Jump to content

ஊரும் உலகும்


Recommended Posts

புளியங்காய் ஒட்டு பட்டம்...பார்த்து 28+ வருடங்கள்....

 

பிரம்பு, வடலி விண் எல்லாம் கிளாசிக் சமாசாரம்..

 

நான் உரப்பை விண் தான் உபயோகபடுதியது...

 

மார்கழி விடுமுறையே எப்படி போகிறது என்று தெரியாது......

 

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

Link to comment
Share on other sites

  • Replies 103
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் யாழ் இந்து மைதானத்துக்குள்தான் பட்டம் ஏற்றுவது. எட்டுமூளைப் பட்டம்தான் அதிகமாய் செய்வது. ஒரு ஆள் உயரத்துக்கு.அதை அந்தச் சிறியமைதானத்துள் வைத்து ஏற்றுவதே ஒரு டெக்னிக்தான். பின் அதை வீட்டடிக்கு கொண்டுவாறது ஒரு பெரிய கலை. கிரவுன்ட்ஸ்  மதிலுடன் டெலிபோன் போஸ்டுடன் வயர் போகும். அதன்மேலால்  நூல் பந்தை எறிந்து பின் வீதியில் வைத்து அதைமாத்தி கொண்டுவந்து வேலி மரத்தில் கட்டுவது.அது இரவிரவாக வின் கூவிக்கொண்டிருக்கும். :rolleyes::D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தும்பளையான் பட்டம் விடுவதிலுள்ள பல அரிய சூட்சுமங்களைச் சொல்லியுள்ளீர்கள். பிராந்து, கொக்கு கட்டுவது இலகுவானதல்ல. நான் ஒருபோதும் கொக்கு கட்ட முயற்சிக்கவில்லை. அதற்கு சிம்புகளைக் கட்டுவது என்பது மிகவும் கடினமான விடயம்.

பிராந்து நீங்கள் சொல்லியபடிதான் கட்டுவது. நேரான பூவரசம்தடியை வெயிலில் காயவைத்தும் குப்பைக்குள் சுட வைத்தும்தான் முள்ளந்தண்டை சரிக்கட்டவேண்டும். நான் வார்னீஸ் போட்டு ஒட்டியதில்லை. ஆனால் சிவப்புப் பட்டத்தாளையும், நீலப்பட்டத்தாளையும் இரண்டு அடுக்காக ஒட்டி ஊதாக் கலரை உருவாக்குவேன். சாடையாகத் தண்ணிகாட்டி காயவிட்டால் ஒட்டு இறுகிவிடும்.

பிராந்துக்கு முச்சை கட்டுவது, சரித்தால் அதற்கேற்ப முச்சையைத் திருத்துவது, தலைப்பாரம் கூடினால் "பெல்லி" வைத்துக் கட்டுவது என்று எத்தனையோ நிபுணத்துவங்களை எல்லாம் பழகித்தான் இருந்தோம். பிராந்தை இன்னொரு பட்டத்துடன் தொடுத்து ஏற்றுவது தெரியும். ஆனால் நாங்கள் அப்படி ஏற்றுவதில்லை. இதற்கென்றே பட்டம் பிடித்துவிட சிறுவர்களைப் பழக்கி வைத்திருந்தோம் :) மேலும் தங்கூசி பாவித்ததில்லை. அதை வாங்குமளவிற்கு காசு இருப்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரொம்ப சுவாரசியமான திரியும், பதிவுகளும் யாழ் மாவட்டதைப்பற்றி அறியக்கூடியதாக இருக்கிறது. ஆனால் உங்களின் வட்டாரச் சொற்கள்தான் சுட்டும் பொருளை பிரித்தறிய குழப்பமாக இருகிறது.

 

ஈழத்தின் பிற பகுதிக்காரகளும் - பொத்துவில்,கதிகாமம் வரை அறிந்தவர்களும் இங்கே எழுதினால் நாங்களும் ஈழம் பற்றிய ஒரு முடிவிற்கு வருமில்லையா? :)

 

நன்றி.

வட்டாரச் சொற்கள் அதிகம்தான். அவை இல்லாமலும் எழுதுவது கடினம். எங்களூர் வட்டாரச் சொற்கள் யாழ்ப்பாணத்தின் பிற பகுதிகளில் இருப்பவர்களுக்கும் புரிவதில்லை.

நேரம் கிடைக்கும்போது வட்டாரச் சொல்லகராதியை அடிக்குறிப்பில் இடுகின்றேன்.

எனக்கும் பிறபகுதிகளைப் பற்றி அறியவேண்டும் என்ற விருப்பம். அதனால்தான் தொடக்கி வைத்தேன். ஆனால் எல்லாரும் பம்முகின்றனர்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நகரை என்ற பெயரை நினைவுபடுத்தியதற்கு நன்றி அகஸ்தியன். எங்கோ பக்கத்தில்தான் இருந்திருக்கின்றீர்கள் என்று தெரிகின்றது!!

பெரும்பாலும் நீங்கள் சொல்லும் பட்ட டெக்னிகல் சொல்லுகளே நாங்களும் சொல்லுறுது.

ஆமி பிரச்னை காலத்தில் 751 பேருந்து ஓடுவதில்லை, உங்கட ஊருக்காலை போய் தான் குஞ்சர்கடையில் 750 எடுத்து யாழ்ப்பாணம் போய் வருவோம். குஞ்சர்கடை சந்திக்கு போக முன் ஒரு வீட்டிலை சைக்கிளை விட்டுவிட்டு போவம், முன் பின் அறியாதவர்கள் நல்லவர்கள்.சில வேளைகளில் சைக்கில் இல்லா விட்டால் நடைதான். 750 பஸ்சிலும்

23 ஸ்ரீ வசந்த மாளிகை பஸ்ஸை ராசையா அண்ணை ஓடும் அழகே தனி அழகு.

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தமுறை போன போது மினகெட்ட பட்டம்.

 

CYMERA_20131210_182833.jpg

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

Link to comment
Share on other sites

உரப்பை விண்ணிலே டபிள் நார் போட்ட பழக்கம் இருக்கா? நாங்கள் கூவக்கட்டயை கொஞ்சம் நீளமாக வெட்டி டபிள் நார் போடுவோம். ஒவ்வொரு நாரும் ஒவ்வொரு தொனியில "கதறும்" - டேர்மினோலஜி .

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பட்டம் கட்டுவதிலும் இத்தனை டெக்னிக் இருக்கா. நான் பெரிய பட்டங்களைக் கண்ட நினைவில்லை எங்கள் ஊரில். சிலவேளை ஆண்கள்தான் அதை உன்னிப்பாகப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன்.கேட்கச் சுவாரசியமாக இருக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எட்டு மூலை கட்டி ஏற்றியுள்ளேன். அதற்கு வாலைக் குறைத்து விண்பூட்டிக் குத்தவிட்டுப் பலருக்கு எரிச்சலைக் கொடுத்திருந்தேன். ஆனாலும் படலம், பிராந்தைப் போன்று அதிகம் எட்டுமூலையுடன் மினக்கெடவில்லை.

கொட்டடிக்காரர் ஒருபக்கம், கோணாந்தோட்டக்காரர் இன்னொருபக்கம், நாவாந்துறைக்காரர் இன்னொருபக்கம்! 

 

எட்டு மூலைப்பட்டம் விடுகிற காலத்தில, 'விண் சத்தம்' ஆக்களை நித்திரை கொள்ள விடாது! :o  

Link to comment
Share on other sites

சுவாரஸ்யமான பழைய ஞாபகங்களை மீட்டும்படியாக திரியொன்றை ஆரம்பித்த கிருபனுக்கு மிக்க நன்றி.

 

விதம் விதமான பட்டம் கட்டுவதிலும், பட்டம் ஏற்றுவதிலும் நிறையச் சூட்டுமங்கள் இருக்கு. அதில் நானும் ஒரு விற்பன்னனாக விளங்கினேன் என்பது எனது அந்தக்கால சாதனைதான். :D

மூங்கிலை நன்கு சீவி பண்படுத்தி அளவுத்திட்டங்கள் எல்லாவற்றையும் கவனித்து ஒரு பட்டத்தின் அடிப்படை உருவமைப்பை அமைத்தபின்னர் அதனை அழகுபடுத்துவதற்காக (என்ன 'ஒட்டு' ஒட்டுறது? என்பார்கள் - கண் ஒட்டு, காத்தாடி ஒட்டு, தூண் ஒட்டு , புளியங்காய் ஒட்டு அல்லது டைமன் ஒட்டு, பூ ஒட்டு, நட்சத்திர ஒட்டு, பிரிட்டிஷ் ஒட்டு, எக்ஸ் ஒட்டு, வரி ஒட்டு என பல பெயர்களில் பல விதமான டிசைன்கள் ) விதவிதமான டிசைன்களில் வர்ணத்தாள் வாங்கி ஒட்டி அலங்காரப்படுத்தி... அதற்கு விண் பூட்டி ....

(பெரிய பட்டங்களுக்கு தேக்குமரத்தில் சீவியெடுத்த விண் வில்லையும் பாவிப்பதுண்டு - கூவக்கட்டை எனப்படும் விண் வில்லின் இருபக்கமும் பொருத்தும் கட்டைகள் செய்வதற்கு மிக உகந்தது காய்ந்த முள்முருக்கு மரத்தண்டுதான் ),

(விண் நார் செயவதற்கு வடலி நார், பார்சல் சுற்றி வரும் நாடா , உரப்பை இழைகள், பேப்பர் றிபன், கதிரை பின்னும் இழைகள் என பலவகை

பொருட்களை பாவிக்கலாம் - இதில் குறிப்பாக செப்புக்கம்பியை தட்டி தட்டையாக்கி விண் செய்தால்... அந்த ஏரியாவில உள்ள வயர்லெஸ் தொடர்பு சாதனங்களை பாவிக்க ஏலாதவகையில் கீ... என்ற சத்தம் வரும்  :icon_idea::lol: )

.....வால்கட்டி, முச்சை கட்டி.... ஏற்றி அழகுபார்ப்பதே ஒரு அலாதி அனுபவம். அதிலும் இரவிரவாக பறக்கவிடுவதும் (இராக்கொடி)... மழைவருதா? நார்ச்சத்தம் தொடர்ந்து கேக்குதா? என இடைக்கிடை முழித்து அவதானிப்பதும், விண் நார்ச் சத்தத்தால்  இரவில் தூங்கமுடியாத சனங்கள் எல்லாம் காலையில் புலம்புவதும்.....  பட்டம் அறுந்துசென்றால் நூலோட்டம் பார்த்து தேடுவதும்..... என சுவாரஸ்யமான அனுபவங்களும் நினைவுகளும் இதில் இருக்கு. :rolleyes::lol::wub:

 

வடமராட்சியில் பருத்தித்துறையிலிருந்து வல்வெட்டித்துறை வரையிலான பகுதியில் ஒக்ரோபர் ஆரம்பம் முதல் - தைப்பொங்கல் நாள் வரைக்கும் (கச்சான் காத்து சீசன் என்பார்கள்) வண்ண வண்ண வடிவில் விதம்விதமான பட்டங்களை பறக்கவிடுவார்கள்.

சென்ற தைப்பொங்கலுக்கும் அங்கு பறந்த பட்டங்களின் புகைப்படங்களை பலர் முகப்புத்தகங்களில் பகிர்ந்திருந்ததைப் பார்க்கையில்... பழைய ஞாபகங்கள் வந்து போயின. மீண்டும் எப்பொழுது அந்த இனிமையான காட்சிகளை நேரில் பார்க்கப்போகின்றோம் என்ற ஏக்கமே எஞ்சி நிற்கின்றன. :(:unsure:

 

 

Link to comment
Share on other sites

தும்பளையான் உங்கள் யாழ் பயண போட்டோக்கள் நன்றாக இருந்தன, அதில் சில பட்டங்களையும் இணைத்து இருந்தீர்கள், இந்த படம் ஒரு ஆள் அளவு உயரம். இதுக்கு நைலான் நூல் பாவித்தால் கையை வெட்டும், குறுலோன் நூல்தான் நல்லது, ஆனால் விலை கூட.

பட்டம் ஊமையாக உள்ளது, விண் பூட்ட வில்லையா ?

 

நான் போன கிழமைதான் பட்டத்துக்கு வர்ணம் பூசி முடித்திருந்தார்கள். இன்னும் முச்சையே கட்டியிருக்கவில்லை. முச்சை கட்டிய பின்னர் தான் விசை பூட்ட வேண்டும். காரணம் விசை மாற்றவேண்டிய காரணம் வந்தால் முஷ்சயைக் கழற்ற வேண்டியதில்லை. விசையில் இருக்கும் விண்ணை பட்டம் ஏற்ற முதல் தான் இறுக்கி ஏற்றிய பின்னர் உடனடியாகக் கழற்றி விடுவொம், இல்லாவிட்டால் விசையின் விசை குறைந்துவிடும், நார் ஈஞ்சு விடும். விசையை இறுக்கமாகக் கட்டாவிட்டால் விசை இடம் வலமாக ஓடித் திரியும் இது நடந்தால் "விசை ஓடீட்டுது" என்பார்கள். இப்பிடி விசை ஓடாமல் இருக்க விசையின் நடுவிலே ஒரு சிறிய நூலை இளக்கமாக கட்டி அதனுள்ளே ஒரு சின்ன பூவரசம் குச்சியைப் போட்டு முறுக்கி விசையுடன் சேர்த்து இன்னொரு நூலால் கட்டி விடுவோம் - இதன் பெயர் விசைக்கட்டை.

 

 

நான்  double நார் போட்டது இல்லை..ஆனால் நண்பர்கள் செய்ய பார்த்திருகின்றேன் ...

கடந்த கிழமை தமிழ்மணம் வலைபதிவில் ஒருவர் தென் தமிழ்நாடில் விடும் பட்டம் என்று ஒரு கோபுர வடிவில் பட்டத்தின் படம் போடிருந்தார்...அந்த பட்டத்தில் வால் எங்களது முறையில் இருந்தது...மற்றும் அவரும் மார்கழியிலே பெரும்பாலும் தாங்களும் பட்டம் விட்டதாக எழுதியிருந்தார்...எங்களது வகை பட்டங்களை நான் இந்தியாவில் (சென்னையில்) இருக்கும் வரை கண்டது கிடையாது...(சென்னையில் வாலாகொடி மாதிரி ஒரு பட்டத்தை ஏற்றி.. நூலில் glass தூள் தடவி ஆட்களை கொல்லுவது தான் மிச்சம்)

 

நீங்கள் பருத்தித்துறையில் இருந்த பொது யாரும் light  பூட்டி பறக்க விட்டார்களா..(இப்போது LED, அது ..இது என்று "ரெக்னோலொயி" ரொம்ப முன்னேரிட்டுது... :) -- பெடியளுக்கு நல்ல அட்டகாசமாக இருக்கும்)

 

சாரம் அவிண்டாலும் பட்ட நூலை கை விடோம்

 

 

Same Blood !!!

 

 

இப்போது பூந்தோட்டங்களில் அழகுபடுத்தப் பாவிக்கும் சிறிய சோலர் பனல்கள் சிலவற்றைப் பொருத்தி விடுகிறார்கள். இருண்டா தன்டபாட்டில வெளிச்சம் பத்தத் தொடங்கி விடிஞ்சா அணைஞ்சு விடும். கீழே இருந்து 240V அனுப்பும் ஆபத்தான அரியண்டம் இல்லை. உதென்ன பெரிய விஷயம், சின்னப் பெடியன் ஒருத்தனே "மேல" அனுப்பி வீடியோ எடுத்திருக்கிறாங்கள். 

 

நீங்கள் யாரும் எட்டுமூலைப் பட்டம் கட்டுவதில்லையா..! யாழில் அதுதான் பிரசித்தம். மேலே நட்சத்திரம்போல், கீலே நீளமான வண்டி, நடுவில் விளக்குச் சாரளம்போல் ஒரு ஓட்டை இருக்கும். :)

 

யாழ்ப்பாணத்தில் வசித்த எனது மச்சான் ஒருமுறை ஊர்வந்தபோது கட்டி ஏத்தினோம். நாங்கள் அதை மணிக்கூட்டுப் பட்டம் என்றுதான் கூப்பிடுவோம். அவன்தான் கட்டி, எங்கள் ஒழுங்கிலே கவன் எறிஞ்சு ஏற்றிவிட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் வின்னை இழுத்துக் கட்ட ரீல்கட்டை பாவிப்போம்...!

 

தும்பளை நீங்கள் சொன்னதுபோல் பழைய சுவர் மணிக்கூடு போல்தன் அது இருக்கும். அந்த பிக்பென் மணிக்கூடு அதிகமாய் எல்லா கொஞ்சம் வசதியான வீடுகளிலும் தொங்கும், இரண்டு மூன்றுநாளைக் கொருமுறை சாவி கொடுக்க வேண்டும்...! :rolleyes::D

எனக்கு இந்த மணிக்கூடு,  அரை மணிக்கு மணி அடிக்கிறபோது ஒரு முறை அடித்துவிட்டு, மணியடிக்கிற காலைத் தூக்கிக்கொண்டு அடுத்த அரைமணித்தியாலம் ஒத்தைக்காலில நிக்கும்! :D

 

அதோட மனியடிக்கிறபோது வாற 'கிர்ர்ர்ர்' சத்தமும் நல்லாயிருக்கும்! :icon_idea:

 

இப்போதைக்குச் சாவி மட்டும் தான் தரலாம்! :rolleyes:

IMAG020A.JPG

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மணிக்கூட்டையும்  இரவலாய்த் தந்தீங்கள் எண்டால் நான் பகலில் மணிபார்த்துவிட்டு  மறக்காமல்  இரவு தந்து விடுகிறேன், பின்பு காலையில் வந்து வாங்குகிறேன்...! :rolleyes::D

Link to comment
Share on other sites

இந்த கட்டு கொடி தான் ஏற்றுவதற்கும் அமைப்பதற்கும் கடினமானது...

426914_470983322957758_1548243326_n.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுபோன்ற பட்டத்தை இப்போதுதான் பார்க்கின்றேன்...! :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடர்ந்து பட்டம் விட்டுக்கொண்டால் தைப்பூசமும் தாண்டிவிடும். எனவே வேறு ஊர்களையும் அவற்றின் பெருமைகளையும் எழுதுவோமே!

Link to comment
Share on other sites

முன்பு ஒருமுறை இந்தப் பதிவில் நான் புகுந்த ஊரைப்பற்றி எழுதுவதாகச் சொல்லியிருந்தேன் . நான் அங்கு நின்ற நாட்களில் கண்டு கேட்டவற்றை உங்களுடன் பகிர்ந்து கொள்கின்றேன் . இதில் சிலவேளை பிழைகள் இருக்கலாம். யாராவது பருத்தித்துறை வாசிகள் திருத்தினால் நன்றியுடையவனாய் இருப்பேன்.
 

நான் புகுந்த இடம் பருத்தித்துறை , அதில் குறிப்பாக சொல்வதானால் தம்பசிட்டி என்ற சிறிய கிராமம் . பருத்தித்துறை அடிப்படையில் ஓர் துறைமுகப் பட்டினமாகும். ஆரம்பகாலங்களில் இங்கு பருத்தி அதிக அளவில் பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செயப்பட்டதால் பருத்தித்துறை என்ற பெயர் வந்ததது . இந்த நகரத்தை ஆங்கிலத்தில் "பொயின்ற் பிட்ரோ"  என்றும் அதையே தமிழில் நேரடியாக மொழிபெயர்த்து " பீத்துறு முனை " என்றும் சொன்னார்கள்  ஆனால் , ஒல்லாந்து கடலோடியான பெட்ரோ இந்த நகரை கண்டுபிடித்தால் பொயின்ற் பெட்ரோ என்று பெயரிட்டதாக வரலாறு சொல்கின்றது .
 

பருத்தித்துறையும் அதனோடு சேர்ந்த தம்பசிட்டியும் தோசை , வடை , அப்பம் , எள்ளுப்பா போன்ற உணவுகளுக்குப் பெயர் பெற்றது . தோசை என்றால் அதற்கு இடி சம்பல் , பொரி சம்பல் , பச்சைமிளகாய் சம்பல் , சிவப்பு மிளகாய் சம்பல் , தோசைக்கறி போன்றவற்றுடன் பரிமாறுவார்கள் . அதுவும் தோசைக்கறி பருத்தித்துறைக்கே சொந்தமானது ஒன்றாகும்.  அதே போல் அப்பதட்டிகளை இங்கே தான் காணலாம். பழைய பஸ் தரிப்பு நிலையத்தில் இருந்து அம்மன் கோவிலடியால் செல்லும் பொழுது கல்லூரி வீதி வரை இந்த அப்பதட்டிகள் இருக்கும் . இவை பார்பதற்கு விநோதமானவை. வீட்டு மதில்களில் சிறியளவில் ஒரு ஓட்டை வைத்திருப்பார்கள். மதிலுக்கு உள்ளே இருப்பவர்கள் வெளியில் இருப்பவர்களுக்கு தெரியாது. காசுப் பரிமாற்றமும் , பொருளும் இந்த ஓட்டையினாலேயே நடைபெறும். இந்த அப்பத்தட்டிகள் பருத்தித்துறை பெண்களது அன்றாட பொருளாதாரத் தேவைகளை பூர்த்தி செயக்கூடியதாக இருந்தது. இப்பொழுது புலத்திலே காணப்படுகின்ற " ட்றைவ் இன் " கள் வர முன்பே பருத்தித்துறையில் அப்பத்தட்டிகள் வந்துவிட்டன என்பது குறிப்பிடத் தக்கது ஒன்றாகும் .

பருத்திதுறை பல கல்விமான்களை உருவாக்கிய நகரமாகும் . அதில் முக்கியமானவர் சதாவதானி கதிரவேற்பிள்ளை ஆவார் . மேலும் இங்கு நான்கு பாடசாலைகள் பிரபல்யமானவை. அவையாவன ஹாட்லி கல்லூரி , வேலாயுதம் மகாவித்தியாலயம் ,  மெதடிஸ் பெண்கள் கல்லூரி , வட இந்து மகளிர் கல்லூரி போன்றவை ஆகும் . பிரசித்தி பெற்ற கோவில்களாக ,  பண்டாரி அம்மன் கோவில் , ஆத்தியடி பிள்ளையார் கோவில் , ஆவோலைப் பிள்ளையார் கோவில் , சிவன் கோவில் , கோட்டுவாசல் அம்மன் கோவில் , பத்திரகாளி கோவில் , வல்லிபுர ஆழ்வார் கோவில் , தொப்பிலாவத்தை வைரவர் கோவில் போன்றவை இருக்கின்றன .

 

9yo3.jpg

 

பருத்தித்துறையில் கடற்கரையோரமாக முனையும் துறை முகமும் உள்ளது . முனை சரியாக ஆண் கடலையும் பெண்கடலையும் இரண்டாகப் பிரிக்கின்றது . கோடைகாலத்தில் இங்கு பட்டம் விடுதல் முக்கிய நிகழ்வு . அதே போல் வல்லிபுரக் கோவில் தீர்த்தத் திருவிழாவும் பிரபல்யமானது . வல்லிபுரக் கோவில் கடற்கரையில் இருக்கும் மண் புட்டிகளைக் கடந்து பெருமாளை கொண்டுவந்து கடற்கரையில் தீர்த்தமாட விடுவார்கள். இது பார்க்கக் கண்கொள்ளாக் காட்சியாகும் . இங்குள்ள வீடுகள் சிலவற்றுக்கு கடற்கரையில் இருந்தே நேரடியாக படகுகள் , சிறிய ரக கப்பல்கள் வருவதற்குப் பாதைகள் இருப்பதாகக் கேள்விப்பட்டு இருக்கின்றேன் .
 

இது பெண் கடல்

 

zut2.jpg

 

இறுதியாக குடிமகன்களுக்கு பிரபல்யமானது கூவில் தவறணையாகும்  :wub:  :D  . கூவில் கள்ளு அடிக்கவே வெளியூர் குடிமகன்கள் இங்கு படையெடுப்பார்கள் :lol:  :D  .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோ ! பருத்தித்துறையிலும் கூவில் இருக்கா..!  கீரிமலைக்கு அருகேயும் கூவில் உண்டு !

Link to comment
Share on other sites

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

Link to comment
Share on other sites

தம்பசிட்டியில் கண்ணாடி இழைநார் படகு கட்டும் தொழிற்சாலை ஒன்று இருந்தது என நினைக்கிறேன். அங்கே கொட்டப்பட்டிருக்கும் இழை நார்களை எடுத்து வந்து விண்ணில் பூட்டி பட்டம் ஏற்றிய ஞாபகம் சிலருக்கு இருக்கும்.. :D

 

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

 

Link to comment
Share on other sites

உங்கட வீட்டடியத் தாண்டித்தானே கூவில் தவறணைக்குப் போக வேண்டும் அண்ணா? :unsure:

அதை பிரதி செய்து கொள்ளுங்கள் தும்ஸ். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.