Jump to content

பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை!


Recommended Posts

பிளஸ்டூ மாணவி சந்தித்த நூதன பிரச்சினை!

ஆகஸ்ட் 11, 2006

சென்னை:

சென்னையைச் சேர்ந்த பிளஸ்டூ மாணவி ஒருவர், தன்னை இ மெயில் மூலமாக காதலித்த கேரள என்ஜீனியர் தற்போது திருமணம் செய்துகொள்ள மறுப்பதாக சென்னை காவல் துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்துள்ளார்.

சென்னை மயிலாப்பூரைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவர் அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி தங்கமணி. இவர்களுடைய 17 வயது மகள் ஜெனிபர்குமாரி.

பிளஸ்டூ படித்து வரும் ஜெனிபர் குமாரி, தனது தாயார் மற்றும் வழக்கறிஞர் ஒருவருடன் மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்திற்க்கு வந்து ஒரு புகார் மனுவைக் கொடுத்தார். அதில், கேரள மாநிலம் திருச்சூரைச் சேர்ந்த ஜோசப் என்ற பொறியாளரும், நானும், இன்டர்நெட் மூலம் நட்பு கொண்டு தீவிரமாக காதலித்து வருகிறோம்.

ஜோசப் தன்னைத் திருமணம் செய்ய பெண் தேவை என்று விளம்பரம் கொடுத்திருந்தார். அதை இணைய தளத்தில் பார்த்த நான் விளையாட்டாக தொடர்பு கொண்டேன். இருவரும் இதன் மூலம் நட்பானோம்.

பின்னர் இருவரும் அடிக்கடி இமெயில் மூலமாகவும், சாட்டிங் மூலமாகவும் எங்களது நட்பை வளர்த்துக் கொண்டோம். இது பின்னர் காதலாக மாறியது.

எனது புகைப்படத்தை அவருக்கு அனுப்பி வைத்தேன். அவரும் தனது புகைப்படத்தை எனக்கு அனுப்பி வைத்தார். இருவரது காதலும் தீவிரமானது. என்னைத் திருமணம் செய்துகொள்வதாக அவர் வாக்குறுதி அளிததார். மேலும் அவரது பெற்றோர்களும், சென்னை வந்து எனது பெற்றோரை சந்தித்துப் பேசினர்.

ஆகஸ்ட் மாதம் நிச்சயம் செய்து கொள்ளலாம் என்று ஜோசப் தெரிவித்திருந்தார். ஆனால் எனக்கு 17 வயதுதான் ஆவதால், திருமணத்தை 18வயது¬முடிந்த பிறகு வைத்துக்கொள்ளலாம் என்றும் கூறியிருந்தார். நானும் இதற்கு சரி என்று கூறியிருந்தேன்.

இந்த நிலையில் தனது அண்ணியின் தங்கையை எனது பெற்றோர் பேசி முடித்து விட்டதாகவும், இதனால் உன்னை கல்யாணம் செய்துகொள்ள முடியாது என்றும் ஜோசப் எனக்கு மெயில் மூலம் தெரிவித்தார். இதனால் நான் அதிர்ச்சி அடைந்துள்ளேன்.

நாங்கள்இருவரும் கல்யாணம் செய்துகொள்ளாமலேயே கணவன், மனைவியாக வாழ்ந்து விட்டோம். எனது நிர்வாணப் படங்களை அவருக்கு அனுப்பி வைத்துள்ளேன். அதேபோல அவரும் தனது நிர்வாணப் படங்களை எனக்கு அனுப்பி வைத்தார்.

மெயில் மூலமாக முத்தங்களை பரிமாறிக் கொண்டோம். உடலால் மட்டும் தான் உறவு கொள்ளவில்லையே தவிர கணவன், மனைவிக்கு இடையே என்னவெல்லாம் நடக்குமோ அதை இமெயில் மூலமும், சாட்டிங் மூலமும் நாங்கள் மேற்கொண்டுவிட்டோம், உணர்ந்து விட்டோம்.

எனவே அவரைப்போல என்னால் அவரை தூக்கி எறிய முடியவில்லை. கணவன், மனைவிக்கு இடையே மட்டுமே இருக்க வேண்டிய அந்தரங்கம் எங்களுக்குள் நடந்து விட்டது. எனவே இந்த நிலையில் என்னை வேண்டாம் என்று அவர் சொல்வது ஏமாற்று வேலையாக கருதிகிறேன்.

எனவே எனக்கு 18 வயது ஆனவுடன், என்னையே ஜோசப்திருமணம் செய்து கொள்ள சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காவல்துறை உதவவேண்டும் என்றுகூறியிருந்தார் ஜெனிபர்.

இந்தப் புகாரைப் பார்த்த அதிகாரிகள் குழம்பினர். உனக்கு 17 வயதுதான் ஆகிறது. இந்த நிலையில் திருமணம் செய்து கொள்ள¬முடியாது. மேலும் உன்னை வேண்டாம் என்று சொல்லும் நபரை ஏன் பிடிவாதமாக மணக்க நினைக்கிறாய் என்றுஅதிகாரிகள் ஜெனிபருக்கு அறிவுரை கூறிப் பார்த்தனர்.

ஆனால் இதை ஜெனிபர் ஏற்கவில்லை. மேலும் அவரது தாயாரும் ஒரு புகாரை போலீஸாரிடம் கொடுத்தர். எனது மகளை நம்ப வைத்து ஏமாற்றி விட்டார் ஜோசப். எனது மகளின் பிறந்த மேனிப் படங்கள் அவரிடம் உள்ளன. இதனால் ஜெனிபர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அழுதபடிஇருக்கிறார். பள்ளிக்கூடம் போக மறுக்கிறார்.

எனவேஜோசப் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றுஅந்தப் புகாரில் தங்கமணி கூறியுள்ளார்.

இதுகுறித்து விசாரணை நடத்த மயிலாப்பூர் உதவிஆணையருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

http://thatstamil.oneindia.in/news/2006/08...08/11/girl.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

காலம் ரெம்ப கெட்டுப் போச்சுப்பா...

Link to comment
Share on other sites

காலம் ரெம்ப கெட்டுப் போச்சுப்பா...

ஒம்டா எண்ட தம்பி எல்லோரையும் உன்னையும் என்னையும் போல எதிர்பாக்கலாமா? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அன்பு மலர்களே....... நம்பி இருங்களே..... நாளை நமதே....

என் அண்ணன் உக்கிரபுத்திரனா நீ??

Link to comment
Share on other sites

அன்பு மலர்களே....... நம்பி இருங்களே..... நாளை நமதே....

என் அண்ணன் உக்கிரபுத்திரனா நீ??

ஏன் இன்று யாருக்கு கொடுக்க போகிறோம் இன்றும் நமதே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நான் தான் உனது அண்ணன்! நீ என் தம்பி!

சரி சரி வா நாம் அந்தப்புறம் சென்று பேசலாம். இங்கே பேசினால் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.

Link to comment
Share on other sites

நான் தான் உனது அண்ணன்! நீ என் தம்பி!

சரி சரி வா நாம் அந்தப்புறம் சென்று பேசலாம். இங்கே பேசினால் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.

என்னது தம்பியா

சொத்துகாக அண்ணன் எனது வயதை குறைத்து விட்டாயே தம்பி :P :P

Link to comment
Share on other sites

நான் தான் உனது அண்ணன்! நீ என் தம்பி!

சரி சரி வா நாம் அந்தப்புறம் சென்று பேசலாம். இங்கே பேசினால் நம்மை வெளியே அனுப்பி விடுவார்கள்.

அந்தபுறத்துகா அட சீ நானும் நீயும் அங்கு போய் என்னாத்தை பேச போறம் அண்ணன் அழகியருடன் ஆடி பாடும் நேரம் இது :P :oops:

கரடி கதை தெரியும் தானே :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தம்பி; அண்ணன் பேச்சு எப்பவுமே ஒன் வே அங்க இருந்து எனக்கு எதிரா ரிட்டன் பேச்சு வரப்படாது!

கக்கக்க போ...

Link to comment
Share on other sites

தம்பி; அண்ணன் பேச்சு எப்பவுமே ஒன் வே அங்க இருந்து எனக்கு எதிரா ரிட்டன் பேச்சு வரப்படாது!

கக்கக்க போ...

அட சீ கினத்கிள்ளே பேசினா அது எதிரோலிக்கும் இது கூட புரியாம எப்படி நாட்டை ஒப்படைப்பது? :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட சீ கினத்கிள்ளே பேசினா அது எதிரோலிக்கும் இது கூட புரியாம எப்படி நாட்டை ஒப்படைப்பது? :oops:

ரெம்ப வீரமப்பா! கிணத்துக்குள்ளையா உங்களின் அரசசபையைக் கட்டி வைத்திருக்கின்றீர்கள்! :wink:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.