Jump to content

கொஞ்சம் வாங்க பேசலாம் - மலேசிய விமானம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மலேசிய  விமானம்

திசை  மாறி

காணமல்போய்

பதுக்கி  வைக்கப்பட்டு

திருடப்பட்டு

கடத்தப்பட்டு

வெடிக்க  வைக்கப்பட்டு

விமானி  தற்கொலை செய்து

புகை வந்து

கடலில் வீழுந்து................

 

உங்கள் கணிப்பு என்ன?

பேசலாம் வாங்கோ..........

 

இதில் உண்மை இருக்கணும் என்றில்லை

உண்மையாகவும் இருக்கலாம்

உங்கள் ஆராய்ச்சியாகவும்  இருக்கலாம்

கற்பனையாகவும் இருக்கலாம்

.............

 

எழுதலாமே........

 

போன  கிழமை  எனது மகனைக்கேட்டேன்

எங்க போயிற்றுது மலேசிய  விமானம் என?

அவன் சொன்னான்

எங்கட  கார்  பாங்கிங்கில  கொண்டு வந்து நிற்பாட்டியிருக்கிறன்

நீங்க  பார்க்கலையா என?

ஒரு விதத்தில் இது பகிடியாக இருந்தாலும்

கனக்க அர்த்தம் அதற்குள் இருப்பதால்  சிரிக்க முடியல என்னால்.......

 

இனி  நீங்கள்...........?

 

Link to comment
Share on other sites

கடத்தல் முயற்சி அல்லது விமானியே திசை திருப்பி சென்றிருக்கலாம். சுட்டு விழுத்திவிட்டார்கள் என்பதே என் எண்ணம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலதரப்பட்ட அழுத்தங்கள் காரணமாக ஏதோ ஒன்றைச் சொல்லி தப்பிக்கொள்வோம் என்றும் இப்படிச் சொல்லலாம்,சொல்கிறார்கள் என்று தான் நினைக்கிறேன்.கடலில் தான் விமானம் விழுந்து விட்தென்றால் ஒரு உதிரிப்பாகம்,உடல்பாகம் ஒன்றும் கிடைக்காமல் எங்கே போய் விட்டது.சுனாமி பேரலை வந்த போது கூட இப்படி ஒரு மர்மத்தை கேள்விப்பட இல்லை..அதே நேரம் இன்னும் ஒன்றையும் மக்கள் கவனிக்க வேண்டும்..கடலில் தான் விமானம் விழுந்து விட்டது என்றால் கடல்வாள் உயிரணங்களின், உணவுகள் உண்பதைப் கூட கொஞ்சக் காலாமாவது  தள்ளிப் போட வேண்டும்..எது எப்படி இருப்பினும் சூனியக்காறியை அழைத்தும் ஒரு தீர்க்கமான முடிவை அறிய முடியாத மர்மாகி விட்ட விடையம்...
 

Link to comment
Share on other sites

அதில் நிறைய தங்கமும் சீனாவிற்கு செலப்பட்டதாம் என்னுடைய கருத்து அந்த PILOT கட்டுபாட்டு கோபிரத்துக்கு good bye என்று சொல்லிவிட்டு விமானத்தை செலுத்தும் போது எதோ நடக்க கூடாதது நடந்திட்டு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

beads.jpg

பெரிய கம்பனிகள்.

2014-livin-lite-quicksilver-vrm-28fbd-to

6a00e54efbe3a188330120a7805b95970b-800wi

airplanes-rc-airplanes-toys.jpg

செம்மார் வீதி ( ஸ்டான்லி ரோட்டிலிருந்து மலாயா கபேக்கு அருகில் போகும் வீதி.ஆக்களுக்கு கிடைத்தால் இதுதான் செய்ய முடியும்.

IMG_3065-001.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

9/11 தாக்குதலில் வெள்ளை மாளிகையில் ஒரு சின்ன ஓட்டைக்குள் அப்படியொரு பெரிய விமானம் உட்புகுந்து கொள்ள முடியும் என்றால்...

 

அந்த விமானத்தின் துண்டுகளை வெறுமனே கையினால் பொறுக்கி எடுத்துக்கொணடு செல்ல முடியுமென்றால்....

 

வாழ்வில் அரைவாசியை விமானத்திலயே முடித்த பெரிய விமானிகள் எல்லாம் தங்களால் அப்படி ஒரு குறுகிய பரப்பளவிற்குள் அப்படி ஒரு விமானத்தை திருப்பவே முடியது என்று சொல்லிய பின்னர் வெறும் சில மணிநேரங்களே பயிற்சிபெற்ற சிலர் அதை செய்ய முடியுமென்றால்...

 

இந்த மலேசிய விமானம் மாயமான முறையில மறைஞ்சதை நான் நம்பிறன். இது ஒரு "முத்துமாலை" சிக்கல் போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கடத்தல் முயற்சி அல்லது விமானியே திசை திருப்பி சென்றிருக்கலாம். சுட்டு விழுத்திவிட்டார்கள் என்பதே என் எண்ணம்

 

 

இதைத்தான் நானும் தொடர்ந்து எழுதி  வருகின்றேன்

 

நேற்று ஒரு விமானி  எனது கடைக்கு வந்திருந்தார்.........

உங்கள் அபிப்பிராயம் என்ன  என்று கேட்டேன்

கடுமையாக சிந்தித்தார்

சுட்டு   வீழ்த்தப்பட்டிருக்கலாமா என்றேன்

எனக்கும் அந்த சந்தேகம் உண்டு என்றார்

ஆனால் அதற்கான  காரணம்  தான் தெரியவில்லை என்றார்

 

சரி

மலேசியாவில் உள்ள  ஒரு கோபுரத்தை தாக்குவதற்காக

விமானம் கடத்தப்பட்டிருப்பது தெரிந்தால்

அதனால் வரும் மனித மற்றும் பொருள் அழிவுகளுடன் ஒப்பிட்டால்

குறைந்தளவு மனிதர்களுடன் கடலுக்கு மேலால்  சாதகமான  சூழலில் 

பறந்து கொண்டிருக்கும் விமானம்  

குறி  வைக்கப்படுவதற்கு உந்துதல் உண்டா என்று கேட்டேன்

மேலும் கீழும் பார்த்துவிட்டு

இந்த பக்கத்தால் நான் சிந்திக்கவில்லை

உங்கள் கருத்தை மறுக்க முடியாது என்றார்

 

உலகத்தலைவர்கள் மட்டத்தில்  முடிவெடுத்து வீழ்த்திவிட்டு

இறந்தவர்களின்  உறவுகளுக்கு என்ன  பதில் சொல்வது என்று

இப்பொழுத சோடிக்கிறார்கள் என்ற போது

காரணத்தை அவர்கள் சொல்லாதவரை

உங்களின் சந்தேகம் மறுப்பதற்கில்லை என்றார்.

இது போன்ற  ஒரு சந்தேகம்

விமானத்திலிருந்த பயணிகளின் உறவுகளுக்கு வந்தால்

விளைவு........???

இப்படியே  விடை பெற்றார்.

Link to comment
Share on other sites

மலேசிய அரசாங்கத்திற்கு முன்பே தெரியும் என்ன நடந்திருக்கு என்று ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் பல விடயங்களை மறைக்கின்றார்கள் என்பது தான் உண்மை. நான் நினைக்கின்றேன் அமெரிக்க ராணுவம் தான் சுட்டுவிழுத்தியிருக்கவேண்டும் அதனால் தான் அவர்களும் சேர்ந்து வேறு திசையில் எல்லோரையும் திசை திருப்பி தேடவைத்தார்கள்.  இப்போது விமானி வந்து சாட்ச்சி சொல்லமாட்டார் என்பதால் அவரின் மேல் எல்லா பழிகளையும் போடபாக்கின்றார்கள்.  எதையுமே ஆதாரத்தோடோ, இல்லை ஆணித்தரமாகவோ சொல்லாமல் நேரத்திற்கு ஒரு கதை அவிழ்த்து விடுகின்றார்கள்.

இப்போது கூட செய்மதியின் படிதான் இந்திய கடலில் வீழ்ந்திருக்கின்றார்கள் என்கின்றார்களே தவிர எந்தவித ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

மலேசிய அரசாங்கம் நடந்த உண்மையை ஒழிக்காமல் சொன்னாலே அன்றி விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர் :rolleyes:

Link to comment
Share on other sites

மலேசிய அரசாங்கம் எதையும் இலகுவில் சொல்லமாட்டார்கள். சொன்னால் அங்கு பாதுகாப்புக் குறைபாடுகள் உள்ளன என்று சுற்றுலாப் பயணிகளும், ஏனைய பயணிகளும் போகமாட்டார்கள். நாட்டிற்கு மிகப்பெரிய பொருளாதார சீர்குலைவு வந்துவிடும். மலேசியன் விமான நிறுவனமும் படுத்துவிடும்..  :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்களை வைத்துக்கொண்டு  ஊடகங்கள்  இப்படி எல்லாமுமா காமடி பண்ணுவது..ஒன்று இரண்டு உயிர்களா இதற்குள் அடக்கம்.....

 

1975016_10151979593817944_1762651543_n.j

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனித உயிர்களை வைத்துக்கொண்டு  ஊடகங்கள்  இப்படி எல்லாமுமா காமடி பண்ணுவது..ஒன்று இரண்டு உயிர்களா இதற்குள் அடக்கம்.....

 

1975016_10151979593817944_1762651543_n.j

 

 

உண்மைதான் யாயினி

 

நான் இதைத்தொடங்கும் போது...

இதில் உண்மை இருக்கணும் என்றில்லை

உண்மையாகவும் இருக்கலாம்

உங்கள் ஆராய்ச்சியாகவும்  இருக்கலாம்

கற்பனையாகவும் இருக்கலாம்

.............

 

எழுதலாமே........

(இறுதியில் பகிடியாகவும் இருக்கலாம் என  எழுதி அதை வெட்டியிருந்தேன்.  இந்த வேதனையை நாம் ரசிப்பது சரியல்ல  என்பதால் பகிடியாகவும் இருக்கலாம்  என்பதை அழித்திருந்தேன்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மலேசியா அரசாங்கம் தான் முழு மூச்சாக   தேடவேண்டும். பாதிக்கபட்ட  பெரும்பாலானவர்கள் சீனர்கள் அதனால் அவர்களது ஆத்திரம்  இவர்கள்மேல் உள்ளது  வெறுமனே விமானம் விபத்துக்குளாகி  விட்டது அத்தனைபேரும்  இறந்துவிட்டார்கள்  உயிர் தப்ப   சாத்தியம் இல்லை என்பதால் ..இன்னும் வெருப்புக்கு  ஆளாகி  விட்டது மலேசியா  ..இறப்புக்கு ஆதாரம் கேட்கிறார்கள் சீனர்கள் .. எம்பசியின் முன்  தண்ணீர் போத்தல்காளால் வீசி ஆர்பாட்டம்  நடத்து கிறார்கள் . ஏதாவது ஒரு ஆதாரம்  காட்ட  வேண்டும் இல்லையேல் உலகின்  வெறுப்புக்கும்   சீனர்களின் கோபத்துக்கும் ..உலகின் ஏளனத்துக்கும் பதில் சொல்ல வேண்டியிருக்கும்

Link to comment
Share on other sites

இசை அண்ணா எனக்கு ஒரு விமானி சொன்னார் மலேசிய விமான நிறுவனத்தின் டிக்கெட் sales 35% குறைந்து விட்டதாம்......

சோ தாக்கம் ஏற்கனவே வரத்தொடங்கிட்டு.......

Link to comment
Share on other sites

அதுவும் பாத்திங்க எண்டா ஆஸ்திரேலியா வின் தேடுதல் பகுதிக்குள் சரியாக கொண்டு வந்து விமானத்தை விழுத்தி இருப்பதை பார்த்தால் சம்திங் வ்ரோங் ......

விசாரணை வந்தாலும் அது ஆஸ்திரேலியா தான் செய்ய வேண்டி வரும்.....

மற்றும் படி விசு அண்ணா நினைக்கிற மாதிரி தீவிரவாதிகள் கடத்தி மலேசியாவை தாக்க வாய்ப்பே இல்லை அவர்களோடு மினக்கெட மலேசியா ஒன்றும் பெரிய இலக்கும் அல்ல ... ஆகவே விசு அண்ணாவின் கருத்தை நான் முற்றாக நிராகரிகின்றேன்..... இங்கே ஆஸ்திரேலியா பத்திரிகைகள் எழுதுவது போல விமானத்தில் எதோ ஒரு முக்கிய பொருள் போய் இருக்கு சீனாவிற்கு.... அதை கடத்த முற்பட்டு இருக்கலாம் இல்லை அழிக்க முற்பட்டு இருக்கலாம்

Link to comment
Share on other sites

எனக்கு ஆரம்பத்தில் இருந்த ஒரு பெரிய சந்தேகம், இவ் விமானம் உண்மையிலேயே Take off ஆனதா என்பதுதான். :)

 

இவ்வளவு மனுச உயிர்கள் போயிருக்கு, என்ன நக்கலா என்று நீங்கள் சொல்வது கேட்கின்றது. சரி, உண்மையில் நடந்து இருக்கக் கூடியதாக நான் நினைப்பது பின்வருவன.

 

1. தன் நண்பரான மலேசிய எதிர்க்கட்சி தலைவரை சிறைக்கு அனுப்பியமையாலும், மனைவி பிரிந்து போனமையாலும் ஏற்பட்ட மனவுளைச்சலில் ஆத்திரத்தில் முதன்மை விமானி தற்கொலை செய்து இருக்கலாம். முதல் நாள்தான் அந்த விமானி நீதிமன்றத்தில் தீர்ப்பினைக் கேட்க வந்து பின் தீர்ப்பினை கேட்ட பின் அழுதிருக்கின்றார். மலேசிய ஆளும் கட்சிக்கு ஒரு பாடத்தினை படிப்பிக்க நினைச்சு இதனை செய்து இருக்கலாம். இறுதியில் Good night சொல்ல முன்னர்  ஆளும் கட்சிக்கும் பிரதமருக்கும் எதிராக வேறு ஏதும் கடுமையாக சொல்லி அதனை மலேசிய அரசு மறைக்கலாம்.

 

2. தவறுதலாக  சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கலாம். ஆனாலும் இதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. அப்படி சுட்டு வீழ்த்தப்பட்டு இருக்கும் பட்சத்தில் உலகின் கண்ணுக்கு விமானத்தின் சிதைவுகளை எக்காலத்திலும் காட்ட மாட்டார்கள். முக்கியமாக கருப்புப் பெட்டியை தேடி எடுக்க மாட்டார்கள்

 

3. தொழில்நுட்ப ரீதியிலமைந்த தவறான சமிக்ஞைகளாலும், வேகம், உயரம் தொடர்பான தவறான தானியங்கிகளின் கணிப்புகளாலும் விபத்து நடந்து இருக்கலாம்.

Link to comment
Share on other sites

 'Towed Pinger Locator' மூலம் கறுப்புப் பெட்டியைத் தேடி எடுப்பதற்காக, அமெரிக்கா தனது கடற் படைக்  கப்பலை அனுப்பியுள்ளது. கறுப்பு பெட்டியின் மின்கலத்தின்  ஆயுட்காலம் 30 நாட்கள்தான். இன்னும் 13 நாட்களுக்குள் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும். இதை என் ஆரம்பத்திலேயே செய்யவில்லை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

.கடலில் தான் விமானம் விழுந்து விட்தென்றால் ஒரு உதிரிப்பாகம்,உடல்பாகம் ஒன்றும் கிடைக்காமல் எங்கே போய் விட்டது.சுனாமி பேரலை வந்த போது கூட இப்படி ஒரு மர்மத்தை கேள்விப்பட இல்லை..

 

 

 

உங்கள்  கேள்விக்குள் பதில் இருக்கலாம் யாயினி

இதவும் எனது சந்தேகம் தான்

 

இவர்கள் சுட்டிருந்தால்

சுட்ட இடத்தை இவர்களுக்கு தெரியும்

அதனால் அந்த இடத்தை தவிர்த்து

வேற இடங்களில் தேடுகிறார்கள்

 

இது நித்திரை மாதிரி  நடிப்பவனின் வேலை.........? :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இதனைச் சுட்டதாகத் தெரியவில்லை.  யாரோ கடத்திக் கொண்டுபோயிருக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதில் நிறைய தங்கமும் சீனாவிற்கு செலப்பட்டதாம் என்னுடைய கருத்து அந்த PILOT கட்டுபாட்டு கோபிரத்துக்கு good bye என்று சொல்லிவிட்டு விமானத்தை செலுத்தும் போது எதோ நடக்க கூடாதது நடந்திட்டு

 

சீனா  நோக்கித்தானே  விமானம் போய்க்கொண்டிருந்தது

அது ஏன் திரும்பணும்?

திரும்பினாலும் ஏன் இவ்வளவு தூரம்  ஓடணும்?

இவ்வளவு தூரம் ஓடும்  போதும் ஏன் இவர்களுக்கு (கட்டுப்பாட்டு அறைக்கு)அது தெரியவில்லை

இவ்வளவு தூரம் ஓடும் போதும்  பயணிகளுக்கு தெரியவில்லை?

ஒரு பயணி  கூட தனது கைத்தொலைபேசி  உட்பட எதையும் பாவிக்கவில்லை ஏன்?

ஏன்?

ஏன்?  ஏன்?? :(

பெரிய கம்பனிகள்.

6a00e54efbe3a188330120a7805b95970b-800wi

செம்மார் வீதி ( ஸ்டான்லி ரோட்டிலிருந்து மலாயா கபேக்கு அருகில் போகும் வீதி.ஆக்களுக்கு கிடைத்தால் இதுதான் செய்ய முடியும்.

IMG_3065-001.JPG

ம்ம்ம் :lol:

9/11 தாக்குதலில் வெள்ளை மாளிகையில் ஒரு சின்ன ஓட்டைக்குள் அப்படியொரு பெரிய விமானம் உட்புகுந்து கொள்ள முடியும் என்றால்...

 

அந்த விமானத்தின் துண்டுகளை வெறுமனே கையினால் பொறுக்கி எடுத்துக்கொணடு செல்ல முடியுமென்றால்....

 

வாழ்வில் அரைவாசியை விமானத்திலயே முடித்த பெரிய விமானிகள் எல்லாம் தங்களால் அப்படி ஒரு குறுகிய பரப்பளவிற்குள் அப்படி ஒரு விமானத்தை திருப்பவே முடியது என்று சொல்லிய பின்னர் வெறும் சில மணிநேரங்களே பயிற்சிபெற்ற சிலர் அதை செய்ய முடியுமென்றால்...

 

இந்த மலேசிய விமானம் மாயமான முறையில மறைஞ்சதை நான் நம்பிறன். இது ஒரு "முத்துமாலை" சிக்கல் போல...

 

 

வரும்

ஆனால் வராது........ :(

மலேசிய அரசாங்கத்திற்கு முன்பே தெரியும் என்ன நடந்திருக்கு என்று ஆனால் முழுப்பூசணிக்காயை சோற்றுக்குள் மறைப்பது போல் பல விடயங்களை மறைக்கின்றார்கள் என்பது தான் உண்மை. நான் நினைக்கின்றேன் அமெரிக்க ராணுவம் தான் சுட்டுவிழுத்தியிருக்கவேண்டும் அதனால் தான் அவர்களும் சேர்ந்து வேறு திசையில் எல்லோரையும் திசை திருப்பி தேடவைத்தார்கள்.  இப்போது விமானி வந்து சாட்ச்சி சொல்லமாட்டார் என்பதால் அவரின் மேல் எல்லா பழிகளையும் போடபாக்கின்றார்கள்.  எதையுமே ஆதாரத்தோடோ, இல்லை ஆணித்தரமாகவோ சொல்லாமல் நேரத்திற்கு ஒரு கதை அவிழ்த்து விடுகின்றார்கள்.

இப்போது கூட செய்மதியின் படிதான் இந்திய கடலில் வீழ்ந்திருக்கின்றார்கள் என்கின்றார்களே தவிர எந்தவித ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

மலேசிய அரசாங்கம் நடந்த உண்மையை ஒழிக்காமல் சொன்னாலே அன்றி விமானத்திற்கு என்ன நடந்திருக்கும் என்பது ஒரு புரியாத புதிர் :rolleyes:

 

உண்மை

நேற்று இதை அறிவித்தபோது

பயணிகளின் உறவுகளை  வெளியேற்ற  

காவல்த்துறையினர் அதிகளவில் குவிந்திருந்ததை காண  முடிந்தது.

அடாத்தனமாக  அவர்களை  தூக்கிச்சென்று வெளியேற்றியதையும்  காண  முடிந்தது.

அந்தவகையில் எவரும் அவர்களது கதையை  நம்பவில்லை என்பது உறுதி.

Link to comment
Share on other sites

கடுமையான புகை வந்ந்திருந்தாலோ இல்லது பயணிகளுக்கு விமானத்தை அதி உச்சத்துக்கு கொண்டு போய் சுவாசப்பிரிச்சனை உண்டு பண்ணி இருந்தாலோ பயணிகள் எல்லோரும் மயக்கமடைய வாய்ப்புகள் அதிகம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் வேறொரு திரியில்... காணாமல் போன விமானத்தைப் பற்றி, கருத்துச் சொல்லப் போக...
சூறாவளி... எனக்கு தந்த பதிலுக்குப் பிறகு, நான் வாயை மூடிக் கொண்டு இருந்திட்டன். :D  :lol:

 

விமானம் கடத்தப் பட்டிருந்தால்....
ஏன்... ஒரு பயணியும், தமது கைத்தொலை பேசியின் மூலம் உறவினர்களை தொடர்பு கொள்ளவோ... குறுஞ் செய்தி அனுப்பவோ.. முயற்சிக்கவில்லை.
வேறு... ஏதோ... பெரிய மர்மம் நிகழ்ந்துள்ளது.

 

அனுப்பியிருக்கலாந்தான் ஆனாலும் சிக்கினலும் வேணுமே?

யாரோ எதோ இதென்ன யாழ் கொளும்பு பசுவண்டியா சிறி?

 

 

Link to comment
Share on other sites

இது வேற்றுக்கிரக வாசிகளால் முக்கியமாக, செவ்வாக்கிரக வாசிகளால் கடத்தப்பட்டிருக்கலாம். நம்மடை ஆட்கள் பலர் செவ்வாய்குப் போவதற்கு இப்பவே ரிக்கெற்ரும் வாங்கிவிட்டார்கள். தங்கள் கிரகத்திற்கு வரப்போகும் பூவுலகவாசிகள் எப்படி இருப்பார்கள் என்பதை முற்கூட்டியே அறிவதற்காக அங்கு விமானம் கடத்திக்கொண்டு செல்லப்பட்டதாக ஒரு தகவல். கிரக வாசிகளுக்கும் தலைமை விமானிக்கும் ஏறகெனவே தொடர்புகளும் உண்டாம்.

செய்மதிகளுக்கே தெரியாது விமானத்தைக் கொண்டுசெல்ல முடிந்த விமானிக்கு தொலைத் தொடர்புகளை முடக்கத்தெரியாது விட்டால்....சிந்தனை செய்மனமே. :rolleyes::icon_idea:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.