Jump to content

திருமலையில் பெரும் சமர் மூண்டது


Recommended Posts

படையினரின் வலிந்த தாக்குதல்: திருமலையில் பெரும் சமர் மூண்டது

திருமலை நிருபர்

Thursday, 10 August 2006

இன்று அதிகாலை 4.00 மணியளவில் சிறிலங்காப் படையினர் பாரியளவிலான வலிந்த தாக்குதல் முயற்சியொன்றை ஆரம்பித்துள்ளனர்.

இருமுனைகளால் ஆரம்பிக்கப்பட்ட முன்னேற்ற முயற்சி விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியை நோக்கியதாக முன்னெடுக்கப்படு வதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த வலிந்த தாக்குதலுக்கு எதிராக விடுதலைப் புலிகளிடமிருந்து மிகக் கடுமையான எதிர்பை இராணுவம் சந்தித்து வருவதாக படைத்தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

காயமடைந்த படையினர் கந்தளாய் வைத்தியசாலைக்கு வர ஆரம்பித்து இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

http://www.battieelanatham.com/newsite/ind...=1128&Itemid=37

Link to comment
Share on other sites

இலங்கையில் ராணுவத் தாக்குதல் தொடர்கிறது.

இலங்கையில் அரசாங்க ராணுவமும் புலிகள்அமைப்பும் மூன்று வார காலமாக மோதிக்கொண்டதற்கு முக்கிய காரணமாக இருந்த மாவிலாற்று மதகு பிரச்னை முடிந்துவிட்டது என்றபோதிலும் மோதல் முடிந்து விட்டதற்கான அறிகுறி தெரிய வில்லை.

மதகை செவ்வாய்க்கிழமை தாங்கள் திறந்துவைத்ததாகப் புலிகள் அமைப்பு அறிவித்தது. ராணுவத்தை எதிர்த்து நடத்தப்பட்ட தாக்குதல் முடிவுக்கு வந்து விட்டதாகவும் அப்போது அறிவித்தது.

ஆனால் மதகைத் திறக்க பாதுகாப்புப் படைகள் மேற்கொண்ட மனிதாபிமான நடவடிக்கை வெற்றிபெற்று விட்டது என்று அரசாகங்கம் அறிவித்தது.

இந்தப் பிரச்னை இத்துடன் முடிய வில்லை. மதகுப் பகுதியை விட்டு புலிகள் அகலவேண்டும். ஆற்று நீர்க் கட்டுப்பாடு அரசாங்கத்தின் கையில் இருக்க வேண்டும் என்று அமைச்சர் ஒருவர் சொன்னார்.

இதற்கிடையே நேற்று அதிகாலையிலும் ராணுவத்தின் ஆகாயத் தாக்குதல் தொடர்ந் தது என்று தெரிவிக்கப்பட்டது.

இவ்வே£ளையில் வடக்கு இலங்கையில் கண்ணிவெடியில் ஆம்புலன்ஸ் வாகனம் சிக்கியதில் மருத்துவர் உள்ளிட்ட ஐந்து பேர் கொல்லப்பட்டதாக புலிகள் அமைப்பு தெரிவித்தது.

புலிகள் பகுதிக்குள் புகுந்து அரசாங்கத் தின் ராணுவம் கண்ணிவெடியை வைத்து மருத்துவர், அவரின் மனைவி, இரண்டு தாதியர், ஓட்டுநர் ஆகிய ஐவரையும் ஈவு இறக்க மில்லாமல் பழிவாங்கும் காரியமாக கொன்றுவிட்டது என்று புலிகளின் இணைய தளம் குறிப்பிட்டது.

இதற்கிடையே ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று நாடுகளின் பேராளர்கள் செப்டம்பர் முதல் தேதிக்குள் நாட்டைவிட்டு வெளியேறிவிட வேண்டும் என்று தாங்கள் எடுத்த முடிவில் மாற்றம் இல்லை என்று புலிகள் அமைப்பு நேற்று மறுஉறுதிப்படுத்தி யது. ஆற்று நீர்ப் பிரச்னை முடிந்துள்ள நிலை யில் இந்தப் பிரச்னை அடுத்த பிரச்னையாக இருக்கிறது. இவ்வேளையில் பிரான்ஸ் நாட் டின் தொண்டூழிய அமைப்பில் பணியாற்றிய போது கொல்லப்பட்ட 17 பேரும் சுட்டுக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள் என்று ‘பசி தீர்ப்புப் படை’ என்ற அந்த அமைப்பு அறி வித்து இருக்கிறது.

கொல்லப்பட்ட அந்தத் தமிழர்களின் இறுதி சடங்குகள் நேற்று நடந்தன.

இவ்வேளையில் இலங்கை அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் போர்நிறுத்த உடன் படிக்கை மீறல்கள், எண்ணிக்கையில் குறை வாக இருக்கின்ற போதும், அவை மிகவும் பாரதுìர மானவை என்று அனைத்துலகக் கண்காணிப்புக் குழு தலைவர் உல்வ் ஹென்றிக்ஸன், குறிப்பிட்டார்.

இதற்கிடையே தமிழ்நாட்டின் அரிச்சல் முனைக்கு இலங்கைத் தமிழர்கள் 159 பேர் 14 படகுகள் மூலம் நேற்று மாலை சென்றனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

TAMILMURASU-SINGAPORE

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திருமலையில் புலிகள் இராணுவத்தினர் உக்கிர மோதல் 20 படையினர் வரை பலி!

திருமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில்இ இன்று சிறீலங்கா படைகளுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் மத்தியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.

இன்று அதிகாலை 4:00 மணியளவில்இ வான்படை விமானங்கள் குண்டுகளைப் பொழியஇ ஆட்லறி - பல்குழல் எறிகணை சூட்டாதரவுடன்இ கல்லாறு பகுதியில் இருந்துஇ மாவிலாற்றை நோக்கி சிறீலங்கா அரசாங்கத்தால் பாரிய படையெடுப்பொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பத்தாயிரம் வரையான துருப்புக்களுடன் சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள இருமுனை வலிந்த படையெடுப்பைஇ முன்னரங்க நிலைகளில் எதிர்கொண்டிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணிகள்இ உக்கிர பதிலடி தாக்குதல்களை தொடுத்துள்ளன.

சிறீலங்கா படைகளின் படையெடுப்பை எதிர்கொண்டுஇ தரைவழியில் களமிறங்கியிருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் போர் அணிகளுக்கு ஆதரவாகஇ பீரங்கிப் படையணி போராளிகளால் அச்சொட்டான எறிகணை தாக்குதல்கள் நிகழ்த்தப்படுகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் உக்கிர பதிலடி தாக்குதல்களுக்கு ஈடுகொடுக்க முடியாதுஇ சிறீலங்கா படைகள் திணறி வருகின்றன.

பெரும் எடுப்பில் சுடுதிறனையும்இ படைக்கல சக்தியையும் பிரயோகித்துஇ மாவிலாறு அணைக்கட்டை கைப்பற்றுவதற்குஇ கடந்த இரு வாரங்களுக்கு மேலாக சிறீலங்கா அரசாங்கம் மேற்கொண்ட வலிந்த படையெடுப்புக்கள் படுதோல்வியில் முடிவடைந்த நிலையில்இ தற்போது கூடுதல் ஆட்பலத்தைப் பயன்படுத்திஇ பாரிய வலிந்த படையெடுப்பொன்றை சிறீலங்கா அரசாங்கம் முன்னெடுத்துள்ளது.

கல்லாறு - மாவிலாறு பகுதிகளில்இ தொடர்ந்தும் இடம்பெற்று வரும் மோதல்களில்இ இருபதுக்கும் அதிகமான சிறீலங்கா படையினர் கொல்லப்பட்டுஇ மேலும் ஐம்பதுக்கும் அதிகமான படையினர் படுகாயமடைந்திருப்பதாக சுயாதீன தகவல்கள் கூறுகின்றன.

எனினும் உண்மை நிலையை மூடிமறைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கும் சிறீலங்கா அரசாங்கம்இ இன்றைய மோதல்களில் மூன்று படையினர் மட்டும் கொல்லப்பட்டுஇ முப்பத்திரண்டு படையினர் காயமடைந்திருப்பதாகஇ வழமை போன்று பொய்யுரைத்து வருகின்றது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.