Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

நான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.

தொடருங்கள் லியோ

யூதர்களும், இஸ்லாமியரும் ஒரே அளவு தொப்பி போடுவார்கள்.. உங்கள் ஸ்டேட்மென்ட்ஸ் அவர்களைப் பாதிக்கும்.. :lol:

Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அண்ணையின் அப்பா அம்மாவை நாங்களும் அப்பா அம்மா என்றுதான் கூப்பிடுவம் . அண்ணையையும் அண்ணையுடன் நின்ற இளைய போராளிகள் தங்களுக்குள் அப்பர் என்று கதைத்துக்கொள்வார்கள். அண்ணையின் அப்பாவும் அம்மாவும் சமாதானக்காலத்தில்த்தான் இந்தியாவில் இருந்து வன்னிக்கு வந்து சேர்ந்தார்கள்.அவர்களை மாதத்தில் ஒரு தடவையாவது சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கிடைக்கும்.அவர்கள் வாழ் நாளில் பல துன்பங்களையும் அனுபவித்தவர்கள்.மிக மிக நல்லவர்கள்.அப்பா ஓய்வுபெற்ற உயர் அரச அதிகாரி,மிகவும் பக்குவமாய் பழகும் எளிமையான மனிதர்.அம்மா ஒரு பாரிசவாத நோயாளி ,அவ கதைப்பது குறைவு. அம்மாவின் பராமரிப்பை இறுதிவரை அப்பாவே செழுமையாய் செய்துவந்தார்.அம்மாவிற்கு நாளுக்கு நிறைய மருந்து குளுசைகள் எடுக்கவேண்டியிருக்கும்.அப்பா நேரம் தவறாமல் கொடுப்பார்.அப்பா ஒரு கடவுள் பக்தர்.அவர் வல்வெட்டித்துறை சிவன்கோயிலுடன்  தொடர்புடைய பரம்பரையைச் சேர்ந்தவர்.அந்தக்கோயிலின் மலர் (புத்தகம்)ஒன்றை உறையெல்லாம் போட்டு கொண்டுவந்து தந்தார்.கவனமாய் வாசித்துவிட்டு தருமாறு.எனது வேலைப்பளுவால் என்னால் அந்த புத்தகத்தை வாசிக்கமுடியவில்லை.கவனமாய் திருப்பி கொடுத்துவிட்டேன்.

 

2007 ஆம் ஆண்டு ஒரு நாள் காலை வழமை போல் விடிந்தது.அன்று நான் எனது சிறு அணியுடன் மாங்குளம் போய் மல்லாவி போகவேண்டும்.வாகனத்தில் ஏறி டயரியை பார்த்துக்கொண்டிருந்தேன்.சாரதி வாகனத்தை எடுக்கவும் ஒரு போராளி வந்து வாகனத்திட்கருகில் நிற்கவும் சரியாய் இருந்தது.என்ன என்று வினவ ,அவன் அண்ணையின் அப்பா அம்மா வந்திருப்பதாய் சொன்னான்.வழமையாய் அறிவித்துத்தான் வருவார்கள்.அன்று திடீரென வந்திருந்தார்கள்.நான் இறங்கினேன் .கிளிநொச்சி மாவட்டப் பொறுப்பாளர் சொன்னார் நேரம் போயிடும் தாங்கள் போயிட்டு வாகனத்தை அனுப்பிவிடுவதாய் ,நான் ஆம் சொல்லி இறங்கிப்போனேன். அன்று எனது வாகனம் கிளைமர் தாக்குதலில் அகப்பட்டுக்கொண்டது.

 

  2008 ஆம் ஆண்டு ஒரு நாள் சந்திக்கும்போது அப்பா மிகவும் சந்தோசமாய் இருந்தார்.அண்ணை தற்செயலாய் வீட்டை வந்திருக்கிறார் அன்றைக்கு அப்பான்ர பிறந்த நாள் , அக்கா சொல்லித்தான் அண்ணைக்கு தெரியும்.அண்ணை கேக் வீட்டை இருக்கோ என்று அக்காட்ட கேட்டிருக்கிறார்.அக்கா தேடி ஒரு துண்டு கேக்கை குடுத்திருக்கிறா.அண்ணை அப்பாவின்ர ரூம் தேடிப்போய் அப்பாவிற்கு கேக் தீத்திவிட்டிருக்கிறார்.அப்பா சிரிச்சு சிரிச்சு சொன்னார்.கண்ணாலயும்

ஆனத்தக்கண்ணீர் வந்திருந்தது.  

 

1970 களில போலிஸ் அண்ணையை தேடி வீட்டை வரத்தொடங்கிச்சாம் , அப்ப அப்பா அண்ணையிட்ட சொன்னாராம்.துரை நீ வீட்டை வராத உன்னால மற்றப்பிள்ளைகளுக்கும் பிரச்சனை,அண்ணையின்ர வீட்டுப்பெயர் துரை .அண்ணை அப்பாவை ஐயா என்றுதான் கூப்பிடுவார்.அப்பா சொன்னதுக்கு அண்ணை ஒன்றும் கதைக்கவில்லையாம் தலையாட்டிட்டு போனாராம். அண்ணை பிறகு ஒரு நாளும் வீட்டை வரயில்லையாம்.இந்தியாவில்தான் ஒருக்கா சந்திச்சாராம்.அண்ணை சொல்வதை செய்வார் என்ற நம்பிக்கை அந்த தந்தையிடம் இருந்தது. 

 

2009 ஆம் ஆண்டு வைகாசி மாதம் பதின்நான்காம் திகதி சாமம் ஒரு சந்திப்பு முடித்து ( முள்ளிவாய்க்காலில் ) நடந்து போய்க்கொண்டிருந்தேன்.அப்போது ஒரு போராளி சொன்னான் அப்பாவும் அம்மாவும் அந்த பங்கருக்குள்ள இருக்கினம் என்று.அவர்களுடன் செஞ்சோலையில் நின்ற பெண்ணொருவரும் இருந்தார்.அப்பாதான் கொஞ்சம் கதைத்தார்.நான் இறுதியாய் விடைபெற்றுச் சென்றேன்.

 

- ஓவியன்-    

Link to comment
Share on other sites

என்னென்னவோ எல்லாம் நடந்துவிட்டது.. அனுபவப்பகிர்வுக்கு நன்றிகள் லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுவரை கேள்விப்பட்டேயிருக்காத அனுபவங்கள் உங்களிடமிருந்து வருகின்றது, லியோ!

 

வரலாற்றின் தேவை கருதி, இவை ஆவணப்படுத்தப்பட வேண்டும் என்பது எனது தனிப்பட்ட அபிப்பிராயம்!

 

யாழின் ஆவணப்பக்கத்திற்காவது, சம்பந்தப்பட்டவர்கள் நகர்த்திவிட்டால் நல்லது! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ராஜு அண்ணை, அண்ணையின் விஞ்ஞான  எதிர்பார்ப்புகளை செய்து முடிப்பவர் / முடிக்க சதா முயல்பவர் என்றால் அது மிகையாகாது என்று நினைக்கின்றேன்.ராஜு அண்ணை நான் இயக்கத்தில சந்தித்தவர்களில் வித்தியாசமானவர்.ஒரு அதிவேக மூளையின் சொந்தக்காரன். எதைப்பார்த்தாலும் ஆக்கிவிடுவேன் என்னும் செயல்வீரன்.இயக்க வளர்ச்சியில் இவர் பங்கு அளப்பரியது. இவர்  ராதா அண்ணை மீது தனி மதிப்பு வைத்திருந்தார்.ராதா அண்ணை என்றவுடன் பலருக்கு ஐ சே போட்டு கதைக்கிறதுதான் ஞாபகம் வரும் ,பாலா அண்ணையும்  ஐ சே போட்டு கதைக்கிறவர்.

தொண்ணூற்றி நான்காம் ஆண்டு நானும் ராஜு அண்ணையும் ஒரு பணிக்காக இரண்டு கிழமைகள் வன்னியில் நின்றோம்.அப்போது அநேகமாய் முத்தையன்கட்டு குளத்து மீன்தான் அடித்தோம்.யாழ்ப்பாணம் வந்து ஒரு கிழமையால எனக்கு நெருப்புக்காய்ச்சல் தொடங்கிற்றுது . பதினொரு நாள் அவசரசிகிச்சைப் பிரிவில் இருந்து மீண்டுவந்தேன்.ராஜு அண்ணைக்கு ஒரு பிரச்சனையும் இல்லை.என்னை இருதடவைகள் மருத்துவமனைக்கு வந்து பார்த்துப்போனார்.

ராஜு அண்ணைக்கு புற்று நோய் என்றவுடன் நம்பமுடியாமல் இருந்தது.ராஜு அண்ணையின் நிறை எப்பவுமே அறுபத்தி எட்டு கிலோதான் ( புற்றுநோய் அடையாளப்படுத்தப்படும்வரை  ). ராஜு அண்ணை ஒரு சாம்பல்நிற ஸ்கூட்டர் வைச்சிருந்தவர்.அதில அவர் ஓடுறதில்லை பறக்கிறது கண்ணுக்கு முன்னால தெரியுது.

ராஜு அண்ணை கல்யாணம் கட்டின பிறகும் வீட்டில நிற்கிறதில்லை. ராஜு அண்ணையின் மனைவியும் ஒரு போராளி,இறுதி யுத்தத்தில் கடல் சண்டையில் ஒரு கொமாண்டராய் வீரச்சாவு அடைந்தார்.ராஜு அண்ணை தாங்கள் வீட்டை நிற்போம் வாங்கோ என்று கல்யாணம் கட்டின புதிதில் ஒருநாள் சொன்னார்.அப்போது அவர்கள் ஒட்டிசுட்டான் புதுக்குடியிருப்பு பாதையில் ஒட்டிசுட்டானுக்கு அருகாமையில் இருந்தார்கள்.நான் போனவுடன் பிளேன்ரி தந்தார்கள்.வீட்டில்  ஆட்கள் வசிக்கக்கூடிய சாமான்கள் இருக்கவில்லை.பிளேன்ரியை நான் கதைத்து கதைத்து ஆறுதலாய் குடித்துக்கொண்டிருந்தேன்.ராஜு அண்ணை சொன்னார் விரைவாய் குடிச்சிட்டு தேத்தனிக்கோப்பையை  தாங்கோ, கங்கா சோற்றுக்கு அரிசி போட இந்தக்கோப்பையைத்தான்  பார்த்துக்கொண்டிருக்கு.

 நான் வன்னேரிக்குளம் என்ற கிராமத்தில் தங்கியிருந்தேன்.ஒரு நாள் அதிகாலை ஆறு மணிக்கு ராஜு அண்ணை பிக்கப்பில் வந்தார்.எல்லோருக்கும் பிளேன்ரி கொடுத்தோம்.எங்கட முகாமில் ஒரு புது மேசைப்பந்து மேசை போட்டிருந்தோம்.வாங்கோ கொஞ்ச நேரம் விளையாடுவோம் என்று கூப்பிட்டார்.விளையாட்டு தொடங்க எனக்கு இப்படி ஒன்று வாங்கித்தருவீங்களா?என்று கேட்டார்.நான் ஆம் என்றேன். சிறிது நேரத்தில் இந்த மேசை வேண்டாம் இதை நான் செய்வேன்.நீங்கள் மிகுதியை வாங்கித்தாங்கோ என்றார்.பிறகு கொஞ்ச நேரம் செல்ல உந்த நெற்றும் தேவையில்லை என்றார்.கொஞ்ச நேரத்தால ரக்கட்டும் தேவையில்லை பந்துமட்டும் வாங்கித்தந்தால் சரியென்றார்.மிச்ச    மெல்லாம் நான் செய்திடுவன் என்றார்.விளையாடிமுடிய சொன்னார் பந்து தாங்கள் செய்வம் ஒன்றும் தேவையில்லை என்றார். 

 

- ஓவியன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ!

Link to comment
Share on other sites

ராஜு அண்ணையின் இயற்பெயர் நேமிநாதன் என முடியும் என நினைக்கிறேன்.. விடாமுயற்சியுடன் கருவிகளை ஆக்குபவர் எனக் கேள்விப்பட்டுள்ளேன்.. பகிர்வுக்கு நன்றி லியோ..

Link to comment
Share on other sites

மிக ஆக்கபூர்வமான எங்கும் அறியாத பதிவுகள் .

தொடருங்கள் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

திலீபன் எப்போதும் முன்னுதாரணப் போராளி ,அப்போது பல போராட்ட இயக்கங்கள் இருந்தன.எல்லா இயக்கங்களிலும் மக்கள் அவரவருக்கு கிடைத்த தொடர்புகளின்படி / நம்பிக்கையின் படி இனத்திற்கு விடுதலை பெறும் அவாவுடன் போராளிகளாய் இணைந்தார்கள்.புலிகள் இயக்கத்திலும் பலர் இணைய வந்தும் அவர்களை உடனடியாய் உள்ளீர்த்து பயிற்சி கொடுக்க இயக்கத்திடம் பொருளாதாரப்பலம் இருக்கவில்லை.அதனால் எங்கள் தொடர்பில் இருந்த பலர் மற்றைய இயக்கங்களுடன் இணைந்தனர்.

பல இயக்கங்கள் இருந்தமை எங்கள் இனத்தின் விடுதலைப்பலத்தை மிகவும் பாதித்தது.துரதிஷ்டவசமாய் ஒற்றுமை சாத்தியப்படவே இல்லை.

இந்தியா எப்போதும் தனது தேவைக்காய் எங்களைப்பிரித்தும் ,தன் நலத்தையே கையாண்டு வந்தது.எண்பத்தி ஐந்தாம் ஆண்டில் ஒருநாள் திலீபன் சொன்னார் இந்தியா ஆமி இலங்கைக்கு வரும்  அவங்கள் போராட்டத்தை உய்யவிடமாட்டாங்கள். எனக்கு அப்போது அதை சரியாய் புரிந்துகொள்ளும் அறிவு இருக்கவில்லை.

எங்களது சகோதரர்கள்/நண்பர்கள்தான் அடுத்தடுத்த இயக்கங்களில் இருந்தார்கள். திலீபனுக்கு பல இயக்க மாவட்ட மட்ட பொறுப்பாளர்களுடன் நல்ல உறவு இருந்தது.பலமான ஒரு இயக்கம் யாருடைய கைப்பொம்மையும் இல்லாமல் இருப்பதே விடுதலைக்கு தேவையானது.அதனால் பிற இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.பல மற்றைய இயக்கப்போராளிகள் தனித்தனியாய் எங்களுடன் இணைந்துகொண்டார்கள்.

எங்களுடைய இயக்கத்தில் இருந்திருந்தாலும்,மற்றைய இயக்கத்தில் இருந்திருந்தாலும் எதிரியோடு நிற்பவர்கள் மட்டும் தான் துரோகிகள்.   

கிட்டண்ணா மீதான கைக்குண்டு தாக்குதலின் பின் அருணா அண்ணாவின் நடவடிக்கையால் மற்றைய இயக்கப்போராளிகள் கொல்லப்பட்டார்கள்.அருணா அண்ணை இயக்கத்தின்ர முக்கியமானவராய் இருந்தும் ,இந்தியன் ஆமிக்கு எதிரான நடவடிக்கையில் வீரச்சாவு அடைந்தும் அவர் மாவீரர் பட்டியலில் இறுதிவரை இணைத்துக்கொள்ளப்படவில்லை.    

தலைவர் மனதிலும் கவலைகள் இருந்தன.அவர் எப்போதும் விடுதலை என்ற இலக்கை நோக்கியே செயட்ப்பட்டுக்கொண்டிருந்தார்.அவர் தன்னை எப்போதும்  மக்களில் ஒருவனாகவே எண்ணிக்கொண்டார்.

ஒரு போராளிகளின் திருமண நிகழ்வின் போது  அந்த மணப்பெண்ணின் தந்தை,வல்வெட்டித்துறையை சேர்ந்தவர்,அவர் அண்ணை சிறுவனாய் இருக்கும்போது கண்டிருக்கிறார்.அண்ணையை கண்டு கதைத்துக்கொண்டிருன்தவர்.திடீரென அண்ணையின் காலில் வீழ்ந்து கும்பிட்டார்.அண்ணை ஐந்து அடி பின்னகர்ந்துவிட்டது.அண்ணைக்கு அது பிடிக்கவேயில்லை.

 

ஓவியன்    

Link to comment
Share on other sites

திலீபன் காலத்து அனுபவங்களையெல்லாம் எழுதுவதால்... பகிர்வுக்கு நன்றி லியோ அண்ணா..! :rolleyes::D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் எளிமையாக எழுதிக்கொண்டு போறீங்கள் . ஒரு பரவசத்தோடு வாசித்துக் கொண்டு போகக் கூடியதாய் இருக்கு !

தொடருங்கள் லியோ , வாழ்த்துகள் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 இந்தப்  பதிவுகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்பட வேண்டியவை லியோ 

தொடர்ந்தும் எழுதுங்கள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
காலில் விழுந்து கும்பிடுபவரே கவிப்பதிலும் முன்னுக்கு நிற்பார்கள் என்பதால் தலைவர் விலகி இருப்பார்...தொடருங்கள் லியோ
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 தொடர்ந்து எழுதுவதற்கு நன்றி லியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மருதங்கேணி,புத்தன்,சுமே,இசை,விசுகு,புங்கை,அலை,விசுகு,இசை,அர்ஜுன்,இசை,சுவி,அலை,வாத்தியார்,ரதி,சுமே வருகைக்கும்,ஊக்கமிடலுக்கும் மிக்க நன்றிகள்  


எண்பத்தியாறாம் ஆண்டு ஒரு வேலைத்திட்டமாய் சாவகச்சேரிக்குப்போனேன்.நான் அங்கு இரண்டு வாரம் தங்கி

அவ்வேலைத்திட்டத்தை செய்யவேண்டும்.சாவகச்சேரி மருத்துவமனைக்கு சற்று  தள்ளிய முன் ஒழுங்கையில் (ரெயில் தண்டவாளத்தைத் தாண்டி) கொஞ்ச தூரத்தில் வலப்பக்கமாய் அந்த முகாம் இருந்தது.அந்த முகாமுக்கு போய்ச்சேர அங்கு எவரும் தெரிந்த

முகங்களாய் இலலை.அந்த வேலைத்திட்டத்தை நிர்வகிப்பவர் எனக்குரிய

அடிப்படை வசதிகளை செய்து தந்து ,அன்றே வேலைத்திட்டம் நடக்கும்

இடத்திற்கும் கூட்டிப் போய் வந்தார். அந்த வேலைத்திட்டம் பெரிய முக்கிய வேலைத்திட்டம் இலலை.அது ஒரு சாதாரண வேலைத்திட்டம்.நானும் ஒரு சாதாரண போராளி. அந்த முகாமில் ஒரு பத்துப்பேர்தான் இருந்திருப்பார்கள் .அந்த முகாமில் ஒரு மேசையில் கரம் போட் இருந்தது.அது எப்போதும் பிஸியாய் இருக்கும்.

அதைவிட ஆறு ஏழு கதிரை இருக்கும்.ஒரு கட்டில் இருந்தது. மற்றம்படி பெரிதாய் சொல்ல ஒன்றும் இல்லை. போராளிகளின் துப்பாக்கிகள்தான்.

இரவு படுக்கும் போது சென்றி போட்டார்கள். என் பெயரையும் போடச்சொன்னேன் .அது சரியில்லை என்றிட்டார்கள். விறாந்தையில் கரைப்பக்கமாய் பாய் போட்டுவிட்டார்கள்.நடுவில போட்டால் ஆட்களை சென்றிக்கு உலுப்பி எழுப்பைக்க உங்களுக்கு சிவராத்திரி ஆயிடும் என்றார்கள்.    

படுத்து நான் நித்திரையாய் போயிட்டன்.யாரோ வந்து என்னை தட்டி எழுப்பிச்சினம் .நான் என்னடா என்று யோசிச்சன் சென்றிக்குத்தான் மாறி எழுப்புறாங்களோ? எதுவும் புரியயில்லை.அண்ணை வந்து அந்த கட்டில்ல படுங்கோ .இல்லை நான் இதில படுக்கிறான்.ச்சீ அதுல வந்து படுங்கோ .

இதுக்கு மேலயும் ஒன்றும் செய்யேலாது.நான் போய் படுத்து நித்திரையாகிட்டன்.காலமை எழுந்து பல்லுத்தீட்டைக்க இரவு என்னை நித்திரையால எழுப்பினவர் வந்தார்.நல்லா கதைத்தார்.இடைக்கிடை தனது தோளை உயர்த்திப்பதிக்கும் பழக்கம் இருந்தது.ஏதாவது தேவை என்றால் கேளுங்கோ என்றார்.அவர் விடை பெறும்போது கேட்டேன் நீங்கள் யார் என்று. நான் தான் கேடில்ஸ் என்றார்.

 

 

ஓவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நாங்கள் இரண்டு பேர், இயக்கத்தில சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய்  எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள்  நிலத்தை பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன் கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான் என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும் சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு சிரித்துக்கதைத்தார்(ஒன்றும் தெரியாத மாதிரி). பின் சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.   

 

அந்த ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .  அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன் ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம் கொழுத்தி  சனத்தை சுட்டு,அடிச்சு தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய் மாதிரி திரிஞ்சன்.

 

ஓவியன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் இரண்டு பேர், இயக்கத்தில சேர்ந்த புதிது.எங்களுக்கு குட்டி விலாசம். சாரத்தோட பெக்கி சேட்டுமாய்  எங்களைவிட்டால் ஆள் இல்லை என்றமாதிரி திரிவம்.ஒரே சைக்கிள் அடிதான்.சிலநேரம் திலீபன் பத்து ரூபாய் காசு தரும் .அப்ப ஒரு நெக்டோ சோடா நாலு ரூபாய் ஐம்பது சதம் . ஒரு சோடா வாங்கி இரண்டு பேரும் பிரிச்சு குடிப்பம்.காலமை ஒருக்கா பின்னேரம் ஒருக்கா குடிப்பம்.ஒரு ரூபாயிட்கு கச்சான்தான்.சின்ன சின்ன வேலைத்திட்டங்களாய் பறந்துதிரிவம். நாங்கள் ஒரே திரியிற அழகான கிராமம் ஒன்றில ஒராள அடிக்கடி சந்திப்பம்.அந்த ஆளின்ர சைக்கிளில உமல் பை தொங்கும்.நாங்கள் முறைச்சு பார்க்கிறதை பார்த்திட்டு அந்த ஆள்  நிலத்தை பார்த்துக்கொண்டு போயிடுவார். எங்களுக்கு அவரில சந்தேகம்.எங்களுக்கு என்று வேற வேலைகள் இருந்ததால அவரை பின்தொடர ஏலாமல் போயிற்று.ஆனால் கெதியில அவரை பின்தொடருற திட்டம் இருந்தது.ஒரு நாள் சுதுமலையில ஒரு ஒழுங்கைக்க நின்று திலீபன் உடன் கதைத்துக்கொண்டு நின்றம்.அந்த ஆள் சைக்கிளில வாறார். நாங்கள் இன்றைக்கு சிங்கனை அமத்துவம் என்று மனசுக்குள் யோசித்தம்.திலீபனுக்கு ஆளை காட்டினோம்.திலீபன் தன்ர கரியல் சைக்கிளில் இருந்து மெதுவாய் இறங்கிச்சு .நாங்களும் நினைச்சம் அமத்தத்தான் என்று. திலீபன் இறங்கி அந்த ஆளுக்கு இராஜ மரியாதை.பிறகென்ன அசுரகதியில நாங்களும் சைக்கிளைவிட்டு பாய்ந்தோம்.அவர் ஒரு முக்கிய போராளி திலீபன் அவரை சுருளி அண்ணை என்டு அறிமுகப்படுத்திச்சு.நாங்கள் வழிஞ்சுகொண்டு நின்றம்.சுருளி அண்ணை நன்கு சிரித்துக்கதைத்தார்(ஒன்றும் தெரியாத மாதிரி). பின் சுருளி அண்ணையின் ஆயுதக்கிடங்கு ஒன்று என்ற பொறுப்பில இருந்தது.   

 

அந்த ஆயுதக்கிடங்கைப்பற்றியும் சொல்லோனும் .  அந்த ஆயுதக்கிடங்கு ஒரு ஒதுக்குபுறமான பொது வளவுக்க இருந்தது.இந்த நாசமாய்ப்போவாங்கள் ( எங்கட ஆட்கள்தான்) அதுக்குப்பக்கத்தில வைச்சு இந்தியன் ஆமிக்கு அடியெண்டால் செம அடி.ஆமி பிறகு வந்து சுத்தியிருக்கிற வீடுகள் எல்லாம் கொழுத்தி  சனத்தை சுட்டு,அடிச்சு தங்கட வழமையான வேலையை செய்திட்டு போட்டாங்கள் .நான் மூன்று நாள் குட்டி போட்ட நாய் மாதிரி திரிஞ்சன்.

 

ஓவியன்

ஆண்டனியும்  பாவும்தான்  அந்த வேலையை திரிவார்கள்.

கோண்டாவில் லில்  புலவர் வீடியோ இருக்கும் ஒழுங்கைக்குள் ஒரு வீட்டில் இருந்தார்கள் சிலகாலம்.
நீங்கள் அவர்களில் ஒருவரா?? 
 
சகாதேவன் இவர்களுடன் நெருங்கி இருப்பார்....
Link to comment
Share on other sites

தொடருங்கள் லியோ .

புலவர் வீடியோ ஒழுங்கைகுள் தான்  எனது வீடு இருக்கு .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு , நானும் ஒரு பொறுப்பாளரும் அண்ணையை சந்திக்க போயிருந்தோம்.அண்ணையை சந்திக்கப்போனால் பொதுவாய் அங்கதான் சாப்பாடு.இடியப்பமும் சொதியுமென்றாலும் அந்த மேசைச்சாப்பாடு ஒரு தனி ரகம்தான்.கொத்துரொட்டி போட்டாலும் மூன்று நாலு வகைகள் இருக்கும்.அண்ணையை யார் சந்திக்கப்போயினமோ பொதுவாய் அவைக்கு விருப்பமான சாப்பாடுதான் இருக்கும்.சிலர் வருகினமென்றால் கட்டாயம் பன்றிக்கறி இருக்கும். எனக்கு அன்று பல்லுப்பிரச்சனை அண்ணை பிடிச்சிட்டுது.அன்றைக்கு சோறும் மாட்டிறைச்சி கறியும் கத்தரிக்காய் பால்கறியும்தான்.  நான் இறைச்சி சாப்பிட கஸ்டப்பட்டேன்.அண்ணை தான் சாப்பிட்டுக்கொண்டே இடைக்கிடை நல்ல இறைச்சி தேர்ந்து எனக்கு போட்டுக்கொண்டிருந்திது.எனக்கு சரியான கஸ்டமாய் இருந்திது.

பொறுப்பாளர் அவருடைய துறையின் கீழ் உள்ள ஒருபிரிவு ஆரம்பித்து பத்து வருடங்கள் ஆகிறதாம்.அந்தப்பிரிவு ஒரு மலர் செய்யவிரும்புவதாகவும் சொல்லி,அந்தப்பிரிவின் ஆரம்பகால பொறுப்பாளர் இயக்கத்தில் இருந்து விலத்தியுள்ளதால் அவரின் பெயரை பயன்படுத்தலாமா என்று கேட்டார்.அப்போது அண்ணை உடனடியாய் பதில் சொன்னார்.அப்ப நீங்கள் என்ன பொய் வரலாறோ எழுதப்போறியள்?.

அண்ணை எப்போதுமே தெளிவானவர். பின் ஒரு தடவை ஒருவர் அண்ணையுடன் கதைக்கும் போது மாத்தையா அண்ணையை மாத்தையா என்று கூறினார். அண்ணை உடனடியாய் மாத்தையாவை விட உமக்கு வயசு கூடவோ?என்று கேட்டார்.

 

ஓவியன்

         

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாசிக்க  ஆர்வமாக இருக்கு

Link to comment
Share on other sites

கற்பனையில் பத்திரிகைகளில் எழுதப்படும் செய்திகளைவிட, நாலே வரிகளானாலும் படித்துச் சிந்திக்கத்தக்க தகவல்கள்.. நன்றி லியோ அண்ணா..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.