Jump to content

நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள்


Recommended Posts

நடுகல் கூறும் தமிழரின் வாழ்வு நெறிகள்

 

295379_480519558642326_362855295_n-1.jpg

 

 

பண்டைய தமிழரின் வாழ்வியல் பதிவுகளை உலகுக்கு வெளிக்காட்டும் சான்றுகளுள் நடுகற்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. போரில் இறந்த வீரனுக்கு மட்டுமல்லாது, தன் வீட்டில் வளர்க்கும் செல்ல பிராணிக்கும் கூட நடுகற்கள் நடப்பட்ட செய்தி வியப்பை தருகின்றது. தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் நடுகற்கள் ஆங்காங்கே இருப்பது கண்டறிப்பட்டு விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

 

நடுகல் வரலாறு:

 

பண்டைய தமிழ் இலக்கியங்களில் பல இடங்களில் நடுகல் பற்றிய செய்திகள் விரவிக் கிடப்பதை காண முடிகின்றது.

திருக்குறளில்,

 

“என்னை முன் நில்லன்மின் தெவ்வீர் பலரென்னை
முன்னின்று கல்நின் றவர்”

 

என போரில் இறந்த பகைவர் கல்லாகி நின்றதாக குறிப்பிடப்படுகின்றது.

 

சேரமான் பெருமாள் நாயனார்,

 

பட்டோர் பெயரும் ஆற்றலும் எழுதி
நட்ட கல்லும் - என்று குறிப்பிடுகின்றார்.

 

அகநானூற்றில்,

 

நாணுடை மறவர் பெயரும் பீடும் எழுதி
அதர் தோறும் பீலி சூட்டிய பிறங்கு நிலை நடுகல்

என்றும்,

 

தொல்காப்பியத்தில் உருவம் மற்றும் எழுத்துக்கள் பற்றி குறிப்பிடவில்லை. நடுகல் குறித்தும் நடுகல் எடுப்பதற்கான ஆறு நிலைகள் பற்றியும் குறிப்பிடப்படுகின்றது.

காட்சி, கால் கோல், நீர்ப்படை நடுதல், பெரும்படை, வாழ்த்தல் எனப்படுகின்றது.

குறிப்பிட்ட இனத்தார் என்றில்லாமல் பல்வேறு சாதியினருக்கும் நடுகற்கள் எடுக்கப்பட்டன. அவ்வாறே பல்வேறு சாதிமக்களும் தற்போதும் நடுகற்களை வழிபட்டு வருகின்றனர். இன்றைக்கு கிராமங்களில் வேடியப்பன், மொசவேடியப்பன், நெண்டி வேடியப்பன், கிருஷ்ணாரப்பன், சாணாரப்பன், கருப்புராயன் என்ற பெயர்களில் நடுகற்களை மக்கள் வழிபட்டு வருகின்றனர். அய்யனார், மதுரைவீரன், சங்கிலிக் கருப்பன், பாவாடைராயன் போன்ற சிறு தெய்வங்களும் நடுகல் வழிபாட்டுடன் தொடர்புடையவை ஆகும்.

 

பெண்களுக்கு நடுகல்:

 

ஆண்களுக்கு மட்டும் என்றில்லாமல் கன்னிகா பரமேஸ்வரி, இரேணுகா தேவி, வஞ்சியம்மன் போன்றோர் பதிவிரதைகளாக இருந்து நடுகல் ஆகியுள்ளனர்.

 

தலைப்பலி:

 

தெருப்போரில் பங்கு கொண்ட வீரர்கள் நடுகல் ஆனது போலவே, துர்க்கையம்மன் முன்பு தலையை தானே பலிதந்த வீரர்களும் நடுகற்களாக, நவ கண்ட சிற்பங்களாக ஆயினர்.

நடுகற்கள் ஏற்படுத்த முதன்மையான காரணம் வீரன் சொர்க்கம் செல்வான் என்ற நம்பிக்கையின் பேரிலும் ஏற்படுத்தப்பட்டது. போரில் மாண்ட வீரர்களை, தேவகன்னியர் விண்ணுலகுக்கு அழைத்துச் செல்வது போன்ற சிற்பங்கள் நடுகல்லில் இருப்பதைக் காண முடிகின்றது.

 

நடுகல் பற்றிய தெளிவான செய்திகள் சங்க இலக்கியங்களில் விரவிக் காணப்படுகின்றன. பல்வேறு புலவர் பெருமக்கள் நடுகற்கள் குறித்து பல்வேறு செய்திகளை தந்துள்ளனர். தமிழகத்தில் கண்டறிப்பட்டுள்ள நடுகற்கள் பல்வற்றிலும் வட்டெழுத்துகள் காணப்படுகின்றன. கி.பி. ஆறாம் நூற்றாண்டுக்குப் பின்னரே வட்டெழுத்து முழுமையான வரி வடிவத்தையும் பெற்றதால் 6ம் நூற்றாண்டுக்குப் பின்னர் நடுகற்கள் அதிக அளவில் நடப்பட்டிருக்கலாம்.

 

அகம், புறம், மலைபடுகடாம், பட்டினப்பாலை ஆகிய நூல்களில் காணப்படும் குறிப்பு கி.மு.4-5ஆம் நூற்றாண்டிகுரிய பொருங்கற்படைச் சின்னங்கள் மெல்ல மெல்ல தன் நிலையில் இருந்து மாறி வீரக்கற்களாக (நடுகல்) உருமாரின என்பதை மிகச் சிறப்பாக எடுத்து இயம்புகின்றது. இதன் மூலம் சங்க இலக்கியம் பல நூற்றாண்டு கால தமிழரின் வாழ்வியல் நிலையை பதிவு செய்கின்றது.

 

பெரும்பாலான நடுகற்கள் தொருப்பூசலில் (ஆநிறை கவர்தல்) உயிர்விட்ட வீரர்களுக்கு எடுக்கப்பட்டிருக்கின்றன என்பதை பார்க்கும் போது பண்டைய தமிழ்மக்கள் வாழ்க்கை கால்நடை வளர்ப்பு அதன் மூலம் கிடைக்கும் வருமானம் குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்யப் பயன்பட்டிருப்பதை நோக்க வேண்டியுள்ளது.

 

சதிக்கல்:

 

தெருப்போரில் இறந்துபட்ட வீரனின் மனைவியும், கணவன் இறந்தபின் செய்ய வேண்டிய கடமைகளை செய்து விட்டு தானும் உயிர்விட்டு நடுக்கல்லாய் மாறியதும், கணவன் உயிர்விட்ட உடனே தானும் தீ பாய்ந்து உயிர் விட்டதும் இவர்களுக்கு உறவினர்கள் நடுகல் எடுத்து வணங்கியது பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகின்றது. இவை சதிக்கல் என்றும் வழங்கப்படுகின்றது.

 

கால்நடைகளை கவரவும், தன் நாட்டு எல்லையை விரிவுபடுத்தவும், பெண்ணின் மானத்தைக் காக்கவும், விலங்குகளிடமிருந்து ஊர்மக்களை காக்கவும், தம் அரசன் போரில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவும், தன் கணவனுடன் உயிர் விட்ட மகளிரை போற்றும் வகையில் நடுகற்கள் அமைக்கப்பட்டன. 

 

போரில் இறந்தவருக்கு நினைவு கற்கள் எடுக்காவிட்டால். தன் வாரிசுகளுக்கு துன்பம் நேரிடும் என பயந்தனர். எனவே, நீர்நிலைகள், மரத்தடி, இறந்த இடத்தில் நினைவுக்கல் எழுப்பினர். தற்போதும் ஒரு சிலர் எழுப்புகின்றனர்.

 

மனிதர்களுக்கு மட்டுமில்லாது விலங்குகளுக்கும் நடுகல் எடுக்கப்பட்டுள்ளது. தன்னுடன் இறந்த அல்லது தன் உயிரைக் காக்க இறந்த குதிரை, நாய், யானை, கோழி போன்ற விலங்குகளுக்கு நடுகல் பல இடங்களில் எழுப்பட்டுள்ளதை நன்றி உணர்வின் அடையாளமாக எடுத்துக் கொள்ளலாம். பழனி பெரிய நாயகி அம்மன் கோவில் வெளிப்பிரகாரத்தில் குதிரைக்காக எடுக்கப்பட்ட நடுகல் இவ்வாசிரியரால் கண்டறிப்பட்டுள்ளது.

 

இறந்தவர்களுக்கு தெய்வீக சக்தி இருப்பதாக மக்கள் நம்பினர். அதற்கேற்ப சடங்குகள் செய்யவும் வழிபடவும் முற்பட்டனர். உலகெங்கும் இப்பழக்கம் உருவாயிற்று. இறந்தவன் ஆன்மா நடுக்கல்லில் வருவதாக நம்பிக்கை ஏற்பட்டது. தொடக்க காலத்தில் நடுகற்களில் எழுத்தோ, உருவமோ இல்லை. தொல்காப்பியர் எழுத்துக்களைப் பற்றி குறிப்பிடவில்லை. நடுகல்லை வழிபட்டால் மழை வரும் என்ற நம்பிக்கை தமிழக மக்களிடையே நீண்டகாலமாக இருப்பதை புறம் 263 பாடலில்,

 

“தொழுது போகவே கொடுங்கானம் மழை பெய்தலான் குளிரும் என்பான் வண்டு மேம்படுதலாகிய காரியம் கூறினான்,

 

என கூறப்படுகின்றது. இன்றும் பல ஊர்களில் மழைக்காக வேண்டி நடுக்கற்களுக்கு விழா எடுப்பதை பார்க்கமுடிகின்றது.

 

வீரர்களுடைய நடுகற்கள் வழிபாடு பிற்காலத்தில் பள்ளிப்படைக் கோயில்கள் தோன்ற காரணமாயிற்று.

 

நடுக்கல் மூலம் தமிழ் மக்களின் வாழ்வியல் பதிவுகளாக சங்ககாலம் முதல் தற்காலம் வரை கீழ்க்கண்ட செய்திகள் பதிவு செய்யப்படுகின்றது.

 

1. அரசர்களுக்காகவும், நாட்டுக்காகவும் உயிர்விடுதல்.

2. சிற்றரசர்கள் பற்றிய செய்தி

3. சமூக நிலை (சதி, உடன் கட்டை, களப்பலி)

4. மொழி வளர்ச்சி (வட்டெழுத்து மாற்றம்) (வட்டார வழக்கு சொற்கள்)

5. ஓயாத பூசல்கள்

6. கால்நடைகளே பண்டைய மக்களின் செல்வம்

7. காடுகளை அழித்து நாடு செய்தல் (காட்டு விலங்குகளுடன் போரிடும் நடுகல்)

8. நன்றி மறவாமை (நாய், கோழி, குதிரை போன்றவற்றிற்கு நடுகல் அமைத்து வழிபாடு)

9. பண்டைய தமிழ்மக்களின் இரும்பின் பயன்(ஆயுதங்கள் உடைய நடுகற்கள்)

10.நம்பிக்கைகள் (படையல் வைத்து வழிபாடு)

 

மேற்கோள் நூல்கள்:

 

1) புறநானூறு
2) அகநானூறு
3) தொல்லியல் முனைவர். க.ராஜன்
4) இந்தியத் தொல்லியல் வரலாறு - அண்ணாமலைப்பல்கலைக்கழகம்
5) திருக்குறள்
6) தினத்தந்தி நாளிதழ்

 

- ஆ.நந்திவர்மன், தொல்லியல் ஆய்வாளர் மற்றும் தமிழாசிரியர், அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, பழனி.

 

 

http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=22546:iico-ueuo-facaeicy-aiut-bieccu&catid=25:tamilnadu&Itemid=137

Link to comment
Share on other sites

அண்ணை நல்ல விடயம் 

 

உங்களைக் கருத்துக்களத்தில் வரவேற்றுக்கொண்டு , உங்கள் வரவுக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி கே கரன் .

 

Link to comment
Share on other sites

குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள் முனைவர் சி.சேதுராமன்
 

இணைப்பேராசிரியர், தமிழ்த்துறை, மா.மன்னர் கல்லூரி, புதுக்கோட்டை.

E. Mail: Malar.sethu@gmail.com

பண்டையத் தமிழரின் வாழ்வியலைப் படம் பிடித்துக் காட்டும் காலக் கண்ணாடியாக சங்க இலக்கியங்கள் திகழ்கின்றன. அவற்றுள் சிறப்பு வாய்ந்த நூலாக விளங்குவது குறுந்தொகை ஆகும். இஃது எட்டுத் தொகையில் இடம் பெறும் அகநூல்களுள் ஒன்றாகும். இதில் கடவுளரைப் பற்றியும், கடவுள் வழிபாடு குறித்தும் பல்வேறு தொன்மக்கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன. இவை பழந்தமிழரின் சமய நம்பிக்கைகளை எடுத்துரைப்பனவாக உள்ளன.

தொன்மம் – விளக்கம்

தொன்மம் (Myth) என்பது பழமை எனப் பொருள்படும். அகராதிகள் தொன்மம் என்பதற்கு பழமை, செய்யுளில் இடம் பெறும் எண்வகை வனப்புகளில் ஒன்று எனப் பொருள் தருகின்றன.

பொதுவாக தொன்மம் எனப்படுவது பண்டைய மக்களின் சமயம், பழக்கவழக்கங்கள், வரலாற்றுக் குறிப்புகள், கலைகள் போன்ற வாழ்க்கையைச் சார்ந்த நம்பிக்கைகள் மற்றும் சடங்கு முறைகளைக் குறிக்கும்.

‘‘தமிழில் வீரம் என்பதற்கு நிகரான சொல்லாக ‘பெருமிதம்’ என்பதனை பழந்தமிழர்கள் பயன்படுத்தினர். அதுபோலவே புராணம் என்பதற்கு இணையான தமிழ்ச்சொல்லாக ‘தொன்மை’ என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப் பட்டுள்ளது’’ (யாழ். சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப., 8)

தொன்மம் என்பது நமக்குள் புதிதாக உருவாவதன்று அது நம் பிறப்பிலிருந்தே உண்டு என்பதை, ‘‘தொன்மமானது மனத்தின் விழிப்புநிலையில் ஆழ்மனத்தில் கருப்பெறுகின்றது. நம்மைக் கேட்காமலேயே உடல் வளர்வதைப் போலவே இயற்கையாகவே தொன்மங்கள் உரம் பெறுகின்றன’’ ( கதிர்.மகாதேவன், தொன்மம், ப. 19) என்கிறார் கதிர் மகாதேவன்.

‘‘தொன்மம் என்பது புனிதமான உண்மை (Sacred Trued) என்கிறது அமெரிக்கானா கலைக்களஞ்சியம்.  மேலும், தொன்மம் செயல்பாட்டின் அடிப்படையில் சடங்குகளுடனும் சமயங்களுடனும் தொடர்புடைய சமுதாயம் சார்ந்த கதை’’ (யாழ்.சு. சந்திரா, தொன்மவியல் கட்டுரைகள், ப. 49) எனலாம்.

Myth (மித்) என்ற ஆங்கிலச் சொல் Myth என்ற கிரேக்கச் சொல்லின் வேர்ச் சொல்லாகும். இதற்கு நிகரான தமிழ்ச் சொல்லாக ‘தொன்மம்’ கையாளப்பட்டு வருகிறது. கடவுள் பற்றியும் உயர்மனிதர்கள் பற்றியும் அமைந்த செய்திகள் தொன்மத்தில் அடங்கும்.

தொன்மம், பழமரபுக் கதைகள் இரண்டும் ஒன்றுமையுடையதாக இருப்பினும் இரண்டிற்கும் வேறுபாடு உண்டு தொன்மம் கடவுளர் செயல்களை விரித்துரைப்பது; பழமரபுக் கதைகள் மனிதர்களை முதன்மைப்படுத்துவது; சமயம் சார்ந்தும் சடங்குகளைப் பற்றி விளக்குவதும் தொன்மத்தில் அடங்கும்.

தொல்காப்பியம் தரும் விளக்கம்

தமிழின் இலக்கண நூலான தொல்காப்பியம் தொன்மம் என்பதற்கு,

‘‘தொன்மை தானே சொல்லுங் காலை

உரையொடு புணர;ந்த பழமை மேற்றே’’

என்கிறது தொன்மை எனப்படுவது, உரையோடு கூடிய பழமையாகிய கதைப் பொருளில் வருவது’’ (தொல் – செய். இளம்பூரணர் உரை, நூ.எ., 538)என்று இளம்பூரணர் உரை விளக்கமளிக்கிறது.

மேலும், முதல் பொருளுள் நிலம் பற்றிக் கூற விளைந்த தொல்காப்பியர்,

‘‘மாயோன் மேய காடுறை உலகமும்

சேயோன் மேய மைவரை உலகமும்

வேந்தன் மேய தீம்புனல் உலகமும்

வருணன் மேய பெருமணல் உலகமும்

முல்லை குறிஞ்சி மருதம் நெய்தலெனச்

சொல்லிய முறையாற் சொல்லவும் படுமே’’

(தொல்., அகத்திணை., நூற்பா, 5)

என்ற இந்நூற்பாவின் மூலம் கடவுளர் பற்றிய தொன்மங்களைப் பதிவு செய்கிறார்.

குறுந்தொகையில் வழிபாட்டுத் தொன்மங்கள்

குறுந்தொகையில் இடம் பெறும் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை,

1.முருகன் பற்றிய தொன்மம்

2.கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்

3.இயற்கை வழிபாடு

4.நடுகல் வழிபாடு

என நான்கு வகையாகப் பகுக்கலாம்.

முருகன் பற்றிய தொன்மம்

‘‘சேயோன் மேய மைவரை உலகம்’’ எனத் தொல்காப்பியம் செப்புவதிலிருந்து குறிஞ்சி நிலக் கடவுள் முருகன் என்பது புலனாகிறது.

குறுந்தொகையில் முருகன் பற்றிய செய்திகள் கிடைக்கின்றன.  முருகப் பெருமான் அசுரர;களை அழித்த புராணச் செய்தியை,

‘‘செங்களம் படக்கொன்று அவுணர் தேய்த்த

செங்கோ லம்பின் செங்கோட்டி யானை

கழல்தொடிச் சேஎய் குன்றம்’’ (குறுந்.,பா.உ.1)

என்ற வரிகள் விளக்கி நிற்கின்றன.  இதேபோல் முருகன் சூரபத்மனை வதம் செய்த நிகழ்வை,

‘‘அவுணர் நல்வலம் அடங்கக் கவிழ்இனர்

மாமுதல் தடிந்த மறுஇல் கொற்றத்து’’

(திருமுருகாற்றுப்படை, 59-60 வரிகள்)

எனத் திருமுருகாற்றுப்படையும்,

‘‘பாய்இரும் பனிக்கடல் பார்துகள் படப்புக்கு

சேய்உயர் பிணிமுகம் ஊர்ந்து, அமர்உழக்கி

தீஅழல் துவைப்ப திரிய விட்டெறிந்து

நோயுடை நுடங்கு சூர்மா முதல் தடிந்து

…………………

மாய அவுணர் மருங்குஅறத் தபுத்த வேல்’’

(பரிபாடல் செவ்வேள் 5 : 1-7 வரிகள்)

எனப் பரிபாடலும் எடுத்துரைக்கின்றன.  இச்செய்தியினைக் கந்தபுராணத்திலும் காணலாம்.

கொல்லிப்பாவை பற்றிய செய்திகள்

மலையின் ஒரு பகுதியில் இடம் பெற்ற அணங்கு போன்ற பெண் தெய்வம் அல்லது தெய்வத்தால் வரையப்பட்ட பாவை கொல்லிப்பாவையாகும்.

சேர மன்னனின் மலையின் மேற்குப் பகுதியில் வருத்தக் கூடிய கொல்லித் தெய்வம் இருந்ததனை,

‘‘பெரும்பூண் பொறையன் பேஎமுதிர் கொல்லிக்

கருங்கண் தெய்வம் குடவரை எழுதிய

நல்லியற் பாவை’’ (குறுந்தொகை, ப., 130)

என்ற பாட்டாலும்,

‘‘வல்வில் ஓரி கொல்லிக் குடவரை

பாவையின் …….. ……….. ……..’’

என்ற பாட்டாலும் அறிய முடிகிறது. மேலும்,

‘‘…………. ………… பயங்கெழு பலவின்

கொல்லிக் குடவரை பூதம் புணர்த்த

புதிதியல் பாவை’’                       (குறுந்தொகை, ப., 145)

என்ற பாடல் வாயிலாகவும், கொல்லிமலையின் மேற்குப் புறத்தில் தெய்வத்தால் வரையப்பட்ட பாவை உண்டென்பதை,

‘‘பொறையன் உரைசால் உயர்வரைக் கொல்லிக்

குடவயின் ……….. …………… ……………

நெடுவரைத் தெய்வம் எழுதிய

வினைமான் பாவை’’

(நற்றிணை, பா.எ., 192)

என்ற பாடலின் வாயிலாகவும் உணர முடிகிறது. இவை கொல்லித் தெய்வம் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்களை விளக்கும் வகையில் அமைந்துள்ளன.

இயற்கை வழிபாடு

பண்டையத் தமிழர்கள் இயற்கையைக் கண்டு அஞ்சி வாழ்ந்தனர்.  அதனால், அச்சத்தைப் போக்க எண்ணி இயற்கையோடு கூடியியைந்து வாழ்ந்தனர்.

சங்க கால மக்கள் பெண்கள் பிறையைத் தெய்வமாக தொழுது வணங்கினர் என்பதை,

‘‘செவ்வாய் வானத் தையெனத் தோன்றி

இன்னம் பிறந்தன்று பிறையே’’

(குறுந்தொகை, ப., 459)

என்ற குறுந்தொகைப் பாடல் விளக்குகிறது. இப்பாடலில் பிறையைப் பலசமயத்தோடும் தொழுதனர் என்ற செய்தி இடம் பெறுகிறது.  மேலும் கன்னிப் பெண்களும் பிறையை வணங்கினர். இச்செய்தியை,

‘‘ஒள்ளிழை மகளிர் உயர்பிறை தொழூஉம்

புல்லென் மாலை’’       (அகநானூறு, பா.எ., 239)

என்னும் அகநானூற்றுப் பாடல் வரிகளும்,

‘‘குடமுதல் தோன்றிய தொன்றுதொழு பிறையின்

வழிவழி சிறக்க நின்வலம்படு கொற்றம்’’

(மதுரைக் காஞ்சி, 193-194 வரிகள்)

எனும் மதுரைக் காஞ்சி வரிகளும் புலப்படுத்துகின்றன.

‘‘கன்னிப் பெண்கள் மட்டும் பிறையைத் தொழுவதற்கானக் காரணம் நல்ல கணவனைப் பெற்று இல்லறம் சிறக்கவும், கரு வயிற்றில் உருவாகவும், மழைவளம் சுரந்து வளம் பொழிய வேண்டும் என்பதற்காகவும் ஆகும்’’ (மேற்கோள் விளக்கம் – கோ.ப. சுதந்திரம், பொதுச்சடங்குகளில் இலக்கியம், ப., 62).

நடுகல் வழிபாடு

தம் நாட்டினைக் காக்கும் பொருட்டு, பகைவரோடு போரிட்டுப் பட்டு வீழ்ந்த வீரனுக்காக எடுக்கப்படுவது ‘நடுகல்’ எனப்படும்.

இந்நடுகல்லில் இறந்துபட்ட வீரனின் பெயரும் பீடும் எழுதி, தெய்வமாக வழிபட்டு வந்ததைத் தொல்காப்பியர; காலந்தொட்டு அறிய முடிகிறது.  இதனையே,

‘காட்சி கால்கோள் நீர்ப்படை நடுதல்

சீர்த்தகு மரபின் பெரும்படை வாழ்த்தலென்று

இருமூன்று மரபின் கல்லொடு புணர’’

(தொல், புறத்., இளமபூரணர் உரை, நூ.எ., 63)

எனத் தொல்காப்பியம் மொழிகிறது.

மறக்குடியில் பிறந்த அனைவரும் இந்த நடுகல் வழிபாட்டைத் தம் இனத்திற்குச் சிறந்ததெய்வ வழிபாடாகக் கொண்டு வாழ்ந்தனர். இச்செய்தியை,

‘‘ஒன்னாத் தெவ்வர் முன்னின்று விலங்கி

ஒளிறேந்து மருப்பிற் களிறெறிந்து வீழ்ந்தெனக்

கல்லே பரவினல்லது

நெல்லுகுத்துப் பரவும் கடவுளும் இலமே’’

(புறநானூறு, பா.எ., 335)

எனும் இப்புறநானூற்றுப் பாடலும் புலப்படுத்துகிறது.

இத்தகு புகழ்வாய்ந்த நடுகல்லில் வீரரது பெயரும் பீடும் பொறிக்கப்பட்டு இருப்பதற்கு,

‘‘நல்லமர்க் கடந்த நாணுடை மறவர்

பெயரும் பீடும் எழுதி அதர்தொறும்

பீலிசூட்டிய பிறங்குநிலை மறவர்’’ (பா.எ., 67)

என்ற அகநானூற்றுப் பாடலே சிறந்த சான்றாகும்.

இவ்வாறு எடுக்கப்பட்ட நடுகல்லிற்கு வீரர்கள் தங்களது கிடுகினையும், வேல்களையும் வரிசையாய் நிரல்களாக நட்டு அரண் செய்தனர். இந்தச் செய்தியை,

‘‘மாலைவேல் நட்டு வேலி யாகும்’’ (குறுந்தொகை, ப., 358)

எனும் குறுந்தொகைப் பாடல் வரியும்,

‘‘கிடுகுநிரைத் தெஃகூன்றி

நடுகல்லின் அரண் போல’’ (பட்டினப் பாலை, 78-79 வரிகள்)

என்ற பட்டினப் பாலை வரிகளும் தெளிவாக உணர்த்துகின்றன.    இங்ஙனம் பழந்தமிழ் செவ்வியல் இலக்கியமான குறுந்தொகையில் கடவுளர் பற்றிய வழிபாட்டுத் தொன்மங்கள் அமைந்து தமிழர் தம் பண்பாட்டினையும் சமயஞ்சார்ந்த நம்பிக்கையினையும் புலப்படுத்துகின்றன.

http://puthu.thinnai.com/?p=10847

 

Link to comment
Share on other sites

வருகைக்கும் இணைப்புக்கும் மிக்கநன்றி நுணா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
    • நிச்சயமாக  @goshan_cheக்கு புதிய சம்பவம் என்று அவருக்கு தெரிந்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால்.... அவர் @பெருமாள் யும், @பையன்26யும் கலாய்ப்பதற்காக அடி மட்டத்திற்கு இறங்கி... "தூர் வாரியிருக்கிறார்". 😂 நமக்கும் அவரை கலாய்ப்பதில் ஒரு அலாதி இன்பம். 🙂
    • நான் நினைக்கின்றேன் அவருக்கு தெரியும் இது புதிது என்று.  ஆனால் பையனின் கருத்தை மட்டும் வைத்து எப்படி சம்பவம் பழையதுதான் என்று அடிச்சு சத்தியம் பண்ணினாரோ தெரியவில்லை. ஓருவர் இங்கு எழுதுவதை மட்டும் வைத்து தனது நிலைப்பாட்டினை மாற்றும் ஆள் அல்ல அவர்.0
    • ஈரான் ஜனாதிபதியின் இலங்கை வருகை : கண்கானிப்பு நடவடிக்கையில் அமெரிக்க உளவுத்துறை. ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் இலங்கை வருகையை இஸ்ரேலின் மொசாட் புலனாய்வு சேவையும், அமெரிக்க எப்.பி.ஐ உளவுத்துறையும் கண்காணித்து வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன. உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தித் திட்டத்தின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொள்வதற்காக ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி எதிர்வரும் புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். இந்நிலையில், இலங்கையில் விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் நடைமுறையில் உள்ளதோடு, ஈரானிய சிரேஷ்ட பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் குழுவொன்று அண்மையில் இலங்கைக்கு வருகை தந்து விசாரணைகளை மேற்கொண்டிருந்தது. ஈரான் ஜனாதிபதியின் இலங்கை விஜயம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும், சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதேவேளை, கொழும்பிற்கு அழைத்து வரப்படும் ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் கலந்துரையாடலில் ஈடுபடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2024/1379001
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.