Jump to content

Recommended Posts

நான் ரூம் வாடகைக்கு எடுத்து இருக்கும் வீட்டில் உள்ள அம்மம்மா வயதுடைய ஒருவருக்கு காலில் ஏதோ வெட்டி எலும்பு தெரியுமளவுக்கு காயம். ரத்தம் வந்ததும் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது காயத்தை சுற்றிக்கட்டி விட்டு அடுத்தநாளுக்கு appointment கொடுத்து பின்னர் பெரிய தையல் போட்டுள்ளார்கள்.

இன்று நான் என்ன நடந்தது என்று அது பற்றி கேட்டு அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது எனக்கு தலை சுத்த தொடக்கி விட்டது. நின்று கொண்டு கேட்டுக்கொண்டிருந்த நான் பக்கத்தில் கதிரை எதுவும் இல்லாததால் அப்படியே நிலத்தில் இருந்து விட்டேன்.

இவ்வாறான சம்பவங்கள் பற்றி அடுத்தவர் சொல்ல கேட்கும் போது அல்லது நீண்ட நேர வீடியோவில் பார்க்கும் போது எனக்கு வழமையாகவே இவ்வாறு தலை சுத்துவதுண்டு. அதை அவருக்கும் சொன்னேன். சொல்லி விட்டு சிறிது நேரத்தில் வேறு கதிரை கொண்டு வந்து போட்டு விட்டு இருக்க அவர் தொடர்ந்து சொன்னார். திரும்ப தலை சுத்த தொடங்கி  விட்டது.

நான் பின்னர் வருகிறேன் என்று சொல்லி விட்டு எழும்பி அவர் ரூமை விட்டு வெளியே வரும்போது கண்ணெல்லாம் இருட்டிக்கொண்டு வந்து அப்படியே விழுந்து விட்டேன். அவருக்கு சத்தம் கேட்டதாக்கும், பிள்ளை விழுந்து போனீங்களோ என்று கேட்டார். எனக்கு நான் விழுந்திட்டனோ அல்லது நின்று கொண்டிருக்கிறேனோ என்று உடனே தெரியவில்லை. முழித்து தான் இருந்தேன். ஆனால் கண் இருட்டியபடி இருந்ததால் சுற்றுமுற்றும் பார்த்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. ஒரு நிமிடத்தின் பின்னர் தான் நான் விழுந்திருந்ததும் விழுந்த வீச்சுக்கு எழும்பி முழங்காலில் இருந்ததும் தெரிந்தது.

நான் உயர் தரம் படிக்கும் போது கண்காட்சிக்கு சென்றிருக்கிறேன். அங்கு சத்திரசிகிச்சை வீடியோ எல்லாம் பார்த்திருக்கிறேன். அப்பொழுது இவ்வாறு வருவதில்லை. ஆனால் சில வருடங்களாக இப்படி உள்ளது.

இதற்கு காரணம் என்ன என்று யாருக்காவது தெரியுமா? காரணத்தை தெரிந்து கொள்ள ஆர்வமாக உள்ளது. :rolleyes:

 

மருத்துவரிடம் கொண்டு போய் காட்ட சொல்லாதீர்கள். இப்பொழுது என்னை மருத்துவரிடம் அழைத்து செல்லுமளவில் யாரும் இல்லை. நானாக தான் செல்ல வேண்டும். நான் செல்லும் மருத்துவருக்கும் கொஞ்சம் தான் ஆங்கிலம் தெரியும். அவருடன் ஆங்கிலத்தில் தான் நான் உரையாடுவேன். எனக்கும் ஆங்கிலம் அரைகுறை. அதிலும் மருத்துவ ரீதியான ஆங்கில வார்த்தைகள் அவ்வளவாக தெரியாது. பிரெஞ்சு இப்ப தான் படித்துக்கொண்டிருக்கிறேன்.

 

யாரிடமாவது சொல்ல வேணும் போலிருந்தது. யாழ் தான் நினைவு வந்தது. ஏதும் புலம்புவது போலிருந்தால் இத்திரியை நீக்கி விடுங்கள். :(

Link to comment
Share on other sites

  • Replies 53
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

துளசி, எத்தனையோ பண்பட்ட கள உறவுகள், பாரிஸில் இருக்கிறார்கள்! இந்தப் பாட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்காது உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு நல்ல மருத்துவரை உடனடியாகப் பார்க்கவும். அவர்கள், நிச்சயம் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்!

அனிமியா முதல் கொண்டு பல காரணங்களால் இது ஏற்படலாம்.

நீங்கள் கள உறவுகளை விரும்பாவிட்டால், தனி மடலிடுங்கள்!

Link to comment
Share on other sites

துளசி,
 
எனக்கும் இந்த நாட்டுக்கு வந்த புதிசில இப்படி இருந்தது. மரக்கறி மட்டுமே அப்போது சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் புதிய சூழ்நிலைகாரணமாக மன அழுத்தம் போன்றன இருந்தன. Multi Vitamin போடச்சொன்னார்கள்.
 
போட பிறகு சரியாகிவிட்டது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.  :D
 
பெண்கள் இரும்புச் சத்து எடுப்பது நல்லது.
 
இரும்புச் சத்து குறைபாட்டு அறிகுறிகள்:
 
1. சொண்டு வெளிருதல்
2. சோர்வு
...
Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் துளசி.. :D அதாவது மேலே அன்பர்கள் கூறியுள்ள ஆலோசனைகளைப் பின்பற்றி நலம்பெற வாழ்த்துக்கள்..! :rolleyes:

Link to comment
Share on other sites

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வருவது இயற்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  A/L காலத்தில் இது எனக்கு மூன்று முறை நடந்ததால் எனது வைத்தியர் தான் மருத்துவ கல்லூரி ஆரம்பத்தில் அனுபவப்பட்டதாகவும் தான் திரும்ப திருப்ப பார்க்க நேர்ந்த பின்னர் இல்லாமல் போனதாகவும் சொன்னார். அந்த காலங்களின் பின்னர் நான் பார்த்த இரத்தம் வீடியோ காட்சிகளில் மட்டும் தான்.  இலங்கையின் கொலைக்களங்கள் மாதிரி படங்களை நான் எப்போதும் முழுவதாக பார்ப்பத்தில்லை. ஆனால் உங்களுக்கு இரத்தம் சம்பந்தமான கதையை  கேட்கும் போதே வருவது கொஞ்சம் கூட என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவையாக இருக்கலாம்.

 

அனீமியாவின் சில காரணங்கள் பாரதூரமானவை. சில நல்ல சாப்பாடு சாப்பிட மாறிவிடும். கள உறவுகளின் ஆலோசனைகளை பின் பற்றவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் கவனம் எடுங்கள்...ஒரு முறையாவது வைத்திய பரிசோதனை செய்து பார்த்தால் நல்லம் துளசி..மொழி பிரச்சனையாக இருக்கிறது என்பதற்காக வைத்தியரிடம் போகாமல் இருக்க முடியுமா..???என்ன நீங்கள்...துளசியின்ட தேசிய உணவை விட்டு நல்ல உணவுகளை சாப்பிட்டாலே..உடல் நிலையில் மாற்றம் வரும்..

Link to comment
Share on other sites

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. :)

 

நான் தலை சுத்தி விழுந்தமைக்கு சந்தோசப்பட்டு வாழ்த்து தெரிவித்த இசை அண்ணாவுக்கும் நன்றி. :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எந்த நோயையும் நாம் அலட்சியமாக எடுக்கக் கூடாது துளசி. பிரெஞ்ச் நன்றாகக் கதைக்கக் கூடிய ஒருவரைக் கூட்டிக்கொண்டு வைத்தியரைப் பார்ப்பதே நல்லது.

Link to comment
Share on other sites

துளசி, எத்தனையோ பண்பட்ட கள உறவுகள், பாரிஸில் இருக்கிறார்கள்! இந்தப் பாட்டி வைத்தியம் பார்த்துக்கொண்டிருக்காது உடனே அவர்களுடன் தொடர்பு கொண்டு நல்ல மருத்துவரை உடனடியாகப் பார்க்கவும். அவர்கள், நிச்சயம் உங்கள் அடையாளத்தை வெளிப்படுத்த மாட்டார்கள்!

அனிமியா முதல் கொண்டு பல காரணங்களால் இது ஏற்படலாம்.

நீங்கள் கள உறவுகளை விரும்பாவிட்டால், தனி மடலிடுங்கள்!

 

நன்றி அண்ணா, எனக்கு முன்பிலிருந்தே இரத்தத்தில் ஈமொகுளோபினின் அளவு குறைவாக தான் உள்ளது. முன்னொருதடவை யாழ் போதனா வைத்தியசாலையில் கூறியிருந்தார்கள். தலைமுடி உதிர்வதும் அதிகம். சிலவேளை Anemia ஆகவும் இருக்கலாம் தெரியவில்லை.

 

நான் இருக்கும் பகுதியில் தமிழர்கள் குறைவு. அதே போல் எனது இடத்திற்கு தமிழர்கள் அதிகம் வாழும் பகுதியிலிருந்து வருவதற்கு தூரம் கொஞ்சம் அதிகம். அது தான் பிரச்சினை. நிச்சயம் ஏதும் ஒழுங்குகள் செய்ய முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

துளசி,

 
எனக்கும் இந்த நாட்டுக்கு வந்த புதிசில இப்படி இருந்தது. மரக்கறி மட்டுமே அப்போது சாப்பிடுவதால் இரும்புச்சத்து குறைபாடு மற்றும் புதிய சூழ்நிலைகாரணமாக மன அழுத்தம் போன்றன இருந்தன. Multi Vitamin போடச்சொன்னார்கள்.
 
போட பிறகு சரியாகிவிட்டது. இன்னும் உயிரோடு தான் இருக்கிறேன்.  :D
 
பெண்கள் இரும்புச் சத்து எடுப்பது நல்லது.
 
இரும்புச் சத்து குறைபாட்டு அறிகுறிகள்:
 
1. சொண்டு வெளிருதல்
2. சோர்வு
...

 

 

நன்றி அண்ணா,

 

எனக்கு இரும்பு சத்து குறைபாடு மட்டுமல்ல, நிறைய பிரச்சினை இருக்குமென நினைக்கிறேன். :icon_idea: blood pressure இதுவரைக்கும் low ஆக தான் இருந்துள்ளது. சாதாரணமாக 120/80 என இருக்க வேண்டும். எனக்கு 100/70 இல் தான் இருப்பது வழமை. இப்பொழுது எப்படி என்று தெரியாது. அதேபோல் blood sugar இன் அளவும் குறைவு என்று முன்னர் சொன்னார்கள். :rolleyes:

 

ஆனால் இவற்றுக்கு சாதாரண மயக்கம் தானே வர வேண்டும். இப்படி மற்றவர்கள் காயங்கள் அல்லது இரத்தம் பற்றி சொல்வதை கேட்டுக்கொண்டிருக்கும் போது தலை சுத்தி விழுவதற்கும் இதற்கும் தொடர்புள்ளதோ தெரியவில்லை. :unsure: ஆனாலும் உணவில் கொஞ்சம் கவனம் செலுத்த முயற்சி செய்கிறேன். :rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து எழுதிய அனைவருக்கும் நன்றி. :)

 

நான் தலை சுத்தி விழுந்தமைக்கு சந்தோசப்பட்டு வாழ்த்து தெரிவித்த இசை அண்ணாவுக்கும் நன்றி. :lol:

 

நீங்கள் தலை சுத்தி விழுந்தது என்று சொல்ல இசை நினைத்திருப்பார் நீங்கள் கர்ப்பமாய் இருக்கிறீர்கள் என்று  :lol:  :D  :icon_idea:
 
காசை மிச்சம் பிடிப்பதற்காக பிஸ்க்ட்டையும்,பக்கட் நூடில்ஸ்சும் சாப்பிடாமல் கொஞ்சம் சத்தான சாப்பாடாய் சாப்பிடுங்கள்
Link to comment
Share on other sites

இரத்தத்தை பார்த்தால் மயக்கம் வருவது இயற்கை என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.  A/L காலத்தில் இது எனக்கு மூன்று முறை நடந்ததால் எனது வைத்தியர் தான் மருத்துவ கல்லூரி ஆரம்பத்தில் அனுபவப்பட்டதாகவும் தான் திரும்ப திருப்ப பார்க்க நேர்ந்த பின்னர் இல்லாமல் போனதாகவும் சொன்னார். அந்த காலங்களின் பின்னர் நான் பார்த்த இரத்தம் வீடியோ காட்சிகளில் மட்டும் தான்.  இலங்கையின் கொலைக்களங்கள் மாதிரி படங்களை நான் எப்போதும் முழுவதாக பார்ப்பத்தில்லை. ஆனால் உங்களுக்கு இரத்தம் சம்பந்தமான கதையை  கேட்கும் போதே வருவது கொஞ்சம் கூட என்றுதான் எடுத்துகொள்ள வேண்டும். மருத்துவ உதவி தேவையாக இருக்கலாம்.

 

அனீமியாவின் சில காரணங்கள் பாரதூரமானவை. சில நல்ல சாப்பாடு சாப்பிட மாறிவிடும். கள உறவுகளின் ஆலோசனைகளை பின் பற்றவும்.

 

நான் channel 4 காணொளிகள் பார்க்கும் போது இப்படி இருந்ததில்லை. அவற்றில் கதைப்பதை அதிகம் காட்டி இடைக்கிட தான் இவ்வாறான சம்பவங்களை காட்டுவார்கள். சிலவேளை தொடர்ச்சியாக பார்த்தால் தலை சுத்தலாம்.

 

நன்றி அண்ணா உங்கள் கருத்துக்கு.

Link to comment
Share on other sites

உடல் நிலை நன்றாக இருக்க வேண்டும் என்றால் சாப்பாட்டில் கவனம் எடுங்கள்...ஒரு முறையாவது வைத்திய பரிசோதனை செய்து பார்த்தால் நல்லம் துளசி..மொழி பிரச்சனையாக இருக்கிறது என்பதற்காக வைத்தியரிடம் போகாமல் இருக்க முடியுமா..???என்ன நீங்கள்...துளசியின்ட தேசிய உணவை விட்டு நல்ல உணவுகளை சாப்பிட்டாலே..உடல் நிலையில் மாற்றம் வரும்..

 

நன்றி அக்கா, தேவைப்பட்டால் வைத்தியரிடம் செல்வதுண்டு. ஆனால் அவ்வளவாக வைத்தியரிடம் செல்லும் தேவைகள் எழவில்லை. ஆனால் இது கடைகளுக்கு செல்வது போல் அல்ல. ஏதும் கேட்கும் போது பிழையாக விளங்கி பதில் சொன்னால் அல்லது கேள்வி விளங்காவிட்டால் பிரச்சினையில் தான் முடியும்.

 

யாரையும் தெரிந்து கொண்டு இந்த நாட்டுக்கு வரவில்லை. வந்த பின்னர் பழக்கமானவர்கள் யாரும் எனக்காக மினக்கட்டு நேரம் செலவழித்து உதவி செய்யக்கூடியவர்கள் இல்லை. கொஞ்ச காலம் போனால் என் பாட்டை நானே பார்ப்பேன். அது வரைக்கும் தான் பிரச்சினை.

 

இடைக்கிட என்றாலும் நல்ல உணவுகள் சாப்பிட முயற்சி செய்கிறேன். :)

Link to comment
Share on other sites

எந்த நோயையும் நாம் அலட்சியமாக எடுக்கக் கூடாது துளசி. பிரெஞ்ச் நன்றாகக் கதைக்கக் கூடிய ஒருவரைக் கூட்டிக்கொண்டு வைத்தியரைப் பார்ப்பதே நல்லது.

 

நன்றி அக்கா,

யாயினி அக்காவுக்கு எழுதிய பதிலையும் வாசியுங்கள். அதே போல் சிலநேரம் காசு கொடுத்து translator ஐ  கூட்டிக்கொண்டு சென்று சில அலுவல் பார்த்திருக்கிறேன்.

ஆனால் எமது பக்கம் பெரிதாக யாரும் வந்து போயிருக்க மாட்டார்கள் என்பதால் சில நேரங்களில் அவர்களுக்கு வருவது சிரமமாக இருக்கும். அதனால் சம்மதிப்பதில்லை. நான் அவர்கள் இடத்திலுள்ள doctor யாரிடமும் சென்று காட்ட முயற்சி செய்து பார்க்கலாம். ஆனால் இங்கு பதிவை வைத்துக்கொண்டு வேறு இடங்களில் காட்ட முடியுமோ தெரியவில்லை. விசாரித்து பார்க்கிறேன்.

Link to comment
Share on other sites

நீங்கள் தலை சுத்தி விழுந்தது என்று சொல்ல இசை நினைத்திருப்பார் நீங்கள் கர்ப்பமாய் இருக்கிறீர்கள் என்று  :lol:  :D  :icon_idea:

 
காசை மிச்சம் பிடிப்பதற்காக பிஸ்க்ட்டையும்,பக்கட் நூடில்ஸ்சும் சாப்பிடாமல் கொஞ்சம் சத்தான சாப்பாடாய் சாப்பிடுங்கள்

 

அவர் அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. :lol: சில வருடங்களாகவே எனக்கு இப்பிரச்சினை உள்ளது என கூறியுள்ளேன். அதை சரியாக வாசிக்காமல் அவர் என்னை நக்கலடித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. :icon_idea:

 

நான் இன்னும் வேலை செய்ய தொடங்கவில்லை. வேலை செய்ய தொடங்கிய பின்னர் சாப்பாட்டில் மிச்சம் பிடிப்பதை குறைக்கிறேன். :)

 

அதிகம் செலவழித்து கடனை அதிகரிக்காமல் இப்போதைக்கு ஏற்கனவே நான் சாப்பாட்டுக்கு செலவழிக்கும் காசில் தேவையில்லாததை குறைத்து தேவையானவற்றை வாங்க முயற்சிக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் துளசி

 

இது பெரும் பிரச்சினையாக தெரியவில்லை. பிரசர் குறைவதனால் வரலாம். அது வராதபடி  சாப்பாட்டிலும் தூக்கத்திலும் சிந்திப்பதிலும் ஒழுங்கு தேவை.  அதை முதலில் செய்யுங்கள்.  அத்துடன் உங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஒருமுறை ரத்த பரிசோதனை செய்யுங்கள்.

 

அவர் ஏதாவது சிக்கலாக தெரிவித்தால்..........

அதன்பின் மொழி சம்பந்தமான சிக்கல்  வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

நிச்சயம் உதவ முடியும்.

(நான் வரமாட்டேன். பெண் பிள்ளை  ஒன்றை தொடர்பு படுத்தி தருகின்றேன். ஆனால் அதற்கு முதல் மேலே எழுதியவற்றை  செய்யவேண்டும்)

Link to comment
Share on other sites

வணக்கம் துளசி

 

இது பெரும் பிரச்சினையாக தெரியவில்லை. பிரசர் குறைவதனால் வரலாம். அது வராதபடி  சாப்பாட்டிலும் தூக்கத்திலும் சிந்திப்பதிலும் ஒழுங்கு தேவை.  அதை முதலில் செய்யுங்கள்.  அத்துடன் உங்கள் குடும்ப வைத்தியரை நாடி ஒருமுறை ரத்த பரிசோதனை செய்யுங்கள்.

 

அவர் ஏதாவது சிக்கலாக தெரிவித்தால்..........

அதன்பின் மொழி சம்பந்தமான சிக்கல்  வந்தால் தொடர்பு கொள்ளுங்கள்.

நிச்சயம் உதவ முடியும்.

(நான் வரமாட்டேன். பெண் பிள்ளை  ஒன்றை தொடர்பு படுத்தி தருகின்றேன். ஆனால் அதற்கு முதல் மேலே எழுதியவற்றை  செய்யவேண்டும்)

 

சாப்பாடு, தூக்கம், சிந்திப்பது என எதிலுமே நான் ஒழுங்கில்லை. :icon_idea:

 

உண்மையில் எனக்கு ஊரிலிருந்த வரைக்கும் எனது blood group தெரியாது என்பதால் :lol: இங்கு blood group அறிய ஒருதடவை doctor ஐ கேட்டிருந்தேன். அதற்கு இன்னொரு இடத்திற்கு போக சொல்லி போனேன். நிறைய blood குத்தி எடுத்து விட்டார்கள். :( ஆனால் தனிய blood group பற்றி மட்டும் தான் தந்தார்கள். :rolleyes: பின்னர் தான் நினைத்தேன், ஒரேதாக blood test என்று சொல்லி எடுத்திருக்கலாம், அப்ப தான் அனைத்து விபரங்களும் வந்திருக்கும் என்று. :D

 

Visite médicale க்கு போனவருடம் appointment வந்தபோது blood test உம் செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு blood test செய்யவில்லை. :rolleyes:

இந்த மாதம் கொஞ்சம் பிஸி. அடுத்த மாத தொடக்கத்தில் நிச்சயம் blood test எடுக்க முயற்சி செய்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எனக்கு ஊரிலிருந்த வரைக்கும் எனது blood group தெரியாது என்பதால் :lol: இங்கு blood group அறிய ஒருதடவை doctor ஐ கேட்டிருந்தேன். அதற்கு இன்னொரு இடத்திற்கு போக சொல்லி போனேன். நிறைய blood குத்தி எடுத்து விட்டார்கள். :( ஆனால் தனிய blood group பற்றி மட்டும் தான் தந்தார்கள். :rolleyes: பின்னர் தான் நினைத்தேன், ஒரேதாக blood test என்று சொல்லி எடுத்திருக்கலாம், அப்ப தான் அனைத்து விபரங்களும் வந்திருக்கும் என்று. :D

 

Visite médicale க்கு போனவருடம் appointment வந்தபோது blood test உம் செய்வார்கள் என்று நினைத்திருந்தேன். ஆனால் அங்கு blood test செய்யவில்லை. :rolleyes:

இந்த மாதம் கொஞ்சம் பிஸி. அடுத்த மாத தொடக்கத்தில் நிச்சயம் blood test எடுக்க முயற்சி செய்கிறேன்.

 

 

 

உங்கள் உடல்நிலை  தெரிந்த தாங்களே இவ்வாறு இருந்தால் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் அக்கறைப்படுவர் துளசி.  அதனால் தான் ஆரம்ப வேலைகளை நீங்கள் செய்யணும் என்று வற்புறுத்துகின்றேன்.

உண்மையில் ஏதாவது பாராதூரமான பிரச்சினை  இருக்கலாம்.  அதை சாதாரணமாக  வைத்தியரை சந்திப்பதன் ஊடாக தெரிந்து கொள்ளமுடியும்.

அதைச்செய்து விட்டு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்.

 

ஆறப்போடுவது உடல் நலத்தைப்பொறுத்தவரை கேடு விளைவிக்கும் :( 

Link to comment
Share on other sites

உங்கள் உடல்நிலை  தெரிந்த தாங்களே இவ்வாறு இருந்தால் மற்றவர்களுக்கு எவ்வளவு தூரம் அக்கறைப்படுவர் துளசி.  அதனால் தான் ஆரம்ப வேலைகளை நீங்கள் செய்யணும் என்று வற்புறுத்துகின்றேன்.

உண்மையில் ஏதாவது பாராதூரமான பிரச்சினை  இருக்கலாம்.  அதை சாதாரணமாக  வைத்தியரை சந்திப்பதன் ஊடாக தெரிந்து கொள்ளமுடியும்.

அதைச்செய்து விட்டு வேண்டுமானால் தொடர்பு கொள்ளுங்கள்.

 

ஆறப்போடுவது உடல் நலத்தைப்பொறுத்தவரை கேடு விளைவிக்கும் :( 

 

போன தடவை blood test எடுக்க சென்ற இடத்தில் பின்னேரங்களில் தான் வர சொன்னார்கள். எனக்கு 5 நாளும் பின்னேரத்தில் class இருக்கு. இந்த மாதத்துடன் A2 முடிந்து விடும் என்பதால் அடுத்த மாத தொடக்கம் என சொன்னேன்.

அல்லது ஒரு நாள் class க்கு செல்லாமல் இங்கு செல்ல வேண்டும். எதற்கும் doctor ஐ கேட்டு பார்க்கிறேன். இப்பொழுது எடுத்தால் நல்லது தான். பின்னர் என்றால் vacation க்கு doctor எங்காவது போனால் பிறகு இப்போதைக்கு சரிவராது. :rolleyes:

Link to comment
Share on other sites

உண்மை............... காதல் இது கூட உளவியல் ரீதியாக ஏற்படும் ஒரு சூழலே .................எனது அனுபவத்தில் அங்கே பல போராளிகளை காயங்களுடனும் ,வீரமரணங்களுடனும் நேருக்கு நேர் எதிர் கொண்ட எனக்கு இங்கு வீதியில் ஒரு கார் விபத்து என்றால் கூட அதை திரும்பி பார்க்கும் நிலைக்கு என் மனம் இடம் கொடுக்குதில்லை .....எல்லாம் சூழலே .மனதை போட்டு வருத்தாமல் சாதாரணமாய் எடுத்து வாழ்க்கையை பயணியுங்கள் ....................இது என் மனதில் தோன்றிய .நான் எப்படி இருக்க வேண்டும் என்ற உளம் சொல்லும் சிந்தனையே ,நன்றி.

Link to comment
Share on other sites

அவர் அப்படி நினைத்தால் நான் ஒன்றும் செய்ய முடியாது. :lol: சில வருடங்களாகவே எனக்கு இப்பிரச்சினை உள்ளது என கூறியுள்ளேன். அதை சரியாக வாசிக்காமல் அவர் என்னை நக்கலடித்தால் அதற்கு நான் பொறுப்பில்லை. :icon_idea:

.

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure: நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea::D

Link to comment
Share on other sites

துளசியின் எழுத்துக்களை உற்றுநோக்கும்போது அவ சில வருடங்களாகவே "எச்சரிக்கை உணர்வு" இல்லாமல் இருந்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.. :unsure:நல்ல சத்தான சாப்பாடு சாப்பிட்டு வரவேணும் துளசி.. :icon_idea: :D

அதை நான் ஆமோதிக்கிறேன் ............ஆமோதிக்கிறேன் ....................ஆமேன் ......... :D  :D 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

  கிறுதிக்கு சாப்பாட்டாலை ஒண்டும் வெட்டி புடுங்கேலாது...... துளசி! நீங்கள் வைத்தியரை நாடி நிவாரணம் தேடுவது நல்லது.உங்கள் குடும்ப அங்கத்தவர்களுக்கும் இதே மாதிரி இருக்கின்றதா? ஒருசில நோய்கள் சந்ததி சந்ததியாகவே தொடர்கின்றது. ஜேர்மனியிலையெண்டால் பத்து நிமிசத்திலை என்ன வருத்தம் எண்டு சொல்லி அதுக்கு நிவாரணமும் சொல்லுவினம்.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.