Jump to content

ஜநா தனது பணிகளை இலங்கையில் இடை நிறுத்த நேரிடலாம்


Recommended Posts

கண்காணிப்புக்குழு இலங்கை அரசபடைகள் தான் 17 தன்னார்வ தொடர்களை கொலை செய்ததாக குற்றம்சாட்டிய நிலையில் கொலை செய்தவர்கள் பொறுப்பேற்காத நிலையில் தமது பணிகளை இடைநிறுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்று நேற்று இரவு நியுயோர்க்கில் ஜநாவின் அவசர மனிதாபிமான பணிகளிற்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் எகர்லாண்ட் தெரிவித்துள்ளார்.

http://news.yahoo.com/s/nm/20060831/wl_nm/...m/srilanka_dc_8

Link to comment
Share on other sites

உண்மையில் வேண்டப்பட்ட ஒரு நடவடிக்கை..... இதனாலாகப்பட்டது தமிழர் கொலைகளுக்கான காரணத்தை உறுப்பு நாடுகள் வேறுவிதமாக பார்க்கவேண்டி வரலாம்....!

எனக்கு விளங்காத விடயம் என்ன எண்டால் சர்வதேச போலீஸ்காறன் இப்பிடி இலங்கை அரசாங்கத்தை வீழ்த்தும் அறிக்கையை மகிந்தர் அங்க இங்கிலாந்தில் இருக்கும் போது வெளியிட்டதற்கான காரணம் என்ன....??? யாரை சமாதானப்படுத்த... இல்லை குடைய....??? அப்பிடி இல்லை எண்றால் அண்மைய கெடுபிடிகளால் ஆடியிருப்பார்கள் எண்று நினைத்த பகுதிக்கு சமதானப்படுத்தி படிய வைக்கும் வலையை வீசி உள்ளார்களா... ?????

இதில உலக போலீஸ்காறன் களுக்கு விடயம் எப்பிடி தெரியவரும் என்பவர்களுக்கு ஒரு தகவல்.... ஈழ கெடுபிடிகள் நோர்வேயால் இந்தியாவுக்கும், அமெரிக்க ஆசிய பிரதி நிதிக்கும் அறிக்கைகளாக போய்க்கொண்டு இருக்கின்றது...!

Link to comment
Share on other sites

சிங்கள பகுதியில் நடக்கும் ஜநா நடவடிக்கைகள் இடைநிறுத்தப்படுவதால் பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் நிலைவராது. நிப்பாட்டினா உண்மையில் பாதிக்கப்படப் போவது தமிழர்கள். அவர்களிற்கு தான் அவசர மனிதாபிமான உதவி தேவையானவர்கள். உயர்பாதுகாப்பு வலயத்தினால் இடம் பெயர்ந்தவர்கள், சுனாமியல் இடம் பெயர்ந்தவர்கள் தற்போதைய இராணுவ நடவடிக்கைகளால் இடம் பெயர்ந்தவர்கள் என்று ஒட்டுமொத்தமாக வடக்குகிழக்கில் பல லட்சம். ஜநாவிற்கு கீழ் தான் உலக உணவுத்திட்டம் வேறு நடத்தப்படுகிறது. சிங்கள அரசாங்கம் விடு தவறுகளினால் சர்வதேச அமைப்புகள் காட்ட நினைக்கும் எதிரொலியினால் கடசியில் தண்டிக்கப்படுவதும் தமிழர்கள் தான். இது பனையால் விழுந்தவனை மாடு ஏறி மிதித்த கதை. இதை ஜநாவும் மற்றய சர்வதேச அமைப்புகளும் கருத்தில் கொண்டு தமது நடிவடிக்கைகளை நெறிப்படுத்த வேண்டும்.

Link to comment
Share on other sites

நீங்கள் சொல்வதை முற்றிலுமாக ஏற்றுக்கொள்கிறேன் குறுக்ஸ்.... ஆனால் அப்படி ஒரு சம்பவம் நடந்தால் விளைவு என்ன என்பதை விட இலங்கை அரசாங்கத்தின் மீது எப்படியான அழுத்தத்தை கொண்டு வரும் என்பது மிக முக்கியம்...!

ஐநாவில் நிரந்தர உறுப்பு நாடுகள் யுத்தத்தால் பாதிக்கப்படும் நாட்டுக்கு செய்ய வேண்டியதை செய்ய முடியாமல் போனால் வரும் அவமானத்துக்கு முகம் கொடுக்க வேண்டியவர்களாவர்.... அப்படியான நிலையை வரவிடாமல் தடுப்பது அவர்களின் மரியாதை பிரச்சினை...

தவிர இஸ்ரேலில் ஐநாவின் உறுப்பு நாடுகளின் அழுத்தத்துக்கு பணிய வேண்டிய நிலைக்கு இஸ்ரேல் வந்தது.... காரணம் இஸ்ரேலால் அவர்கள் நினைத்த வேகத்தில் சண்டையை முடிக்க முடியவில்லை... நாள்கள் இளுத்துக்கொண்டே போக வெளிநாட்டு அளுத்தங்கள் அதிகரித்தது... இஸ்ரேலை விடவலிமை குறைந்த இலங்கையால் ஐநாவை புறந்தள்ளி அப்பிடி தாக்கு பிடிக்க முடியுமா...??? (இண்றும் சர்வதேச உதவிகள் வேண்டித்தான் மகிந்தர் பிச்சை கேட்க்கும் நிலைதானே இருக்கின்றது)

Link to comment
Share on other sites

அவை தட்டிக் கொடுத்து உசுப்பேத்திவிட்ட இலங்கை அரசாங்கத்தோடை என்னவாதல் செய்யட்டும். எங்கட மக்களின் மனிதாபிமான அவலம் மேலும் மோசம் அடையாமல் நேரடி உதவிகளை வழங்க வேண்டும். சனம் பட்டினியாலை சாகும் பொழுது சிறீலங்காவின் இனவாத நச்சுப்பாம்பிற்கு ஜநா இராஜதந்திர மகுடி வாசிச்சு காரியம் நடத்த நினைப்பது நகைக்கிடமானது. ஒரு தோற்றுப்போன அரசாங்கத்தை அழுத்தங்கள் கொடுத்து சீர்திருத்துவது வழிக்கு கொண்டுவருவது என்பது நீண்ட கால திட்டமாக இருக்க வேண்டியது. பட்டினிச்சாவை எதிர்கொள்ளும் மக்களிற்கு உதவிகள் தொடர்வது என்பது அவசரமான அத்தியாவசியமான நிர்ப்பந்தம். இதை எடுத்துக் கூறி எமக்கு நேரடியாக உதவிகள் கிடைக்கச் செய்வது எமது புலம்பெயர்ந்துள்ள அமைப்புகளின் கடமை.

Link to comment
Share on other sites

தேசிய தொலைக்காட்ச்சியில உலர் உணவு தயாரிப்பு அவசிய தானியங்கள் உற்பத்தி.... முன்னேற்பாடுகள், எண்டு பொருண்மிய மேம்பாட்டு நிறுவனத்தின் உணவு தன்னிறைவு முன்னேற்பாடுகளை எல்லாம் போட்டுக்காட்டி வயித்தில பாலை வார்த்தவை.... ஆனாலும் இராணுவ கட்டுப்பாட்டு மக்கள் கஸ்ரப்பட போறது உண்மைதான்...!

Link to comment
Share on other sites

நிவராணப் பணிகளை இடைநிறுத்தப் போவதாக ஐ.நா. எச்சரிக்கை

மூதூரில் அரச சார்பற்ற நிறுவனப் பணியாளர்களை சிறிலங்கா இராணுவம் படுகொலை செய்துள்ளதாக இலங்கை போர் நிறுத்த கண்காணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளதையடுத்த

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.