Jump to content

அமெரிக்க தீர்மானம்


Recommended Posts

அமெரிக்க தீர்மானம்

 

பாகம் 1:

 

மாசி மாதத்தின் இறுதி நாட்களுள் ஒன்று. விடிகாலையிலேயே தொலைபேசி அலறியது. யாரப்பா அது இந்த நேரத்தில் என்று எரிச்சலுடன் தொலைபேசிய எடுத்துக் காதில் வைத்தேன்.

 

"ஹலோ.. என்ன நித்திரையா?! ஜெனீவாவில நிண்டுகொண்டு நான் தான் டி.எஸ். கதைக்கிறன்.. அவசரம் இங்கை.." தொலைபேசியின் மறுமுனை படபடத்தது.

 

"ஓ.. நீங்களா.. என்ன இந்த நேரத்தில?!" இது நான்.

 

"இந்த நேரத்திலயோ? நல்லா கேப்பீங்களே.. இங்க முதல் வரைவுத் தீர்மானம் வந்திட்டிது.. பார்த்தியளோ? அல்லது அதுவும் இல்லையா?"

 

"ம்ம்ம்.. பார்த்தனான்... உப்புச் சப்பில்லாமல் இருந்தது.."

 

"அதேதான்.. இதுக்கு உங்களால எதுவும் செய்ய முடியுமே.. ஒரு ஃபோன் அடிச்சு பார்க்கிறது.."

 

"ஓ.. அங்கையா.. இதோ அடிச்சுப் பார்க்கிறன்.. ஆனால் எதையும் உறுதியா சொல்ல முடியாது.."  :blink: 

 

"சரி முடிந்ததை செய்யுங்கோ.. இதைவிட்டால் இனிமேல் கடவுள்தான் காப்பாற்ற வேணும்.." மறுமுனை துண்டிக்கப்பட்டது.

 

என்னடா இது.. காலங்கார்த்தாலயே வம்பு என்று நினைத்துக்கொண்டே அலைபேசியை எடுத்து இலக்கங்களை அழுத்திப் பேசினேன்..

 

--------------------------------------------

 

"ஹலோ.. இது கெல்லியா?!"

 

"ஆம்.. என்ன இந்த நேரத்தில்??"

 

"தீர்மானம் பற்றித்தான்.. ஏன் இவ்வளவு பலவீனமா இருக்கு..?"  :unsure: 

 

"எல்லாம் உங்கள் அண்டை நாட்டால்தான்.. அவர்களை வழிக்குக் கொண்டுவராமல் எடுத்த உடனேயே ஒரு முடிவுக்கு வரமுடியாது.."

 

கெல்லி என்கிற கெல்லி ரிச்சர்ட்சன் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தில் வேலை பார்ப்பவள். சிற்சில தவல்களைப் பகிர்ந்துகொள்வதில் அவளுக்கு சிரமம் ஏதும் இருப்பதில்லை.

 

"அங்குள்ளவர்களை ஏதாவது வகையில் சரிக்கட்டினால்தான் இது முன்னுக்கு நகரும். நான் வேண்டுமானால் தொடர்பு எடுத்துத் தருகிறேன்." கெல்லி தொடர்ந்தாள்.

 

"சரி.. எனக்கு அனுப்பி வையுங்கள்.. அடுத்தகட்டத்தை யோசிக்கிறேன்."

 

அலைபேசியை வைத்துவிட்டு விடிந்தவிட்டாலும் மேலும் ஒரு குட்டித்தூக்கம் போட எண்ணி போர்வைக்குள் நுழைந்துகொண்டேன். சிந்தனைகள் தறிகெட்டு ஓடியது. அங்கு போய் எந்த புளொக்கில் யாரை சந்திக்கவேண்டும்? சௌத் புளொக்கா, நோர்த் புளக்கா? எல்லா விவரங்களையும் கெல்லி தந்துவிடுவாள் என்கிற நம்பிக்கை இருந்தது. சௌத் புளொக் என்றால் சென்னையிலும், நோர்த் புளொக் என்றால் காத்மண்டுவிலும் இறங்கலாமா என்று சிந்தனை அழிச்சாட்டியம் செய்துகொண்டிருந்தது. :icon_idea:  :D

 

(தொடரும்.) 

Link to comment
Share on other sites

  • Replies 122
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

முதல் பச்சை  எனது

தொடருங்கள்.

Link to comment
Share on other sites

பாகம் 2:

 

அன்று நண்பகல். இணையத்தில் விசா விண்ணப்ப முறையை அறிந்துகொண்டு விண்ணப்பம் செய்யத் தயாரானேன். முன்புபோல் அல்லாது, இப்போது இணையத்திலேயே விண்ணப்பத்தை தரவேற்றும் வகையில் செய்திருந்தார்கள். இராஜாங்க விசா நடைமுறை எல்லாம் சிக்கலானது. ஏற்கனவே சுற்றுலா விசா கொடுக்காமல் இழுத்தடிக்கப்பட்ட அனுபவம் அடி வயிற்றைப் பினைந்துகொண்டு இருந்தது.

 

ஒரு முடிவுக்கு வந்தவனாக, சுற்றுலா விசா விண்ணப்பிக்க முடிவு செய்தேன். சுற்ருலாவுக்குச் சென்று அரசியல் பேசக்கூடாதுதான். ஆனாலும் ஆபத்துக்குப் பாவமில்லை.

 

அவர்களது இணையப்பக்கத்தில் எனது விவரங்களைத் தரவேற்றினேன். பதிவு இலக்கம் தரப்பட்டது. அதைக் குறித்து வைத்துக்கொண்டு, விண்ணப்பப் படிவத்தையும் பிரதி செய்துகொண்டேன். அடுத்த நாள் நேரில் சென்று விண்ணப்பத்தைக் கொடுக்க வேண்டும். இணையத்தின்மூலம் தரவேற்றியது நடைமுறையை துரிதமாக்க அவர்களுக்கு உதவும் என்று பின்னர் கேள்விப்பட்டேன்.

 

--------------------------------------------

 

மறுநாள் எனக்கு ஒதுக்கப்பட்ட குறித்த நேரத்தில் அங்கிருந்தேன். வழக்கமாக சந்தைக்கடை போலிருக்கும். இந்த முறையும் அப்படித்தான். ஆனால் காணும் நேரத்துடன் (Appointment) வந்தவர்களுக்கு சிறப்பு வரிசை இருந்தது. பத்து நிமிடத்திலேயே எனது இலக்கத்தை அழைத்தார்கள். அந்த அதிகாரிக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு அமர்கிறேன்.

 

"என்ன விடயத்துக்காக உங்களுக்கு விசா?"

 

"உறவினரைப் பார்க்க.."

 

"எத்தனை மாதங்கள் தேவை? மூன்று மாதங்களுக்கு விண்ணப்பிக்கப் போகிறீர்களா?"

 

"ஆம்.. ஆனால் உண்மையில் ஒரு மூன்று வாரங்கள்தான் தங்குவேன்.."

 

"சரி.. உங்கள் விவரங்கள் எல்லாம் நன்கு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன. $92.00 கட்டிவிடுங்கள். ஏழு வேலை நாட்களில் உங்கள் வீட்டுக்கே உங்கள் கடவுச்சீட்டை அனுப்பி வைத்துவிடுவோம். இணையத்தில் நிலமைகளை நீங்கள் அவதானிக்கும்வண்ணமும் செய்து தரப்பட்டுள்ளது."

 

"நன்றி."

 

வெளியே வருகிறேன். அப்பாடா.. வேறு ஒரு கேள்வியும் கேட்கவில்லை. ஏன் போனமுறை பிரச்சினை செய்தாய் என்கிற கேள்வி வருமோ என்று பயந்ததுபோல் எதுவும் நடக்கவில்லை. இருந்தாலும் அடுத்த ஏழு நாட்களுக்கு அந்தக் கேள்வி எழுப்பப்படலாம். எதுவும் நிச்சயமில்லை. இருந்தாலும் என்ன.. வந்தால் மலை.. போனால் முடி.. என்கிற முடிவுடன் வீட்டை நோக்கி நடையைக் கட்டினேன்.

 

(தொடரும்.) :D

Link to comment
Share on other sites

பாகம் 3:

 

பிரயாணத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யத் தொடங்கினேன். விசா கிடைக்கும் வரையில் விமானச் சீட்டுக்களை வாங்குவதில்லை என்பது முடிவு. போன்முறை முன்னதாக வாங்கிவிட்டு விசா கிடைக்காமல் அவதிப்பட்டது நினைவில் வந்து தொலைத்தது. கடைசி நேரத்தில் காசு கூடவாக இருந்தாலும் பரவாயில்லை. விசா கையில் வந்தபின்னர்தான் பிரயாணச் சீட்டை வாங்குவது என முடிவுசெய்துகொண்டேன்.

 

ஏற்கனவே வேலைக்கு மூன்று வாரங்களுக்கு விடுமுறை எடுத்தாகிவிட்டது. விசா கிடையாவிட்டால் கரீபியன் பக்கம் போய் காலத்தை ஓட்டலாம். இல்லாவிட்டால் மாலைதீவு வரைபோய் முயற்சிக்கலாம் என மனதுக்குள் எண்ணிக்கொண்டேன். :( இந்த மாலைதீவு ஐடியாவை அலுவலகத்தில் வேலைபார்க்கும் ஜேர்மானியனுக்கு சொன்னவுடன் அவன் குதூகலம் ஆகிவிட்டான். நல்ல திட்டம்.. கட்டாயம் செய்யுங்கள் என்று அட்வைஸ் வேறு.

 

--------------------------------------------

 

அடுத்த ஏழு நாட்கள் எப்படிப் போனதென்று நினைவில் இல்லை. அழைப்புமணிச் சத்தம் கேட்டது. வாசலில் கடவுச்சீட்டு. மனம் பக் பக் என்று அடிக்க உடைத்துப் பார்த்தேன்.  :unsure: 

 

நல்லவேளை விசா கொடுக்கப்பட்டிருந்தது. அப்பாடா.. இது ஒரு தொல்லை விட்டது. இனிமேல் பிரயாண ஒழுங்குகளைக் கவனிக்கலாம் என்று எண்ணியவாறு அழைப்புகளை ஏற்படுத்தி பிரயாணச் சீட்டுகளையும் பெற்றுக்கொண்டேன்.

 

வழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் :D இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். :huh: அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.. :lol: 

 

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன். :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

(தொடரும்.)  :(

Link to comment
Share on other sites

சுந்தர் .சி யின் படம் பார்த்த மாதிரி இருக்கு ,

கதாநாயகனுக்கு அங்கு வேலையே இருக்காது . :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாகம் 3:

------

வழக்கமாக லண்டன் வழியாக பிரயாணத்தை மேற்கொள்வதுதான் வழமை. அந்த உக்கல் விமானநிலையத்தைக் கண்டு அலுத்துவிட்ட காரணத்தினால் :D இம்முறை ஜேர்மனி வழியாக பிரயாணத்தை மேற்கொள்ள முடிவு செய்தேன். :huh: அவர்களுக்கு ஆங்கிலம் விளங்காவிட்டால் ஐன்ஸ், ஐன்ஸ்டைன் என்று எதையாவது சொல்லி சமாளிக்கலாம் என்கிற நம்பிக்கை இருந்தது.. :lol: 

-------

 

ஆகா.... சூப்பர்.... இசை.

இதைத்தான்... உங்களிடம் எதிர் பார்த்தோம்.... தொடருங்கள். :)

 

டோய்......... தூங்கிக்கிட்டிருந்த சிங்கம், முழிச்சுட்டுதடா......th_leob.gif

ஓடி, ஒழியுங்கடா.... :D  :lol:

Link to comment
Share on other sites

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன்.  :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

இதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு  ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.  :D  :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

என்னதான் விசா கிடைத்துவிட்டாலும் அங்கு போய் இறங்கியவுடன் திருப்பி அனுப்பப்பட்ட சில அவலக்கதைகளையும் கேள்விப்பட்டிருந்தேன்.  :unsure: அது இப்போது அடி வயிற்றைப் பினைய ஆரம்பித்திருந்தது. திருப்பிவிட்டால் நேரம் விரயம்.. பணமும் விரயம். இருந்தாலும் என்ன செய்வது. எடுத்த முயற்சியை கைவிடக்கூடாது என்கிற முடிவில் விமானம் ஏறும் நாளை எண்ணிக் காத்திருந்தேன்.

 

@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

 

இதுதான் ஏன் என்று புரியவில்லை இசைகலைஞரே. கேபியால் விடுதலைபுலிகளின் புதிய தலைவராக நியமிக்கப்பட்ட ஆனானப்பட்ட சாத்தானின் குழந்தையே எந்தப்பயமும் இல்லாமல் ஸ்டைலாக கூலிங்கிளாசை மாட்டிக்கொண்டு  ஒரு கீரோ ரேஞ்சில சென்னை மும்பாய் என்று சுற்றுலா சென்று எந்த பிரச்சினையும் இல்லாமல் திரும்பும் போது தங்களுக்கு அப்படி என்ன பிரச்சினை என்றுதான் புரியவில்லை.  :D  :D  :D 

 

 

என்னால.... முடியல.... சீமான்.

சிரித்து, வயிறு நோகுது.

காலங்காத்தால... எங்களை நீங்க இப்பிடி வருத்தலாமா.... :D  :lol: smiley_yeah.gif

Link to comment
Share on other sites

வாசித்து கருத்துகளைப் பதிந்த வி. அண்ணா, அ. அண்ணா, த.சிறீ, சீ.மான், க. றுப்பி எல்லோருக்கும் நன்றிகள்..! :D

Link to comment
Share on other sites

இப்பதான் பார்த்தேன் ///சூப்பர் ................. :D  :D

Link to comment
Share on other sites

பாகம் 4:

 

பிரயாண நாளுக்கு முன்தினம். அதிகாலையிலேயே அலைபேசி அழைத்தது.

 

"வணக்கம்.. யார் பேசுகிறீர்கள்?"

 

"நான் பல்விந்தர் சிங். என்னை பில்லி என அழைக்கலாம். கெல்லியிடமிருந்து தகவல்களைப் பெற்றுக்கொண்டோம். உங்களைக் கையாளப் போகும் நபர் நான்."

 

"சரி. என்ன விடயமாக என்னை அழைக்கிறீர்கள்?"

 

"எங்கள்பால் சிலருக்கு சில தேவைகள் இருப்பதாக அறியமுடிகிறது. எங்கள் ஆதரவினை வழங்கவேண்டுமானால் சில விட்டுக்கொடுப்புகளை நீங்கள் மேற்கொள்ளவேண்டி இருக்கும்."

 

"சரி. எத்தகைய விட்டுக்கொடுப்புகள்?"

 

"இது 25 வருடத்தின் சுமை. இதை அகற்ற நீங்கள் உதவும் பட்சத்தில் எங்களிடமிருந்து அனுகூலங்கள் கிடைக்கலாம்."

 

"சுமையை எடுத்துக் கொள்கிறோம். ஏற்கனவே நாங்கள் திட்டமிட்டதுதான்."

 

"நல்லது. இதற்குமேல் பேசுவதற்கு ஒன்றுமில்லை. உங்களுடன் நேரில் பேச முடியாது. நீங்கள் சுற்றுலா விசாவில் வருகிறீர்கள் என்பதை அறிந்துள்ளோம். வேறு சந்தேகங்கள் உள்ளனவா?"

 

"இப்போதைக்கு இல்லை. நன்றி."

 

இணைப்பு துண்டிக்கப்பட்டது. மீண்டும் தூக்கத்துக்குள் செல்கிறேன்.

 

--------------------------------------------

 

பிரயாண நாளும் வந்தது. மாலை 6:30க்கு லுஃப்ரான்சா விமானத்தில் பயணம். மாலை மூன்று மணிக்கு பள்ளிக்கூடத்தில் இருந்து மகளை கூட்டிக்கொண்டு மனைவியுடன் விமான நிலையம் செல்வதுதான் திட்டம். நேரம் கொஞ்சம் இறுக்கமாகத்தான் இருக்கப் போகிறது. பள்ளிக்கூடத்துக்கு விடுமுறை எடுக்கவேண்டாமே என்கிற எண்ணத்தில் இந்த ஏற்பாடு.

 

மாலை மூன்று மணி. அவசர அவசரமாக விமான நிலையம் செல்கிறோம். குறுகிய நேரம் காரை நிறுத்துவதற்கு தனியான கட்டடம் உள்ளது. அதற்குள் காரை செலுத்தி தரிப்பிடங்களைத் தேடுகிறோம். எல்லாமே நிறைந்துள்ளது. இங்குமங்கும் ஓடித் திரிந்ததில் மணி 4:00 ஆகிவிட்டது. பதற்றம் தொற்றிக்கொண்டது. 

 

காரை விட்டு இறங்கி நான் மட்டும் நடந்து செல்வதும் இயலாத காரியம். பயணப் பொதிகளை நான் ஒருவனாக கைகளில் எடுத்துச் செல்ல முடியாது. ஆறாவது மாடியில் தேடிக்கொண்டிருக்கும்போது நல்ல வேளையாக யாரோ ஒரு புண்ணியவான் தள்ளு வண்டிலை (cart) விட்டுவிட்டுப் போயிருந்தான். அப்பாடா என்று அதை எடுத்துக்கொண்டு நான் விமான நிலையத்துக்குள் போய்விட்டேன். நேரம் 4:30.

 

வரிசையில் நிற்கும்போது மனைவியும், பிள்ளையும் வந்துசேர்ந்தார்கள். எங்கேயோ ஒரு மூலையில் தரிப்பிடத்தைக் கண்டுபிடித்திருந்தார்கள்.

 

எல்லா சடங்குகளையும் முடித்துக்கொண்டு மனைவி, குழந்தைக்கு பிரியாவிடை கொடுத்துவிட்டு உள்ளே செல்கிறேன். இனிமேல் 22 மணித்தியாலங்களுக்குப் பயணம் மட்டுமே. :huh:

 

(தொடரும்.) 

Link to comment
Share on other sites

பாகம் 5:

 

விமானத்துக்குள் ஏறி எனது இருக்கையை நோக்கிச் செல்கிறேன். ஜன்னல் ஓரமாக எனது இருக்கை. பக்கத்து இருக்கையில் ஒரு கறுத்த, ஒல்லியான இளைஞர் திருதிரு முழியுடன் உட்கார்ந்திருந்தார். இவரை ஏற்கனவே விமான நிலையத்திற்குள் கண்ட ஞாபகம். அவரிடம் வருத்தம் தெரிவிக்கவும், அவர் எழுந்து இடம் கொடுத்தார். புன்னகையுடன் நன்றி தெரிவித்துவிட்டு எனது இருக்கையில் அமர்ந்துகொண்டேன்.

 

ஒரு ஐந்து நிமிடங்கள் கழிந்திருக்கும். 

 

"ஹலோ.. ஐ ஆம் முருகேசன்.." ஒரு கை மட்டும் நீண்டு வந்தது.. :D

 

சிரிப்புடன் என்னையும் அறிமுகம் செய்து கொண்டேன். ஆங்கிலத்தில் உரையாடல் தொடர்ந்தது.

 

"நீங்கள் எந்த ஊர்?" ஆள் எந்த நாடு என்பதை அறிய கேட்டு வைத்தேன். 

 

"ஐ ஆம் ஃப்றொம் பட்டுக்கோட்டை இன் தமிழ் நாட்."

 

"அப்போ தமிழ்லயே பேசலாமே?" என்றேன்.

 

அவருக்கு ஆச்சரியம். என்னை கொல்ட்டி (தெலுங்கர்) என நினைத்திருந்தாராம். :blink: இருவருக்கும் மகிழ்ச்சி.

 

வேலை நிமிர்த்தமாக வெளிநாடுகளுக்குச் சென்று வருவாராம். நீங்கள் எதிர்பார்ப்பதுபோல தகவல் தொழில்நுட்பத்துறையில் வேலை செய்பவர்தான். :D சென்னையில்தான் அவரது நிறுவனம் உள்ளது என்றார்விமானம் புறப்படவும் உரையாடலும் பல திசைகளில் சென்று வந்தது. இதில் தமிழர், தாயகம் சம்பந்தமான விடயங்களும் இடம்பெறத் தவறவில்லை.

 

தற்காலத்தில் தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு உள்ளதுபோல் உணர்வுகள் அவருக்கும் இருந்தது. ஆனால் ஈழத்தமிழர்கள் தங்கள் பாட்டைப் பார்த்துக்கொண்டு போவதாக குறைபட்டுக்கொண்டார். அந்த மனப்பாங்கு ஏன் ஏற்படுகிறது என்பதை சொல்லி வைத்தேன். சற்றுப் புரிந்துகொண்டார்.

 

திடீரென்று உரையாடலை வள்ளலாரை நோக்கித் திருப்பிவிட்டார். அவரது கையில் வள்ளலார் சம்பந்தமான புத்தகம் ஒன்றும் இருந்தது. திருவருட்பா முதற்கொண்டு, வள்ளலார் அருளிச்சென்று மூலிகை வைத்தியங்கள் வரையில் விளக்கிக்கொண்டு வந்தார். பல தகவல்கள் சிந்தனையைத் தூண்டுவனவாக அமைந்தன. இடையிடையே மெதுவாகப் பேசும்படி கேட்டுக்கொண்டேன். அக்கம்பக்கத்தில் தூக்கம் கெட்டுவிடும் என்கிற காரணத்தினால். சிரிப்புடன் புரிந்துகொண்டார்.

 

கிட்டத்தட்ட ஒரு மூன்று மணிநேரம் அலட்டியபின் தூக்கம் கண்களை தழுவ ஆரம்பித்தது.

 

(தொடரும்.)

 

Link to comment
Share on other sites

எனக்குத் தூக்கம்போச்சு, பாகம் ஆறு, ஆடிவருமா? ஒடிவருமா?

 

இக்கதையை வடிக்கும் நடை ஒரு புது நடை, அழகான கம்பீரமான நடை, தொடருங்கள். வாழ்த்துக்கள்!!

Link to comment
Share on other sites

பாகம் 6:

 

இந்த விமானம் சற்று வித்தியாசமான உள் வடிவமைப்பைக் கொண்டிருந்தது. வழக்கமாக கழிவறைகள் ஆங்காங்கே இரண்டிரண்டாக அமைக்கப்பட்டிருக்கும். இந்த விமானத்தில் கீழே படியில் இறங்கிச் செல்வது போலவும் அமைத்திருந்தார்கள். கீழே போனால் ஒரே இடத்தில் ஆறு கழிவறைகள் இருந்தன. :huh: ஜேர்மன்வாலாக்கள் சத்தம் போடுவார்கள் என்று தாராளமாக கட்டிவிட்டிருந்தார்கள்.. :D

 

தூக்கமும், சாப்பாடும், பழச்சாறுமாக அடுத்த நான்கு மணிநேரங்கள் கழிந்தன. ஒருவழியாக ஒரு ஏழு மணிநேரப் பயணத்தின் முடிவில் ஃபிராங்க்ஃபர்ட் சென்றடைந்தோம். விமானம் தரையிறங்கியதும் ஜேர்மன்காரர் எல்லோரும் கைதட்டி விமானிகளுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்கள்.  :huh: உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு வந்திருப்பார்கள் போல.  :wub:

 

இறங்கிய கையோடு விமான நிலையத்துக்குள்ளே ஓடும் ரயிலைப் பிடித்து அடுத்த விமானம் புறப்படும் இடத்தைச் சென்றடைந்தோம். பட்டுக்கோட்டை வாலிபரும் கூடவே வந்தார். :D இம்முறை எல்லாமே மண் நிற தோல்களாக இருந்தது. நான் பாஸ்டன்லருந்து வரேன்.. நான் நியூயார்க்லருந்து வரேன்.. என்று பேசிக்கொள்வது காதில் விழுந்தது.  :wub:

 

சில மணிநேரங்களின்பின் அடுத்த விமானம் தயார் என அறிவித்தார்கள். இந்த அடுத்தகட்டப் பயணம் கிட்டத்தட்ட 11 மணித்தியாலங்கள். இப்போது பட்டுக்கோட்டையார் விமானத்தில் வேறு இடத்தில் அமர்ந்திருந்தார். எனக்கு அருகில் அமர்ந்திருந்தது யார் என்பது இப்போது ஞாபகத்தில் இல்லை. கண்டிப்பாக அது ஒரு சூப்பர் ஃபிகர் கிடையாது. :lol:

 

விமானம் புறப்பட்டது. ஒரு சிற்றுண்டியின் பின், திரைப்படம் பார்க்க முடிவு செய்தேன். முதலில் 12 years a slave என்கிற படம். நல்ல படம் தான். ஆனால் மன அழுத்தம் வராதது ஒன்றுதான் குறையாக இருந்தது.  :o

 

அது முடிந்த கையோடு அடுத்த படத்தைப் போட்டேன். இம்முறை All is lost என்கிற படத்தை தெரிவு செய்தேன். படத்தில் ஒரே ஒரு நடிகர்தான். அவர் பிரயாணம் செய்த பாய்மரக்கப்பல் நடுக்கடலில் சேதமாகிவிடுகிறது. அவர் தன்னை காத்துக்கொள்ள என்னவெல்லாம் செய்கிறார்; இறுதியில் தப்பிப் பிழைத்தாரா என்பதுதான் கதை. மிக அருமையான படம்.

 

படம் பார்த்து முடித்த கையோடு மறுபடி ஒரு நீண்ட தூக்கம். கண்விழித்துப் பார்த்தபோது விமானம் இந்தியாவை நெருங்கிக் கொண்டிருந்தது. உள்ளே விடுவார்களா என்கிற யோசனை மறுபடியும் எட்டிப் பார்த்தது.  :unsure:

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

பாகம் 7:

 

விமான சிப்பந்திகள் கொடுத்த கோப்பியைக் குடித்து, அவர்கள் தந்த சூடான ஈரத் துவாலையால் முகம், கை, கழுத்து என துடைத்தெடுக்க, அகன்றுபோன உற்சாகம் மீளவும் வந்து பற்றிக்கொண்டது.

 

விமானம் தரையைத் தொட்டதும் கூவம் நாற்றத்தை எதிர்பார்த்தேன். ஏழு வருடங்களுக்கு முன் இந்த அனுபவம் எனக்கு ஏற்பட்டிருந்தது. ஆனாலும் ஆச்சரியம்.! இந்தமுறை அந்த வாடையை உணர முடியவில்லை.

 

எல்லோரும் இறங்கும் வரையில் பொறுத்திருந்தேன். ஏற்கனவே நள்ளிரவு. இதில் அவசரப்படுவதில் அர்த்தம் இல்லை. என்னை வரவேற்பதற்கு யாரும் விமான நிலையத்திற்கு வரவும் இல்லை. சுதந்திரப் பறவைதானே..! :D

 

மெதுவாக இறங்கி சென்னை விமான நிலையத்தினுள் கால் பதித்ததும் ஏதோ எமது ஊரில் கால் வைத்ததுபோல் ஒரு பிரமை. எல்லோரும் குடிவரவுப் பகுதியில் வரிசையில் நின்றுகொண்டிருந்தார்கள். பட்டுக்கோட்டையாரும் முன்னதாகவே சென்று வரிசை ஒன்றில் நின்றுகொண்டிருந்தார். :D இந்தக் கட்டத்தைக் கடந்தால் சென்னை மண்ணில் கால் வைப்பது உறுதி. :huh:

 

வரிசையில் நிற்கும்போது யாரோ சத்தமாகக் கத்தும் ஒலி கேட்டது. திரும்பிப் பார்த்தால் நேர்த்தியாக உடுத்தியிருந்த ஒரு நடுத்தரவயது மொட்டைத்தலை மனிதர் காவல்துறை அதிகாரி, விமான நிலைய ஊழியர்கள் என யாவரையும் பார்த்து கத்திக் கொண்டிருந்தார். அவர்கள் இவருக்கு பவ்யமாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். மற்றவர்களது பேச்சு எதுவுமே காதில் விழவில்லை. வரிசையில் நின்ற அந்த அரைமணி நேரமும் இவரது கத்தல்தான். இறுதியில் ஒரு கதிரையில் உட்கார்ந்து கத்திக் கொண்டிருந்தார். வெளிநாட்டுப் பயணிகள் ஆளை ஆள் பார்த்தபடி மருட்சியுடன் நின்றிருந்தார்கள். காவல்துறை வரவும் இல்லை. ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.  :blink:

 

எனது முறை வந்தது. எனது கடவுச்சீட்டையும், நிரப்பிய குடிவரவுச் சீட்டையும் கொடுத்தேன். பக்கங்களைத் திருப்பிப் பார்த்த அதிகாரி என்னுடைய விசாவை ஸ்கானிங் செய்தார். திரும்பவும் செய்தார். எதுவும் வரவில்லை. அதில் இருந்த விசா நம்பரையும் கணினியில் தட்டிப் பார்த்தார். அதுக்கும் ஒன்றும் வரவில்லை. சரிதான்.. ஆரம்பிச்சிட்டாங்கடா என்று நினைக்க ஆரம்பித்துவிட்டேன்.

 

அந்த அதிகாரி அருகில் இருந்த மற்ற அதிகாரியை அழைத்தார்.

 

"என்ன எதுவுமே வரமாட்டேங்குது?"

 

"அதுவா.. அது வழக்கமா நடக்குறதுதானே.. அப்டேட் ஆகியிருக்காது சார்.."

 

அப்பாடா.. இது ஏதோ உள்ளூர் பிரச்சினை என்று தெம்பு வந்தது.

 

கடகடவென்று கணினியில் எதையோ தட்டினார்.. முத்திரையை குத்தினார்.. போய்ட்டு வாப்பா என்றூ அனுப்பி வைத்தார்.. :D

 

ஆஹா.. தடையைத் தாண்டினேனே.. Happy  இன்றுமுதல் Happy   :D என்று மனதுக்குள் பாடிக்கொண்டே பயணப் பொதிகளை கவர்ந்து கொண்டேன். சுங்கவரித்துறையில் காட்டுவதற்கு எதுவும் இருக்கவில்லை.. வரவேற்பு பகுதிக்கு வந்தபோது மணி நள்ளிரவு 1:30 ஆகி விட்டிருந்தது.

 

நேராக விமான நிலைய வாடகை மகிழுந்து பதியும் இடத்திற்குச் சென்றேன்.

 

"எங்கே சார் போகணும்?"

 

"ரெசிடென்சி டவர்ஸ்."

 

"ரூ.350 ஆகும் சார்.."

 

"சரி.."

 

காசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.  :o  :D

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்க தீர்மானத்தை இந்தியா  கவுட்டாலும்

தீர்மானம் வெற்றி

 

இசையின் தீர்மானம்??? :icon_idea:

Link to comment
Share on other sites

கருத்துக்களைப் பதிந்த த.சூ., பாஞ்சு, வி. அண்ணா எல்லோருக்கும் நன்றிகள்..! :D


அமெரிக்க தீர்மானத்தை இந்தியா  கவுட்டாலும்

தீர்மானம் வெற்றி

 

இசையின் தீர்மானம்??? :icon_idea:

 

கதை முடியும்போது பாருங்கோ.. ஏன் இந்தியா ஒதுங்கிக்கொண்டது என்பது புரியும்.. :lol:

Link to comment
Share on other sites

சென்னை தன் கலைஞர்களின் எண்ணிக்கையை மேலும் ஒன்றினால் இன்று அதிகரித்துக் கொண்டது.

Link to comment
Share on other sites

பாகம் 8:

 

பொதிகள் எல்லாம் வாகனத்துக்குள் ஏற்றப்பட்டுவிட்டன.

 

"சார்.." தலையை சொறிந்தார் பொதிகளைத் தள்ளி வந்தவர். பணப்பையை வெளியே எடுக்கவும் யோசனையாக இருந்தது. வெளிநாட்டுத் தாள்கள் இருப்பதால் பிரச்சினையாகிவிடுமோ என்று தோன்றியது. இருந்தாலும், வெளியே எடுத்து ஒரு இருபது ரூபாயை நீட்டினேன். :lol: வாங்கிக்கொண்டு தொடர்ந்தார்.

 

"சார்.. பெரிய நோட்டா குடுங்க சார்.." சிரித்தபடியே கேட்டார். :wub: ஒரு நூறு ரூபாயை கொடுத்துவிட்டு காரில் கிளம்பினேன்.

 

ஒரு இருபது நிமிடத்திற்கு அசகாய ஓட்டம். சென்னை ரொம்பவே மாறிவிட்டிருந்தது. மேம்பாலங்கள், நிலக்கீழ் தொடரூந்துக்கான வேலைகள் என ஒரே கட்டுமானப் பணிகளாக இருந்தது. பார்ப்பதற்கு மிகவும் மகிழ்வாக இருந்தது.

 

2011060863850301.jpg

 

ஓட்ட முடிவில் தங்கும் விடுதியை சென்றடைந்தேன். ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன். Trip Advisor இணையத்தளத்திலும் நன்றாக எழுதியிருந்தார்கள். அதனால் முன்பதிவு செய்து வைத்திருந்தேன். வாசலில் கார்களை நிறுத்தி குண்டுகள் உள்ளனவா என்று பரிசோதிக்கிறார்கள். எமது பயணப் பொதிகளும் விமான நிலையங்களில் உள்ளதுபோல ஸ்கானிங் செய்து பரிசோதிக்கப் படுகின்றன. நாங்களும் தானியங்கி பரிசோதனை முறைமைக்குள்ளால்தான் சென்று வரவேண்டும்.

 

ஆனாலும், விருந்தினர்களுக்கு வரவேற்பு படு ஜோர். :D ஒரே உபசரிப்புதான். மேலை நாடுகளில் காணக்கிடைக்காத ஒன்று. பரிசோதனைகளை முடித்துக்கொண்டு உள்ளே சென்றேன். அடேயப்பா..!! :wub:

 

3117_457_0.jpg

 

மேலை நாடுகளில் நடுத்தர விடுதிகளுக்கு ஆகும் அதே செலவில் அட்டகாசமான தங்குமிடம் இது. ஆகா.. இதுவல்லவோ சொர்க்கம் என்பது போலிருந்தது.. :D

 

சம்பிரதாயங்களை முடித்துக்கொண்டு 18 ஆவது மாடியில் எனது அறைக்குச் செல்கிறேன். பயணப்பொதிகளை மேலே கொண்டுவந்து தருகிறார்கள். அறையின் அமைப்பை விளக்கிவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். யாரும் டிப்ஸ் எதிர்பார்க்கவில்லை.

 

அறை சுத்தம் என்றால் அந்த மாதிரி ஒரு சுத்தம். எல்லா வகையான வசதிகளும் செய்து தரப்படுகின்றன. மினி பார் கூட உள்ளே வைத்துள்ளார்கள். :wub:

 

110099_14021416280018346106_STD.jpg

 

பரவாயில்லை.. வந்ததுக்கு இது ஒரு நல்ல விடயம் என்று எண்ணிக்கொண்டு ஒரு குளியல் போட்டுவிட்டு போர்வைக்குள் நுழைந்துகொண்டேன்.

 

(தொடரும்.)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இப்பிடி எழுதி இந்தியா போகும் எண்ணத்தைப்பின்தள்ளி முடியாமல் முன்னோக்க வைக்கிறீங்களே நியாயமா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை ஒரு தனிமையாய் போகுது....கிளுகிளுப்புகளையும் காணேல்லை....போட்ட படத்திலையும் பாலம் குறையிலை நிக்கிது...திரிசா வேறை வீட்டிலை தங்குது????lol2.gif

 

தொடருங்கள்...... :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமேரிக்கா தீர்மானம் நிறைவேற்றுமா இல்லையா?...இசை தீர்மானம் நிறைவேற்றுவரா இல்லையா?:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காசைக் கட்டியவுடன் ஒரு வாகன ஓட்டுநர் வந்து அழைத்துச் சென்றார். நான் கேட்காமலேபயணப் பொதிகளை இன்னொருவர் தள்ளி வந்தார், .. லண்டன் தொழிலதிபரை கடத்தியது ஞாபகத்தில் வந்து தொலைத்தது.  :o  :D

 

சென்னை விமான நிலையத்தில் நமது பொதிகளை 'கன்வேயர் பெல்டி'லிருந்து சேகரிப்பது முதல் வெளியே வந்து வாகனத்தில் ஏறும் வரை இந்த இடைத் தரகர்களின் தலை சொறிந்து நிற்கும் தொல்லை அதிகம். கொஞ்சம் ஏமாந்தால் உங்களின் சிறு பொதிகளும் நுணுக்கமாக கடத்தப்பட்டுவிடும். மிகவும் சிநேகமாக நடந்து உதவி செய்வார்கள், முடிவில் டிப்ஸ் (அதுவும் வெளிநாட்டு கரன்ஸியில்) வலுக்கட்டாயமாக கொடுக்கவேண்டிய நிலைக்கு ஆளாக நேரிடும். வெளிவாசல் அருகே இருக்கும் ஏர்போட் டாக்ஸி கவுண்டரிலிருந்தே இந்த தொல்லைகள் அதிகமாக இருக்கும்.

 

வெளி வரும்போது தைரியமாக நம் பொதிகளை நாமே டிராலியில் தள்ளிக்கொண்டு வரவேண்டும். ஜெலினியா, திரிசாவே உங்களை அப்பொழுது கடந்தாலும் ஜொள்ளு விடாமல், எந்த பராக்கு பார்க்கும் வேலைகளை செய்யாமல் விழிப்புடன் இருக்கவேண்டும். தவறினால் உடமைகளை இழக்க நேரிடும். :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...ரெசிடென்சி டவர்ஸ் விடுதியைப் பற்றி ஏற்கனவே அங்கு ஒருமுறை தங்கிய உறவினர் வாயிலாக ஏற்கனவே அறிந்து கொண்டிருந்தேன்.

 

இந்த ஓட்டலை தி.நகர் வடக்கு போக் சாலையும் தியாகராய சாலையும் சந்திக்கும் முனையில் பார்த்த ஞாபகம். இதன் அருகே 'ஜி.ஆர்.டி கிராண்ட்' என்ற ஓட்டலும் உள்ளது எதிர்த்த சாலையான சவுத் போக் சாலையினுள்ளே சிவாஜி கணேசன் வீடும் , எம்.ஜி.ஆர் நினைவு இல்லமும் பார்த்துள்ளேன்.

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எலும்பு வலு இழப்பது ஏன்? கு.கணேசன் ஐம்பது வயதைக் கடந்துவிட்டால் போதும் உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு, கண் புரை, காது கேளாமை, நடையில் தள்ளாட்டம், மாரடைப்பு, மூட்டுவலி எனப் பல நோய்கள் வரிசைகட்டி வந்து நிற்கும். இப்போது புதிதாக ‘ஆஸ்டியோபோரோசிஸ்’ (Osteoporosis) என்று நவீன மருத்துவர்களால் அழைக்கப்படுகிற ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ இந்த வரிசையில் சேர்ந்துள்ளது. அதிலும் குறிப்பாக, மாதவிலக்கு நின்ற பெண்களுக்கு இந்த நோய் அதிக பாதிப்பைத் தருகிறது. உடலுழைப்பு குறைந்துபோனது, உடற்பயிற்சி இல்லாதது, மேற்கத்திய உணவுமுறைகளைப் பின்பற்றுவது போன்ற பல காரணங்களால் இந்த நோய் ஏற்படுவது இப்போது அதிகரித்துவருகிறது. ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்றால் என்ன? நம் உடலுக்கு வடிவம் தருகிற எலும்புகள்தான் உடல் உறுப்புகளையும் தாங்கிப் பிடிக்கின்றன; நடப்பது, நிற்பது, குனிவது போன்ற உடல் இயக்கங்களுக்குத் தசைகளுடன் இணைந்து ஒத்துழைக்கின்றன. இதற்காக ஒவ்வொரு எலும்பும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறது. எலும்பில் உள்ள பழைய செல்கள் அழிக்கப்பட்டு, புதிய செல்கள் உற்பத்தியாகின்றன. இளமையில் இந்தச் செயல்பாடு மிக வேகமாக நிகழும். வயதாக ஆக இது மெதுவாக நிகழும். பொதுவாக 35 வயதுக்குப் பிறகே புதிய செல்கள் உருவாவது தாமதமாகும். பழைய செல்கள் அழிந்த இடங்களில் புதிய செல்கள் உருவாகாமலும் போகும். அப்போது எலும்பின் இயல்பான அடர்த்தி (Bone mass) குறையும். இதற்கு ‘ஆஸ்டியோபீனியா’ (Osteopenia) என்பது ஆங்கிலப் பெயர். தமிழில், ‘எலும்புத் திண்மக் குறைவு நோய்’. ஐம்பது வயதுக்கு மேல் எலும்பின் அடர்த்தி இன்னும் குறையும்போது அதில் சிறுசிறு துவாரங்கள் விழுந்து தன் வலிமையை இழக்கும். இதன் விளைவாக எளிதில் நிற்க முடியாமல், அதிக தூரம் நடக்க முடியாமல் போகும். நாளடைவில் அந்த எலும்பு முறிவு ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகிறது. இதைத்தான் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ என்கிறோம். இதற்கு ‘எலும்பு நலிவு நோய்’ என்றொரு பெயரும் உண்டு.       காரணங்கள் என்னென்ன? எலும்பு வலிமையை இழப்பதற்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றுள் முதுமை ஒரு முக்கியக் காரணம். முதுமையில் ஆண், பெண் இருபாலருக்கும் இது வருகிறது. ஆண்களுக்கு டெஸ்டோஸ்டீரான் ஹார்மோன் குறைவதால் இது ஏற்படுகிறது. பெண்களுக்கு மாதவிலக்கு நின்றதும் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பது குறைந்துவிடுவதால் இவர்களுக்கு எலும்பு வலுவிழந்து ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வந்துவிடுகிறது. அடுத்து, புகைபிடித்தல், மது அருந்துதல், போதைப்பழக்கம், உடல் பருமன், தைராய்டு பிரச்சினை போன்ற பலதரப்பட்ட காரணிகளால் இந்த நோய் ஏற்படுகிறது.  குடும்பத்தில் யாருக்காவது இந்த நோய் இருந்தால், வம்சாவளியாகவும் அக்குடும்பத்தில் பிறந்தவர்களுக்கு இது வரலாம். வறுமை, பசியின்மை, வயிற்றில் அறுவைச் சிகிச்சை போன்றவற்றின் காரணமாக தேவையான ஊட்டச் சத்துள்ள உணவுகளை நெடுங்காலம் சாப்பிடாதவர்களுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின்-டி குறைபாடு ஏற்படும். இந்த இரண்டு ஊட்டச்சத்துகளும் எலும்பின் வலிமைக்கும் திண்மைக்கும் அடிப்படையானவை. எனவே, இந்தச் சத்துகள் குறையும்போது இவர்களுக்குக் காலப்போக்கில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வருவதுண்டு.  இதுபோல், உடற்பயிற்சி இல்லாதவர்களுக்கும், உடலுழைப்பு குறைந்தவர்களுக்கும் வலிப்பு நோய்க்கான மாத்திரைகள் மற்றும் ஸ்டீராய்டு மருந்துகளைத் தொடர்ந்து பல வருடங்களுக்கு எடுத்துக்கொள்பவர்களுக்கும் இந்த நோய் வருவதுண்டு. ஒல்லியாக உள்ளவர்களுக்கு ஏற்கெனவே எலும்புகள் வலுவிழந்து இருக்கும் என்பதால், முதுமையில் இவர்களுக்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ விரைவில் வந்துவிடும். அட்ரீனல் ஹார்மோன் மற்றும் பாராதைராய்டு ஹார்மோன்களின் அதீத செயல்பாடு காரணமாகவும் சிலருக்கு இந்த நோய் ஏற்படுவதுண்டு.   என்னென்ன தொல்லைகள்? பெரும்பாலும் இந்த நோய் இருப்பது நோயாளிக்கே தெரியாது. இந்த நோய் பல ஆண்டுகளாக உடலுக்குள்ளேயே மறைந்திருந்து, இறுதியில் எலும்பு முறிவு ஏற்படும்போதுதான் இந்த நோயின் விளைவாகவே எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்று தெரியவரும். கீழே விழாமல், உடலில் எவ்வித அடியும் படாமல் எலும்பு முறிவு ஏற்படுவதுதான் இந்த நோயின் தனிச் சிறப்பு. இடுப்பெலும்பு, முதுகெலும்பு, மணிக்கட்டு ஆகியவற்றில்தான் எலும்பு முறிவு அதிகமாக ஏற்படும். நோயைக் கண்டறிவது எப்படி?       முன்பெல்லாம் எலும்புகளை எக்ஸ்-ரே படமெடுத்துப் பார்த்து இந்த நோய் இருப்பதைக் கணிப்பதுதான் வழக்கத்தில் இருந்தது. பொதுவாக 50 சதவீதம் எலும்பு வலுவிழந்தால்தான் எக்ஸ்-ரேக்களில் இந்த நோய் தெரியும். ஆனால், அதற்குள் பலருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்டுவிடும் என்பதால் இந்தப் பரிசோதனையைக் கொண்டு நோயை ஆரம்பநிலையில் கண்டுபிடிக்க முடியாத நிலைமை நீடித்தது. இப்போது ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan) எனும் பரிசோதனை வந்துள்ளது. இதுதான் எக்ஸ்-ரே பரிசோதனையைவிடச் சிறந்தது. நாற்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் குறிப்பிட்ட கால இடைவெளியில் மருத்துவரைச் சந்தித்து இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள வேண்டும். இது எலும்பின் அடர்த்தியை – அதாவது திண்ம அளவை - (Bone Mineral Density – BMD) அளக்கும் பரிசோதனை. எலும்பு முறிவு ஏற்படுவதற்கு முன்பாகவே எலும்பின் திண்ம அளவைச் சொல்லிவிடும். அதை ‘டி ஸ்கோர்’ (T Score) என்று சொல்கிறார்கள். இந்த அளவு பிளஸ் 1 எஸ்டிக்கும், மைனஸ் 1 எஸ்டிக்கும் இடையில் இருந்தால் அது இயல்பு அளவு. பிளஸ் 1 எஸ்டிக்கு மேல் இருந்தால் மிக நல்லது. இந்த அளவு மைனஸ் 1 முதல் மைனஸ் 2.5 எஸ்டிக்கும் இடைப்பட்டதாக இருந்தால் அது எலும்புத் திண்மக் குறைவு நோயைக் குறிக்கும். மைனஸ் 2.5 எஸ்டிக்கும் கீழ் இருந்தால் அது எலும்பு வலுவிழப்பு நோயைக் குறிக்கும். இந்த அளவுகளை வைத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் எலும்பு முறிவு ஏற்பட வாய்ப்புள்ளதா என்பதையும் அனுமானித்துவிடலாம். எலும்பின் திண்ம அளவைத் தெரிந்துகொண்டு சிகிச்சையை மேற்கொள்கிறவர்களுக்கு அது பலன் தருகிறதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம். ஆனால், இதற்கு ஆகும் செலவு சிறிது அதிகம் என்பதால் அனைவராலும் இந்தப் பரிசோதனையைச் செய்துகொள்ள முடியாது. ரத்தத்தில் கால்சியம் மற்றும் வைட்டமின்-டி அளவுகளைத் தெரிந்துகொண்டும் இந்த நோயை ஓரளவுக்கு அனுமானிக்கலாம். யாருக்கு வாய்ப்பு அதிகம்? உலக அளவில் 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களில் மூன்றில் ஒருவர் என்ற அளவிலும் ஆண்களில் எட்டில் ஒருவர் என்ற அளவிலும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு புள்ளிவிவரம் சொல்கிறது. எனவே, இந்த நோயை ஆரம்பத்திலேயே கண்டறிவதற்காக சர்வதேச ஆஸ்டியோபோரோசிஸ் நிறுவனம் ஒரு குறிப்பைத் தந்துள்ளது. அதற்கு ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வரும் வாய்ப்புள்ளவர்களைக் கண்டறியும் ஒரு நிமிடச் சோதனை? (One minute osteoporosis risk test) என்று பெயர். கீழே தரப்பட்டுள்ள கேள்விகளைப் படியுங்கள். இவற்றில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கேள்விகளுக்கு ‘ஆம்’ என்று பதில் கூறினால் உங்களுக்கு எலும்பு வலிமை இழக்க வாய்ப்புகள் அதிகம் என்று பொருள். அப்படியானால் உடனே மருத்துவரைச் சந்தித்து ஆலோசனை பெறுங்கள். உங்களின் பெற்றோரில் அல்லது குடும்பத்தில் யாருக்காவது லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? லேசாக தடுக்கி விழுந்து அல்லது லேசாக அடிபட்டதும் உங்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டிருக்கிறதா? உங்களுக்கு 45 வயதுக்கு முன்னரே மாதவிலக்கு நின்றுவிட்டதா? உங்களுக்கு மூன்று செ.மீ.க்கு மேல் உயரம் குறைந்துவிட்டதா? அதிகமாக மது அருந்தும் பழக்கம் உள்ளதா? அதிகமாக புகைபிடிக்கும் பழக்கம் உள்ளதா? சிகிச்சை என்ன? இந்த நோய் ஏற்பட்ட பின்பு இதை முழுமையாகக் குணப்படுத்த முடியாது. அதாவது, வலிமை இழந்த எலும்பை மீண்டும் வலிமை பெறச் செய்ய முடியாது. சிகிச்சையின் மூலம் மற்ற எலும்புகளை வலிமை பெறச் செய்யலாம். அவ்வளவே. இதைத் தடுப்பதற்குத்தான் வழி இருக்கிறது. முதுமையில் கால்சியம் மற்றும் வைட்டமின்–டி சத்துகள் குறைவதால், அவற்றுக்கு சிகிச்சை தரப்படும். தினமும் ஒருவருக்கு 500 - 1000 மில்லி கிராம் கால்சியம் தேவை. ஆண்களோடு ஒப்பிடும்போது பெண்களுக்குக் கால்சியம் தாது மிகமிக அவசியமான ஒரு சத்துப்பொருள். பெண்கள் மாதவிலக்கு ஆகும்போது, கர்ப்பம் அடையும்போது, பிரசவம் ஆகும்போது, தாய்ப்பால் தரும்போது என்று பல காலகட்டங்களில் கால்சியம் அவர்களுக்கு அதிகப்படியாகத் தேவைப்படுகிறது. இதை உணவிலிருந்து பெறுவது மிக நல்லது. கால்சியம் மிகுந்துள்ள திரவ உணவுகளில் முதலிடம் பிடிப்பது, பால். 100 மி.லி. எருமைப்பாலில் 200 மி.கிராம்; 100 மி.லி. பசும்பாலில் 100 - 150 மி.கிராம் கால்சியம் உள்ளது; திட உணவுகளில் கேழ்வரகு, கொள்ளு, சோயாபீன்ஸ், உளுந்து, மீன், இறால், நண்டு, முட்டை, ஆட்டிறைச்சி, பீட்ரூட், அவரை, துவரை, கீரைகள், பட்டாணி, காலிஃபிளவர், வெங்காயம், வெண்டைக்காய், வெந்தயம், உருளைக்கிழங்கு, கருணைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, தண்டுக்கீரை, வெள்ளைப்பூண்டு, முள்ளங்கி, எலுமிச்சை, திராட்சை, கொய்யாப்பழம் போன்றவற்றிலும் கால்சியம் உள்ளது. இந்த உணவுகளை அதிகப்படுத்திக்கொண்டால் நமக்குத் தேவையான கால்சியம் கிடைத்துவிடும். அல்லது தினமும் 500 – 1000 மில்லி கிராம் கால்சியம் மாத்திரை ஒன்றைச் சாப்பிடலாம்.  என்னதான் நீங்கள் கால்சியம் மிகுந்துள்ள உணவுகளைத் தேடிப்பிடித்துச் சாப்பிட்டாலும், அந்த கால்சியம் உடலுக்குள் உள்ள எலும்புக்குள் செல்ல வேண்டுமானால், வைட்டமின்–டி அவசியம். தினமும் சூரிய ஒளியில் அரை மணி நேரம் இருப்பதன் மூலம் வைட்டமின்–டி இயற்கையாகவே கிடைப்பதற்கு வழிசெய்யலாம். அல்லது பால், முட்டை, மீன், ஈரல் போன்ற உணவுகளில் இதைப் பெறலாம். இப்போது வைட்டமின்-டி மாத்திரைகளும் கிடைக்கின்றன. மருத்துவரின் ஆலோசனைப்படி தினமும் 2000 யூனிட்டுகள் என்ற அளவில் ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். அல்லது 60,000 யூனிட்டுகள் என்ற அளவில் வாரத்துக்கு ஒரு மாத்திரையைச் சாப்பிடலாம். சமீபத்தில் இந்த நோய்க்கு ஊசி மருந்துகளும் வந்துள்ளன. மருத்துவரின் ஆலோசனையில் இவற்றையும் பயன்படுத்திப் பலன் அடையலாம். சில பெண்களுக்கு ‘ஹார்மோன் மாற்றுச் சிகிச்சை’ (Hormone Replacement Therapy) தரப்படுவதும் உண்டு. என்றாலும் இதன் பக்க விளைவாகக் கருப்பை வாய்ப் புற்றுநோய் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளதாக ஓர் எச்சரிக்கைத் தகவலும் வந்துள்ளது. எனவே, இவர்கள் வருடத்துக்கு ஒரு முறை ‘பாப் ஸ்மியர்’ என்ற பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும்.  தடுப்பது எப்படி? இளம் வயதிலிருந்தே தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். வேகமாக நடப்பது, ஓடுவது, சைக்கிள் ஓட்டுவது, நீச்சல், கூடைப்பந்து விளையாட்டு, ஸ்கிப்பிங் போன்றவை மிகச் சிறந்த உடற்பயிற்சிகள். யோகாசனங்களைச் செய்வதும் நல்லது. புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. காபி, தேநீர் அருந்துவதை அளவாக வைத்துக்கொள்ள வேண்டும். ஒரு நாளில் 3 கப்புகளுக்கு மேல் இவற்றை அருந்தக் கூடாது. எல்லாச் சத்துகளும் கலந்த - ஊட்டச்சத்துள்ள - உணவுகளை சிறு வயதிலிருந்தே உட்கொள்ள வேண்டும். 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் உடலுக்குப் போதுமான அளவு கால்சியம் கிடைக்கவில்லை என்றால், மருத்துவரின் யோசனைப்படி கால்சியம் மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம். ஸ்டீராய்டு மாத்திரைகளைத் தேவையின்றி சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். நடக்கும்போது, குளிக்கும்போது, பேருந்தில் ஏறும்போது என இயல்பாக இயங்கும்போது தரையில் வழுக்கி விழாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.  இம்மாதிரியான தடுப்புமுறைகளைக் கையாண்டு ஒவ்வொருவரும் தங்கள் எலும்புகளை வலுவாக வைத்துக்கொள்வதில் அக்கறை செலுத்தினால்தான் முதுமையில் ‘எலும்பு வலுவிழப்பு நோய்’ வராமல் தடுத்துக்கொள்ள முடியும். https://www.arunchol.com/dr-g-ganesan-article-on-osteoporosis
    • கல்லறையில் உடல்கள் தோண்டியெடுப்பு.. மனித எலும்பில் உருவாகும் போதைப் பொருள்.. அடிமையாகும் இளைஞர்கள்! ’போதைப் பொருட்கள் உயிருக்குக் கேடு விளைவிக்கும்’ என விளம்பரப்படுத்தப்பட்டாலும், அதன் விற்பனையும் அதற்கு அடிமையாகும் நபர்களின் எண்ணிக்கையும் நாளுக்குநாள் அதிகரித்தே வருகிறது. உலகளவில் பலர் இந்தப் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். அந்த வகையில் மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் இதற்கு பலர் இளைஞர்கள் அடிமையாகி உள்ளனர். அதிலும், மனித உடல் எலும்புடன் தயாரிக்கப்படும் ஒருவித போதைப் பொருளுக்குத்தான் அவர்கள் அதிகமாக அடிமையாகி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேற்கு ஆப்பிரிக்க நாடான சியரா லியோனில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்பு போதைப் பொருளுக்கு அடிமையான இந்நாட்டு மக்களின் எண்ணிக்கை தற்போது அதிகரித்துள்ளது. அதிலும், இந்நாட்டிலுள்ள பெரும்பாலான மக்கள் ’குஷ்’ என்ற ரக போதைப்பொருளுக்கு அடிமையாகியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த ’குஷ்’ போதைப்பொருள் மனித எலும்புகளிலிருந்து உருவாக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது. கடந்த ஆறு ஆண்டுகளாக இந்த ’குஷ்’ ரக போதைப்பொருள் சியரா லியோன் பகுதியில் பழக்கத்திலிருந்து வருகிறது. இதன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை தயாரிப்பவர்கள் கல்லறையில் இருக்கும் புதைகுழிகளைத் தோண்டி பிணங்களை சேகரித்து அதன் எலும்புகளிலிருந்து ’குஷ்’ போதைப்பொருளைத் தயார் செய்வதகாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த எலும்புகளுடன் , கஞ்சா மற்றும் சில இரசாயனங்கள் கலந்து இந்தப் போதைப் பொருள் தயாரிக்கப்படுகிறது. இதற்காக, சியரா லியோனில் இதுவரை நூற்றுக்கணக்கான புதைகுழிகள் தோண்டப்பட்டுள்ளன. இந்த போதை மருந்து கிட்டத்தட்ட பல மணி நேரம் போதை தருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும் இந்தப் போதைக்கு அடிமையான இளைஞர்கள் தங்களிடம் இருக்கும் பொருட்களை (புத்தகங்கள், ஆடைகள்) விற்று அந்த போதை மருந்தை வாங்குவதாகவும், அதற்குப் பிறகு வீட்டில் உள்ள பொருட்களைத் திருடிச் சென்று கொடுத்து வாங்குவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. போதைப்பொருள் மூலம் நாட்டில் குடியிருப்பதற்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் ஜனாதிபதி கவலை தெரிவித்துள்ளார். இதன் பிடியிலிருந்து மக்களை மீட்க போதைப்பொருள் ஒழிப்பு மையங்கள் அமைக்கப்படும் எனவும் போதைப்பொருள் விற்பனையாளர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அந்த நாட்டு ஜனாதிபதி எச்சரித்துள்ளார்.   https://thinakkural.lk/article/299459
    • வடக்கு மீனவர்களின் ஓயாத போராட்டம் ஜே.ஏ.ஜோர்ஜ் “அது ஒரு சனிக்கிழமை, நான் எனது வலைகளை எடுப்பதற்காக கடலுக்கு சென்றேன். வலை நிறைய மீன்களை எதிர்பார்த்து சென்ற எனக்கு அங்கு அதிர்ச்சியே மிஞ்சியது. ஏனென்றால் நான் விரித்து வைத்திருந்த வலைகள் அங்கு இல்லை.  எனது வலைகளை இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை சேதப்படுத்தி விட்டனர். ஆனால் இது முதல் முறையாக நடக்கும் சம்பவம் இல்லை” -  இவ்வாறு தனது கதையை கூறும் மீனவரான ரெஜினோல்ட் தனது கடந்த கால அனுபவங்களுடன் ஒப்பிடுகையில் தற்போதைய தனது போராட்டம் தீவிரமடைந்திருப்பதாக கூறுகின்றார். 20 ஆண்டுகளாக தனது வாழ்க்கைக்காக கடல் அலைகளுடன் போராடி வரும் ரெஜினோல்ட் மட்டுமன்றி வடமாகாண மீனவர்களில் அதிகளவானவர்கள் தற்போது இவ்வாறு கடும் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளனர். இலங்கை கடற்பரப்பிற்குள் இழுவை படகுகளை பயன்படுத்தி இந்திய மீனவர்கள் முன்னெடுக்கும் மீன்பிடி நடவடிக்கைகளே இந்த நெருக்கடிக்கு காரணமாக உள்ளது. நெடுந்தீவைச் சேர்ந்த ரெஜினோல்ட் தனது தந்தையுடன் இணைந்து நீண்டகாலம் மீன்பிடியில் ஈடுபட்ட நிலையில், திருமணத்துக்கு பின்னர் தற்போது தனியாக தொழில் செய்கின்றார். “நான் என் படகை மோட்டார் இல்லாமல் பயன்படுத்துகிறேன். மோட்டார் ஒன்றை வாங்க என்னிடம் போதுமான பணம் இல்லை. அதனால் என்னால் அதிக தூரம் செல்ல முடியாது. கடந்த காலங்களில் மீன்பிடிக்க பாரம்பரிய வலைகளைப் பயன்படுத்தினேன். இழுவை படகுகளில் வந்த இந்திய மீனவர்களை எனது வலைகளை சேதப்படுத்தி விட்டனர். எனவே, இப்போது மீன்பிடிக்க சிறிய வலையைப் பயன்படுத்துகிறேன். இதனால், முன்பு போல் மீன் பிடிக்க முடியவில்லை. கடலில் இரண்டு மூன்று மணி நேரம் மாத்திரமே செலவிட முடிகின்றது. எனக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.  எனது மூத்த மகன் ஐந்தாம் வகுப்பு படிக்கிறான். அவர்களுக்காக நான் பல செலவுகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. பொருட்களின் விலை முன்பை விட அதிகமாக உள்ளது. குடும்பத்தினரின் தேவைகளை நிறைவேற்றுவது இப்போது மிகவும் கடினமாக உள்ளது” என்கிறார் ரெஜினோல்ட். அமெரிக்க பாதுகாப்பு பல்கலைக்கழகம் 2008ஆம் ஆண்டு துருக்கியின் இஸ்தான்புல் நகரில் ஏற்பாடு செய்திருந்த செயற்குழு கூட்டத்தில் கலாநிதி சனத் டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட அறிக்கையின்படி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான கடல் எல்லை மூன்று கடல் பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. வடக்கில் வங்காள விரிகுடா, நடுவில் பாக்கு நீரிணை, தெற்கில் மன்னார் விரிகுடா என இந்த கடல் எல்லைகள் உள்ள நிலையில், பாக்கு நீரிணை ஊடாக இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான சராசரி தூரம் சுமார் 32 கிலோமீற்றர்கள் என அறிக்கை கூறுகிறது. கச்சதீவில் இருந்து இந்தியாவின் ராமேஸ்வரம் வரையிலான தூரம் சுமார் 14 கடல் மைல்கள், அதாவது சுமார் 26 கிலோமீட்டர்கள். யாழ்ப்பாணத்தில் இருந்து கச்சத்தீவு வரை சுமார் 60 கிலோமீட்டர் தொலைவான கடற்பரப்பில் தனது அதிகாரத்தை கொண்டுள்ள இலங்கை கடற்படை, சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடலுக்குள் நுழையும்  இந்திய இழுவை படகுகள் குறித்து அவ்வப்போது  நடவடிக்கை எடுத்து வருகிறது. எவ்வாறாயினும், இலங்கை  கடற்பரப்புக்குள் இந்திய இழுவை படகுகள் பிரவேசிப்பது  நாளாந்தம் இடம்பெறுவதாக வடபகுதி மீனவ சங்க தலைவர்கள் கூறுகின்றனர். “இது ஒரு தீவிரமான பிரச்சினை. இந்திய மீனவர்கள் மீது இலங்கை கடற்படை உள்ளிட்டவர்கள் தேவையான நடவடிக்கை எடுக்காதமையே இந்த பிரச்சினை தொடர்வதற்கு முக்கிய காரணமாக உள்ளது.  ஏராளமான இந்திய இழுவை படகுகள் இலங்கை கடல் பகுதிக்குள் நுழையும் நிலையில், கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மற்றும் கைப்பற்றப்படும் இந்திய இலுவை படகுகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி தேவையான நடவடிக்கை எடுத்து இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண மீன்பிடி அமைச்சு நடவடிக்கை எடுப்பதாகத் தெரியவில்லை. இந்திய மீனவர்கள் பயன்படுத்தும் இழுவை படகுகள் வடபகுதி மீனவர்களுக்கு சொந்தமானதை படகுகளை விட பெரியவை. அவை தினமும் வடக்கு கடல் பகுதிக்குள் நுழைவதால், ஏராளமான பிரச்னைகள் ஏற்படுகின்றன. இதனால் வடபகுதி மீனவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதுடன், இந்திய இழுவை படகுகளால் இலங்கை மீனவர்களின் வலைகளுக்கு சேதம் ஏற்படுகின்றது. அத்துடன், எமது மீன்பிடி வளம் பறிபோகிறது. எமது மீனவர்களுக்குச் சொந்தமான படகுகளை சேதப்படுத்திய சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன”- என யாழ்ப்பாண மாவட்ட கடற்றொழிலாளர் சமாசங்களின் சம்மேளன தலைவர் அன்னலிங்கம் அன்னராசா தெரிவித்தார். அத்துடன், இந்தியாவில் இருந்து இழுவை படகுகள் வருவதை தடுக்கும் வகையில் இலங்கையில் சட்ட அமைப்பு இருப்பதாகவும் எனினும், அவற்றால் நடைமுறையில் இலங்கை மீனவர்களால் எந்தவித பயனையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை என, அன்னராசா சுட்டிக்காட்டினார். 1979 ஆம் ஆண்டின் 59 ஆம் இலக்க கடற்றொழில் (வெளிநாட்டு மீன்பிடி படகுகளை ஒழுங்குபடுத்துதல்) சட்டத்தின் 04ஆவது பிரிவின்படி, அனுமதியின்றி மீன்பிடி தொடர்பான நடவடிக்கைகளுக்காக வெளிநாட்டு மீன்பிடி படகுகளை இலங்கை கடற்பரப்பில் மீன்பிடிக்க பயன்படுத்தக்கூடாது என்று கூறுகிறது. அத்துடன், இலங்கை கடற்பரப்பிற்குள் வெளிநாட்டுப் படகுகள் பிரவேசித்தால், மீன்பிடிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், அந்தப் படகில் உள்ள மீன்பிடி சாதனங்களை முறையான முறையில் தடுத்து வைக்க வேண்டும் என்று சட்டத்தின் 05வது பிரிவு கூறுகிறது. வெளிநாட்டுப் படகுகளை நிறுத்தவும், சோதனைகளை நடத்தவும், பிடியாணையுடன் அல்லது இல்லாமலும் படகுகளைக் கைப்பற்றவும், தனிநபர்களைக் கைது செய்யவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.  2018 ஆம் ஆண்டில், இந்த சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டதுடன், இலங்கையில் உள்ள ஆயுதப்படைகளின் தளபதிகள் மற்றும் அதன் அமுலாக்கத்துக்காக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களத்தின் தலைவர் ஆகியோருக்கு பொறுப்பை வழங்கும் கூடுதல் சரத்துகள் அறிமுகப்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படகுகள் மூலம் இலங்கைக் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்தால் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். இந்த குற்றம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகள் ஒரு மாதத்துக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று சட்டம் கூறுகிறது. இந்த சட்டத்தை நிறைவேற்றுவதற்கு பொறுப்பான அமைச்சருக்கு விதிமுறைகளை உருவாக்கும் திறன் உட்பட விரிவான அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1981 ஆம் ஆண்டு இந்தச் சட்டத்தின் கீழ் இலங்கைக் கடற்பரப்பில் நுழைவதற்கான அனுமதியைப் பெறுவதற்கான நடைமுறைகளை கோடிட்டுக் காட்டும் விதிமுறைகள் வெளியிடப்பட்டன. இந்தச் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு மீன்பிடி அமைச்சு மற்றும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் என்பன மீள தவிர்க்க முடியாத பொறுப்பைக் கொண்டுள்ளன. இந்திய மீனவர்கள் வட கடலில் மேற்கொள்ளும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளை முற்றாக நிறுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடல் 2023 ஜனவரி 24 ஆம் திகதி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் நடைபெற்றது.  மேலும், 2023ல் சட்டவிரோத வெளிநாட்டு மீன்பிடி கப்பல்கள் மற்றும் மீனவர்கள் குறித்து அந்தந்த நிறுவனங்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. எவ்வாறாயினும், இந்திய இழுவை படகுகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண போதிய நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் இன்னமும் தவறியுள்ளதுடன், இதனால் பிரச்சினை தொடர்ந்து மோசமாகி வருகிறது. இவ்விடயம் தொடர்பில் வினவிய போது கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே.என். குமாரி சோமரத்ன, இந்த பிரச்சினைக்கு இரு நாடுகளுக்கிடையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும் என தெரிவிக்கின்றார். “இந்த விவகாரம் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பல ஆண்டுகளாக விவாதங்கள் நடந்து வருகின்றன. இந்த விடயம் தொடர்பில் மீண்டும் ஒருமுறை கலந்துரையாடலை ஆரம்பிக்குமாறு வெளிவிவகார அமைச்சிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். வெளிவிவகார அமைச்சரும் அதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருவதை நாம் அறிவோம். இப்பிரச்சினை தொடர்பாக தற்போதுள்ள சட்டங்களில் திருத்தம் செய்ய தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளது. தற்போது, முதல் தடவை கைதுக்கான தண்டனை மற்றும் மீண்டும் மீண்டும் கைது செய்யப்பட்டதற்கான தண்டனையை சட்டம் குறிப்பிடுகிறது, ” என்று அவர் கூறுகின்றார். இந்தச் சட்டத்தின் கீழ் கைது செய்ய கடற்படையின் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்கு ஏன் பணிப்புரை வழங்கப்படவில்லை என வினவியபோது, அந்தச் சட்டம் இன்னமும் அமுலில் உள்ளதாகவும், அதன்படி தற்போது கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் செயலாளர் தெரிவித்தார். இது இவ்வாறாக இருக்கும் நிலையில், இந்த ஆண்டு இதுவரையான காலப்பகுதியில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் எண்ணிக்கை 150க்கும் அதிகமாகும். இது அதிக எண்ணிக்கையாக தெரிந்தாலும், நாளாந்தம் இலங்கைக் கடற்பரப்புக்குள் நுழையும் இந்திய மீனவர்களின் வருகையுடன் ஒப்பிடுகையில் இது மிகக் குறைவு என மீனவ சங்கத் தலைவர்கள் குறிப்பிட்டுள்ளனர். இந்த நிலையில், இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் இந்திய மீனவர்களை கண்காணிப்பதற்காக வடக்கில் ‘கடல் காவலர்கள்’ எனப்படும் தன்னார்வ குழுவொன்றை ஸ்தாபிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை கடற்றொழில் அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். இதேவேளை, இந்திய மீன்பிடி பிரச்சனையால் நாளாந்தம் 350 மில்லியன் ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படுவதாக அமைச்சு மதிப்பிட்டுள்ளது. இந்த நிலையில், தற்போதைய கடற்றொழில் அமைச்சர் வடக்கில் உள்ள மீனவர்களின் வாக்குகளால் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டதாகவும், கடற்றொழில் அமைச்சராக பதவியேற்றதன் பின்னர் இந்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு அவர் போதிய தலையீடுகளை மேற்கொள்ளவில்லை என வடமாகாண மீனவர் சங்க தலைவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். வடக்கில் உள்ள எழுவைத்தீவு, அனலைத்தீவு, நெடுந்தீவு உள்ளிட்ட, மீன் பிடி தொழிலை வாழ்வாதாரமாக கொண்டுள்ள மக்கள் வசிக்கும் தீவு பகுதிகள் இன்னும் இலங்கை கடற்படையினரின் கண்காணிப்பிலேயே உள்ளதை எம்மால் நேரடியாக காண முடிந்தது. இந்த தீவுகளின் கடற்படையினரின் சோதனை சாவடி அல்லது முகாம் இன்னும் செயற்பாட்டிலேயே உள்ளது. இவ்வாறு வடக்கின் கடற்பரப்பை சுற்றி ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் இலங்கை கடற்படையினர், இந்திய மீனவர்கள் இலங்கைக்குள் பிரவேசிப்பதை தடுக்க  உரிய நடவடிக்கை எடுக்காதது குறித்து வடபகுதி மீனவர்கள் தமது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றனர். இலங்கை கடற்படையினர் நினைத்தால் இந்திய மீனவர்களை இலங்கை கடல் வளத்தை சுரண்டாமல் இலகுவாக தடுத்து நிறுத்த முடியும் என்பதே வடபகுதி மீனவர்கள் நம்பிக்கையாகும். ஆனால், அது இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை என்பது அந்த மீனவர்கள் நிலையை நேரில் பார்க்குத்போது தெளிவாக புலப்படுகின்றது.   https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/வடக்கு-மீனவர்களின்-ஓயாத-போராட்டம்/91-336077
    • யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு! adminApril 18, 2024 யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது. அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன. ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது. கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார். வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர். எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன. சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார். ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது. திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார். ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார். இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார். அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது. ‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன   https://globaltamilnews.net/2024/201875/
    • போட்டியில் கலந்துகொண்ட @kalyani யும், @கந்தப்புவும் வெற்றிபெற வாழ்த்துக்கள். இன்னும் 15 மணித்தியாலங்களே இருப்பதனால், யாழ்களப் போட்டியில் விரைவில் கலந்துகொள்ளுங்கள்😀 இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.