Jump to content

மைக்ரோ சொவ்ட் கல்வி உலகளாவிய மன்றத்தில் சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள்


Recommended Posts

 12%28696%29.jpg
மைக்ரோசொவ்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014இனால் உலகம் முழுவதிலும் தெரிவு செய்யப்பட்ட 23,000 ஆசிரியர்களில் வகுப்பறைக்கான புத்தாக்கம் மற்றும் சிறந்த தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப பயன்பாடு தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த இரண்டு ஆசிரியைகளுக்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது.

இதற்கான நிகழ்வு ஸ்பெய்னின் தலைநகரான பார்சிலோனாவில் கடந்த 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரியைச் சேர்ந்த ஷிரோமா வீரதுங்க மற்றும் கண்டி மாதிரிப்பள்ளியைச் சேர்ந்த சம்பா ரத்நாயக்க ஆகியோரே சர்வதேச அங்கீகாரம் பெற்ற ஆசிரியைகள் ஆவர்.

'மைக்ரோசொவ்ட்டின் கல்வி உலகளாவிய மன்றம் 2014'இல் பங்குபற்றிய ஷிரோமா வீரதுங்க மற்றும் சம்பா ரத்னாயக்க ஆகிய இரு ஆசிரியைகளும் தாங்கள் பெற்ற அனுபவத்தைக் கொண்டு இலங்கையிலுள்ள 300 ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்க எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும் செயன்முறை தொடர்பான திட்டங்கள் தொடர்பில் கடந்த வருடம் கல்வித் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளதுடன், அதற்கான அங்கீகாரம் எடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சித் திட்டத்தை மைக்ரோசொவ்ட் இலங்கை நிறுவனமும் கல்வி அமைச்சும் இணைந்து எதிர்வரும் ஏப்ரல் மாதம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

பார்சிலோனாவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 150 அரசாங்க கல்வி அதிகாரிகளும் 260 புத்திஜீவிகள் மற்றும் உலகம் முழுவதிலுமுள்ள 100 பாடசாலைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் 300 பாடசாலை அதிகாரிகளும் கலந்து சிறப்பித்துள்ளனர்.

தமது தெரிவு குறித்து கருத்து தெரிவித்த எம்பிலிபிட்டிய ஜனாதிபதி கல்லூரி ஆசிரியை சம்பா ரத்னாயக்க, தகவல் தொழில்நுட்பம் தொடர்பாக இலங்கை சிறப்பாக இல்லாத போதிலும் இலங்கையின் கல்வி முறையின் அடிப்படையில் ஒவ்வொரு மாணவருக்குமான தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்த முடியும். ஏனெனில் பெரும்பாலான மாணவர்களிடம் தனிப்பட்ட கணினி பாவனை உள்ளது. அதனால் தற்போது கரும்பலகையையும், வெண்கட்டியையும் ஒருபுறம் தள்ளிவிட்டு கணினி மவுசையும், தட்டெழுத்துப் பலகையையும் மேலே கொண்டுவரும் காலம் வந்துள்ளது என்றார்.

 

http://tamil.dailymirror.lk/%E0%AE%B5%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D/105920-2014-.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.