Jump to content

யாழில் ஒரு காதல் - கருத்துக்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உறவுகளே இந்தத் திரியில் உங்கள் கருத்துக்களை வையுங்கள்

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917&hl=

Link to comment
Share on other sites

  • Replies 256
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

கதை  நன்றாக  வந்திருக்கிறது

வாழ்த்துக்கள் சுமே...

தொடருங்கள்

 

அடுத்தது  யார் என்பதையும்

அவருக்கான கால  எல்லை  எவ்வளவு என்பதையும் தெரிவு செய்தால்

தொடர்வது சுலபமாக   இருக்கும் என்பது எனது கருத்து

மற்றவர்களது கருத்தையும் பார்க்கலாம்

Link to comment
Share on other sites

சுமோ.. உங்க வழக்கமான எழுத்து நடையில் இருந்து கதையின் முதலாம் வித்தியாசமா இருக்கு... பேரூந்து உந்துருளி போன்ற சொற்கள் தமிழக கதையோ என்ற உணர்வை ஆரம்பத்தில் ஏற்படுத்தினாலும்.. அங்காலை சூப்பர்..

 

எனக்கு ஞாயிறு வேலை இல்லாததால், சனிக்கிழமை வரை பதியப்படும் அங்கங்களை தொடர்ந்து ஞாயிறு எழுதுகிறேன். நன்றி!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ :lol:

 

உங்கள் இரசனை மற்றவருக்கு இருக்கவேண்டும் என்பதில்லையே ??? ஒவ்வொருவருக்கு ஒவ்வொரு ரசனை. :lol:

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட ,அப்ப நிலாவுக்கே மதுரன் காதல் மடல் கொடுத்தவர். பொடியன் பயமில்லாமல் நேர குடுத்திட்டார்.நானென்டால் தாரணிட்டக் கொடுத்து நிலாட்டக்  குடுக்கச் சொல்லியிருப்பன். எதுக்கும் நிலா மறுத்தாலும் , தாரணி  ஆறுதலாய் இருப்பா ...! :lol::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல் முயற்சி,

என் பள்ளிக்கூட நாட்கள் கண்முன் வந்து போனது உண்மை.
இதோ என் மனத்தில் பட்ட சில கருத்துக்களை பகிர்கின்றேன்.
  • கதை களம் பற்றிய சிறு வர்ணனைகள் இருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். (ஊர், கிராமம், சந்தி, பெட்டிக்கடை, இயக்க நோடீஸ், மதில், சங்கக்கடை, மதகு, கோயில் மண்டபம், வெளிவீதி, கிணற்றடி, மூலகுடா, நந்தினி அக்கா, சொக்கலிங்கத்தார், பவழம் ஆச்சி, சின்னப்பொடி, சைக்கிள் கடை, பொட்ட நாய்...
  • கதையை சிறுக சிறுக சொல்லலாம். (3 - 4) பந்தியாக இருந்தால் கதையை பல கோணங்களில் யோசித்து திருப்பங்கள் கொண்டு வரலாம்.
  •  சிறு சம்பாஷனைகள் , உரையாடல்கள் எமக்கே உரிய வட்டார/ பிராந்திய மொழி சார்ந்து இருத்தல்.

மற்றும் படி எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள்.

உங்கள் அபிமான வாசகன்

சசி வர்ணம் :)

 

Link to comment
Share on other sites

"பதினாறு வயது என்பது எல்லோருக்கும் ஒரு அழகைக் கொடுக்கும் வயதுதான். இளம் காளையர்கள் எல்லாம் நின்று திரும்பிப் பார்க்கும் வயது. நின்று திரும்பிப் பார்க்கத் துணிவற்றவர்கள் கூட பதினாறு வயது மங்கையைக் கண்டால் கடைக்கண்ணால் தன்னும் பார்த்துக்கொண்டு போகும் அழகு. இயற்கையான அழகு இல்லாதவர் கூட அந்த வயதுக்கான ஒரு தளதளப்பில் ஒரு மினுக்கத்தில் அழகாகத் தெரிவர். தூக்கக் கலக்கத்தில் அவர்களைப் பார்த்தாலும் கூட அழகாகத்தான் தோன்றும்"

 

 

இப்படி எத்தனை கதைகளில் எழுதுவீர்கள்? படிக்க அலுப்படிக்கின்றது. சரி இதைவிட்டால், கதை நன்றாக இருக்கின்றது, தொடருங்கள் இணைப்பை கொடுத்தால் நன்று

 

http://www.yarl.com/forum3/index.php?showtopic=136917

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் பிறந்தநாள் தொடக்கம் கட்டையில் போகும்வரை அழகாய்தான் இருப்பாங்கள் :D ....16 வயசு வரும்வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை....கதை நன்றாக செல்லுகின்றது தொடர் தொடர வாழ்த்துக்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதையின் ஆரம்பத்துக்கு ஒரு 'பிள்ளையார் சுழி' மாதிரிப் போடுவீங்கள் எண்டு பாத்தால், நீங்கள்'வங்காள விரிகுடாக் கடல் சுழி' மாதிரி ஒரு பெரிய சுழியாப் போட்டிட்டுப் போயிரிக்கிறீங்கள்! :o 

 

பெண் வாடையே தெரியாமல், ஆம்பிளைப்பிள்ளையளின்ர பள்ளிக்கூட விடுதியின் சிறைக்கூடங்களில் வளர்ந்தவர்களால் எப்படித் தொடர முடியும் என்னும் தயக்கம் இருந்தாலும், தொடரத் தானே வேணும்! :D 

 

இருந்தாலும் நம்ம நெடுக்கர் 'காதலைப்பற்றி' எவ்வளவு அழகாக எழுதுகிறார்?

 

அவரெல்லாம் காதலித்துப் பார்த்தா எழுதுகின்றார்?

 

அவரைப் போல நானும் எழுதலாம் எனும் நம்பிக்கையைக் கையில் இறுகப்பிடித்தபடி இருக்கிறேன்! :icon_mrgreen:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெடியள் பிறந்தநாள் தொடக்கம் கட்டையில் போகும்வரை அழகாய்தான் இருப்பாங்கள் :D ....16 வயசு வரும்வரை காத்திருக்க வேண்டிய தேவையில்லை....கதை நன்றாக செல்லுகின்றது தொடர் தொடர வாழ்த்துக்கள்

 

பெடியள் அழகோ ???? அதை நாங்கள் எல்லோ சொல்ல வேணும். ஒரு இருபத்தைந்துக்குப் பின்தான் ஆண்கள் பார்க்கக் கூடியவாறு இருப்பது. :lol:

 

Link to comment
Share on other sites

படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! :wub:

 

எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!.  :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! :wub:

 

எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!.  :o

 

போதும் போதும் பயம் வேண்டாம் :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

நல் முயற்சி,

என் பள்ளிக்கூட நாட்கள் கண்முன் வந்து போனது உண்மை.
இதோ என் மனத்தில் பட்ட சில கருத்துக்களை பகிர்கின்றேன்.
  • கதை களம் பற்றிய சிறு வர்ணனைகள் இருந்தால் இன்னும் சுவாரஷ்யமாக இருக்கும். (ஊர், கிராமம், சந்தி, பெட்டிக்கடை, இயக்க நோடீஸ், மதில், சங்கக்கடை, மதகு, கோயில் மண்டபம், வெளிவீதி, கிணற்றடி, மூலகுடா, நந்தினி அக்கா, சொக்கலிங்கத்தார், பவழம் ஆச்சி, சின்னப்பொடி, சைக்கிள் கடை, பொட்ட நாய்...
  • கதையை சிறுக சிறுக சொல்லலாம். (3 - 4) பந்தியாக இருந்தால் கதையை பல கோணங்களில் யோசித்து திருப்பங்கள் கொண்டு வரலாம்.
  •  சிறு சம்பாஷனைகள் , உரையாடல்கள் எமக்கே உரிய வட்டார/ பிராந்திய மொழி சார்ந்து இருத்தல்.

மற்றும் படி எல்லோரும் சேர்ந்து ஒரு கலக்கு கலக்குங்கள்.

உங்கள் அபிமான வாசகன்

சசி வர்ணம் :)

 

 

கருத்துக்கும் வரவுக்கும் நன்றி சசி. ஒவ்வொருவர் எழுதுவதும் ஒவ்வொருமாதிரி இருப்பதுதானே. எனக்கென்னவோ உந்த வர்ணனைகள் பிடிப்பதில்லை. மற்றவர்கள் நீங்கள் கூறியதை பார்ப்பார்கள் தானே. காத்திருங்கள்.

வருகைதந்த கருத்துக்கள் கூறிய உறவுகள் அனைவருக்கும் நன்றி.

அட ,அப்ப நிலாவுக்கே மதுரன் காதல் மடல் கொடுத்தவர். பொடியன் பயமில்லாமல் நேர குடுத்திட்டார்.நானென்டால் தாரணிட்டக் கொடுத்து நிலாட்டக்  குடுக்கச் சொல்லியிருப்பன். எதுக்கும் நிலா மறுத்தாலும் , தாரணி  ஆறுதலாய் இருப்பா ...! :lol::)

 

உப்பிடித்தான் நடந்திருக்குப் போல :lol:

Link to comment
Share on other sites

காதல்கதையென்றபடியால் வாசகர்களையும் கவரும் கதையாக செல்லும். முதல் அத்தியாயம் சுமேயக்காவின் வளமையான காதல் ததும்பும் நினைவுகளைக் கொண்டு ஆரம்பித்திருக்கிறது. அடுத்த ஆளெப்ப ? கெதியில எழுதி முடிச்சிடுங்கோ மனிசரை காக்க வைக்காமல். 
 
இந்தக் கதையை எழுதி முடிய நூலுருவாக கொண்டு வரலாம். யாழில் எழுதப்பட்ட ஒரு வித்தியாசமான பதிவாகவும் செய்யலாம்.

சுமாரானவர்களைச் சுழட்ட நிறையப் பேர் அலைகின்ற ஊராக இருக்கின்றதே! இந்த ஊரில் காக்கைகள்தான் கிளிகளோ :lol:

காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு அதுமாதிரிதான் காதலிலும். :lol: காதலுக்கு கண் இல்லையென்று இதாலை சொல்லிச்சினமோ தெரியேல்ல.


படம்காட்டும் அந்த நிலாவுக்கு எந்த பியூட்டிபாலரிலை மேக்கப் போட்டது.? மெழுகு பூசினமாதிரி நிலாவைவிடவும் பளபளப்பாக ஒளிருதே..!! :wub:

 

எனது பேனா கிறுக்குவதற்கு நிலவு ஒளி போதுமா? பார்க்கலாம்!!.  :o

இப்பதானே குறைந்த மின்சாரத்தில் கூடிய ஒளியைப்பெறக்கூடிய வசதிகள் இருக்கிறது நீங்கள் யோசிக்காமல் பேனையை எடுங்கோ. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதியை புங்கையூரன் தருகின்றார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பகுதியை புங்கையூரன் தருகின்றார்.

புங்கை அடுத்த பகுதியை, உங்கடை கதைக்குக் கீழையே 'தந்திட்டார்' ! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி  புங்கையண்ணா

அந்தமாதிரி

பல  மைல் கீழிறங்கி  யோசித்தள்ளீர்கள்

அந்த நாளைய  ஆட்டங்களின் மீள்  ஓட்டம் போலும்

 

தொடருங்கள்

புங்கையண்ணா

இன்னும் மேலே தள்ளி  மெருகூட்டியுள்ளார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் நாள் கதை எழுதும்போது ஒரு கதையாகவே எழுதினேனே தவிர பழையன பற்றி நினைக்கவே இல்லை. புங்கை எழுதியதாய் வாசிக்க பழசுகள் நிறைய ஞாபகம் வந்திட்டுது. சிரிச்சு வயிறு நொந்துபோச்சு. இன்னும் கொஞ்சம் எழுதியிருக்கலாம் புங்கை. அவ்வளவு ரசனையாய் எழுதியிருக்கிறீர்கள் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கை அண்ணா இது கவிதையா கதையா என்று என் மனம் விவாதிச்சே ஒரு மணி நேரம் ஓடிவிட்டது. அவ்வளவு 'கவித்துவமாக' இருக்கிறது உங்கள் கதை.

உங்கள் உவமானங்கள் 'சனிக்கிழமை காகம்', 'காளீ பக்தன்', 'யாழ்ப்பாணத்து காவோலைகள்', 'படிப்பு சோறு ' உங்கள் கதையை எங்கையோ கொண்டு செல்கின்றன.

இந்த கதை முடியக்கூடாது என்று, சிறுவயதில் ஒரு ரூபாய்க்கு வாங்கிய 100 'பல்லி முட்டை' இனிப்பை ஒவ்வொன்றாக சாப்பிடுவது போல என் மனம் ஏங்கியது.

தொடரும் என்று கண்ட போது, சூப்பி முடிந்த 50 சத ஐஸ்பழம் வாயிலே இனிக்க 'தடியை நக்கி கொள்ளும்' மனசைப்போல ஆகிவிட்டது என் மனசு.

நன்றிகள் உங்கள் 'அருமையான' எழுத்துக்கும் நேரத்துக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கலக்கிட்டீங்கள் புங்கை....! அடுத்தது யார்....எப்ப...எப்ப...! ஸ் ஸப்பா.! :D

Link to comment
Share on other sites

சுமோக்காவும் புங்கையூரான் அண்ணாவும் நன்றாக எழுதியுள்ளீர்கள். கதை நன்றாக செல்கின்றது. அடுத்த அத்தியாயத்திற்காக காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

கதையை நகர்த்தும் விதம் மிக அழகு. கெதியாய் தொடருங்கள்,  வாசிக்க மிக ஆவல்!!  :)

 

 

Link to comment
Share on other sites

புங்கையூரன், கதை நன்றாக உள்ளது. பாராட்டுகள்!!  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பூங்கையூரான் .. பிரமாதம்..

’பிள்ளை, ஏலுமெண்டால் தாரணியையும் கூட்டிக்கொண்டு போவன்...ஆமிக்காரரும் அதுவுமா ஊரெல்லாம் கெட்டுப் போய்க்கிடக்குது...’ ..கதையின் பாதையை மாற்றக்கூடிய  வரிகளை பதிந்து இருக்கிறீர்கள் ~ Action starts here; is it?

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
    • வாழ்த்துக்கள். போராடிய நளினிக்கு பாராட்டும் வழக்கறிஞர் ராய்க்கு நன்றியும். ஏனைய 1.7.86 க்கு முன் பிறந்த அனைவரும் விரைவில் இந்திய குடியுரிமையை பெற வேண்டும்.
    • போட்டியில் கலந்துகொண்ட @goshan_che வெற்றிபெற வாழ்த்துக்கள்😃 இன்று LSG நன்றாக விளையாடியதை வைத்து கணித்திருக்கின்றீர்கள் போலிருக்கு😃 மூன்றாவது கேள்விக்கான பதிலை PBKS என்று எடுத்துக்கொள்கின்றேன்!   இதுவரை போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.