-
Tell a friend
-
Topics
-
0
ஏராளன் · தொடங்கப்பட்டது
-
Posts
-
By goshan_che · Posted
இரவல் தந்தவன் கேட்கின்றான், அதை இல்லை என்றால் அவன் விடுவானா🤣. -
By ஏராளன் · பதியப்பட்டது
05 MAY, 2024 | 05:27 AM (நெவில் அன்தனி) லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள லங்கா புட்போல் கப் (இலங்கை கால்பந்தாட்ட கிண்ணம்) நொக் அவுட் போட்டி மூலம் தேசிய மற்றும் முன்னாள் தேசிய வீரர்களின் கால்பந்தாட்ட ஆற்றல்களை இலங்கையில் சுமார் இரண்டரை வருடங்களின் பின்னர் உள்ளூர் கால்பந்தாட்டப் போட்டியில் காணக்கிடைத்தது. லங்கா ஸ்போர்ட்ஸ் குறூப்பின் ஸதாபகரும் எக்ஸ்போ லங்கா நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளருமான சய்வ் யூசுப்பின் தனி முயற்சியாலும் சொந்த அனுசரணையாலும் இலங்கையில் உள்ளூர் கால்பந்தாட்டம் மீண்டும் மலர்ந்துள்ளதை இங்கு சுட்டிக்காட்டவேண்டும். எட்டு அணிகள் பங்குபற்றும் இந்த நொக் அவுட் கால்பந்தாட்டத்தின் முதல் இரண்டு கால் இறுதிப் போட்டிகளில் களுத்தற, நிகம்போ அணிகளை வீழ்த்திய ஜெவ்னா, கண்டி அணிகள் முதலாவது அரை இறுதியில் மோதவுள்ளன. சிட்டி புட்போல் திடலில் சனிக்கிழமை (05) நடைபெற்ற முதலாவது கால் இறுதிப் போட்டியில் களுத்தற எவ்.சி. அணியிடம் பலத்த சவாலை எதிர்கொண்ட ஜெவ்னா எவ்.சி. அணி கடைசிக் கட்டத்தில் அன்தனி டிலக்சன் போட்ட கோலின் உதவியுடன் 3 - 2 என்ற கோல்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று அரை இறுதியில் விளையாட தகுதிபெற்றது. போட்டியின் 11ஆவது நிமிடத்தில் மொஹமத் ஹஸ்மீர் அலாதியான கோல் ஒன்றைப் போட்டு களுத்தற எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். சற்று நேரத்திற்குப் பின்னர் களுத்தற வீரர் மோஹமத் ரஹுமான் கோல் போட எடுத்த முயற்சி வீண்போனது. இடைவேளை நெருங்கிக் கொண்டிருந்தபோது ஹஸ்மீரின் மற்றொரு முயற்சி கைகூடாமல் போனதுடன் அடுத்த நிமிடமே மறுபுறத்தில் அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி. சார்பாக கோல் நிலையை சமப்படுத்தினார். இடைவேளை முடிந்த பின்னர் போட்டியின் 68ஆவது நிமிடத்தில் முன்னாள் தேசிய வீரர் செபமாலைநாயகம் ஞானரூபன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யை முன்னிலையில் இட்டார். போட்டியின் 68ஆவது நிமிடத்தில் ஜெவ்னா எவ்.சி. கோல்காப்பாளரின் கவனக்குறைவைப் பயன்படுத்தி மொஹமத் அஸ்மீர் கோல் நிலையை 2 - 2 என களுத்தற சார்பாக சமப்படுத்தினார். எவ்வாறாயினும் முழு நேரத்திற்கு ஒரு நிமிடம் இருந்தபோது அன்தனி டிலக்சன் கோல் போட்டு ஜெவ்னா எவ்.சி.யின் வெற்றியை உறுதிசெய்தார். வெற்றிபெற்ற ஜெவ்னா எவ்.சி. அணியில் செபமாலைநாயகம் ஜூட் சுபன் (தலைவர்), அவரது மூத்த சகோதரர் செபமாலைநாயகம் ஞானரூபன், அன்தனி ஜெரின்சன், அன்தனி டிலக்சன், தர்மகுலநாதன் கஜகோபன், தியாகமூர்த்தி ஆர்த்திகன், பரமேஸ்வரன் பகலவன், விக்ணேஸ்வரராஜா கஜநாதன், நேசராசா அன்தனி ரமேஷ், சிவநேசன் மதிவதனன், ஜெயராசா தில்லைக்காந்தன், செலஸ்டீன் சிந்துஜன், அமலேஸ்வரன் அருள் ஜோசப், விஜயகுமார் விக்னேஷ், செபமாலைராசா ஜெயராஜ், வின்சன் கீதன் ஆகியோர் இடம்பெற்றனர். பயிற்றுநர்: ரட்னம் ஜஸ்மின். கண்டி எவ்.சி. கோல் மழை பொழிந்து நிகம்போ எவ்.சி.யை வீழ்த்தியது கிட்டத்தட்ட தேசிய அணியாகக் காட்சி கொடுத்த கண்டி எவ்.சி. இரண்டாவது கால் இறுதிப் போட்டியில் கோல் மழை பொழிந்து 9 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் நிகம்போ எவ்.சி.யை துவம்சம் செய்தது. அசிக்கூர் ரஹ்மானை தலைவராகக் கொண்ட கண்டி எவ்.சி. அணியில் மூவரைத் தவிர மற்றைய அனைவரும் தேசிய வீரர்களாவர். கண்டி எவ்.சி. அணியின் பலத்திற்கு ஈடுகொடுப்பதில் நிகம்போ எவ்.சி. சிரமத்தை எதிர்கொண்டது. போதாக்குறைக்கு 32ஆவது நிமிடத்திலிருந்து நிகம்போ எவ்.சி. 10 வீரர்களுடன் விளையாட நிர்ப்பந்திக்கப்பட்டது, இப் போட்டியில் ஆதிக்கம் செலுத்திய கண்டி எவ்.சி. போட்டியின் 5ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் ஜிமோ போட்ட கோல் மூலம் முன்னிலை அடைந்தது. போட்டியின் 32ஆவது நிமிடத்தில் 2ஆவது மஞ்சள் அட்டைக்கு இலக்கான என்.ஜே. பெர்னாண்டோ சிவப்பு அட்டையுடன் களம் விட்டகன்றார். அவர் ஒரு பெனல்டியை வழங்கிவிட்டே வேளியேறினார். அந்தப் பெனல்டியை மொஹமத் ஆக்கிப் பைஸர் கோல் ஆக்கினார். இடைவேளையின்போது கண்டி எவ்.சி. 2 - 0 என முன்னிலை வகித்தது. இடைவேளைக்குப் பின்னர் சீரான இடைவெளியில் கண்டி எவ்.சி. கோல்களைப் போட்ட வண்ணம் இருந்தது. மொஹமத் பஸால் (52 நி.), ஷெனால் சந்தேஷ் (59 நி.), ஆக்கிப் பைஸர் (64 நி.), இப்ராஹிம் ஜிமோ (81 நி.), அசிக்கூர் ரஹுமான் (82 நி., 90+6 நி.), மொஹமத் ரினாஸ் (90 நி.) ஆகியோர் கோல் மழை பொழிந்தனர். https://www.virakesari.lk/article/182705 -
வீட்டு பணிப்பெண் பாலியல் வன்கொடுமை - தேவகவுடாவின் மகன் ரேவண்ணா எம்எல்ஏ கைது: கர்நாடக அரசியலில் பரபரப்பு 05 MAY, 2024 | 10:42 AM பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மகனும் மஜத எம்எல்ஏவுமான ரேவண்ணா மீது அவரது வீட்டு பணிப்பெண் அளித்த பாலியல் வன்கொடுமை வழக்கில், அவர் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கில் தலைமறைவாக உள்ள அவரது மகனும் ஹாசன் தொகுதி எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணாவை போலீஸார் தேடி வருகின்றனர். முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்த மகனும் மஜதவின் மூத்த தலைவருமான ரேவண்ணா (66) கர்நாடக மாநிலம், ஹொலேநர்சிப்புரா தொகுதியின் எம்எல்ஏவாக உள்ளார். அவரது மகனும் ஹாசன் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா (33) அதே தொகுதியில் பாஜக கூட்டணியின் சார்பில் மீண்டும் களமிறங்கியுள்ளார். கடந்த மாதம் 26-ம் தேதி அங்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்நிலையில், பிரஜ்வல், பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் ஆபாச வீடியோக்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. இதைத்தொடர்ந்து 48 வயதான வீட்டு பணிப்பெண், மஜத முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 3 பெண்கள் தங்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக அளித்த புகாரின்பேரில் பிரஜ்வல் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவரது தந்தை ரேவண்ணா மீதும், வீட்டு பணிப்பெண் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்ததால் அவர் மீதும் 4 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே புகார் அளித்த பெண்ணை கடத்தியதாக ரேவண்ணா மீதும் அவரது உதவியாளர் சதீஷ் பாவண்ணா மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கை பி.கே.சிங் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். முதல்கட்டமாக பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருந்த 2,976 ஆபாச வீடியோக்களை போலீஸார் கைப்பற்றியுள்ளனர். அதில் இடம்பெற்று உள்ள பெண்களை அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் ஜெர்மனிக்கு தப்பியோடியுள்ள பிரஜ்வல் ரேவண்ணாவை பிடிக்கும் முயற்சியில் சிறப்பு போலீஸார் இறங்கியுள்ளனர். அவருக்கு 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் விடப்பட்டு தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளனர். மேலும் அவரது தூதரக பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத் துறைக்கு கடிதம் எழுதியுள்ளனர். இந்நிலையில் பிரஜ்வல் மற்றும் ரேவண்ணாவை சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு 2-வது நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் இருவரும் விசாரணைக்கு ஆஜராகவில்லை. நேரில் ஆஜராக 7 நாட்கள் கால அவகாசம் அளிக்குமாறு தங்களது வழக்கறிஞர் மூலம் சிறப்பு புலனாய்வு குழுவினருக்கு அவர்கள் தகவல் தெரிவித்தனர். https://www.virakesari.lk/article/182717
-
இஸ்ரேலினால் கைதுசெய்யப்பட்ட காசா மருத்துவர் சிறையில் மரணம் Published By: RAJEEBAN 04 MAY, 2024 | 11:44 AM இஸ்ரேலினால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் மருத்துவர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கடந்த நான்கு மாதங்களாக இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டிருந்த காசாவின் அல்ஸிபா மருத்துவமனையின் எலும்பியல் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் உயிரிழந்துள்ளார் என பாலஸ்தீன சிறைக்கைதிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதேவேளை தேசிய பாதுகாப்பு காரணங்களிற்காக ஒவெர் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் அவர் மருத்துவர் அட்னன் அல்பேர்ஸ் என இஸ்ரேலிய சிறைச்சாலை சேவை உறுதி செய்துள்ளது. உயிரிழப்பிற்கான காரணங்களை வெளியிடாத இஸ்ரேல் விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய படையினர் பல தடவைகள் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட அல்சிபா மருத்துவமனையில் உயிரிழந்த மருத்துவர் பணியாற்றிவந்தார். காசாவின் வடபகுதியில் உள்ள அல்அவாட மருத்துவமனையில் தற்காலிகமாக பணியாற்றிக்கொண்டிருந்தவேளை இஸ்ரேலிய படையினர் அவரை கைதுசெய்தனர். இந்த மரணச்செய்தி மனித ஆன்மாவினால் தாங்க முடியாதது என அல்சிபா மருத்துவமனையின் இயக்குநர் வைத்தியர் மர்வன் அபு சாடா தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/182649
-
-
Our picks
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
கடவுள் இருக்கிறாரா.............?
வானவில் posted a topic in மெய்யெனப் படுவது,
களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்-
- 46 replies
Picked By
மோகன், -
-
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
narathar posted a topic in பேசாப் பொருள்,
சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?
பேராசிரியர் சோ. சந்திரசேகரன்
இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
-
- 5 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts