Jump to content

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

உடலை அழகாக வைத்துக்கொள்ள யாருக்குத்தான் ஆசை இல்லை. ஆனால் இந்தப் பாழாய்ப்போன மனம் இருக்கிறதே அதுதான் எல்லோருக்கும் பெரிய பிரச்சனை. பல இடங்களில் இந்த எழு நாள் டயட் ஓடித் திரிய சரி எல்லாம் செய்து பாத்தாச்சு இதை மட்டும் ஏன் விடுவான் என எண்ணி செய்வதென முடிவெடுத்தேன்.

 

முதல் நாள் தனியப் பழங்கள். பழங்கள் உண்பது என்பது எனக்கு பிடிக்கவே பிடிக்காத விடயம். அதுவும் குளிர் காலத்தில. சரி தொடங்கியாச்சு என்று முதல் நாள் காலையில வெறும் வயிற்றில் உண்டது வாழைப்பழம். காலையில் எழு மணிக்கு காலை  உணவை தொடர்ந்து உண்டுவந்த எனக்கு வாழைப்பழம் ஒரு மணிநேரம் கூடத் தாங்கவில்லை. அடுத்தது எதை உண்ணலாம் என்று எண்ணிவிட்டு தோடம்பழத்தை எடுத்து உரித்தால் அது கொஞ்சம் புளி. வேறு வழியில்லை என அதை மருந்து உண்பதாக எண்ணி மிண்டி விழுங்கியாயிற்று.

 

வீட்டில் அன்று மீன்குழம்பு, பொரியல் என எனக்குப் பிடித்த உணவு. மதியம் கணவர் உண்ணும்போது வாசம் மூக்கைத் துளைக்க கண்டறியாத டயட். பேசாமல் சாப்பிடுவோமா என எண்ணி ஐயோ சரியா பசிக்குதப்பா எந்தன். மனிசன் கொஞ்சம்கூட இறக்கம் காட்டாமல் தொடங்கிவிடாய். மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு இரு இன்னும் ஆறரை நாள்த்தானே என்று சொல்ல அதை மீறிச் சாப்பிட ரோசம் இடம் குடுக்கேல்ல. நான் என்ன இருக்கமாட்டன் எண்டு நினைச்சியளோ எண்டு வீறாப்பாச் சொல்லிவிட்டு வேறு பழங்கள் வாங்கி வரலாம் என்று எம்மூர்காரரின் கடைக்குப் போனால் பக்கத்தில சாப்பாட்டுக் கடை. சாப்பாட்டுமணம் முக்கியமா வடை, ரோல்ஸ். ஏன் கடைக்கு வந்தான் என்று ஆகிவிட்டது. எதுக்கும் ஒரேயொரு வடை அல்லது ரோல்ஸ்சை வாங்கிச் சாப்பிடுவமோ என்றும் மனம் அலைபாய இதுக்கு மிஞ்சியும் அங்கே நிண்டால் ஆபத்து என்று பப்பாப்பழம், மாம்பழம், கப்பல் வாழை, பேரீச்சம்பழம். விளாம்பழம் எண்டு எல்லாவற்றையும் வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வந்தால் சரஸ்வதிபூசையோ இண்டைக்கு எண்டு கேட்கிறாள் மகள்.

 

அவ்வளவு பழங்களையும் பாத்திட்டு உதிலும்பாக்க நீ சாப்பாடே சாப்பிட்டிருக்கலாம் என்ற கணவரின் நக்கலைப் புறம்தள்ளிவிட்டு பலன்களை எல்லாம் வெட்டி பலச் சலாது செய்து உன்ன வெளிக்கிட வெறுமனையாக் கிடந்த வயிறு கொஞ்சம் சாப்பிடவே வயிற்றைப் புரட்டியது. இடைக்கிடை கிரீன் டீ, தேநீர் என்று குடித்தாலும் தண்ணீர் மட்டும் குடிக்கவே மனம் வரவில்லை. இரவு அவர்கள் பால் குடிக்கும்படி கூறவில்லை. ஆனால் எனக்கு அது குடித்தால்த்தான் நித்திரை வரும் போல் இருந்ததால் ஒரு கப் பாலைக் காச்சிக் குடித்துவிட்டுப் படுத்துவிட்டேன். அப்பாடா ஒருவாறு ஒருநாள் முடிந்துவிட்டது என்று பெரிய நின்மதியுடன் உடனே தூங்கியும் விட்டேன்.

Link to comment
Share on other sites

  • Replies 128
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

மிகுதி ஆறு நாட்களும் வெற்றிகரமாக முடிய என் வாழ்த்துக்கள். அடுத்து நான் தொடங்கலாம். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கந்தசஷ்டி, கெளரி காப்பு விரதம், பிள்ளையார் கதை என்று பல விரதங்கள் இருக்கின்றன. அவற்றைப் பிடித்தால் ஏனிந்த பொல்லாலை அடிச்சவேலை?

 

அதெல்லாம் அந்தக்காலம். எனக்கு ஒரு நேரம் பட்டினி இருந்தாலே தலை சுற்றும். வேளையில் மயக்கம் வந்தால் என்ன செய்வது என்ற பயத்தில் ஏழுமணிக்கே சாப்பிட்டுவிட்டுப் போய்விடுவேன்.

 

வருகைக்கு நன்றி நிலா அக்கா

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எதுக்கும் எட்டாம் நாள் கல்லறை டொட் கொம்மை பாத்திட்டு இறங்குவம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது மெலிவதற்கான வழியாத் தெரியேல்லை    :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனம் சாப்பாட்டுக்கு அலைபாய அலைபாய.... டயற்!

7 நாட்களின் பின் வெயிற் போட்டிருக்கா அல்லது வெயிற் குறைஞ்சிருக்கா எண்டு எழுதிவிடுங்கோ!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவம் கடந்து போகும், சுமே! :D

 

நான் எண்டால் தலைமயிர், அருந்தப்பில தப்பினதுடனேயே எல்லாத்தையும் விட்டிருப்பன்! :icon_mrgreen:

 

 ம்ம்ம்.............................விதியானப்பட்டது வலியது........அதை யாரும் வெல்ல முடியாது........!!! :icon_idea: 

 

இந்த ஏழு நாள் டயட்டில சொன்னதெல்லாம் பொய்யில்லே ........!!!

 

ஏழாவது நாள், என்ன நடக்கும் என்று அறிய ஆவல்....!

Link to comment
Share on other sites

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

ரண்டாம் நாளேயா
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

//எனது ழு நாள் டயட்//  தலைப்பு இப்படி இருக்க நான் பயந்து போனன். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகை தந்த  நந்தன், தமிழினி,சகாரா, குமாரசாமி, கறுப்பி,புங்கை, இசை,நெடுக்ஸ் ஆகிய உறவுகளே நன்றி.

Link to comment
Share on other sites

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

 

Link to comment
Share on other sites

பட்டினி கிடப்பது ஒரு விடயம்.. ஆனால் அது உடலில் சுரப்பிகளின் வேலைகளை குழப்பிவிடாமல் இருக்கக்கடவது..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D


இங்கு 

என்னிடம் வரும் வாடிக்கையாளர் ஒருத்தி

ஆபிரிக்க  பெண்

நல்ல  வடிவாக  இருப்பார்

பொதுநிறம்

நல்ல  உயரம்

அளவான உடம்பு

கொஞ்சம் வயிறு  பெருத்து இருக்கும்

 

போன  மாதம்

வயிற்றிலுள்ள  கொழுப்பை வெட்டி எடுக்கப்போனார்

திரும்பி  வரவே  இல்லை........... :(  :(  :(

நேற்று அவரது மரண  அறிவித்தல் பிரசுரத்தைக்காட்டி ஒருவர்  ஓலமிட்டு அழுதார் என்னிடம்  இது தேவையா என. :(  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த 7 நாள் உணவுக் குறைப்பு முறையினை 7 day cleansing என்று அழைப்பர். இது உடல் மெலிவதற்காக மட்டுமன்றி, சமிபாட்டு உறுப்புகளை ஒருக்கால் service செய்வதற்கும் இதனை கடைப்பிடிப்பர். இதில் முக்கியமானது மாச்சத்து உள்ள பொருட்களையும் கொழுப்பு பொருட்களையும் முற்றாகத் தவிர்ப்பது.  அதிலும் பழங்கள் சாப்பிடும் போது வாழைப்பழத்தினை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.

 

சுமே, முதல் நாளே வாழைப்பழத்தினை வெட்டி விட்டு பிறகு என்ன டயட் வேண்டிக் கிடக்கு? :icon_mrgreen:

 

அதில் வாழைப்பழத்தை உண்ணக்கூடாது என்று கூறவில்லையே

சரஸ்வதி பூசை வெற்றிகரமாக அமைய வாழ்த்துக்கள். :icon_mrgreen:

 

சரஸ்வதி பூசை எண்டால் இரவுமட்டும்தானே சாப்பிடலாம். ஆனால் இது எப்பவும் சாப்பிடலாமே.

வரவுக்கு நன்றி நிழலி, எழுமலை,விசுகு அண்ணா 

என்னப்பா  மிச்சத்தை காணவில்லை

 

மரண  அறிவித்தல்  பக்கம் :lol:

சி

காணவில்லை பகுதியில்  தேடுவமா?? :lol:  :D  :D

 

 

எப்பிடி எல்லாம் ஆசை சனத்துக்கு :lol:

 

 உந்த பால் பழங்களை விட ஏழுமிளகும் ஒருமுறடு தண்ணியும் இன்னும் நல்லாய் வேலை செய்யும்.  :D

 

ஏளென்ன பத்து மிளகு சாப்பிட்டே ஒண்டும் நடக்கேல்ல. :D

 

லண்டனில் இப்ப விடிஞ்சிருக்கும்.. ஆளின்ர சத்தத்தை இன்னும் காணேலல.. :wub:

 

அந்தளவு சீக்கிரம் போமாட்டம்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று கலை எழும்பியதும் பசிப்பதுபோல இருந்தது. ஆனால் வெற்றிகரமா ஒரு நாளைக் கடத்தியாச்சே என்று மகிழ்வும் கூட. பல்லுக்கூடத் தீட்டாமல் போய் நிறுத்தால் ஐம்பது கிராம் கூடக் குறையவில்லை. இவ்வளவு பழங்களையும் சாப்பிட்டா எப்பிடிக் குறையும் எண்டு மனட்சாட்சி கேட்க, பேசாமல் போய் காலைக் கடன்களை முடித்து குசினுக்குள்ள வந்தால், வழமைபோல தனிப்பாலில மூண்டு கரண்டி சீனி போட்டு ஒரு கோப்பி குடிச்சா எப்பிடி இருக்கும் என்று மனம் உந்த அதை அடக்கிவிட்டு இஞ்சி போட்டு பால் காச்சிக் குடிச்ச உடன கொஞ்சம் சந்தோசமா இருந்துது.

 

பால் குடிக்கச் சொல்லி டயட் பிளானில இல்லைத்தான். எண்டாலும் பால் நிறையுணவுதானே ஒண்டும் செய்யாது எண்டு மனதைத் தேத்திக் கொண்டன்.

இன்று முழுவதும் மரக்கறிவகை. அவிக்கலாம், சலாட் போடலாம், சூப் வைக்கலாம். ஆனால் எண்ணெய் ஒண்டும் சேர்க்கக் கூடாது. மரக்கறிதானே பிரச்சனை இல்லை என்று எண்ணியபடி பூக்கோவா, காளான், புறோகோழி, இவற்றை முக்காப் பதத்துக்கு அவித்து உப்பு மிளகுதூள் போட்டு காலை எட்டு மணிக்கு சாப்பிட்டன். பிறகு இடையில் இருதடவை கிரீன் டீ . பச்சைத்தண்ணீர் குடிக்க மனம் வரவே இல்லை. வில்லங்கத்துக்கு இரண்டு கப் சாடையாச் சூடாக்கிக் குடித்ததோட சரி. அதன்பின் அதை நினைத்தாலே வயிற்றைப் புரட்டியது.

 

மதியம் வீட்டில் சமைக்கவில்லை. ஆதலால் கணவருக்கும் பிள்ளைகளுக்கும் சைனீஸ் கடையில் உடோங் எடுத்தது. மனிசன் சாப்பிடும்போது மனத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டு என்பாட்டில் திரும்பிப் பாராமலும் எதுவும் சொல்லாமலும் கணனியில் மனதைச் செலுத்தியபடி இருந்திட்டன். மனிசன் பாவம் எண்டு நினைச்சுதோ அல்லது சீண்டிப் பாக்க நினைச்சுதோ கொஞ்சமா சாப்பிடன் எண்டார். கனக்கக் கதைக்காமல் வேண்டாம் எண்டு சொல்லிப்போட்டு இருந்திட்டன்.

 

மதியம் பன்னிரண்டுக்கு சலாட் ஒரு கோப்பை உண்ண நினைத்து அரைக் கோப்பைதான் உண்ண முடிந்தது. அதன்பின் ஒரு தேநீர் சீனி போட்டு. சாடையாத் தலை சுற்றுவதுபோல் இருந்தது. என் மனப்பிரமையா என்று புரியவில்லை. ஒரு இரண்டு மணிநேரம் தூங்கி எழுந்ததும் வசிறு மீண்டும் காலியானது. ஏதாவது வாய்க்குச் சுவையைக் குடிக்கவே வேண்டும் என மனம் அடம்பிடிக்க இரண்டு கரண்டி சீனி போட்டு நல்ல ஒரு கப்போசீனோ. ம் இப்பதான் திருப்தியாய் இருக்கு. இரவு புட்டு அவித்து கோழி இறைச்சி காச்சினது. பெரிய கொடுமைதான் காச்சிப்போட்டு சாப்பிடாமல் இருக்கிறது. சரி இன்னும் அஞ்சு நாள்த்தானே எண்டு மனதை சமாதானப் படுத்திக் கொண்டன். 

 

Link to comment
Share on other sites

தலை சுற்று வருமளவிற்கு டயட் பண்ணுவது நல்லது இல்லை. எதுக்கும் டாக்டரிடம் கேட்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே

உது உங்களுக்கு சரிவராது

பேசாமல் விட்டுட்டு

மனம் போல  சாப்பிட்டு  

அருமையான கணவன் :wub:

மனம்   போல  வாழுங்கள்.... :icon_idea:

மற்றவர்களுக்காக எதையும் செய்யாதீர்கள்.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் தான் தவறாக விளங்கியுள்ளீர்களோ என சந்தேகமாயுள்ளது சுமோ  நிழலி சொல்வது சரிதான் நாலாம் நாள்தான் வாழைப்பழம்.General Motors Weight Loss Diet Program இதையா பின்பற்றுகிறீர்கள் ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சுமோ,டயட் இருக்க வேண்டும்.உடம்பைக் குறைக்க வேண்டும் என்று நினைத்தது பாராட்டுக்குரியது தான்.ஆனாலும் இப்படி டயட் இருப்பதிலும் பார்க்க பேசாமல் இருக்கலாம் :D வழமையாக சாப்பிடுகின்ற சாப்பாட்டை குறைத்து,சாப்பாட்டோடு சேர்த்து நிறைய பழங்கள்,சலாட் சாப்பிடுங்கள்.ம்னதை அலைய விட்டு உடம்பை குறைக்க வேண்டும் என்டால் முடியாது என்பது என் கருத்து.
 
காலையில் வெறும் வயிற்றில் கிறீன் டீயில் தேசிக்காய் புளி சேர்த்து கடைசி 3 மாதமாவது குடியுங்கள்[உபயம் குட்டி] உடம்பு குறைந்தாலும் வயித்தை குறைக்க உடற்பயிற்சி செய்யுங்கோ :)  :icon_idea:
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • போட்டியில் கலந்துகொண்ட @nunavilan உம், இறுதி நிமிடத்தில் கலந்துகொண்ட @புலவர் ஐயாவும் வெற்றிபெற வாழ்த்துக்கள்😀      போட்டியில் இணைந்தவர்கள்: @பையன்26 @முதல்வன் @suvy @ஏராளன் @நிலாமதி @Ahasthiyan @ஈழப்பிரியன் @kalyani @கந்தப்பு @கறுப்பி @Eppothum Thamizhan @வாதவூரான் @கிருபன் @நீர்வேலியான் @goshan_che @nunavilan @புலவர்
    • இந்தப்பாட்டி காலத்தில் இணைய, முகநூல் வசதியிருந்திருந்தால் எப்படியிருந்திருக்கும்..... கற்பனை பண்ணிப்பார்க்கிறேன். சிறியர்... உங்களுக்கும்  கற்பனை பொறி தட்டியிருக்குமே..... அதை பகிருங்கள் காண ஆவலாக இருக்கிறேன்!
    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • இவர்களும் அவ்வப்போது நித்திரையால் எழும்பி கனவு கண்டவர்கள் போல்  குரலெழுப்பி விட்டு மறுபடியும் உறங்கு நிலைக்கு போய் விடுவார்கள். சேர்வதேச விசாரணை இல்லையென்று அடித்துக்கூறிவிட்டார் மாத்தையா, இவர்கள் காதுக்கு இன்னும் எட்டவில்லையோ செய்தி அலறித்துடிக்கிறார்கள். தேர்தலுக்காக இவர்களை யாராவது இயக்குகிறார்களா எனும் சந்தேகமாய் இருக்கு.
    • LSG vs CSK: லக்னௌ விரித்த வலையில் விழுந்த சிஎஸ்கே - ஆட்டத்தை முடித்த 3 விக்கெட் கீப்பர்கள் பட மூலாதாரம்,SPORTZPICS 2 மணி நேரங்களுக்கு முன்னர் வலிமையான பேட்டிங் வரிசை, பந்துவீச்சு பலம் இருந்தும் லக்னௌவின் தொடக்க வரிசையை அசைக்கக்கூட சிஎஸ்கே அணியால் முடியவில்லை. அதேநேரம், சிஎஸ்கே பேட்டர்கள் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக வியூகம் அமைத்து களத்தில் செட்டில் ஆகவிடாமல் லக்னெள அணி திட்டமிட்டுக் காலி செய்துள்ளது. சிஎஸ்கே அணியை கடினமாகப் போராடி லக்னெள அணி வீழ்த்தவில்லை. கனகச்சிதமான திட்டங்களை முன்கூட்டியே வகுத்து, எந்த பேட்டரை எப்படி வீழ்த்த வேண்டுமெனத் தீர்மானித்து தங்கள் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. ஆட்டத்தைப் பார்த்தபோது, லக்னெள அணியின் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங்கில் இருந்த ஒழுக்கம், கட்டுக்கோப்பு அனைத்தும் சிஎஸ்கே அணியில் மிஸ்ஸிங். தொடக்க வரிசை பேட்டர்களைகூட வீழ்த்துவதற்கு சிரமப்பட்டது, அதன்பின்பும் நெருக்கடி கொடுக்க முடியாமல் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளது. லக்னெள அணியின் 3 விக்கெட் கீப்பர்களான கேப்டன் கே.எல்.ராகுல், குயின்டன் டீ காக், நிகோலஸ் பூரன் ஆகிய 3 பேரும் சேர்ந்து ஒட்டுமொத்த சிஎஸ்கே அணியின் ஆட்டத்தை முடித்துவிட்டனர். லக்னெளவில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 34வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது லக்னெள சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி.   பட மூலாதாரம்,SPORTZPICS முதலில் பேட் செய்த சிஎஸ்கே அணி 6 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்தது. 177 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய லக்னெள அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 2 விக்கெட்டுகளை இழந்து 180 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், லக்னெள அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்வி என 8 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருக்கிறது. 8 புள்ளிகள் பெற்றாலும் நிகர ரன்ரேட்டில் 0.123 என்று குறைவாகவே இருக்கிறது. அடுத்தடுத்த போட்டிகளில் பெறும் வெற்றி நிகர ரன்ரேட்டை உயர்த்தும். அதேநேரம், சிஎஸ்கே அணி 7 போட்டிகளில் 4 வெற்றி, 3 தோல்விகள் என 8 புள்ளிகளுடன் 3வது இடத்தில் நீடிக்கிறது. சிஎஸ்கே அணியின் நிகர ரன்ரேட் வலுவாக இருப்பதால், 0.529 எனத் தொடர்ந்து 3வது இடத்தைத் தக்க வைத்துள்ளது. லக்னெள அணியின் வெற்றிக்கு கேப்டன் கே.எல்.ராகுல்(82), டீகாக்(54) முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் சேர்த்து வலுவான அடித்தளம் அமைத்து, இதுதவிர கேப்டனுக்குரிய பொறுப்புடன் கே.எல்.ராகுல் பேட் செய்து 82 ரன்கள் சேர்த்தது முக்கியக் காரணங்களில் ஒன்று. இரு பேட்டர்களும், சிஎஸ்கே பந்துவீச்சாளர்கள் செட்டில் ஆவதை அனுமதிக்காமல் ஷாட்களை அடித்து அழுத்தம் கொடுத்து வந்தனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே எப்போதுமே நன்றாகப் பந்துவீசக் கூடியது. இதைத் தெரிந்து கொண்டு ராகுல், டீகாக் நடுப்பகுதி ஓவர்கள் யார் வீசினாலும் அந்த ஓவர்களை குறிவைத்து அடித்ததால், சிஎஸ்கேவின் அந்த உத்தியும் காலியானது. லக்னெள ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு சென்ற ராகுல், டீகாக் ஒரு கட்டத்தில் கவனக் குறைவால் விக்கெட்டை வீழ்த்தினர் என்றுதான் சொல்ல வேண்டும். சிஎஸ்கே பந்துவீச்சு சிறப்பாக இருந்தது எனக் கூறுவது சரியானதாக இருக்க முடியாது. குறிப்பிடப்பட வேண்டிய அம்சமாக, சிஎஸ்கே அணிக்காக லக்னெள அணி “ஹோம் ஓர்க்” செய்து முன்கூட்டியே திட்டமிட்டுக் களமிறங்கியது. அந்தத் திட்டங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்தியது வெற்றிக்கு முக்கியக் காரணம். ஏனென்றால், லக்னெள அணியின் சரியான திட்டமிடலால்தான், 90 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து சிஎஸ்கே அணி தடுமாறியது. கடைசி 4 ஓவர்களில் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகப் பந்துவீசியிருந்தால், சிஎஸ்கே அணி 120 ரன்களில் சுருண்டிருக்கும். மொயீன் அலியை ஹாட்ரிக் சிக்ஸ் அடிக்க அனுமதித்தது, தோனியின் கடைசி நேர கேமியோ ஆகியவை சிஎஸ்கே ஸ்கோரை உயர்த்தியது. ஒட்டுமொத்தத்தில் சிஎஸ்கேவுக்கு எதிராக லக்னெள அணி செயல்படுத்திய திட்டங்களை சிஎஸ்கே பேட்டர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.   பதிலடி கொடுத்த ராகுல்-டீகாக் பட மூலாதாரம்,SPORTZPICS இந்த ஐபிஎல் சீசனில் லக்னெள தொடக்க ஆட்டக்காரர்கள், டீ காக், கே.எல்.ராகுல் இருவரும் பவர்ப்ளே ஓவர்களை சரியாகப் பயன்படுத்தவில்லை, பவர்ப்ளே ஓவர்களுக்குள் ஆட்டமிழந்து விடுகிறார்கள், விரைவாக ரன்களை சேர்ப்பதில்லை என்ற விமர்சனங்கள் எழுந்தன. கடந்த 6 ஆட்டங்களில் பெரும்பாலும் நிகோலஸ் பூரனின் அதிரடியால்தான் பெரிய ஸ்கோர் கிடைத்தது என்று கிரிக்கெட் விமர்சகர்கள் விமர்சித்தனர். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் கே.எல்.ராகுல், டீகாக் இருவரும் அந்த விமர்சனங்களுக்குப் பதிலடி கொடுத்தனர். முதல் விக்கெட்டுக்கு 134 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். 10.5 ஓவர்களில் இருவரால் லக்னெள அணி 100 ரன்களை தொட்டது. கே.எல்.ராகுல் அதிரடியாக பேட் செய்ய, டீகாக் வழக்கத்துக்கு மாறாக மிகவும் நிதானமாக தேவையான ஷாட்களை மட்டும் ஆடினார். ராகுல் ஷார்ட் பால் வீசப்பட்டால் நம்பிக்கையுடன் பிக்-அப் ஷாட்களை ஆடி சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்து வாங்கினார். குறிப்பாக பதீராணா பலமுறை யார்கர் வீச முயன்றும் ராகுல் அவர் பந்துவீச்சை நொறுக்கினார். தீபக் சஹர் வீசிய 2வது ஓவரிலிருந்தே ராகுல் பவுண்டரிகளாக விளாசத் தொடங்கி, மிட்விக்கெட்டில் சிக்ஸரும் அடித்து சிஎஸ்கேவுக்கு அதிர்ச்சி அளித்தார். முஸ்தபிசுர் ரஹ்மான் பந்துவீச வந்தபோதும் அவரையும் ராகுல் விட்டு வைக்கவாமல் பவுண்டரிகளாக விளாசினார். பட மூலாதாரம்,SPORTZPICS பவர்ப்ளேவில் 5வது, 6வது ஓவரில் ராகுல், டீகாக் இருவரும் இணைந்து சிஸ்கர், பவுண்டர்களாக விளாசியதால் விக்கெட் இழப்பின்றி பவர்ப்ளேவில் லக்னெள 54 ரன்கள் சேர்த்தது. ஜடேஜா வீசிய 9வது ஓவரில் டீ காக் அடித்த ஷாட்டை ஷார்ட் தேர்டு திசையில் இருந்த பதீராணா எளிமையான கேட்சை பிடிக்கத் தவறவிட்டார். இந்த கேட்ச் தவறவிட்டதற்கான விலையை கடைசியில் சிஎஸ்கே கொடுக்க நேர்ந்ததது. ஜடேஜாவின் அடுத்த ஓவரில் டீகாக் பவுண்டரியும், ராகுல் பவுண்டரியும் விளாசி, ராகுல் 31 பந்துகளில் அரைசதத்தை எட்டினார். நிதானாமாக ஆடிய டீகாக் 41 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரையும் பிரிக்க முடியாமல் கேப்டன் கெய்க்வாட், தோனி இருவரும் பல பந்துவீச்சாளர்களை மாற்றிப் பயன்படுத்தியும் ஒன்றும் நடக்கவில்லை. முஸ்தபிசுர் வீசிய 15வது ஓவரின் கடைசிப் பந்தில் ஸ்லோ பவுன்ஸரை அடிக்க முற்பட்டு, டீகாக் தேவையின்றி தனது விக்கெட்டை இழந்தார். அடுத்ததாக, பதீராணா பந்துவீச்சில் ராகுல் அடித்த ஷாட்டில் பேக்வேர்ட் பாயின்ட் திசையில் ஜடேஜா அற்புதமான கேட்சை பிடித்தார். இரு விக்கெட்டுகள் விழுந்ததால் சிஎஸ்கே ஏதேனும் மாயம் செய்யும் என ரசிகர்கள் நினைத்தனர். ஆனால், நிகோலஸ் பூரன், ஸ்டாய்னிஷ் ஜோடி அதற்கு இடம் அளிக்கவில்லை. அதிலும் நிகோலஸ் பூரன் ஒரு சிக்ஸர், 3 பவுண்டரிகள் அடித்து சிஎஸ்கே திட்டத்தை உடைத்தெறிந்தார். பூரன் 22 ரன்களிலும், ஸ்டாய்னிஷ் 7 ரன்களிலும் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தனர்.   கட்டுக்கோப்பான பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள அணியின் பந்துவீச்சு நேற்றைய ஆட்டத்தில் நேர்த்தியாகவும், கட்டுக்கோப்பாகவும் இருந்தது. யாஷ் தாக்கூர், மோசின்கான், ரவி பிஸ்னோய் 3 பேரும் கடைசி 4 ஓவர்களில்தான் ரன்களை வழங்கினர். மற்ற வகையில் தொடக்கத்தில் சிஎஸ்கே பேட்டர்களுக்கு கொடுத்த நெருக்கடியை விடாமல் பிடித்துச் சென்றனர். நடுப்பகுதி ஓவர்களில் சிஎஸ்கே பேட்டர்கள் விஸ்வரூபம் எடுக்கலாம் என்பதைக் கருதி, குர்ணல் பாண்டியா, ரவி பிஸ்னோய், ஸ்டாய்னிஷ், மாட் ஹென்றி, என வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலவையாக பந்துவீசி பேட்டர்களை செட்டில் ஆகவிடாமல் தடுத்தனர். இந்த சீசனில் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாக பேட் செய்து வரும் ஷிவம் துபே விக்கெட்டை ஸ்டாய்னிஷ் எடுத்துக் கொடுத்தார். ரூ.8 கோடிக்கு வாங்கப்பட்ட உ.பி. வீரர் சமீர் ரிஸ்வியை பிஸ்னோய் பந்துவீச்சில் ராகுல் ஸ்டெம்பிங் செய்து வெளியேற்றி கட்டுக்கோப்பாகக் கொண்டு சென்றனர். இதனால் பவர்ப்ளே ஓவர்களில் சிஎஸ்கே அணி விக்கெட்டுகளை இழந்து 51 ரன்கள் சேர்த்த நிலையில், அடுத்த 10 ஓவர்களில் 62 ரன்கள் மட்டுமே சேர்த்தது. 7வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை சிஎஸ்கே அணி 36 ரன்கள் மட்டுமே சேர்த்தது. அதில் ஒரு பவுண்டரிகூட அடிக்கவிடாமல் லக்னெள பந்துவீச்சாளர்கள் துல்லியமாகவும், நெருக்கடி தரும் விதத்திலும் பந்துவீசினர். நடுப்பகுதி 10 ஓவர்களில் 5 ஓவர்களை ரவி பிஸ்னோய், குர்ணல் பாண்டியா இருவரும் பந்துவீசி 29 ரன்கள் மட்டுமே கொடுத்தனர். அதிலும் செட்டில் ஆன பேட்டர் ரஹானே விக்கெட்டையும் குர்ணல் பாண்டியா வீழ்த்தினார்.   ஹோம் ஓர்க் செய்ததன் பலன் பட மூலாதாரம்,SPORTZPICS லக்னெள பந்துவீச்சு குறித்து கேப்டன் ராகுல் கூறுகையில், “சிஎஸ்கே போன்ற வலிமையான அணியை எதிர்கொள்ள நாங்கள் திட்டமிட்டுக் களமிறங்கினோம். எங்கள் திட்டங்களைச் சிறிதுகூட தவறுசெய்யாமல் செயல்படுத்தினோம். எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாத வகையில் பந்துவீச வேண்டும் என முடிவு செய்தோம். அதற்கு ஏற்றார்போல் நடுப்பகுதியில் சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என மாறி, மாறி பந்துவீசி, ஒரு பந்துவீச்சுக்கு பேட்டர் செட்டில் ஆகாமல் தடுத்தோம். எங்கள் திட்டங்களுக்குத் தக்க வகையில் ஆடுகளம் இருந்தது, சிஎஸ்கே பேட்டர்களும் அதற்கேற்ப எதிர்வினையாற்றியதால் எளிமையாக முடிந்தது. என்ன விதமான உத்திகளைக் கையாள்வது, பந்துவீசுவது, எவ்வாறு பேட் செய்வது, என்பதை முன்கூட்டியே ஆலோசித்து, ஹோம் ஓர்க் செய்துதான் களமிறங்கினோம். வேகப்பந்துவீச்சு, சுழற்பந்துவீச்சு எனக் கலந்து பயன்படுத்த வேண்டும், குறிப்பாக சிஎஸ்கேவின் எந்த பேட்டரையும் செட்டில் ஆகவிடாமல் பந்துவீச முடிவு செய்தோம். ஒவ்வொரு வீரரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். குறிப்பாக பந்துவீச்சாளர்கள் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட பணியை சிறப்பாகச் செய்தனர். இல்லாவிட்டால், அணி ஒட்டுமொத்தமாக வீணாகியிருக்கும். திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்தினோம், தீவிரமாகப் பயிற்சி எடுத்ததன் பலன் கிடைத்தது,” எனத் தெரிவி்த்தார்.   சிஎஸ்கே சறுக்கியது எங்கே? பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியின் மோசமான தொடக்க பேட்டர்கள், நடுப்பகுதி பேட்டர்களின் சொதப்பல், பல் இல்லாத பந்துவீச்சு, மோசமான ஃபீல்டிங் ஆகியவை தோல்விக்கான காரணங்கள். ரச்சின் ரவீந்திரா முதல் இரு போட்டிகளைத் தவிர வேறு எந்த ஆட்டத்திலும் ஜொலிக்கவில்லை. கான்வே இல்லாத வெற்றிடத்தை சிஎஸ்கே நன்கு உணர்கிறது. ரஹானே இதுவரை தொடக்க ஆட்டக்காரராக களமிறங்காத நிலையில் இப்போது வழங்கப்பட்டிருக்கும் பணியால் புதிய பந்தில் பேட் செய்ய முடியாமல் திணறுவது தெரிகிறது. புதிய பந்து நன்றாக ஸ்விங் ஆகும்போது, அதை டிபெண்ட் செய்து ஆடுவதற்கே ரஹானே முயல்கிறாரே தவிர, பவர்ப்ளேவுக்கு ஏற்றார்போல் அடித்து ஆட முடியவில்லை. ஆக சிஎஸ்கே அணியின் தொடக்க வரிசை சிக்கலில் இருக்கிறது. கேப்டன் கெய்க்வாட் நேற்றைய ஆட்டத்தில் ஆங்கர் ரோல் எடுக்காமல் 17 ரன்னில் யாஷ் தாக்கூர் பந்துவீச்சில் அவுட்ஸ்விங்கில் எட்ஜ் எடுத்து ஆட்டமிழந்தது பெரிய பின்னடைவு. பவர்ப்ளே ஓவர்களுக்குள் 51 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது, அடுத்த 31 ரன்கள் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது என சிஎஸ்கே பேட்டர்கள் ஒட்டுமொத்தமாகத் தவறு செய்தனர். பட மூலாதாரம்,SPORTZPICS ஜடேஜா 4வது வீரராக களமிறக்கப்பட்டாலும், அவர் சிங்கில், 2 ரன்கள் எடுக்கத்தான் முக்கியத்துவம் அளித்தாரே தவிர, பவுண்டரி, சிக்ஸருக்கு பெரிதாக முயலவில்லை. டி20 போட்டிகளில் பவுண்டரி, சிக்ஸர்தான் அணியின் ஸ்கோரை பெரிதாக உயர்த்தும், ரன்ரேட்டை குறையவிடாமல் கொண்டு செல்லும். அதைச் செய்ய ஜடேஜா, மொயீன் அலி தவறிவிட்டனர். நடுப்பகுதி ஓவர்களில் மொயீன் ஜடேஜா களத்தில் இருந்தபோதிலும் 7வது ஓவரில் இருந்து 13வது ஓவர்கள் வரை ஒருபவுண்டரிகூட சிஎஸ்கே அடிக்காதது ரன்ரேட்டை கடுமையாக இறுக்கிப் பிடித்தது. ஜடேஜா ஆங்கர் ரோல் எடுத்து 34 பந்துகளில் அரைசதம் அடித்தாலும், அவரிடம் இருந்து தேவையான பவுண்டரிகள், சிக்ஸர்கள் அரிதாகவே வந்தன. மொயீன் அலி தொடக்கத்தில் நிதானமாக ஆடி கடைசி நேரத்தில் பிஸ்னோய் ஓவரில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து 30 ரன்களில் ஆட்டமிழந்தார். சிஎஸ்கே அணியில் நேற்று ஜடேஜா, மொசின் அலி என இரு சுழற்பந்துவீச்சாளர்கள் இருந்தும் ஜடேஜாவுக்கு மட்டுமே வாய்ப்பு கிடைத்தது. மொசின் அலி ஒரு ஓவர் வீசி 5 ரன்கள் என சிறப்பாகப் பந்துவீசியும் தொடர்ந்து வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், சுமாராகப் பந்துவீசிய தேஷ்பாண்டே, முஸ்தபிசுர் இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்புகள் வழங்கப்பட்டன. மொசின் அலிக்கு கூடுதலாக சில ஓவர்கள் வழங்கி இருக்கலாம்.   பல் இல்லாத பந்துவீச்சு பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே அணியில் முஸ்தபிசுர் ரஹ்மானை தவிர மற்ற பந்துவீச்சாளர்கள் அனைவரும் பேட்டர்களுக்கு நெருக்கடி தரும் அளவுக்கு அனைத்து ஆடுகளங்களிலும் துல்லியமாகப் பந்துவீசுவோர் அல்ல. பந்துவீச்சில் வேரியேஷன், ஸ்லோ பவுன்ஸர்கள், நக்குல் பால், ஷார்ட் பால், பவுன்ஸர் என வேரியேஷன்களை வெளிப்படுத்தி பேட்டர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் அளவுக்கு பந்துவீச்சு இல்லை என்பதுதான் நிதர்சனம். சிஎஸ்கே அணி தனது வெற்றியை பந்துவீச்சிலும் சரி, பேட்டிங்கிலும் சரி நடுப்பகுதி ஓவர்களில்தான் எதிரணியிடம் இருந்து கபளீகரம் செய்கிறதே தவிர டெத் ஓவர்களிலோ அல்லது பவர்ப்ளே ஓவர்களிலோ அல்ல. அதிலும் மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் ரஹ்மான் சொந்த நாட்டுக்குத் திரும்புகிறார் என்பதால், சிஎஸ்கே பந்துவீச்சு இன்னும் பலவீனமாகும். கான்வே தொடரிலிருந்து முழுமையாக விலகிவிட்டது பேட்டிங்கில் சிஎஸ்கேவுக்கு பெரிய அடி. அவருக்குப் பதிலாக இங்கிலாந்து வேகப்பந்துவீச்சாளர் ரிச்சார்ட் கிளீசனை சிஎஸ்கே வாங்கியுள்ளது. மே 1ஆம் தேதிக்குப் பின் முஸ்தபிசுர் சென்றபின் அவருக்குப் பதிலாக பந்துவீச்சாளரை வாங்க முக்கியத்துவம் அளிக்குமா அல்லது பேட்டருக்கு முக்கியத்துவம அளிக்குமா என்பது எதிர்பார்ப்பாக இருக்கிறது. பட மூலாதாரம்,SPORTZPICS சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கூறுகையில், “நாங்கள் பேட்டிங்கை நன்றாக ஃபினிஷ் செய்தோம். இன்னும் கூடுதலாக 15 முதல் 20 ரன்கள் சேர்த்திருக்க வேண்டும். பவர்ப்ளேவில் விக்கெட்டுகள் வீழ்த்த முடியாமல் இருக்கும் சிக்கலைத் தீர்க்க வேண்டும். அதற்கு விரைவாகத் தீர்வும் காண்போம். பவர்ப்ளேவில் விக்கெட் வீழ்த்தினால் நிச்சயமாக எதிரணி கவனமாக ஆடுவார்கள், ரன் சேர்ப்பும் குறையும். இந்த ஆட்டத்தில் தொடக்கத்தில் சரியாக பேட்டிங் செய்ய முடியால் திணறியது, 15வது ஓவர் வரை சிரமம் நீடித்தது. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தோம். இதுபோன்ற ஆடுகளங்களில், இரவு நேர பனிப்பொழிவு இருப்பதால், 190 ரன்களாவது சேர்ப்பது பாதுகாப்பானது,” எனத் தெரிவித்தார். தோனியின் 101 மீட்டர் சிக்ஸர் சிஎஸ்கே அணியின் முன்னாள் கேப்டன் தோனி, இந்த சீசன் முழுவதும் கலக்கி வருகிறார். லக்னௌ ரசிகர்களும் தோனியின் ஆட்டத்தைக் கண்டு ரசித்தனர். 9 பந்துகளைச் சந்தித்த தோனி 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 28 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அதிலும் யாஷ் தாக்கூர் வீசிய கடைசி ஓவரில் லாங்-ஆன் திசையில் இமாலய சிக்ஸர் விளாசினார் இந்த சிக்ஸர் 101 மீட்டர் உயரம் சென்றது. இந்த ஐபிஎல் சீசனிலேயே அதிக உயரத்துக்கு அடிக்கப்பட்ட, மிகப்பெரிய சிக்ஸர் இதுதான். தோனியின் கடைசி நேர கேமியோவில் 28 ரன்கள், பிஸ்னோய் ஓவரில் மொயீன் அலி ஹாட்ரிக் சிக்ஸர் உள்பட 30 ரன்களும் இல்லாவிட்டால் சிஎஸ்கே ஸ்கோர் 125 ரன்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.bbc.com/tamil/articles/cx03y922278o
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.