Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

யார் அடுத்து கதை எழுதுவது என்று தெரியாமல் எழுதுவது தான் இந்த தொடரின் 'த்ரில்'.
இது 'கலாநிதி' பட்டத்துக்காக 'ஆராய்ச்சி' செய்வதற்கு ஒப்பானது.
அடுத்து யார் என்னத்தை சமர்பிக்க போறான் என்று தெரியாமலே நாங்கள் அறிக்கையை தயாரிப்பதும்.
அதை வெளியிடும் முதன் நாள் யாராவது குழப்பி விடுவான்.  :lol: 





 



 

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.


இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

 


விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol: கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

Link to comment
Share on other sites

நான் இரவு வேலையால் வீட்டிக்கு போய் வோட்காவை வாயில் வைத்தபடி ஒரு மணித்தியாலத்தில் எழுதி முடித்துவிட்டேன் .காலை எழும்பி எனது E-MAIL இற்கு அனுப்பிவிட்டு வந்தேன் .

காலை கடைக்கு வந்தநேரம் முழுக்க வெட்டி ஒட்டி குத்தி முறிஞ்சு பாத்தேன் ஒன்றும் சரிவரவில்லை .இப்ப KEY-BOARD வெட்டி ஓட்டிவிட்டேன் .

விசுகுவின் கதை அதற்கு இடையில் வந்துவிட்டதால் லண்டன் அண்ணரை பிரான்ஸ் அண்ணராக வாசியுங்கள் .

நன்றி .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள் அர்யுன். சிரிச்சு முடியவில்லை. பச்சையும் இல்லைப் போட.

 


இடையில் மதுரனே வில்லனாவானோ என்னும் மாயையை ஏற்படுத்தியது அருமை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன் அண்ணா நல்லா இருக்கு கதை.
 
ஆனால் சில நெருடல்கள்  இருக்கு

  • விசுகு அண்ணா பிரான்சில் இருபதாக எழுதி இருக்கிறார். அதுவும் இரண்டு வேலை பார்ப்பவராக. நீங்கள் லண்டனில் டாக்டாராக எழுதி இருக்கிறீர்கள் மதுரனின் அண்ணாவை.

    2. இந்த கதை களம் எத்தனையாம் ஆண்டளவில் நடப்பதாக சித்தரிக்கபடுகிறது. யாழ் புகையிரத நிலையம். ஆமி பிரச்சனை. புலிகளின் ரகசிய பயிற்சி. கொஞ்சம்    குழப்பமாக இருக்கிறது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

Link to comment
Share on other sites

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!
தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.
 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜூனின் முதல் பந்தியே அட்டகாசம்...

"கோர்னர் சீட் கிடைத்த சந்தோஷசம் ..

"இரயிலின் நகர்வோடு யாழ்ப்பாணம் தன்னை நோக்கி கையை ஆட்டி சற்று கோபத்துடன் விடைபெறுவது போல உணர்ந்தான் . அவன் யாழை விட்டு போகும் போது கோபப்படுவதும் திரும்பி வரும்போது கட்டி அணைப்பதும் யாழ் செம்பாட்டு மண்ணுக்கும் அவனுக்குமான இந்த ஊடல் எவருக்கு புரிய போகின்றது .

அனுபவித்து எழுதி உள்ளீர்கள் போல தெரிகிறது. பாராட்டுக்கள் !!!

Link to comment
Share on other sites

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:


மதுரனது காதல் எத்தனை தடைகளை தாண்ட வேண்டி வரும் என்பதை அறியாமல் மெயில் ரெயின் வவுனியாவை தாண்டி வேகம் எடுக்கின்றது - அர்யுன்
 

 

மதுரன் இயக்கத்தில் இரகசியமாகப் பயிற்சி பெற்றிருந்ததும் கதையில் வெளிப்பட்டுள்ளது. எத்தனை தடைகளை வந்தாலும் மதுரன் உடைத்துவிடுவான். கவலையை விடுங்கள் அர்யுன்! உங்கள் கற்பனை வேகம் கண்டு வாழ்த்துக்கள்!! :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

அர்ஜூன் நன்றாக இருக்கின்றது. நான் நினைத்ததை நீங்களே சொல்லி விட்டீர்கள். அந்த அண்ணரின் இடமாற்றத்தைத்தான் சொல்கிறேன். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அர்ஜுன், ஒரு கை தேர்ந்த எழுத்தாளர் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கின்றார்!

 

இவரது வாழ்வின் சில சம்பவங்களும், நிச்சயமாக இதில் மறைந்திருக்கும் என்றே கருதுகின்றேன்! யாழ்தேவிப் பயணத்தின், சம்பவங்களை அப்படியே கண் முன் விரித்திருக்கிறார்! அத்துடன், 'கருத்தக் கொழும்பான்' போன்ற குறியீட்டுப் பாவனையும், கொஞ்சம் வித்தியாசமாக இருக்கின்றது!

 

கதையின் முன்னைய சம்பவங்களைக் கொண்டு, அதனைத் தொடர்பு படுத்தும் 'கதை நகர்வுக்காக' மட்டுமே அர்ஜுனை எவ்வளவு பாராட்டினாலும் தகும்!

 

அதாவது கதையை ஒரு புத்தகமாக வெளியிட்டால், அந்தச் சம்பவங்களின் கோவையானது, இந்தக் கதை பலரால், வேறு வேறு நேரங்களின் எழுதப்பட்டுத் தொகுக்கப்பட்டது என்று எவராலும் இலகுவில் கூற முடியாதவாறு அவரது 'அத்தியாயம்' அமைந்துள்ளது!

 

விசுகரின் அத்தியாயத்திலிருந்து கொஞ்சம் விலகிச் செல்வது போல இருப்பினும், அதற்கான காரணத்தையும் 'அர்ஜுனே' தெரிவித்திருக்கிறார்!

 

உண்மையான 'அர்ஜுனும்', யாழ் களத்து 'அர்ஜுனும்' வேறு வேறு குணாதிசயங்களும், ஆழுமையும் உள்ளவர்கள் என்பதை, இப்போது ஏற்றுக்கொள்கின்றேன்! :icon_idea: 

 

வாழ்த்துக்கள் அர்ஜுன்!

 

நேரம் கிடைக்கும் போதெல்லாம் எழுதுங்கள்! :D  

Link to comment
Share on other sites

பாராட்டுக்கள் பாஞ்ச். நீங்கள் எழுதியதில் அவசரம் தெரிகிறது. இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதியிருக்கலாம்.

இரண்டாவது பந்தி என்ன சொல்கிறீர்கள் என்று விளக்கம் இல்லாமல் இருக்கு.

அவசரம்தான்!....

"பந்திக்குப் பிந்திவிட்டேன், இனிச் சோற்றுக்கு நான் எங்கே போவேன்??" என்ற எனது அங்கலாய்ப்புக்கு; புங்கையூரன் தந்த ஊட்டத்தை நீங்கள் படிக்கவில்லையா??... :o

 

கதையின் விளக்கத்தை.!! கதையைப் படிப்பவர்கள், தங்கள் அறிவிற்கும், சிந்தனைக்கும், அனுபவத்திற்கும் ஏற்பக் காட்சிப்படுத்திக் கொள்ளும்போது கிடைக்கும் சுவை அலாதியானது!!!. அந்தச் சுவையை நான் அநுபவித்துள்ளேன்! அதனையே என் கதைமூலமும் கொடுக்க விரும்பினேன்! எதனையும் சுலபமாகக் காணும்படி முற்றும் திறந்து காட்டிவிட்டால்!.... அதில் உள்ள ரசனை பார்ப்பவர்களுக்கு அற்றுப் போய்விடும்!!.... :icon_idea::wub:

 

Link to comment
Share on other sites

பிலா மரங்கள் இரண்டு எனது வீட்டில் இருக்கு ,அந்த இரண்டு மரங்களும் எமக்கு நல்ல சுவையான பலாபழங்களை தருகின்றன .நான் அவற்றை மிகவும் விரும்பி சாப்பிடுவன்.பிலா இலையும் எம்வீட்டில் இருக்கும் ஆட்டுக்கு உணவாக பயன்படும் .எம்மிடம் இருக்கும் இரு மாடுகளையும் நாங்கள் பிலா மரத்தில் தான் கட்டி வளர்க்கின்றோம் .

நாலாம் வகுப்பு மாணவி எழுதிய கட்டுரை இது .

வாத்தியார் அதற்கு சொன்ன பதில் -பிள்ளை பிலாமரத்தை பற்றி நான் கட்டுரை எழுதச்சொல்லியிருந்தால் உனக்கு எண்பது மார்க் ஆனால் நான் எழுத சொன்னது மாட்டைப்  பற்றி .அப்ப எத்தனை மார்க் போடலாம் .

பிள்ளை அழதொடங்கிவிட்டது :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளிக்கிழமை அர்யுன் கதையை தொடர இருக்கிறார். அதற்கு முன் யாராவது எழுதுவதானால் எழுதுங்கள். ஆனால் கொஞ்சம் நீளமாக எழுதுங்கள்.

 

இதைப்பார்த்ததும்

இடையில் நாள் கனக்க  இருக்க ஒருக்கா புகுந்து  பார்க்கலாம் எனத்தோன்றியது

அதற்கான  உற்சாகத்தை நிலாமதிப்பாட்டி  தந்திருந்தார்.

பத்து நிமிடம்  கிடைத்தது

அதனாலேயே அவசர  எழுத்து.

எழுத்துப்பிழைகளை  பின்னர் தான் திருத்தினேன்

பின்னர் பார்த்ததில் இன்னும் எழுதியிருக்கலாம் என்று தோன்றியது

 

இதற்கு  முதல் எழுதிய

சுமே

புங்கையர்

நிலாப்பாட்டி

பஞ்ச்

எல்லோரும் காதலுடனும் அந்த  இருவருடனும் நின்றுவிட

அந்தக்காதலுக்கு  வரும் எதிர்ப்புக்களின் வடிவங்களை  எழுதலாம்

அதை தலை கீழாகத்தொடங்கலாம்  என்றே  முயற்சித்தேன்

கொஞ்சம் கதையை நாலாபுறமும் சிதறவிடலாம் என்று யோசித்தேன்

இனி  கதையைின் போக்கை  வைத்து மிகுதியைப்பார்க்கலாம்

 

எனக்கும் எழுத  இடம் தந்த சுமேக்கு  நன்றிகள்

 

விசுகு அண்ணா எழுதியதை முதல் வாசித்துவிட்டு இவர் என்ன வேறு கதை தொடங்குகிறாரோ என்று தடுமாறிவிட்டேன். உங்களுக்கு வில்லத்தனம் தான் பிடிக்கும் போல :lol:கடைசியில் தொடர்பை ஏற்படுத்தி கதையுடன் இணைத்தவிதம் நன்று அண்ணா.

 

நன்றி  சகோதரி

கதையினை தொடர்ந்த பாஞ்ச், விசுகு , அர்ஜுன்  ஆகியோருக்கு வாழ்த்துகள்.

 

நன்றி  கறுப்பி

நீங்களும் எழுதலாமே..

யாழ் களத்தில் எத்தனை கதாசிரியர்கள்?!

தற்போதைய புகலிட இலக்கியத்தில் கதாசிரியர்களூக்கு பஞ்சமோ என எண்ணியதுண்டு. 

அதை மீள்பரிசீலனை செய்யத் தூண்டுகிறாது இத்தொடர்.

சில சில சின்ன நெருடல்கள் கதையின் போக்கில் இருந்தாலூம்.. ஒவ்வொருவரும் தமது திறமையை பாராட்டும்விதத்தில் வெளிப்படுத்துகிறார்கள்.

 

விசுகு, அர்ஜுன் ஆகியோருக்கு எனது பாராட்டுகள்.

 

(கதையின் நெருடல்களை சுமே அவர்கள் சீராக்கிவிட்டால்... தொடர்ந்து எழுதுபவர்களுக்கு வசதியாக இருக்கும் என நினைக்கிறேன். நன்றி!) 

 

நன்றி  ஐயா... :o  :o  :o

 

ஏற்கனவே  தைப்போன்று  எழுதி  அனுபவப்பட்டவர்  என்பதால்

சுமேக்கு தங்கள் அனுபவங்களை  ஆலோசனைகளை  முன் வையுங்கள் :icon_idea:

'மதுரன்' என்ற ஒரு நாலு எழுத்தை வைத்து ஒரு கதையையே தொடர்வதாகக் காட்டிய தந்திரத்தை, நான் ஐஞ்சு தந்திரக் கதைகளிலும் படித்ததில்லை. அபாரம்!! விசுகு அவர்களுக்கு வாழ்த்துக்கள்!! :D:lol:

 

 

நன்றி  சகோதரா

உங்கள் ஊக்கம்  இன்னும் எழுதியிருக்கலாம் என்ற  ஊக்கம் தருகிறது :D  :lol:  

தயவுசெய்து கதை எழுதும் இனி எழுதப்போகும் உறவுகளுக்கு!

 

நாங்களும் எழுதுவோமா என்னும் திரியில் அரசியல் இல்லாத காதல் கதை என்று நான் கூறியிருந்தேன் சிலவற்றைத் தவிர்ப்பதற்காக. தயவுசெய்து அரசியல் தவிர்த்து எழுதுங்கள் என்பது என் தாழ்மையான வேண்டுகோள்.

 

 

அரசியல் எங்கும் வந்ததாக  தெரியவில்லை  சுமே

ஆனால் நாட்டு   நடப்புக்கள்  கதையில் வருவது  இயல்புதானே..??

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...
கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.
சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விசுகு மிகவும் நன்றாக ஒரு இளைஞனின் பாரிஸ் வாழ்க்கையை எழுதியுள்ளீர்கள் , அதிலும் நீங்கள் குறிப்பிட்ட அந்த வங்கிகளில் யாராவது கடன் வைத்திருந்தால் ஆயுள் வரை அவர்கள் வட்டிமட்டுமே கட்டிக் கொண்டு இருப்பினம். முதல் அப்படியே இருக்கும். :)

 

 

நன்றியண்ணா

 

கதை  என்றாலும்

கொஞ்சம் நன்மை  தீமைகளையும் கலந்தால் தானே  நாளை  வாசிப்பவர்களுக்கு எதாவது படிப்பினையைத்தரும்.

நாம் அனுபவிச்சது தானே  அண்ணா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

1-விசுகர் தனது வாழ்க்கையையே கொட்டித் தீர்த்திருக்கிறார்! நானும், இந்த ஆள், கதையை விட்டிட்டு விலகிப்போகுது எண்டு நினைச்சாலும், தண்ணி கிண்ணி பாவிக்கிற பழக்கமில்லாத மனுசன் எண்ட படியால தொடர்ந்து வாசிப்பம் எண்டு வாசிச்சன்! கடைசியில கொண்டு வந்து இணைச்ச இடம் அருமை!  :D

 

2- ஆனாலும் கொடுத்த சீதனக்காசை எப்படியாவது திரும்ப வாங்கி விட வேண்டும் என்னும் ஒர்மத்தில் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் கண்ணுக்குக் கண்ணென்று ஒருவரை ஒருவர் தொடர்ந்து 'பழிக்குப் பழி' என்னும் மன நிலையில் சென்றால், முழு உலகமும் குருடாவது தான் முடிவாக இருக்கும் என்ற மகாத்மா காந்தியின் 'பொன்மொழி' தான் நினைவுக்கு வந்து போனது!

 

3- சாதியை இதனுள் கொண்டு வந்ததிலும் எனக்கு உடன்பாடில்லை! எல்லோரும் மரத்திலிருந்து மண்ணுக்கு இறங்கியவர்களே! 

 

4- ஆனால் கதையை நகர்த்திய விதமும், சம்பவங்களைக் கோவையாக்கிய விதமும் நன்றாக உள்ளது!

 

ஒரு நல்ல மகனாக, ஒரு நல்ல அண்ணனாக, ஒரு நல்ல குடும்பத் தலைவராக வாழ்கின்றீர்கள் என்பதில் பெருமையே!  :icon_idea:

 

வாழ்த்துக்கள் விசுகர்!

 

  

1- இப்படியா  நம்பிக்கை  வைப்பது?? :D

   உங்களையே தடுமாற  வைத்திருக்கு என்றால்.....

    நம்பிக்கை  வருகிறது

 

2- 3- எல்லோரும்  அந்த இருவரையும் காதலையும் சற்றி  வந்ததால

கொஞ்சம் காரம் கொடுப்பம் என்று பார்த்தன்.

வழமையாக  எமது காதலுக்கு இருக்கும் எதிர்ப்புக்கள் தானே  இவை?

முன்பொரு மறை  பப்படித்தான் சாதி  பற்றி  இங்கொரு கதை  எழுதப்பட்டபோது

அதை  உங்களைப்போலவே  மறுதலித்திருந்தேன்

ஆனால் சொல்லப்பட்ட  காரணம்

தமிழர்களிடம் இல்லாத  ஒன்றையா  சொன்னோம் என்பது

அப்படியே  இதையும் எடுத்துக்கொள்ளலாமே... :lol:

அத்துடன் எந்த ஒரு கதையும்  படமும் கம்பீரமடைய  அதன் வில்லனின் அதிக கொடூரமே  காரணம்

அந்தவகையில் கொஞ்சம் ஏத்திவிட்டேன்

அது உங்களையே  தொட்டிருக்கு என்றால் வில்லனுக்குத்தான் வெற்றி.

 

4- நன்றியண்ணா. உங்களிடம் வாழ்த்துப்பெற  கொடுத்து வைத்திருக்கணும்

அதிலும் எனக்கு  இரட்டிப்பு மகிழ்ச்சி

     :icon_idea:  :icon_idea:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு இப்போ... பெரிய கதைகள் வாசிக்க, பொறுமை இல்லாததால்...

கருத்து எழுத முடியாமைக்கு... மன்னிக்கவும்.

சுமோவின் நல்ல முயற்சிக்கும்... அதனை தொடராக கொண்டு செல்லும், உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.smiley_happy_thumbup.gif:)

 

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D  :)

 

அப்ப எதுக்குத்தான் பொறுமை ???? :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறித்தம்பி! சொன்னதைத்தான் நானும் சொல்லுறன்.. :D:)

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்
Link to comment
Share on other sites

மேல ரெண்டு பேரும் சொன்னதை தான் நானும் சொல்லுறன்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னையும் சேர்த்துக்கொள்ளுங்க பாஸ்  :D

 

தட்டிவான் வெளிக்கிடப்போகுது இன்னும் ஆக்கள் இருந்தால் ஓடிவந்து ஏறுங்கோ.... :D  :lol:

Link to comment
Share on other sites

புத்தன் தொடருங்கள் .

நேர்கோட்டில் மட்டும் போகாமல் காதல் கிளை விடுவதும்  நன்றாக இருக்கும் .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.