Jump to content

சிலுவை சுமந்தோர்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரண வீட்டிற்கான அறிகுறி எதுவும் அங்கே இருக்கவில்லை. ஊரே திரண்டு வந்திருந்தாலும்கூட அழுகையோ ஒப்பாரியோ வேறு ஆரவாரச் சத்தமோ இல்லாமல் ஊசி விழுந்தால் கேட்குமளவிற்கு அமைதி உறைந்து போய் இருந்தது.

இடையிடையே விசும்பி விசும்பி அழுகின்ற அம்மாவின் மெல்லிய அழுகையொலியைத் தவிர வேறு சத்தமே இல்லை.

வீட்டின் பெரிய விறாந்தையில் உயரமான ஒரு வாங்கின் மேல் அக்கா கிடத்தப்பட்டிருந்தாள்.

கால்களை ஒன்றின்மேல் ஒன்று வைத்தபடி கைகளிரண்டையும் நீட்டிக்கொண்டு தலை இடதுபுறமாகச் சரிந்து போயிருக்க அக்கா கிடந்தாள்.

முழங்கால்களிலிருந்தும் முழங்கைகளிலிருந்தும் இரத்தம் வழிந்து காய்ந்து போயிருந்தது. உடல் முழுவதும் துப்பாக்கிச் சன்னங்களால் தசை கிழிக்கப்பட்டு தொங்கிக்கொண்டிருந்தது. கூந்தல் இரத்தம் தோய்ந்து சிவப்பு நிறமாய்க் கலைந்திருந்தது. கை, கால் முழுவதும் இரத்தக்கீறல்கள். நான் அக்காவையே வெறித்துப் பார்க்கின்றேன்.

மரண அவஸ்தையை அனுபவித்த வேதனையில் நெற்றி சுருங்கியிருந்தாலும் முகத்தில் அந்தக் குழந்தைத்தனமான மென்மையும் இதழின் ஓரத்தில் மெல்லிய கீற்றாய் துளிர்விட்டிருக்கின்ற புன்னகையும் இன்னமுந்தான் செத்துப்போகவில்லை.

எனக்கு அழவேண்டும்போல இருக்கிறது. கத்திக் குழறி என் துன்பத்தை எல்லாம் கண்ணீராய்க் கொட்டிவிடவேண்டும்போல் துடிப்பு வருகின்றது.

ஆனால் கண்ணீர் வரவில்லை - கண்ணீரும் கூடக் காய்ந்து போயிருக்க வேண்டும்.

ஷஷஎன்ரை பிள்ளை............. என்ரை பிள்ளை............

விசித்து விசித்து அழும் அம்மாவின் ஓலம் மெதுவாகக் கேட்கின்றது.

மின்னாமல் முழங்காமல் இப்படியொரு சாவு அக்காவுக்கு வருமென அம்மா மட்டுமல்ல யாருமே எதிர்பார்க்கவில்லை.

நேற்று............... வெட்கத்துடன் சிரித்தபடி ஷஷஅவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று வீட்டைவிட்டுப் போனவள் செத்த பிணமாகத் திரும்பி வருவாள் என்று யார் எதிர்பார்த்தார்கள்?

இரண்டு மாதத்திற்கு முன்னர் தான் அக்காவிற்கு அந்தச் சம்மந்தம் வந்தது.

வெளிநாட்டில் இருக்கின்ற பக்கத்து வீட்டு வேலுப்பிள்ளையின் மகனிடமிருந்து, தான் அக்காவைத் திருமணம் செய்ய விரும்புவதாயும் விரைவில் அவளைத் தன்னிடம் கூப்பிட இருப்பதாயும் செய்தி வந்த போது வீடே ஒருகணம் பூரித்துக்கொண்டது. அக்கா வெட்கத்துடன் சிரித்துக்கொண்டே வீட்டிற்குள் ஒளித்துக்கொண்டாள். அதற்குப் பிறகு அவளுக்கு வீட்டில் ஆறுதலாக இருக்கப் பொழுதே இருக்கவில்லை. வெளிநாட்டிலிருந்து அடிக்கடி அவளுக்குத் தொலைபேசி அழைப்பு வந்து கொண்டிருந்தது. உரும்பிராயிலிருந்து எத்தனையோ இராணுவக் காவலரண்களைத் தாண்டி யாழ்ப்பாணத்திற்குச் சென்று அவனுடன் கதைத்துக்கொள்வாள்.

ஆரம்பத்தில் அவனுடன் தொலைபேசியில் கதைப்பதற்கு அவள் சம்மதிக்கவில்லை.

ஷஷகலியாணம் கட்ட முந்தி அவரோடை என்ன கதை? நான் கதைக்கமாட்டன்|| என வீராய்ப்பு பேசியவள் தொலைபேசியில் அவனது குரலைக் கேட்டவுடன் பெட்டிப்பாம்பாய் அடங்கிவிட்டாள்.

நேற்றும் அவரோடை ரெலிபோன் கதைச்சிட்டு வாறன் || என்று காலையில் வீட்டைவிட்டு வெளியேறியவள் மதியமாகி மாலையாகி இரவாகிய பின்னும் வீடு திரும்பவில்லை.

அப்பா செய்வதறியாமல் திகைத்துப்போனார். அம்மா ஒப்பாரி வைக்கத் தொடங்கிவிட்டாள்.

ஏதாவது சந்தேகத்திலை ஆமி பிடிச்சிருப்பான். பிரச்சினை இல்லையெண்டால் விடிய விட்டிடுவான். நீங்கள் வீணாய்க் கவலைப்படாதேங்கோ|| எனப் பக்கத்து வீட்டார்கள் ஆறுதல் கூறினார்கள்.

இரவு முழுவதும் யாரும் உறங்கவில்லை.

விடிய - இருள் முற்றாக விலகுவதற்கு முன்பேயே அப்பா அக்காவைத் தேடிப் போய்விட்டார்.

ஊரும்பிராய்ச் சந்தியிலிருந்த முதற் காவலரணில் அக்காவைப்பற்றி விசாரித்தபோது அக்காவலரணைத்தாண்டி அவள் அப்பாலே போகவில்லை என்பது தெரிந்தது.

என்ரை பிள்ளை எங்கை? என்ரை பிள்ளையைக் காட்டுங்கோ|| என அப்பா எத்தனையோ முறை கெஞ்சிக் கேட்டுக்கொண்ட பின்பு தான் ஷஷ உங்கடை மகள் புலி. அதுதான் பிடிச்சது|| என இராணுவச்சிப்பாய் ஒருவன் கூறினான்.

என்ரை பிள்ளை புலியில்லை. வெளிநாட்டுக்குப் போக எண்டு இருக்கின்ற பிள்ளையை நீங்கள் தெரியாமல் பிடிச்சுப்போட்டியள். என்ரை பிள்ளையை விடுங்கோ|| என்ற அப்பாவின் சோகமான கதறல் அம் முகாமின் இராணுவ அதிகாரிக்குக் கேட்டிருக்க வேண்டும். அந்த அதிகாரியின் விசாரணைக்குப் பின்னர் அக்காவின் உடல் வெள்ளைத்துணியால் மூடியபடி அப்பாவிற்கு முன்னர் கிடத்தப்பட்டது.

உங்கடை மகள் புலி. அதுதான் சுட்டுக்கொண்டது||. என்றபடி அந்தச் சிப்பாய் வெளியேறினான்.

அக்கா செத்துப்போய்க் கிடந்தாள். துப்பாக்கிச் சன்னங்கள் அவள் உடலைச் சல்லடையாக்கி இருந்தன. கலைந்து போன தலையும் கிழிந்து போன உடையும் உருக்குலைந்து போன உடலும் வெறும் துப்பாக்கிச் சூட்டுக்கு மட்டும் அவள் துடித்து மாண்டதை புலப்படுத்தவில்லை. அவள் மானபங்கப்படுத்தப்பட்டிருக்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி எத்தனையோ சோகக்கதைகள் எமது மண்ணில் கிருசாந்தி, சாரதம்பாள்,கோணேஸ்வரி..........

Link to comment
Share on other sites

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

Link to comment
Share on other sites

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

Link to comment
Share on other sites

கண்ணீர் சிந்தும் நினைவுகளுடன் எழுதிய உண்மைக்கதை உள்ளத்தை உருக்கிவிட்டது.

இப்படி எத்தனை கொலைகள் :lol:

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைக் கதையை நினைவு படுத்தியிருக்கின்றர் இந்த எழுத்தளார். படையினரால் அநியாயமாக கொல்லப்பட்ட சகோதரிகளுக்குள் ரஐனியும் ஒருவர். கதையை வாசிக்கும்போது கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை.  

இணைப்பிற்கு நன்றி கந்தப்பு.

உரும்பிராயில் நடந்த சம்பவம் உங்களுக்கு நினைவில் வந்திருக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வணக்கம் கந்தப்பு,

இணைப்புக்கு நன்றி,

இதுபோல எங்கள் மண்ணில் அன்னியர் செய்யும் அவலங்களையும். புலம்பெயா மண்ணில் எம்மவர் செய்யும் அநியாயங்களையும் கதைகளாக கவிதைகளாக எழுதப்பட வேண்டும்

அன்புடன்

மணிவாசகன்

எரிமலையில் வந்த மற்றைய கதைகள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12153

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12155

உண்மைச்சம்பவங்கள்

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12156

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12157

http://www.yarl.com/forum3/viewtopic.php?t=12158

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வழக்கமான முட்டுக்கொடுத்தல் இங்கு செல்லாது வழக்கம்போல் கருத்தை எதிர்மறையாக காட்டுவது உங்கள் இயல்பு இது மீராவுக்கு  புரியும் கோசனின் மெயில் ஐடியில் போர்ட்கிள்றது உண்மைகளை சொன்னால் பயந்து ஓடுவது பின் நேரம் கிடைக்கும்போது தலையில் குத்துவது  இது உங்கள் வளமை நான்  எதுக்கும் பயல்வது இல்லை .வெயிட்டிங் ....... உங்கள் ஐடியில்  வந்து ஜெயவாவோ கோசம் போடக்கூடாது இந்த யாழில் அவ்வளவுதான் நான் வருவேன் .
    • ஒரு இனக் குழுமத்திற்கு அரசியக் கட்சியினதோ அல்லது அரசியல்த் தலைமையினதோ தேவையென்ன? அரசியத் தலைமையின்றி அம்மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்க முடியாதா? இதை ஏன் கேட்கிறேன் என்றால், தமிழரசுக்கட்சி இராமனாதனின் கல்லூரியைப் பாதுகாக்கவே யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தை சிறிமா கட்டுவதை எதிர்த்தார்கள் என்று பொய்யான தகவலை இங்கு பரப்புவதால். சுதந்திரத்தின் உடனடிப் பின்னரான காலத்திலிருந்தே தமிழர்கள் அடக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டுத்தான் வருகிறார்கள். யாழ்ப் பல்கலைக்கழகம் 1974 இல் கட்டப்பட்ட ஆரம்பித்தபோது சுமார் 26 வருடகால இனரீதியிலான அடக்குமுறையினைத் தமிழர்கள் எதிர்கொண்டிருந்தார்கள். ஆகவே, தமது நலன்களுக்கெதிராக சிங்கள இனவாத அரசு செய்யும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சியை தமிழர்கள் எதிர்ப்பதற்கு தமிழரசுக் கட்சியின் தூண்டுதல் தேவையானதா? தமிழரசுக் கட்சி தமிழர்களைத் தூண்டியிருக்காவிட்டால் தமிழர்களுக்கு யாழ்ப் பல்கலைக்கழகத்தின் பின்னால் இருக்கும் சூழ்ச்சி தெரிந்திருக்காது என்கிறீர்களா?  தமிழர் ஐக்கிய முன்னணியினர் ஆளும் சிறிமாவின் சுதந்திரக் கட்சியினை கைவிட்டு விட்டு எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியினருடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துவிடுவார்கள், இது தமிழர்களின் வாக்குகள் தனது கட்சிக்குக் கிடைக்காது போய்விடும் என்பதனாலேயே சிறிமா தமிழர்கள் கேட்ட பல்கலைக்கழகம் ஒன்றை கட்டித்தருகிறேன் என்று கூறினார். ஆனால், தமிழர்கள் கேட்டுக்கொண்ட திருகோணமலை பல்கலைக்கழகத்திற்குப் பதிலாக, யாழ்ப்பாணத்தில்த்தான் கட்டுவேன் என்று அவர் அடம்பிடித்தார். இதற்குப் பின்னால் ஒரு அரசியல் சூழ்ச்சி இருந்தது. வடக்குத் தமிழரையும் கிழக்குத்தமிழரையும் பிரித்தாளுவதற்காகவே, திருகோணமலையில் கட்டுவதற்குப் பதிலாக யாழ்ப்பாணத்தில் கட்டுவதற்கு அவர் திட்டமிட்டார். அத்துடன், திருகோணமலையினைச் சிங்களவர்கள் முற்றாக ஆக்கிரமிக்கும் திட்டமும் நடைபெற்றுவந்ததனால், அங்கு தமிழர் பல்கலைக்கழகம் ஒன்றினை அமைப்பதை சிறிமா விரும்பவில்லை.  இராமநாதனின் கல்லூரியின் மாண்பு குறைந்துவிடும் என்பதற்காகவே தந்தை செல்வா தலைமையிலான தமிழரசுக் கட்சியினரே மக்களைத் தூண்டிவிட்டு இதனைத் தடுத்தார்கள் என்று கூறுபவர் அதற்கான ஆதாரத்தை இங்கே முன்வைக்கவேண்டும். வெறுமனே சுதந்திரக் கட்சி ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்தில் சிறிமாவை வரவேற்ற பழைய ஒளிப்படங்களை வைத்துப் படங்காட்டுவது செல்லாது.  ஏனென்றால், இனவழிப்புச் செய்த மகிந்தவுக்கே திலகமிட்டு, ஆரத்தி எடுத்து வரவேற்ற யாழ்ப்பாணத் தமிழர்களையும் பார்த்திருக்கிறோம். தமிழரசுக் கட்சியினர் மீது வெறுப்பா, செல்வா மீது வெறுப்பா, அல்லது அவர்கள் தமிழர்களுக்கு வழங்கிய அரசியல்த் தலைமை மீது வெறுப்பா என்று தெரியவில்லை. இப்போது யாழ்ப்பல்கலைக் கழகம்   தமிழரசுக் கட்சியின் சுயநலத்தால் எதிர்க்கப்பட்டது என்று கூற ஆரம்பித்திருக்கிறார். இனி, செல்வா தலைமையில் தமிழரசுக் கட்சி நடத்திய பேச்சுவார்த்தைகள், வட்டுக்கோட்டைத் தீர்மானம் என்பன குறித்தும் விமர்சனங்கள் வரும். அவையும் தேவையற்றவை, தந்தை செல்வாவின் சுயநலத்தாலும், தமிழரசுக் கட்சியினரின் அரசியலுக்காகவும் செய்யப்பட்டவை என்று கூறினாலும் ஆச்சரியப்படுதற்கில்லை. இதன் முடிவு இப்படித்தான் அமையும். தமிழர்களுக்கென்று போராடுவதற்கான தேவை இருக்கவில்லை. தமிழரசுக் கட்சியோ, அல்லது வேறு அமைப்புக்களோ தமது நலன்களுக்காகவே தமிழர்களை உசுப்பேற்றிவிட்டு போராட அனுப்பினார்கள். ஏனென்றால், தமிழர்களுக்கென்று, அவர்கள் தாமாகவே உணரத்தக்க பிரச்சினைகள் என்று எதுவுமே சிங்களவர்களால் அவர்கள் மீது திணிக்கப்படவில்லை. சிறிமாவின் சுதந்திரக் கட்சியாகட்டும், ஜெயாரின் ஐக்கிய தேசியக் கட்சியாகட்டும் தமிழர்களுக்கென்று பல நல்ல திட்டங்களை அவ்வபோது கொடுத்துக்கொண்டே வந்திருக்கின்றனர். தமிழர்களுக்கு அதனை கேட்டு வாங்கத் தேவையில்லை. இவ்வளவு காலமும் காலத்தை வீணடித்திருக்கிறார்கள். இனிமேலாவது சிங்களவர்களுடன் இணைந்து, எம்மை முன்னேற்றி, இலங்கையர்களாக எம்மை இன‌ங்கண்டு, தனிமனிதர்களாக தக்கவைத்துக்கொள்வோம். இப்படி அறிவுரை கூறும் பரமாத்மாவிற்கு, ஒரு சீடரும் கிடைத்திருக்கிறார். நடக்கட்டும். இறுதியாக, இராமநாதன் கல்லூரிக்குப் போட்டியாக யாழ் பல்கலைக்கழகம் கட்டப்படுவதை எதிர்த்தே தமிழரசுக் கட்சியும், செல்வநாயகமும் தமிழரைத் தூண்டிவிட்டார்கள் என்பதற்கான ஆதாரத்தினை மறக்காமல் இணைத்துவிடவும். புதிதாக நீங்கள் கூறும் வரலாற்றையும் பார்த்துவிடலாம்.    வரலாற்றைத் தவறாகத் திரிபுபடுத்தும் ஒருவரின் பின்னால் ஓடுகிறீர்கள். இவரது சூட்சுமம் உங்களுக்குத் தெரியவில்லையா அல்லது அவர் கூறுவதுதான் உங்களது கருத்துமா? என்னவோ செய்துவிட்டுப் போங்கள். எல்லாரையும் திருத்த முடியும் என்றும் நான் நினைக்கவில்லை. 
    • பெரும்ஸ் @பெருமாள் கடைசியாக சொல்கிறேன். (முன்பும் பல தடவை சொல்லியுள்ளேன்). உண்மையில் ஒரு சகோதரன் போலவே இதை சொல்கிறேன். கருத்துக்களம், திண்ணை இவையிரண்டை தவிர நான் உங்களோடு வேறு எங்கும் தொடர்பு கொண்டதேயில்லை. யாரோ நான் என சொல்லி உங்களை சுற்றுகிறார்கள். அதை அப்படியே விட்டு விடுங்கள். இப்படி செய்பவர்களுக்கு - தயவு செய்து இந்த கறுமத்தை செய்யாதீர்கள்.  இது உண்மையிலேயே ஒரு வகை cyber bullying. உங்களுக்கு இது விளையாட்டாக இருக்கலாம். அவருக்கு அப்படி இல்லை. ————— பெருமாள் - அனைவரினதும் நன்மைக்காக உங்களை கொஞ்ச காலம் எனது இக்னோர் லிஸ்டில் சேர்க்கப்போகிறேன்.  மிகுந்த மன வருத்தத்துடன் நான் இந்த முடிவை எடுக்கிறேன். இது தற்காலிகமானது என நம்புகிறேன். உங்களை சீண்டி விளையாடுவது நான் இல்லை என்பதை விளங்கப்படுத்த எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் உங்களோடு கருத்தே பரிமாறாமல் இருக்க, தொடர்ந்தும் உங்களை யாராவது நான் என சொல்லி சீண்டினால் - அது நானாக இருக்க வாய்ப்பில்லை என புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன்.  
    • மன்னிக்கவும் அதன் பின் ஜெர்மன் காரன் மொசுக்கர் என்ற சுப்பர் அவதாரம் நன்றாக வேலை செய்தது .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.