Jump to content

இலங்கையில் இன்றிரவு முதல் எரிபொருட்களின் விலை அதிகரிப்பு.


Recommended Posts

இலங்கையில் உள்ள இந்திய ஒயில் நிறுவனம் இன்றிரவு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இதுவரை 98ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒருலீற்றர் பெற்றோலின் விலை 105 ரூபாவாக அதிகரிக்க வுள்ளது

66 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு லீற்றர் டீசல் இன்று இரவு முதல் 71 ரூபாவாக அதிகரிக்க உள்ளது. உலக சந்தையில் மசகு எண்ணையின் விலை அதிகரித்துள்ளதால் விலைகளை அதிகரிக்க நேர்ந்ததாக இந்தியாவின் ஒயில் நிறுவனமான ஐ.ஓ.சி குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் 5 ரூபாவினால் எரிபொருள் விலையை அதிகரிக்க உள்ளது. இதனடிப்படையில் பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு சொந்தமான எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் ஒரு லீற்றர் பெற்றோல் 101 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளதுடன் ஒரு லீட்டர் டீசல் 69 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட உள்ளது.

அத்துடன் 45 ரூபா 50 சதத்திற்கு விற்பனை செய்யப்படும் மண் எண்னை லீட்டர் ஒன்றின் விலை 71 ரூபாவாக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விலைகள் விரைவில் நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளதாக கனிய எண்ணைவள அபிவிருத்தி அமைச்சர் ஏ.எச்எம்.பௌசி தெரிவித்தார்.

http://sankathi.org/news/index.php?option=...id=290&Itemid=1

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.