Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
எனக்கு மனதில் பயத்துடன் கூடிய ஒரு பெருமிதமும் தோன்றியது. செய்வது திருட்டு. இதற்குள் என்ன பெருமிதம் என்று மனதில் எண்ணம் எழ மனதுக்குள்ளேயே சிரித்தும் கொண்டேன். என்றாலும் இது ஒரு அசட்டுத் துணிவு என்பதும் தெரிந்தே தான் இருந்தது.

அம்மாவுக்குத் தெரிந்தால் என்ன நினைப்பா என்று ஒரு பயம் ஏற்பட்டாலும் இப்படி திருட்டுத்தனமாய் பள்ளிக்கூடத்தைக் கட் பண்ணிவிட்டு படம் பார்க்க வருவது ஒரு திரில்லான அனுபவமாகத்தான் இருக்கு என எண்ணிக் கொண்டது மனது.

இருந்தாலும் அடிமனதில் யாராவது ஊரவர்கள் பார்த்துவிடுவார்களோ என்னும் அச்சம் ஓடிக்கொண்டே இருந்தது. தனிய நான் வரவில்லைத்தான். இன்னும் மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி இத்தனை பேருடன் தான் வந்திருக்கிறேன். பாடசாலைக்குப் பக்கத்தில் இருக்கும் மாலியின் வீட்டில் ஆடைகள் கொண்டுவந்து நாகரிக ஆடைகளை மாற்றிக் கொண்டு தான் வந்தது எனினும், சீற்றில் வந்து அமர்ந்ததுமே, என்னடா வகுப்பைக் கட் பண்ணிவிட்டு வந்திட்டியோ என்று பின் வரிசையில் இருந்து  ஒருவன் கூறுவது கேட்டது.

கட்டாயம் கட் அடித்துவிட்டுத்தான் இந்தப் படம் பார்க்கவேண்டும் என்றில்லை. சில நேரம் அம்மாவைக் கேட்டிருந்தால் அவவே கூட்டிக் கொண்டும் வந்திருக்கலாம். ஆனால் கமலகாசனின் வாழ்வே மாயம் படத்தை அம்மாவோட வந்து பார்த்தால் ரசிச்சே இருக்கும்  ???

அந்த வயதில் எந்த ஹீரோ என்றாலும் கற்பனை செய்து கொண்டு, மற்ற நண்பிகளுடன் அவர்களைப் பற்றி அரட்டை அடிப்பதில் உள்ள சுகம் வேறெதிலும் இல்லைத்தான்.

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

இடைவேளையின் போது நான் பயத்தில எழும்பி எதுவும் வாங்கப் போகவுமில்லை. குனிஞ்ச தலையை நிமிர்த்தவுமில்லை. மாலியும் ரதியும் தான் துணிவாப் போய் ஒறேஞ் பார்லியும் உறைப்புக் கச்சானும் வாங்கிக் கொண்டு வந்தது. எப்பிடித்தான் அவர்களுக்கு அந்தத் துணிவு அங்கே அப்பவே எண்டு எத்தனையோ நாட்கள் வியந்தும் இருக்கிறன்.

படத்தின்ர கடைசிக் கட்டத்தில படம் எண்டு தெரிஞ்சும் லேன்சி நனையும் அளவு அழுததும், இனிமேல் கமலகாசன் திரும்பி வரமாட்டார் என்ற அளவில் பீல் பண்ணியதும் இப்ப நினைச்சாலும் சிரிப்பா இருக்கு.

படம் முடிஞ்சு உடன எழும்ப கேமாதான் இழுத்து இருத்தினவள். எல்லாரும் போகட்டுமடி என்று. களவு செய்த ஆட்கள் மாதிரி ஏனடி வாறாய் இயல்பாய் இரு என்று மாலி சொன்னாலும் யாழ்ப்பாணம் பஸ்டாண்டுக்கு வந்து பஸ் எடுத்து நெஞ்சிடியோட வீட்டை போய்ச் சேர்ந்த பிறகும் பயம் போகவில்லை.

அம்மா ஏன் லேட் என்று கேட்கவில்லை. ஏனென்றால் முதல் நாளே பள்ளியில் விளையாட்டுப் போட்டிக்கு பயிற்சி என்று சொல்லி வச்சதில் தப்பினது.

அடுத்த நாள் டீச்சர் கேட்டதுக்கு முதலே பிளான் பண்ணினபடி ஒரே சாட்டுச் சொல்லாமல் ஒவ்வொருத்தர் ஒவ்வொரு மாதிரிச் சொன்னதை டீச்சர் நம்பினாவோ இல்லையோ ஒன்றும் கதைக்கவில்லை.

ஒரு வாரம் செல்ல ஒரு சனிக்கிழமை. எங்கள் ஒழுங்கைக்கு அடுத்த ஒழுங்கையில் இருக்கும் பத்மா அக்கா, நான் டியூசனுக்குப் போகும் போது  சில நேரங்களில் நின்று அவவுடன் கதைத்துவிட்டுப் போவேன். அன்றும் வழமைபோல கதைத்தபோது என்ர தம்பி உம்மை தியேட்டறால வெளியில வரேக்குள்ள கண்டவனாம் என்றவுடன் நெஞ்சு உடனே திடுக்கிட்டதுதான்.

ஆனாலும் சமாளிச்சுக் கொண்டு, ஓமக்கா நானும் இன்னும் மூண்டு பெட்டையளும் போனனாங்கள். நல்ல படம் அக்கா என்று எந்த விதப் பதட்டமும் இல்லாமல் கூறியதில் அவரின் வாய் அடைபட்டுப் போனது. அத்தோடு அடுத்த முறை எங்களோட நீங்களும் வாங்கோவன் என்று விட்டு நான் சென்றதை அவர் வாய் பிளந்தபடி பார்த்துக்கொண்டு நின்றிருப்பா என்பதிலும சந்தேகம் இல்லை.

இரண்டு நாள் போக அவவின் தம்பி ரமேஸ், என்னைப் பார்த்து ஒரு அசட்டுச் சிரிப்புச் சிரித்தபடி கடந்து போனான். நான் கூட சிரித்து வைப்போமா என்று ஒருகணம் எண்ணிவிட்டு மறுகணம் வேண்டாம் என்று மனம் சொல்ல சிரிக்காமலே அவனைக் கடந்து போனேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

 

குட்டிகளும்(பிள்ளைகள்) குடித்தனமாகவும் புலம் பெயர்ந்து இருக்கினம் :D

மூன்றுபேர் மாலி, நந்தினி, ஹேமா, ரதி
நாலு பேரா? மூன்று பேரா?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நல்ல அனுபவக் கதை சுமேரியர், எதோ சிங்கள பெண்கள் பெயர்போல் தெரிகிறது, உங்கள் நண்பிகளிம் பெயர்கள்.
 
பின்னால இருந்த ஹீரோக்கள் எல்லோரும் தேவி.... ஸ்ரி தேவி
கையில் மணியை பிடித்தே தினமும் ஆட்டும் பக்தனம்மா...... சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா :D .. :lol: .. :lol: .... என்று பாடி இருப்பார்கள்.
 
இந்த பாட்டு இந்தப் படத்த் என நினைக்கிறேன்.. :D
 

 

Link to comment
Share on other sites

படம் தொடங்கி லைட் எல்லாம் நிப்பாட்டின பிறகு யாராவது தெரிஞ்ச ஆட்கள் வந்திருக்கினமோ என்று பார்க்கத் தலையைத் திருப்பி சுற்றிவரப் பார்க்க, நல்ல காலம் ஊர்க்காரர் ஒருத்தரும் இல்லை. பின்னால இருந்த ஹீரோக்கள் தங்களைத்தான் திரும்பிப் பாக்கிறன் எண்டு நிமிர்ந்து இருந்து பல்லைக் காட்டினதையும் இண்டைவரை மறக்க முடியேல்ல.

 

 

சுமோ அக்கா (மனதுக்குள்): பொறுக்கிப் பயலுகள்.. பல்லைக் காட்டுதுகள்

ஹீரோக்கள் (மனதுக்குள்) : இடுக்கண் வருங்கால் நகுக.. :D

 

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமோ அக்கா.. :D

Link to comment
Share on other sites

சுமோக்கா...இப்ப தான் தெரியுது நாங்க இப்படி எத்தனை விடயங்களை பள்ளிபருவத்தில் கோட்டைவிட்டு இருக்கின்றோம் என்று :(:)

பகிர்வுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

படிக்கவிட என்னெல்லாம் செய்திருக்கிறீர்கள் சுமே!  :lol: வம்படி பெட்டைகளை பற்றிச் சொல்லி வேலை இல்லை  :D

Link to comment
Share on other sites

நல்லா இருக்கு கதை . :icon_mrgreen: .

மேசோ கொஞ்சம் அசாத்திய பேர்வழி போலத்தான் இருக்கு .

 

நினைத்தாலே இனிக்கும் பார்க்கும் போது இப்படித்தான் முன் வரிசையில் இருந்த கொஞ்ச கேர்ல்ஸ் படம் தொடங்கி கமல் மைக்குடன் வர

"சோ சுவீற்றப்பா சோ சுவீற்றப்பா"  என்று விட்டபாடில்லை 

"என்னையோ சொல்லுறிங்கள் தாங்க்ஸ் " என்று நாம திருப்பி போட அத்தோட  ஆட்கள் கப்சிப் . :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான்

சிறு சிறு  தப்புக்களுக்கே  பெரிய எடுப்பெடுத்து

அதிலும் கோட்டைவிடுவதே  வழமை :D

 

நன்றி  அனுபவப்பதிவுக்கு  சுமே

ஆனாலும் வயசு அதிக வித்தியாசமில்லை

நானும் இதே படத்தை

அதே நேரம்  பாடசாலைமுடிய  பார்த்தேனே........ :lol:  :D  :D

Link to comment
Share on other sites

உண்மைதான்

சிறு சிறு  தப்புக்களுக்கே  பெரிய எடுப்பெடுத்து

அதிலும் கோட்டைவிடுவதே  வழமை :D

 

நன்றி  அனுபவப்பதிவுக்கு  சுமே

ஆனாலும் வயசு அதிக வித்தியாசமில்லை

நானும் இதே படத்தை

அதே நேரம்  பாடசாலைமுடிய  பார்த்தேனே........ :lol:  :D  :D

 

2014-1983+16 = ?? :D

Link to comment
Share on other sites

3 வருடம் எங்கோ உதைக்கிறதே :lol::icon_idea:

 

 

அடக்கடவுளே... உண்மையாவா? :huh:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துணிச்சலுக்கு  வேம்படியை அடிச்சுக்க ஆளே கிடையாது...! :)

 

பயத்தில எத்தனை பேராய் படத்துக்கு போனது என்டதை மறந்திட்டீங்கள்...!! :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

2014-1983+16 = ?? :D

 

இதில  எல்லாம் சரி

ஆனால் 16 என்பது கொஞ்சம் மரியாதை கருதி :lol:  (இந்த வயசிலேயே  குழப்படியா? :lol: )  கொஞ்சம்  குறைக்கப்ப்பட்டு இருக்கலாம்

Link to comment
Share on other sites

2014-1983+19 :D:lol:

 

19 இல் படத்துக்கு பாடசாலையில்(??) இருந்து போவது திறில்லா?  ^_^  :icon_idea:

Link to comment
Share on other sites

19 இல் படத்துக்கு பாடசாலையில்(??) இருந்து போவது திறில்லா?  ^_^  :icon_idea:

 

இதில் ஏதோ தில்லுமுல்லு நடந்திருக்கு :) படம் 1982 ல் வந்திருந்தாலும் 18 வயதாக இருந்திருக்கும் :rolleyes:  விசுகு அண்ணா விளக்கம் பிளீஸ் :) :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு அண்ணாவுக்கு அந்த படம் வரும் போது[82] 20,21 வயசு இருக்கும் என்று நினைக்கிறேன்.சுமோவுக்கு 17,18 இருக்கும்

 

இது தானே  வேண்டாம் என்பது....... :D

 

30/09/1963

1982 இன் முற்பகுதி  என்றால் எனக்கும் 18 தான்

பிற்பகுதி  என்றால் 19...

 

அப்போ

நான் சொன்ன  கணக்கு (பெரிய  வித்தியாசமில்லை) சரியாக வருகுதெல்லே  ரதி. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் குமாரசாமி, புத்தன், கொழும்பான், இசை, தமிழினி,அலை, அர்யுன், விசுகு, சுவி அண்ணா, ரதி, நவீனன், கரன் ஆகிய உறவுகளே நன்றி.


மாலி,நந்தினி,ஹேமா,ரதி  இப்ப எங்கை இருக்கினம்?

 

அவை எல்லாம் எல்லாஇடமும் செட்டில் ஆயிட்டினம் :D

 


குட்டிகளும்(பிள்ளைகள்) குடித்தனமாகவும் புலம் பெயர்ந்து இருக்கினம் :D

 

நாலு பேரா? மூன்று பேரா?

 

 

நாலு பேர்தான். கை தடுமாறி எழுதினா உடன அதைப் பிடிச்சுக் கொண்டு :D

 


 

நல்ல அனுபவக் கதை சுமேரியர், எதோ சிங்கள பெண்கள் பெயர்போல் தெரிகிறது, உங்கள் நண்பிகளிம் பெயர்கள்.
 
பின்னால இருந்த ஹீரோக்கள் எல்லோரும் தேவி.... ஸ்ரி தேவி
கையில் மணியை பிடித்தே தினமும் ஆட்டும் பக்தனம்மா...... சூடம் ஏற்றி மேலும் கீழும் காட்டும் பித்தனம்மா :D .. :lol: .. :lol: .... என்று பாடி இருப்பார்கள்.
 
இந்த பாட்டு இந்தப் படத்த் என நினைக்கிறேன்.. :D
 

 

 

துணிவில்லாத பயல்கள் அப்பிடி ஒண்டுமே செய்யேல்லை.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த உறவுகள் குமாரசாமி, புத்தன், கொழும்பான், இசை, தமிழினி,அலை, அர்யுன், விசுகு, சுவி அண்ணா, ரதி, நவீனன், கரன் ஆகிய உறவுகளே நன்றி.

 

அவை எல்லாம் எல்லாஇடமும் செட்டில் ஆயிட்டினம் :D

 

இதுவரை என்னை விசுகு அண்ணை  என  அழைத்த சுமே

இன்று தம்பியாக்கியுள்ளார்

 

எனவே எனது வயசுக்கு மூத்தவர் என ஒத்துக்கொண்டுள்ளார். :D

எனவே  இங்கு சந்தேகப்பட்டவர்களுக்கு விடை  கிடைத்துள்ளது

நன்றி  சுமே அக்கா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ அக்கா (மனதுக்குள்): பொறுக்கிப் பயலுகள்.. பல்லைக் காட்டுதுகள்

ஹீரோக்கள் (மனதுக்குள்) : இடுக்கண் வருங்கால் நகுக.. :D

 

அனுபவப்பகிர்வுக்கு நன்றி சுமோ அக்கா.. :D

 

அப்ப எல்லாம் எல்லாரையும் திட்ட மாட்டம் எல்லே :D

 

சுமோக்கா...இப்ப தான் தெரியுது நாங்க இப்படி எத்தனை விடயங்களை பள்ளிபருவத்தில் கோட்டைவிட்டு இருக்கின்றோம் என்று :(:)

பகிர்வுக்கு நன்றி.

 

வீணாக்கிப் போட்டியளே தமிழினி. :lol:

 

படிக்கவிட என்னெல்லாம் செய்திருக்கிறீர்கள் சுமே!  :lol: வம்படி பெட்டைகளை பற்றிச் சொல்லி வேலை இல்லை  :D

 

உமக்கு வயித்தெரிச்சல் :lol:

 

Link to comment
Share on other sites

ஆக ஒரு படமா களவாக பார்த்தீர்கள் சுமோ :icon_mrgreen:  வேம்படியில் படித்ததுக்கு ஒரு படம் காணாது :o:lol:

 

 

ஏன் இந்தக் கொலை நவீனன்?? :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 03:40 PM   அதிகாரபகிர்வு உரிய முறையில் சரியான விதத்தில் இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை சிங்கள மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என அரசியல் செயற்பாட்டாளர் ராஜ்குமார் ரஜீவ்காந்  வேண்டுகோள் விடுத்துள்ளார். கொழும்பில் தூய்மையான அரசியல் கலாச்சாரத்தை ஏற்படுத்துவதற்காக மார்ச் 12 இயக்கம் ஏற்பாடு செய்திருந்த தூய்மையான அரசியலுக்காக ஒன்றிணைவோம் என்ற நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது, தூய்மையான ஒரு எதிர்காலத்தினை  தூய்மையான அரசியலிற்கான ஒரு தேவைப்பாட்டினை அரசிடமிருந்து மக்கள் நீண்டகாலமாக  எதிர்பார்க்கின்றனர். இலங்கைதொடர்ந்து பல வருடங்களாக பொருளாதார ரீதியில் பின்னடைவுகளை சந்தித்துவந்தாலும் 2022ம் ஆண்டு மிக மோசமான அடியை சந்தித்தது 2022 பொருளாதார பிரச்சினை என்பது வெறுமனே 2022 ம் ஆண்டு வந்தது அல்ல இது மிகநீண்டகாலமாக தீர்க்கவேண்டிய பிரச்சினைகளை தீர்க்காமல் அந்த பிரச்சினைகளை மையமாக வைத்து அதன் ஊடாக அரசியல் இலாபம் தேடிக்கொண்டிருந்தவர்களால் எடுத்துக்கொண்டுவரப்பட்டு பின்னர் அது ஒரு பூகம்பமாக வெடித்தது. அதுதான் நாங்கள் அனைவரும் எதிர்நோக்கிய மோசமான பொருளாதார  நெருக்கடி. அதன் பிற்பாடு நாங்கள் மீட்சியை அடைந்துவிட்டோம் என சிலர் கூறினாலும் கூட நாங்கள் உண்மையான மீட்சியை அடையவில்லை. சிறந்த ஒரு பொறிமுறை ஊடாக நாங்கள் அடையவேண்டிய இலக்குகள் இன்னமும் உள்ளன. சமத்துவம் என்ற வார்த்தையை வைத்து நாங்கள் இலங்கையின் ஒட்டுமொத்த  பிரச்சினையையும் அடையாளம் காணமுடியும். சமத்துவமற்ற ஜனநாயகத்தினால் நாங்கள் எந்தவொரு முன்னேற்றத்தையும் அடைந்துவிட முடியாது. இலங்கையில் இலவசக்கல்வி வழங்கப்படுகின்றது இந்த இலவசக்கல்வி ஊடாக தங்களுடைய இலக்கினை ஒரு பணக்கார மாணவன் அடைந்துகொள்ளும்;  தன்மையும் ஏழை மாணவன் அடைந்துகொள்ளும் முறைக்கும் இடையில் பாரிய வேறுபாடு காணப்படுகின்றது. அடித்தட்டுமக்கள் இவ்வளவு சிரமங்களை எதிர்கொள்கின்றனர் ஏன் அவர்கள் இவ்வளவு பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளவேண்டியுள்ளது என்பதை சற்றே சிந்தித்து பார்த்தால் சமத்துவமற்ற நிலையே இதற்கு காரணம் என்பது புலப்படும். வருமானசமத்துவம் இன்மை அதிகரித்துவருகின்றது செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்களாகின்றனர்  வறியவர்கள் மேலும் வறியவர்களாகின்றனர். இங்கு காணப்படுகின்ற ஜனநாயகத்தில் தமிழர்கள் முஸ்லீம்கள்  ஒருபோதும் அதிகாரம் செலுத்துவதில்லை. சிங்களவர்கள் கொண்டுவருகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள்தான் அதிகாரம் செலுத்துகின்றார்கள. நாங்கள் பங்காளிகள் இல்லையா என்ற கேள்வி  தமிழ் முஸ்லீம்கள் மத்தியில் காணப்படுகின்றது. வடக்குகிழக்கில் தமிழ் மக்களின் நிலங்கள் அடாத்தாக கைப்பற்றப்படுகின்றன இதற்கு பொலிஸார் துணைபோகின்றனர். இனங்களுக்கு இடையில் சமத்துவம் இன்மையே இதற்கு காரணம் மற்றைய சமூகங்களிற்கு அதிகாரங்கள் சென்றடையவில்லை. கொரோனா காலத்தில் முஸ்லீம்மக்களின் உடல்கள் எரியூட்டப்பட்டன அவர்கள் பழிவாங்கப்பட்டார்கள் இதற்கு யாராவது பொறுப்புக்கூறச்செய்யப்பட்டார்களா  சிறுபான்மை சமூகங்களின் இடங்களை பிடித்து  பௌத்த மக்களை கவர்ந்து நாயகர்களாக மாறி தேர்தல்களில் வெற்றிபெறுகின்றனர் ஆனால் அவர்களை வெற்றிபெறச்செய்தவர்களின் வாழ்க்கை மாற்றமடையாமல் வறுமையில் நீடிக்கின்றது. இந்த உணர்வு அரசியலை என் சகோதரசிங்கள மக்கள் புரிந்துகொள்ளவேண்டும். சரியான முறையில்  அதிகாரபகிர்வு இடம்பெற்றால்தான் பொருளாதார வளர்ச்சி சாத்தியம் என்பதை நீங்கள் நம்பவேண்டும். மீண்டும் மீண்டும் இந்த விடயங்களை  கூறி எங்களை எத்தனை காலமாக எங்களை ஏமாற்றப்போகின்றீர்கள். புரிந்துணர்வுதான் இந்த ஜனநாயகத்திற்கு மிகவும் அவசியமானது. https://www.virakesari.lk/article/179972
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • சீமானுக்கு எதிராக பொங்கி எழுபவர்கள் யாரென்று பார்த்தால் சிங்கள ஆக்கிரமிப்பையும் கிந்திய ஆக்கிரமிப்பை பற்றியும் வாயே திறக்காதவர்கள் தான் 🤣
    • எம் ஜிஆர் ,  கருணாநிதி , நெடுமாறன்,திருமாளவன்,வைகோ,துரைமுருகன் போன்றோர் செய்யாத ஈழ அரசியலையா சீமான் செய்து விட்டார்? அதிலும் பழ நெடுமாறன்  ஒருபடி மேலே......! நான் தமிழன். நீங்கள் ஈழத்து திராவிடர்களா?😁
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.