Jump to content

தமிழ் படிப்போம் தமிழ் படிப்போம்


Recommended Posts

அருமையான பதிவு வாத்தியார் ஐயா.. :D இடியப்பம் மாதிரி சிக்குப்பட்டு இருக்கிற தமிழ் இலக்கண அறிவை சிக்கலெடுக்க ஆவலாக உள்ளேன் ஐயா..!  :(  :D 

Link to comment
Share on other sites

  • Replies 224
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் படிக்க நிறைய மாணவர்கள் வந்திருப்பதில் மகிழ்ச்சி.

 

இப்போது நாங்கள் உயிரெழுத்துக்களைப் பற்றிப் படித்துக் கொண்டிருக்கின்றோம் உயிரெழுத்துக்கள் பன்னிரண்டாகும் எனப்பார்த்தோம்

இந்தப்பன்னிரண்டு எழுத்த்துக்களிலும் உள்ள எழுத்துக்கள் சிலவற்றிற்கு சிறப்புப் பெயர்கள் உண்டு.

அ இ உ என்ற மூன்றெழுத்துக்களையும் சுட்டெழுத்துக்கள் என அழைப்பர்.

காரணம் அவை எதோ ஒன்றினைச் சுட்டி நிற்கும் சொற்கள் என்பதுதான்.

 

அவை ஒரு சொல்லிற்கு முன்னின்று அதாவது சொல்லின் முதல் எழுத்தாக இருந்து ஒரு பொருளைச்சுட்டி நிற்கும். உதாரணம் அவன் இவன் உவன் என்ற சொற்களாகும். அவன் என்ற சொல் தூரத்தே நிற்கும் ஒருவரையும் இவன் என்பது அருகே இருக்கும் ஒருவரையும் உவன் என்பது அண்மையில் இருப்பவருக்கும் தூரத்தில் இருப்பவருக்கும் இடையில் இருப்பவரையும் சுட்டி நிற்கின்றது.

 

இதிலே உவன் என்ற உகரமாகிய சுட்டு அருகி வந்து பேச்சளவிலே மட்டுமே அனேகமான இடங்களில் காணப்படுகின்றது.

 

அ இ உ என்பன சுட்டெழுத்துக்கள். அவன் இவன் உவன் என்பன சுட்டுப்பெயர்கள்.

 

இந்தச் சுட்டும் இரண்டு வகைப்படும் ஒன்று அகச்சுட்டு மற்றது புறச்சுட்டு

 

அகச்சுட்டு என்பது சுட்டெழுத்துக்கள் ஒரு சொல்லுடன் இயல்பாகவே இருப்பது உதாரணம் அவன் இவன் உவன் இந்த மூன்று சுட்டுப்பெயர்களிலும் அந்தச்சொல்லின் முதல் எழுத்தாக ஒரு சுட்டெழுத்து இயல்பாகவே அமைந்திருத்தல்.

 

புறச்சுட்டு என்பது ஒரு சொல்லுடன் சுட்டெழுத்து ஒன்று சேர்க்கப்பட்டிருப்பது. உதாரணம் அந்தப்பையன் இந்தப்பையன் உந்தப்பையன் என்பனவாகும் அல்லது அப்பையன் இப்பையன் உப்பையன்.

 

பையன் என்ற சொல்லையும் அ இ உ என்ற சுட்டெழுத்துக்களையும் எளிதில் பிரிக்கக் கூடியதாக இருக்கின்றது இவற்றையே புறச்சுட்டு என்பார்கள்

Link to comment
Share on other sites

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

Link to comment
Share on other sites

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

 

தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும். சேய்த் தமிழீழத்தில் உது உண்டு உவனே! இசைக்கலைஞனே!.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தாய்த் தமிழகத்தில் இந்த உகரம் ஒரு சுட்டெழுத்தாக (உவன், உது) பாவனையில் இல்லையே ஐயா.. இதற்கு ஏதாவது சிறப்புக் காரணங்கள் உண்டா?

அகரம் என்ற சுட்டும் உகரம் என்ற சுட்டும் கிட்டத்தட்ட ஒரே குறிப்பை உணர்த்துவதால்அகரம் உகரத்தை மிஞ்சி உகரத்தை மறையச் செய்து விட்டது

 

ஆனால் பேச்சு வழக்கில் சில இடங்களில் இருப்பதாகக்  கூறப்படுகின்றது

 

அங்கே இருக்கின்றது எனச் சத்தமில்லாமல் பக்கத்தில் இருப்பவரிடம் கூறலாம்.

 

ஆனால்  உங்கே  இருக்கின்றது எனச் சற்றுத் தூரத்தில் இருப்பவரிடம் அதிக சத்தத்துடன் கத்திக் கூறவேண்டும்  என்பதால் நாளடைவில் மக்கள் அகரத்துடன் அமைதியாகி இருந்திருப்பார்கள் :D  :wub:  

வந்தேன் ஐயா!

வணக்கம் ஐயா கு சா  

வீட்டுப்பாடம் எல்லாம் செய்து வந்தீர்களா :D

எனக்கும் உப்பிடித்தான் சொன்னவர். எதுக்கும் வாத்தி வரட்டும் நேரே கிளியர் பண்ணுவம் ஆர் மொனிற்ரர் எண்டு. :lol:

 

புத்தன் ஆண்கள் பக்கமும்

சுமேரியர் பெண்கள் பக்கமும் கங்காணிகளாக

இருப்பதில் எனக்கு ஆட்சேபணை இல்லை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

வாத்தியாரிடம் ஒரு கேள்வி: உயிர் எழுத்துக்கள்ள கடைசியா ஔ வுக்குப் பிறகு மூண்டு குத்துப்போட்டு ஒண்டு இருக்கும் அது எங்க ஒண்டுக்குப் போட்டுதே காணல்ல. அதுக்கு விளக்கம் தருவீங்களோ அல்லது மடக்கேள்வி எண்டு நுள்ள வருவீங்களோ? <_<   

அகேனம் என்பது முதலெழுத்து அல்ல

உயிரெழுத்தும் அல்ல அது சார்பெழுத்துக்களில் ஒன்று.

ஆய்தம் எனவும் ஆயுத எழுத்து எனவும் கூறுவார்கள்

பின்னர் அதைப்பற்றிப் பார்ப்போம் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

புறச்சுட்டு என்பது ஒரு சொல்லுடன் சுட்டெழுத்து ஒன்று சேர்க்கப்பட்டிருப்பது. உதாரணம் அந்தப்பையன் இந்தப்பையன் உந்தப்பையன் என்பனவாகும் அல்லது அப்பையன் இப்பையன் உப்பையன்.

 

பையன் என்ற சொல்லையும் அ இ உ என்ற சுட்டெழுத்துக்களையும் எளிதில் பிரிக்கக் கூடியதாக இருக்கின்றது இவற்றையே புறச்சுட்டு என்பார்கள்

 

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

Link to comment
Share on other sites

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

 

அவர் அ, இ, உ வைத்தானே சுட்டெழுத்து என்றார்??!! :huh: சார்.. இவங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேணும்போலை இருக்கு.. :D

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவர் அ, இ, உ வைத்தானே சுட்டெழுத்து என்றார்??!! :huh: சார்.. இவங்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் வேணும்போலை இருக்கு.. :D

 

 

யாழ்ப்பாணத்திலை இருக்கிற ஏதாவது ஒரு தியேட்டருக்கு பக்கத்திலை பெரிய ரியூட்டரி கட்டி இவையளை படிக்கவைக்கோணும். :D

Link to comment
Share on other sites

அருவரியிலிருந்து நான் இந்தத் தமிழ் படிக்கத் தொடங்கியிருப்பதாக உணர்கிறேன். அதுவும் அடிக்காத, நுள்ளாத, கிள்ளாத உந்த அருமையான வாத்தியாரிடம் பத்தாவதுவரையிலாவது தொடர்ந்து படிக்க ஆசை. அதுவரையில் இந்தத் திரி இருக்குமா? யாழ்கள மாணவ மாணவியர் இருப்பார்களா? இது தடைபடாது தொடர்வதற்கு இந்த வாத்தியார்தான் உபாயம் கண்டு! அந்த யாழ்கள மட்டுறுத்தினர்களுடன் ஆலோசித்து! உசிதமான பதிலை வழங்குமாறு இங்கு தாழ்மையுடன் வேண்டிக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அந்த, இந்த, உந்த எல்லாம் சுட்டெழுத்தா ??? சுட்டுப் பெயரா??? வாத்தியார்.

 

அந்த இந்த உந்த என்பவை சுட்டுத்திரிபுகள் எனப்படும்

 

அ + மனிதன் = அம்மனிதன்

 

அ இ உ  என்பது பல இடங்களில் திரிபடைந்து  அந்த இந்த உந்த என வருகின்றன.

 

அம்மனிதன் அந்தமனிதன் இரண்டும் ஒரே கருத்துடையவை :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்து நாங்கள் பார்க்க இருப்பது வினாவெழுத்துக்கள பற்றியது.

சுட்டெழுத்துக்கள் போலவே தமிழ் மொழியில் வினாவெழுத்துக்களும் சிறப்பானவை.
 

எல்லா எழுத்துக்களும் வினாவெழுத்துக்களாக முடியாது.
வினாவொன்றைக் கேட்பதற்குப் பயன்படுத்தும் எழுத்துக்கள் வினாவெழுத்துக்களாகும்.
எ  ஆ ஓ ஏ என்பன தமிழ் மொழியில் இருக்கும் வினாவெழுத்துக்களாகும்
 

எ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்தில்  வரும்
உதாரணம் எது
 

ஆ ஓ  எனும் எழுத்துக்கள் சொல்லின் முடிவில்  வரும்
உதாரணம் அவனா அல்லது அவனோ  
 

ஏ எனும் எழுத்து சொல்லின் ஆரம்பத்திலும் முடிவிலும் வரும்
உதாரணம் ஏன் ஏது ஆரம்பத்திலும்
 

வந்தானே  என முடிவிலும் ஏ எனும் எழுத்து வினாவெழுத்தாக வருகின்றது

 

ஏன் எங்கே என்ற சொற்களில் வினாவெழுத்துக்கள்
பிரிக்கமுடியாமல் அந்தச்சொல்லினுள்ளேயே இருப்பதால் அவற்றை அகவினா எனவும்
 

எவ்வூர் அவனா உண்டானோ என்ற சொற்களில்  பிரிக்கக்கூடியவாறு வினாவெழுத்துக்கள் சேர்க்கப்பட்டிருப்பதனால் அவை புறவினா எனவும்
அழைக்கப்படும்
 

எ + ஊர் = எவ்வூர்
உண்டான் + ஓ = உண்டானோ

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவேண்டுகிறேன் வாத்தியார்.

 

உங்கள் வகுப்பிற்கு வரும்போது கறுப்புப்பூனை குறுக்கால் ஓடியதால் எனது பாட்டிக்கிழவி சற்று நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்திச் செல்லுமாறு பணித்தார், ஆதலால் இவ்வகுப்பிற்கு வர காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனை மன்னித்து என்னையும் உங்கள் வகுப்பின் மாணவியாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன் :rolleyes::wub:

Link to comment
Share on other sites

நான் வரலைப்பா இந்தாள் பிரம்போட நிற்கிறார்.... என்னையும் எல்லையும் சாத்துறதுக்கு சமயம் பார்த்துக் கொண்டிருக்கார் என்று வேற கேள்வி...ஆசைப்பட்டு வந்தா வாத்தீ...யார் :lol:   பிரம்பை வளுவளுப்பா தேய்த்துக் கொண்டு நிற்கிறார். ச்சூ ஆதி பேசாம எகிறிக்குதிச்சு ஓடிடு அதுதான் உத்தமம். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஊரில இருந்தபோது படிக்க கள்ளப்பட்டு இயக்கத்துக்கு ஓடி ....... பின்னர் அங்கும் படிப்பிக்கினம் என்று வெளிநாடு வந்தால் இங்கும் வாத்தியார் விடுகிறார் இல்லை  :D

Link to comment
Share on other sites

மன்னிக்கவேண்டுகிறேன் வாத்தியார்.

 

உங்கள் வகுப்பிற்கு வரும்போது கறுப்புப்பூனை குறுக்கால் ஓடியதால் எனது பாட்டிக்கிழவி சற்று நேரம் அமர்ந்து தண்ணீர் அருந்திச் செல்லுமாறு பணித்தார், ஆதலால் இவ்வகுப்பிற்கு வர காலதாமதம் ஏற்பட்டுவிட்டது. அதனை மன்னித்து என்னையும் உங்கள் வகுப்பின் மாணவியாக ஏற்றுக் கொள்ளவேண்டுகிறேன் :rolleyes::wub:

 

வாத்தியார், இனிமேல் நீங்கள் சொல்லித்தரும் பாடங்களையெல்லாம் ஒழுங்காய்ப் படிப்பன், குழப்படியெல்லாம் செய்யமாட்டன். நல்லபேர் எடுப்பன். வகுப்பிற்கு இரண்டு மாணவிகள் வந்துவிட்டார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாடத்தில் கவனமாக இருந்த அனைத்து மாணவர்களுக்கும்

கேள்விகளைக்கேட்டு வாத்தியாரின் தமிழறிவைச் சோதித்த மாணவர்களுக்கும் நன்றிகள்
 

நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் மாணவர்களுக்கு விடுமுறை :D

திங்கட்கிழமை வாத்தியாருக்கு விடுமுறை :lol:
 

செவ்வாய்க்கிழமை மீண்டும் தமிழ் படிப்போம் :D   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சகாரா! வந்து எனக்குப் பக்கத்தில முன்னுக்கு இருங்கோ. பின்னுக்குப் போய் இருந்தியள் எண்டா எல்லாரும் உங்களைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கொண்டு இருப்பினம் வாத்தியார் பாவம் வீணா டென்சனாவார். :rolleyes:

Link to comment
Share on other sites

சகாரா! வந்து எனக்குப் பக்கத்தில முன்னுக்கு இருங்கோ. பின்னுக்குப் போய் இருந்தியள் எண்டா எல்லாரும் உங்களைத்தான் திரும்பித் திரும்பிப் பாத்துக்கொண்டு இருப்பினம் வாத்தியார் பாவம் வீணா டென்சனாவார். :rolleyes:

 

முன்னுக்கு போய் இருந்தால் வாத்தியாரின் நாக்கு குழறும். பரவாயில்லையோ? :D

Link to comment
Share on other sites

நானும் வகுப்பில் சேரலாமா?  சோதனை வைக்கக் கூடாது, கேள்வியும் கேக்கக் கூடாது, வீட்டு வேலையளும் தரக் கூடாது சரியா.

Link to comment
Share on other sites

நானும் வகுப்பில் சேரலாமா?  சோதனை வைக்கக் கூடாது, கேள்வியும் கேக்கக் கூடாது, வீட்டு வேலையளும் தரக் கூடாது சரியா.

 

மொத்தத்தில் படிக்கிற நோக்கத்தில் வகுப்பில சேரவில்லை என்று சொல்கிறீர்கள் :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கு தமிழ் கொஞசம் 'வீக்'!

 

அரிச்சுவடியிலிருந்து கற்க, ஆசை... ஆசை... பேராசை... இப்போது!

 

"அ..ஆ  அ...ஆ" என கை பிடித்து யாரேனும் சொல்லித் தருவார்களா? :rolleyes:

 

 

http://youtu.be/Vej4VQvryKA


முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்!

Link to comment
Share on other sites

அருமை அருமை ராஜவன்னியரே, எனக்கும் உந்த வயதுதான். என்னையும் அங்கே சேரத்துவிடுங்கோ. அ, ஆ,,,, என்று என் வாய்சொல்லாது, உடம்பேசொல்லும். ஆனாலும் இப்படி நான் கேட்டதாக வாத்தியாரிட்டைப் போட்டுக்குடுத்துடாதையுங்கோ. அப்புறம் நான் உ, ஊ,,,,, என்று கத்தவேண்டி வந்திடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லா.... இஸ்கூல்லையும். சமர் ஹொலிடே... நடந்து கொண்டிருக்கிற நேரம்,
வாத்தியார் எங்களுக்கு வகுப்பு நடத்துவது நல்லாயிருக்கா....
நான்... லீவு முடியத்தான்... பள்ளிக்கூடப் பக்கம் வருவன். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அருமை அருமை ராஜவன்னியரே, எனக்கும் உந்த வயதுதான். என்னையும் அங்கே சேரத்துவிடுங்கோ. அ, ஆ,,,, என்று என் வாய்சொல்லாது, உடம்பேசொல்லும். ஆனாலும் இப்படி நான் கேட்டதாக வாத்தியாரிட்டைப் போட்டுக்குடுத்துடாதையுங்கோ. அப்புறம் நான் உ, ஊ,,,,, என்று கத்தவேண்டி வந்திடும்.

 

ச்சே..சே அப்படியெல்லாம் செய்யமாட்டேன். :)

 

டீச்சரம்மா யாரு? எதோ 'பாலு' 'மோரு'ன்னெல்லாம் இப்போ சொல்றாங்களே, அவங்களாயிருந்தால் நல்லது. (நிழலி போட்டிக்கு வராத பட்சத்தில்! ) :lol:

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
    • 50 நாடுகளுக்கு இலவச வீசா – உல்லாசப் பயணிகளை கவர இலங்கை திட்டம் April 18, 2024   இலங்கையின் சுற்றுலாத் துறையை மேலும் வலுப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய 50 க்கும் மேற்பட்ட நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான யோசனை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட உள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அண்மைக்காலமாக இலங்கை வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா உட்பட பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகின்றனர். குறிப்பாக ரஷ்யா, ஜேர்மன், பிரித்தானியா ஆகிய நாடுகளில் இருந்து அதிகளவான சுற்றுலா பயணிகள் வருகை தருவதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. இதேவேளை புதிய விசா முறையொன்றை நடைமுறைப்படுத்தல் மற்றும் புதிய இணைய வழிமுறையை செயற்படுத்தும் பணிகள் நேற்று முதல் ஆரம்பிக்கப் பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. அந்த திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய விசா நடைமுறை, அதற்கான கட்டணங்கள், பூர்த்திசெய்யப்பட வேண்டிய தேவைப்பாடுகள் மற்றும் இலங்கையில் தங்கியிருக்கக்கூடிய காலப்பகுதிகள் என்பன கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்டது.   https://www.ilakku.org/50-நாடுகளுக்கு-இலவச-வீசா-உல/  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.