Jump to content

pastii-pizza எங்கள் கண்டுபிடிப்பு. (சுவையான.. ஸ்ரைலான உணவு)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மொத்த சமையல் நேரம்: 1 மணித்தியாலம். (நீங்கள் தொடர்ந்து சமையலறையில் இருக்கனுன்னு அவசியம் இல்லை. இதையே சாட்டு வைச்சு.. ஊரை ஏமாற்றாமல்.. வேறு பயனுள்ள அலுவலையும் கவனிச்சுக் கொண்டு இதனை தயார் செய்யலாம்.) 

தேவையான பொருட்கள்:

12099011_H.jpg?identifier=d53f9d33cac0a2
178933885550e155a537d1a.jpg
Red_Capsicum_2.jpg

Bright_red_tomato_and_cross_section02.jpGluten-free-pasta__1331319a.jpgcheddar-cheese.jpeg

Salt-Chips1.jpg

செய்முறை:

* சுத்தமான பாத்திரத்தில் போதியளவு சுடுநீரை ஊற்றி பாஸ்ராவை வேக வைக்கவும்.

* பாஸ்ரா நன்கு வெந்து வந்த பின்.. மேலதிக நீரை வடித்து அகற்றவும்.

* அதன் பின் வெந்த பாஸ்ராவுக்குள் தேவையான அளவு ( பொதுவாக 4 தொடக்கம் 6 மேலே படத்தில் காட்டியது போன்ற ஒரு பக்கெட் பாஸ்ராவுக்கு மேசைக் கரண்டி..) பாஸ்ரா சோசை விட்டு கரண்டியால்..நன்கு கலக்கவும்.

* சிறிதளவு துருவிய சீஸையும் கொட்டி நன்கு கலக்கவும்.

* சுவைக்கு ஏற்ப உப்புச் சேர்த்தும் கலக்கிக் கொள்ளவும்.

இவற்றைக் கலக்கி எடுத்துக் கொள்ள முன்.. வெங்காயம்.. குடை மிளகாய்.. தங்காளி இவற்றை வட்டமாகவோ.. நீளமாகவே வெட்டி எடுத்துக் கொள்ளவும்.

மேலே சொன்ன செய்முறைகள் முடிந்த கையோடு உங்கள் ஓவன் சரியான முறையின் வேலை செய்யுதா என்று ஒரு முறை சரி பார்த்துக் கொள்ளவும்.. (அநேக தமிழாக்களின் வீடுகளில் ஓவன் சரியா வேலை செய்யுறதில்ல. கண்டதையும் கண்டபடி...திருகோ திருகென்று திருகி.. விரைவில் பழுதாக்கி விடுகிறார்கள். அல்லது காலாவதியான ஓவனுக்கு வெளியில் துடைத்து பளபளக்க வைச்சுக் கொண்டு.. உள்ள கறள் கட்ட வைத்திருப்பார்கள்.)

ஓவன் வேலை.. செய்தால் மேற்கொண்டு கீழ் வரும் செய்முறையை தொடரவும்.

நீங்கள் மேலே தயாரித்துள்ள பாஸ்டா மிக்ஸ் (பாஸ்டா கலவை) க்கு ஏற்ப கேக் வாட்டும் தட்டை எடுத்து.. அதனுள் ஈயக் கடதாசியை விரித்துக் கொண்ட பின் மேற்படி.. பாஸ்டா மிக்ஸைக் கொட்டவும். அதனை சமனாக தட்டு முழுவதற்கும் என்று பரப்பி எடுக்கவும். [பீட்சா சூடாக்கும் தட்டுள்ளவர்கள் அதில் இதனைச் செய்தால் வரவேற்கப்படும். ஆனால் ஈயக்கடதாசியை போட மறந்திடாதீர்கள். அப்புறம்.. கீழ கரிப்பிடிச்சிட்டு என்று நம்ம வந்து திட்டக் கூடாது. ] 

மேற் சொன்னபடி.. பரப்பி.. எடுத்த பின்.. பீட்சாவிற்கு தூவுவது போல.. துருவிய சீஸ்.. மற்றும் வெங்காயம்,பெப்பர், தங்காளி (விரும்பியவர்கள்.. jalapeño உட்பட்ட வேறு மரக்கறிகளும் தூவலாம்.. சிறிய அளவிலான ரிக்கா.. கோழித் துண்டுகளையும் தூவலாம். pepperoni போட விரும்பிறவர்களும் போடலாம். ) போன்றவற்றை பாஸ்டா மிக்ஸின் மேலே பரவலாகத் தூவி எடுக்கவும்.

BE3003021MSS.JPG

அப்புறம் என்ன.. உங்கள் ஓவனை 120 தொடக்கம் 180 பாகைக்குள் ஒன்றில் வைத்து அல்லது... பாகை காட்டி இல்லாதவர்கள் இலக்கம் 5 தொடக்கம் 8 வரை இலக்கங்களுள் ஒன்றைத் தெரிவு செய்து.. 5 நிமிடங்கள்.. முன் சூடு காட்டிய பின்... மேற்படி.. Pastii - pizza கலவையை (மிக்ஸ்) 20 தொடக்கம் 30 நிமிடங்கள் வரை (வேகிற அளவிற்கு ஏற்ப நேரம் கூடலாம்.. குறையலாம்) வாட்டி (வெதுப்பி) மேலே சீஸ் உருகி.. நொதுமல் அற்ற பொன்னிறப் படையாகும் வரை.. வாட்டி எடுக்கவும்.

இப்போ.. உங்கள்.. எங்கள் பாஸ்ரி பீட்சா தயாராகி இருக்கும். தக்காளி சோஸோடு தொட்டும் சாப்பிடலாம். சாப்பிட நிச்சயம் முள்ளுக்கரண்டி பாவிக்கவும்.

இந்தப் pastii-pizza எங்களுக்குரியது. இதனை விளம்பரங்களில்.. உற்பத்திகளில் பாவிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்..! கடைகளில் செய்து விற்க விரும்புவர்கள் எங்களிடம் அனுமதி பெற வேண்டும். :lol:

இறுதித் தயாரிப்பு இப்படி இருக்கும்..............
 

IMG_20130824_191722.jpg

படைப்பு: நெடுக்ஸ்.

சமைத்துப் பார்த்து சுவைத்து உங்கள் கருத்தையும் சொல்லுங்க..! :)

Link to comment
Share on other sites

  • Replies 56
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கு இதற்க்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐந்து வருடங்களின் முன்னரே இதன் காப்புரிமையை நான் எடுத்துவிட்டேன். டூஊஊஊ லேட்  நெடுக்ஸ். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வித்தியாசமன சிந்தனை... வித்தியாசமான கண்டுபிடிப்பு!

 

வாழ்த்துக்கள்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

 

அந்த உணவுக்குப் பெயர் என்ன..??! அதன் செய்முறை என்ன..???! வரிக்கி வரி இதே செய்முறைகளால் ஆனதா..???! இன்றேல் இதுதான் அது என்று சொல்ல முடியாது..!!

 

pastii-pizza (இந்தப் பெயர் எங்களது.. ஆங்கில எழுத்து ஒழுங்குகளோடு) மற்றும் மேற்படி செய்முறை முழுக்க முழுக்க எங்களது. அதனை தயாரித்தும் காட்டி இருக்கிறம். கீழே உள்ள படம் அதற்குச் சாட்சி..! :lol::)

நெடுக்கு இதற்க்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துவிட்டீர்களா? 

 

அதுதான் எங்காவது இந்த பூமியின் மூலையில் ஏலவே இப்படி செய்திருப்பார்களோ.. என்று சந்தேகித்து செய்தியை உலாவ விட்டிருக்கிறம். இல்லைன்னு தெரிஞ்சால் தானே காப்புரிமை பற்றி சிந்திக்கலாம். அடுத்தவன் செய்முறையை உல்டா பண்ணுறதுக்கு காப்புரிமை தருவாங்களா என்ன..??! :lol::D

 

 

வித்தியாசமன சிந்தனை... வித்தியாசமான கண்டுபிடிப்பு!

 

வாழ்த்துக்கள்.  :icon_idea:

 

இப்படி ஒரேயடியா கண்டுபிடிப்புன்னு எழுதினதை எல்லாம் நம்பக் கூடாது. எங்கள் அளவில் கண்டுபிடிப்புத் தான். ஆனால் உலக அளவில்..???! :lol:

 

இருந்தாலும் வாழ்த்திறதுக்கு நல்ல மனசு தேவை. அது உங்க கிட்ட இருப்பதால் உங்கள் வாழ்த்தை வரவேற்றுக் கொள்ளுறம். :icon_idea::)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அல்லது காலாவதியான ஓவனுக்கு வெளியில் துடைத்து பளபளக்க வைச்சுக் கொண்டு.. உள்ள கறள் கட்ட வைத்திருப்பார்கள்.)

 

 

நெடுக்ஸ்,

 

கறள் ஒரு சிட்டிகை அல்லது ஓவனுக்குள் இருக்கும் அளவு எண்டு போடுங்கள். :icon_mrgreen:  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இப்படி ஒரேயடியா கண்டுபிடிப்புன்னு எழுதினதை எல்லாம் நம்பக் கூடாது. எங்கள் அளவில் கண்டுபிடிப்புத் தான். ஆனால் உலக அளவில்..???!  :lol:

 

 

கண்டுபிடிப்பு என்பது சில வேளை கொஞ்சம் ஓவரா இருக்கலாம். ஆனால் வித்தியாசமாக உள்ளது. இதுவரை நான் இப்படியான உணவை பார்க்கவில்லை. 

 

உலக அளவில் கொண்டு போவது பற்றி நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். :icon_idea:

 

எதற்கும் ஒரு சில உணவகங்களில் கொடுத்து முயற்சி செய்து பார்க்கலாமே. 

 

அப்படி உலக புகழ் அடைந்தால் ஒரு நிறுவனமாக பதிந்து செய்யலாம். 

Uncle Ben's மாதிரி நீங்கள் ஒரு "மாமா நெடுக்ஸ்" ஆகலாம் (சும்மா தமாசுக்கு) :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இத்தாலி உணவை கொப்பியடிச்சுப் போட்டு :D அதை வேற தன்ட கண்டு பிடிப்பு என்று சொல்லி :lol: யாழ் கள உறவுகளுக்கு,அதுவும் சுமோவுக்கு சாப்பாட்டை பற்றி ஒன்றும் தெரியாது :) என்று நினைச்சுக் கொண்டாராக்கும் நெடுக்ஸ் :)  என்ட கு.சா அண்ணா வேற சமையலில் விண்ணர் :rolleyes:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிலாக்களுக்கு பொறாமை. இத்தாலியக் கொப்பின்னா.. ஏன் இவ்வளவு நாளும் இவை கொப்பி பண்ணாம இருந்தவை..???! கொப்பி பண்ணி யாழ் உறவுகளுக்கும் அறிமுகப்படுத்தி இருக்கலாமில்ல..! :lol::):rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இத்தாலி உணவை கொப்பியடிச்சுப் போட்டு :D அதை வேற தன்ட கண்டு பிடிப்பு என்று சொல்லி :lol: யாழ் கள உறவுகளுக்கு,அதுவும் சுமோவுக்கு சாப்பாட்டை பற்றி ஒன்றும் தெரியாது :) என்று நினைச்சுக் கொண்டாராக்கும் நெடுக்ஸ் :)  என்ட கு.சா அண்ணா வேற சமையலில் விண்ணர் :rolleyes:

 

 

இத்தாலிக்காரன்ரை சாப்பாட்டை அப்பிடியே உரிச்சுபடைச்ச மாதிரியே இருக்கு.... :D

ஒரு மாற்றத்துக்கு கத்தரிக்காய் புடலங்காய் போட்டிருந்தாலும் பரவாயில்லை ........ :icon_idea:

 

உதுக்கு ஒருமணித்தியாலம் மினைக்கடுற நேரம் குழல்புட்டு அவிச்சுப்போட்டு அந்தமாதிரி இறுக்கலாம். :wub:  :wub:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலிகாரன்ர சாப்பாடு சாப்பாடு என்றீங்கள்... ஆளாளுக்கு. அதென்ன சாப்பாடு... அதின்ர செய்முறை எனென்று கேட்டால் தெரியவில்லை. இதில.. தாங்கள் விண்ணர்களாமில்ல..! :lol::rolleyes:


இதே பிழைப்பாப் போச்சு நம்மாக்களுக்கு..! :icon_idea:

Link to comment
Share on other sites

இந்த உணவை யெர்மனியில் உள்ள இத்தாலி உணவகங்களில் செய்வார்கள். புதிது அல்ல.

 

இவர் 'லசானியா'வில் சின்ன சின்ன மாற்றங்களை செய்துபோட்டு கண்டுபிடிப்பாம்..!! இடியப்பம் இருக்கேக்கை நூடில்சை கண்டுபிடிச்சமாதிரி..!! :)

 

http://en.wikipedia.org/wiki/Lasagne

 

File:Lasagne_-_stonesoup.jpg

Link to comment
Share on other sites

உதுக்கு ஒருமணித்தியாலம் மினைக்கடுற நேரம் குழல்புட்டு அவிச்சுப்போட்டு அந்தமாதிரி இறுக்கலாம். :wub:  :wub:

 

உங்களுக்கென்ன பணக்காரர்.. மா அவிக்க ஒரு கரண்ட் காசு.. பிறகு புட்டுக்கு ஒரு கரண்ட் காசு.. கரண்டையும் தண்ணியையும் நினைக்க சாப்பிடவும் முடியேல.. குளிக்கவும் முடியேல.. :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அந்த உணவுக்குப் பெயர் என்ன..??! அதன் செய்முறை என்ன..???! வரிக்கி வரி இதே செய்முறைகளால் ஆனதா..???! இன்றேல் இதுதான் அது என்று சொல்ல முடியாது..!!

 

 

überbackene nudeln (gratin of pasta)

 

இதில் பலவகை உண்டு.

Ex:-

 

* al Forno

* Lasagne

* Cannelloni di carne

* Salmone

* Tris de Pasta

* Combinazione

* Big Mam

 

etc ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த உணவுக்குப் பெயர் Pasta Bake என்று கூறுவர். இதற்கு அரைத்த இறைச்சி (minced meat ) போட்டும் செய்யலாம். கீரை கூடப் போட்டு நான் செய்வேன்.

pasta வை முதலே அவிக்காது Double cream உடன் சிறிது நீர் சிறிது சேர்த்து வேண்டுமானால் எமது சுவைக்கு சிறிது மிளகாய்த்தூள் கூடப் போட்டு இதைச் செய்யலாம்.

ஆனால் பெயருக்கு மட்டும் நீங்கள் வேண்டுமென்றால் உரிமம் எடுக்கலாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விபரங்களுக்கு நன்றி சோழியான் அண்ணா.. ஜீவா மற்றும் சுமே அக்கா.

 

நாங்கள் நண்பர்கள் கூடி ஆராய்ந்ததில்.. எங்களின் செய்முறை அவர்களின் செய்முறையில் இருந்தும் தனித்து உள்ளமை இனங்காணப்பட்டுள்ளது. அந்த வகையில்.. இதனை ஒத்த தயாரிப்புக்களில் இருந்து இது வேறுபடுவதாகவே நாங்கள் இன்னும் கருதுகிறோம்.

 

இருந்தாலும்.. இன்னும் விபரங்கள் கிடைக்கும் பட்சத்தில் தான் இது தனித்துவமான தயாரிப்பா என்பதை உறுதி செய்ய முடியும்..! :)

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கென்ன பணக்காரர்.. மா அவிக்க ஒரு கரண்ட் காசு.. பிறகு புட்டுக்கு ஒரு கரண்ட் காசு.. கரண்டையும் தண்ணியையும் நினைக்க சாப்பிடவும் முடியேல.. குளிக்கவும் முடியேல.. :)

 

 

ஓம் சோழியர்!வீடு அஞ்சுமாடி வீடு.... வீட்டுக்கு முன்னாலை நாலு பென்ஸ் நிக்கிது......வீட்டுக்கு பின்னாலை சைக்கிள் மோட்டச்சைக்கிள் நிக்கிது......வீட்டுவேலை செய்ய இரண்டுமூண்டு எடுபுடியள்.....என்ரை குலமென்ன கோத்திரமென்ன....வாய் கொப்புளிக்கறதே பன்னீரிலைதான்........ஏறினால் கார் இறங்கினால் காபெட்.....ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் கோயிலிலை என்னைக்கண்டாப்பிறகுதான் ஐயர் மணியே அடிப்பார் எண்டால் என்ரை பவர் எப்பிடியெண்டு யோசிச்சுப்பாருங்கோவன்.....இவடத்தை நடக்கிற சாமத்தியவீடு கலியாணவீட்டிலையெல்லாம் நான் தான் பவர்ஸ்டார். :lol:  :D  :icon_mrgreen:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிக எளிமையான செய்முறை! சிறப்பான  விளக்கம்! நிறையச் சாமான்களைப் போட்டு உருட்டிப் பிரட்டி சமையல் அறையை சாமான் அறையாக்கத் தேவையில்லை,  தனிக்கட்டைகளுக்கு மாலையில் ரிலாக்சாக செய்யக்கூடிய நல்ல உணவு!

உரிமம் பெற்றதும் மறக்காமல் அறியத் தரவும்!! :D  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இந்த சமையலையும் செய்துபார்த்து எப்படி என்பதினை  எழுதுகின்றேன்.  :D
 
பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்  :)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இத்தாலி உணவாக இருந்தாலும் அதன் செய்முறையை எழுத்தில் வடித்த நெடுக்ஸ் அவர்களுக்கு நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கர் இப்பத் தான் ஒரு பெட்டையை கரெக்ட் பண்ணி,சமைச்சுக் கொடுத்திருக்கிறார் அதைப் பாராட்டுறதை விட்டுட்டு நொட்டை சொல்லிக் கொண்டு :lol:    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜப்பான்காரனின்.. burger-pizza எங்கட கண்டுபிடிப்புக்கு அடுத்ததா களமிறங்கி இருக்குது. :lol:

 

article-2402598-1B7AE597000005DC-467_634


மிக எளிமையான செய்முறை! சிறப்பான  விளக்கம்! நிறையச் சாமான்களைப் போட்டு உருட்டிப் பிரட்டி சமையல் அறையை சாமான் அறையாக்கத் தேவையில்லை,  தனிக்கட்டைகளுக்கு மாலையில் ரிலாக்சாக செய்யக்கூடிய நல்ல உணவு!

உரிமம் பெற்றதும் மறக்காமல் அறியத் தரவும்!! :D  :D

 

 

 

இந்த சமையலையும் செய்துபார்த்து எப்படி என்பதினை  எழுதுகின்றேன்.  :D
 
பகிர்விற்கு நன்றி நெடுக்ஸ்  :)

 

 

அனுபவம் உள்ளவங்க சரியாத் தான் பேசுறாங்க. :)

 

சமைச்சுப் பார்த்து சொல்லுங்க.. தமிழரசு. அப்புறமா பாருங்க.. எங்கட pastii-pizza famous ஆகாட்டி..! :lol:
 


இத்தாலி உணவாக இருந்தாலும் அதன் செய்முறையை எழுத்தில் வடித்த நெடுக்ஸ் அவர்களுக்கு நன்றி

 


இத்தாலிக்காரனின் சாயல் பெருமளவு.. இருந்தாலும் செய்முறையில்.. தன்மையில் சிறிது வேறுபட்டது வாத்தியார். எளிமையானதும் கூட. தயாரிப்பு மொத்த நேரம் 1 மணித்தியாலம் என்பது சமையலறைக்குப் போய் கிளீன் பண்ணி எல்லாம் முடிச்சு வெளில வாற நேரம். சமைக்க என்று பார்த்தால் 35 நிமிடம் காணும்..! :)


நெடுக்கர் இப்பத் தான் ஒரு பெட்டையை கரெக்ட் பண்ணி,சமைச்சுக் கொடுத்திருக்கிறார் அதைப் பாராட்டுறதை விட்டுட்டு நொட்டை சொல்லிக் கொண்டு :lol:    

 

பிகரை கரெக்ட் பண்ண.. கோவில்ல போய் சுண்டலும் வடையும் வாங்கிக் கொடுத்தாலே போதும். தமிழ் பெட்டைகளுக்கு.. உதெல்லாம்.. சாப்பிட வராது. சோத்துக் கூட்டம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்கூட்டம் என்பது ஆண்களுக்கே அதிகம் பொருந்துவதால் பெண்களுக்குக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சோத்துக்கூட்டம் என்பது ஆண்களுக்கே அதிகம் பொருந்துவதால் பெண்களுக்குக் கூறுவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

ஆண்களுக்கு அந்தச் சோத்தை சமைக்கிற சுகத்திற்காக ஆக்கிப் போடுற ஆன்ரிகளை நாங்களும் வன்மையா கண்டிக்கிறம். ரைஸ் குக்கரில.. அரிசியை அள்ளிப் போடுறதுக்குப் பெயர் சமையல் அல்ல..! :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
    • abaan மனிசி ஏன் இவ்வளவு பிடிவாதம் பிடிக்குது இலங்கையின் பெண்கள் கொஞ்சம் உசாரான ஆட்கள் தான் .
    • 28 MAR, 2024 | 09:36 PM   யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ சாய் முரளி எஸ்  யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் எம்.சி.பி விக்ரமசிங்கவை யாழ்ப்பாணப் பாதுகாப்புப் படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.  அதன் போது இடம்பெற்ற கலந்துரையாடலில், யாழ். பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி, இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை நினைவு கூர்ந்தார், இரு நாடுகளுக்கும் இடையில் மிக உயர்ந்த அளவிலான ஒத்துழைப்பைப் பேணுவதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவருக்கு யாழ். பாதுகாப்புப் படைத் தலைமையகத் தளபதி சிறப்பு நினைவுச் சின்னத்தை வழங்கியதுடன், யாழ்ப்பாண இந்திய துணைத் தூதுவரின் விஜயத்தின் அடையாளமாக விருந்தினர் பதிவேட்டு புத்தகத்தில் பாராட்டு குறிப்புக்களை எழுதினார். யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக பிரிகேடியர் பொதுப் பணி பிரிகேடியர் கே.ஜே.என்.எம்.பீ.கே. நவரத்ன யாழ். பாதுகாப்பு படை தலைமையக பொதுப் பணிநிலை அதிகாரி  உளவியல் செயற்பாடு மற்றும் யாழ்ப்பாண இந்திய துணைத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் சந்திப்பில் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/179913
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.