Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூற்றி ஓராம் ஆண்டு ஆனையிறவு சண்டை முடிய அண்ணை

யாழ்ப்பாணத்தில உள்ள சாளி ( நல்லூர்)முகாமில எங்களை சந்தித்து கதைத்தார்.அது எங்களுக்கான பொதுச்சந்திப்பாய் இருந்தது.அப்போது

கதைக்கும் போது அண்ணை சொன்னார்.நாடு கிடைச்சால் நான் ஊனமுற்ற போராளிகள் மக்களை பார்க்கிறதுதான் என்னுடைய கடமையாய்

இருக்கும்.நாடு கிடைச்சால் நாங்கள் வேகமாய் முன்னேறிவிடுவம் ஏனென்றால் எங்களிட்ட ஊழல் இருக்காது. அந்த எண்ணமே இறுதிவரை அவரிடம் இருந்தது.

 அண்ணை தன்னளவில் என்றும் எளிமையாய் இருந்தார்.காலத்தோடு அவரின் எளிமை துளி கூட மாறவில்லை.யாராவது ஏதாவது பொருட்களை அவருக்கு கொடுத்தால்,இந்தப்பொருள் யாருக்கு நல்லா இருக்கும் என்று ஊகித்து அவர்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.அவர் எப்போதும் போலவே மரக்கட்டிலில் புல்லுப்பாயை விரித்து கைகளை தலைக்குக்கீழ் வைத்து நித்திரை கொள்ளுவார்(தலை அணை பாவிப்பதில்லை).

அவரிடம் கேட்டால் சொல்லுவார் எழுபதுகளில் ஓடித்திரியும் காலங்களில்

வயல்வெளிகளிலும் ,தோட்டங்களிலும் இப்படி படுத்து பழகிவிட்டதென்று.

 

ஒரு நாள் காலை ஏழரை மணிக்கு பாலதாஸ்,நிதிப்பொறுப்பாளர் தமிழீழம்

அவர்கள் என்னை கிளிநொச்சியில் சந்திப்பதாய் முதல் நாளே தெரியப்படுத்தியிருந்தார்.அன்று காலை சரியாக ஏழரைக்கு வந்தார்.

முகமெல்லாம் நித்திரை இல்லாதது பளிச்சென்று தெரிந்தது.என்ன என்று வினவினேன் . அவர் சொன்னார்  தான் முதல் நாள் இரவு மன்னாரில் இருந்து வந்து இரவு மூன்று மணிக்கு அண்ணையை சந்தித்ததாயும்,சந்திப்பு முடிய தான் புதுக்குடியிருப்பு போய் விடிய இங்கு வர இருந்ததாகவும் , அண்ணை சொல்லிச்சாம் நீர் சரியாய் நித்திரை தூங்குகிறீர் கிளிநொச்சியிலேயே ஒரு முகாமை சொல்லி அங்க படுத்திட்டு விடிய போகச்சொன்னாராம்.  நாலு மணிக்கு போய் படுத்ததென்றும் ஐந்து மணிக்கு ஒருத்தன் வந்து எழுப்பினானாம் அண்ணை சொன்னதென்று ,சிங்கன் உங்கதான் படுத்திருக்கிறார் போய் அமத்து என்று,பிறகு என்ன நித்திரை என்று சிரித்த

பாலதாஸ், அண்ணை எனக்குப்பிறகும் ஒராளை சந்திச்சிருக்கிறார் அண்ணை பாவம் என்றுது.

கிட்டண்ணை இறந்த நேரம் அண்ணை மலசல கூடத்திற்குள் இருந்து விக்கி விக்கி அழுததாய் அப்போது அண்ணையின் பாதுகாப்பில் இருந்த போராளி எனக்கு சொல்லியிருந்தான்.தமிழ்ச்செல்வனின்  வீரச்சாவின் போது அவரின் கண்களில் இருந்து கண்ணீர் ஒழுகியதை கண்டேன்.

      

 

ஓவியன்

Link to comment
Share on other sites

தொடருங்கள் லியோ.. :(

.. லியோ அண்ணா..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கோ லியோ

Link to comment
Share on other sites

இசை, லியோ உங்களை விட 2 வயது குறைவு.

 

தகவலுக்கு நன்றி அலையக்கா.. என்னைப் பற்றியும் றெக்கீ எடுத்திருக்கிறீங்கள்.. :D திலீபன் காலத்தில் நான் சிறுவன் என்பதால் அப்படி ஒரு கருத்தை எடுக்க நேர்ந்தது.. :D

Link to comment
Share on other sites

தொடர்ந்து பகிருங்கள் லியோ ......தொடர்ந்து வாசித்து வருகின்றேன்! .

போராட்டக் களங்களில் இருந்த ஒவ்வொருவருக்கும் பின்னாலும் ஆயிரமாயிரம் நிஜமான கதைகள் இருக்கும்.

அனைத்தையும் பிறழ்வின்றி அப்படியே ஆவணமாக்குங்கள். மிகவும் அவசியமான பதிவு இது. மிக்க நனறி லியோ! :)

Link to comment
Share on other sites

தொடருங்கோ---
இப்படிக்கு உங்களால் வாழ்பவன் 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்துக்களால் தமிழினம் மீண்டும் சரியான பாதையில்

செல்லும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு

தொடர்ந்து செல்லுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒவ்வொரு சம்பவங்களையும், நினைவில் வைத்து அழகாக எழுதுகின்றீர்கள் லியோ.
சில விடயங்களை வாசிக்கும் போது.... சம்பவ இடத்தில் நாமும் நிற்பது போன்ற... தோற்றம் ஏற்படுகின்றது.
தொடருங்கள்... லியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணை யார் கதைத்தாலும் அதற்கு முக்கியத்துவப்படுத்தி செவிசாய்ப்பார்.இளைய போராளிகள் சில நேரம் கதைக்கிறதை கேட்கிறதே எங்களுக்கு கஸ்டமாய் இருக்கும் ஆனால் அதற்கு அண்ணை

விலாவாரியாய் விளங்கப்படுத்துவார்.தெரியாத விடயங்களை எவரிடமிருந்தாலும் கேட்டு அறிந்து கொள்ளுவார்.  புலிகள் மிகவும் நல்ல நிர்வாகத்தை நடத்த வேண்டும் என உளம் நிறைய விரும்பியிருந்தார். அவருடைய எதிர்பார்ப்பை ஓரளவுதான் நடைமுறையில் பூர்த்தி செய்யக்கூடியதாய் இருந்தது.தங்களுடைய   சரிகளையும்,பிழைகளையும் ஏற்றுக்கொண்டு,பிழைகளை திருத்தவேணும் என்று சதா சந்திப்புகளில் சொல்லிக்கொண்டு இருப்பார்.

அண்ணையின் பாதுகாப்புகளுக்கு பொறுப்பாக இருந்தவரிடம் பாதுகாப்பு அணியில் உள்ள போராளிகளுக்கு மழை உடுப்பு வாங்கிக்கொடுக்கும் படி அண்ணை சொல்லியிருந்தது.பொறுப்பாளர் வேலைப்பளுக்களுக்கிடையில் 

மறந்துவிட்டார்.அண்ணை கிளிநொச்சியில் இருந்து தன் முகாம் திரும்பிக்கொண்டு இருந்தபோது பாதுகாப்பு  அணியை சேர்ந்த சில போராளிகள் நனைந்து போவதை கண்டுவிட்டார். பொறுப்பாளர்  தோப்புக்கரணம் அடித்தார்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு இடம்பெயர்ந்த புதிது ,ஏரியா அரசியல் பொறுப்பாளர் ஒருவர் மீது ஒரு குடும்பம் குற்றம்  ஒன்றை சுட்டிக்காட்டியிருந்தது.அந்த பொறுப்பாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.தமிழ்ச்செல்வனை நான் சந்திக்கப்போயிருந்த நேரம் அவர் அந்த குடும்பத்தை சந்திக்க வெளிக்கிட்டுக்கொண்டிருந்தார்.என்னையும் வாங்கோவன் என்றார்.அந்த வீட்டை போனோம் அந்த வீட்டின் தலைவனும் தலைவியும்தான் இருந்தார்கள். தமிழ்ச்செல்வன் அந்த விடயத்தை சொல்லி ,எங்களை தயவுசெய்து மன்னித்துக்கொள்ளுங்கோ என்றார் .அந்த தாயும் தந்தையும் அழத்தொடங்கிவிட்டார்கள் .கடவுளே நீங்கள் அதுக்கு மன்னிப்பு கேட்ககூடாது.நீங்கள் என்னப்பா பிழைசெய்தனீங்கள்.பிரயத்தனப்பட்டு எல்லாவற்றையும் சமாளித்து வெளிக்கிட்டோம். சும்மா வெளிக்கிடுவமே பலாப்பழம் சாப்பிட்டுட்டுத்தான் . 

ஓவியன்

Link to comment
Share on other sites

சிறுகச் சிறுக எல்லாமே சரியாக நடக்க வேணுமெண்டதில் சரிபிழைகளைத் திருத்தி நடந்த அந்த நிர்வாகத்தை இனி உலகம் எங்கும் காண முடியாது லியோ அண்ணா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் வாசிக்க ஆவலோடு ...

Link to comment
Share on other sites

யாழில் மிகவும் ஆர்வமுடன் வாசிக்கத்தூண்டும் பதிவுகள்.. நன்றிகள்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் பதிவுகளுக்கு மீண்டும் ஒருமுறை நன்றிகள்

லியோ தொடருங்கள்

 

Link to comment
Share on other sites

தொடருங்கள் லியோ, வாசிக்க மிக ஆவல்! கூடவாய் எழுதுங்கோ உங்களுக்குச் சுலபம் எங்களுக்கும் ................ :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சின்னச் சின்ன ஞாபகங்கள்  சின்ன சின்னதாகவே தொடரட்டும் . அதுதான் அழகாய் இருக்கின்றது லியோ !

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வருகை தந்து ஊக்கப்படுத்தும் அனைத்து உள்ளங்களுக்கும் நன்றிகள் 


வசந்தன் மாஸ்டர் ஒரு சிறந்த பயிற்சி ஆசிரியர்.கராத்தேயில் கறுப்புப்பட்டி பெற்றவர்.தற்காப்பு கலையில் கிட்டத்தட்ட பைத்தியம்தான் அவருக்கு.எவ்வளவு விடயங்களை அவர் அதில் பயின்று வைத்திருந்தார். தான் கற்ற விடயங்களை இளம்போராளிகளுக்கு பயிற்றுவிப்பதில் அவருக்கு அலாதி பிரியம். வசந்தன் என்றவுடன் மனதில் படிகிறது அந்த கள்ளமில்லா வெண்சிரிப்பு, எங்கு கண்டாலும் நின்று கதைத்துப்போகும் தோழமை.

அவன் இறுதியுத்த காலத்தில் தலைமைச் செயலகத்தில் ஆயுதப்பொருட்களின் சேமித்து விநியோகத்திற்கு பொறுப்பாய்இருந்தான்.

இறுதி யுத்த நேரத்தில் ஆயுத வழங்கலை சர்வதேசம் தடுத்ததால் எமது கையிருப்பு மிகவும் குறைந்துவிட்டது.இருந்த ஆயுதப்பொருட்களை மிகக் கஸ்டப்பட்டு சேமித்து விநியோகித்தான். அந்த இறுதிநாட்களில் ஒரு நாள் அவனது ஒரு வாகனம் நிரம்பிய ஆயுதப்பொருட்களில் எதிரியின்  துப்பாக்கி சன்னம் பட்டு சிறிது எரியத்தொடங்கியது.முழுதும் எரிந்து முடியும் முதல் இயன்ற அளவு பொருட்களை இறக்க வசந்தன் முயன்று கொண்டிருந்தான். மற்றயவர்கள் கத்தினார்கள் வசந்தன்னை உது வெடிக்கும் இறங்குங்கோ.எனக்கு தெரியும் இது வெடிக்கும் ஆனால் அதுக்கிடையில இறக்கிறதை இறக்கிறன். அவன் ஓரளவை இறக்கிப்போடும்போது அது வெடித்துச் சிதறியது.அந்த சிறு எரிமலையை சற்று தொலைவில் இருந்து நாங்களும் பார்த்தோம்,எங்களுடைய வசந்தனும் சிதறி எரிவதை தெரியாமல். நேற்றுப்பின்னேரம்தான்இடுப்பில் கட்டிய பிஸ்டலுமாய் வந்து நின்று கதைத்துப்போனான் நாட்கள் எண்ணப்படுகின்றன,யார் முந்துறமோ தெரியாது?.

 

லோலோ,தமீழீழ சுகாதாரசேவைகளின் தொற்று நோய்த்தடுப்பு பிரிவுக்கு பொறுப்பாக இருந்தான்.இவ்வளவு இடம்பெயர்வுகளுக்கும் மக்களுக்கு தொற்று நோய்கள் வராமல் காத்ததில் இவனது  உழைப்பு இருந்தது.எப்போதும் மக்களுக்கு தொற்று நோய்கள் வந்தாலும் என்று ஒரு பொதி மருந்தை களஞ்சியப்படுத்தி வந்தான்.அந்த மருந்து பயன்படுத்தாமலே இருந்தது.இறுதி நாட்களில் ஒரு முன்னிரவு எதிரியின் பொஸ்பரஸ் குண்டுக்கு அவன் காயப்படும் போது,அந்த மருந்துகளும் எரிந்துவிட்டன. அவன் காயப்பட்டு ,பின் வீரச்சாவு அடையும்வரை தொற்று நோய்கள் ஏதாவது வந்ததா?என்றே வினவிக்கொண்டிருந்தான்.

 

ஓவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தொடருங்கோ....லியோ

Link to comment
Share on other sites

மக்கள் மீதும் போராட்டம் மீதும் எவளவு பற்று இவர்கள் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது பெருமையே..... இப்பிடியான போராளிகளின் வாழ்வு வரலாறு நினைவுகூரப்பட வேண்டியவை இன்னும் எழுதுங்கள் அண்ணா....

Link to comment
Share on other sites

வரும் சந்ததிகளுக்கு ஒரு எதிர்காலம் கிடைக்க, தமது நிகழ்காலத்தை வழங்கியவர்களின் கதைகள்.. பகிர்வுக்கு நன்றி..!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • https://online.srilankaevisa.lk/ யாராவது முயற்சி செய்து பார்த்தீர்களா? எனக்கு சரிவர வேலை செய்யவில்லை.
    • சர்கரை இல்லாங்கால்லிலுப்பை அஃதுபோல் சொல் ஒன்றின்றி நகைக்க லொல். உடான்ஸ்சுவாமி உரை எவ்வாறு சர்க்கரை இல்லாதவிடத்து, இனிப்பு சுவைக்கு இலுப்பை உபயோகிக்கப்படுகிறதோ, அதே போல,  சிரிப்பதை, நகைப்பு என சொல்லால் எழுதாமல், குறியீடாக லொல் எனவும் எழுதலாம்.  
    • வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே.  ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது. 
    • ஓம்….இடையிடே இச்சையின்றி வரும் yeah, தோள் குலுக்கல், கண் மேலே உருட்டல், பிறகு கடையில் வாய்தவறி £இல் விலை கேட்பது… எதையும் 100% மறைக்க முடியாது…. ஆனால் அப்பட்டமாய் ஜொலி ஜொலித்தால்…..ஏமாறும் சதவிகிதம் எகிறும். அதே போல் வெளிநாடு என தெரிந்தாலும், ஏமாற்ற முடியாது, விசயம், விலை தெரியும் என்ற தோற்றப்பாட்டை ஏற்படுத்துவதும் கைகொடுக்கும். எந்த வளர்முக நாட்டுக்கு போனாலும் உதவும் உத்திகள்தானே இவை.     நன்றி🙏
    • நான் இதன் மறுவளமாகவே பார்க்கிறேன். அங்கே மண்னெணை, முதல், மா, சகலதும் மானிய விலையில்தான் மக்களுக்கு தரப்படுகிறது.  ஏன் என்றால் அதை விட கூட விலைக்கு விற்றால் அந்த மக்களால் வாங்க முடியாது. அதே போலவே வடையும். அங்கே இவற்றுக்கான விலை அந்த மக்களின் வாங்கு திறனை வைத்தே தீர்மானிக்கப்படுகிறது. ஆனால் நாம் ஒரு பிரிதானியா வாங்கு திறனோடு போய், இலங்கை வாங்குதிறனுக்குரிய விலையில் பொருட்களை வாங்குவது - ஒரு வகையில் அந்த மக்களிடம் அடிக்கும் கொள்ளையே. ஆனால் எம் அந்நிய செலவாணி வரவால் அதை விட அதிகம் கொடுக்கிறோம் என்பதால் நன்மையே அதிகம். இது எல்லா 3ம் உலக நாட்டுக்கும் பொருந்தும்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.