Jump to content

மரணத்துக்கு சில நிமிடங்களுக்கு முன்னால்


Recommended Posts

கண்ணை இருட்டிக்கொண்டு வந்தது.

 

வானத்திலே வெடித்து ஒளியை பாச்சிய பரா வெளிச்ச குண்டுகள் மங்கலாக தெரிய தொடங்கியது. சிங்கள குரல்கள் கிட்டவாக கேட்கிறது. இன்னும் ஒரு நிமிடத்துக்காவது எனது உடலில் பலத்தை கொடு என்று நான் என்றைக்குமே கும்பிடாத இறைவனிடம் கேட்கிறேன்.

 

அதிகாலை இரண்டுமணிக்கு அண்ணளவாக தொடங்கிய சண்டை இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. தமிழரின் விடிவுக்கான வாழ்வா சாவா நந்திக்கடலின் சேற்றுப் பகுதியில் ஈச்சமுட்களுக்கு நடுவிலே தீர்மானிக்கபட போகிறது என்று யாருமே கணித்திருக்க முடியாது.

 

தலைவனை பாதுகாப்பாக வெளியேற்றினால் மட்டுமே இனி தமிழரின் எதிர்காலம் என்ற தலையாய இலக்கு. 
 
ஒரு படகில் கட்டப்பட்ட மிதவைகளுடன் அந்த நந்திகடலை தாண்டும்போதே எதிரிக்கு திகைப்பு ஏற்பட எந்த சந்தர்பமும் இல்லை. எங்கள் வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். 
 
நடுக்கடலிலேயே பரா வெளிச்ச குண்டுகளுக்கு மத்தியில் சண்டை தொடங்கிவிட்டது, மிதவை கவிழ்ந்து போக முதுகிலே முப்பது கிலோ பொருட்களுடன் இரண்டுகைகளிலும் துப்பாக்கிகளுடன் அந்த கடலின் கரையை அடையவே அரைமணித்தியாலம் போய்விட்டது. சேற்றினுள் வைத்த வெறும் காலை கூட வெளியே எடுக்கமுடியாத முதுகுபாரம்.
 
கடுமையாக மோதினோம். எந்த பின்புல ஆதரவும் இல்லாமல், எந்த உணர்வுகளுமே இல்லாமல், சாவை மட்டுமே எதிர் கொண்டு கடுமையாக மோதினோம். என் தோழர்கள் ஒவ்வொன்றாக வீழும்போதும் எங்கள் சூட்டின் வேகம் தணியவில்லை. இதோ எனது ஆயுத வெடிபொருட்கள் எல்லாம் முடிந்து , நேற்று இரவு கடித்த அந்த பிஞ்சு மாங்காய் இற்கான பலம் எல்லாம் முடிந்து அந்த சேற்று மண்ணில் வீழ்ந்து கிடக்கிறேன்.
 
எனக்கும் மரணத்துக்கும் இன்னும் சில நிமிட தூரங்களே இருக்கின்றன. கடந்த மாவீர தினத்துக்கு தான் அவசரமாக அளவெடுத்து தைத்த சீருடையின் பைக்குள்ளே இருந்த சண்டை வரைபடத்தையும் குறியீட்டு தாளையும் எடுத்து வாயிலே சப்புகிறேன்.
 
அது தந்த கொஞ்ச தெம்பில் , என் மரணத்தை பற்றி கொஞ்சம் சிந்திக்க நேரம் கிடைத்தது. நான் சாகப்போகிறேன். இதை யாருக்காவது சொல்ல வேண்டும் போல இருந்தது.  
 
என் நெஞ்சிலே செருகி இருந்த செய்மதி தொலைபேசியில் புலம்பெயர் நாட்டில் இருந்த அண்ணாவுக்கு அடித்தேன். எங்கோ ஒரு வீதியை மறித்து போராடி கொண்டிருந்த அண்ணாவுக்கு, சண்டை வெடி சத்தங்களுக்கு நடுவே  நான் சொல்லுவது தெளிவாக கேட்கவில்லை. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொன்ன ஒரு திருப்தி எனக்கு கிடைத்தது.
 
அம்மாவையும் தங்கச்சியையும் கவனமாக பார்த்து கொள், அம்மாவுக்கு நான் இல்லை என்று சொல்லிவிடாதே, அவவின் காலம் முழுக்க நான் இருப்பேன் என்று தேடட்டும். அது தான் நான் அவவுக்கு கடைசியாக கொடுக்க கூடிய ஒரே சந்தோசம். நன்றி. வணக்கம். 
 
அதன் சிம் காட்டையும் வாயிலே சப்பி விழுங்கினேன். இன்னும் இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் தான் மரணத்துக்கு.
 
நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன். 
 
சிங்கள குரல்கள் எனக்கு மிக அருகில் கேட்க தொடங்கிவிட்டது. எனக்கு இன்னும் ஒரு நிமிடம் தான் இருக்கிறது சாக. குப்பியா, வெடிமருந்து சக்கை உடையா என்றபோது வெடிமருந்து சக்கை உடையை தெரிந்து எடுத்தவன். 
 
சாவுக்கு என்றுமே அஞ்சியதில்லை என்றாலும் செத்து அனுபவமில்லை. இப்போ முதன்முதலாக சாகப்போகிறேன்.
 
சரி சாவதுக்கு முதலில் ஆசையை பூச்சியம் ஆக்கவேண்டும் என்று நினைத்து கொண்டேன். எல்லா ஆசைகளையும் இனிமேலே என் வாழ்வில் நிறைவேறுவதற்கான வழி எதுவுமே இல்லை  என்ற ஒற்றை நினைப்பை மூளையுள் திணித்து நடுநிலையாக்கினேன்.
 
சில ஆசைகள் மறைய மறுத்தன. வலிந்து எண்ணங்களை திணித்து பூச்சியம் ஆக்கினேன்.
 
இப்போ நான் தயார்.
 
மிக அருகில் வரட்டும் என்று காத்திருந்தேன். சக்கையை வெடிக்க வைப்பதற்கான இழுவையை இறுகப்பற்றினேன்.
 
சேறு நிரம்பிய சப்பாத்தால் என்னை அவன் பிரட்டியபோது, எனது விரல்கள் தங்களின் முழுப்பலத்தையும் கொண்டு வெடிமருந்து சக்கை அங்கியின் இழுவையை இழுத்துவிட்டன.
 
Link to comment
Share on other sites

வாசிக்கவே கனதியாக உள்ள பதிவு. :unsure:

Link to comment
Share on other sites

அந்த வெடியோசையும் கடைசியாக அவனது ஆசைகளின் புதைவும் கண்ணுகள் தெறிக்கிறது காட்சிப்பதிவாக.....இப்படி எத்தனைபேரை எத்தனை உயிர்களை இழந்தோம்.....அத்தனை இழப்பின் ஒட்டுமொத்த வடிவாக இந்தக்கதையின் முடிவும் அவனும்.....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எத்தனை வருடங்கள் போனாலும் மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

Link to comment
Share on other sites

முதலாமவர் வெடித்து ஒளி பிழம்பாகியதை கண்ணால் பார்த்தவன்.

இவர்களுக்குள் இருக்கும் உறுதியில் ஒரு விகிதம் என்னிடம் இருந்திருந்தால் எங்கேயோ போயிருப்பன்.

Link to comment
Share on other sites

மனுநீதிச் சோழன் கதைபடித்த அறிவுடன், தன் தசையைத் தானே அறுக்கும் ஒருவனின் உள உரத்தைப் பார்க்கிறேன், பற்றை மறைவில் பதுங்கியிருந்து. சிறு முள் குத்திய வேதனை தாங்கமுடியாது!. நானும் தமிழனா...???? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கன காலத்துக்குப் பிறகு, களத்துக்கு 'அபிராம்' வந்திருக்கிறார் எண்டு ஓடிவந்து வாசிச்சால், அபிராம் மனத்தை ஒரேயடியாக உருக்கிப் போட்டார்!

 

எத்தனை சொல்லப்படாத, சொல்ல முடியாத 'அனுபவங்களை' தமிழனாகப் பிறந்த ஒரே காரணத்துக்காக, எமது இனம் அனுபவித்துத் தொலைத்திருக்கின்றது!

 

அதை விடத் துயரம் என்னவெனில், இதற்கொரு விடிவோ அல்லது முடிவோ தெரியாமல் இன்னும் தொடர்ந்து எமது இனம் பயணிப்பது தான்! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன சொவது என்றே தெரியவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எவ்வளவு இழப்புக்கள்...மிகவும் கனதியான பதிவு....அபிராம்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் .......!

 

அபிராம் ! மனம் கனக்கிறது !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மறையாத சோகங்களும், மறக்க முடியாத தியாகங்களும்.

 

காலத்தால் அலையாத  நினைவுகள்.

Link to comment
Share on other sites

கருத்திட்ட இசைக்கலைஞன், சாந்தி, அகஸ்தியன், விவசாயி விக், பெருமாள், பாஞ், புன்கையூரான், சுமேரியர், புத்தன் ,சுவி, நிலாமதி  அவர்களுக்கும் விருப்பமளித்த கவிதை அவர்களுக்கும் இந்த கதையை தொடரும் கோமகன் அவர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.   

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

நிமிர்ந்து படுத்தபடி வானத்தை பார்க்கிறேன், என் வாழ்விலே நடந்த சந்தோசங்கள், கவலைகள், வெற்றிகள், தோல்விகள், துரோகங்கள், நண்பர்கள், எதிரிகள், ஆசிரியர்கள், உறவினர்கள், அம்மா, அப்பா, சகோதரங்கள், வீடு, விளையாடிய வீதிகள், ஏறிய மரங்கள், காதலி,வாகனம், துப்பாக்கி, தலைவர், தளபதிகள், தோழர்கள் இன்னும் பல ஒரு சில செக்கன்களில் கண்ணுக்கு முன்னே படங்களாக காட்சிகளாக ஒரு விரைவு Rewind ஓடியது போல ஓடி முடிந்துவிட்டது. அது உணர்வு எனக்கு எப்படி சொல்லுவது என்று தெரியவில்லை. செத்தால் மாட்டுமே புரியும் என்று நினைக்கிறேன்.  ///

 

கதைக்கு மிக்க நன்றி அபிராம்.

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

கருத்திட்ட கோமகன் மற்றும் கந்தப்புவுக்கு நன்றிகள்.

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

Link to comment
Share on other sites

 

காலங்கள் உணர்வுகளை மழுங்கடிக்க கூடிய வல்லமை படைத்தவை அல்ல.

மாறாக உணர்வுடன் கூடிய நினைவுகள் காலத்தை கடத்த வல்லன.

காலமெல்லாம் தொடர்வது நினைவுகள் மட்டுமே. அவை காலத்தை வெல்லும் சாதனைகளைப் படைக்கும் வல்லமை மிக்கவைவும் கூட.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.