Jump to content

அன்புள்ள சின்னண்ணா....!


shanthy

Recommended Posts

அன்புள்ள சின்னண்ணா....!

(11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது)
 
அதுதான் நான் அவனுக்கு வைத்தபெயர் அவனும் தனது பெயரைச் சொல்லாமல் அடம்பிடித்துக் கொண்டு திரிந்தான். மற்றவர்களும் தனது பெயரைச் சொல்லக் கூடாதென்று எல்லோரையும் தனது சொற்களால் கட்டிவைத்திருந்தான்.

சமாதிகோவிலடிக் காவலரணில் அறிமுகமான அந்தச் சின்னண்ணா ! எங்கேயிருக்கிறாய் ?

1987இல் இராணுவம் கட்டுவனுக்கு வந்ததோடு வீடுகளைவிட்டு வெளியேறிய நாங்கள் வளவுமரங்களைக் காயவிடாமல் தண்ணீர் ஊற்றுவது வளக்கம். அப்படியொரு மாலைப்பொழுதில் தான் இளனீர் தந்து உறவானான் சின்னண்ணா.

கிணற்றிலிருந்து பெரியவாளியைத் தூக்கக்கச் சிரமப்பட்ட எனக்கும் உதவி செய்து அம்மம்மாவோடும் ஆச்சியென்று உறவு சொல்லியழைத்து அந்தப் போராளிகள் இருவரும் அறிமுகமானார்கள்.

 

சிறிய உருவம் , சிரிப்பு மாறாத முகம் , தங்கைச்சியென்றழைக்கும் அவர்கள் அடிக்கடி வீடுபார்க்கப் போகும் போது வருவார்கள். அரசியல் பேசுவார்கள், இனிப்புத்தருவார்கள் , தவமன்ரிவீட்டு மாங்காய் ஆய்ஞ்சு தருவார்கள் , பேய்வரும் கதையெல்லாம் சொல்லுவார்கள் , பேய்க்கதை கேட்காது விலகும் எனக்கு வேண்டுமென்றே திரும்பத் திரும்பச் சொல்லிப் பயமுறுத்துவார்கள்.

தண்ணீரள்ளி உதவுவார்கள். தங்கள் போராட்டம் பற்றி விளக்குவார்கள்.மீண்டும் அடுத்தோ அல்லது மறுநாளோ வருவார்கள். கதைப்போம் சிரிப்போம். போய்விடுவார்கள்.

அந்தப் போராளிகளில் அவன்மட்டும்தான் கொஞ்சம் ஓயாத வாய். மற்றவன் சிரிப்பான் அதிகம் கதைக்கமாட்டான்.

உங்கடைபேரென்ன ? கேட்ட எனக்கு திண்டுவளந்தான் என்றான் சிரித்தபடி. திண்டுவளந்தான் ! கேட்டவுடனேயே நான் சிரித்த சிரிப்பைப்பார்த்துவிட்டு என்ரை பேர் திண்டுவளந்தான் என்று திரும்பவும் சொன்னான்.

ஆனால் நான் அடிக்கடி சின்னண்ணாவென்றே கூப்பிடுவேன். அதுவே என்வரையில் அவன் பெயராயும் போயிருந்தது. அவனது இயக்கப் பெயரோ வீட்டுப்பெயரோ அறியவேண்டிய தேவையும் இருக்கவில்லை.

அவன் சாகக்கூடாது என்வீட்டில் ஒருவனாய் எண்ணி அவனுக்காயும் பிரார்த்திப்பேன். இலங்கை , இந்திய ஒப்பந்தம் எழுதப்பட்டு இலங்கை இராணுவம் பழையபடி பலாலிக்குள் போய்விட போராளிகளும் காவலரண்களைவிட்டு தங்களது முகாம்களுக்குப் போய்விட்டனர்.

அதன்பின் என் சின்னண்ணாவைக் காண்பதுமில்லை. அந்தத்திண்டு வளந்தான் வருவதுமில்லை. ஆனால் ஞாபத்தில் நிற்கும் பலருள் அவனும் மறக்காத நினைவாய்....!

photo24.jpg

தியாகி திலீபனண்ணா 5அம்சக்கோரிக்கைகளோடு நல்லூர் மேற்குவீதியில் உண்ணாநோன்பிருந்து இந்திய வல்லாதிக்கத்தின் சதியால் 12ம் நாளன்று வீரச்சாவடைந்து தேசமே அழுதுதுடித்திருந்த அந்தநாள் திலீபனண்ணாவுக்கு அஞ்சலிசெய்து விட்டுத் திரும்பி வந்து கொண்டிருக்கிறோம்.

தனது போராளி நண்பன் ஒருவனுடன் மோட்டார் சயிக்கிளில் போனான் என் சின்னண்ணா. வாடிய முகமும் , குழம்பிய தலையுமாய் , முதுகில் இருந்த துப்பாக்கியைத் தாண்டி காற்றில் ஒரு கையசைப்போடு போனான். அன்றைய அந்தச் சோகத்தில் யாரையும் தேடும் நினைவும் இருக்கவில்லை. என் சின்னண்ணாவும் போய்விட்டான்.

அதன்பின் ஒரு நாள் மதியம் பாடசாலைவிட்டு வரும் வழியில் வடக்குப் புன்னாலைக்கட்டுவன் ராஜேஸ்வரியம்மன் கோவிலடியில் சின்னண்ணாவைச் சந்திக்க நேர்ந்தது. மோட்டார் சயிக்கிளில் வந்தவன் சற்றுத்தூரம் போய் திரும்பி வந்தான். சற்று வளர்ந்துவிட்டவன் போலிருந்தான்.

திடீரென வந்தவனுடன் கதைக்கத் தொடங்க சில விநாடிகள் கரைந்தது....! மறந்திட்டீங்களோ திண்டுவளந்தானை ? அவன் தான் கேட்டான். எத்தினையாம் வகுப்பு படிக்கிறீங்கள் ?  சுகமாயிருக்கிறீங்களோ ? அம்மம்மாட்டைப் போனனான்.

பதில் சொல்லி முடிக்க முன்னம் அவன் படபடவென்று பல்லாயிரம் வார்த்தைகள் பேசிமுடித்தான். பின்னால் இருந்தவனுக்கு தனக்கு திண்டுவளந்தான் பெயர் வந்தது பற்றிச் சொன்னான். அப்போதும் தனது பெயரை அவன் சொல்லவேயில்லை. அன்றைக்கும் ரொபி தந்தான்.

நல்லாப்படிக்க வேணும்...! அம்மம்மாட்டை சொல்லுங்கோ திண்டு வளந்தான் திரும்பி வருவனெண்டு....! வரட்டா ? சொல்லிவிட்டு மின்னல் வேகத்தில் பறந்தான் திண்டு வளந்தான் சின்னண்ணா....!

JI1223.jpg

அதுதான் அவனைக்கண்ட இறுதிநாள். அதன்பின் அவனைக் காணவேயில்லை. இன்று வரை காணவே இல்லை.

ஓ...

என் சின்னண்ணாவே

எங்கேயிருக்கிறாய்....?

களத்தில் நிற்கிறாயா.....?

கல்லறையில் உறங்குகிறாயா....?

நீயும் உனது தோழர்களும்

சென்றியிருந்து காத்த எங்களது ஊர்

சிங்களம் ஆள்கிறது.

நீ நடந்த

அந்தத் தெருக்கள் பற்றைக்காடாயும் ,

பதுங்கு குழியாயும்

மிதிவெடியாயும் இருக்கிறதாம்.

நீ தந்த இளனீர் மரம்

அதுவும் அழிந்திருக்கும்.

ஓ....

என் சின்னண்ணாவே எங்கேயிருக்கிறாய்.....?

21.07.2000

000            000           000

 
காலம் 2002. முல்லைத்தீவு  ஒரு தென்னந்தோப்பு நிறைந்த வளவு. அதுவொரு பெண் போராளிகள் முகாம். இரவு 10மணிதாண்டியிருந்தது. பழைய கதைகள் பழைய மனிதர்கள் பற்றிய கதையில் சின்னண்ணாவின் கதையும் வந்தது....!

உன்ரை சின்னண்ணாவை இப்ப எந்த அண்ணாவெண்டு தேடுறது ? ஒருத்தி சொன்னாள். அன்றைய பலரது கதைகளில் திண்டு வளந்தான் சின்னண்ணா அதிகம் பேசப்பட்டவனாகினான்.

உனக்குக் கோதாரி மறதி மருந்து தர வேணும் சின்னண்ணா பெரியண்ணாவெண்டு ஒருதரையும் மறக்கேல்ல....! சொன்னாள் ஒருத்தி.

மறக்கக்கூடியவர்களாகவா விடுதலையை நேசித்தவர்கள் எங்களுடன் வாழ்ந்தார்கள்....? நினைவு மட்டும் மீதமாக எத்தனையோ பேர் இன்று வரை நினைவுகளில் மட்டும் தேங்கி நெஞ்சங்களில் வாழ்ந்தபடி....!

மறுநாள் ஒரு சந்திப்பு. அதில் பலர் வந்திருந்தார்கள். அப்போது திண்டு வளந்தான் பற்றி ஒரு தளபதி பகிடியாகக் கேட்டார். யாரடா அந்தத் திண்டு வளந்தான்....? முதல்நாள் இரவு கதைத்தது விடிய முதல் அந்த மதிப்புக்குரிய தளபதியின் காதிலும் விழுந்து....! நமது பிள்ளைகள் தங்கள் தகவல் பரிமாற்ற வேகத்தை நிறுவியிருந்தார்கள்.

தலையைக் கவிழ்த்துச் சிரித்தாள் தோழி. காலில் மிதித்து மெல்லச் சொன்னாள். உனக்குத்தான் நடக்குது நக்கல்...!

அன்று எல்லோராலும் திண்டு வளந்தான் சின்னண்ணா நினைக்கப்பட்டான். ஆனால் 16வருடம் முதல் பார்த்த அந்தத் திண்டு வளந்தானை அங்கிருந்த எவரிலும் காண முடியவில்லை....!

கால மாற்றத்தில் திண்டு வளந்தான் எப்படி ? எங்கே ? இருப்பான்....எவராலும் கண்டுபிடிக்க முடியாதவனாய்....! ஆனால் நினைவுத் துளிகளில் அவ்வப்போது நினைவில் வந்து போகிறான்...!

23.03.2002.

(11வருடங்கள் முதல் எழுதப்பட்டு ஒரு பகுதி மட்டும் எங்கோ பத்திரிகையொன்றுக்கு அனுப்பப்பட்டது. இன்று தியாகி திலீபனின் பழைய பதிவுகள் தேடப்போனதில் மீளக்கிடைத்துள்ளது. தியாகி திலீபனண்ணாவின் நினைவு சுமக்கும் நாட்களில் 26வருடங்கள் கழித்து நினைவில் வரும் திண்டு வளந்தான் சின்னண்ணாவின் நினைவோடும் மீளும் நினைவு இது)

Posted by சாந்தி ரமேஷ் வவுனியன் at 3:59 PM No comments: Links to this post

http://mullaimann.blogspot.de/2013/09/blog-post_16.html

Link to comment
Share on other sites

நினைவுகள் மறக்கமுடியாதவை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'ராம ராஜ்ஜம்' போன்ற ஒரு அதி உன்னத சமுதாயமொன்றை, அமைக்கும் பாதையில் நீண்ட காலங்கள் பயணித்தோம்! அதற்காக, உயிர் துறந்தோர் பலர்!

 

இறுதியில் அந்த ராமனின் ஏவல் நாய்களாலேயே, எமது 'ராஜ்ஜம்' பிய்த்து எறியப்பட்டதைத் தான், இன்னும் எம்மால் ஜீரணிக்க முடியவில்லை!

 

இந்த இழி செயலின் அதிர்வுகள், ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஆறாத வடுவாக, இறுதி வரைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்!

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், சாந்தி!

Link to comment
Share on other sites

காலங்கள் போனாலும், பழைய நினைவுகள் மறக்கமுடியாதவை

 

பழைய நினைவுகள் என்றும் பசுமையானவை. துயரோடு கூடிய இனிமையாக காலங்கள். ஆனால் நினைவுகளில் மட்டும் வாழும் காலங்கடந்தவர்களின் நினைவுகள் மட்டுமே மீதமாக....

 

நினைவுகள் மறக்கமுடியாதவை

 

காலம் முழுவதும் வாழும் நினைவுகள்.

 

நினைவுகள் மறக்கமுடியாதவை.

 

காலம் முழுவதும் வாழும் நினைவுகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்தில் எல்லாவற்றையும் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் சாந்தி

Link to comment
Share on other sites

 

இந்த இழி செயலின் அதிர்வுகள், ஒவ்வொரு தமிழனின் மனதிலும் ஆறாத வடுவாக, இறுதி வரைக்கும் இருக்கும் என நினைக்கிறேன்!

 

அனுபவப் பகிர்வுக்கு நன்றிகள், சாந்தி!

 

காலகாலத்துக்கும் மாறாத வடு. எங்கள் உரிமையை எங்கள் உரிமைக்கு உரியவர்களை கொன்றொழித்தவர்களின் ஈனத்தனமாக இழிப்பை ஜென்மங்களுக்கும் மறக்கமாட்டோம் புங்கையூரான். கருத்துக்கு நன்றிகள்.

உங்கள் எழுத்தில் எல்லாவற்றையும் கண்முன் கொண்டுவந்துவிட்டீர்கள் சாந்தி

 

கருத்துக்கு நன்றிகள் சுமேயக்கா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது சமவயதுடைய யாராவது பெயர் கேட்டால் திண்டு வளர்ந்தான் எண்டுதான் சொல்வது வழக்கம்.

 

ஆனால் அப்படி ஒரு பெயரிலேயே ஒரு வீரன் உங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்றால் புலிவீரர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள்!

 

வாழ்த்துக்கள் சகோதரி!

Link to comment
Share on other sites

நாங்கள் சிறுவர்களாய் இருக்கும்போது சமவயதுடைய யாராவது பெயர் கேட்டால் திண்டு வளர்ந்தான் எண்டுதான் சொல்வது வழக்கம்.

 

ஆனால் அப்படி ஒரு பெயரிலேயே ஒரு வீரன் உங்கள் நினைவுகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான் என்றால் புலிவீரர்கள் எவ்வளவு மேன்மையானவர்கள்!

 

வாழ்த்துக்கள் சகோதரி!

 

திண்டு வளந்தான் என்ற சொல் எனக்கு அறியத் தந்த புலவீரனும் அந்த வீரனே. ஆனால் இன்றுவரை அந்தத் திண்டுவளந்தான் மீளவும் வரவேயில்லை. கருத்துக்கு நன்றிகள் சுவியண்ணா.

 

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வு வார்த்தைகளை உணர்வுக் கொப்பளங்களாக்கியிருக்கிறது. (ஒரு பச்சை குத்தலாமென்றால் முதல்லை கண்ணிலை ஆப்பிட்டதுக்கெல்லாம் குத்தி... சத்தியமா வைச்சுக்கொண்டு வஞ்சனை பண்ணேலை.) :)

Link to comment
Share on other sites

அனுபவப் பகிர்வு வார்த்தைகளை உணர்வுக் கொப்பளங்களாக்கியிருக்கிறது. (ஒரு பச்சை குத்தலாமென்றால் முதல்லை கண்ணிலை ஆப்பிட்டதுக்கெல்லாம் குத்தி... சத்தியமா வைச்சுக்கொண்டு வஞ்சனை பண்ணேலை.) :)

 

சரி பச்சையை Bankஇல் saveபண்ணி வையுங்கோ பிறகு ஒருகாலம் உதவும். கருத்துக்கு நன்றிகள்.

 

Link to comment
Share on other sites

  • 11 months later...

தியாகி திலீபனண்ணாவின் நினைவுகள் தரும் நாளில் எங்களோடு வாழ்ந்த ஒரு போராளியின் நினைவும் கலந்தே கரைகிறது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நான் தான் பிழையா சொல்லிட்டேன் போல‌ ஆனால் இந்த‌ காணொளி ரிக்ரொக்கில் பார்த்து இருக்கிறேன் முந்தி இந்த‌ மாத‌ காணொளி என்றால் என்னில் தான் த‌வ‌று  த‌வறுக்கு ம‌ன்னிப்பு கேட்க்கிறேன் நான் ரிக்ரொக் பார்ப்ப‌தே 2மாத‌த்துக்கு ஒருக்கா என‌து போனில் ரிக்ரொக் ஆப் இல்லை  த‌ம்பி த‌ங்கைச்சி இவ‌ர்க‌ளின் வீடியோக்க‌ள் பார்க்க‌  சில‌ ம‌ணி நேர‌ம் பார்த்து விட்டு மீண்டும் ரிக்ரொக் ஆப்பை அழிச்சு போடுவேன்.........................
    • # Question Team1 Team 2 No Result Tie Prediction 1) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.     No Result Tie     CSK     Select CSK CSK   DC     Select DC Select   GT     Select GT Select   KKR     Select KKR KKR   LSG     Select LSG Select   MI     Select MI Select   PBKS     Select PBKS Select   RR     Select RR RR   RCB     Select RCB Select   SRH     Select SRH SRH 2) முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.             #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4 புள்ளிகள் )         RR   #2 - ? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் )         CSK   #3 - ? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         KKR   #4 - ? (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி )         SRH 3) ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2 புள்ளிகள்)         RCB 4) மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத் Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team         RR 5) மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team         KKR 6) மே 24 வெள்ளி 19:30 சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator         CSK 7) Final போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5 புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2         CSK 😎 இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         SRH 9) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Riyan Parag 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         KKR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Yuzvendra Singh Chahal 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         CSK 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் )         Jos Buttler 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RCB 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Jasprit Jasbirsingh Bumrah 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 18) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)         Sanju Samson 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! )         RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி)         CSK
    • பிபிசி செய்தி (பொய்யாகத் தான் இருக்கும்😎!) ஒன்றின் படி, நரான்ஸ் அணு ஆராய்ச்சி நிலையத்தைப் பாதுகாக்கும் ஒரு ரேடார் நிலையத்தை நோக்கி 3 விமானத்திலிருந்து ஏவும் கணைகளை இஸ்ரேல் ஏவியதாம். ரேடார் நிலையம் அழிக்கப் பட்டது என்கிறது அமெரிக்கா, சேதமில்லை என்கிறது ஈரான். ஈரான் ஏவிய 300 கணைகளுக்கு பதிலாக 3 ஏவியிருக்கிறார்கள். விளைவு என்னவென்று RT போன்ற உண்மை விளம்பும் ஊடகங்கள் செய்தி வெளியிட்டால் மட்டுமே தெரியவரும்🤣!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.