Jump to content

சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

1487262_445894422204385_1685036738_n.jpg

 

வீழ்ந்தால் அனுபவம்....எழுந்தால் வெற்றி! 

அறப்போர் உருவெடுத்து ஏறத்தாள ஒரு வருடங்கள் ஆகப்போகின்றன.

ஆவணப்படம் என்ற சொல்லாடலே புலம்பெயர் தமிழர்களிடத்தில் பாவணையில் இல்லாத காலம். ஏதோ சினிமாப்படம் எடுக்கின்றேன் என்று நினைத்தவர்களே அதிகம். 

"உங்களிற்கெல்லாம் வேறு வேலையே இல்லையா" என்று கேட்டவர்கள் முதல் "நீங்கெல்லாம் திருந்தவே மாட்டீங்களா" என்று ஏளனம் செய்தவர்கள் வரை இன்றும் எம்முடன் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். 

பணத்திற்காக ஓடிய போதும் சரி, மொழிபெயர்ப்பிற்காக ஓடிய போதும் சரி எந்த பின்னடைவும் இல்லை, எந்த சோர்வையும் நெருங்கவிடவில்லை. ஈழ விடுதலைக்கு எதுவுமே செய்யாமல் இருப்பதை விட ஏதாவது செய்வோம் என்பதே அறப்போருக்கு உயிரூட்டியது. 

உடல் நலக்குறைவு வந்தபோதும் சரி, பைக்கில் இருந்து விழுந்து காயங்கள் வாங்கிய போதும் சரி, மருத்துவமனைக்கு நோயாளியை பார்க்கசென்ற போது அவரையும் நோய் பிடித்து அதே மருத்துமனையில் படுத்த போதும் சரி (ஆம் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது), சுட்டெரிக்கும் வெய்யிலில் என்னையும் பைக்கில் பாதுகாப்பாக ஏற்றி இறக்கிய போதும் சரி பின்னடைவோ சோர்வோ இயக்குனரிடமும் இல்லை. 

புலம்பெயர் தமிழர்களிடத்திலும் அமைப்புகளிடத்திலும் முழுமையான அங்கீகாரம் கிடைக்காத போது முதல் முறை வீழ்ந்தேன். அறப்போரை தூக்கி நிறுத்துவதற்கு இது என்ன மசாலா படமா இல்லை ஆடல் பாடல் போட்டிகளின் தொகுப்பா? இது போதாதென்று அமைப்புக்களின் அதிகார சண்டையிலும் சிக்கி சின்னாபின்னமாகியது. வாக்குறுதிகளை அள்ளி வீசியவர்கள் காணமல் போனதும் இங்கேயே நடந்தேறியது. வீழ்ந்தால் அனுபவம். எழுந்தால் வெற்றி. முட்டி மோதுவோம். என்ன தான் நடக்கிறது என்று பார்ப்போம். வேறு திசையில் சிந்திக்க வைத்தது புலம்பெயர்ந்த தமிழர்களின் அலட்சியப்போக்கு. இதற்கெல்லாம் முன்னதாகவே அறப்போர் சர்வதேச அங்கிகாரத்தை நோக்கி நகரத்தொடங்கிவிட்டது.

இன்று வராதா நாளை வராதா என்று ஒவ்வொரு நாளும் மின்னஞ்சலை பார்வையிட்டேன். அந்த நற்செய்தி இன்று வந்தது. 

Greece நாட்டில் நடக்கும் சர்வதேச ஆவணப்பட விழாவில் அறப்போர் தெரிவாகியுள்ளது ( www.filmfestival.gr ). தமிழினத்தின் விடுதலைப்போரை இந்த நாட்டுமக்களிற்கு கொண்டு செல்லும் பெருமை அறப்போருக்கு. 

கலெம் மெக்றே அவர்களின் பாராட்டும் சற்று மேலே தூக்கிவிட்டது. இதைவிட வேறென்ன வேண்டும்? 

அறப்போர் வெற்றிபெற்றுவிட்டது என்று எமது கதையை முடிக்கவிரும்பவில்லை. 
"போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து" இது அறப்போருக்கு பொருந்தாது. தொடரும்... அனுபவமும் வெற்றியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குதிரை... ஓடிய பின், லாயத்தைப் பூட்டுவதில் பிரயோசனமில்லை.
எம்மிடமிருந்த அதி உயர் சக்தியை... பிரயோகித்து, 30 வருடமாக போராடி....
கடைசி நேரத்தில்... தமிழகத்து, மூன்று மணித்தியால உண்ணா விரத்தத்தால்... தோற்று விட்டோம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.