண்ணை ஏற்­ப­டுத்­து­கி­றது. இதனைப் போக்க உண­வுக்­குப்பின் கொய்­யாப்­பழம் சாப்­பி­டு­வது மிக நல்­லது. மூல நோயின் பாதிப்பு உள்­ள­வர்கள் இப்­பழத்தை தொடர்ந்து உண்டு வந்தால் மூல நோயி­லி­ருந்து விடு­ப­டலாம்.
கல்­லீரல் பலப்­படும்: உடலின் சேமிப்புக் கிடங்­கான கல்­லீரல் பாதிக்­கப்­பட்டால், உடலின் பித்­தத்தின் தன்மை மாறு­படும். இதனால் உடல் பல பாதிப்­பு­க­ளுக்கு உள்­ளாக நேரிடும். இதை தவிர்த்து கல்­லீ­ரலை பலப்­ப­டுத்த கொய்­யாப்­ப­ழத்தை அடிக்­கடி சேர்த்துக் கொள்­வது நல்­லது.
 
நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு: நீரி­ழிவு நோயின் தாக்கம் கண்­டாலே அதை சாப்­பிடக் கூடாது இதை சாப்­பிடக் கூடாது என்ற கட்­டுப்­பா­டுகள் பாடாய்ப்­ப­டுத்தும். ஆனால் நீரி­ழிவு நோயா­ளி­க­ளுக்கு உண்­டாகும் பாதிப்­பு­களை குறைக்க கொய்­யாப்­பழம் உகந்­தது. மேலும் இரத்­தத்தில் சர்க்­க­ரையின் அளவை கட்­டுப்­ப­டுத்தும் தன்­மையும் உண்டு.
 
இரத்­தச்­சோகை மாறும்: இரத்­தத்தில் இரும்­புச்­சத்து குறை­வதால் இரத்­தச்­சோகை உண்­டா­கி­றது. இந்­தியக் குழந்­தை­களில் அதுவும் பெண் குழந்­தை­களில் 63.8 சத­வீதம் குழந்­தைகள் இரத்­தச்­சோ­கையால் பாதிக்­கப்­பட்­டுள்­ளனர் என உலக சுகா­தார அமைப்பு எச்­ச­ரித்­துள்­ளது. இக்­கு­றையை பழங்­களும் கீரை­களும் நிவர்த்தி செய்யும். இதில் குறிப்­பாக கொய்­யாப்­பழம் இரத்­தச்­சோ­கையை மாற்றும் தன்மை கொண்­டது.
 
குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு: குழந்­தை­களின் வளர்ச்­சிக்கு தேவை­யான விட்­டமின் சி சத்து கொய்­யாப்­ப­ழத்தில் அதிகம் உள்­ளது. குழந்­தை­க­ளுக்கு அள­வோடு கொய்­யாப்­ப­ழத்தைக் கொடுத்து வந்தால் குழந்­தை­களின் எலும்­புகள் பலப்­படும். பற்கள் பல­ம­டையும். நல்ல வளர்ச்­சியைக் கொடுக்கும்.குழந்­தை­க­ளுக்கு அறி­வுத்­திறன் அதி­க­ரிக்கும். சொறி, சிரங்கு போன்ற சரும நோய்­களைக் குணப்­ப­டுத்தும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. நரம்­பு­களைப் பலப்­ப­டுத்தும். உடலின் உஷ்­ணத்தைக் குறைக்கும்.
 
கொழுப்பைக் குறைக்கும்: அதிக இரத்த அழுத்தம், அதிக கொழுப்பை குறைக்கும் தன்மை கொய்­யா­வுக்கு உண்டு. தினமும் இரண்டு கொய்­யாப்­பழம் உண்டு வந்தால் கொலஸ்ட்ரோல் குறையும் என இந்­திய இரு­தய ஆராய்ச்சி நிறு­வனம் ஆராய்ச்சி செய்து தெரி­வித்­துள்­ளது.
 
இதய படபடப்பு நீங்கும்: ஒரு சிலருக்கு சிறிது வேலை செய்தால் கூட இதயம் படபடப்பு உண்டாகிவிடும். உடலில் வியர்வை அதிகம் தோன்றும். இது இதய நோயின் அறிகுறியாகக்கூட அமையலாம். இந்த படபடப்பைக் குறைக்க கொய்யாப் பழம் மிகவும் உகந்தது. இதய படபடப்பு உள்ளவர்கள் தினம் ஒரு கொய்யாப்பழம் உண்பது நல்லது.
 
Link to comment
Share on other sites

பேரீச்சை பழத்தில் உள்ள சத்துக்கள்.

 

a3a38c0a-c3ee-4bd9-81dc-5e6fad8e2a41_S_s

 

அத்தியாவசியமான சத்துப் பொருட்களை பொதிந்த கனியென்றால் அது பேரீச்சை என்று சொல்லி விடலாம். அந்த அளவுக்கு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொரு வரும் அவசியம் பேரீச்சைக் கனி உண்ண வேண்டும். 

பேரீச்சையின் சத்துப்பட்டியல்... 

* எளிதாக ஜீரணமாகும் சதைப்பகுதி மற்றும் ஒற்றைச் சர்க்கரைகள் நிறைந்தது பேரீச்சை. உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது. அதனால்தான் விரதத்தை நிறைவு செய்பவர்கள் பேரீச்சைப் பழம் எடுத்துக் கொள்கிறார்கள். 

* பேரீச்சை, எளிதில் ஜீரணமாகும் நார்ச்சத்து கொண்டது. குடற்பகுதியில் இருந்து, கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பேரீச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பேரீச்சை பங்கெடுக்கிறது. 

* டேனின்ஸ் எனும் நோய் எதிர்ப்பொருள் பேரீச்சையில் உள்ளது. நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது டேனின்ஸ். 

* 'வைட்டமின் ஏ', பேரீச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது. 

* சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை உடற்செல்களை காப்பதோடு, தீங்கு விளைவிக்கும் பிரீ-ரேடிக்கல்களை விரட்டுவதிலும் பங்கெடுக்கிறது. குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது. 

* பேரீச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பேரீச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹிமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தம் ஆக்சிஜனை சுமந்து செல்லும் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது. 

* பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. உடலுக்குத் தேவையான மின்னாற்றலை வழங்கும் தாதுவாக பயன்படுகிறது. உடற்செல்களும், உடலும் வளவளப்புடன் இருக்கவும் பொட்டாசியம் அவசியம். இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது. 

* கால்சியம், மாங்கனீசு, தாமிரம், மக்னீசியம் போன்ற அத்தியாவசிய தாதுக்களும் உள்ளது. கால்சியம் எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது. ரத்த சிவப்பணுக்கள் உற்பத்தியில் தாமிரம் பங்கு வகிக்கிறது. மக்னீசியம் எலும்புகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. 

* பி-காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் பேரீச்சம் பழத்தில் மிகுந்துள்ளது. 

சாப்பிடும் முறை.......... 

உலர்ந்த பேரீச்சம் பழங்கள் அப்படியே உண்ண ஏற்றது. வாதாங்கொட்டை, பாதாம் பருப்பு, சீஸ், கலர்ப்பொடி ஆகியவற்றுடன் பேரீச்சையும் சேர்த்து ஆவியில் வேக வைத்து சாப்பிடலாம். பழ சாலட்டுகளில் பேரீச்சை துண்டுகள் சுவை சேர்க்கும். 

பேரீச்சை ஜூஸ் உடலுக்கு பேராற்றல் வழங்கக் கூடியது. பேரீச்சம்பழம், பதப்படுத்திய திராட்சை மற்றும் பன்னீருடன் சேர்த்து 'டேட்ஸ் சிரப்' தயாரித்து சத்துபானமாக அருந்தப்படுகிறது.  

 

http://www.maalaimalar.com/2013/03/02095222/dates-nutrients-in-the-fruit.html

 

 யற்கையின் கொடையான பழங்களில் சிலவற்றை நேரடியாக அப்படியே சாப்பிடலாம், சிலவற்றை காயவைத்து பதப்படுத்தி சாப்பிடலாம்.  பழங்கள் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.  அதில் பாலைவனப் பகுதி மக்களுக்கு வரப்பிரசாதமாக உள்ள பழங்களில் பேரீச்சம்பழம் முதலிடம் வகிக்கிறது.

fruit.jpgஇது மிகவும் சத்துள்ள பழமாகும்.  குழந்தைகள் முதல் பெரியவர்கள்  வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம்.  இது ஆப்பிரிக்கா, அரபு நாடுகளில் மட்டுமே அதிகம் விளைகின்றது.  

வெப்பம் அதிகமுள்ள பாலைவனப் பகுதிகள் இதன் வளர்ச்சிக்கு ஏற்றதாகும்.  இதற்கேற்ற தட்ப வெப்ப நிலை நம் நாட்டில் இல்லாததால் இங்கு விளைவதில்லை.  இப்பழங்கள் அரபு நாடுகளிலிருந்து  இறக்குமதி செய்யப்படுகிறது.

பதப்படுத்தப்பட்ட இந்த பழங்கள் எவ்வளவு ஆண்டுகள் ஆனாலும் கெட்டுப் போகாமல் இருக்கும்.

அரபு மக்களின் உணவுப் பொருட்களில் இதுவே முக்கிய இடம் பெறுகின்றது.

ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம்பழம் முக்கிய இடம் வகிக்கிறது.   சூரிய சக்திகள் அனைத்தையும் தன்னுள்ளே கொண்ட பழம்தான் பேரீச்சம் பழம்.  இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம்சத்து, வைட்டமின் ஏ, பி, பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.


இதன் காய் கர்ச்சூரக்காய் என்று வழங்கப் படுகின்றது.

பேரீந்தெனுங்கனிக்குப் பித்தமத மூர்ச்சை சுரம்
நீரார்ந்த ஐயம் நெடுந்தாகம் - பேரா
இரத்தபித்த நீரழிவி லைப்பறும் அரோசி
உரத்த மலக் கட்டுமறும் ஓது.
        - அகத்தியர் குணபாடம்

கண்பார்வை தெளிவடைய

பொதுவாக நம் இந்திய குழந்தைகளில் 42 சதவீதம் பேர் கண் பார்வை கோளாறுகளால் பாதிக்கப் பட்டுள்ளனர்.  

வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும்.  இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும்.  மாலைக் கண் நோயால் பாதிக்கப் பட்டவர்கள், பேரீச்சம் பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும்.  இதனால் கண் பார்வைக் கோளாறுகள் நீங்கும்.

மெலிந்த குழந்தைகளுக்கு

சில குழந்தைகள் எதைச் சாப்பிட்டாலும் உடல் பெருக்காமல் மெலிந்தே காணப்படுவார்கள்.  பள்ளிக்குச் சென்று வந்தவுடன் கால் முட்டிகளில் வலி ஏற்படுவதாகச் சொல்வார்கள். எவ்வளவுதான் மருந்துகள் கொடுத்தாலும் இவர்கள் தேறாமல் இருப்பார்கள்.    இதை ஆங்கில மருத்துவரிடம் காண்பித்தால் சாதாரண வலி என்று கூறுவார்கள்.  ஆனால் சித்த மருத்துவர்கள் இப்படிப்பட்ட பிரச்சனை ஏற்பட ஈரல் பாதிப்பு ஒரு காரணம் என்கின்றனர்.  

வர்ம பரிகார நூல்கள் கூட கால்சியம் சத்து குறைவால் ஈரல் பாதிப்பு ஏற்படும் என்கிறது.   இந்த பிரச்சனை உள்ள குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தை தேனுடன் ஊறவைத்து காலை மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால்  குழந்தையின் உடல் தேறி, வலுவுடனும், புத்துணர்ச்சியுடன் சுறுசுறுப்பாகவும் இருப்பார்கள்.

பெண்களுக்கு

பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.  மாதவிலக்கு காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன.  இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.  மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும்.  அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.   இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தை பாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.

சளி இருமலுக்கு

பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும்.  நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும்.  இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை.  இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.

நரம்பு தளர்ச்சி நீங்க

அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப் படுவார்கள்.  இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும்.  கைகால் தளர்ச்சி குணமாகும்.

பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.

* எலும்புகளை பலப்படுத்தும்.

* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.

* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது.  அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.

* புண்கள் ஆறும்.  மூட்டு வலி நீங்கும்.

* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்திவந்தால் இதய நோய்கள் அண்டாது.

மாலை நேரத்தில் கண்பார்வைக் குறைபாடு கொண்டவர்களை கப உடம்பு சூலை நோய் என்பார்கள்.  சளியானது கண்ணில் படிந்து மாலைக்கண் நோய் ஏற்படச் செய்கின்றது.  இதற்கு தினமும் இரண்டு பேரீச்சம் பழம் சாப்பிடுவது சாலச் சிறந்தது.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி :)

Link to comment
Share on other sites

பாதாம் பருப்பு
badam.jpg
 
 
இரத்தத்திற்கு நன்மை செய்யும் எச்.டி.எல். கொலஸ்டிரால் அதிகரிக்கவும் கேடு செய்யும் கொலஸ்டிரால் குறையவும் தினமும் பாதாம்பருப்பு 25 கிராம் சாப்பிட வேண்டும். நீண்ட நேரம் உழைக்க வேண்டியவர்களுக்கு நல்ல கொலஸ்டிரால் தேவை. வேலையும் கவலையும் அதிகம் எனில், அப்போது பாதாம் பருப்புகளையே கொஞ்ச நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டால் போதும். இதனால் வைட்டமினும் தாராளமாகக் கிடைக்கும்.

பாதாம் பருப்பில் பாஸ்பரஸ், தாது உப்பு காணப்படுகிறது குளுட்டாமிக் அமிலமும் அதில் இருக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரித்துக்கொள்ளவும் நரம்புகளைப் பலப்படுத்திக்கொள்ளவும் தினமும் இரவில் பன்னிரண்டு பாதாம் பருப்புகளைத் தண்ணீ­ரில் ஊறபோட்டு காலையில் அதை அரைத்து சாப்பிட வேண்டும். அரைக்கும் முன் பாதாம் பருப்பின் மேல் தோலை நீக்கிவிட வேண்டும்.

பாதாம் பருப்பு சாப்பிடுவதால் உடலுக்கு அதிகமான புரதச்சத்து கிடைக்கும். அதுமட்டுமின்றி பாதாம் பருப்பு சாப்பிடுவதால் நமது ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். நமது பெருங்குடலில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் ஏராளமாக இருக்கின்றன. இவை தீமை செய்யும் பாக்டீரியாக்களை அழித்து, உணவு செரிமாணத்தை அதிகபடுத்தும் தன்மை வாய்ந்தவை. இதனால், செரிமாணக் கோளாறு உள்ளவர்களுக்கு நன்மை செய்யும் பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் வேதிப்பொருட்களை உணவுடன் அளிப்பது உண்டு.

பாதாம் பருப்பு சாப்பிட்டால், வேதிப்பொருட்கள் அளிக்க வேண்டிய அவசியம் இருக்காது. பாதாம்பருப்பு நமது இரைப்பையை தாண்டி பெருங்குடலுக்கு சென்று, அங்குள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சியை ஊக்குவிக்கின்றது என்பதை கண்டறிந்து உள்ளனர். இதனால் செரிமாணக் கோளாறுகள் ஏற்படும் வாய்ப்பு குறைகிறது. எனவே செரிமாணப் பிரச்சினை இருப்பவர்கள் மட்டுமின்றி உடல் ஆரோக்கியத்தை விரும்பும் அனைவரும் பாதாம் பருப்பு சாப்பிடலாம்.'

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் ஆற்றல் பதாம் பருப்புக்கு உண்டு என்று புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.

நீரிழிவு நோயினால் இன்சுலின் குறையலாம் அல்லது குளுக்கோஸை சக்தியாக மாற்றும் ஹோர்மோனை பயன்படுத்தும் திறன் குறையலாம்.

நீரிழிவு நோயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரா விட்டால் குளுகோஸும், கொழுப்பும் உடலில் அதிக நேரத்திற்கு தங்கியிருந்து உடலின் முக்கிய உறுப்புகளை சேதப்படுத்திவிடும்.

மேலும் பாதம் பருப்பை சாப்பிடுவதால் இன்சுலின் சுரப்பு அதிகமாவதோடு, நீரிழிவு நோய் வருவதற்கான முந்தைய நிலையில்

பாதாமில் உள்ள சத்துக்கள்

பாதாமில் உள்ள புரதச்சத்து நல்ல தரமுள்ளது. 25 கிராம் பாதாமில் 6 கிராம் புரதம் உள்ளது.

பாதாமில் உள்ள நார்ச்சத்து – 25 கிராமில் 3 கிராம். இந்த நார்ச்சத்து 20 சதவிகிதம் கரையும் நார்ச்சத்து. 80 சதவிகிதம் கரையாத நார்ச்சத்து. இந்தக் கலவை உடலின் ஜீரணமண்டலத்திற்கு மிகவும் நல்லது. கொலஸ்ட்ரால் லெவலை குறைக்கின்றது. பாதாமில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு சத்தை உடல் ஏற்றுக் கொள்வதை தவிர்க்கின்றது. இதனால் பாதாம் ஒரு குறைந்த கலோரி உணவு என்று சொல்லலாம். புரதமும், நார்ச்சத்தும் செறிந்து இருப்பதால் பாதாம் சிறிய அளவில் எடுத்துக் கொண்டாலும் பசியை தணிக்கின்றது.

பாதாமில் உள்ள கொழுப்புச்சத்து வகையை சேர்ந்தது. மூஃபா கொலஸ்ட்ராலை குறைக்க வல்லது. தவிர பாதாமில் ஒமேகா – 6 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இவை இதயத்திற்கு நல்லது. பாதாமில் பூரித கொழுப்பு குறைவு.

பாதாமில் எலும்பு வளர்ச்சிக்கு தேவையான கால்சியமும், பாஸ்பரஸ§ம் உள்ளன. மக்னீசியம், மேங்கனீஸ் மற்றும் விட்டமின் பி – 6 பாதாமில் உள்ளன. இதில் கால்சியமும், பாஸ்பரஸ§ம் கார்போஹைட்ரேட்டின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. வைட்டமின் பி – 6 புரதத்தின் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றது. இதனால் இதயத்திற்கு கெடுதலான ஹேமோசைடிசின் அளவு கட்டுப்படுத்தப்படுகின்றது. பாதாமில் வைட்டமின் இ கூட செறிந்திருக்கின்றது. உடலுக்கு தினசரி 15 மில்லி கிராம் விட்டமின் இ தேவை.

ஓட்ஸ், சோயா பூண்டு, பாதாமும் இதயத்தின் நண்பன். பாதாம் உடல் எடையை ஏற்றாது. இதை பலர் நம்புவதில்லை. பாதாம் போன்ற கொட்டைகள் உடல் எடையை அதிகரிக்கின்றன என்பது பலருடைய கருத்து. இந்த கருத்து சரியல்ல. பாதாம் பருப்பை குறைவாக எடுத்துக் கொண்டாலே பசி அடங்கி விடும். 25 கிராம் பாதாம் 164 கலோரிகளை அளிக்கின்றது.

பாதாமின் பயன்கள்

பாதாமை தோலுரித்த பிறகே உண்பது நல்லது. பாதாமின் தோல் உணவுக்குழாய்யில் எரிச்சலை உண்டாக்கலாம். தவிர பாதாம் பருப்புகள் வாயில் நன்றாக மென்று விழுங்க வேண்டும். அப்பொழுது தான் எளிதில் ஜீரணமாகும். ஸ்டார்ச் இல்லாததால் பாதாம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஏற்றது.

பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் அதன் எடையில் பாதி அளவு இருக்கும். எடுக்கப்பட்ட எண்ணெய் வண்ணமில்லாமலும் இருக்கும். இல்லை மஞ்சள் நிறத்தில் இருக்கும். பாதாம் எண்ணெய், தாதுப்பொருட்கள், வைட்டமின்கள் மற்றும் புரதம் செறிந்தது. எல்லாவித சருமத்திற்கும் நல்லது. உடல் உலர்ந்து போதல், அரிப்பு, அழற்சி இவற்றை பாதாம் எண்ணெய் தடவுவதால் நீக்கலாம். பாதாம் எண்ணெய்யை உபயோகிப்பதால் சருமம் மிருதுவாகின்றது. புத்துணர்ச்சி பெறுகின்றது. இனிப்பு பாதாமில் இருந்து எடுக்கப்படும் எண்ணெய் சோப்புகள், அழகு சாதனங்கள் இவற்றின் தயாரிப்பில் பயன்படுத்தப்படுகின்றது. சோரியாசிஸ், எக்சிமா போன்ற சரும வியாதிகளுக்கு பாதாம் எண்ணெய் ஏற்றது. தீப்புண்களை குணப்படுத்தவும் பயன்படுகின்றது.

பாதாம் பால் தோலுரித்த பாதாமுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்த கலவை. பாலுடன் சேர்த்து பருக ஒரு சிறந்த பானம். ஆரோக்கியத்திற்கு நல்லது. பொடித்த பாதாம் கேக்குகள், ரொட்டி தயாரிப்பில் உதவுகின்றது. பாதாம் பால் வயிற்றுக்கு, சிறுநீரக பாதைகளுக்கு நுரையீரலுக்கு நல்லது. பாதாம் பால் வயிற்றெரிச்சலை போக்கும். ஆயுர்வேத, யுனானி சிகிச்சைகளில் பாதாம் ஒரு முக்கியமான டானிக். சோகை, மனக்கலைப்பு, ஆண்மைக்குறைபாடுகள், மலச்சிக்கல், சுவாச கோளாறுகள் இவற்றைப் போக்கும் டானிக்காக பாதாம் பயன்படுகின்றது. பாதாம் பாலில் கொழுப்பு குறைவு. அதனால் பசுவின் பாலுக்கு பதிலாக பாதாம் பாலை உபயோகிக்கலாம்.

ஆய்வுகளின் படி பாதாமில் உள்ள 9 பெனாலிக் வேதிப் பொருட்களில் 8 ஆன்டி – ஆக்ஸிடென்ட் குணங்களை உடையவை. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி பாதாமை உண்பதால் அதிகரிக்கும். புற்றுநோய் வருவதும் தவிர்க்கப்படுகின்றது. தவிர பாதாம் அலர்ஜிகளை உண்டாக்காது. உணவுப் பொருளில் பாதாம் சேர்ப்பதால் அவற்றின் சுவை மற்றும் சத்துக்கள் அதிகரிக்கப்படுகின்றன

 

http://treatmenttips.blogspot.ch/2012/04/blog-post_25.html

 

பாதாம் பருப்பு இதய நோயை தடுக்கும்

பாதாம் பருப்பு புரதமும் கொழுப்புச்சத்தும் அதிகமுள்ள ஒரு கொட்டை வகை இது. உடலை குறைக்க நினைப்பவர்களும், கொழுப்பைத் தவிர்க்கச் சொல்கிறவர்களுக்கும் எண்ணெய் வித்துகள் வேண்டாம் என வலியுறுத்தப்படுவார்கள், ஆனால் பாதாம் மட்டும் விதிவிலக்கு. பாதாமின் தோலில் உள்ள ஃப்ளேவனாயிட்ஸ் மற்றும் வைட்டமின் E சத்து இதய நோயைக் கட்டுப்படுத்தக் கூடியது. 100 கிராம் பாதாமில் 58 சதவீதம் கொழுப்பு உள்ளது. ஆனாலும் அது நல்ல கொழுப்பு என்பதால் பாதகமில்லாதது.

இதய நோய் உள்ளவர்கள், வாரத்தில் 5 நாள்கள் பாதாம் சாப்பிட்டால் அவர்களுக்கு மாரடைப்பு வரும் அபாயம் 50 சதவிகிதமாகக் குறையுமாம், ஏனெனில் அதிலுள்ள நல்ல கொழுப்புதான் காரணம். எடை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் வாரத்தில் 2 முறை ஐந்தைந்து பாதாம் எடுத்துக் கொண்டால், அது எடைக் குறைப்புக்கு 31 சதவிகிதம் உதவுமாம். பாதாம் சாப்பிடாதவர்களைவிட, பாதாம் சாப்பிடுபவர்கள் ஒல்லியாகவே இருப்பார்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவு ஏறாமல் தவிர்க்கவும் பாதாம் உதவுகிறது. சாப்பாட்டுக்குப் பிறகு ரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரிப்பதைத் தவிர்ப்பதால் நீரிழிவுக்காரர்கள், எடைக் குறைக்க நினைப்பவர்கள், இதய நோயாளிகள் என எல்லோருக்கும் ஏற்றதாக இருக்கிறது பாதாம். நீரிழிவு கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் தினமுமேகூட 5 பாதாம் எடுத்துக் கொள்ளலாம். அதை ஊற வைத்தோ அப்படியேவோ சாப்பிடலாம்.

பாதாம், மூளைக்கேற்ற உணவும் கூட. பாதாமில் உள்ள ரிபோஃபிளேவின் என்கிற பி வைட்டமினும், எல் கார்னிடைன் என்கிற அமினோ அமிலமும் மூளையின் செயல்திறனை அதிகரிக்கச் செய்பவை. புத்திக்கூர்மைக்கும் உதவுபவை. நரம்புகளின் இயக்கத்துக்கும் பாதாம் பெரிதும் உதவுகிறது. வயதானக் காலத்தில் வரக்கூடிய அல்சீமர் நோய் எனப்படுகிற மறதி நோயைத் தவிர்ப்பதில் பாதாம் பெரும் பங்கு வகிக்கிறது என்பதால் அதை இள வயதிலிருந்தே சாப்பிட்டு பழக வேண்டும். நினைவுக்கூர்மையுடன் நெருங்கிய தொடர்புடையது என்பதால்தான், படிக்கிற பிள்ளைகளுக்குப் பாடங்கள் மறக்காமலிருக்க பாதாம் கொடுக்கச் சொல்கிறோம். முறையாக பாதாம் சாப்பிடுகிற பிள்ளைகளின் மூளையானது எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும்.

வேறு எந்த தானியங்களிலும் இல்லாத அளவுக்கு பாதாமில் அதிகளவு பாஸ்பரஸ் சத்து உள்ளது. அது பல், முடி மற்றும் எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு உதவக்கூடியது. அழகை மேம்படுத்துவதிலும் பாதாமுக்கு முக்கிய இடமுண்டு. பாதாமில் உள்ள வைட்டமின் E சத்தானது, சருமத்துக்கும் கூந்தலுக்கும் மிக நல்லது. சரும நிறத்தை மேம்படுத்தும். சருமத்தைப் பளபளப்பாக வைக்கும். ஈரப்பதத்தைத் தக்க வைக்கும். வயோதிகத்தைத் தள்ளிப்போடும். கண்களுக்குக் கீழே கருவளையங்களை விரட்டும்.

பாதாமில் உள்ள அன்சாச்சுரேட்டட் கொழுப்பு முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி, கூந்தலுக்கு போஷாக்கு தரும். பாதாம் ஆயிலை வெதுவெதுப்பாக சூடாக்கி, இரவில் தலையில் தடவிக் கொண்டு, மசாஜ் செய்துவிட்டு, காலையில் தலையை அலசி விடவும். சமையலுக்குக் கூட பாதாம் எண்ணெய் பயன்படுத்தலாம். அதை மற்ற எண்ணெய்களைப் போல கொதிக்க வைக்கவோ, தாளிக்கவோ, பொரிக்கவோ பயன்படுத்த முடியாது. ஆலிவ் ஆயிலை போல சாலட்டுக்கு ஊற்ற மட்டுமே பயன்படுத்தலாம்.

http://www.adiyakkamangalam.com/health/2383/almonds-helps-to-prevent-heart-disease

 

Almond-Heart-C-286x300.jpg

Link to comment
Share on other sites

இணைப்புக்கு நன்றி! இப்படியான பயனுள்ள விடயங்களைத் தொடர்ந்து இணையுங்கள்!!

Link to comment
Share on other sites

கிறீன் டீயின் மகத்துவம்.

1346537913263.jpg

 

க்ரீன் டீ இப்போது அனைத்து தரப்பினரும் பருகும் டீ. இந்த கிரீன் டீ மகத்துவம் பற்றிக் கூறுகிறார் சித்தவைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.

"பொதுவாகவே டீ வகைகளில் க்ரீன்
டீ, ctc டீ என்று இருவகை உண்டு. ctc டீ தான் நமக்கெல்லாம்
மிகவும் பரிச்சயமானது.
ஆனால் சீன மக்களிடையே தொன்று தொட்டு பாரம்பரியமாக தொடர்ந்து வருவது க்ரீன் டீ. அதன் மருத்துவ குணத்தால், இப்போது நம்மிடையேயும் பிரசித்தி பெற்றுவருகிறது" என அவர் கூறுகிறார்.
 
இதோ மேலும் க்ரீன் டீ பற்றி மேலும் விளக்கிக் கூறுகிறார்.
 
green_tea.jpg
 
C.T.C Tea
(Cut turn and crush tea ஐ தான் CTC Tea )என்கிறார்கள்.
இது பதப்படுத்தப் பட்ட டீ. இதுதான் நாம் அன்றாடம் குடித்து பழகி வரும் டீ.
 
க்ரீன் டீ என்றால்?
 
பயோகெமிக்கல் முறையில் நிழலில் உலர்த்தி பதப் படுத்தப் படும் தேயிலைதான் க்ரீன் டீ.
 
க்ரீன் டீக்கு எதனால் இந்த மகத்துவம்?
 
கேட்சின் கொலிபெனல்ஸ் (Catechin Colyphenols ) தான் க்ரீன் டீயில் பிரதான விஷயம். அதாவது பவர்புல் ஆண்டி ஆக்சிடன்ட்ஸ் எனப்படும் மிகச் சிறந்த நோயெதிர்ப்பு சக்தி இந்த டீயில் குவிந்து கிடக்கிறது என்பதுதான் இதில் ஹைலைட்!
 
கேன்சருக்கு மிக நல்லது
 
green-tea-weight-loss.jpg
 
பொதுவாகவே கேன்சர் ட்ரீட்மென்ட் என்றால் ரேடியேசன் தெரபிதான் மெயின். இந்த ரேடியேசன் கதிர்வீச்சு கேன்சர் செல்களை மட்டுமின்றி கூடவே நல்ல செல்களையும் கொல்கிறது. ஆனால் இந்த க்ரீன் கேன்சர் செல்களை மட்டுமே கொல்கிறது. காரணம் இதன் கேட்சின் கொலிபெனல்ஸ் தான். என்றாலும் கேன்சருக்கான உடனடி ட்ரீட்மென்ட் ஆக மருத்துவர்கள் க்ரீன் டீயைப் பரிந்துரைப்பதில்லை. காரணம் கேன்சரின் ஆரம்ப அறிகுறியிலிருந்து நீண்ட நெடும் காலம் தொடரவேண்டிய வழிமுறை இது என்பதால்தான்.
 
சீன மக்களின் ஸ்லிம் ரகசியம்!
 
காலம் காலமாக சீன மக்கள் விரும்பி குடிக்கும் டீ இந்த
க்ரீன் டீ. சீனர்கள் பன்றி இறைச்சி சாப்பிடுபவர்கள். கொசுறு கொசுறாக சாப்பாட்டை அடிக்கடி சாப்பிடுபவர்கள். எனவே இவர்கள் உணவு முறையில் கெட்ட கொழுப்பு சேரும் அபாயம் கண்டிப்பாக இருக்கிறது.
ஆனால் சீனர்கள் தினமும் அடிக்கடி க்ரீன் டீ பருகும் பழக்கம் இருப்பதால் இந்த க்ரீன் டீ கெட்ட கொழுப்பை உடலில் சேரவிடாமல் தடுக்கிறது.
 
ரத்த நாளங்களின் அடைப்பை நீக்கும்
 
பொதுவாகவே நாம் சாப்பிடும் சமோசா, பீட்சா, வடை, சிக்கன் 65 போன்ற எண்ணெய் பலகாரங்களாலும், அதிக ஸ்வீட் சாப்பிடுவதனாலும் உண்டாகும் கெட்ட கொழுப்பினால்,
ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். இது மாரடைப்பு (Heart Attack) வரை கூட கொண்டு போய் விட்டுவிடும். இப்படிப்பட்ட ரத்த நாளங்களின் அடைப்பைப் போக்கி நார்மல் நிலைக்கு கொண்டுவரும் பணியை செய்கிறது இந்த க்ரீன் டீ.
 
தொடர்ந்து க்ரீன் டீ பருகி வந்தால்
மூட்டு பிரச்சனைகள், ரத்தகொதிப்பு, இதய நோய்கள் போன்ற நோய்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து கொண்டே வந்து நாளடைவில் காணாமல் போகின்றன.
 
சளி, ஜுரம் வராது
 
அன்றாடம் காற்றில் நிறைந்துள்ள சின்ன சின்ன தொற்றுக் கிருமிகளால் நமக்கு சளி ஜுரம் உண்டாகிறது. இந்த நோய்களைத் தோற்றுவிக்கும் கிருமிகளைக் கூடக் கொல்கிறது க்ரீன் டீ தரும் எதிர்ப்பு சக்தி.
 
 
உடல் நடுக்கம்
 
iStock_000010909793XSmall.jpg
 
சிலருக்கு உடலில் நோயெதிர்ப்பு சக்தி குறைந்து போவதால் உடல்நடுக்கம் இருக்கும். நல்ல செல்களை உருவாக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்வதன் மூலம் உடல் நடுக்கத்தைப் போக்குகிறது க்ரீன் டீ.
 
எடை குறைக்க விரும்புகிறீர்களா?
 
க்ரீன் டீயைப் பருகுவதால் Fat Oxddations Themnogenesis எனும் குறிப்பிட்ட சிஸ்டம் மூலம் உடலில் சேர்ந்துள்ள கலோரிகள் உடனடியாக எரிக்கப் படுகிறது. எனவேதான் உடல் எடையைக் குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி க்ரீன் டீ சாப்பிடவேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள். சீன மக்களின் உணவுப் பழக்கப் படி அவர்கள் உடல் எடை அதிகமாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் அவர்கள் ஸ்லிமாக இருப்பதற்கு அவர்கள் அடிக்கடிப் பருகும் க்ரீன் டீ தான் காரணம்.
 
சர்க்கரை நோயாளியா நீங்கள்?
 
நல்ல டயட், உடற்பயிற்சி, மன அழுத்தமின்மை போன்றவற்றோடு, அன்றாடம் க்ரீன் டீ பருகி வந்தால் சர்க்கரை நல்ல கட்டுப்பாட்டில் இருக்கும். காரணம் எந்த உணவும் செரிமானத்துக்குப் பின் குளுகோஸ் ஆக மாறி ரத்தத்தில் சேராத படி க்ரீன் டீ தடுக்கிறது.
 
க்ரீன் டீக்கு நிகரில்லை!
 
என்னதான் சாப்பாட்டில் மசாலா, அஜினமோட்டோ, போன்ற ஜீரண சக்தி பொருட்களை சேர்த்திருந்தாலும் உணவுக்கு பின் க்ரீன் டீ பருகுவதற்கு நிகர் வேறெதுவும் இல்லை. ஜீரண சக்தியை அந்த அளவுக்கு தூண்டிவிடும், மேலும் உடனடியாக கெட்ட கொழுப்பையும் நீக்கும் என்று முடிக்கிறார் சித்த வைத்திய நிபுணர் அரவிந்த் ரங்கன்.
 

 

Link to comment
Share on other sites

புரோக்கோளி ( BROCCOLI )

 

 

03-1399093206-2-broccoli.jpg

 

இது குளிர்காலப்பயிர். குளிர்ச்சியான தட்பவெப்பநிலையில் பயிரடப்படும் இந்த புரோக்கோளியில் எண்ணற்ற சத்துப்பொருகள் நிறைந்துள்ளன. 100 கிராம் புரோக்கோளியில் உள்ள சத்துப் பொருட்களைப் பாருங்க,
 

கார்போஹைடிரேட்ஸ் 6.64 கிராம்,
சர்க்கரை 1.7 கிராம்,
நார்ச்சத்து 2.6 கிராம்,
நீர்ச்சத்து 89.30 கிராம்,
கொழுப்புச்சத்து 0.37 கிராம்,
புரதம் 2.82 கிராம,
சுண்ணாம்புச்சத்து 5%,
வைட்டமின் ஏ 3%,
வைட்டமின் சி 149%,
வைட்டமின் ஈ 5%,
இரும்புச்சத்து 6%,
மக்னீசியம் 6%,
பாஸ்பரஸ் 6%,
பொட்டாசியம் 7%,
சிங்க் 4%.
பீடா கரட்டின் 3%,
தயாமின் 5%,
ரிபோஃப்ளோவின் 8%
நியாசின் 4%
பேண்டொதேனிக் 11%
அடங்கியுள்ளன. இத்தனைச் சத்துக்களை விட்டு வைக்கலாமா சாப்பிடாமல்?
***
அது என்னென்ன வேலைகளை நம்ம உடலில் செய்கிறது என்று பாருங்கள்.

புற்றுநோய் என்ற கொடுங்கோல் எமதர்மன் இன்ஃப்லமேஷன், ஆக்ஸிடேடிவ் ஸ்ட்ரெஸ், டெடாக்ஸ் என்ற மனித உடலில் நல்லாட்சி புரியும் மூவேந்தர்களை அடிமையாக்குவதன் மூலமாகத் தன் கடுகிய ஆட்சியைப் புரியத் தொடங்குவான். இவர்களைத் தன் படைபலத்தால் காத்தும், புற்று நோய்க் கிராதகனை இவர்களிடம் அண்ட விடாமலும் உடல்நாட்டைக் காக்கும் அருமையான பணியைச் செய்கிறது இந்த புரோக்கோளி.

ஒவ்வொரு முறையும் இரண்டு முதல் மூன்று கப் ப்ரோக்கோளி வீதம் வாரத்திற்கு மூன்று முறை உணவில் சேர்த்து வந்தால் உடலின் எதிர்ப்புச்சக்தியை அதிகரிப்பதன் மூலம் புற்றுநோய்க் கிருமிகளை வ(ள)ரவிடாமல் தடுக்கலாம் என்கிறது தற்போதைய ஆய்வு முடிவுகள்.

ஆம், இதுவரை பல கோணங்களில் நடைபெற்ற ஏறத்தாள முந்நூறு ஆய்வுக்ளின் முடிவாக, ப்ரோக்கோளி புற்றுநோயை வராமல் தடுக்கும் மாபெரும் பணியை செய்கிறது என்கின்றனர் ஜெட் பாகே உள்ளிட்ட ஜான் காப்கின்ஸ் மருத்துவப் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளகள் பலர்.

புற்று நோய்க்குச் சமமாக இன்றையச் சூழலில் மக்களை அதிகமாக அச்சுறுத்தி வரும் நோய் மாரடைப்பு. ப்ரோக்கோளியில் உள்ள பிகாம்ப்ளக்ஸும் வைட்டமின் எ,சி,ஈ, ஆகிய உயிர்ச்சத்துக்களும் இதய நோயிலிருந்தும் இதயத்தைக் காக்கிறதாம். உடனடி மாரடைப்பு வராமலும் தடுக்கிறதாம்.

தைராய்டு எனப்படும் முன்கழுத்துக் கழலைக்கு ப்ரோக்கோளி மிகச்சிறந்த மருந்தாகும் இதனைப் பச்சையாக தின்று வந்தால் தைராய்டு சுரப்பியின் செயற்பாடு கட்டுக்குள் இருக்குமாம்.

விழி பாதுகாப்புக்குத் தேவையாக வைட்டமின்கள் அனைத்தும் இதில் உள்ளதால் விழியைப் பாதுகாப்பதிலும் சிறந்த சேவையை ஆற்றுகிறதாம். முக்கியமாக காட்ராக்ட் வராமல் தடுக்கிறதாம்.

சூரிய ஒளியால் சருமத்தில் ஏற்படும் அலஜியையும் தடுக்கிறதாம். உடலில் அலர்ஜியை ஏற்படுத்தும் சரும நோய்க்கிருமிகளைக் குறைப்பதால் தோல்வியாதி உள்ளவர்களுக்கு மிகச்சிறந்த மருந்துப் பொருளாகிறது என்கிறது தற்போதைய ஆராய்ச்சி.

இரும்புச் சத்து அதிகம் உள்ள இந்த புரோகோலிக்கு அல்சர் நோய் வராமல் தடுக்கும் வல்லமையும் உண்டு.

பத்து கலோரி ப்ரோக்கோளியில் சுமார் 1கிராம் நார்ச்சத்து இருப்பதால் இது ஜீரணசக்தியை அதிகரிக்கும் நற்பணியைச் செய்யும் நல்ல தாவரமாகும். அதுமட்டுமல்ல ப்ரோக்கோளியைப் பச்சையாகப்ப் பயன்படுத்துவதால் வயிற்றில் தேவையற்று வளரும் சில தசைகளின் வளர்ச்சியைக் குறைக்கிறதாம்.

சிங்கும் வைட்டமின் ஈயும் நோய் எதிர்ப்பாற்றலைத் தருவதால் பல நோய்களில் இருந்து காப்பாற்ற இந்த இரு சத்தும் நிறைந்த ப்ரோக்கோளி பயன் படுகிறது.
***
ப்ரோக்கோளியைச் சமைக்கும் முறை. பெரிதாக இல்லை.

காளிஃபிளவரை சமைக்கும் முறை அனைத்தும் ப்ரோக்கோளிக்கும் பொருந்தும். காளிஃப்ளவரைப் போலவே பூவிலிருந்து ஒவ்வொரு இதழாகப் பிரித்து கொள்ளவேண்டும். பெரிய இதழ்களாக (கொண்டைகளாக) இருந்தால் அவற்றைச் சிறிது சிறிதாக வெட்டிக்கொள்ளலாம்.

அதனை உப்பு போட்டுக் காய்ச்சிய வெந்நீரில் போட்டு கழுவிச் சுத்தம் செய்த பின்பு சமைக்க வேண்டும். காளிஃப்ளவரில் காணப்படுவது போல சிறு புழுக்கள் இதிலும் இருக்க வாய்ப்புள்ளதால். நீரில் வேகவைப்பதை விட ஆவியில் வேகவைப்பது சரியான சமையல் முறை.

சரி.. இத்தனை பயன்பாடுகள் உள்ள இந்தக் கோளி இங்கு கிடைக்குமா என்றால்..... கண்டிப்பாக கிடைக்கிறது. பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட இந்தக்கோளி விமானத்தில் பயணித்து சென்னை நீல்கிரிஸ், ரிலையன்ஸ் போன்ற கடை வரைக்கும் வந்து விட்டது. பிற இடங்களில் தெரியவில்லை. சென்னை வாசிகளெல்லாம் எப்பொழுதோ சாப்பிடவும் ஆரம்பித்து விட்டார்கள்.

ஒரு முக்கியமான செய்திங்க.. இதை மறந்திடாதீங்க..

இதனை குளிர்ச்சாதனப் பெட்டியில் வைத்து பத்து நாட்கள் வரை பயன்படுத்தலாம். ஆனால் வைக்கும் போது நீரில் கழுவிவிட்டு வைக்கக் கூடாது. ஏனெனில் நீர் இதனைக் கெட்டுப்போக வைக்கும். அதே போல பிரித்து வைத்த ப்ரோக்கோளியை இரண்டு நாட்களுக்கு மேல் பயன்படுத்தாமல் இருப்பதும் நல்லது.

கறிக்கோழி, முட்டைக்கோழி, வெடக்கோழி கினிக்கோழியெல்லாம் சாப்பிடும் போது இந்தப் ப்ரோக்கோளி மட்டும் என்ன பாவம் பண்ணிச்சு.. எத்தனையோ சாப்பிட்டுட்டோம்....இதையும் சாப்பிட்டு வைக்கலாமே.... நாங்க தொடங்கிட்டோம்...... நீங்க??

 

8baacab0-eca6-4d53-a716-f04ca25dae7b_S_s

 

முட்டைக்கோஸ் குடும்பத்தைச் சேர்ந்த ப்ராக்கோலியில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம், கால்சியம், நார்ச்சத்து போன்றவை காணப்படுகின்றன. 

எலும்பு மற்றும் பற்களின் வளர்ச்சிக்கு ப்ரூக்கோலி முக்கிய பங்காற்றுகிறது. இதில் உள்ள தாதுஉப்புக்கள் உயர்ரத்த அழுத்தம், மற்றும் புற்றுநோயை கட்டுப்படுத்துகிறது. நார்விக்கில் உள்ள உணவு ஆராய்ச்சி மற்றும் ஜான் இன்ஸ் மையத்தினர் ஆய்வு செய்து ஆரோக்கியத்துக்கு ஊக்கமளிக்கும் `குளூக்கோராபேனின்’ என்ற ஊட்டச்சத்தை மும்மடங்கு கொண்டுள்ள புதிய புராக்கோலியை உருவாக்கியுள்ளனர். 

இந்த `குளூக்கோராபேனின்’, இதயநோய் மற்றும் குடல், புராஸ்டேட் புற்றுநோய்கள் உள்ளிட்டவற்றுக்கு எதிரான தடுப்பாக அமையும் என்று ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. இது வழக்கமான புராக்கோலியைப் போலவே இருக்கும். 

ஆனால் இந்த சூப்பர் புராக்கோலி, மாரடைப்பை ஏற்படுத்தும் காரணிகளைக் குறைக்கிறது, புற்றுநோயின் ஆரம்பகட்டத்தில் காணப்படும் கட்டுப்பாடற்ற செல் பிரிதலை நிறுத்துகிறது, நோய்களை எதிர்த்துப் போராடும் `ஆன்டி ஆக்சிடன்ட்களை’ ஊக்குவிக்கிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். 

இதன்மூலம், நாம் அன்றாடம் சமையலில் பயன்படுத்தும் காய்கறிகளை மேலும் சத்து நிறைந்ததாக உருவாக்கலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது என்று கூறியுள்ளனர் ஆய்வாளர்கள்.

 

http://tamil4health.blogspot.in/2014/04/Broccoli.html

http://www.maalaimalar.com/2012/12/27092608/broccoli-prevent-cancer.html

 

 

 

Link to comment
Share on other sites

 
அழகான சருமத்தை பெற திராட்சை பழம் (மருத்துவக் குறிப்பு)
 
உடல் சருமத்தின் அழகை மெருகேற்றி பொலிவடையச் செய்யும் வலிமை திராட்சை பழத்தில் உள்ளது.
1399725487-9073.jpg
திராட்சை பழத்தில் பொட்டாசியம், கால்சியம், இரும்புச்சத்து ஆகியவை அதிக அளவில் உள்ளன. எனவே இப்பழத்தில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளும் சக்தி அபரிமிதமாக உள்ளது. திராட்சை பழம் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வழிவகுக்கும்.
 
முகம் கருத்துவிட்டதா கவலை வேண்டாம். திராட்சை பழச்சாற்றை பிழிந்து அதன் சக்கையை முகம் முழுவதும் பூசி, சிறிது நேரத்திற்கு பின்னர் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால், கருமை நீங்கி பொலிவு பெறும். திராட்சை சாறில் அதிக அளவு ஆண்ட்டிஆக்சிஜன் உள்ளது. அது சருமத்தை சுத்திகரித்துவிடும். இரத்தத்தில் உள்ள செல்களை அதிகப்படுத்தி சருமத்தை சுத்தம் செய்து பொலிவடையச் செய்துவிடும்.
 
திராட்சை பழச்சாற்றில் சூரிய வெப்பத்தால் தாக்கக்கூடிய சரும பாதிப்புக்கள் மற்றும் வெப்பக் கட்டிகளிலிருந்து பாதுகாக்கும் தன்மை உள்ளது. திராட்சை சாறு சருமப் பிரச்சனைகளைத் தடுக்கும் சக்தி கொண்டது. வெயில் காலத்தில் தினமும் ஒரு கப் திராட்சை சாறு அருந்தினால் சருமச் சிக்கலை தவிர்க்கலாம்.
 
திராட்சை பழச்சாறு இறந்த செல்களை நீக்கும் திறன் கொண்டது. இரத்த ஓட்டத்தை சீராக்கும் திறன் கொண்டதால், சருமத்திற்கு ஈரப்பதத்தை அளித்து வரட்சியிலிருந்து காக்கிறது.
 
திராட்சை சாற்றை முகத்திலும் கழுத்திலும் தடவி 20 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை கழுவினால் சருமம் ஈரப் பதத்துடன் காணப்படும். இதனை தினமும் செய்து வந்தால் சரும வரட்சியை தடுக்கலாம்.
 
கண்களுக்கு கீழே கருவளையம் இருந்தால், ஒரு திராட்சை பழத்தை இரண்டாக வெட்டி கண்களின் கீழே தடவி 10 நிமிடங்கள் கழித்து கழுவினால் கருவளையம் நீங்கிவிடும்.
 
சிறிதளவு திராட்சை சாருடன், சிறிதளவு பாசிப்பயிறு மாவை சேர்த்து நன்றாக கலந்து, அதை முகத்தில் பூசி 15 நிமிடங்களுக்கு பிறகு முகத்தை குளிர்ந்த நீரால் கழுவவேண்டும். இவ்வாறு தொடர்ந்து வாரம் இரு முறை வீதம் 1 மாதகாலம் செய்துவந்தால் சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள் படிப்படியாக மறைந்துவிடும்.

 

 

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
banane-e1379054694305.jpgஆற்றல் தரும் வாழைப் பழம்

 

முக்கனிகளில் ஒன்று வாழைப் பழம். வாழைப் பழம் தமிழ்க் கலாச்சாரத்தோடு தொடர்புடையது. தெய்வ வழிபாட்டிற்கு வாழைப்பழத்தைப் படைக்கிறோம். கல்யாணம் போன்ற குடும்ப நிகழ்ச்சிகளுக்கு சீர் வரிசையாகக் கொண்டு செல்வதும் வாழைப் பழத்தைத்தான். அன்றே வாழைப் பழத்தின் மகிமையை முன்னோர்கள் அறிந்திருக்கிறார்கள் என்பதற்குச் சாட்சியே இது.

வாழைப் பழத்தில் நார்ச்சத்து, இயற்கையான சர்க்கரைச் சத்து, இரும்புச் சத்து, டிரிப்தோபன், புரோட்டீன், கார்போஹைட்ரேட் உள்ளிட்ட பல சத்துகள் உள்ளன. இவ்வளவு சத்துகள் கொண்ட அபூர்வமான பழமாக வாழைப் பழம் இருக்கிறது.

வாழைப் பழம் உடலுக்கு உடனடியான ஆற்றலைத் தரக்கூடியது. சமீபத்திய ஓர் ஆய்வில் 2 வாழைப் பழம் உட்கொண்டால் 90 நிமிடங்கள் செயலாற்ற முடியும் என நிரூபணம் ஆகியுள்ளது. அதனால்தான் விளையாட்டு வீரர்கள் பலரும் உடனடி ஆற்றலுக்காக வாழைப் பழம் உட்கொள்கிறார்கள். மேலும் மன அழுத்தம் உள்ளவர்கள் தொடர்ந்து வாழைப் பழம் சாப்பிட்டு வரும்போது அவர்களின் மன அழுத்தம் குறைவதும் கண்டறியப்பட்டுள்ளனது.

வாழைப் பழத்தில் உள்ள டிரிப்தோபன் என்னும் சத்து மன அழுத்தத்தைக் குறைத்து மனத்தை மிருதுவாக்குகிறது. இரும்புச் சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபினைத் தூண்டுகிறது. இரத்த சோகை வராமல் தடுக்கிறது. வாழைப் பழத்தில் உள்ள பொட்டாசியம் சத்து இரத்த அழுத்தம் வராமல் தடுக்கிறது. அதுபோல மூளையின் செயல்படும் ஆற்றலையும் அதிகப்படுத்துகிறது.

மலச் சிக்கலுக்கும் வாழைப் பழம் எடுத்துக்கொள்வது நல்ல தீர்வாக அமையும். ஆப்பிளை விட 4 மடங்கு அதிகமான புரோட்டின் சத்தும், 2 மடங்கு அதிகமான கார்போஹைரேட் சத்தும் 3 மடங்கும் அதிகமான பாஸ்பரஸ், 5 மடங்கு விட்டமீன் ஏ மற்றும் இரும்புச் சத்தும் உள்ளது. ஆனால் விலையே ஆப்பிளை விடப் பல மடங்கு குறைவு.

 

http://tamil.thehindu.com/society/lifestyle/%E0%AE%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%8D/article5666203.ece

 

 

Link to comment
Share on other sites

கிவி பழம்

 

 

கிவிப் பழம் மலச்சிக்கலை நீக்கி ரத்தத்தில் கொழுப்பைக் குறைக்கும்

 

newz_2347.jpg

கிவிப் பழத்தில் விட்டமின் A, C மற்றும் E புரதம், கார்போஹைட்ரேட், நீர்ச்சத்து என மனிதனுக்குத் தேவையான ஒன்பது சத்துக்கள் நிறைந்துள்ளது, அதுமட்டுமல்லாமல் நார்ச்சத்து மிகவும் அதிகமாக உள்ளது. உடல் பருமனாக உள்ளவர்கள் மற்றும் கொழுப்பு அதிகம் உள்ளவர்கள் எடை குறைக்க நினைப்பவர்கள் இதைச் சாப்பிடலாம்.

நம் உடலில் ஃப்ரீ ராடிக்கல்ஸ் என்ற நச்சுப் பொருள் உருவாகிறது. இதுவே பல்வேறு நோய்களுக்குக் காரணம். கிவி பழத்தில் ஆன்டி ஆக்சிடன்ட் என்று அழைக்கப்படும் விட்டமின்களான A, C, மற்றும் E சத்துக்கள் உள்ளதால் ஃப்ரீ ராடிக்கல்ஸை அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. ஆரஞ்சுப் பழத்தைப் போன்றே இதிலும் வைட்டமின் C அதிகம் இருப்பதால், முதுமைக் கால கண் நோய்கள் தோல் நோய்களைப் போக்கும்.

தினமும் ஒரு கிவிப் பழத்தைச் சாப்பிட்டு வந்தாலே அன்றைய தினத்துக்குத் தேவையான வைட்டமின் C கிடைத்துவிடும். விட்டமின் C நம்முடைய நோய் எதிர்ப்பு மண்டலம் மேம்பட பெரிதும் அவசியம். ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறு நீங்கி சுவாசம் சீரடையும். இதில் உள்ள விட்டமின் E சத்து, சருமம் இளமைப் பொலிவுடன் இருக்கவும் கருவுறுதலுக்கான வாய்ப்பையும் அதிகரிக்கிறது.

ஃபோலிக் மற்றும் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இதில் நிறைவாக இருப்பதால் குழந்தைகளின் மூளை செல்களின் வளர்ச்சியைத் தூண்டும். ஞாபக சக்தி அதிகரிக்கும். வாழைப் பழத்தில் உள்ளதைவிட பொட்டாசியம் தாது உப்பு அதிக அளவில் உள்ளது. மேலும் இதில் உள்ள விட்டமின் C மற்றும் பாலிபீனால்கள் இதய தசை மற்றும் ரத்தக் குழாய்களைப் பாதுகாத்து மாரடைப்பு வராமல் தடுக்க உதவும்.

நார்ச் சத்துக்கள் நிறைந்திருப்பதால் மலச்சிக்கலைத் தீர்க்கும். ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்பை நீக்கும். சர்க்கரைக் குறியீடு இதில் குறைவாக இருப்பதால், ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.

 

 

 
* கிவிப் பழத்தின் சிறப்பம்சமே அதன் நார்ச்சத்துதான். எளிதில் ஜீரணமாகும் நார்ப்பொருட்கள் இதில் ஏராளம் உள்ளன. 100 கிராம் பழத்தில் 3.8 கிராம் நார்ச்சத்து அடங்கி உள்ளது.
 
* பழத்திலுள்ள நார்ப்பொருட்கள் மலச்சிக்கலை உடனே போக்கக் கூடியது. குடற்பகுதியில் புற்றுநோயை விளைவிக்கும் தீய ரசாயனங்களை அகற்றும் திறனும், குடற் புற்றுநோய்க்கு எதிர்ப்புத்தன்மையும் வழங்கக்கூடியது கிவிப் பழத்திலுள்ள நார்ப் பொருட்கள்.
 
* 'வைட்டமின் சி' கிவிப் பழத்தில் நிறைந்துள்ளது. தினசரி உடலில் சேர்க்கப்பட வேண்டிய டி.ஆர்.ஐ. அளவில் இது 154 சதவீதம் 'வைட்டமின் சி'யைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் உடலில் நோய்த்தொற்றுகள் ஏற்படாமல் காப்பதில் 'வைட்டமின் சி'க்கு குறிப்பிட்ட பங்கு உண்டு. தீங்கு தரும் பிரீ-ரேடிக்கல்களையும் விரட்டியடிக்கும்.
 
* வைட்டமின் ஏ, வைட்டமின் இ, வைட்டமின் கே ஆகியன சிறந்த அளவில் உள்ளன. இவை சிறந்த நோய் எதிர்ப்பு பொருட்களாக செயலாற்றும். 'வைட்டமின் கே', எலும்புகளின் வலுவிற்கும், அவற்றின் உறுதியான செயல்பாட்டிற்கும் ஏற்றது. அல்சீமர் போன்ற உளநல பாதிப்பு சிகிச்சையிலும் 'வைட்டமின் கே' உதவுகிறது.
 
* கிவி பழம் ரத்தத்தில் கட்டி ஏற்படுவதை தடுக்கும் ஆற்றல் கொண்டிருப்பது சமீபத்தில் கண்டறியப்பட்டது.
 
* மேலும் மீன்களில் மட்டுமே காணப்படும் சிறப்பு பொருளான ஒமேகா-3 கொழுப்பு அமிலம் கிவிப் பழத்திலும் உள்ளது. இது கரோனரி இதய பாதிப்பு ஏற்படு வதை தடுக்கும் ஆற்றல் கொண்டது. பக்கவாதம், ஆட்டிசம் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் சில மனநல பாதிப்புகளில் இருந்து காக்க வல்லது கிவிப்பழம்.
 
* இதய இயக்கத்திற்கு வலுசேர்க்கும் பொட்டாசியம் தாது, கிவிப் பழத்தில் மிகுதியாக உள்ளது. 100 கிராம் பழத்தில் 312 மில்லி கிராம் பொட்டாசியம் உள்ளது. உடற்செல்கள் வளவளப்புத் தன்மையுடன் இருப்பதற்கும், இதயத் துடிப்பை கட்டுக்குள் வைப்பதிலும், ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பொட்டாசியம் உதவுகிறது.
 
* கிவிப் பழத்தில் மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுக்களும் குறிப்பிட்ட அளவில் உள்ளது. இவை நோய் எதிர்ப்பு நொதிகள் சிறப்பாக செயல்பட துணைக் காரணியாக செயல்படும். மக்னீசியம் கால் சியம்போல எலும்புகளுக்கு உறுதி தரும்.
 
இதிலுள்ள வைட்டமின் ஈ பெண்களின் சருமத்தை பொலிவுடன் வைத்திருக்கும்.
உடலின் எடையைக் குறைக்கும் ஆர்வமுடையவர்கள் இந்தக் பழத்தை பாதுகாப்பாக அன்றாடம் உண்ணலாம்.
 
இதில் வைட்டமின் ‘சி’ அதிக அளவில் உள்ளது.நோயைத் தடுக்கும் ஆற்றல் அதிகம் பெற்றுள்ளது. முதுமையின் காரணமாக ஏற்படும் சிதைவு நோய்களான, கண் புரை, விழித்திரை சிதைவு நோயைத் தடுக்கின்றது.
 
கிவியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
 

கிவி பழத்தில் ஒமேகா-3 மற்ற பழங்களை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது. இது குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு மிகவும் நல்லது.

சர்க்கரை மிகவும் குறைவான அளவாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிடக் கூடிய சிறந்த பழம் இது.

 

கிவியில் நார்ச்சத்து இருப்பதால் மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.

 

http://villageprogrammer.wordpress.com/category/food/ http://www.maalaimalar.com/2013/05/10094946/Kiwi-fruit-medical-benefits.html http://www.betamil.com/health/2347/kiwi-reduce-cholesterol-level

kiwifruit.jpg

Kiwi Fruit will make your Heart Healthier

kiwi+fruit.jpg

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

r473256_2377023.JPG

 

வெங்­காயப் பூவில் மறைந்திருக்கும் மருத்­துவக் குணங்கள்.

 

சுவைக்­காக மட்­டு­மின்றி வெங்­காயம் வியக்­கத்­தக்க மருத்­துவ ரீதி­யா­கவும் பயன்­ப­டு­கி­றது. நன்கு வளர்ந்த வெங்­காயம் சமை­யலுக்கு எவ்­வாறு உத­வு­கி­றதோ அதே­போல வெங்­காயச் செடியில் உள்ள பூக்­களும் மனி­தர்­களின் நோய் போக்கும் மருத்­துவ குணம் கொண்­ட­வை­யாகும்.

 

*வெங்­கா­யத்­தையும், வெங்­கா­யப்­பூ­வையும் சேர்த்து அரைத்து ஒரு அவுன்ஸ் சாறு எடுத்து இரவில் வெறும் வயிற்றில் 48 நாட்கள் பரு­கி­வர காசநோய் குண­ம­டையும்.

 
*வெங்­கா­யப்­பூக்­க­ளையும் வெங்­கா­யத்­தையும், பொடி­யாக நறுக்கி தயிரில் ஊறப்­போட்டு சாப்­பிட மூலம் தொடர்­பு­டைய எரிச்சல், குத்தல் குண­ம­டையும்.
 
*கண்­நோயால் பாதிக்­கப்­பட்டு பார்வை மங்­க­லாக இருப்­ப­வர்கள் வெங்­கா­யப்­பூவைக் கசக்கி சாறு பிழிந்து எடுத்து இரண்டு சொட்டு சாறு காலை, மாலை கண்­களில் விட்டு வர மூன்று நாட்­களில் கண்­பார்வை தெளி­வ­டையும்.
 
*பல்­வ­லியால் அவ­திப்­ப­டு­ப­வர்கள் சம அளவு வெங்­காயம் மற்றும் வெங்­கா­யப்பூ எடுத்து அரைத்து சாறு பிழிந்து தினமும் வாய்­கொப்­ப­ளித்து வர பல் மற்றும் ஈறு தொடர்­பு­டைய நோய்கள் குண­ம­டையும்.
 
*ஒரு கைப்­பி­டி­ய­ளவு வெங்­கா­யப்பூ எடுத்து பொடிப்­பொ­டி­யாக நறுக்கி ஒரு சட்­டியில் போட்டு அதில் அரை டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து சூடேற்­றவும். வெங்­கா­யப்பூ நன்­றாக வெந்­த­வுடன் இறக்கி ஆற­வைத்து சிறி­த­ளவு உப்பு சேர்த்து உட்­கொள்ள வயிற்று வலி உடன் நிற்கும்.
 
*வெங்­காயம் சேர்த்து சமைக்கும் உண­வு­களில் வெங்­கா­யத்­திற்கு பதி­லாக வெங்­கா­யப்­பூ­வையும், வெங்­கா­யத்­தா­ளையும் சிறி­யதாய் நறுக்கிப் போட்டு சேர்க்­கலாம். இது பசியை தூண்டும்.
 
*குடலில் உள்ள தேவையற்ற வாயுவை அகற்றும். வெங்காயப் பூவினை ஏதாவது ஒரு வகையில் பக்குவம் செய்து சாப்பிட கீழ் வாதம் குணமடையும்.
 
Link to comment
Share on other sites

  • 7 months later...
  • 1 month later...

கொழுப்பைக் கரைக்கும் கத்­த­ரிக்காய்

 

Brinjal.jpg

 

 

கத்­தி­ரிக்காய் உடல் வலியைப் போக்கும் தன்­மை­யு­டை­யது. காய்ச்­சலைப் போக்கக் கூடி­யது. சோர்வைப் போக்கக் கூடி­யது. வீக்­கத்தைத் தணிக்கக் கூடி­யது. கொழுப்பைக் குறைக்கக் கூடி­யது. ரத்த அழுத்­தத்தைக் குறைக்கக் கூடி­யது. ரத்த அணுக்கள் சேர்க்­கையைத் தடுக்கக் கூடி­யது. கண்­களின் ரத்த அழுத்­தத்தைக் குறைக்கக் கூடி­யது. மத்­திய நரம்பு மண்­ட­லத்தை அமை­திப்­ப­டுத்­த­வல்­லது, ஒவ்­வா­மையால் ஏற்­படும் மயக்க நிலையைத் தடுக்க வல்­லது, உறுப்­பு­களைத் தூண்ட வல்­லது. 100 கிராம் கத்­தி­ரிக்­காயில் 24 கலோரி மட்­டுமே ஊட்­டச்­சத்து அடங்கி இருப்­பதால் உடல் எடை கூடாமல் பார்த்துக் கொள்ள உத­வு­வ­தோடு ரத்­தத்தில் சேர்ந்­துள்ள அதி­கப்­ப­டி­யான கொழுப்புச் சத்தைக் குறைக்­கவும் இது மிகவும் உத­வி­யாக உள்­ளது.

 
 
 
புத்­து­ணர்வைத் தரும்
 
கத்­த­ரிக்­காயின் தோலில் உள்ள ஆன்த்தோ சயனின் என்னும் வேதிப்­பொருள் உடலின் சோர்வைப் போக்கிப் புத்­து­ணர்வைத் தரக் கூடி­யது. அது மட்­டு­மின்றி ஆன்தோ சையனின் புற்­றுநோய் எனப்­படும் கேன்சர் செல்­க­ளுக்கு எதி­ராகச் செயல்­பட்டு தடுக்க வல்­லது. கத்­திரி இலைகள் ஆஸ்­துமா எனப்­படும் இறைப்பு நோய், மூச்சுக் குழல் நோய்கள், சுவாச அறைக்­கோ­ளா­றுகள், வலி­யுடன் சிறுநீர் வெளி­யே­றுதல் ஆகி­ய­வற்­றுக்கும் மருந்­தாகிப் பயன் தரு­கின்­றது. வாயில் எச்சில் சுரக்­கவும் இது பயன்­ப­டு­கி­றது. கத்­தரிச் செடியின் வேர் மூச்­சி­ரைப்பு மற்றும் மூக்கில் தோன்றும் புண்­க­ளுக்கு மருந்­தா­கி­றது.
 
கொழுப்புச் சத்தைக் குறைக்கும்
 
வேரின் சாறு காது வலியைப் போக்கப் பயன்­ப­டு­கி­றது. நோய் வாய்ப்­பட்­டி­ருக்கும் போது பத்­திய உணவில் கத்­த­ரிக்காய் முக்­கிய பங்கு வகிக்­கி­றது. கத்­த­ரிக்­காயில் இருக்கும் நீர்ச்­சத்து மற்றும் பொட்­டா­சியம் சத்து ரத்­தத்தில் சேரும் கொழுப்புச் சத்தைக் குறைக்க உதவும் ஓர் உன்­ன­த­மான மருந்­தாகும். கத்­த­ரிக்­காயில் உள்ள நார்ச்­சத்து பசியை அடக்கி வைப்­பதால் உடல் எடை குறை­வ­தற்கு உத­வு­கி­றது. மேலும் இத­யத்­துக்கு பலத்தைத் தரு­வ­தாக அமை­கி­றது. கத்­த­ரிக்­காயை எண்­ணெ­யி­லிட்டுக் காய்ச்சி மேல் பூச்­சாகப் பூசு­வதால் ரத்தக் கசிவு குண­மாகும்.
 
நார்ச்­சத்து
 
கத்­த­ரிக்­காயில் பல்­வேறு ஊட்­டச்­சத்­துக்கள் நிறைந்­தி­ருப்­பதால் உட­லுக்கு மென்­மையும், பலமும் தர­வல்­லது. கத்­தரிக்காயில் நார்ச்­சத்து மிகுந்து உள்­ளதால் மலச்­சிக்­கலைப் போக்­க­வல்­லது மட்­டு­மின்றி சர்க்­கரை நோயையும் தடுக்க வல்­லது. கத்­த­ரிக்­காயை அரைத்து தீநீ­ராக்கி வீக்­க­முற்ற கால்­களின் மீது தேய்த்­து­வர நாள­டைவில் வீக்கம் குறைந்து விடும்.கத்­த­ரிக்­காயைச் சாறு பிழிந்து உள்­ளங்கை மற்றும் உள்­ளங்­கால்­களில் தேய்த்து விட கால்­களில் வியர்த்து இடை­யூறு உண்­டா­வது தடுக்­கப்­படும். பழத்தை வேக வைத்து உள்­ளுக்குக் கொடுப்­பதால் காளான் சாப்­பிட்டு ஏற்­பட்ட நச்சு முறிந்து விடும். கத்­த­ரிக்­காயை வேக வைத்து அத்­துடன் போதிய பெருங்­காயம், பூண்டு, உப்பு சேர்த்து சூப் செய்து சாப்­பிட வயிற்றில் சேர்ந்து துன்பம் தரும் வாயு கலையும்.
 
நல்ல தூக்­கத்தை உண்­டாக்கும்
 
கத்­த­ரிக்­காயை வேக வைத்து அத்­துடன் போதிய தேன் சேர்த்து மாலை நேரத்தில் சாப்­பிட நல்ல தூக்­கத்தை உண்­டாக்கும் இன்­சோம்­னியா என்னும் தூக்­க­மின்மை அகலும். கத்­த­ரிக்­காயை நெருப்பில் சுட்டு வேக வைத்து போதிய சர்க்­கரை சேர்த்து சாப்­பிட மண்­ணீரல் வீக்­கத்தைக் குறைக்கும். காய்ச்­சலால் ஏற்­பட்ட மண்­ணீரல் வீக்கம் குறிப்­பாக அகலும் காலையில் வெறும் வயிற்றில் இதைச் சாப்­பி­டு­வது மிக்க நலம் தரும். கத்­த­ரிக்காய் அடிக்­கடி உணவில் சேர்ப்­பதால் இதயம் மற்றும் ரத்த நாளங்­களில் ஏற்­படும் நோய்கள் மற்றும் மார­டைப்பு தவிர்க்­கப்­படும். கத்­த­ரிக்­காயை அடிக்­கடி உணவில் சேர்த்துக் கொள்­வதால் அதி­லுள்ள குறைந்த அளவு நிகோட்டின் சத்து புகைப்­பி­டிக்கும் பழக்­கத்தை நிறுத்த வேண்டும் என்று நினைப்­ப­வர்­க­ளுக்கு துணை செய்யும்.
 
இதய பாது­காப்பு
 
கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள சத்துப் பொருட்­களின் அழிவைத் தடுப்­ப­தோடு மூளைக்கு பலத்தைத் தந்து ஞாபக சக்­தியைத் தூண்டி விடு­கின்­றது. கத்­த­ரிக்­காயில் உள்ள வேதிப்­பொ­ருட்கள் உடலில் இரும்­புச்­சத்து உண்­டா­வ­தற்கும் அதனால் ரத்­தத்தில் உள்ள முக்­கிய பகு­தி­யான ஹீமோ­கு­ளோபின் அதி­க­மா­வ­தற்கும் உதவி செய்­கி­றது. கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள நாசுமின் என்னும் வேதிப் பொருள் ரத்­தத்தில் சேர்ந்­துள்ள அதி­கப்­ப­டி­யான இரும்புச் சத்தைக் குறைத்து வெளி­யேற்ற உத­வு­கி­றது. இதனால் மார­டைப்பு தவிர்க்­கப்­டு­கி­றது. ரத்­தத்தில் சேர்ந்­துள்ள நச்­சுக்கள் வெளி­யேற்­றப்­ப­டு­வதால் இத்­தகு பாது­காப்பு இத­யத்­துக்கு ஏற்­ப­டு­கி­றது. கத்­த­ரிக்­காயை உணவில் சேர்த்துக் கொள்­வதால் செரி­மா­னத்தை அதி­கப்­ப­டுத்­து­வ­தா­கவும் துரி­தப்­ப­டுத்­து­வ­தா­கவும் அமை­கி­றது.
 
புற்று நோயைத் தடுக்கும்
 
கத்­த­ரிக்காய் சீரண உறுப்­பு­க­ளுக்கு பலம் தரு­வ­தாலும் மலத்தை வெளி­யேற்­று­வ­தாலும் மலக்­கு­டலில் ஏற்­படும் புற்று நோயைத் தடுப்­ப­தாக அமை­கி­றது.கத்­த­ரிக்காய் ஓர் நுண்­கி­ரு­மி­களைத் தடுக்க வல்­ல­தா­கவும் தொற்று நோய்­களைத் தவிர்க்க வல்­ல­தா­கவும் விளங்­கு­கி­றது. இதில் அடங்­கி­யுள்ள விட்­டமின் சி சத்து இதற்குத் துணை­யா­கி­றது. கத்­த­ரிக்­காயில் அடங்­கி­யுள்ள விட்­ட­மின்கள், மின­ரல்கள், அமி­னோ­ஆ­சிட்கள் மற்றும் நார்ச்­சத்­துக்கள் உடலை ஆரோக்­கி­ய­மாக வைக்க உத­வு­வ­தோடு தோல் ஆரோக்­கி­யத்­துக்கும் இது துணை செய்­கி­றது. தோல் மென்மையும் பளபளப்பும் பெற உதவுகிறது.
 
பல்வலி குணமாகும்
 
கத்தரிக்காயில் பொதிந்திருக்கும் ஆன்த்தோ சயானின் என்னும் வேதிப்பொருள் வயது முதிர்வைத் தடுத்து இளமைத் தோற்றத்துக்கு வகை செய்கிறது.
கத்தரிக்காயில் உள்ள சத்துக்கள் தோலில் ஏற்படும் புற்றுநோயைத் தடுத்து தோல் ஆரோக்கியமாயிருக்க உதவுகிறது. கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தித் துளைகள் செய்து நல்லெண்ணெய் இட்டு வறுத்து பல்வலிக்குக் கொடுக்க பல்வலி குணமாகும்.
 
 
 

 கத்தரிக்காய் இதயத்திற்கு நல்லது

“கத்­த­ரிக்­காயின் சுவை சில­ருக்குப் பிடிப்­ப­தில்லை. வாரம் ஒரு முறை அதை சமை­யலில் சேர்த்துக் கொள்­ப­வர்கள் கூட, அதன் அற்­புத குணங்­களைப் பற்றித் தெரிந்தால் தின­சரி சாப்பாட்டில் இடம் கொடுப்­பார்கள். கத்­த­ரிக்காய் சுவை பிடிக்­கா­த­வர்­க­ளுக்கும் அதை முறைப்­படி சமைத்துக் கொடுப்­பதன் மூலம் கத்­த­ரிக்காய் பிரி­யர்­க­ளாக மாற்ற முடியும்’’

‘‘கத்­த­ரிக்­காயை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்­ப­வர்­க­ளுக்கு பருமன் பிரச்சினை பக்­கத்தில் வராது என்றால் நம்­பு­வீர்­களா? உண்­மைதான்.

 

100 கிராம் கத்­த­ரிக்­காயில் இருக்கும் ஆற்றல் வெறும் 25 கலோ­ரிகள் மட்­டுமே. நார்ச்­சத்து மிகுந்த காய் என்­பதால் கொஞ்சம் சாப்­பிட்­ட­துமே வயிறு நிறைந்த உணவைத் தந்து, அதிகம் சாப்­பிட்டு, பருமன் பிரச்­சினையை வர­வ­ழைத்துக் கொள்­வ­தி­லி­ருந்து காக்கும்.கத்­த­ரிக்காய் இத­யத்­துக்கு நல்­லது. நார்ச்­சத்து, பொட்­டா­சியம், விட்­டமின் பி 6 மற்றும் ஃப்ளேவ­னாயிட்ஸ் போன்ற ஃபைட்டோ நியூட்­ரியன்ட்ஸ் ஆகி­யவை நிறைந்­தி­ருப்­பதால் இது, இதய நோய்கள் தாக்கும் அபா­யத்தை வெகு­வாகக் குறைக்­கி­றது.

இதி­லுள்ள ஆன்ட்டி ஆக்­சி­டன்ட்­டுகள், இரத்தக் குழாய்­களை ஆரோக்­கி­ய­மாக வைத்து, மார­டைப்பு அபா­யத்தைத் தவிர்க்­கி­றது. உடலின் எெலக்ட்­ரோலைட் விகி­தத்தைப் பரா­ம­ரிப்­பதில் முக்­கிய பங்கு வகிப்­பது பொட்­டா­சியம். அது கத்­த­ரிக்­காயில் நிறை­யவே உள்­ளது. தவிர இது சோடி­யத்தின் அளவை சரி­யான அளவில் வைத்து, இரத்த அழுத்­தத்தைக் கட்­டுப்­பாட்டில் வைக்­கவும் உத­வு­கி­றது.நீரி­ழி­வுக்­கா­ரர்­க­ளுக்கு ஏற்ற காய் கத்­தரி. காரணம், இதி­லுள்ள அப­ரி­மி­த­மான நார்ச்­சத்து.

கத்­த­ரிக்­காயில் உள்ள குளோ­ரோ­ஜெனிக் அமிலம், உடலின் கொலஸ்ட்ரோல் அளவை எல்லை தாண்­டாமல் வைக்கக் கூடிய சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்­சி­டன்ட்­டாக வேலை செய்யும். கத்­த­ரிக்காய் சாப்­பி­டு­கி­ற­வர்­களின் மூளை செல்கள் எப்­போதும் துறு­து­றுப்­புடன் இருக்­குமாம். நினை­வாற்­றலை அதி­கப்­ப­டுத்­துமாம். கத்­த­ரிக்­காயில் உள்ள ஊட்­டங்­களும் நார்ச்­சத்தும் வய­தா­வதன் கார­ண­மாக உண்­டா­கிற சருமச் சுருக்­கங்­களை விரட்டி, இளமையுடன் காட்சியளிக்க உதவுமாம். கத்தரிக்காயில் மிகச் சிறிய அளவு நிகோட்டின் உள்ளது என்பதால் புகைப்பழக்கத்தைக் கைவிட நினைப்பவர்களுக்கும் மறைமுகமாக உதவுகிறது.’’

http://www.virakesari.lk/articles/2015/06/22/கத்தரிக்காய்-இதயத்திற்கு-நல்லது

 

Link to comment
Share on other sites

  • 1 month later...

பப்பாளி பழத்தின் சிறந்த மருத்துவ குணங்கள்

 

papaya_papaw_dry_n_fresh_chilli_darwin.j

 

 

பல்வேறு மருத்துவ குணங்களை தன்னகத்தே கொண்டுள்ள பப்பாளி பழம் எங்கெங்கும் எளிதில் கிடைக்கக் கூடிய பழமாகும். அது மட்டுமல்ல.. விலை குறைவாக கிடைக்கக் கூடிய பழங்களில் இதுவும் ஒன்று.

 
*பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ, பி, சி, ரிபோ பாப்பைன் என்சைம், கால்சியம், இரும்பு, ெபாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின் இ மற்றும் கே ஆகியவை நிறைந்துள்ளன.
பொதுவாக நமது உடலில் கழிவுகள் வெளியேறாமல் இருந்தால், அதுவே முக்கால்வாசி நோய்களின் வரவிற்கு வழிவகுக்கும். அந்த வகையில் மலச்சிக்கல் பிரச்சினைகளுக்கு பப்பாளி ஒரு நல்ல மருந்தாகும். வயிற்றுக்கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்றவற்றுக்கும் பப்பாளி சிறந்த நிவாரணம் தரும்.
 
*சீரற்ற மாதவிலக்கு பிரச்சினை உள்ள பெண்களுக்கு இப்பழம் ஒரு அருமருந்து.
 
பப்பாளியில் உள்ள பப்பாயின் என்சைம்களில் ஆர்ஜினைன்(Arginine) என்ற மூலப்பொருள் உள்ளது. அது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்த உதவும். மேலும், ‘கார்பின்’ இருதயத்துக்கும் ‘ஃபைப்ரின்’ இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றன.குழந்தைகளுக்கு பப்பாளி பழத்தை அடிக்கடி கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு மற்றும் பல் வளர்ச்சியில் உறுதி ஏற்படும்.
 
*கல்லீரல் கோளாறுகளை பப்பாளி பழம் சரிசெய்ய வல்லது.
தினமும் காலையில் பப்பாளிப்பழத்தை துண்டுகளாகவோ அல்லது ஜூஸாகவோ சாப்பிட்டு வந்தால், உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி தோல் பளபளக்கும்.
 
*உடல் எடை குறைக்க விரும்புவோர், அதற்கான டயட்டுடன், தினமும் காலை உணவாக பப்பாளிப்பழத்தை எடுத்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். பப்பாளிக்காயை வாரம் ஒன்று அல்லது இரண்டு முறை சமைத்து சாப்பிட்டு வந்தாலும், எடை குறையும்.
நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் வெந்நீரால் கழுவி வர முகச்சுருக்கம் மறைந்து முகம் அழகு பெறும்.
 
*பப்பாளிக்காயின் நறுக்கிய உட்பகுதி துண்டுகளை முகப்பரு உள்ளவர்கள் தங்களது முகத்தில் மென்மையாக தேய்த்து வந்தால், பருக்களை போக்குவதோடு முகத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கி பொலிவு கிடைக்கும்.
 
*பப்பாளிப் பழத்தை தேனில் நனைத்து சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும். 
 
ஆன்டிபயாடிக் மருந்து எடுத்துக்கொண்டவர்கள், சிகிச்சைக்குப் பின் நிறைய பப்பாளிப் பழம் சாப்பிட வேண்டும். காரணம், குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களை மீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும். தலையில் ஏற்படும் பொடுகுத் தொல்லைக்கு பப்பாளி சிறந்த மருந்தாக உள்ளது. பப்பாளி கலந்த ஷேம்புக்களையும் பயன்படுத்தலாம்.
 
பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
விதைகள் அதிகம் உள்ள நாட்டு பப்பாளி பழங்களை சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
குறிப்பு : கர்ப்பிணிப் பெண்கள் முதல் 2 மாதங்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
 
Link to comment
Share on other sites

  • 1 month later...

மன அழுத்­தத்­திற்கு கை கொடுக்கும் வாழை

 

B-GJCkZIQAATwOl.jpg

 

வாழை­யடி வாழை­யாக’ வாழும்­படி வாழ்த்­து­கிறோம். வாழையின் அடி முதல் நுனி வரை அனைத்­துமே நமக்குப் பயன்­ப­டு­வதை அறிவோம். வாழையின் அனைத்துப் பகு­தி­க­ளுமே மருத்­துவ குணம் வாய்ந்­தவை. வாழை பற்­றிய முதல் வர­லாற்றுக் குறிப்பை கி.மு. 600 ஆண்டு புத்த மத ஏடு­களில் காணலாம். மாமன்னர் அலெக்­சாண்டர் கி.மு. 327இல் இந்­தி­யாவில் வாழைப்­ப­ழத்தை சுவைத்­த­தற்­கான குறிப்­புகள் உள்­ளன.
 
‘‘வாழையை ஏழை­களின் 'ஊட்­ட­ச்­சத்­து' உணவு என்றே சொல்­லலாம். வளர்ந்து வரும் நாடு­களில் அநேக மக்­களின் பிர­தான உண­வு­களில் வாழைக்கே முன்­னு­ரிமை உண்டு. உரு­ளைக்­கி­ழங்கை சமைக்­கிற அதே முறை­களில் வாழைக்­கா­யையும் சமைக்­கலாம். பொரிக்­கலாம். வேக வைக்­கலாம். வறுக்­கலாம்...’’ ஊட்­டச்­சத்து நிபு­ணர்கள் வாழையின் மகத்­து­வங்­க­ளையும் மருத்­துவ குணங்­க­ளையும் பற்­றி­ இப்­படிக் குறிப்­பி­டு­கின்­றனர்
 
‘‘90 நிமிட உடற்­ப­யிற்­சிக்குப் பிறகு தேவைப்­ப­டு­கிற சக்­தியை 2 வாழைப்­ப­ழங்­களின் மூலம் பெற்­று­விட முடியும். உலக அளவில் விளை­யாட்டு வீரர்­களின் விருப்­ப­மான பழங்­களில் வாழைப்­ப­ழத்­துக்கே முத­லிடம் என்­பதில் சந்­தே­க­மில்லை. உட­னடி சக்­தியை கொடுக்க மட்­டு­மின்றி, இன்னும் ஏரா­ள­மான உடல்­நலக் கோளா­று­களை எதிர்த்துப் போரா­டக்­கூ­டிய சக்தி வாழைக்கு உண்டு.
 
மன அழுத்தம்
 
கடு­மை­யான மன அழுத்தத்தில் இருப்­ப­வர்­க­ளுக்கு வாழைப்­பழம் சாப்­பிட்­டதும் அதி­லி­ருந்து நிவா­ரணம் கிடைப்­பது நிரூ­பிக்­கப்­பட்­டுள்­ளது. காரணம், அதி­லுள்ள ட்ரிப்­டோஃபன். இது ஒரு­வ­கை­யான புரதம். இதை உடல் செரட்­டோ­னி­னாக மாற்றும். செரட்­டோனின் பட­ப­டப்பைக் குறைத்து, மகிழ்ச்­சி­யான உணர்வைக் கொடுக்­கக்­கூ­டி­யது.
 
பி.எம்.எஸ்.
 
மாத­வி­லக்­குக்கு முன்னால் மனத்­த­ள­விலும் உட­ல­ள­விலும் ஏற்­ப­டு­கிற பிரச்­னை­களை ப்ரீ மென்ஸ்­டுரல் சிண்ட்ரோம் (பி.எம்.எஸ்.) என்­கிறோம். அந்தப் பிரச்­னை­க­ளுக்கு மாத்­தி­ரைகள் எடுத்துக் கொள்­வ­தற்குப் பதி­லாக வாழைப்­பழம் சரி­யான மாற்று மருந்து.
 
இரத்த சோகை
 
வாழைப் பழத்தில் இரும்­புச்­சத்து அதி­க­முள்­ளது. ஹீமோ­கு­ளோபின் அளவை அதி­க­ரிக்கச் செய்து இரத்­த­சோ­கையை விரட்டக் கூடி­யது.
 
இரத்த அழுத்தம்
 
உப்­புச்­சத்து குறை­வா­கவும் பொட்­டா­சியம் அதி­க­மா­கவும் உள்­ளதால், இது ரத்த அழுத்­தத்தைக் கட்­டுப்­பாட்டில் வைக்­கக்­ கூடி­யது. வாதத்­தையும் வர­வி­டாமல் செய்­யக்­கூ­டி­யதாம்.
 
மலச்­சிக்கல்
 
இதி­லுள்ள நார்ச்­சத்­தா­னது செரி­மா­னத்­துக்கு உதவும் என்­பது எல்­லோரும் அறிந்­ததே. மல­மி­ளக்கும் மருந்­து­களின் தேவை­யின்றி, மலச்­சிக்­கலைப் போக்­கக்­கூ­டி­யது.
 
நெஞ்­செ­ரிச்சல்
 
நெஞ்­செ­ரிச்­சலால் அவ­திப்­ப­டுவோர் அதற்­கான மருந்­து­களைத் தேடி ஓடாமல், உட­ன­டி­யாக வாழைப்­பழம் சாப்­பிட்டால் தீர்வு கிடைக்கும்.
 
கொசுக்­கடி
 
கொசுக்­க­டியின் அவ­தி­யி­லி­ருந்து விடு­பட, கனிந்த வாழைப்­ப­ழத்தைத் தட­வினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மசக்கை
 
கர்ப்ப கால மசக்­கைக்கும் வாழை நல்ல மருந்து.
 
அல்சர்
 
வாழையின் மென்­மை­யான, வழுவ­ழுப்­பான தன்மை கார­ண­மாக, அது குடல் பிரச்­னை­க­ளுக்கும் மருந்­தா­வது கண்டுபிடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அதி­க­மாக அமிலம் சுரப்­பதைக் கட்­டுப்­ப­டுத்தி, வயிற்றுப் பகு­திக்கு இத­ம­ளிக்­கக்­கூ­டி­யதும் கூட.இங்­கி­லாந்தில் 200 மாண­வர்­க­ளுக்கு காலை, முன்­பகல், மதியம் என மூன்று வேளை­க­ளுக்கும் வாழைப்­பழம் கொடுக்­கப்­பட்­டதாம். அவர்கள் மற்­ற­வர்­க­ளை­விட சிறப்­பாக பரீட்சை எழு­தி­யது கண்டு பிடிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. வாழையில் உள்ள பொட்­டா­சி­யத்­துக்கு, மூளையின் ஆற்­றலைத் தூண்டி, நினை­வாற்­றலைப் பெருக்கும் சக்தி உள்­ளதே கார­ணமாம்.
 
மது அருந்­திய பிறகு தொடரும் ஹேங் ஓவர் மன­நி­லைக்கு வாழை சிறந்த உணவு என்­கி­றார்கள் மருத்­து­வர்கள். வாழைப்­ப­ழத்தில் பாலும் தேனும் சேர்த்து மில்க் ஷேக்­காக குடிப்­பது இந்தப் பிரச்சி­னைக்கு நல்­லது என்­கி­றார்கள்.
 
இவை தவிர, வாழையில் உள்ள அதி­க­ளவு விட்­டமின் பி, நரம்பு மண்­டல ஆரோக்­கி­யத்­துக்கு நல்­லது. கர்ப்­பி­ணி­களின் உடல் சூட்டை சமப்­ப­டுத்­த­து­கி­றது, குழந்தை ஆரோக்­கி­ய­மாகப் பிறக்கச் செய்­யவும் வாழை உத­வு­கி­றது. வாழையில் உள்ள விட்­டமின் பி 6 மற்றும் பி12, மக்­னீ­சியம், பொட்­டா­சியம் ஆகி­யவை சிகரெட் பழக்­கத்தைக் கைவிட நினைப்­ப­வர்­க­ளுக்குப் பெரிதும் உத­வு­கி­றது.
 
யாருக்குக் கூடாது?
 
கட்­டுப்­பா­டற்ற நீரி­ழிவு இருப்­ப­வர்கள் வாழைக்காய், வாழைப்­ப­ழத்தைத் தொடவே கூடாது. உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி மூலம் சர்க்கரை அளவைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் அளவோடு எடுத்துக் கொள்வதில் ஆபத்தில்லை.
 
ஆப்பிளைவிடச் சிறந்தது!
 
ஆப்பிளைவிட 4 மடங்கு அதிக புரதம், 2 மடங்கு கார்போஹைதரேட், 3 மடங்கு அதிக பொஸ்பரஸ், 5 மடங்கு அதிகமான விட்டமின் ஏ மற்றும் இரும்புச்சத்து, 2 மடங்கு அதிகமான விட்டமின் மற்றும் தாதுச்சத்துகளைக் கொண்டது வாழைப்பழம்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

முருங்கையும் அதன் மருத்துவ பயன்களும்

health_3.jpg

பலரும் விரும்பி சாப்பிடும் முருங்கைக்காயில் ஊட்டச்சத்துக்களானது நிரம்பியுள்ளது. முருங்கைக்காயில் உள்ள அதிக அளவு கல்சியம் சத்து, இரும்புச்சத்து மற்றும் விட்டமின்கள் போன்றவை எலும்புகள் வலிமையடைய உதவுகின்றன.

அதிலும் இதனை பாலுடன் சேர்த்து தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், எலும்புகளின் அடர்த்தி அதிகரித்து, குழந்தைகளின் எலும்புகளின் ஆரோக்கியம் மேம்படும். முருங்கைக்காய் மற்றும் அதன் இலைகள் இரத்தத்தை சுத்தம் செய்யும் தன்மையைக் கொண்டவை. மேலும் இது சிறந்த ஊட்டச்சத்தாகவும் செயல்படும்.

அதற்கு முருங்கைக்காயை சாப்பிடுவதோடு, அதன் இலையை சாறு எடுத்து, சூப்பாகக் காய்ச்சி குடித்து வந்தால், இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு, முகப்பரு மற்றும் இதர சரும பிரச்சனைகள் வருவதைத் தடுக்கலாம். முருங்கைக்காய் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைக் குறைத்து, நீரிழிவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ளும் சக்தி உள்ளது.

மேலும் இதனை உட்கொண்டு வந்தால், சிறுநீர்ப்பை நன்கு செயல்பட்டு, இதனால் சர்க்கரை அளவு குறைந்து, ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவும். உங்களுக்கு தொண்டைப்புண், சளி அல்லது இருமல் போன்றவை இருந்தால், ஒரு கப் முருங்கைக்கீரை சூப் வைத்துக் குடித்து வந்தால் சுவாச பிரச்சினைகளில் இருந்து விடுதலைத் தரும்.

குறிப்பாக முருங்கைக்காய் மற்றும் முருங்கைக்கீரையை உணவில் சேர்த்து வந்தால், நுரையீரல் நோய்களான ஆஸ்துமா, நுரையீரல் அழற்சி, காசநோய் போன்றவற்றில் இருந்து நிவாரணம் கிடைக்கும்

http://www.virakesari.lk/articles/2015/06/24/முருங்கையும்-அதன்-மருத்துவ-பயன்களும்

 

Link to comment
Share on other sites

  • 1 year later...
  • 1 month later...

நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட சத்துக்கள் நிறைந்த நூல்கோல்

1. மாரடப்பு வராமல் தடுக்கும். நூல்கோலில் உள்ள அதீத விட்டமின் கே சத்தானது இதயக் கோளாறுகள் வராமல் காக்கிறது. நூல்கோலின் கீரையானது, உடலில் உள்ள கொழுப்பைப் பயன்படுத்தி பித்தநீரை உறிஞ்சிக் கொள்ளக்கூடியது. இதன் விளைவால் கொலஸ்ட்ரால் குறைகிறது. நூல்கோலில் உள்ள ஃபோலேட்டும் இதயத்துக்கு இதமானது.
 
1474104992-072.jpg
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
2. புற்றுநோய்க் கட்டிகள் உருவாவதைத் தடுக்கும். தினமும், உணவில் சிறிதளவு நூல்கோல் சேர்த்துக் கொள்வதன் மூலம் மார்பகப் புற்றுநோய், பெருங்குடல் மற்றும் மலக்குடல் புற்றுநோய்கள் வராமல் தப்பிக்கலாம்.
 
3. நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். நூல்கோலின் வேர்ப்பகுதிகளில் உள்ள பீட்டா கரோட்டின், ஆரோக்கியமான சவ்வுகள் உற்பத்தியாக உதவுவதுடன், நோய் எதிர்ப்புத் திறனையும் அதிகரிக்கக் கூடியது.
 
4. நார்ச்சத்து நிறைந்துள்ளதால், மலச்சிக்கல் வராது. எடைக் குறைப்புக்கு உதவும் நூல்கோலில் கலோரிகள் குறைவு. இதிலுள்ள அதிக நார்ச்சத்து வளர்சிதை மாற்றத்தை சீராக்கி, பெருங்குடல் இயக்கத்தை செம்மையாக்கி, எடைக் குறைப்புக்கு உதவுகிறது.
 
5. நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்யும். நூல்கோலின் மேலுள்ள கீரைப்பகுதியில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால், அது நுரையீரல் ஆரோக்கியத்துக்குப் பெரிதும் உதவுவதாக சொல்லப்படுகிறது.
 
6. செரிமானத்தைத் தூண்டும். நார்ச்சத்து மிகுந்த காய் என்பதால் இயல்பிலேயே செரிமானத்தை சீராக்கும் குணம் இதற்கு உண்டு. தவிர, வயிற்று உபாதைகளுக்கும் வயிற்றுப்புண்ணுக்கும் காரணமான பாக்டீரியாவை எதிர்க்கக்கூடியது.
 
7. எலும்பு வளர்ச்சிக்கு நல்லது. காலோரிகள் குறைவு, உடல் எடை அதிகரிக்காது. 6. வைட்டமின் ஏ, சி, இ, மாங்கனீசு, பீட்டாகரோட்டின் உள்ளன. 
 
8. உடல் துர்நாற்றத்தைக் குறைக்கும். கோடை காலங்களில் உடல்நாற்றம் தவிர்க்க முடியாதது. நூல்கோல் சாறு குடிப்பதன் மூலம் இந்த வாடையைத் தவிர்க்கலாம்.

http://tamil.webdunia.com/article/home-remedies/rich-in-nutrients-with-immunity-contain-turnip-116091700028_1.html

Link to comment
Share on other sites

  • 1 year later...

அத்திப்பழத்தில் கிடைக்கும் பலன்கள்

118991-figfruit.jpg

பொதுவாக அத்திப்பழம்   உட்கொள்வது மூலம் நமக்கு கிடைக்கும் பலன்கள் நிறைய உள்ளன. அத்திப் பழத்தின் இலை, மரப்பட்டை, பழம், இவற்றில் கிடைக்கும் பலன்கள் : 

அத்தி பழத்தில் இருக்கும்  புரோட்டீன், சர்க்கரை சத்து, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ள பழம் இது! 

# அத்திப்பழம் சாப்பிடும்  பொது  உடலில் உள்ள இரத்தத்தை சுத்தம் செய்து , அதிக அளவு ரத்த உற்பத்தி செய்கிறது.
#  அத்திப்பழங்களை சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக இருக்கும்.
# ஒரு துண்டு உலர்ந்த அத்திப்பழத்தில் சுமார் 47 கலோரிகள் உள்ளன. மற்றும் 0.2 கிராம் கொழுப்புக்கள் உள்ளது.
#  உடல் எடையைக் குறைக்க நினைத்தால் இந்தபழத்தை  ஸ்நாக்ஸாக சாப்பிடால்  உடல் எடை குறையும்.
# சிறுநீர்ப்பைப் புண், சிறுநீர்ப் பையில் கல் தோன்றுதல், ஆஸ்துமா, வலிப்பு நோய், உடல் உளைச்சல், சோர்வு, அசதி, இளைப்பு போன்றவற்றை நீக்கவும் அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது.
# அத்திப் பழத்தைச் சாறு பிழிந்து அதனுடன் தேன்கலந்து சாப்பிட்டு வந்தால் மூலநோயைக் குணப்படுத்தும்.
# அத்திப் பழ இலையை  உலர வைத்துப் பவுடராக்கிக்  தேனில் கலந்து சாப்பிட்டால், பித்தம், பித்தத்தால் வரும் நோய்கள் குணம் பெறுகின்றன.
# வாய்ப்புண், ஈறுகளில்  சீழ்பிடித்தல் போன்ற நோய்களைக் குணமாக்க அத்தி இலைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து வாய் கொப்பளிப்பது மிகவும் நல்லது  .
# அத்தி மரத்தின் பட்டையை இரவில் ஊற வைத்துக் காலையில் குடிநீராகக் குடித்தால் வாத நோய்,
மூட்டுவலிகள் குணப்படும். 
அத்திப்பழத்தில் உள்ள  வைட்டமின் ஏ, வைட்டமின் சி உள்ளது .

http://zeenews.india.com/tamil/health/benefits-of-the-fig-fruits-297226

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.