Jump to content

நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக்கூடிய விலை என்ன?


Recommended Posts

எந்த ஒரு சமூகத்தினது யுத்தமோ பேச்சுவார்த்தையோ இறுதி இலக்கு சமாதான சகவாழ்வாகத்தான் இருக்கம் முடியும். அந்த வகையில் எமது போராட்ட இலக்கை நாம் அடைய எம்மால் விட்டுக்கொடுக்கக் கூடிய அளவு வீச்சு என்ன?

உணர்ச்சி பூர்வமாக கருத்துகளை முன்வைப்பதைவிட அறிவு பூர்வமாக பிரச்சினைகளை அணுகுவதே இங்கு அவசியமாக இருக்கிறது.

யுத்தத்தின் நீட்சி தாயகத்தில் தமிழர்களது இருப்பையே இல்லாதொழித்துவிடக்கூடிய அபாய அறிவிப்பை எமக்கு முன்மொழிந்து நிற்கிறது.

இந்த இக்கட்டான நிலையில் புலம் பெயர்ந்த நாம் ஆற்றவேண்டிய வரலாற்று பணி என்ன?

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

அதற்கு நாம் என்ன விலை கொடுக்கப்போகிறோம்?

Link to comment
Share on other sites

  • Replies 67
  • Created
  • Last Reply

சமாதானம் என்பதன் தொனி என்ன... சிங்கள இனவாதிகளிடம் சொந்த நிலத்தை உரிமைகளை இழந்து அவர்களின் ஏவலுக்கு அடிபணிந்து வாழ்வதா...??!

இலங்கை என்பது சிறீலங்காவாக மாற்றமடைந்த போது மெளனித்திருந்தமே அதே போல் மெளனிகளாக சிறுகச்சிறுக சிங்களவனுக்கு இலக்காகி அழிவதா...??!

இல்ல..புகழிடம் என்று இடம்பெயர்ந்து தமிழர் என்ற இனத்துவத்துக்கான அனைத்து அடையாளங்களையும் தொலைத்து அந்நியருக்கு அவர்களின் தேசத்தில் கூலிகளாகி..பொருள் பெற்று செல்வந்தர்களாக வாழ்வதா...??!

இல்ல பாரம்பரிய மண்ணில் எம்மை நாமே என்றும் பாதுகாக்கக் கூடிய வகையில் எம்மை நாமே நிர்வகித்து எமது அடையாளங்களைக் காத்து எமக்காவும் உலக்குக்காவும் வாழ்வதா...??! இதில் எது..சமாதானம்...என்பதற்குள் அடக்கப்படுகிறது..??! :idea: :roll: :?:

Link to comment
Share on other sites

சமாதானத்தின் விலையும் ஈழத்தமிழர்கள் உயிரே!

Link to comment
Share on other sites

சமாதானம் என்பதன் தொனி என்ன... சிங்கள இனவாதிகளிடம் சொந்த நிலத்தை உரிமைகளை இழந்து அவர்களின் ஏவலுக்கு அடிபணிந்து வாழ்வதா...??!

இலங்கை என்பது சிறீலங்காவாக மாற்றமடைந்த போது மெளனித்திருந்தமே அதே போல் மெளனிகளாக சிறுகச்சிறுக சிங்களவனுக்கு இலக்காகி அழிவதா...??!

இல்ல..புகழிடம் என்று இடம்பெயர்ந்து தமிழர் என்ற இனத்துவத்துக்கான அனைத்து அடையாளங்களையும் தொலைத்து அந்நியருக்கு அவர்களின் தேசத்தில் கூலிகளாகி..பொருள் பெற்று செல்வந்தர்களாக வாழ்வதா...??!

இல்ல பாரம்பரிய மண்ணில் எம்மை நாமே என்றும் பாதுகாக்கக் கூடிய வகையில் எம்மை நாமே நிர்வகித்து எமது அடையாளங்களைக் காத்து எமக்காவும் உலக்குக்காவும் வாழ்வதா...??! இதில் எது..சமாதானம்...என்பதற்குள் அடக்கப்படுகிறது..??! :idea: :roll: :?:

ÌÕÅ¢¸Ç¢ý ¸Õò§¾ ±ý ¸ÕòÐ :idea:

Link to comment
Share on other sites

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சமாதானம் என்பதன் அர்த்தம் எமது அரசியல் பார்வையில்தான் உண்மையான அர்த்தம் கொள்கிறது. யுத்தத்தின் நீட்சி தமிழ் இனத்தை இலங்கை தீவில் பூண்டோடு அழித்துவிடும். தொடர்ச்சியான யுத்தம் சிங்கள இனவாத மேன்மைக்கே வழிவகுக்கும். சமாதான கோசத்தின் மூலம்தான் நாம் எமது இலக்கை அடைய முடியும்.

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

சமாதானமாக சிங்களவருடன் ஒத்து வாழ சிங்கள அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ ஏதாவது தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளதா? அல்லது நீங்கள் ஏதாவது வழிமுறைகளைப் பிரேரிக்கப் போகின்றீர்களா?

யுத்தம் ஆரம்பித்தது யார்? இதை நிறுத்த என்ன செய்ய முடியும்? யார் சொல்லி யுத்தம் நிறுத்தப்படும்? யுத்தம் இல்லாமல் ஏதாவது உரிமைகளைப் பெறமுடியுமா?

பழைய வரலாறுகளையும் எழுதிய ஒப்பந்தங்களின் நிலைகளையும், புலிகளின் இடைக்கால ஆட்சிக்கு என முன்மொழியப்பட்ட வரைபுக்கு நடந்த கதியையும் அலசி ஆராய்ந்துவிட்டு வாருங்கள்.

தனி நாடு இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் தமிழினம் ஒருபோதும் இருக்கமாட்டாது. ஒன்றில் சிங்களம் படித்து சிங்களவராக மாற வேண்டும் அல்லது அடிபட்டு அழியவேண்டும்.

Link to comment
Share on other sites

ஈழத்தில் தமிழினம்..சிங்களத்தால் அழியப்போகுதோ...இல்லையோ..தமிழர்

Link to comment
Share on other sites

என்ன சொல்ல வருகின்றீர்கள் என்பதைத் தெளிவாகச் சொல்லவும்.

சமாதானமாக சிங்களவருடன் ஒத்து வாழ சிங்கள அரசாலோ அல்லது வேறு சக்திகளாலோ ஏதாவது தீர்வு முன்வைக்கப் பட்டுள்ளதா? அல்லது நீங்கள் ஏதாவது வழிமுறைகளைப் பிரேரிக்கப் போகின்றீர்களா?

யுத்தம் ஆரம்பித்தது யார்? இதை நிறுத்த என்ன செய்ய முடியும்? யார் சொல்லி யுத்தம் நிறுத்தப்படும்? யுத்தம் இல்லாமல் ஏதாவது உரிமைகளைப் பெறமுடியுமா?

பழைய வரலாறுகளையும் எழுதிய ஒப்பந்தங்களின் நிலைகளையும், புலிகளின் இடைக்கால ஆட்சிக்கு என முன்மொழியப்பட்ட வரைபுக்கு நடந்த கதியையும் அலசி ஆராய்ந்துவிட்டு வாருங்கள்.

தனி நாடு இல்லாவிட்டால் இலங்கைத் தீவில் தமிழினம் ஒருபோதும் இருக்கமாட்டாது. ஒன்றில் சிங்களம் படித்து சிங்களவராக மாற வேண்டும் அல்லது அடிபட்டு அழியவேண்டும்.

யுத்தத்தைப்போல சமாதானமும் கடினமான அரசியல் போராட்ட வழிமுறை.

ஈழப்போர்- 4 தொடங்கி சில நாட்களில் கடந்தகாலத்தில் நாம் ஒருபோதும் கண்டிராத புதிய அரசியல் இராணுவ நகர்வுகள் இலங்கை அரசியலின் பின்புலத்தில் அவதானிக்க கூடியதாக இருக்கிறது.

எதிரி விரும்பி உருவாக்கும் யுத்த களத்தில்-காலத்தில் சமாதானம் என்பது ஒரு கொரில்லா தாக்குதல் போன்றது.

ஆயுத யுத்தம் என்பது எமக்கு சாதகமான நிலையில் எம்மால் முன்னெடுக்கப்படவேண்டிய அரசியல் போர். எதிரிக்கு சாதகமான யுத்த களத்தில் அமைதி யுத்தம்தான் எமது அரசியல் போராட்டமாக இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

யுத்தத்தின் மூலம் சமாதானம்..என்பதுதான் சந்திரிக்காவின் கோசமும் கூட..! ஒரு கையில் வெண்புறாவைத் தாங்கியபடி மறுகையால் தாங்கிகளை இயக்கியபடி யாழ்ப்பாண வீதிகளில் வலம் வருவதை வான்வழியில் விதைத்துக் கொண்டு..செம்மணியில் விதைத்தது என்னவோ..தமிழர்களின் பிணக்குவியல் தான்.

கடந்த ஒரு வாரச் சண்டையில் 200 போராளிகளினதும் 400 மக்களினதும் மரணத்துக்காகவா...சமாதானம் என்று 4 வருடங்கள்..200க்கும் மேற்பட்ட போராளிகளையும் 800 பொதுமக்களையும் தியாகம் செய்தோம்..! தமிழர்களுக்கு இழப்பு என்பது..சமாதானம் என்ற போர்வைக்குள் இருக்கும் பீரங்கியாலும் வரும்..நேரடியாக சமர்க்களத்தில் உள்ள பீரங்கியாலும் வரும்.

சமாதான காலம் வெளிப்படைக்கு தமிழ் மக்களுக்கு நிம்மதியாக இருந்திருக்கலாம்..ஆனால் அந்த சமாதான காலத்தில் எதிரி எம்மோடு சமாதானமாக வர விரும்பி இருக்கவில்லை என்பதையே அவனுடைய இராணுவ வலுவாக்கம் சுட்டிக்காட்டி இருக்கிறது..! எதிரி தன்னை இராணுவ ரீதியில் வலுவாக்கிக் கொள்வானாயின்..அது எமது அழிவுக்குத்தான் வழி வகுக்கும் என்பதை சமாதானம் என்ற உசச்ரிப்பின் கீழ் நிகழும் போருக்கான ஆயத்தங்கள்..சொல்கின்றன..!

சமாதானம் என்பது ஈழத்தைப் பொறுத்தவரை மனமாற்றங்களின் அவசியம். அதை ஆயுதத்தால் வரவழைக்க முடியாது. சிங்கள இனம் தமிழரின் நியாயப்பாடுகளைப் புரிந்து கொள்ள முனைய வேண்டும். அல்லது புரிந்து கொள்ள வழிகாட்டப்பட வேண்டும்.

இது ஒரு பக்கம் சிங்கள இளைஞர்களுக்கு யுத்த வெறியை ஊட்டிக் கொண்டு..மறுபுறம் சமாதானம் என்று பேசிக் கொண்டால்..மலருமா புரிந்துணர்வும்...சமாதானமும்..

சமாதானம் என்பது ஈழத்தில் தமிழர்களின் நியாயங்கள் சிங்களவர்களால் புரிந்து கொள்ளப்பட்டு அங்கீகரிக்கப்படுவதாகத்தான் இருக்க வேண்டுமே தவிர ஆயுத பாவனைக்கான ஆயத்தமாக இருக்கக் கூடாது. அதுவரை சமாதானம் என்பது வெறும் கேலிக் கூத்துதான்..! :idea:

Link to comment
Share on other sites

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சந்திரிக்காவின் போரின் மூலம் சமாதானம் தமிழர் தரப்பால் இலகுவாக வெற்றி கொள்ளகூடியதாக இருந்ததிற்கு யுத்த களத்தில் மட்டும் அல்ல அரசியல் தளத்திலும் நாம் பலமாக இருந்தோம். அன்றைய சர்வதேச அரசியல் தமிழர் தரப்புக்கு ஆதரவாக இல்லாவிட்டாலும் சந்திரிக்கா அரசுக்கு சாதகமாக இருக்கவில்லை. ஆனால் தற்போதைய உலக அரசியல் சூழல் எமது தரப்புக்கு எதிராகமட்டும் அல்ல எதிரிக்கு சாதகமாக உள்ளது.

இந்திய அமெரிக்க உதவிகள் சிங்கள் தரப்பை முன்னெப்போதும் இல்லாத அளவு உசுப்பேத்தி உள்ளது. சிங்களம் யுத்தத்தை தெரிவு செய்துள்ள இந்த காலகட்டம் எமக்கு சாதகமாக அமைய வாய்ப்புகள் அரிதாகும்.

இது பலவீனத்தினால் வந்த முடிவு அல்ல. இது இன்றைய காலகட்டத்தின் யுத்த தந்திரோபாயமகும்.

ஆக, சமாதானம் என்பதுதான் எமக்கு முன் உள்ள சிங்கள யுத்தத்துக்கு எதிரான அரசியல் யுத்தம் ஆகும்.

சிங்கள இராணுவம் புதிதாக இடங்களை ஆக்கிரமிக்கும். ஆட்டிலறி, கிபீர் என்பனவற்றைப் பாவித்து மக்களைக் கொல்லும். பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் என்று சொல்லுகின்றீர்கள். ஒவ்வொரு தடவையும் மக்கள் கொல்லப்படும்போது சர்வதேச நிறுவனங்களின் முன்னின்று மகஜரைக் கையளித்தால் அவர்கள் எப்படியாவது யுத்தத்தை நிறுத்துவார்கள் என்று நம்பச் சொல்லுகின்றீர்கள். ஈராக், ஆப்கானிஸ்தான், லெபனான் போன்ற இடங்களில் மக்கள் தொடர்ந்து கொல்லப்படுகின்றனர். தற்போது தமிழீழத்திலும் இது தொடர்கின்றது. சமாதானமாக இருந்தால் எல்லாவற்றையும் அடையலாம் என்று சொல்ல வருகின்றீர்கள். கடந்த 4 1/2 வருடமாக சமாதானம் நிலவத்தானே போர் நிறுத்தம் வந்தது. ஏன் சமாதானம் வரவில்லை?

உண்மையில் உங்கள் செய்தி என்னவென்று விளங்கவில்லை???

Link to comment
Share on other sites

சமாதானம் எண்று ஒண்று வரவேண்டுமானால் ஒரு தரப்பு மற்றய தரப்பை சமனான பலம்வாய்தவர்களாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்....! தங்களின் பலத்தை கணக்கிட்டு அதை நம்புவோர்த்தான் எதிரியின் பலத்தை சரியாக எடை போடமுடியும்...

இந்த நிலையில் சமாதானம் எங்களின் கைகளில் இல்லை அது எப்போதுமே சிங்களவனின் தெரிவாகத்தான் இருக்கும்...!

Link to comment
Share on other sites

சமாதானம் எண்று ஒண்று வரவேண்டுமானால் ஒரு தரப்பு மற்றய தரப்பை சமனான பலம்வாய்தவர்களாய் ஏற்றுக்கொள்ள வேண்டும்....! தங்களின் பலத்தை கணக்கிட்டு அதை நம்புவோர்த்தான் எதிரியின் பலத்தை சரியாக எடை போடமுடியும்...

இந்த நிலையில் சமாதானம் எங்களின் கைகளில் இல்லை அது எப்போதுமே சிங்களவனின் தெரிவாகத்தான் இருக்கும்...!

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை.

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது.

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்.

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

Link to comment
Share on other sites

எந்த ஒரு தீர்வும் தமி;ழ் மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க பின்வரும் அம்சங்களை கொண்டிருக்க வேண்டும்.

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும் படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம் கொழும்பு உட்பட) தமிழருக்கு, தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

போர் மூலம் தீர்வு கண்ட பிரச்சினைகளில், மக்கள் நிம்மதியாக வாழுவது, நாட்டை வெற்றி பெற்ற படைகள் முற்று முழுதாக கைப்பற்றி ஆட்சி அமைத்த நாடுகளிலேயே இடம் பெற்றிருக்கிறது.

நாட்டின் ஒரு பகுதியை பிரித்தெடுத்த மக்கள், எல்லையில் உள்ள எதிரியுடன் என்றும் நிம்மதியாக வாழவில்லை. அது பாகிஸ்தான் - இந்தியாவாக இருக்கலாம்,. இசுரேல் - பலஸ்தீனமாக இருக்கலாம், எதியோப்பியா - எரித்திரியாவாக இருக்கலாம். இங்கே மக்கள் நிம்மதியாக வாழவில்லை.

சமாதானமாக நாடு பிரித்த சிங்கப்பு_ர், மலேசியாவுடன் நிம்மதியாக வாழ்கிறது. ஆனால் இது சிறிலங்காவுடன் சாத்தியம் இல்லை.

விடுதலைப்புலிகள் முழு இலங்கையையும் கைப்பற்றி, தமது பொம்மை ஆட்சியை சிறிய சிங்களப்பகுதியில் அமைப்பர் என்று சிங்களவர் பயப்படுகிறார்கள். இதற்கு ஆதாரம் கேட்பவர்களுக்கு நான் சொல்லக்கூடியது, 1990 களில் சிறிலங்கா ஜனாதிபதியின் ஆலோசகர் எனக்கு இதை நேரடியாகவே சொன்னார் என்பது மட்டுமே.

சிறிலங்காவில் போரிலும், அநர்த்தத்திலும், மக்களை கோள்ளையடிக்கும் அரசியல்வாதிகளுக்கு கொடுப்பதை கொடுக்காமல் எந்த தீர்வும் சாத்தியம் இல்லை. அவர்கள் இவ்வாறான சமாதான தீர்வின் பின், புதிய கட்டுமானம், வணிகம் போன்றவற்றில் இன்னும் அதிகம் சிங்கள மொழி ஆட்சிபிரதேசத்தில் (அவர்கள் ஆட்சி) கொள்ளையடிக்கலாம், என்று அவர்களுக்கு புரியயவைக்க வேண்டும். இதை உத்தியோகபுூர்வ பேச்சுவார்த்தைகளில், சமாதான பேச்சுக்கள் மூலம் செய்ய முடியாது. வணிகத்தில் தேர்ந்தவர்கள்(deal Makers), தனிப்பட்ட முறையில் முயற்சி செய்து, சிங்கள தலைவர்களை ஆசைகாட்டி வழிக்கு கொண்டு வரவேண்டும். முடிவு மட்டும்

[*] தமிழீழ விடுதலைப்புலிகள், ஆயுதங்களும், படை அமைப்புகளும், தீவு முழுவதும் உள்ள தமிழரின் பாதுகாப்புக்காக தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் உள்ள சட்டரீதியான இராணுவமாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.

[*] தீவு முழுவதும் (மலையகம், கொழும்பு) உட்பட, தமிழருக்கு தமிழ் மொழியிலான நிருவாகம் நிறைவான அதிகாரங்களுடன் தமிழ்மக்களின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

''புலிகள் மீண்டும் ஒரு யுத்தத்திற்கு திரும்பினால் ஒரு பலமான இராணுவத்தை சந்திக்கவேண்டி இருக்கும்'' உங்களில் பலருக்கு நினைவிருக்கும் இது அமெரிக்க தரப்பால் சில மாதங்களுக்கு முன் தமிழர் தரப்புக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை..

அமெரிக்காவிம் பூச்சாண்டி போனதடவை ஆனையிறவை மீட்ட போதும்... தீச்சுவாலை நடவடிக்கைக்கு நேரடி திட்டமிடலுக்கு கொடுத்த அடியுடன் சரியான விபரணம் கொடுக்க பட்டு உள்ளது... இதைப்பற்றி நாங்கள் அல்ல அமெரிக்கா வித்தியாசமாக சிந்திக்க ஆரம்பித்து நீண்ட காலமாகி இப்போ புலிக்கொடியை ஏற்றினாலும் குற்றம் இல்லை எண்று சொல்லும் நிலையில் அமெரிக்கா நடு நிலமைக்கு வந்து நீண்ட காலமாச்சு...! இதே அமெரிகாவில் அல்கைடாவின் தலைவரான பின்லாடனின் படத்தை தூக்குக்கொண்டோ இல்லை அவர்களின் சின்னத்தை தூக்கிக்கொண்டு போய் பாருங்கள் உங்களுக்கான மரியாதை சரிவர தெரியும்... ஆனால் புலிக்கொடி அந்த முறையில் கௌரவிக்க பட்டு இருக்கிறது... இதையே சிங்கள் ஊடகங்கள் அமெரிகா புலிகளின் சுயநிர்ணயத்தை மதித்து இலங்கை துண்டாட வளிசெய்கிறது எண்று பினாத்தும் அளவுக்கு இருக்கு நிலமை...!

கடந்த சில தினங்களுக்கு முன் இலங்கைக்கு விஜயம் செய்த அமெரிக்காவின் தெற்காசிய விவகாரங்களுக்கான அமைச்சின் பிரதி துணைச்செயலாளர் ஸ்டீவ் மான் அரசின் வான் தாக்குதல்கள் குறித்து கண்டித்ததும் அவர் கொழும்பைவிட்டு வெளியேறியதும் அரசின் வான் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதும் தற்செயல் அல்ல.

முல்லை செஞ்சோலை தாக்குதலின் பின் அரசு வெளியிட்ட ஒளிப்படங்களின் பாணி அமெரிக்கா இராக், ஆப்கானிஸ்தான் மேல் வான் தாக்குதல் செய்தபின் வெளியிட்ட ஒளிப்படங்கள் போல் இருப்பதை அவதானித்திருப்பீர்கள்.

அண்மைய அரசின் வான் தாக்குதலின் பின்புலத்தில் அமெரிக்க ஐரோப்பிய ஆலோசனையும் உதவியும் மறைமுகமாக நிறையவெ இருக்கிறது. அரசு வான் தாக்குதலில் தேர்ந்தெடுக்கும் இலக்குகளை வைத்து இதை ஓரளவு ஊகிக்கக்கூடியதாக இருக்கிறது..

அடுத்து இந்திய அரசின் இராணுவ உதவி குறித்து நாம் மிக விழிப்பாக இருக்கவேண்டும்..

இந்தியா.., இந்திய தமிழர்களைத்தாண்டி ஒரு நடவடிக்கையை எடுக்கும் என நினைப்பது உள்நாட்டில் வேண்டாத வினையை ஏற்படுத்தும் என்பதை அறியாத முட்டாள்கள் அல்ல.... அதயும் தாண்டி தமிழர் சாவது இப்போதுதான் நிகழ்வதும் இல்லை... 1991ம் ஆண்டு முதல் வாளாது இருந்த தமிழகம் இப்போது மட்டும் கிளர்ந்து எழ தமிழக அரசு பார்த்துக்கொண்டு இருக்கின்றது அவர்களுக்கு உதவியும் செய்கிறது கண்டும் காணாமல் இருக்கின்றது மத்திய அரசை வேண்டுகிறது என்பதெல்லாம் புதிய நடவடிக்கைகள் இதுக்கும் மத்திய அரசுக்கும் சம்பந்தம் இல்லை அவர்களுக்கு தெரியாமல் தமிழக அரசு செயற்படுகின்றது என்பதை எப்படித்தான் சொல்கிறீர்கள் எண்றுதான் புரியவில்லை...!

இலங்கை அரசுக்கு பாகிஸ்தான் இராணுவ உதவி என்பது போல் வெளியில் பாவால் காட்டிக் கொண்டு அமெரிக்க இந்திய இராணுவ அரசியல் உதவிகள் திரை மறைவில் நிகழும் புதிய நகர்வுகள் பற்றிய செய்திகள் கசியத்தொடங்கிவிட்டது.

ஆக, சமாதானம் என்ற கோசம்தான் எமது போராட்டத்தின் இருப்புக்கு தற்போது பாதுகாப்பு தரகூடியது.

இலங்கைக்கு உதவியை செய்வது அமெரிக்காதான் இல்லை, பாக்கிஸ்தானும், ஜப்பானும் கூட உதவிகள் செய்யலாம் அது எல்லாம் இலங்கையின் கட்டுப்பாட்டை இலங்கை அரசு வைத்திருக்கின்றது என்பது வெளியில் இலங்கை அரசு செய்யும் பிரச்சாரத்தை நம்பித்தான்...!

இலங்கை தன்னை எப்போதும் வெற்றி பெறும் தரப்பாக காட்டி கொள்கிறது எண்றால் அதன் காரணம் உலகம் வெல்பவனைத்தான் நேசிக்கிறது என்பதால்த்தான்...! எவ்வளவுதான் தோல்விகள் எண்றாலும் தாங்கள் எதையும் இளக்கவில்லை என்பது எல்லாம் தங்களின் நாட்டில் இருந்து நலன் பெறவிருப்புபவர்களிடம் பிரச்சினையை சீரமைக்க உதவி பெற மட்டுமே.... இதுவே தாங்கள் தேற்பதாக இலங்கை காட்டினால் அவர்களுக்கு உதவி செய்ய சொந்தமக்களே வரமாட்டார்கள்....!

இப்படித்தான் பிலிப்பைன்ஸ் சர்வாதிகாரியான மாக்கோஸ் அவர்களை அமெரிக்கா கொடுத்த ஊக்கமும் அவருக்கான படை உதவி எண்று அமர்க்களப்படுத்தியது... ஆனால் அவருக்கு எண்று தோல்வி முகம் எண்று கண்டதோ அண்று அவைரை கைகழுவியும் விட்டது....

முதலில் மற்றவர்கள் எல்லாரும் சேர்ந்து எங்களை அளிக்காப்போறார்கள் என்பதை விட்டு எங்களை பலமானவர்களாக்கும் விதத்தை பற்றி சிந்திப்பது நலம்....!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
சுருக்கமா சொல்வதானால் ஆயுதத்தை போட்டு விட்டு சரணடையட்டாம் :twisted: :twisted: :twisted:
Link to comment
Share on other sites

யாரோ கேள்வியும் கேட்டு பதிலும் கொடுக்கிற மாதிரி கிடக்கு. :? :roll:

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

Link to comment
Share on other sites

ஆனையிறவு மீட்புப்போர் காலகட்டம் இன்றைய அமெரிக்க அல்கைடா எதிர்ப்பு யுத்த நிலையில் இருந்து முற்றிலும் வேறுபட்டது. அமெரிக்காவில் எமது கொடியை பறக்கவிட அனுமதித்தை ஒரு அரசியல் அங்கீகாரமாக பார்ப்பது அமெரிக்க உள்துறை மற்றும் வெளித்துறை அரசியலை எம்மால் ஆழமாக பகுத்தாய்வு செய்யமுடியாமல் போன தவறாகும்.

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம்.

இன்னும் ஒரு வரலாற்று நிகழ்வை இங்கு நினைவு படுத்த விரும்புகிறேன். 1987 இந்திய இலங்கை ஒப்பந்ததின்பின் உருவான ஈழப்போரில் மேற்குலகம் வெளிப்படையாக புலிகளை ஆதரித்ததும், அதில் இந்திய (சோவியத்) சார்பு ஈ பி ஆர் எல் எவ் படுதோல்வியை சந்திக்க வாய்ப்புகள் உருவானதொன்றும் தற்செயல் அல்ல.

புலிகளின் தலைமை மேற்குலகுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் விளைவுதான் எமது போராட்டதை இன்று வரை காப்பாற்றிவந்துள்ளது. மேற்குலகுடன் ஒரு இணக்கப்பாட்டுக்கு தமிழர் தலைமை வர தாமதம் ஏற்பட்டிருந்தால் ஜே ஆர் ஜெயவர்தனா காலத்திலேயே எமது போராட்டம் தோற்கடிக்கப்ப்ட்டிருக்கும். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் அழிந்துபோன அனைந்து அமைப்புகளுக்கும் புலிகளுக்கும் உள்ளவித்தியாசம் சர்வதேச அரசியலில் புலிகள் எடுத்த தந்திரோபாய சரர்பு நிலைதான். அதனால்தான் புலிகளால் இருபது வருடங்களுக்கு மேல் தமிழர்க்கு தலைமை கொடுக்கமுடிகிறது. புலிகளின் முதல் வெளியீடான வந்த ''சோசலிச தமிழீழத்தை நோக்கி'' என்ற புத்தகத்தில்தான் சோசலிசம் என்ற அரசியல் கோட்பாடு முன்னிலைப்படுத்தப்பட்டது. அதுவும் அப்போது லண்டனில் படித்து கொண்டிருந்தவரது சொந்த அரசியல் ஆசையே தவிர புலிகளது அரசியல் அல்ல. இருப்பினும் தலைமை சரியான நேரத்தில் சரியான திசையில் எமது போராட்ட அரசியலை நெறிப்படுத்தியதன் விளைவுதான் இன்று எம்மால் அறுவடை செய்யப்படும் புலிக்கொடி ஏந்தும் சுதந்திரதின் சூட்சுமம்.

எம்மை மற்றவர்கள் அழித்துவிவார்கள் என்ற மனநிலையில் இருந்து விடுபட்டு நாம் எம்மை பலமானவர்களாக்குவது வெறும் கருத்து தளத்தில் நிகழ்வது அல்ல. அதற்கான கருத்து தளம் உயிர்நிலை கொள்ளக்கூடிய புறச்சூழல் எமக்கு சாதகமாக இருக்கவில்லை எனில் தற்போதை சர்வதேச சூழலுக்கு உகந்த கருத்து நிலையை தமிழர் தரப்பு கைக்கொண்டால் அன்றி சிங்களத்தை நாம் வென்று விடமுடியாது.

Link to comment
Share on other sites

யுத்தத்துக்கு எதிரான குரலை வலுப்படுத்துவதும் சமாதானத்தின் இறுதி நம்பிக்கையை நாம் இழந்துவிடாமல் இருப்பதும் இன்றைய தேவைகளில் முதன்மையானது.

வரலாற்றை மறந்துவிட்டுத்தான் பேசுகிறீர்களா? எத்தனை ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. அத்தனையும் வெறும் காகிதத்தில்தான். கடைசியாக செய்யப்பட்டது யுத்தநிறுத்த ஒப்பந்தம் அதைத்தன்னும் நிறைவேற்றினார்களா? அதுசெய்யப்பட்ட போது சிறீலங்காஇராணுவம் பெரும் அழிவுகளைச் சந்தித்திருந்தது. இராணுவத்துக்கும் ஒய்வு தேவைப்பட்டது. தனது விமானங்களைக்கூட இழந்திருந்தது. இப்ப எல்லாாவற்றையம் மீண்டும் பெற்றவுடன் மீண்டும் தொடங்கிவிட்டான்.

இஸ்ரேல் பலஸ்தீன ஒப்பந்தம் பல சர்வதேச நாடுகளின் முன்னிலையில் தான் செய்யப்பட்டது. இன்றும் நினைத்தவுடன் பாலஸ்தீனத்தின் மீது படையெடுத்துவிட்டு வருகிறான் இஸ்ரேல் காரன். சமாதானம் பேசி அழிக்கப்பட்ட விடுதலைஇயக்கம் பாலஸ்தீன இயக்கந்தான்.

இன்று சமாதானம் பேசும் சர்வதேசமெல்லாம் நாளை போர் நின்றாலோ விடுதலைப்புலிகள் பலவீனம் அடைந்தாலோ தங்கள் வேலையைப்பார்க்க போய்விடுவார்கள்.

தமிழருக்கு சுயாட்சி அல்லது தனிநாட்டுக்கு குறைந்த எந்த ஒரு தீர்வும் பாதுகாப்பானதல்ல. ஏனென்றால் சிங்களவன் அப்பிடி.

சிங்களவனுக்கு உலகநாடுகள் எல்லாம் உதவிசெய்கின்றன. விடுதலைப்புலிகளுக்கு தமிழ்மக்கள்தான் பக்கபலம். விடுதலைப்புலிகள் இல்லையென்றால் இன்று தமிழர்களின் இருப்பு கேள்விக்குறிதான். புலிகள் எம்முடிவை எடுத்தாலும் அதற்கு நாம் பக்கபலமாக இருக்க வேணும்.

Link to comment
Share on other sites

என்ன நன்பரே இது கூடவா புரியவில்லை சில குருவிகள் புறாவக மாறி புதிதாக இனைந்தது நோக்கு தெரியுது :lol: :P :lol:

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

Link to comment
Share on other sites

குருவிகளையும் சமாதானத்தையும் ஒன்றாக பார்த்து குழம்ப வேண்டாம்.

குருவிகள் தனித்துவம் உடையவர். அதைப்போல சமாதானமும் தனித்துவம் பேணுபவர்

என்ன சொல்ல வருகிறீர்கள். ஒன்றாக இருந்தாலும் தனித்துவம் பேணுவமென்றா.

Link to comment
Share on other sites

புலி கொடி அமெரிக்காவில் பறக்கக்கூடிய நிலையில் இன்று இருப்பதற்கு முக்கிய வரலாற்று காரணம் தமிழர் தலைமை தமிழீழ விடுததைப்போராட்ட ஆரம்பகாலத்தில் பிரகடனப்படுத்திய உலக அரசியல் சார்பு நிலைக்கோட்பாடு. ஈ பி ஆர் எல் எவ் எண்பதுகளின் ஆரம்பதில் அமெரிக்க அலன் தம்பதிகளான கடத்திய போது எல் ரி ரி ஈ அதை முதல்முதலில் கண்டித்ததுடன் நிபந்தனைகள் எதுவும் இல்லாமல் அவர்களை விடுதலை செய்யும்படி உள்ளூர் மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு அறிவித்தது. அப்போதைய அமெரிக்க சோவியத் பனிப்போரில் புலிகள் தமது நிலையை தெளிவாக அமெரிக்காவுக்கு தெரியப்படுத்தி இருந்தனர். அன்று மிக தெளிவாக புலிகளின் தலைமை எடுத்த முடிவின் பயன்களை புலம் பெயர்ந்து அமெரிக்க ஐரோப்பிய மண்ணில் வாழும் நாம் இன்றும் அனுபவிக்கிறோம். .

உங்களின் வாதத்திலை அடிப்படையே சிக்கலா இருக்கே....! புலிகளை தடை செய்த அமெரிக்கா கொடியேற்ற விடுவது.... அலன் தம்பதிகளை கடத்தியதை புலிகள் எதிர்த்ததாலா...???

என்ன சொல்லுறீங்கள் என்பது விளங்கித்தான் சொல்கிறீங்களா..??? புலிகளை அழிக்க பயிற்ச்சியும் ஆயுதமும் இலங்கைக்கு வளங்கின அமெரிக்கா இண்று இப்பிடி நிலை எடுக்க காரணம் புலிகள் அரசியல் வளியில் செய்த மாற்றங்கள் எண்று நீங்கள் சொன்னால், சரத் பொன்ஸ் சேகாவுக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியது எண்று புலிகள் மீது குற்றம் சாட்டி கண்டித்த அமெரிக்கா.. பன்னிய பிட்டியவில் அதேபோல ஒரு அதிகாரி கொல்லப்பட்ட போது சும்மா இருந்த்து 1 மாத இடைவெளியில் புலிகள் செய்த சீர் திருத்தத்தாலா...???? என்னால் நம்பவே முடியல்லயே...???? தகவலுக்கு நண்றி...!

ஆயுதம் இல்லாது சமாதானம் என்பது கிடைக்கும் எண்றால் அது செல்வா காலத்திலேயே கிடைத்து இருக்க வேண்டும்... 1957ம் ஆண்டின் இனப்படுகொலை நடந்திருக்காது...!

எமது பலம் மட்டும்தான் எங்களுக்கு எதையும் கொண்டுவரும்.... அமெரிக்காவின் ஆதரவைக்கூட, பலமில்லாத உங்களை சீண்டிப்பார்த்து வருத்த பலபேர் வருவார்கள். அவர்கள் நன்மை அடைவதுக்காக...! நீங்கள் பலமாக இருந்தால் அவர்களே பேரம்தான் பேசுவார்கள்... இதுதான் வித்தியாசம்...!

Link to comment
Share on other sites

இனியும் எங்களால் உயிர்களை விலையாக்கமுடியாது எம் தலமையின் ஏன் பொறுமை காக்கின்றதோ தெரியவில்லை என்கே விமானஎதிர்ப்பு படையணி???,விமானபடை இனியும் பொறுமை காத்தால் வெறும் நிலத்தை மாத்திரம் தான் பெறமுடியும் பொறுமைக்கு எல்லை உண்டு அந்த எல்லை கடந்து விட்டது கொடுத்த விலைகள் காணும் என நான் நினைகின்றேன்

sencholai_children.jpg

இவ்வளவு உயிர்களுக்கும் 19000 மாவீரருக்கும் நாம் இழந்த எம் உறவுகளுக்கும் பதில் தான் என்ன :?: :?: :?: :?: :evil: :evil: :evil: :twisted: :twisted:

பிரிவுகளால் அங்கலாய்க்கும்

அகதி தமிழன்

ஈழவன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பேராசை"     "பேராசை பெரும் வியாதி. இந்த உண்மையை உணர்ந்தவன் வாழ்வில் சுகம் அடைவான்" என்றார் புத்தர். ஆசை இல்லாமல் ஒரு வாழ்வும் இருக்காது. ஒருவரும் ஆசையை விட்டு விட்டு இருக்கமுடியாது. ஆசையை விட்டு விட வேண்டும் என்பதே ஒரு ஆசைதானே! அது எல்லா உயிர்களிடமும், எல்லாக் காலத்திலும் தவறாமல் தோன்றக் கூடியது. அதனால்தானோ என்னவோ "அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து" என்கிறார் வள்ளுவரும்.  ஆனால் அது சில எல்லை கடந்து போகும் பொழுது தான் பிரச்சனையே ஏற்படுகிறது என்பதே உண்மை! இந்த உண்மையை அனுபவித்தான் உணர்ந்தவன் நான். அதனால் தான் உங்களுடன் என் கதையை பகிர்கிறேன்.   நான் பாடசாலையில் படிக்கும் பொழுதே முதலாவதாக வரவேண்டும் என்ற ஆசை நிறைய உடையவன். அதில் உண்மையில் எந்த பிரச்சனையும் இல்லை. அது உன்னை முன்னேற்றும். ஆனால் அந்த ஆசை என்றும் நிறைவேறவில்லை. நான் ஒரு கூலி தொழிலாளியின் மகன். ஆகவே வீட்டில் படிக்க, சொல்லித்தர பெரிதாக வசதி இல்லை. பாடசாலை படிப்பை மட்டுமே நம்பி இருந்தேன். நல்ல உடுப்பும் என்னிடம் இல்லை. வகுப்பு ஆசிரியர் என் தோற்றத்தை, நடை உடை பாவனையை பார்த்து என்னை பின் வாங்கில் அமர்த்தியது மட்டும் அல்ல,  என் கரடு முரடு தோற்றம் இவன் உருப்பட மாட்டான் என்றும் அவரை தீர்மானிக்க வைத்து விட்டது. ஆசை ஆர்வம் என்னிடம் நிறைய இருந்தும், நான் மெல்ல மெல்ல பின்னுக்கு தள்ளப் பட்டேன். அந்த வகுப்பு ஆசிரியர் என்னில் கவனம் செலுத்துவதே இல்லை!   காலம் போக நான் பத்தாம் வகுப்பு தேசிய பரீட்சையில், படுதோல்வி அடைந்து, பாடசாலையால் அகற்றப் பட்டேன். என் ஆசை எல்லாம் சுக்கு நூறாகியது! எப்படியும் நான் என் வகுப்பு ஆசிரியரை விட, பாடசாலை முதல்வரை விட, என்னுடன் படித்து, சிறந்த சித்தி பெற்று, இப்ப மருத்துவம், பொறியியல் துறைக்கு புக உயர் வகுப்பு படிப்பவர்களை விட, ஏன் இந்த நாட்டையே ஆளும் ஒருவனாக வரக்கூடாது என்ற ஒரு பெரும் ஆசை என்னைக் கவ்விக் கொண்டது. அதற்கு படிப்பு தேவை இல்லை என்பதை நான் அறிவேன்!. அதுவே என்னை ஊக்கம் கொடுத்தது!! பேராசையாக, பெரும் வியாதியாக என் உள்ளத்தில் மலர்ந்தது!!!    "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"    இப்படித்தான் என்னை அப்பொழுது பலர் நினைத்தார்கள். என் பேராசை உள்ளத்தில் புகைத்துக்கொண்டு இருப்பதையோ, எப்படியாவது அந்த நிலையை அடைய வேண்டும் என்ற வெறியையோ அவர்கள் அறியார்கள், பாவம் அவர்கள் !!   நான் மெல்ல மெல்ல கூலிவேலையில் இருந்து சிறு முதலாளியாக மாறினேன். வியாபாரத்தில் நான் எந்த கருணையும் காட்டுவதில்லை. எனக்கு அடியாட்கள் சேரத் தொடங்கினர். என் பேராசையை, வெறியை  வெளிப்படையாக  காட்டாமல் இருக்க  ஆண்டவன் சேவை ஒன்றை, என் வியாபாரத்துடன் ஆரம்பித்தேன். நான் இப்ப தரும தலைவன்! எனக்கே ஆச்சரியம் இப்ப !!    "வருடம்    உருண்டு    போக வருமாணம் உயர்ந்து    ஓங்க கருணை   கடலில்     மூழ்க மிருக - மனித அவதாரம்  நான்"   "தருணம்   சரியாய்      வர இருவர்   இரண்டாயிரம் ஆக ஒருவர்   முன்         மொழிய   தரும - தெய்வ அவதாரம்   நான்"     என் பழைய வாத்தியார் இப்ப என்னை வணங்குகிறார். பாடசாலை முதல்வர் கால் தொட்டு விசாரிக்கிறார். காலம் மாறுது ! கோலம் மாறுது, இது தான் வாழ்க்கை!! ஆனால் பேராசை திட்டம் போட்டுக் கொன்டே இருக்கிறது ! இப்ப நான் பெரும் முதலாளி, பெரும் சாமி, கூட்டம் இரண்டு இடமும் குறைவில்லை. வேடிக்கை என்ன வென்றால், எந்த பாடசாலையில் இருந்து நான் துரத்தப் பட்டேனோ, அதன் ஐம்பதாவது ஆண்டு விழாக்கு நானே தலைமை தாங்குகிறேன்! வெட்கம், அப்படி ஒன்று இருப்பதாக எனக்குத் தெரியவில்லை, அடித்து துரத்தியவனுக்கு கம்பளி வரவேற்பு!   "ஊருக்கு    கடவுள்     நான் பாருக்கு    வழிகாட்டி  நான் பேருக்கு    புகழ்       நான் பெருமதிப்பு கொலையாளி  நான்"   "குருவிற்கு  குரு       நான் குருடருக்கு கண்      நான் திருடருக்கு பங்காளி   நான் கருவிழியார் மன்மதன்  நான்"    என் பேராசை இத்துடன் நின்ற பாடில்லை, பாவம் புண்ணியம் , இது எல்லாம் எனக்கு தெரியாது. இன்னும் பதவி வேண்டும் , அதை எப்படியும் அடைய வேண்டும். இது ஒன்றே இப்ப என் பேராசை!     "குமிழி வாழ்வில் குதூகலமாக பிறந்து கும்மாளம் அடித்து குத்துக்கரணம் போட்டு குடை பிடித்து பதவி உயர்ந்து குபேரன் வாழ்வை கனவு கண்டேன்!"   கள்ள வழிகளில் கனவு நியமாவதும், பின் அது கண்டு பிடித்ததும் உடைவது ஒன்றும் புதினம் இல்லை, ஆனால் நான் அப்பொழுது யோசிக்கவில்லை. தேர்தலில் தில்லு முல்லு செய்து வென்று மந்திரியும் ஆகிவிட்டேன் !  என்னை மணம் முடிக்க அழகிகள் கூட்டம்  போட்டி போட தொடங்கி விட்டது. எங்கோ ஒரு மூலையில் கடைசி வாங்கில் இருந்தவன், எங்கோ ஒரு மாளிகையில், மஞ்சத்துக்கு போய் விட்டான்! இதைத் தான் விந்தை என்பதோ!!  ஆனால் ஒன்றை நான் மறந்து விட்டேன். அது தான் பேராசை பெரும் நஷ்டம்!!       "ஒவ்வொரு இதயத்தையும், ஒவ்வொரு மனதையும் ஒவ்வொரு ஆன்மாவையும் பேராசை தொற்றுகிறது ஒன்று ஒன்றாக அவனை ஏமாற்றி  ஒய்யாரமாக அவனில் வடுவாக மாறுகிறது!"   மக்கள் கூட்டம்  அரசுக்கு எதிராக எழுந்துவிட்டது.  கொள்ளையர்களே, ஏமாற்றி பிழைத்தவர்களே, அடித்த கொள்ளையை தந்து விட்டு சிறைக்கு போ ! எங்கும் ஒரே ஆர்ப்பாட்ட  ஒலி!  ஓடுவதற்கு இடம் தேடினேன், யாரும் தருவதாக இல்லை . எல்லாம் வெறிச் சோடி போய்விட்டது!    "நீர்க்கோல வாழ்வை நச்சி நான்  நீதியற்ற வழியில் நித்தம் சென்று நீச்சல் அடித்து செல்வம் சேர்த்து நீங்காத வாழ்வென கனவு கண்டேனே !"   பேராசை என்னும் நோயில் கட்டுண்டு, 'நல்லது, கெட்டது' எது என்பதைத் தெளிவாக ஆராய்ந்து அறியாத செயல்களை மேற் கொண்டு, இன்று ஒதுங்க இடம் இல்லாமல் தவிக்கிறேன். நான் இப்ப, இன்னும் என்னுடன் சேர்ந்து இருக்கும் அடியாட்கள் , பக்தர்கள் ஒரு சிலருடன் நாட்டை  விட்டு வெளியே களவாக, பணத்துடன் செல்வத்துடன் போய்க் கொண்டு இருக்கிறேன். மனைவி கூட என்னுடன் வர மறுத்துவிட்டார்.  பிடிபட்டால் நானே இல்லை!  உங்களுக்கு நான் கூறும் இறுதி வாக்கியம் இது தான்:   "ஒரு பரம ஏழைக்கும் ஒரு மிகப்பெரிய பணக்காரனுக்கும் இடையே உள்ள தொடர் ஓட்டத்துக்கு பெயர்தான் “பேராசை”!   இதற்கு பெயர் வைத்தது யார் என்று கேட்டால், அந்த பணக்காரனே தான்! அது மட்டும் அல்ல, பிறர் எவரும் தொட்டுவிட முடியாத தூரத்தில் இருக்க வேண்டும் என்று அவன் ஆசைப்படுகிறான். ஆனால், அந்த பட்டத்தை [“பேராசை”] அவர்கள், முன்னுக்கு வர முயற்சிக்கும் ஏழைகளுக்கு, முகம் தெரியாதவர்களுக்கு, சாமானியர்களுக்கு, உழைப்பாளர்களுக்கு சூட்டிச் சூட்டி, அவர்களை வரவிடாமல் தடுத்து மகிழ்கிறார்கள்! உண்மையில் இவர்களே, நானே பேராசை பிடித்தவன்!!   நன்றி    அன்புடன்   [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]         
    • பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளர் சல்மான் ருஷ்டி. கட்டுரை தகவல் எழுதியவர், ஆலன் யென்டோப் மற்றும் நூர் நாஞ்சி பதவி, பிபிசி 5 மணி நேரங்களுக்கு முன்னர் சல்மான் ருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மேடையில் தனக்கு நடந்த கோரத் தாக்குதலைப் பற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். புக்கர் பரிசு பெற்ற எழுத்தாளரான ருஷ்டி, தாக்குதலின் போது அவரது கண் 'வேகவைத்த முட்டையைப் போன்று' முகத்தின் மீது தொங்கியதாகவும், அந்தக் கண்ணை இழந்தது ஒவ்வொரு நாளும் அவரை சோகத்தில் ஆழ்த்துவதாகவும் குறிப்பிட்டார். தாக்குதல் சம்பவத்தை நினைவு கூறுகையில் "அன்று நான் இறந்து விடுவேன் என்று நினைத்தேன். ஆனால், அதிர்ஷ்டவசமாக அப்படி நடக்கவில்லை. பிழைத்துக் கொண்டேன்," என்கிறார். “Knife’’ (நைஃப்) என்னும் தனது புதிய புத்தகத்தை, தனக்கு நடந்த தாக்குதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்துவதாக ருஷ்டி கூறினார். ஆகஸ்ட் 2022இல் நியூயார்க்கில் உள்ள ஒரு கல்வி நிலையத்தில் அவர் விரிவுரை வழங்கத் தயாராகிக் கொண்டிருந்தபோது அவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. 27 விநாடிகள் நீடித்த அந்த தாக்குதலில், தன்னை தாக்க வந்த நபர், எப்படி படிக்கட்டுகளில் ஏறி வந்து, தன் கழுத்து, வயிறு உட்பட உடல் முழுவதும் 12 முறை கத்தியால் குத்தினார் என்பதை ருஷ்டி நினைவு கூர்ந்தார். "என்னால் என்னைத் தாக்குபவருக்கு எதிராகச் சண்டையிட முடியவில்லை, தப்பித்து ஓடவும் முடியவில்லை," என்று அந்தச் சம்பவத்தைப் பற்றி அவர் விவரித்தார். கத்தியால் தாக்கப்பட்டதும் அவர் தரையில் விழுந்தார். பெருமளவு ரத்தம் அவரைச் சுற்றி வெள்ளமாக ஓடியது. பின்னர் ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, ஆறு வாரங்களுக்குப் பின்னர் படிப்படியாக குணமடைந்தார்.   'ஒவ்வொரு நாளும் மன உளைச்சல்' படக்குறிப்பு,ஆலன் யென்டோப், லேடி ருஷ்டி மற்றும் சல்மான் ருஷ்டி. ஆலனும் சல்மானும் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நண்பர்கள். இந்தியாவில் பிறந்த 76 வயதாகும் பிரிட்டிஷ்-அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி, நவீன காலத்தின் மிகவும் செல்வாக்கு மிக்க எழுத்தாளர்களில் ஒருவர். அவர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றி உலகம் முழுவதும் தலைப்பு செய்தியாக பகிரப்பட்டது. சல்மான் 1988ஆம் ஆண்டு வெளியிட்ட 'தி சாத்தானிக் வெர்சஸ்' என்னும் புத்தகத்தால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடப்பட்டன. உயிருக்கு அச்சுறுத்தல்கள் ஏற்பட்டதால், பல ஆண்டுகள் தலைமறைவாக இருந்தார். "ஏதாவது ஒருநாள் பார்வையாளர்கள் மத்தியில் இருந்து ஒருவர் மேடையில் குதித்து என்னை தாக்கக் கூடும். இவ்வாறு என் மனதில் தோன்றாமல் இருந்திருந்தால் அது அபத்தமாக இருந்திருக்கும்," என்று தன் பயத்தைப் பற்றி வெளிப்படையாக ஒப்புக்கொண்டார்.   'கொலை முயற்சிக்கு இதுதான் காரணமா?' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சல்மான் தாக்கப்பட்டதையடுத்து, கருத்து சுதந்திரத்திற்கான ஆதரவை தெரிவிக்கும் பேரணி நியூயார்க்கில் நடைபெற்றது. முதன்முறையாக, ருஷ்டி தன்னைத் தாக்கியதாகக் கூறப்படும் நபரிடம் என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தன் எழுத்துகளின் வாயிலாக வெளிப்படுத்தியுள்ளார். நியூ ஜெர்சியில் வசிக்கும் 26 வயதுடைய ஹாடி மாதர் என்பவர் மீது சல்மான் ருஷ்டியை கத்தியால் குத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவருக்கு ஜாமீன் வழங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறையில் இருந்து நியூயார்க் போஸ்ட் ஊடகத்திற்கு மாதர் அளித்த பேட்டியில், சல்மானின் வீடியோக்களை யூடியூப்பில் பார்த்ததாகக் குறிப்பிட்டு, "இது போன்ற நேர்மையற்ற நபர்களை நான் வெறுக்கிறேன்" என்று கூறியுள்ளார். சல்மான் ருஷ்டி 2022இல் தனக்கு நிகழ்த்தப்பட்ட கோரத் தாக்குதல் பற்றியும் அந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் பற்றியும் ஒரு புதிய புத்தகத்தை வெளியிட்டார். இதையொட்டி அலன் யென்டோப் உடன் ஒரு நேர்காணலில் விரிவாகப் பேசினார். நைஃப் புத்தகத்தில், சல்மான் ருஷ்டி தன்னை தாக்கியவருடன் ஒரு கற்பனையான உரையாடலை நடத்துவது போன்றும், ருஷ்டிக்கு அந்த நபர் பதிலளிப்பது போன்றும் எழுதப்பட்டுள்ளது. "அமெரிக்காவில், பலர் நேர்மையானவர் போன்று நடிக்கிறார்கள், அவர்கள் முகமூடிகளை அணிந்துகொண்டு பொய் சொல்கிறார்கள். அவர்களைக் கொல்ல இது ஒரு காரணமாக இருக்குமா?" என்று அந்த நபர் கேட்பது போன்று புனையப்பட்டுள்ளது. ருஷ்டி இதுவரை தாக்குதல் நடத்திய மாதர் என்ற நபரைச் சந்தித்ததில்லை. ஆனால், வழக்கு விசாரணைக்கு வரும்போது நீதிமன்றத்தில் நேருக்கு நேர் சந்திக்க வாய்ப்புள்ளது. ருஷ்டியின் புத்தகத்தை மறுபரிசீலனை செய்ய தங்களுக்கு உரிமை உண்டு என்று பிரதிவாதி தரப்பு வழக்கறிஞர்கள் வாதிட்டதைத் தொடர்ந்து விசாரணை சற்று தாமதமானது. இந்த வழக்கு அடுத்து வரும் நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.   'தி சாத்தானிக் வெர்சஸ்' சர்ச்சையை ஏற்படுத்தியது ஏன்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,'தி சாத்தானிக் வெர்சஸ்' புத்தகம் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் தடைசெய்யப்பட்டது. சல்மான் ருஷ்டி 1981இல் 'மிட்நைட்ஸ் சில்ட்ரன்' என்னும் புத்தகத்தின் மூலம் புகழ் பெற்றார். அந்தப் புத்தகம் பிரிட்டனில் மட்டும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான பிரதிகள் விற்றது. ஆனால் அவரின் நான்காவது புத்தகம், 'தி சாத்தானிக் வெர்சஸ்', இஸ்லாமிய தீர்க்கதரிசி முகமதுவின் சித்தரிப்பு மற்றும் மதத்தைப் பற்றிய அதன் குறிப்புகள் சர்ச்சையை ஏற்படுத்தியது, மேலும் பல முஸ்லீம் பெரும்பான்மை நாடுகளில் புத்தகம் தடைசெய்யப்பட்டது. இரானின் அப்போதைய தலைவர் ஆயத்துல்லா ருஹோல்லா கொமேனி 1989இல் ஃபத்வா (மத ஆணை) ஒன்றை வெளியிட்டு ருஷ்டியின் படுகொலைக்கு அழைப்பு விடுத்து, புத்தக ஆசிரியரின் தலைக்கு 25 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அறிவித்தார். அந்த ஃபத்வா ரத்து செய்யப்படவே இல்லை. இதன் விளைவாக, ருஷ்டி ஏறக்குறைய பத்து ஆண்டு காலம் தலைமறைவாக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ருஷ்டிக்கு வந்த எண்ணற்ற கொலை மிரட்டல்களின் காரணமாக ஆயுதமேந்திய மெய்க்காப்பாளர்கள் அவருக்குப் பாதுகாப்பளித்தனர். நாத்திகவாதிகளாக மதத்தைப் பின்பற்றாத இஸ்லாமியர்களுக்கு மகனாகப் பிறந்த சல்மான் ருஷ்டி, கருத்து சுதந்திரத்திற்காக நீண்ட காலமாகக் குரல் கொடுத்து வருகிறார். தற்போது அது "மிகவும் கடினமாகிவிட்டது" என்று ருஷ்டி குறிப்பிடுகிறார். "இளைஞர்கள் உட்படப் பலர், கருத்து சுதந்திரத்தின் மீதான கட்டுப்பாடுகள் நல்லது என்ற கருத்தைக் கொண்டுள்ளனர்," என்பதை வருத்தத்துடன் குறிப்பிடும் ருஷ்டி "கருத்து சுதந்திரத்தின் முழு அம்சம் என்னவென்றால், நீங்கள் உடன்படவில்லை என்றாலும் அந்தக் கருத்தை நீங்கள் அனுமதிக்க வேண்டும்" என்கிறார். ரத்த வெள்ளத்தில் கிடந்தபோது, தனது தனிப்பட்ட உடமைகளைப் பற்றி எண்ணியது 'முட்டாள்தனமாக' பார்ப்பதாகவும் தனது ரால்ப் லாரன் உடை பாழாகிவிட்டதை எண்ணி அந்த நேரத்தில் வருத்தப்பட்டதாகவும் ருஷ்டி கூறினார். மேலும், தனது வீட்டுச் சாவியும் கிரெடிட் கார்டுகளும் தனது பாக்கெட்டில் இருந்து கீழே விழுந்துவிடுமோ என்றும் அவர் கவலைப்பட்டாராம். "நிச்சயமாக, இது நகைப்புக்குரியதுதான். ஆனால் அந்தக் கோர நிகழ்வை பின்னோக்கிப் பார்த்தால், அது என்னிடம் சொல்வது என்னவென்றால், எனக்குள் இறக்கக்கூடாது என்ற எண்ணம் ஒருபுறம் இருந்தது. எனக்கு கீழே விழுந்த அந்த வீட்டுச் சாவி வேண்டும், எனக்கு அந்த கிரெடிட் கார்டுகள் தேவைப்படும் என்று எனது உடமைகளைப் பற்றிய எண்ணங்களும் ஓடியது. இவை நான் உயிர் வாழ்வதற்கான உள்ளுணர்வு. 'நீங்கள் வாழப் போகிறீர்கள். வாழுங்கள், வாழுங்கள்...' என்று சொல்வதாகவே நான் பார்த்தேன்’’ என்றார். தாக்குதலுக்கு ஓராண்டு முன்பு, ருஷ்டி தனது ஐந்தாவது மனைவியான அமெரிக்க கவிஞரும் நாவலாசிரியருமான ரேச்சல் எலிசா கிரிஃபித்ஸை மணந்தார். லேடி ருஷ்டி பிபிசியிடம் பேசுகையில், தாக்குதல் பற்றிக் கேள்விப்பட்டதும், கத்திக் கூச்சலிட்டதாகக் குறிப்பிடுகிறார். "அது என் வாழ்க்கையின் மோசமான நாள்" என்றும் கூறினார். லேடி ருஷ்டி, சல்மான் ருஷ்டியின் கண் இமைகளை மருத்துவர்கள் ஒன்றாகச் சேர்த்து தைத்தபோது தாம் அருகில் இருந்ததை விவரிக்கிறார். "நான் அவருடைய கண்களை அதிகம் நேசிக்கிறேன். அன்று அவர் இரண்டு கண்களுடன் வீட்டை விட்டு வெளியேறினார், அதன் பின்னர் எங்கள் உலகம் மாறியது. இப்போது நான் அவருடைய ஒற்றைக் கண்ணை இன்னும் அதிகமாக நேசிக்கிறேன்" என்கிறார் லேடி ருஷ்டி. ருஷ்டி தனது நைஃப் புத்தகத்தை 'குறைந்தபட்ச காதல் கதை' என்றாலும், ஒரு திகில் கதையின் புத்தகம் என்றே குறிப்பிடுகிறார். "இந்த மோதலில் இரண்டு சக்திகள் இருந்தன. ஒன்று வன்முறை, மதவெறி. மற்றொன்று அன்பின் சக்தி. நிச்சயமாக, அன்பின் சக்தி என் மனைவி எலிசாவின் உருவில் கிடைத்தது. நடந்த சம்பவங்கள் இறுதியில் வெறுப்பின் சக்திகளைவிட அன்பின் சக்தி வலிமையானது என்பதை நிரூபித்தன. இந்த நிகழ்வைப் பற்றி நான் புரிந்துகொண்ட விதம் இதுதான்," என்கிறார் தீர்க்கமாக. மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வேன் என்று குறிப்பிடும் ருஷ்டி எதிர்காலத்தில் மிகவும் கவனமாக இருப்பேன் என்றும், பாதுகாப்பு நடைமுறைகளில் நான் திருப்தி அடையாவிட்டால் நிகழ்வில் பங்கு பெறப் போவதில்லை என்றும் தெரிவித்தார். மேலும் தாக்குதல் நடத்திய நபரைப் பற்றிப் பேசுகையில் அவர் "ஒரு அழகான பிடிவாதமான நபர்" என்று குறிப்பிட்டு, "எனக்கு கட்டுப்பாடுகள் நிறைந்த அல்லது கட்டுப்படுத்தப்பட்ட வாழ்க்கை வேண்டாம். நான் என் வாழ்க்கையை வாழப் போகிறேன்" என்றார் நம்பிக்கையுடன். https://www.bbc.com/tamil/articles/c51nxzjdrdxo
    • "பாகப்பிரிவினை"     குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் அல்லது வாரிசுகள் இரு பக்கமும் பாதிக்காமல் பூர்வீக சொத்தை பிரித்து எடுத்தல் என்று பாகப்பிரிவினைக்கு விளக்கம் கொடுக்கலாம். என்றாலும் அங்கு எதோ ஒரு விதமான அரசியல் செல்வாக்கு தலையிடுவதை தடுக்கமுடியாது என்பதே உண்மை. இது குடும்ப சொத்துக்கு மட்டும் அல்ல, இரு இனம் வாழும் நாட்டுக்கும் பொருந்தும்      அப்படியான ஒரு நாடுதான் நான் பிறந்து வளர்ந்த இலங்கை தீவு! தமிழர் , சிங்களவர் என இரு மொழி பேசும் மக்களும் அன்னியோன்னியமாக ஒரு தாய் மக்களாக இரண்டாயிரம் ஆண்டுகளாக வாழ்ந்த பூமி. பெப்ரவரி  4, 1948 , அது சுதந்திரம் என்று அடுத்த கட்டத்துக்கு போக, எல்லாம் தலைகீழாக மாறாத் தொடங்கியது.      "நம்பினார் கெடுவதில்லை நான்கு மறை தீர்ப்பு நல்லவர்க்கும் ஏழையர்க்கும் ஆண்டவனே காப்பு"     இது எல்லாம் எட்டில் மட்டும் தான் என எந்த அன்றைய தமிழ் தலைவர்களுக்கும் விளங்கவில்லை. ஆனால் முகம்மது அலி சின்னா ஓரளவு புத்திசாலி! என்றாலும் அவர் பின்னாளில் இன்னும் ஒரு பாகப்பிரிவினையை தமக்குளேயே, வங்காளதேசம் ஒன்றை  ஏற்படுத்திவிட்டார்.  அது இப்ப முக்கியம் இல்லை?     நான் இப்ப கூறூவது என் கதையே! நாம் ஒரு கிராமத்தில் , தோட்டம், வயல், வீடு என எல்லோரும் ஒன்றாக இருந்த காலம் . நான் என் பெற்றோருக்கு கடைக்குட்டி. எல்லோரிடமும் குட்டு வாங்கி சலித்தவன் நான். படிப்பு கொஞ்சம் மட்டம். ஆசிரியரும் இவன் உருப்படமாட்டான் என கழித்து விடப் பட்டவன்!        "தெருவோர   மதகில்  இருந்து ஒருவெட்டி   வேதாந்தம் பேசி உருப்படியாய் ஒன்றும்   செய்யா கருங்காலி   தறுதலை  நான்"   "கருமம்      புடிச்ச     பொறுக்கியென வருவோரும் போவோரும் திட்ட குருவும்     குனிந்து    விலக எருமை     மாடு       நான்"     இப்படித்தான் என் வாழ்வு அந்த கிராம வெளியில் உருண்டுகொண்டு இருந்தது. அந்த வேளையில் தான் என் பெற்றோர்கள் சென்ற பேருந்து விபத்துக்கு உள்ளாகி இருவரும் அந்த இடத்திலேயே மாண்டுவிட்டார்கள்      "மணலில் கதிரவன் புதையும் மாலையில்    மனதை கல்லாக்கி திங்கள் நன்னாளில்  மரணம் தழுவும் விபத்து எனோ? பேருந்து கவுண்டு விழுந்தது எனோ??"          "அம்மாவின் அறைக்கு மெல்ல போனேன்  அப்பாவுடன் அம்மா சாய்ந்து நின்றார்  அவளது சிறிய விரல்களை தொட்டேன் காதில் கூறி மறைந்து போனது!"     எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை, அம்மா என் காதில் என்ன கூறியிருப்பார் ?, ஒரு வேளை திட்டினவோ இவன் உருப்பட மாட்டான் என்று ?, அம்மா ஒரு முறையும் என்னை திட்டுவது இல்லை. இவன் பாவம், எல்லோரும் திருமணம் செய்து போக தனித்துவிடுவான், இவனுக்கு தான் என் மிஞ்சிய சொத்து எல்லாம் என்று எல்லோருக்கும் கூறுவார். அப்ப  அவர் [அம்மா] காதில் கூறியது என்ன ? என் மூளைக்கு புரியவில்லை!     அம்மாவின் அப்பாவின் பிரேதம் வீடடை விட்டு போகத் தொடங்கவே , அக்கா இருவரும் மெல்ல தங்களுக்குள் முணுமுணுக்க தொடங்கி விட்டார்கள். இவனுக்கு ஏன் இந்த சொத்துக்கள் எல்லாம். அம்மா எழுதி வைக்கவில்லை தானே?, அப்படி என்றால் இது எல்லோருக்கும் தானே ... கதை வளர்ந்து கொண்டு போனது. .. எனக்கு ஒரு வழக்கறிஞர் தெரியும் . நாம் பாகப்பிரிவினை போகலாம் , தம்பி இருவரும் கொள்ளி  வைத்துவிட்டுவரட்டும் ...  . நான் இரு அண்ணரின் கைகளையும் பிடித்துக்கொண்டு சுடுகாடு அதன் பின் போய்விட்டேன்.     எனக்கு இப்ப அம்மா என்ன கூறியிருப்பார் என்று புரிந்தது. நான் மக்குத்தான். மக்கு மக்கு என்று குட்டி கூட்டியே மக்கு ஆக்கப் பட்டவன். வளர விடவில்லையே? நானும் அம்மாவுடன் செல்லம் பொழிந்து பொழிந்து காலத்தை வீணாக்கிவிட்டேன்! இனி இதுபற்றி கதைத்து ஒன்றும் நடக்கப் போவதில்லை. அம்மா என்ன கூறியிருப்பார் ? திருப்ப திருப்ப அந்த நிகழ்வை மீட்டு மீட்டு பார்த்தேன்.        அப்ப தான், நான் அவர் விரலை தொடும் பொழுது, அதை மடித்து உறியில்  ஒரு போத்தலை காட்டியது ஞாபகம் வந்தது. நான் கடைக்குட்டி என்பதால் கொள்ளி என் கையாலே வைக்கப்பட்டது. வீடு திரும்பியதும் அந்த உறியை பார்க்கவேண்டும் போல் இருந்தாலும், இப்ப நான் மக்கு அல்ல, என் சூழ்நிலை, தனித்து விடப்பட்ட என்னை சிந்திக்க வைக்கிறது. ஆகவே கொஞ்சம் ஆற அமரட்டும், கூட்டம் களைந்து போகட்டும். அவர்கள் நால்வரும் ஒன்று சேர்ந்து கட்டாயம் பாகப்பிரிவினை ஒன்றுக்கு வழிவகுக்க வழக்கறிஞரிடம் ஆலேசனை கேட்க போவார்கள். அதுவே சந்தேகம் ஏற்படாத சூழலாகும். அப்பொழுது அதை பார்க்க எண்ணினேன். எனக்கே நான் ஆச்சரியமாக இருந்தேன்!. இந்த மாக்குவா திட்டம் போடுது?     எட்டு செலவு முடிய, அந்த சந்தர்ப்பம் விரைவில் எனக்கு கிடைத்தது. மெல்ல உறியை எட்டிப்பார்த்தேன். என்ன ஆச்சரியம் அதில் ஒரு போத்தல், எதோ கடிதங்களால் உள்ளே அடைக்கப்பட்டு இருந்தன. அதை எடுத்து, என் அறையில் என் உடுப்புக்களுக்கு இடையில் மறைத்து வைத்தேன் . அதில் என்ன எழுதி இருக்கும்? எனக்கு புரியக் கூடியதாக அது இருக்கவில்லை. முழுக்க முழுக்க ஆங்கிலத்தில், முத்திரையிட்டு என் அம்மா , அப்பா மற்றும் இருவரின் கையொப்பத்துடன் இருந்தது. அப்ப தான் என் நண்பனின் ஞாபகம் வந்தது. அவன் படிப்பில் சூரன். இப்ப பொறியியல் பீட மாணவன். அடுத்த கிழமை விடுதலையில் வருவதாக ஞாபகம். ஒரு கிழமைதானே , மன ஆறுதலுடன் பொறுத்திருந்தேன். அப்பொழுது என் மூத்த நால்வரும் மிக மகிழ்வாக கதைத்துக்கொண்டு வருவது வேலியால் தெரிந்தது. நான் இப்ப முன்னைய மக்கு இல்லையே, எனக்குள்ளே சிரித்துக்கொண்டு அவர்களை முன்போலவே மக்காக வரவேற்றேன்!     என் நண்பனும் அடுத்த கிழமை வர, அவனிடம் எல்லாவற்றையும் கூறி அந்த கடித்த கட்டையும் கொடுத்தேன். அவன் அதை வாசித்தவுடனேயே ,பயப்படாதே, மிஞ்சிய சொத்து எல்லாம் பூரணமாக உன் பெயரில், சாட்சியுடன் அடுத்த ஊர் வக்கீல் மூலம் எழுதி வைத்துவிட்டார்கள். இனி ஒன்றும் செய்ய முடியாது. நீ மக்கு இல்லை. அவர்கள் தான் மக்கு என்று காட்டும் தருணம் வந்துவிட்டது. நீ ஒன்றும் ஒருவருக்கும் சொல்லாதே. அவர்கள் பாகப்பிரிவினை வழக்கு போடட்டும், செலவழிக்கட்டும். தீர்ப்பு வரும் கட்டத்தில், இதை நீதிபதியிடம் கொடு. பாவம் அவர்கள் இருந்த சொத்தில் பலவற்றை இழக்கப் போகிறார்கள் . மக்கு என்ற பட்டத்தையும் உன்னிடம் இருந்து வாங்க போகிறார்கள் என்று சிரித்தான் . நானும் முதல் முதல் அவனுடன் சேர்ந்து பலமாக சிரித்துவிட்டேன்!     முகம்மது அலி சின்னா, சேக் முஜிபுர் ரகுமான் ... எல்லோரும் என் கண்ணில் தோன்றினார்கள், ஆனால் இவர்களையும் வென்ற அறிஞன் என்று என் உள் மனம் சொல்லிக்கொண்டு இருந்தது. என் நண்பனை கட்டிப்பிடித்து, அவன் அன்புக்கு, ஆறுதலுக்கு கன்னத்தில் முத்தம் ஒன்று பதித்தேன்! மக்காக அல்ல , எழுந்து நிற்கும் மனிதனாக!!       [கந்தையா தில்லை விநாயக லிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]   
    • ஈரான் இஸ்ரேலை நேரடியாகத் தாக்கியபோதும் , இஸ்ரேல் திரும்ப ஈரானைத் தாக்காமல்  இருப்பது  தங்களுக்கு அவமானமாக இருக்கிறது என்பது மட்டும் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது.  😁  
    • அதேதான். இரண்டு கருத்திலும் சொற்கள் மாறியிருந்தாலும் ஒரே விடயம்தான்.  🙂 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.