Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம் 2


Recommended Posts

வகுப்பிற்கு வருகை தந்த மாணவர்களுக்கு வாத்தியாரின் பணிவான வணக்கங்கள்

 

 

வாத்தியாருக்கு மாணவர்கள்தான் பணிந்து பணிவாக வணக்கங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்! பார்த்திருக்கிறேன்!. :)  இதென்ன புது வழக்கமாயிருக்கிறது! :blink:  இப்போதெல்லாம் இந்தியா, சிறீலங்காவுக்குப் பணிந்து பணிவாக வணக்கங்கள் சொல்வதை வாத்தியார் ஒளிஞ்சிருந்து பார்த்திட்டாரோ...? :o .

Link to comment
Share on other sites

  • Replies 106
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாருக்கு மாணவர்கள்தான் பணிந்து பணிவாக வணக்கங்கள் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்! பார்த்திருக்கிறேன்!. :)  இதென்ன புது வழக்கமாயிருக்கிறது! :blink:  இப்போதெல்லாம் இந்தியா, சிறீலங்காவுக்குப் பணிந்து பணிவாக வணக்கங்கள் சொல்வதை வாத்தியார் ஒளிஞ்சிருந்து பார்த்திட்டாரோ...? :o .

வாத்தியார் முன்னோடியாகப் பணிவாக இருந்தால் மட்டுமே மாணவர்களும் பணிவாக இருப்பார்கள் என்ற ஆதங்கம் தான் பாஞ்ச் :D

 

 

ஆனால் உங்களைப் போனற கெட்டிக்கார மாணவர்களிடம் இதெல்லாம் எடுபடுமா

சிலவேளை நானும் உங்களுடன் சேர்ந்து விடுவேனோ :wub:

என்ற பயம் மட்டும் வந்து வந்து போகும்

 

அது தான் இடைக்கிடை வகுப்பிற்கு நான் வருவதில்லை. :D  :lol:  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த வாத்தியாரிட்டப் படிச்சு நாங்கள் உருப்பட்ட மாதிரித்தான்.

எனக்குச் சந்தேகம் கிருபன் மற்றவைக்கு உருண்டை ஏதும் குடுத்துதோ???? வகுப்புக்கு ஒருத்தரையும் காணேல்ல.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குச் சந்தேகம் கிருபன் மற்றவைக்கு உருண்டை ஏதும் குடுத்துதோ???? வகுப்புக்கு ஒருத்தரையும் காணேல்ல.

உருண்டை எல்லாம் இலவசமாகக் கொடுப்பதில்லை. ஒழுங்காப் பள்ளிக்கூடம் போகாதவைக்கு உருட்டுக்கட்டையால அடிதான் கொடுக்கப்படும். :lol:

 

இலக்கணம் படிக்க முடியாத இலட்சணத்தில எப்படித்தான் தமிழை பிள்ளைகளுக்குப் படிப்பிக்கவேண்டும் என்று நினைக்கின்றார்களோ தெரியவில்லை! <_<

Link to comment
Share on other sites

வாத்தியார் முன்னோடியாகப் பணிவாக இருந்தால் மட்டுமே மாணவர்களும் பணிவாக இருப்பார்கள் என்ற ஆதங்கம் தான் பாஞ்ச் :D

 

 

ஆனால் உங்களைப் போனற கெட்டிக்கார மாணவர்களிடம் இதெல்லாம் எடுபடுமா

சிலவேளை நானும் உங்களுடன் சேர்ந்து விடுவேனோ :wub:

என்ற பயம் மட்டும் வந்து வந்து போகும்

 

அது தான் இடைக்கிடை வகுப்பிற்கு நான் வருவதில்லை. :D  :lol:  :icon_idea:

 

வாத்தியார், வாத்தியார்தான். :icon_idea:ஒருவரை மடக்கி வழிக்குக் கொண்டுவர, உச்சந்தலை அடி என்கிறது இதைத்தான். :D பணிகிறேன் வாத்தியார். :wub: நான் ஒன்றுமில்லை. :(  :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகுபதம்
 

 

பெயர்ப்பகுபதம்
 

1.  சிலம்பன் - சிலம்பு என்ற பொருளை  உடையவன் ஆகவே இது பொருள் பெயர்ப் பகுபதம்
2. நெல்லையான் -நெல்லை  என்ற இடத்தால் வந்த பெயர். ஆகவே இது இடப் பெயர்ப் பகுபதம்
3. சித்திரையான் :சித்திரை  ஒரு மாதம்/ காலம்  ஆகவே ஒரு குறிப்பிட்ட காலத்தால் வந்த பெயர். ஆகவே இது காலப் பெயர்ப் பகுபதம்
4.கண்ணன் : கண் ஓர் உறுப்பு / சினையால் வந்த பெயர். ஆகவே இது சினைப் பெயர்ப் பகுபதம், அல்லது உறுப்புப் பெயர்ப் பகுபதம்
5. நல்லவன்  : ஒரு குணத்தால் வந்த பெயர். ஆகவே இது குணப் பெயர்ப் பகுபதம்
6. அறிஞன் : ஒரு செயல் அல்லது தொழிலால் வந்த பெயர். ஆகவே இது தொழில் பெயர்ப் பகுபதம்
ஆக, பெயர்ப் பகுபதத்தில் மொத்தம் ஆறு வகைகள். இவற்றைப் புரிந்துகொள்ள சில உதாரணங்களைத் தருகிறேன். பணக்காரன், ராக்கோழி, திருடன், தொப்பையன், நாட்டுப்புறத்தான், உத்தமன்

 

வினைப் பகுபதம்.

 

இதில் இரண்டு வகைகள்:
 

1.வினை  முற்று
2. வினை எச்சம்
 

இங்கே ‘வினை’ என்பது ஒரு செயலைக் குறிக்கிறது. அது முற்றுப்பெற்றுவிட்டதா அல்லது மீதமிருக்கிறதா என்பதைப் பொறுத்து அதனை முற்று அல்லது எச்சம் என்று அழைக்கிறோம்.
 

உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதில் நடத்தல் என்ற வினை (செயல்) முற்றுப்பெற்றுவிட்டது. ஆகவே, இது ”முற்று”.
அடுத்து, கிட்டத்தட்ட இதேமாதிரி இன்னும் இரு சொற்கள், ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை. இவற்றுக்கும் ‘நடந்தான்’க்கும் என்ன வித்தியாசம்?
’நடந்த’, ‘நடந்து’ என்பவையும் நடத்தல் என்ற வினையைக் குறிப்பதுதான். ஆனால், அந்தச் செயல் இங்கே முற்றுப்பெறவில்லை. இவற்றைத் தொடர்ந்து இன்னொரு சொல் வரவேண்டும். இதுபோல:
* நடந்த ராமன்
* நடந்த நாடகம்
* நடந்து முடித்தான்
ஆக, ‘நடந்தான்’ என்பது முற்று, ‘நடந்த’, ‘நடந்து’ என்பவை எச்சம், விஷயம் முற்றுப்பெறாமல் இன்னும் ஏதோ எஞ்சியுள்ளதால் அந்தப் பெயர்.
 

எச்சத்தில் இரண்டு வகை உண்டு:
* பெயரெச்சம்
* வினையெச்சம்
 

இவற்றைப் புரிந்துகொள்வது மிக எளிது. எச்சத்துக்குப் பின்னால் ஒரு பெயர்ச்சொல் வந்தால் அது பெயரெச்சம், வினைச்சொல் வந்தால் அது பெயரெச்சம்.
உதாரணமாக:
* ‘நடந்த ராமன்’ என்பதில் ‘நடந்த’க்குப் பின்னால் ‘ராமன்’ என்ற பெயர்ச்சொல் வருகிறது, ஆகவே, அது பெயரெச்சம்.
* ‘நடந்து முடித்தான்’ என்பதில் ‘நடந்து’க்குப் பின்னால் ’முடித்தான்’ என்ற வினைச்சொல் வருகிறது. ஆகவே, அது வினையெச்சம்.
 

இந்த “முற்று”வில் ஒரு சிறப்பு வகை,

 

தெரிநிலை வினைமுற்று.
 

‘தெரிநிலை’ என்றால், நிலைமை தெரிகிறது என்று அர்த்தம், அதாவது ஒரு சொல் அங்கே என்ன நடக்கிறது என்கிற நிலைமையைத் தெரிவிக்கிறது.
 

 

உதாரணமாக,

 

சிவா முட்டைத்  தோசை சாப்பிட்டான்’ என்ற வாக்கியத்தை எடுத்துக்கொண்டு ஆராய்வோம்
 இங்கே சிவா  என்பது பெயர்ச்சொல்
முட்டைத்தோசை என்பதும் பெயர்ச்சொல்
 சாப்பிட்டான் என்பது வினைச்சொல், இதோடு அந்தச் செயல் முற்றுப்பெறுவதால், வினை முற்று
 வெறும் வினைமுற்று அல்ல, தெரிநிலை வினைமுற்று
‘தெரிநிலை’ என்று சொல்லும் அளவுக்கு, இந்தச் சிறிய சொல் அப்படி என்ன விஷயங்களைத் தெரிவிக்கிறது? இதற்கான நன்னூல் சூத்திரம்:
 

செய்பவன், கருவி, நிலம், செயல், காலம்
செய்பொருள் ஆறும் தருவது வினையே.
 

ஆக, இதிலிருந்து நாம் ஆறு விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாம்?
* செய்பவன் : யார் செய்தார்கள்? (சிவா )
* கருவி : எதைக் கொண்டு செய்தார்கள்? (கை )
* நிலம் : எங்கே செய்தார்கள்? (ஏதோ ஒரு இடத்தில் )
* செயல் : என்ன செய்தார்கள்? (சாப்பிட்டார்கள்)
* காலம் : எப்போது செய்தார்கள்? (ஏற்கெனவே சாப்பிட்டு முடித்துவிட்டார்கள்)
* செய்பொருள் : எதைச் செய்தார்கள்? அதாவது, எதைச் சாப்பிட்டார்கள்? (முட்டைத்தோசை)
இப்படி ஒரு தெரிநிலை வினை முற்றை வைத்துக்கொண்டு ஆறு விதமான விஷயங்களைப்பற்றிப் பேசலாம், கேள்வி கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். .

 

அடுத்து, வினையாலணையும் பெயர்.
 

இதனை
 

வினை + ஆல் + அணையும் + பெயர்
என்று பிரிக்கவேண்டும். அதாவது, ஒரு செயலைச் செய்பவருக்கு அதுவே பெயராக வருவது.
உதாரணமாக
 வந்தவர்
சென்றவர்
 பாடியவர்
 சிரித்தவர்
நடந்தவர்
நடக்கிறவர்
 நடக்கப்போகிறவர்… இந்தச் சொற்கள் அனைத்திலும், ஒரு செயல் வருகிறது, அதுவே அந்தச் செயலைச் செய்தவருக்குப் பெயராகிவிடுகிறது.

ஆகவே, இவை வினையாலணையும் பெயர்கள்.

 

இப்போது ஒரு வாக்கிய உதாரணத்தைப் பார்ப்போம்: ‘
மேடையில் பாடியவன் நன்றாகப் பாடினான்’.

இங்கே பாடியவன், பாடினான் என்று இரண்டு சொற்கள் உள்ளன. இரண்டுக்கும் வேர்ச்சொல் ‘பாடுதல்’ என்ற வினைதான், ஆனால், இவற்றில் எது வினைமுற்று? எது வினையாலணையும் பெயர்?
 

வினைமுற்று, வினையாலணையும் பெயருக்கு நாம் பார்த்த விளக்கங்களை நினைவுபடுத்திக்கொள்ளுங்கள். பதில் கண்டுபிடிப்பது சுலபம்:
வினைமுற்று என்றால், அத்துடன் அந்தச் செயல் நிறைவு பெறவேண்டும், ‘பாடியவன்’ என்று சொன்னால் அந்தச் செயலோ, அந்த வாக்கியமோ நிறைவு பெறுவதில்லை, ஆகவே, அது வினைமுற்றாக இருக்கமுடியாது. ‘பாடினான்’தான் வினைமுற்று
 

வினையாலணையும் பெயர் என்றால், ஒரு செயலைச் செய்தவருக்கு அதுவே பெயராகவேண்டும், பாடியதால் (வினை) அவர் பாடியவன் (பெயர்). ஆகவே இது வினையாலணையும் பெயர்.
 மேலே ஒருவரை ‘அறிஞர்’ என்று சொன்னோம், அதற்குத் தொழில் பெயர்ப் பகுபதம் என்று பெயர் சூட்டினோம்.
ஆனால் இங்கே ‘பாடியவன்’ என்று சொல்லி அதை வினையாலணையும் பெயர் என்கிறோம். இரண்டும் ஒரேமாதிரிதானே இருக்கிறது?
 இல்லை. சில முக்கியமான வித்தியாசங்கள் உண்டு:
 

1: வினையாலணையும் பெயர் காலம் காட்டும், தொழில் பெயர் காலம் காட்டாது
2: தொழில் பெயர் படர்க்கையில்மட்டுமே வரும், வினையாலணையும் பெயர் தன்மை, முன்னிலை, படர்க்கை ஆகிய மூன்றிலும் வரும்

 

உதாரணமாக, கிட்டத்தட்ட ஒரேமாதிரியான இரண்டு சொற்களை எடுத்துக்கொண்டு முதல் வித்தியாசத்தைமட்டும் பேசுவோம்: பாடகர் & பாடியவர்.
‘பாடகர்’ என்று சொல்லும்போது, அவர் முன்பு பாடினாரா, இப்போது பாடுகிறாரா, இனிமேல்தான் பாடப்போகிறாரா என்பது தெரியவில்லை.
காலம் காட்டவில்லை. ஆகவே, அது தொழில் பெயர்

ஆனால் ‘பாடியவன்’ என்று சொல்லும்போது, அவர் ஏற்கெனவே பாடிவிட்டார் (கடந்த காலம்) என்பது தெரிகிறது. காலம் காட்டுகிறது. ஆகவே, அது வினையாலணையும் பெயர்

 

அடுத்து, இரண்டாவது வித்தியாசத்தை எடுத்துக்கொள்வோம்.
அதில் தன்மை, முன்னிலை, படர்க்கை என்ற மூன்று நிலைகளைப்பற்றிப் பேசுகிறோம்.
 

பேசுபவர் தன்னைப்பற்றியோ ஒரு குழுவாகத் தங்களைப்பற்றியோ சொல்வது தன்மை (நான், எனது, என்னுடைய, எனக்கு, எங்களுக்கு).
 

பேசுபவர் முன்னிலையில், அதாவது, தனக்கு முன்பாக நிற்கிற ஒருவரைப்பற்றியோ, அல்லது ஒரு குழுவைப் பற்றியோ சொல்வது முன்னிலை (நீ, உனது, உன்னுடைய, உனக்கும் உங்களுக்கு)
 

இவர்கள் பேசும் இடத்திலேயே இல்லாத ஒருவரைப்பற்றிப் பேசினால், அது படர்க்கை (அவன், அவள், அவனுடைய, அவளுடைய, அவனுக்கு, அவளுக்கு)

 

இந்தப் பின்னணியில் யோசிக்கும்போது, தொழில் பெயர் எப்போதும் படர்க்கையில்மட்டுமே வரும், அதாவது, நீங்களோ நானோ அல்லாத ஒரு மூன்றாம் மனிதரைப்பற்றிமட்டுமே அது பேசும்.
உதாரணமாக, பாடகர், கவிஞர், இயக்குநர், தையல்காரர், நடனக்கலைஞர்… என்பனவற்றைக் கூறலாம்

ஆனால் வினையாலணையும் பெயர் அப்படியில்லை. அது தன்மையிலும் வரும், முன்னிலையிலும் வரும், படர்க்கையிலும் வரும்.

:
 பாடினேன் (பாடிய நான், தன்மை)
 பாடினாய் (பாடிய நீ, முன்னிலை)
 பாடியவன் (பாடிய இன்னொருவன், படர்க்கை)
 ‘பாடினேன்’ என்றால் பாடிய செயல் முற்றுப்பெற்றுவிடுகிறதே. அது வினை முற்றுதானே, வினையாலணையும் பெயர் அல்லவே.

”பாடினேன்” என்ற சொல் வினை முற்றாகவும் வரும் (நான் சிறப்பாகப் பாடினேன்), அது வினையாலணையும் பெயராகவும் வரும் (சிறப்பாகப் பாடினேன் ஆதலால் நான் பரிசு பெற்றேன்).
.
‘:
.
பெயர்ச்சொல் வகைகள் (பொருள், இடம், காலம், சினை / உறுப்பு, குணம், தொழில்)
 வினைச்சொல் வகைகள் (முற்று, எச்சம்)
எச்சத்தின் வகைகள் (பெயர், வினை)
தெரிநிலை வினை முற்று
 வினையாலணையும் பெயர்
 வினையாலணையும் பெயர், தொழில் பெயர் வித்தியாசம்
 தன்மை, முன்னிலை, படர்க்கை

 

 பகுதி

 

எல்லாப் பகுபதங்களிலும் இதுதான் முதலில் வரும், நேரடிப் பொருள் தரும், அந்தச் சொல்லையே அதுதான் உருவாக்கும்.
உதாரணமாக, ‘நடந்தான்’ என்ற சொல்லில் உள்ள ‘நட’ என்பதுதான் பகுதி. அதிலிருந்துதான் அந்தச் சொல் ‘நட’ப்பதைக் குறிப்பதாக மாறுகிறது.
இங்கே ‘நட’ என்ற பகுதியை எடுத்துவிட்டுப் ‘பற’ என்ற இன்னொரு பகுதியைச் சேர்த்தால், அந்தச் சொல் ‘பறந்தான்’ என்று மாறிவிடும், ‘பற’ப்பதைக் குறிப்பதாகிவிடும்.
சில நேரங்களில் பகுதி இப்படி நேரடியாக வராது, உருமாறிக் காணப்படும், வளைத்துதான் வெளியில் எடுக்கவேண்டும். உதாரணமாக, ‘வந்தான்’ என்ற சொல்லின் பகுதி, ‘வா’, ‘சென்றான் என்ற சொல்லின் பகுதி, ‘செல்’.
 

 விகுதி

 

இது சொல்லின் நிறைவாக நிற்கும். பகுதியில் தொடங்கிய பொருளை முழுமை செய்யும். இதை மாற்றினால் சொல்லின் தன்மையும் மாறக்கூடும்.
உதாரணமாக, அதே ‘நடந்தான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம்:
* தொடக்கத்தில் வரும் ‘நட’ என்பது பகுதி
* நிறைவாக வரும் ‘அன்’ என்பது விகுதி
இங்கே ‘அன்’ என்ற விகுதிக்குப் பதிலாக ‘அள்’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தாள்’ என்று மாறிவிடும். ஆண்பால் பெண்பாலாகிவிடும்.
அதே இடத்தில் ‘அள்’க்குப் பதில் ‘அது’ என்ற விகுதியைச் சேர்த்தால், இந்தச் சொல் ‘நடந்தது’ என்று மாறிவிடும். உயர்திணை அஃறிணையாகிவிடும். இதேபோல் நடந்தது, நடந்தன, நடந்தனர் என்று அடுக்கிக்கொண்டே போகலாம்.
முக்கியமான விஷயம், இந்தச் சொற்கள் அனைத்திலும் பகுதி ஒன்றுதான் (நட), ஆனால் விகுதி மாற மாற, அந்தச் சொல்லின் தன்மை, பயன்பாடு எல்லாமே மாறிவிடுகிறது.
ஆக, பகுதி என்பது சொல்லின் பொருளை உருவாக்குகிறது, விகுதி என்பது அதை வேறுபடுத்துகிறது. ஆண், பெண், அஃறிணை, உயர்திணை, ஒருமை, பன்மை என்று பிரித்துக் காட்டுகிறது.

பகுதி, விகுதி இரண்டும் ஒரு பகுபதத்துக்கு முக்கியம். மற்ற நான்கு உறுப்புகளும் இல்லாவிட்டால்கூட, இவை இரண்டுமட்டுமே ஒரு சொல்லை உருவாக்கிவிடமுடியும்.
உதாரணமாக, ‘நம்மை’ என்ற சொல்லில், நாம் + ஐ எனப் பகுதி, விகுதிமட்டுமே வந்துள்ளது. மற்ற பகுபத உறுப்புகள் எவையும் இல்லை.
 

 இடைநிலை

 

பெயரைக் கேட்டதும் புரிந்திருக்கும், பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே இருக்கும் உறுப்புதான் இது.
உதாரணமாக, ’வருகிறான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?
இதில் ‘வா’தான் பகுதி என்பது புரிகிறது, நிறைவாக வரும் ‘ஆன்’ விகுதி என்பதும் புரிகிறது. இரண்டுக்கும் நடுவில் ‘கிறு’ என்று ஏதோ இருக்கிறதே.
அதுதான் இடைநிலை. வா + கிறு + ஆன் = வருகிறான்.

 

பகுதி என்பது ஒரு பெயரையோ செயலையோ காட்டும், விகுதி என்பது ஆண், பெண், உயர்திணை, அஃறிணை, ஒருமை, பன்மை வித்தியாசத்தைக் காட்டும், இடைநிலை என்ன செய்யும்?
அது காலத்தைக் காட்டும். உதாரணமாக இந்த மூன்று சொற்களைப் பாருங்கள்: செய்தான், செய்கிறான், செய்வான்.
இந்த மூன்றிலும் பகுதி ஒன்றுதான் (செய்), விகுதியும் ஒன்றுதான் (ஆன்), ஆனால் இடைநிலை மாறுகிறது. இப்படி:

செய் + த் + ஆன்
 செய் + கிறு + ஆன்
 செய் + வ் + ஆன்

 

‘த்’ இடைநிலையாக உள்ளபோது, அந்தச் சொல் கடந்த காலத்தைக் குறிக்கிறது,

அதே சொல்லில் ‘கிறு’ இடைநிலையாக இருந்தால், நிகழ்காலம்,

‘வ்’ இடைநிலையாக இருந்தால், எதிர்காலம்.

இப்படி ஒரு பகுபதத்தின் இடைநிலையை வைத்து அது எப்போது நிகழ்ந்தது என்பதைத் தெரிந்துகொள்ளலாம்:

கடந்த காலத்தைக் காட்டும் இடைநிலைகள் நான்கு உள்ளன
அவை, த், ட், ற், இன்.
 

உதாரணங்கள்:
செய்தான், உண்டான், விற்றான், பாடினான்.

 

நிகழ் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் மூன்று.
அவை
கிறு, கின்று, ஆநின்று. 
 

உதாரணங்கள்:
செய்கிறான், செய்கின்றான், செய்யாநின்றான்.

இதில் ‘ஆநின்று’ என்பது இப்போது புழக்கத்தில் இல்லை. தெரிந்துவைத்துக்கொள்வோம்.
 

எதிர் காலத்தைக் காட்டும் இடைநிலைகள் இரண்டு:
ப், வ். 
 

உதாரணங்கள்:
 உண்பான், செய்வான்.
 
இந்தச் சொற்களைப் பகுதி, விகுதி, இடைநிலை என்று பிரித்துப் பாருங்கள்.
 வந்தான்
 வருவான்
 நடக்கின்றான்
 படித்தான்
 உண்டோம்
 உண்போம்
 எழுதுவேன்
 பாடினாள்
 குதித்தது
 குதிக்கின்றனர்
 

இந்தச் சொற்களில் பகுதி, விகுதி, இடைநிலை ஆகியவற்றை எளிதாகக் கண்டுபிடிக்கலாம் . அவைதவிர வேறேதும் கண்ணில் தெரிகின்றதா?

உதாரணமாக, ‘படித்தான்’ என்ற சொல்லைப் பிரிப்போமா?
* ‘படி’ பகுதி
* ‘ஆன்’ விகுதி
* நடுவில் ’த்’ என்பது இடைநிலை
ஆனால் அங்கே ஒரு ‘த்’ இல்லை, இரண்டு ‘த்’ இருக்கிறது.
 

படி + த் + த் + ஆன்.
இவற்றில் ஒரு ‘த்’ இடைநிலை, புரிகிறது, இன்னொரு ‘த்’?
 

அதற்குப் பெயர் ‘சந்தி’. மேலே நாம் பார்த்த பகுபத உறுப்பிலக்கணப் பட்டியலில் நான்காவதாக உள்ளது.
 பல ரயில் பாதைகள் ஒருங்கிணையும் இடத்துக்கும் ‘சந்திப்பு’ என்றுதான் பெயர்.
ஆக, ‘சந்தி’ என்றால் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் ஒன்றுகூடுவது. பகுபத உறுப்பிலக்கணத்தில் பகுதி, இடைநிலை ஆகியவற்றைச் சேர்ப்பது சந்தி.

படித்தான்’ என்பதை நான்காகப் பிரித்துப் பார்ப்போம்.
முதலில் வருவது (1) ’படி’,
முடிவில்  வருவது (4) ’ஆன்’,
நடுவில் வருபவை (2) ’த்’
மற்றும் (3) ’த்’.
 

இதில் (1) ‘படி’ பகுதி, (4) ‘ஆன்’ விகுதி என்பதில் யாருக்கும் எந்தக் குழப்பமும் இருக்காது. (2), (3) என வரும் ‘த்’களில் எது இடைநிலை, எது சந்தி?
இதுமாதிரி குழப்பம் வரும்போது, விகுதிக்குப் பக்கத்தில் இருப்பதுதான் இடைநிலை என்று எடுத்துக்கொள்ளவேண்டும்.

 

அதாவது
‘த்’ இடைநிலை.

அப்படியானால்,
 ‘த்’ சந்தி. அது என்ன செய்கிறது?
 
‘படி’ என்கிற பகுதியையும்,
 ‘த்’ என்கிற இடைநிலையையும் சேர்க்கிறது.

 

அடுத்து, ‘கண்டான்’ என்ற சொல்லை எடுத்துக்கொள்வோம். இதை எப்படிப் பிரிப்பீர்கள்?
காண் : பகுதி
ட் : இடைநிலை
 ஆன் : விகுதி
 

இதையே கொஞ்சம் மாற்றி ‘கண்டனன்’ என்று எழுதுவோம். இது நாம் சாதாரணமாகப் பயன்படுத்துகிற சொல் இல்லைதான். ஆனாலும், இலக்கணப் பாடத்துக்காக ஒருமுறை அப்படி எழுதிப் பார்ப்போம்.
‘கண்டனன்’ என்ற சொல்லை நீங்கள் எப்படிப் பிரிப்பீர்கள்?
 

காண் + ட் + அன் + அன்
வழக்கம்போல், (1) ‘காண்’, (2) ‘ட்’, (3) ‘அன்’, (4) ‘அன்’.எனப் பிரிக்கலாம்

இதில் (1) ‘காண்’ பகுதி, (4) ‘அன்’ விகுதி. அதில் சந்தேகமில்லை. நடுவில் வரும் (2) ‘ட்’, (3) ‘அன்’ ஆகியவற்றை என்னவென்று அழைப்பது?
’ட்’ என்பது கடந்த காலத்தைக் காட்டுகிறது. ஆகவே (2) ‘ட்’தான் இடைநிலை.
அப்படியானால் (3) ‘அன்’ சந்தி. இல்லையா?
 

இல்லை. சந்தி என்பது பகுதி, இடைநிலைக்கு நடுவே வரவேண்டும். ஆனால் இந்த ‘அன்’, இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே வருகிறது. விகுதியைச் சார்ந்து வருவதால் அதன் பெயர் சாரியை.

 பதினேழு வகையான சாரியைகள் உண்டு. அவை: ‘அன்’, ‘ஆன்’, ‘இன்’, ‘அல்’, ‘அற்று’, ‘இற்று’, ‘அத்து’, ‘அம்’, ‘தம்’, ‘நம்’, ‘நும்’, ‘ஏ’, ‘அ’, ‘உ’, ‘ஐ’, ‘கு’, ‘ன’.
 

சந்தியுடன் ஒப்பிடும்போது, நாம் தினமும்  பயன்படுத்தும் சொற்களில் சாரியை அதிகம் வருவதில்லை. பத்துக்கு ஒன்று ஆக குறைந்தளவில் வரலாம்
நாம் இதுவரை பார்த்துள்ள ஐந்து அம்சங்களைத் தொகுத்தால்:
* பகுதி என்பது பகுபதத்தின் முதல் பகுதி
* விகுதி என்பது பகுபதத்தின் நிறைவுப் பகுதி
* பகுதிக்கும் விகுதிக்கும் நடுவே அமைந்து காலம் காட்டுவது இடைநிலை
  பகுதிக்கும் இடைநிலைக்கும் நடுவே அமைவது சந்தி(விதிவிலக்கும் உண்டு)
 இடைநிலைக்கும் விகுதிக்கும் நடுவே அமைவது சாரியை
(விதிவிலக்கும் உண்டு)

 

Link to comment
Share on other sites

ஆனாலும் வாத்தியார் நீங்கள் மூன்று நாளிலை படிப்பிக்க வேண்டிய பாடத்தை, புங்கையூரனிடமும், மெசொபொத்தேமியா சுமேரியரிடமும் பச்சைப் புள்ளிகள் வாங்குவதற்காக ஒரேநாளில் திணிக்கமுயல்வது சரியில்லே, மெத்தச்சரியில்லே. :blink:  

Link to comment
Share on other sites

ஆம் வாத்தியார்.. கொஞ்சம் மெதுவா போங்கோ.. அதற்கு முன்னம் உங்களின் ஆக்கத்திற்கும், ஊக்கத்திற்கும் என் பணிவான நன்றிகள்..! :o

பகுதி என்றால் அதூகமகு ஒரு பதிவு.. விகுதி என்றால் அதற்கொன்று.. இப்பிடி செய்யுங்கோ வாத்தியார்..

Link to comment
Share on other sites

வாத்தியார் இந்த இலக்கணங்களை  எங்கிருந்து வெட்டிக் கொண்டு வந்து ஒட்டுகின்றீர்கள். சொன்னால் நாங்கள் அங்கேயே போய் படிப்பம், உங்களௌக்கும் வெட்டி ஒட்டுற வேலை இல்லை.  


:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியார்.....

நான் ஸ்கூலுக்கு.... வராத நேரமாய்ப் பார்த்து...... 
சோதினைக்கு வாற, முக்கியமான படங்களை, படிப்பிச்ச படியால்....
வெப்ப மரத்துக்குக் கீழை நிண்ட, உங்கடை சையிகிள் ரயரிலை.... ஊசியாலை ஓட்டை போட்டுட்டன். :D

Link to comment
Share on other sites

வாத்தியார் இந்த இலக்கணங்களை  எங்கிருந்து வெட்டிக் கொண்டு வந்து ஒட்டுகின்றீர்கள். சொன்னால் நாங்கள் அங்கேயே போய் படிப்பம், உங்களௌக்கும் வெட்டி ஒட்டுற வேலை இல்லை.  

:D

 

வாத்தியாரை அலைமகள் அவமதிச்சது பிறின்ஸிப்பாலுக்குத் தெரிஞ்சுபோச்சு. அலை பாடு அரோகரா. :(  :D  :D  சத்தியமா நான் போட்டுக்கொடுக்கல்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பண்பிற் பகா நிலைப்பதம்

பகுதிகளாக இருக்கின்ற பண்புப்பெயர்கள்

பகுபதத்தில் பகுதியை மேலும் பிரிக்க முடியாது எனப்பார்த்தோம்.
மேலும் பகுக்க முடியாத சொல்லைப் பகாப்பதம் என அழைப்பர்.

 

ஆனாலும் சில பகுதிகளை மேலும் பிரிக்க முடியும்.
அப்படிப் பிரிக்கப்படும்போது அவை சொல் நிலையில் மட்டுமே பிரியும்.
அதாவது பகுத்து உருவாகும் சொல் நாங்கள் தேடும் பொருளைத் தரமாட்டாது.

வேறு ஒரு பொருளைத்தரும்.

 

உதாரணமாக கடுங்கண் என்ற சொல் கடுமை + கண் எனப்பிரிக்கப்படுகின்றது.
கடுமை என்பது பண்பைக் குறிக்கும் பகுதி.
ஆனாலும் இந்தக் கடுமை என்ற சொல்லையும் நாங்கள் மேலும்
கடு + மை எனப் பிரிக்கலாம்.
இங்கே கடு என்பதும் கடுமை என்பதும் ஒரே பொருளைக் குறிக்கவில்லை.

 

அதேபோல பசுமை என்ற சொல்லைப் பார்த்தால்
பசுமை + புல் = பசும்புல்  பசுமை என்பது பகுதி
ஆனாலும் பசுமை யை மேலும் பிரிக்கலாம்
அப்போது பசு + மை என வரும்
 

பசுமை என்பது எதைக்குறிக்கின்றது. பசு என்பது எதைக்குறிக்கின்றது
என்பது உங்களுக்குத் தெரியும். இரண்டுக்கும் பொருள் வேறுபாடு உண்டு.
 

எனவே பெரும்பாலும் மை என முடியும் பண்புப் பெயர்களை எங்களால் பிரிக்கக் கூடிய முறையில் இருந்தாலும் பிரித்த்ப்பார்க்கக்கூடாது.
 

நன்னூலில் பதினோரு பண்புப்பெயர்களையும் அவற்றின்
எதிர்ப் பண்புப் பெயர்களையும், ஆக மொத்தம் 22 பண்புப்பெயர்களைப் பிரித்து

பகுதியாகப் பொருள் மாற்றக் கூடாது எனக் கூறப்படுகின்றது.
இவை எப்போதும் பண்புப்பெயர்களாகவும் அந்தப் பண்புப்பெயர்களே
பண்புப்பகுதிகளாகவும் அமைந்திருக்கும்.

 

அவை
 

செம்மை,சிறுமை,சேய்மை,தீமை,வெம்மை,புதுமை,
மென்மை,மேன்மை,திண்மை,உண்மை,நுண்மை

 

அவற்றின் எதிக்கருத்துக்கள் முறையே
 

வெண்மை,பெருமை,அண்மை,நன்மை,தண்மை,பழமை,
வன்மை,கீழ்மை,நொய்ம்மை,பொய்ம்மை,பருமை

 

என்பனவாம்.
 

இவற்றைப் பண்புப் பகாப்பதம் எனக்கூறாது
பண்பிற் பகா நிலைப்பதம் என்றனர்.
 

இந்தச் சொற்கள் மை என்ற விகுதி இல்லாமல் இயங்கமாட்டாது.
ஆனால் இன்னொரு சொல்லுடன் இணையும் போது மை என்ற விகுதி இல்லாமற்போய்விடும்.

 

செம்பஞ்சு = செம்மை + பஞ்சு
 சிறியவன்= சிறுமை + அன்
பாசடை = பசுமை + அடை
பைங்கிளி  = பசுமை + கிளி
சேதாம்பல் = செம்மை + ஆம்பல்
 

என்பன மை விகுதி அகன்று எப்படி மற்றைய சொற்களுடன்
இணைகின்றன் என்பதற்கான உதாரணங்கள்
 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யுள் விகாரங்கள்

 

 

கருத்தாழமும் கற்பனை வளர்ச்சியும் உணர்ச்சியும் கொண்ட புலவன்

பாடல்களை இயற்றும்போது மிக விரைவாக மனதில் தோன்றும்

சொற்களை அடுக்கிக் கொண்டே செல்வான்.
 

முதல் அடியில் (மேலே உள்ள ) சொற்களைப் போன்று
அடுத்த அடியிலும் உள்ள சொற்களை அமைப்பான்

 

இவ்வாறு விரைவாக உணர்ச்சியின் மிகுதியால் பாடல்களை எழுதும்போது

சில சொற்களை குறுக்கி எழுதுவான்
வரும் ஓசையின் நயம் கருதி சில சொற்களை நீட்டியும் எழுதுவான்

 

இப்படிப் புலவர்கள் எழுதுவதைத் தவறென இலக்கண எழுத்தாளர்கள் கருதுவதில்லை.
இவற்றை விகாரம் எனக்கூறி அவர்கள் இவற்றையும் ஏற்றுக் கொள்கின்றனர்.

இவ்விகாரங்கள் செய்யுள்களில் மட்டுமே தோன்றுவதனால்
அவற்றைச் செய்யுள் விகாரங்கள் என அழைப்பர்.

 

செய்யுள் விகாரங்கள் ஒன்பது வகைப்படும்.
 

1* வலித்தல் விகாரம்
2* மெலித்தல் விகாரம்
3* நீட்டல் விகாரம்
4* குறுக்கல் விகாரம்
5* விரித்தல் விகாரம்
6* தொகுத்தல் விகாரம்
7* முதற்குறை
8* இடைக்குறை
9* கடைக்குறை

 

என்பனவே அந்த ஒன்பது செய்யுள் விகாரங்களும் ஆகும்.

 

இந்த ஒன்பது செய்யுள் விகாரங்களைப்பற்றி அடுத்து ஆராய்வோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த ஒன்பது விகாரங்களையும் ஒருக்கா விரிவாச் சொல்ல முடியுமே வாத்தியார். எனக்கு எப்பவும் சுருக்கமாச் சொன்னால் விளங்காது.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வலித்தல் விகாரம்
 

செய்யுளில் மென்மையாக ஒலிக்கும் சொல்லின் ஒரு எழுத்தை
மாற்றி வன்மையாக ஒலிக்கச்செய்வது வலித்தல் விகாரம் எனப்படும்.
 

உதாரணம்
சிலம்பதிகாரம் என்பது சிலப்பதிகரமாக மாற்றப்படுவது
ஊன்றுகோல் என்பது ஊற்றுக்கோல் எனப்படுவது
ஈந்த ஓலை என்பதை ஈத்த ஓலை என்று மாற்றுவது

 

 

மெலித்தல் விகாரம்
 

வன்மையாக  ஒலிக்கும் வல்லின எழுத்தை மாற்றி
மெல்லின எழுத்தாக்கி மென்மையாக்குவது
மெலித்தல் விகாரம் எனப்படும்

 

உதாரணம்

 

புத்தி என்ற சொல்லைப் புந்தி என எழுதுவது.
தட்டை என்ற சொல்லை தண்டை என எழுதுவது.

 

நீட்டல் விகாரம்

 

குறிலாக வரும் எழுத்தை நெடிலாக மாற்றி எழுதுவது
நீட்டல் விகாரம் எனப்படும்.
 

நிழல் என்பது நீழல் ஆக மாறும்
பொழுது என்பது போழ்து என மாறும்
நடத்தினான் என்பது நடாத்தினான் எனவும்
மக்கள் என்பதை மக்காள் எனவும் மாற்றி நீட்டி ஒலிக்கச்செய்வது
நீட்டல் விகாரம் ஆகும்

 

மிகுதியை பின்னர் ஆராய்வோம் :D

Link to comment
Share on other sites

வலித்தல் விகாரம்

 

செய்யுளில் மென்மையாக ஒலிக்கும் சொல்லின் ஒரு எழுத்தை

மாற்றி வன்மையாக ஒலிக்கச்செய்வது வலித்தல் விகாரம் எனப்படும்.

 

உதாரணம்

சிலம்பதிகாரம் என்பது சிலப்பதிகரமாக மாற்றப்படுவது

ஊன்றுகோல் என்பது ஊற்றுக்கோல் எனப்படுவது

ஈந்த ஓலை என்பதை ஈத்த ஓலை என்று மாற்றுவது

 

 

மெலித்தல் விகாரம்

 

வன்மையாக  ஒலிக்கும் வல்லின எழுத்தை மாற்றி

மெல்லின எழுத்தாக்கி மென்மையாக்குவது

மெலித்தல் விகாரம் எனப்படும்

 

உதாரணம்

 

புத்தி என்ற சொல்லைப் புந்தி என எழுதுவது.

தட்டை என்ற சொல்லை தண்டை என எழுதுவது.

 

நீட்டல் விகாரம்

 

குறிலாக வரும் எழுத்தை நெடிலாக மாற்றி எழுதுவது

நீட்டல் விகாரம் எனப்படும்.

 

நிழல் என்பது நீழல் ஆக மாறும்

பொழுது என்பது போழ்து என மாறும்

நடத்தினான் என்பது நடாத்தினான் எனவும்

மக்கள் என்பதை மக்காள் எனவும் மாற்றி நீட்டி ஒலிக்கச்செய்வது

நீட்டல் விகாரம் ஆகும்

 

மிகுதியை பின்னர் ஆராய்வோம் :D

 

வாத்தியார் ஐயாவுக்கு வணக்கம் .  நீங்கள் விகாரம் எண்டுசொல்லி விவகாரமக்கியிருக்கிறியளே  ஐயா :o :o ?? இப்ப நீங்கள் சொன்ன விகாரதாலை சொலுற சொலின்றை பொருளும் அல்லோ மாறி இருக்கு ?? உதாரணமாய் வலித்தல் விகாரம் , ஊன்றுகோல் என்பது ஊற்றுக்கோல் எனப்படுவது .  நீங்கள் சொல்லிற  மாதிரிப் பாத்தால் ஊன்றுகோல் = பொல்லு , ஊற்றுக்கோல் = ஆதிமூலம் ,ஆரம்ப இடம் இப்பிடி எடுக்கலாம் . அதே மாதிரி மெலித்தல் விகாரம் , தட்டை என்ற சொல்லை தண்டை என எழுதுவது. தட்டை = ஒரு வடிவம் , தண்டை = காலிலை அணியிற ஒரு ஆபரணம் . வாத்தியார் ஐயா எனக்கு விளங்கப் படுத்துங்கோ :lol::D :D .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊன்றுகோல் என்பது ஊற்றுக்கோல் எனப்படுவது .  நீங்கள் சொல்லிற  மாதிரிப் பாத்தால் ஊன்றுகோல் = பொல்லு , ஊற்றுக்கோல் = ஆதிமூலம் ,ஆரம்ப இடம் இப்பிடி எடுக்கலாம் . அதே மாதிரி மெலித்தல் விகாரம் , தட்டை என்ற சொல்லை தண்டை என எழுதுவது. தட்டை = ஒரு வடிவம் , தண்டை = காலிலை அணியிற ஒரு ஆபரணம் . வாத்தியார் ஐயா எனக்கு விளங்கப் படுத்துங்கோ :lol::D :D .

 

 

இல்லையே கோமகன்

 

திருவள்ளுவர்

"இழுக்கல் உடையுழி  ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்" (கேள்வி 415)

 

என்று கூறுவது

 

வழுக்கும் சேற்று  நிலத்தில் நடப்பவர்களுக்கு

ஊன்றுகோல் உதவுவது போல

அறிவும் ஒழுக்கமும்  உள்ளவர்கள்  சொல் உதவும்

என்பதையே என நினைக்கின்றேன்

 

தட்டை என்பது வயற்காட்டில் கிளி மற்றும் குருவிகளைக் கலைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணம் :D

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லையே கோமகன்

 

திருவள்ளுவர்

"இழுக்கல் உடையுழி  ஊற்றுக்கோல் அற்றே

ஒழுக்கம் உடையார்வாய்ச் சொல்" (கேள்வி 415)

 

என்று கூறுவது

 

வழுக்கும் சேற்று  நிலத்தில் நடப்பவர்களுக்கு

ஊன்றுகோல் உதவுவது போல

அறிவும் ஒழுக்கமும்  உள்ளவர்கள்  சொல் உதவும்

என்பதையே என நினைக்கின்றேன்

 

தட்டை என்பது வயற்காட்டில் கிளி மற்றும் குருவிகளைக் கலைப்பதற்குப் பயன்படுத்தும் ஒரு உபகரணம் :D

   

 

தட்டை

 

800px-Play_instrument_THATTAI.jpg

தட்டை பற்றிய தேடலில் சுட்ட தகவல்...

 

தட்டை என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை. தட்டையைப் புடைத்து அதன் ஒலியைக் கேட்டு மகிழ்வது பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விளையாட்டு.

 

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

Link to comment
Share on other sites

தட்டை

 

800px-Play_instrument_THATTAI.jpg

தட்டை பற்றிய தேடலில் சுட்ட தகவல்...

 

தட்டை என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை. தட்டையைப் புடைத்து அதன் ஒலியைக் கேட்டு மகிழ்வது பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விளையாட்டு.

 

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 

தட்டை கிளிகளை ஓட்டிச்சோ, கூட்டிச்சோ. :o  ஆனால் இங்கு பக்கத்துவீட்டு யன்னலுக்கு சிக்னல் கொடுப்பதை அழகாக படம் பிடித்திருப்பது மட்டும் சூப்பராக தெரிகிறது. :D  :D  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டை கிளிகளை ஓட்டிச்சோ, கூட்டிச்சோ. :o  ஆனால் இங்கு பக்கத்துவீட்டு யன்னலுக்கு சிக்னல் கொடுப்பதை அழகாக படம் பிடித்திருப்பது மட்டும் சூப்பராக தெரிகிறது. :D  :D  

 

"பல்கனியில்" நின்று.... "சவுண்டு" கொடுக்குமாப் போலுள்ள‌து பாஞ்ச்.

நாம‌ பள்ளிக்கூடத்துக்கு வருவதால்... படிப்பு ஏறுதோ... இல்லையோ....

வாழ்க்கைக்குத் தேவையான, முக்கிய விசயங்களையும்.... கற்கக் கூடியதாக இருக்கின்றது. :D  :lol:

Link to comment
Share on other sites

தட்டை

 

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 

நல்ல தகவல் சொன்ன யாயினிக்கு கொடுக்க பச்சை இல்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தட்டை

 

800px-Play_instrument_THATTAI.jpg

தட்டை பற்றிய தேடலில் சுட்ட தகவல்...

 

தட்டை என்பது ஒரு விளையாட்டுக் கருவி. இதனைப் புடைக்கும்போது டப் டப் என ஒலி கேட்கும். தட்டப்படும் கருவி தட்டை. தட்டையைப் புடைத்து அதன் ஒலியைக் கேட்டு மகிழ்வது பிள்ளைகளுக்கு மகிழ்வு தரும் விளையாட்டு.

 

சங்ககால மகளிர் தினைப்புனம் காக்கும்போது தட்டை புடைத்துக் கிளிகளை ஓட்டியதாகச் சங்கப்பாடல்கள் குறிப்பிடுகின்றன.

 

சின்ன வயதில் நான் கூட இதைச் செய்த ஞாபகம் வருது. ஆனால் எதில் செய்தேன் என்பதுதான் நினைவில்லை.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் வகுப்பு டாப்பில இல்லாத பிள்ளை இப்படி எல்லாம் கொண்டு வந்து போடுவது தவறு... :) ஆனால் அடிக்கடி வந்து எட்டி நின்று பார்த்துட்டு போவேன். அதன் பிரகாரம் நேற்று தட்டை பற்றி தேடல் புதிய ஒரு கண்டுபிடிப்பு போல் சந்தோசம்..நான் முன்னர் பார்த்ததில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாத்தியாரின் வகுப்பு டாப்பில இல்லாத பிள்ளை இப்படி எல்லாம் கொண்டு வந்து போடுவது தவறு... :) ஆனால் அடிக்கடி வந்து எட்டி நின்று பார்த்துட்டு போவேன். அதன் பிரகாரம் நேற்று தட்டை பற்றி தேடல் புதிய ஒரு கண்டுபிடிப்பு போல் சந்தோசம்..நான் முன்னர் பார்த்ததில்லை..

படமும் போட்டு விளக்கமும் அளித்த யாயினிக்கு நன்றிகள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

செய்யுள் விகாரம்

 

குறுக்கல் விகாரம்

 

செய்யுள்களில் சொற்களில் வரும் நெடில் எழுத்துக்களைக்

குறிலாக மாற்றி அந்தச் சொல்லின் ஓசையைக் குறைப்பது ஆகும்.

 

உதாரணம்

பாரம் பரம் எனக் குறுகும்

பாதம் பதம் எனவும்

தீயேன் தியென் எனவும் குறுகும்

 

 

விரித்தல் விகாரம்

 

விரித்தல் விகாரத்தில் சொல்லில் இல்லாத ஒரு எழுத்தை மேலதிகமாக இணைத்துவிடுவார்கள்

 

உதாரணம்

மனிதப்பிறவி   மனித்தப்பிறவி

சொல்லுமே சொல்லும்மே
விளையுமே விளையும்மே

 

 

 

தொகுத்தல் விகாரம்

 

பொருள் மாறாமல் செய்யுளில் வரும் சொல்லின் ஏதாவது  

எழுத்துக்களை நீக்கிவிடுவது தொகுத்தல் விகாரம் எனப்படும்

 

உதாரணம்

 

கண்ணீர்  கணீர்

தொழாதாள்  தொழாள்

செயலாளர்  செயலர்

என்பனவாகும்

 

முதற்குறை

 

செய்யுளில் வரும் சொல்லின் முதற் சொல்லை இல்லாமல் எழுதுவது முதற்குறை எனப்படும்

 

உதாரணம்

தாமரை என்பதை மரை என எழுதுவார்கள்

 

இடைக்குறை

 

ஒரு சொல்லின் இடையில் வரும் ஒரு எழுத்தை இல்லாமல் எழுதுவது இடைக்குறை எனப்படும்

 

உதாரணம்

இல்லை  இலை

 

 

கடைக்குறை

 

சொல்லின் இறுதியில் வரம் எழுத்தை இல்லாமற் செய்து எழுதுவது கடைக்குறை எனப்படும்

 

வானம்  வான்

நிலவு  நிலா

கடைசி  கடை

 

இங்கே முதல் இடை கடைகுறைகளில் எழுத்துக்களை இல்லாமல் எழுதுவது போலவே

தொகுத்தல் விகாரத்திலும் எழுத்துக்களை இல்லாமல் எழுதுகின்றனர்.

எதற்காக என உங்கள் மனதில் கேள்வி தோன்றலாம்

 

தொகுத்தல் விகாரத்தில் வரும் சொற்களைப் பகுதி விகுதி எனப் பிரிக்க முடியும்.

 

உதாரணம்

கணீர் = கண் + நீர்

சொனான் = சொல் + ற் + அன்

 

 

முதல் இடை கடை குறைகளாக வரும் சொற்களைப் மேலும் பிரிக்க முடியாது

 

உதாரணம்

 

மரை, கடை, வான், இலை, நிலா என்பவை மேலும் பகுக்க முடியாதவை

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.