Jump to content

விவேக சிந்தாமணி


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆலகால விடத்தையும் நம்பலாம்;

.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;

கோல மாமத யானையை நம்பலாம்;

.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;

காலனார் விடு தூதரை நம்பலாம்;

.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;

சேலை கட்டிய மாதரை நம்பினால்

.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

விளக்கவுரை

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர் இப்படிப்பட்ட பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

Link to comment
Share on other sites

ஆலகால விடத்தையும் நம்பலாம்;

.....ஆற்றையும் பெருங் காற்றையும் நம்பலாம்;

கோல மாமத யானையை நம்பலாம்;

.....கொல்லும் வேங்கைப் புலியையும் நம்பலாம்;

காலனார் விடு தூதரை நம்பலாம்;

.....கள்ளர் வேடர் மறவரை நம்பலாம்;

சேலை கட்டிய மாதரை நம்பினால்

.....தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே.

விளக்கவுரை

ஆலகாலம் எனும் கொடிய நஞ்சு, திடீர் எனப் பெருக்கெடுக்கும் ஆறு, எல்லாவற்றையும் அழிக்க வல்ல காற்று, அழகிய பெரிய மதயானை, கொல்லும் தன்மை கொண்ட வேங்கைப் புலி, எமன் அனுப்பும் தூதர், கள்ளர் வேடர் மறவர் இப்படிப்பட்ட பேர்வழிகளை நம்பினாலும் நம்பலாம். ஆனால் ஆடவரை மயக்கச் சேலை கட்டிய வேசிமாதரை நம்பக்கூடாது. அப்படி நம்பினால் பொருளை இழந்து தெருவில் நின்று மயங்கித் தவிப்பார்கள்.

"சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே." - இது ஒட்டுமொத்த பெண்வர்க்கத்தையும் குறைகூறுவது போல் உள்ளதால் இந்த வசனத்துக்கு வேறு ஓர் அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது "சேல் அகட்டிய மாதரை" - அதாவது, "கண்ணை விரித்துப் பார்க்கும் பாங்குடைய பெண்ணை" என்று பொருள் கொள்ளலாம். (எக்குத்தப்பா பார்த்தல் என்று பொருள் :unsure: ) அது காலப்போக்கில் "சேலைகட்டிய" என்றாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"சேலை கட்டிய மாதரை நம்பினால் தெருவில் நின்று தியங்கித் தவிப்பரே." - இது ஒட்டுமொத்த பெண்வர்க்கத்தையும் குறைகூறுவது போல் உள்ளதால் இந்த வசனத்துக்கு வேறு ஓர் அர்த்தம் இருப்பதாகச் சொல்கிறார்கள். அதாவது "சேல் அகட்டிய மாதரை" - அதாவது, "கண்ணை விரித்துப் பார்க்கும் பாங்குடைய பெண்ணை" என்று பொருள் கொள்ளலாம். (எக்குத்தப்பா பார்த்தல் என்று பொருள் :unsure: ) அது காலப்போக்கில் "சேலைகட்டிய" என்றாகிவிட்டதாகக் கூறுகிறார்கள்.

கருத்துக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

[quote

ஆபத்துக்கு உதவாப் பிள்ளை அரும்பசிக்கு உதவா அன்னம்

தாபத்தைத் தீராத் தண்ணீர் தரித்திரம் அறியாப் பெண்டிர்

கோபத்தை அடக்கா வேந்தன் குருமொழி கொள்ளாச் சீடன்

பாபத்தைத் தீராத் தீர்த்தம் பயனில்லை ஏழும்தானே. 1.

பிள்ளைதான் வயதில் மூத்தால் பிதாவின் சொல் புத்தி கேளான்

கள்ளினற் குழலாள் மூத்தால் கணவனைக் கருதிப் பாராள்

தெள்ளற வித்தை கற்றால் சீடனும் குருவைத் தேடான்

உள்ளநோய் பிணிகள் தீர்ந்தால் உலகர் பண்டிதரைத் தேடார். 2.

தொடரும்...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது ராமலிங்க அடிகளார் அருளியதா?.............தேவந்தி.......

Link to comment
Share on other sites

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது ராமலிங்க அடிகளார் அருளியதா?.............தேவேந்தி.......

விவேக சிந்தாமணி ஆசிரியர் திருத்தக்கதேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள போதிலும் இதற்கு ஆதாரம் போதியளவு இல்லாததால் ஆசிரியர் யாரென உறுதியாக அறிய முடியாமல் உள்ளது.

Link to comment
Share on other sites

<span style='font-size:25pt;line-height:100%'>விவேக சிந்தாமணி</span> தொடர்ச்சி...

வெம்புவாள் விழுவாள் பொய்யே மேல் விழுந்தழுவாள் பொய்யே

தம்பலம் தின்பாள் பொய்யே சாகிறேன் என்பாள் பொய்யே

அம்பிலும் கொடிய கண்ணாள் யிரம் சிந்தையாளை

நம்பின பேர்கள் எல்லாம் நாயினும் கடையாவாரே. 15.

கெற்ப்பத்தான் மங்கையருக்கு அழகு குன்றும்

. கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

. சொல் கேளாப் பிள்ளைகளால் குலத்துக்கு ஈனம்

நற்புத்தி கற்பித்தால் அற்பர் கேளார்

. நன்மை செய்யத் தீமை உடன் நயந்து செய்வார்

அற்பரோடு இணங்கிடில் பெருமை தாழும்

. அரிய தவம் கோபத்தால் அழிந்து போமே! 16.

தொடரும்...

கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

இதை படிக்கும் போது நினைவில் நிழலாடும் ஒரு கதை.

சங்கரன் பிள்ளை என்று ஒரு நாவிதர்(முடி வெட்டுபவர்) துபாய் போனார். அவருக்கு அங்கு அரசனிடம் வேலை கிடைத்தது. அவர் அங்கு கிடைக்கும் வருமானத்தில் கொஞ்சம் கொஞ்சமாக பணம் சேர்த்து தங்க கட்டி செய்து தன்னுடைய பெட்டியில் பத்திரமாக வைத்திருந்தார். அவருக்கு தாங்கமுடியாத மகிழ்ச்சி.

ஒரு நாள் அவர் அரசனுக்கு முடி வெட்டும் போது அரசனுக்கு தீடீர் என்றூ மக்களின் பொருளாதர நிலைபற்றி அறிய ஆவல். சங்கரன் பிள்ளையிடம்

நம் நாட்டில் மக்கள் எல்லாம் நல்ல இருக்காங்களான்னு கேட்டார்.

அதற்க்கு நம்ம சங்கரன் பிள்ளை மிக்க மகிழ்ச்சியுடன் உங்கள் ஆட்சியில் என்ன குறைகான முடியும். மக்கள் எல்லாரிடமும் ஆக குறைந்தது ஒரு தங்க கட்டியாவது இருக்கும் என்றார்.

மன்னருக்கு ஏகபட்ட மகிழ்ச்சி, மறுநாள் அவையை கூட்டினார் தன் சந்தோசத்தை வெளியிட்டார். அமைச்சருடன் பகிர்ந்து கொண்டார். அப்ப அமைச்சர் சொன்னார் அரசே தாங்களுக்கு ஒவ்வொறு குடியிடமும் ஒரு தங்க கட்டியாவது இருக்கும் என்று யார் கூறியது என்று கேட்டார்.

அரசரும் மகிழ்சியுடன் நம்ம சங்கரன் பிள்ளையை கூறியதாக கூறி, தாங்கள் இதுபற்றி கூறவில்லையே என்று கடிந்து கொண்டார்.

உடனே அமைச்சர், அரசே நாளைக்கு சங்கரன் பிள்ளையை இதே கேள்வியை கேளுங்கள் என்று கூறிவிட்டு அவையை விட்டு சென்று விட்டார்.

மறுநாள் அரசவை கூடும் முன்பே அமைச்சர் நம்ம சங்கரன் பிள்ளையிடம் இருந்த தங்கக்கட்டிய திருட செய்துவிட்டார்.

மறுநாள் அரசவை கூடியது, அரசர் மகிச்சியாக அமர்ந்திருந்தார், அரச பிரதானிகள், அமைச்சர் எல்லாரும் அமர்ந்திருந்தார்கள். நம்ம சங்கரன் பிள்ளையும் வந்திட்டார்.

அரசர் சங்கரன் பிள்ளையிடம் நம் நாட்டில் மக்கள் எல்லாம் எப்படி இருக்காங்க?

நம்ம சங்கரன் பிள்ளைக்கு தாங்க முடியாத கோபம். என்ன அரசு இது மனிசன் நிம்மதியா தூங்ககூட முடியல, ஒரே திருட்டு, கொலை, கொள்ளை. ஒரு சின்ன தங்க கட்டிய கூட பத்திரமாக வச்சிருக்க முடியல என பொங்கி அழுதுட்டார்.

அரசருக்கு என்னவே போல் ஆகிவிட்டது அமைசரை பார்த்து அசடு வழிந்தார்.

அமைசர் சொன்னார் அரசே. சங்கரன் பிள்ளை போன்றோரின் எண்ணங்களை கருதில் கொள்ளாதீர்கள் அவரை போன்றோர் அவரின் நிலையை வைத்தே எல்லோர் நிலையையும் மதிப்பிடுவார்கள் என்று அறிவுறுத்தினார். இப்ப சீவக சிந்தாமணியின் இந்த வரிகளை படிங்கள்.

கேள்வி இல்லா அரசனால் உலகம் பாழாம்

துற்ப்புத்தி மந்திரியால் அரசுக்கு ஈனம்

நம்ப சங்கரன் பிள்ளை போன்றே சிலர் இந்த இணைய தளத்திலும் கருத்து சொல்றாக? யாருன்னு சொல்லுங்க பார்ப்போம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • சீமான் உட்பட எவருமே தங்கம் இல்லை. ஆகவே இவரும் மாற்று இல்லை. ஒரு கள்ளனை இன்னொரு கள்ளனால் பிரதியிடுவது அல்ல மாற்று. ஓம். ஏன் எண்டால் அவர் சின்ன கருணாநிதி என நான் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டதால். இப்ப GOAT ல பிசி🤣.  பிகு நான் விஜை ஆதரவாளனோ பிரச்சாரகரோ இல்லை. ஒரு போதும் ஆக போவதில்லை. ஆனால் நம்ம மருமகன். சினிமாவில் பிழைக்க முடியாமல் போனபின் கட்சி தொடங்காமல் - நினைத்து பார்க்க முடியாத பணம் கொட்டும் வியாபாரத்தை விட்டு விட்டு வருகிறார். திரிசாவோ, நயனோ நாசம் பண்ணி விட்டார் என பொதுவெளிக்கு வரவில்லை🤣. இன்னும் கள்ளன் என நினைக்கும்படி எதுவும் மாட்டவில்லை. ஆகவே இப்போதைக்கு இவருக்கு benefit of the doubt ஐ கொடுக்கலாம்.
    • இராக்கில் உள்ள ஈரானிய புரொக்சி படைகள் மீதும் விமானத்தாக்குதலாம். அமெரிக்கன் சென்ரல் கொம்மாண்ட் தாம் இல்லை என மறுப்பு. இஸ்ரேல் லெப்ட் சிக்க்னல் போட்டு ரைட் கட் பண்ணி இருக்குமோ? விமானங்கள் ஜோர்தான் பக்கம் இருந்தே வந்தனவாம்.
    • ஆழ்ந்த அஞ்சலிகள். மத்திய கல்லூரியில் என் அப்பாவுக்கு சீனியர். எதிர் என ஆரம்பித்து இவரை பற்றி ஒரு அசகாய சூரனை போல கதைத்து கொண்டே இருப்பார் அப்பா. அதே போலத்தான் கந்தப்பு சொன்ன அதிபர் ஸ்மித்தை பற்றியும்.   
    • யார் சொன்னார் சீமான் மட்டும் தங்கம் என? சீமான் இன்னும் ஆட்சி செய்யவில்லையே? அவரவர் தாம் விரும்பும் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளை விரும்புகின்றனர். விஜய் கட்சி ஆரம்பிக்க முதலே நீங்கள் சீமான் எதிர்ப்பாளர் தானே? அது சரி விஜய் அரசியல் கட்சியின் கொள்கை என்ன? 🤣
    • ஓம் கருணாநிதி கூட ஒரு முறை சொன்னார் “நெல்லை எனக்கு எல்லை, குமரி எனக்குத் தொல்லை” என. எப்போதும் ஏனைய தமிழ் நாட்டு தொகுதி முடிவுக்கு மாறாக போக அதிக வாய்ப்பு உள்ள தொகுதி கன்யாகுமரி. தவிர பொன்னாருக்கு தனிப்பட்ட செல்வாக்கும் உண்டு. ஆனால் வாலி சொல்லும் காரணங்களும் பலமானவையே. கடும் போட்டி இருக்கும் என நினைக்கிறேன். மாற்று உண்மையான மாற்றாக இருக்க வேண்டும்.  உங்களை போலவே மேலே உள்ள காரணங்களுக்காக நான் விஜையின் அரசியல் வரவை வரவேற்கிறேன்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.