Jump to content

இலங்கையை புறக்கணிப்போம் !-Boycott Sri -Lanka Campaign


Recommended Posts

இலங்கையை புறக்கணிப்போம் !-Boycott Sri -Lanka Campaign

தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை இனவாத அரசு மேற்கொண்ட இனப் படுகொலைகளும் அதற்கான ஆதாரங்களும் விவாதங்களும் உலக அரங்கில் மிகவும் பரபரப்பாக பேசப் பட்டு வரும் இவ்வேளையில், ஈழத் தமிழ் மக்களுக்கான போராட்டத்திற்கு இன்னும் வலிமை சேர்க்கும் வகையில் தாய்த்தமிழகத்தைச் சேர்ந்த  SAVE TAMILS என்னும்  அமைப்பு   Boycott Sri -Lanka - இலங்கையை புறக்கணிப்போம் என்னும் பிரச்சார போராட்டத்தை தமிழகம் முழுவதும் வெற்றிகரமாக  முன்னெடுத்து வருகிறார்கள்.

 

தாயகத்தில் வாழும் எம் உறவுகளுக்கு பேச்சுரிமை இல்லாத நிலையிலும் அவர்களுக்கான தமிழக, புலம் பெயர்  தமிழ் மக்களது அறப் போராட்டம் இன்னும் இன்னும் பல் மடங்கு பலம் கொண்டு எழும் என்பதை உலகத்திற்கு  இந்த SAVE-TAMILS இளையோர் பறை சாற்றுகின்றனர்.

 

கடந்த கார்த்திகை மாதம், தாயகத்திலிருந்தும், தமிழகத்திலிருந்தும் புலம்பெயர் நாடுகளில் இருந்தும் பல அரசியல் பிரமுகர்களும் தமிழர் அமைப்புகளும் கலந்து கொண்ட  உலகத் தமிழர் மாநாட்டை  பிரித்தானிய தமிழர் பேரவை லண்டனில் ஏற்பாடு செய்திருந்தது. அந்த மாநாட்டில்,இலங்கைக்கெதிராக பல்வேறு வகையிலும் பல திசைகளிலும் அழுத்தங்களை பிரயோகிக்க வேண்டுமென்றும், தாயகத்தில் இடம்பெற்றது ஒரு இனப்படுகொலை என்றும் சர்வதேச சுயாதீன விசாரணை மேற்கோள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .இதன் தொடர்ச்சியாக மேற்படி அமைப்புகளுடன் கலந்தாலோசித்து இந்த தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கான பல்வேறு வேலைத் திட்டங்களை பிரித்தானிய தமிழர் பேரவை தீட்டியது.


அண்மையில் பி.த.பே.விடுத்த வேண்டுகோளுக்கமைய தமிழக அமைப்புக்கள் சிறிலங்காவைப் புறக்கணி, சிறிலங்காவின் பொருட்கள், சுற்றுலா மற்றும் கிரிக்கட் என்பனவற்றைப் புறக்கணி என்ற போராட்டங்களை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளன.

 

இந்த வகையான சிறிய தீப்பொறிகளே,  இன்று தமிழ் நாட்டிலும் உலகளவிலும் பெரியதொரு  தீப்பந்தமாய் உருபெற்று, எங்கள் மேல் கட்டவிழ்த்து விடப்பட்ட இனப் படுகொலையினை உலகத்திற்கு வெளிச்சம் போட்டு காட்ட உதவுகின்றது. இது காலத்தின் அவசியம், இதன் அடிப்படையில் வையகப் பரப்பெங்கும் வாழுகின்ற அனைத்து தமிழ் மக்களும், தமிழ் அமைப்புகளும், தமிழ் நாட்டை சேர்ந்த அனைத்துக் கட்சிகளும்  "Boycott  Sri  Lanka " போன்ற பரப்புரைகளை முன்னெடுக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறோம்.


--

media@tamilsforum.com

 

working together for peace with justice and dignity

Link to comment
Share on other sites

  • 1 month later...
முள்ளிவாய்க்களில் எம் இனத்தை அடித்து கொன்றழித்த சிங்களம் நாடு கடந்தும் அடிக்கிறது என்றால் உலகத்தில் தமிழன் என்ன அனாதையா?  பிரிந்து கிடக்கும் தமிழினமே ஒன்றாக நீயிருந்தால் காலால் உன் தங்கையை,அக்காவை உன் உடன் பிறந்தவளை இப்படி காலால் சிங்களவன் உதைவானா படை பெரிதென்றால் கிட்ட வந்திருக்க மாட்டான் ஒன்றுமை இருந்திருந்தால் இது நடந்திருக்குமா ? ஜனநாயக வழியை சிங்களதேசம் வன்முறை வழியால் எதிர்கிறது. தமிழன் அகிம்சையின் வழிவந்தவன் தீலீபனை ஈன்ற தமிழ் சிங்களவனின் வன்முறைக்கு ஜனநாயக வழியில் மீண்டும் மீண்டும் முறியடிப்போம்.அதற்க்கு எம்மை நாம் தாயார் படுத்த வேண்டும் அதாவது ஒன்றாக நாம் நிற்பதே தயார் படுத்தலாகும். 20ம் திகதி காடிஃப் நகரில் மீண்டும் ஒரு கிரிகெட் போட்டி நடைபெற இருக்கிறது. அதில் இலங்கை அணி விளையாடாவும் உள்ளது. எனவே அதன் முன்னால் மற்றுமொரு பாரிய ஆர்பாட்டம் ஒன்றை நடத்த இளைஞர்கள் முடிவுசெய்துள்ளார்கள். தமிழர்களின் ஒற்றுமை அங்கே பறை சாற்றுங்கள் நாங்கள் வன்முறையாளர்கள் இல்லை சுகந்திர போராட்ட இனம் என்பதை பறை சாற்றுவோம். அமைப்பு பேதமின்றி தமிழன் என்று ஒரு அமைப்பின் கீழ் அணிதிரளுவோம் இதிலும் இணையா தமிழன் எப்போது ஒன்றுபடுவான் தமிழர் நாம் ஒன்றுபட சிங்களம் நேற்று களம் அமைத்து கொடுத்துள்ளது. ஒன்றுபடுவோம்.
 
சரவணை மைந்தன் 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • முஸ்லிம்களை இனவாத பேச்சு பேசியதால் அவர்களின் அரசியல் தலைவர்களின் செல்வாக்கு வேலை செய்துள்ளது  நம்ம அரசியல் தலிவர்கள் ஆளையாள் காலை பிடித்து இழுத்து விட்டுக்கொண்டு இருகின்றனர் சுமத்திரன் எனும் பெருச்சாளி இருக்கும் மட்டும் எமக்குள் இருந்து கொண்டு சிங்கள இனவாதி ரணிலின் மகுடிக்கு சுமத்திரன் எனும் கருநாகம் ஆட்டம் போடுது .
    • அப்ப வருசக் கணக்கா தமிழர்களை.. தமிழர் வழிபாட்டிடங்களை திட்டித் தீர்த்து ஆக்கிரமிக்கத் தூண்டியதற்கு ஏன் தண்டனை இல்லை..??! அதுக்கும் தண்டனை வழங்கினால்.. ஆள் ஆயுள் காலம் பூரா உள்ள தான்.  அதே நிலையில்.. விமல்.. வீரசேகர..கம்பன்பில.. போன்ற வில்லங்கங்களுக்கு எதிராக ஏன் இன்னும் சட்ட நடவடிக்கை இல்லை. தமிழர்களை.. இந்துக்களை (சைவர்களை) திட்டினால்.. சமாளிச்சுக் கொண்டு போவது எழுதாத சட்டமோ. 
    • இது தான் சொறீலங்கா கடற்படை ஆக்கிரமிப்பில் இருக்கும்.. காங்கேசந்துறை நோக்கிய கடற்கரை. அண்ணர் ஆலாபனையோடு சொன்னது.  இது தான் கடலட்டை வாடிகளோடு அமைந்த.. அழுகி நாறும் பண்ணைக் கடற்கரை நோக்கிய தோற்றம். குத்தியரின் சீன ஏற்றுமதி வருவாய். அண்ணர் இதனை பற்றி மூச்சும் விடேல்ல.. ஆனால் பண்ணைக் கடற்கரை காதல் காட்சிகளை மட்டும் வர்ணிச்சிட்டு போயிட்டார். இது தான் கொழும்பின் தாமரைத் தடாகம் இரவுக் காட்சி. அண்ணர் சொன்ன மாதிரி தடாகம் ஒளிந்தாலும் சுற்றயல் ஒளிரவில்லை. இன்னும் பல பகுதி காலு வீதியில் இரவில் வீதி விளக்குகள் எரிவதில்லை.  அதே நேரம் யாழ்ப்பாண நெடுந்தூர பயணிகள் பேரூந்து தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள புல்லுக் குளத்தின் இரவுக் காட்சி. சுற்றயல் எங்கும் ஒளிரோ ஒளிரெண்டு ஒளிருது. யாழ் மணிக்கூட்டுக் கோபுரமும் தான். அண்ணர் அதை பற்றி மூச்.  ஆக அவை அவை பார்க்கிற பார்வையில தான் இங்கு களத்தில் இருந்தான காட்சிகளுக்கு ஆலாபனைகள் வருகின்றன. 
    • நீங்கள், அரச இரகசியங்களை கசிய விடுவதால்.... நாலாம் மாடியில் வைத்து,  கசையடி விழ வாய்ப்புகள் உண்டு. 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.