Jump to content

சின்ன சின்ன ஞாபகங்கள்


Recommended Posts

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தொண்ணூறுகளின்ற  ஆரம்ப காலம், யாழ்ப்பாணத்தில ஒரு அழகான கிராமத்தின்ர மூன்று சிறு ஒழுங்கைகள் சந்திக்கும் சந்தியில் சைக்கிளில்  நின்று நாங்கள் மூவர் கதைத்துக் கொண்டு இருந்தோம். மூன்று பேரும் ஒவ்வொரு பாதையால் வந்ததால் அந்த இடம் எங்களுக்கு பொதுப்புள்ளியாயிற்று.அப்போது ஒருபாதையால் ஒருவர் சைக்கிளில் பாட்டோடு வந்து கொண்டிருந்தார்.சைக்கிள் இரண்டு பக்க பனைவேலியையும் மாறி மாறி தொட்டுக்கொண்டுவந்தது.அவருக்கு வெறி என்பதை நாங்கள் ஊகித்துக்கொண்டோம்.நான் மற்றவர்களை அவதானமாய் தள்ளி நிற்கச்சொன்னேன். அவரி வாயில் இருந்து "ராஜாதி ராஜன் இந்த ராஜா ராஜா" என்ற பாடல் ராகமாய் போய்க்கொண்டிருந்தது.

சந்திக்கு கிட்ட வரவும் அவரை துரத்தி வந்த நாய் அவரில பாயவும் சரியாய் இருந்தது.ஒரு கொஞ்ச நேரத்தில உருட்டி உருட்டி கடிச்சுப்போட்டுது.அவர் உடுத்திருந்த சாரம் கந்தலாய்ப்போயிற்று. நாங்கள் மூன்று பேரும் சேர்ந்து கத்தினம் நாய் விட்டிற்று போயிற்று.அந்த மனிதனைப்பார்க்க பாவமாய் இருந்தது.அயல் சனங்களும் வந்திற்றுது.நாங்கள் வந்த சனங்களை வீடுகளுக்கு திருப்பி அனுப்பிட்டு ,அயல் வீடு ஒன்றில பழைய சாரம் வாங்கி அந்த ராஜாவுக்கு கொடுத்தம்.

அந்த ராஜா மீண்டும் இந்தப்பாட்டோட போனார்.ராஜா என்பார் மந்திரி என்பார் ராஜ்ஜியம் இல்லை வாழ,ஒரு ராணியும் இல்லை ஆள---  என்ற பாட்டோட போனார்.

 

நான் அவரை மீண்டும் எதிர்பாராது வன்னியில் கண்டேன்.அதுவும் இயக்க நிறுவனமொன்றில் ஊழியராய்.அவர் என்னை அடையாளம் கண்டதை நான் உணர்ந்துகொண்டேன்.நான் அவரை அடையாளம் கண்டதாய் அவர் இறக்கும்வரை காட்டிக்கொள்ளவில்லை.அவர் ஒரு சிறந்த அர்ப்பணிப்புமிக்க ஊழியராய் இருந்தார்.கைவேலியில் காயமடைந்த மக்களை வாகனத்தில் ஏற்றிக்கொண்டு இருக்கும்போது செல்தாக்குதலில்

உடல் சிதறி இறந்து போனார்.அவரது தலையையும் இரு பாதங்களையும் ஒரு பலாமரத்துக்கருகில் புதைத்தோம்.புதைகுழியிட்குள் ஒரு மூக்குப்பேனியையும் அடையாளத்திட்காய் வைத்தோம்.உறவினர்களுக்கு

அவர் இறந்ததை அறிவிக்கமுடியவில்லை.           

 

  • ஓவியன் -
Link to comment
Share on other sites

  • Replies 148
  • Created
  • Last Reply

பதிவுக்கு நன்றி லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ம் .... என்னத்தைச் சொல்ல தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண?? :(

 

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள் லியோ அண்ணா :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புங்கை,ரதி,அபராஜி,இசை,சுமேரியர்,ஜீவா தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனதைக் கனக்க வைக்கும் பதிவுகள், எப்படி லைக் பண்ண??  :(

 

ஆவணமாக்கப்பட வேண்டியவை. பகிர்வுக்கு நன்றிகள்

தொடருங்கள்  லியோ  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

Link to comment
Share on other sites

உங்கள் ஆக்கங்களை தொடர்ந்து வாசிக்கின்றனான் ,நன்றி லியோ தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

 

 

 

-  ஓவியன்-

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நடேசன் அண்ணை  போராளிகளின் சிவில் பிரச்சனைகளுக்கான விசாரணைக்குழுவிற்கும்  பொறுப்பாக இருந்தார்.நான் அந்தக்குழுவில் ஒருவனாய் இருந்தேன். மாதத்திற்கு ஒரு தடவை அல்லது இருதடவை சந்தித்து முடிவுகள் எடுப்போம்,/ விசாரனைகளை செய்வோம்.எங்களுடைய பரிசீலனைக்கு ஒரு கடிதம் வந்திருந்தது.அது ஒரு பெண்ணிடம் இருந்து வந்திருந்தது.அந்தக்கடிதத்தில் இயக்கத்தின்ர ஒரு பிரிவில் சாரதியாக இருக்கும் ஒருவரின் பெயரை குறிப்பிட்டு அவர் தன்னை இரு வருடங்களாய் காதலித்ததாயும் தற்போது திருமணம் செய்ய மறுப்பதாயும் தனக்கு உதவுமாறும் கோரப்பட்டிருந்தது. அந்தப்பெண்பிள்ளையின் குடும்பமும் வறுமை நிலையில் இருந்தது.

நாங்கள் அப்போராளியின் தனி நபர் கோவையை பார்த்தபோது அதில் அவர் யாரையும் காதலிப்பதாய் குறிக்கப்பட்டிருக்கவில்லை.நாம் அந்த போராளியை வரவழைத்து அவர் மீது வந்த புகாரை தெரிவித்து பூரண விளக்கத்தை கடிதம் மூலமாய் தருமாறு கோரினோம்.  

அவர் காதலித்ததை ஏற்றுக்கொண்டு ,திருமணம் செய்ய மறுத்திருந்தார்.

அவர் மறுத்தலுக்கான காரணம் அந்தப்பெண்ணின் சகோதரன் இந்திய ஆமியுடன் சேர்ந்தியங்கிய மாற்றுக்குழுவில் இருந்து புலிகளுடனான மோதலில் இறந்ததாகவும் சொல்லப்பட்டிருந்தது.அது தனக்கு அண்மையில்த்தான் தெரிந்ததாகவும் எழுதியிருந்தான்.நாங்கள் அந்தக்காரணத்தை ஏற்கமுடியாது நீர் திருமணம் செய்யவேண்டும் என்று கூறினோம்.அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.அதனால் அண்ணையிடம்

இப்பிரச்சனையை கொண்டுபோனோம்.அண்ணை உறுதியாய்ச் சொன்னார் அந்தப்போராளி இணங்காவிடின் அவரை இயக்கத்தில் இருந்து நிறுத்தி குற்றத்திற்கு உரிய தண்டனையை வழங்குமாறு சொன்னார். அந்தப்பெண்பிள்ளைக்கும் இயக்கநிறுவனம் ஒன்றில் வேலைக்கு ஒழுங்குசெய்து குடும்ப வறுமையை தீர்க்குமாறும் கூறினார்.அண்ணை கூறியது போன்றே எல்லா நடவடிக்கையும் எடுக்கப்பட்டன. 

 

  • ஓவியன் -   
Link to comment
Share on other sites

சுவாரசியமான அனுபவப்பகிர்வுகள்.. தொடருங்கள் லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆயிரத்து தொளாயிரத்து தொண்ணூற்றி ஆறாம் ஆண்டு அண்ணையோடு கதைத்துக்கொண்டு இருந்தோம்.அப்பொழுது கிரிக்கட் பற்றி கதை தொடங்கிற்று.தமிழேந்தி அண்ணைதான் ஆரம்பித்துவைத்தார்.தமிழேந்தி அண்ணை ஒரு இந்திய அணி ஆதரவாளர்.அதிலும் டெண்டுல்காரின் விசிறி .அந்த நேரம் இலங்கைக்கும்

அவுஸ்திரேலியாவிட்கும்  போட்டி நடக்கயிருந்தது.தமிழேந்தி அண்ணை

அண்ணையிட்ட சொன்னார் " தம்பி சொர்ணம் இலங்கை அணியின்ர ஆதரவாளர்" . சொர்ணம் அண்ணையிட்ட சொல்லிச்சு அண்ணை சிங்களவன் எப்படியெண்டாலும் எங்களை ஒத்தவன் அவன் அப்படியில்லை.அண்ணை சொர்ணம் சொன்னதை ஆமோதித்தார்.

நான் வெஸ்ட்இண்டீஸ் ஆதரவாளன்.எனக்கு ஏனோ இலங்கை இந்தியா பிடியாது.ஒவ்வொருத்தர் ஒவ்வொருமாதிரித்தானே.அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ எதுவும் இருந்ததில்லை.அவர் அருகில் இருந்தவர்கள்  சிலர் இன்னும் உயிரோடு அங்கும் இங்கும் இருப்பார்கள்

அவர்களிடம் கேட்டுப்பாருங்கள்.தூரத்தில் இருப்பவர்கள்தான் அவரை நா கூசாமல் விமர்சிக்கிறார்கள்.இனத்தின் விடுதலையும் மேம்பாடும்தான் அவரின் சதா சிந்தனையாய் இருந்தது. அதில் விட்டுக்கொடுப்புகளுக்கு இடம் இல்லை.ஒவ்வொரு போராளியும் மாவீரர் ஆகும்போது அந்த சுமை அவரின் நெஞ்சில் கூடிக்கொண்டே போனது. 

இயக்கத்தின் அரசியல் துறை பொறுப்பாளரின் மனைவி சிங்கள இனத்தை சேர்ந்தவர்.அரசியல் ஆலோசகரின் மனைவி வெள்ளை இனத்தை சேர்ந்தவர்.இன்னுமொருவரின் மனைவி தாய்லாந்தை சேர்ந்தவர்.சில போராளிகள் சிங்கள பெண்களை மணந்திருந்தார்கள்( தேவை கருதியும்,விரும்பியும்).ஒரு தடவை சிங்களப்பெண்ணை மணந்த போராளியொருவன்  குடும்பமாய் வன்னிக்கு வந்திருந்தான்.வரும்போதே அவனது நான்கு வயது பெண்குழந்தைக்கு டெங்கு நோய் இருந்திருக்கிறது.

இங்கு சீரியஸ் ஆகிவிட்டது.பல போராளிகள் அந்த பிள்ளையை எப்படியும் காப்பாற்றிவிட வேண்டும் என்று துடித்தார்கள்.அந்த பிள்ளைக்கு இரத்தம் ஏற்றவேண்டும் ஒரு பொறுப்பாளர் தனது இரத்தத்தை ஏற்றச்சொன்னார் ஆனால் அந்த இரத்தம் பொருந்தவில்லை.இன்னுமொரு போராளியின் இரத்தம் ஏற்றப்பட்டது.அந்த குழந்தை காப்பற்றப்பட்டதுடன் அந்த குழந்தை அந்த மருத்துவமனையில் இருந்து வெளிக்கிட மறுத்தும்விட்டது. குழந்தை பணியாளர்களுடன் மிகவும் ஒட்டிவிட்டது.பின் அந்த குடும்பம் தலைவரை சந்தித்து சிங்கள தேசத்திற்கு போனது. 

 அந்த உன்னத தலைவனை எழுதும் அருகதை எனக்கு கிடையாது.இருந்தும் சிலரின் விமர்சனம் எழுதத்தூண்டுகிறது.

 

 

 

-  ஓவியன்-

 

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்
Link to comment
Share on other sites

தொடருங்கள்  லியோ! இறுதியில் முள்ளிவாய்க்காலில் நடந்ததையும் எழுதுங்கோ. நீங்கள் அங்கு நின்றபடியால் கண்டவற்றை எழுதுங்கோ ( தலைவர் உட்பட)

 

ம்ம்.... நீங்கள் எல்லோரும் பார்க்கிறது விளங்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு,நந்தன்,சுண்டல் ,இசை,சாம்பவி,ரதி,அலை தங்கள் வருகைக்கும் கருத்திடலுக்கும் மிக்க நன்றிகள்  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை. கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை. நீங்கள் தொடருங்கள் லியோ.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தேனொழுக இங்கு விடுதலை பற்றிக் கதைப்பவர்கள் உண்மையானவர்களும் இல்லை.

கதைக்காமல் இருப்பவர்கள் எதிரானவர்களும் இல்லை.

நீங்கள் தொடருங்கள் லியோ.

 

 

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.

இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து

சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),

ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

 

  • ஓவியன் -
Link to comment
Share on other sites

 

இரண்டாயிரத்து நான்காம் ஆண்டு,ஒரு சிறப்பு பயிற்சிமுகாம்.அந்த சிறப்பு பயிற்சி முகாம் வன்னியில் ஒரு காட்டினில் ஆடம்பரமற்றும், அழகாகவும் அமைக்கப்பட்டிருந்தது.அந்த அமைப்பு பணியை முன்னாள் இம்ரான் பாண்டியன் தளபதி ராஜேஸ்தான் செய்துமுடித்திருந்தார். அந்த பயிற்சி முகாமின் பொறுப்பாளராய் தளபதி கடாபி இருந்தார்.நானும் கடாபியும் நல்ல நண்பர்கள் அந்த முகாமில் ஒரே தங்குமிடத்தில் தங்கியிருந்தோம்.காலை ஐந்து மணிக்கு பயிற்சிக்கு எழுந்தால் பயிற்சி முடியும்வரை ஒன்றாகத்தான் திரிவோம்.கடாபி ஆதவன்,3/8 ஆகிய பெயரிலும் அழைக்கப்படுவார்.நான் 3/8 என்றுதான் அழைப்பேன்.முன்பும் ஒரு பயிட்சிமுகாமில் நாங்கள் ஒன்றாக நின்றோம் அப்போது சங்கர் அண்ணாவும் எங்களுடன் இருந்தார்.

இரவு பயிற்சி முடிந்தாலும் கடாபி நிர்வாக வேலைகளை செய்துவர சாமம் ஆகிடும் எனது நித்திரையை குழப்பக்கூடாது என்று லைட் போடாமல் மெதுவாக போய் தனது படுக்கையில் படுப்பார்.போராளிகளுக்கு கண்டிப்பானவராய் தெரிவார்.எங்களுக்கு ஒரு உத்தமராய் தெரிந்தார்.அதித உழைப்பு ,இறுக்கமான நிர்வாகம் அவருடையது.சிறந்த துப்பாக்கி சூட்டாளர். சிறப்பு பயிற்சி முகாமில் ஞாயிறு ஓய்வு நாள்.அன்றும் ஒரு காலை காலை உணவிற்குப்பின் முகாமை சுற்றிப்பார்க்க இருவரும் சென்றிருந்தோம்.எல்லா இடங்களையும் பார்த்து

சூட்டு பயிற்சி நடக்கும் இடத்திற்கு போனோம்.அப்போது நல்ல சூட்டுப்  போராளி ஒருவன் ஒரு துப்பாக்கியை கடாபியிடம் காட்டி இந்த துப்பாக்கி  வலு சீராக்க ( Zero setting )வேண்டும் , சுடுகின்றபோது சரியான விலத்தல் இருப்பதாய் சொன்னான்.  அப்போது கடாபி அந்த குழுவின் தலைவனிடமும் அது பற்றி கேட்டார்.அவனும் ஆமோதித்தான் .இப்போது கடாபி அந்த துப்பாக்கியை வாங்கி எழுபத்தைந்து மீட்டர் தூரத்திலிருந்த ஏழு இலக்குகளுக்கு( Targets) ஒவ்வொரு ரவைகள் படி அடித்தார். போய் அந்த இலக்குகளை பார்த்துவருமாறு அந்த போராளியிடமும்,குழுத்தலைவனிடமும் கூறினார்.  அவர்கள் இருவரும் போய் வந்து முதல் ஆறும் குறிதவறவில்லை (Bபுள்),

ஏழாவது இலக்கில் குறிபட இல்லை என்றார்கள்.அப்போது கடாபி அந்த ஏழாவது இலக்கில் வலது கண்ணை வடிவாய் பார்த்திட்டு வாங்கோ என்றார்.இந்தத் தடவை ஆவலில் நானும் போனேன்.என்ன ஆச்சரியம் வலது கண்ணின் கறுப்புப்புள்ளிக்கூடாக சன்னம் போயிருந்தது.சாதரணமாய் சொன்னார் துப்பாக்கியில பிழை சொல்லாதையிங்கோ. கடாபி மிகச்சிறந்த சூட்டாளன் அதனால்த்தான் இயக்கத்திற்ற இருந்த ஒரேயொரு மக்னம் பிஸ்டலை கடாபியிடம் கொடுத்திருந்தார் தலைவர். 

 

  • ஓவியன் -

 

ஒரு சிறந்த தளபதியை , சிறந்த வீரனை , சிறந்த நண்பனை , சிறந்த சகோதரனை இழந்து விட்டோம். கடாபியாய் , ஆதவனாய் எங்கள் மனங்களில் என்றென்றும் மறக்காத மாவீரனின் நினைவை தந்தமைக்கு நன்றிகள் லியோ அண்ணா.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அனு , அனு  வான ஞாபகங்கள் , அதனால்தான் அதிரவைக்குது !!

Link to comment
Share on other sites

நினைவுப்பகிர்வுக்கு நனறி லியோ..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுமேரியர்,விசுகு,சாந்தி,சுவி,இசை வருகைக்கும் ஊக்கமிடலுக்கும் நன்றிகள்   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

அண்ணையிடம் இனவாதமோ,மதவாதமோ இருந்ததில்லை அது எல்லோருக்கும் தெரிந்த விசயம் ஆனால் தாங்கள் அவர் வழி நடப்போம் என இங்கே இருந்து சொல்லிக் கொண்டு இருப்போரிடம் அது நிறையவே இருக்குது.
 
தொடருங்கள் லியோ நீங்கள் எழுதுவதை வாசிக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும்

 

போராளியாய் இருப்பதற்கும்.

போராளியை ஏற்பதற்கும்.                   இடையில் நிறைய வேறுபாடு உண்டு.
போராளியாய் இருத்தல் என்பது சாதாரண மனிதர்களுக்கு அப்பாற்பட்டது.
சாதாரண மனித வாழ்வு  என்பது.
குடும்பம், கோவில், குளம், சுற்றம் முற்றம், சொந்தம் பந்தம்.
என்று எல்லாவற்றையும் குழைத்து வாழும் ஒரு வாழ்வு.
 
இரண்டையும் போட்டு நீங்கள்தான் குழப்புகிறீர்கள்.
 
அனாவசியமான நம்பிக்கைகள்தான்.
ஏமாற்றத்தை கொடுக்கின்றது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் லியோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது எதற்கு இங்கு சுமே???

உங்களுக்கு எவரையாவது அப்படி தெரிந்தால் அவரைப்பற்றி  நேரடியாக விமர்சியுங்கள்.

அதைவிடுத்து

எல்லோரையும் இது போன்று  ஒரே மட்டைக்குள் போட்டு மூடுவது ஒரு நல்ல பார்வையோ அல்லது உதாரணமோ அல்ல. :(  :(  :(  :(

எமது இனத்துக்கு இருப்பதையும் அழிக்கும் விசம் கொண்டது இப்பார்வை. :(

 

நான் எழுதியதில் எந்தத் தவறு இருப்பதாக எனக்குப் படவில்லை. தொப்பி அளவானவர்கள் போட்டுமே அண்ணா. நீங்கள் ஏன் தொப்பியை எடுத்து வைத்துக்கொண்டு தொப்பி செய்தது சரியில்லை என்கிறீர்கள்.

 தொடருங்கள் லியோ

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.