Jump to content

இனக்கொலைஞர்களை எரியூட்டிய கரும்புலிகள்!


Recommended Posts

bt-300x200.jpg

1987 ஜூன் மாதம் -

 

முகாம்களுக்குள் விடுதலைப்புலிகளால் முடக்கப்பட்டு மூச்சுத்திணறிய சிங்கள இராணுவம் வடமராட்சியைக் கைப்பற்றும் நோக்கில் மூர்க்க வெறியுடன் புறப்படுகிறது.தங்களை துட்டகைமுனுக்களாக கற்பனை பண்ணிக் கொண்டிருந்த விமல் விஜயவர்த்தினா, டென்சில் கொப்பேக்கடுவ ஆகியோர் தலைமை தாங்க பலாலி படைத்தளத்திலிருந்து தொண்டமனாறு வழியாக ஒரு அணியும் அச்சுவேலி வல்லை ஊடாக இன்னொரு அணியும் நகர்கின்றன.

தொண்டமானாற்றில் விடுதலைப்புலிகள், பெரும் எடுப்பில் விமானக் குண்டுவீச்சுக்கள், கவசவாகனங்களின் துணையுடன் முன்னேறிய இராணுவ அணியைத் தடுத்து சமராடுகின்றனர். கிடுகு வேலிகளும் பனை வடலிகளும் தெருவோர மரங்களும் கக்கிய நீர்ப் பிழம்பில் படையினர் சுருண்டு விழுகின்றனர். வல்வெட்டித்துறை நோக்கி ஒரு அடி கூட முன்னேற முடியாத நிலையில் ஒரு அணி உடுப்பிட்டியை நோக்கி ஊடறுக்கிறது.

வல்லை வழியாக வந்த இராணுவம் மண்டான் சந்திக்கு அப்பால் அசைய முடியவில்லை. அந்த அணி திசை திரும்பி துவாளி வயல்வெளி ஊடாக புறாப்பொறுக்கியின் உட் பகுதிக்குள் இறங்குகிறது.
கண்டவர்களையெல்லாம் சுடுதல், காண்பவற்றையெல்லாம் அழித்தல் என்ற வெறியுடன் நகர்ந்த இராணுவம் பெண்கள், குழந்தைகள், முதியோர் என்ற பாகுபாடின்றி எதிர்ப்பட்டவர்களையெல்லாம் கொன்று தள்ளுகின்றனர்.

ஆயிரக்கணக்கான மக்கள் ஆலயங்களில் தஞ்சமடைகின்றனர். புலிகள், படையினர் ஆலயங்களை நெருங்கவிடாமல் தடுத்துச் சமராடுகின்றனர்.

ஆயிரக்கணக்கான படையினர் முன் சில நூறு புலிகளே களமாடிய போதும் படையினரை மோதி நெல்லியடி மத்திய கல்லூரிக்குள் ஒதுக்குகின்றனர்.

எனினும் அடுத்த நாள் படையினர் ஏதோ ஒரு பக்கத்தால் விமானக் குண்டு வீச்சுக்களினதும் உலங்குவானூர்திகளினதும் துணையுடன் உடைக்க முயல்வார்கள் என்பதை விடுதலைப் புலிகள் நன்கே புரிந்து வைத்திருந்தனர்.

எனவே -

கிளைகளை வெட்டுவதை விட மூல வேரையே தறித்துவிட விடுதலைப்புலிகள் முடிவெடுக்கின்றனர்.

கொல்லப்பட்ட மக்களின் குருதி வெள்ளம் ஏற்படுத்திய கொதிப்பு மில்லரின் நெஞ்சுக்குள் பெரும் தீயை மூட்டுகிறது. வெடி மருந்து வண்டியுடன் உயிராயுதமாக இராணுவ முகாமுக்குள் புகுந்து வெடிக்க முடிவெடுக்கிறான்.

1987 ஜூன் 5

மில்லர் செலுத்திய வெடிமருந்து வண்டி வேகமாக வெளிவாசல் தடையைத் தகர்த்துக் கொண்டு முகாமுக்குள் பாய்கிறது.

அருகிலுள்ள ஊர்களையே அதிரவைக்கும் ஓசையுடன் பெரு நெருப்பு எழுகிறது. கட்டிடங்கள் வெடித்துச் சிதறுகின்றன.

பல நூறு படையினர் செத்து விழுகின்றனர். உயிர்தப்பியவர்கள் வேலி பாய்ந்து தோட்ட வெளிகளால் ஓட சுற்றி நின்ற போராளிகள் சுட்டுத்தள்ளுகின்றனர்.

வெற்றிக் கனவுடன் திமிர் கொண்டு நின்ற ஒரு படை முகாம் சரிந்து விழுகின்றது.

இம் மாபெரும் சாதனையின் நாயகன் கப்டன் மில்லர் தனது உயிரையே ஆயுதமாக்கி விடுதலைப் போருக்குப் பெரும் உரமூட்டிய முதற் கரும்புலி அவன். தான் தாயக விடுதலைக்கு அர்ப்பணமாகும் நாளை நேரத்தைத் தெரிந்து கொண்டே மாபெரும் தியாக வரலாற்றை இம் மண்ணுக்கு விட்டுச் சென்ற ஒப்பற்ற விடுதலை வீரன் மில்லர்.

அந்த முதல் வித்து தன்னை விடுதலை வேள்விக்கு ஆகுதியாக்கிய அந்த வரலாற்றுப் பெருமை மிக்க நாளையே நாம் கரும்புலி நாளாக நெஞ்சிருத்தி நினைவு கூருகிறோம்.

மில்லர் வழியில் மாங்குளத்தில் லெப்.கேணல் போர்க், சிலாவத்துறையில் மேஜர் டாம்போ, கடற்கரும்புலி கப்டன் அங்கயற்கண்ணி என உலகப் போர் வரலாற்றுக்கு ஒரு புதிய அத்தியாயம் உருவாக்கப்படுகிறது.

இந்த முதல் வித்துக்கள் செத்துப் போய்விடவில்லை.

கரும்புலி அணி என ஒரு பெரு விருட்சமாக மேலெழுந்தது. அதன் ஒவ்வொரு விழுதும் ஒவ்வொரு இலையும் ஒவ்வொரு பழமும் எதிரியின் முள்ளந்தண்டெலும்பை முறிக்கும் வலிமை மிகு ஆயுதங்களாகின.

மில்லரின் முதல் கரும்புலித் தாக்குதல் ஒரு பெரும் வரலாற்றுத் திருப்புமுனையை உருவாக்கியது.

அத் தாக்குதல் சிங்களப் படையினரின் மனோ வலிமையை உடைத்தது. அதன் போரிடும் ஆற்றலைக் கேள்விக்குள்ளாக்கியது. அன்றைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா இந்திய உதவிக்கு ஓட வேண்டி வந்தது.

விடுதலைப் புலிகளுக்கு எதிராக இந்திய அமைதிப்படையை இறக்கவேண்டியளவுக்கு ஜே.ஆர்.பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்டார்.

மத்திய வங்கி மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இலங்கையின் பொருளாதாரமே நிலைகுலைந்தது.

கட்டுநாயக்கா விமான நிலையம் மீது மேற்கொள்ளப்பட்ட கரும்புலித் தாக்குதல் வெற்றி காரணமாக இலங்கை அரசு விடுதலைப்புலிகளுடன் சமாதானப் பேச்சுக்களை தொடங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

அனுராதபுரம் எல்லாளன் நடவடிக்கையில் இலங்கை விமானப் படையின் ஒரு பகுதி அழிந்து போனது.

எத்தனையோ போர்க்கப்பல்கள், டோறா பீரங்கிப் படகுகள் மூழ்கடிக்கப்பட்டன; இன்னும் பல பாவனைக்கு உதவாமற் போயின.

இனக் கொலை வெறியாட்டம் போட்ட எத்தனையோ படைத் தளபதிகள்; பாதுகாப்புச் செயலர்கள் கரும்புலிகள் வெடிப்புக்களில் சிதறிப் போனார்கள்.

முன்னாள் இராணுவத் தளபதியும் வட பகுதியின் கட்டளைத் தளபதியாகவுமிருந்த சரத் பொன்சேகா, ரணில் – விடுதலைப்புலிகள் பேச்சுக்களின் போது வடக்கில் உயர் பாதுகாப்பு வலயம் நீக்கப்பட வேண்டுமானால் கரும்புலிகள் அணி கலைக்கப்பட வேண்டும்” என நிபந்தனை விதித்திருந்தார்.

இதிலிருந்து கரும்புலிகள் இலங்கைப் படைத்தரப்பை எவ்வளவு தூரம் கலக்கினார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள முடியும்.

கரும்புலிகள் தமது உயிர்களை ஆயுதமாக்கி விடுதலைக்கு ஆகுதியானவர்கள். பரந்து கிடக்கும் தாயக மண்ணில் எழுந்து அலை அடிக்கும் எங்கள் கடலில் தவழ்ந்து எம்மை வருடும் காற்றில் அவர்கள் கரைந்து கிடக்கிறார்கள்.

அவர்கள் கல்லறைக்குள் இல்லை!

ஆனால் – காவியங்கள் உண்டு; இன்னும் காவியங்கள் விரியும்.

தமிழினம் உள்ளவரை கரும்புலிகள் வாழ்வார்கள்! அவர்களது ஒவ்வொரு வரலாறும் தமிழ் நெஞ்சங்களில் கோவில்களாக குடியிருக்கும்.

“நீங்கள் உங்கள் சாவைத் தோளில் சுமந்தவர்கள்
நீங்கள் எங்கள் விடுதலையை நெஞ்சில் தாங்கிய வேர்கள்”

-தமிழ்லீடர்

http://tamilleader.com/?p=15303

 

Edited by கலையழகன்
Link to comment
Share on other sites

இணைப்பிற்கு நன்றி ....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணைப்பிற்கு நன்றி ....

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • உலகின் முதன் முதல் வந்த நகைச்சுவை...  எம்பெருமான் முருகன், ஔவையார் பாட்டியிடம், சுட்ட பழம் வேண்டுமா? சுடாத பழம் வேண்டுமா?  என்று கேட்டது தான். 😂 காலத்ததால் முந்தியதும்.... இன்றும் சிரிக்கவும், சிந்திக்கவும் வைக்கும் நகைச்சுவை இதுதான் என்று அடித்து சொல்வேன். 😁 🤣
    • ஏன் செய்தார்களெனத் தெரியவில்லை. ஹோபோகன் நகரம்  அனேகமாக நியூயோர்க்கில் வேலை செய்வோர் ஹட்சன் நதிக்கு இக்கரையில் வாழும் செல்வந்தமான நகரம். இவர்கள் அங்கேயே வசிப்பவர்களாக இருந்தால் பலசரக்குக் கடையில் களவெடுக்கும் அளவுக்கு வறுமையில் இருக்கும் வாய்ப்பில்லை. அல்லது, காசு கட்டிப் படிக்க வந்து, பணத்தட்டுப் பாட்டில் செய்து விட்டார்களோ தெரியவில்லை. இப்படியான இளையோர் நியூ ஜேர்சியில் இருக்கிறார்கள் என அறிந்திருக்கிறேன். இந்த குறிப்பிட்ட ஷொப்றைற் கடையின் self checkout மூலம் பலர் திருடியிருக்கிறார்கள். இதனாலேயே வீடியோ மூலம் கண்காணிப்பை அதிகரித்து இவர்கள் மாட்டிக் கொண்டிருக்கிறார்கள். 
    • இஸ்ரேல்- ஈரான், இவங்கட நொட்டல்கள் பழகி விட்டது, தாங்கிக் கொண்டு சாதாரணமாக வாழலாம். ஆனால், இந்த "கேப்பில்" புகுந்து "திராவிடர் பேர்சியாவின் பக்கமிருந்து மாடு மேய்த்த படியே வந்த ஊடுருவிகள்" என்று "போலி விஞ்ஞானக் கடா" வெட்டும் பேர்வழிகளின் நுளம்புக் கடி தாங்கவே முடியாமல் எரிச்சல் தருகிறது😅. யோசிக்கிறேன்: இவ்வளவு வெள்ளையும் சொள்ளையுமான பேர்சியனில் இருந்து கன்னங் கரேல் திராவிடன் எப்படி உருவாகியிருப்பார்கள்? சூரியக் குளியல்? 
    • பொது நடைமுறையை சொல்கிறேன். கனடாவுக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். படிக்க போகாவிடின், கல்லூரி உ.நா.அமைச்சுக்கு அறிவிக்கும். அதன்பின், இவர் இப்போதைய நிலையை கருத்தில் எடுத்து - மாணவர் வீசா மீளப்பெறப்படும். அன்று முதல் இவர் ஓவர் ஸ்டேயர்.  ஆனால் வழக்கு முடிந்து, தண்டனையும் முடியும் வரை முதலில் ரிமாண்டிலும், பின் சிறையிலும் வைத்திருப்பார்கள். தண்டனை காலம் முடிந்ததும் நாடுகடத்துவார்கள். விண்ணப்பித்தாலும் பிணை கிடைத்திராது. குழந்தைகள் உட்பட 6 கொலை! 7வதை ரிஸ்க் எடுக்க எந்த நீதிபதியும் தயாராக இருக்கமாட்டார்கள். வாய்பில்லை - ஒரு கிரிமினல் குற்றம் மூலம் வரும் தண்டனை காலம் - வதிவிடத்துக்கு கணக்கில் எடுத்து கொள்ளப்படாது. வதிவிடத்துக்கு கணக்கில் எடுக்க அந்த காலம் சட்டபூர்வமானதும், தொடர்சியானதாயும் இருக்க வேண்டும். சிறைவாச காலம் சட்டபூர்வமானதல்ல. அதேபோல் ஒரு குற்றத்துக்காக சிறை போனால் “தொடர்சி” சங்கிலியும் அந்த இடத்தில் அறுந்து விடும். வெளியே வந்த பின், நாடு கடத்தாமல் விட்டால், தாமதித்தால் - சூரியின் பரோட்டா கணக்கு போல், சட்டபூர்வ & தொடர்சியான காலம் மீள பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்கும்.  
    • புராணக்கதையின் படி, ஆர்க்கிமிடிஸ் குளியல் செய்யும் பொழுது கண்ட ஒன்றால்,  மிகவும் உற்சாகமடைந்தார், அவர் குளியலறையில் இருந்து குதித்து, மீண்டும் தனது பட்டறைக்கு  / அரச   அரண்மனைக்கு  / வீட்டிற்கு ஓடினார், யுரேகா (அதாவது "நான் அதை கண்டுபிடித்தேன்") என்று கத்திக் கொண்டே, ஆனால்  " பொருத்தமற்ற உடையுடன், அதாவது நிர்வாணமாக ". ஆர்க்கிமிடிஸ் எப்போதாவது "யுரேகா" என்ற வார்த்தையை கத்தினாரா / உச்சரித்தாரா என்று சிலர் சந்தேகிக்கிறார்கள், ஏனென்றால் இது விட்ருவியஸின் [Vitruvius 80–70 BC – after c. 15 BC ] ஒரு ரோமானிய கட்டிடக் கலைஞர் மற்றும் பொறியியலாளர் ஆவார்.] குறிப்பு ஆகும்.  - இந்த சம்பவம் நடந்த பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு அவரால் எழுதப்பட்டது. வாய்வழியாக வந்த கதையை தொகுத்து கொடுக்கப்பட்டது என்பதால்?   ஆர்க்கிமிடீஸ் கி.மு.287  - கி.மு.212 ; இது அவர் வாழ்ந்த காலம்  ஆகவே அந்த பண்டைய காலத்தில் நிர்வாணம் ஒன்றும்  அதிசயமாக இருந்து இருக்காது?      எல்லோருக்கும் எனது தாழ்மையான நன்றி 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.