Jump to content

அப்பா சொன்ன கதை .!


Recommended Posts

70வதுக்கு முந்திய இலங்கை தமிழர்களின் ஆதிக்கம்  நிறைத்து இருத்தது சிங்களவனை எவரும் மதிப்பது இல்லையாம் கேட்டால் மோட்டு சிங்களவன் எண்டு சொல்லுவார்கள் எதுக்கும் அவன் தமிழ் வர்த்தகர்கள் முதலாளிகளிடம் கைகட்டி நின்று ஊதியம் வாங்குவது இவர்கள் சொல்வதை செய்வது ஆக தென்னிலங்கையில் நாங்கள் தான் ராஜாக்கள் என்கிற நினைப்பில் எம்மவர் இருத்தனர் என்பது உண்மை

 

ஒரு உதாரணம் கொழும்பு செக்கட்டி தெருவில ஒருமுறை கோயில் திருவிழா நடத்து கொண்டு இருந்தது தமிழர்கள் அதிகமாக வாழும் பகுதி என்பதால் மக்கள் கூட்டம் மிக அதிகம் அரோகரா ஒலிகள வானை பிளக்க

நடந்த திருவிழாவில் தேர் அசைந்து வர தேரின் சில்லுக்கு கட்டை வைத்து திருப்பிய படி ஒருவர் வர அதை கவனித்த படி இருத்த சிங்கள போலிஸ்காரன் கட்டை வைத்தவரை பிடித்து இழுத்து இரண்டு சாத்து சாத்தி இருக்குறார் அங்கு நிண்ட அனைவருக்கும் குழப்பம் என்ன நடக்கு என உடனம் விசியம் தெரிந்த ஒருசிலர் போலீசிடம் என்ன பிரச்சினை என கேட்க அவன் சொன்ன விளக்கம் தான் நகைச்சுவை

 

அப்படி என்ன சொல்லி இருப்பான் அவன் சொன்னான் "அடோ தெய்வம் வருது குறுக்க குறுக்க கட்டைய வைக்கிற " என்பதுதான் பின்னர் அவன் அவரை விடமாட்டன் எண்டு சொல்லி போட்டான்  அதால் உயர் அதிகாரி வரவழைக்க பட்டு என்ன என வினாவினால் தெய்வத்துக்கு குறுக்க கட்டை வைக்குறான் என அவன் விளக்கம் சொல்ல உயர் அதிகாரி சொன்னாராம் தேருக்கு திருப்புறத்துக்கு வாகனத்தில் உள்ளது போல இஸ்தேரின்க்  இல்லை ஆதலாதான் கட்டை வைத்து திருப்புறர்கள் என்று

 

அதன் பின்னரே அவன் மன்னிப்பு கேட்டு அனுமதி கொடுத்தானாம் இப்படி இருத்த சிங்களவன் இப்ப எப்படி முன்னேறி இருக்குறான் நாங்கள் புத்திசாலிகள் என நினைத்து வாழ்ந்தது தான் மிச்சம் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உங்கள் அப்பா நல்ல கதை சொல்லியாகத் தான் இருந்திருக்கிறார். வழ்த்துக்கள் ப்றோ.

 

கொஞ்சம் விபரித்து எழுதியிருந்தால் இன்னும் கதை அழகாக இருந்திருக்கும்.

Link to comment
Share on other sites

அப்படி என்ன சொல்லி இருப்பான் அவன் சொன்னான் "அடோ தெய்வம் வருது குறுக்க குறுக்க கட்டைய வைக்கிற " என்பதுதான்

 

உங்கள் அப்பா சொல்லாமல் சில விடையங்களைச் சொல்ல முயன்றிருகின்றார் . ஆனாலும் தேருக்கு கட்டை வைச்சது காணாது வாழ்த்துக்கள் அஞ்சரன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன்

இப்போதும்  தமிழன் தான் கல்வி மற்றும் பொருளாதாரம் என்பவற்றில்

சிங்களவனை விட முன்னேற்றத்தில் இருக்கின்றான்

 

ஆனால் இன்றைய உலக நியதி என்பது தான் தமிழனை பின் தள்ள முயற்சிக்கின்றது.
 

புவியியல்ரீதியில் தமிழன் என்றோ உலகைத் தன் கட்டுக்குள் வைத்திருந்தவன்
அந்த நிலை மீண்டும் வரும் அப்போது சிங்களம் சிதறிப்போயிருக்கும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.