Jump to content

லண்டன் LLRC க்கு எதிரான தமிழீழத்திற்கான ஆர்ப்பாட்டம்.


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

லண்டனில் இன்று நடந்த LLRC க்கு எதிரானதும் தமிழீழத்திற்கு ஆதரவானதுமான ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு மக்கள் கலந்து கொண்டிருந்தனர்.

 

மேலும் படங்கள்.. தமிழ்நெட்டின் உதவியோடு..

 

05_04_2013_01_103165_445.jpg

 

05_04_2013_03_103173_445.jpg

 

05_04_2013_07_103189_445.jpg

 

05_04_2013_09_103197_445.jpg

 

05_04_2013_02_103169_445.jpg

 

05_04_2013_08_103193_445.jpg

 

மிகுதிப் படங்கள் இங்கே.

 

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=36199

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பலர் வந்தமாதிரித் தெரியவில்லையே.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வழமையை விட அதிகம். கிடைத்த கொஞ்ச நேரத்தில் விசிட் அடிச்சிட்டு வந்திருந்தம். பறவாயில்லை.. இந்தளவாவது வந்திச்சே..! :):icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்!
பிரிட்டனில் ஈழத்தமிழர்களுடன் பாரதிராஜா!


srilanka-06-04-2013-01.jpg

 

65 ஆண்டுகாலமாக தமிழினக் கருவறுப்புச் செயற்பாட்டை மேற்கொண்டு வரும் சிங்கள அரசின் மீது, ஐ நா சர்வதேச சுயாதீன விசாரணையை நடத்த வேண்டும் என வலியுறுத்தியும், தமிழ் ஈழத்திற்கான பொது வாக்கெடுப்பை நடத்தக் கோரியும், தமிழக மாணவர்களின் எழுச்சிக்கு வலுச் சேர்க்கவும், பிரித்தானியாவில் 05.04.2013 வெள்ளிக்கிழமை நடந்த பேரணியில் பல்லாயிரக் கணக்கான மக்கள் எழுச்சியுடன் ஒன்று கூடி பங்கேற்றனர்.

கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் குழந்தைகள், பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள்உட்பட பெருந்திரளானோர் இந்த பேரணியில் பங்கேற்றனர்.

பிரித்தானிய நேரம் மதியம் 2:30 மணியளவில் அகவணக்கத்துடன் ஆரம்பமான எழுச்சிப் பேரணி ஆரம்ப நிகழ்ச்சியை கந்தையா இராஜமனோகரன் தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில்  தமிழின உணர்வாளரும் தமிழ்த்திரைப்பட இயக்குனருமான பாரதிராஜா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ் ஜெயானந்த மூர்த்தி, தமிழ் இளையோர் அமைப்பைச் சேர்ந்த பாரதி ஆகியோர் உரையாற்றினர்.

மேலும் தமிழ் ஈழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த தினேஸ்,  தமிழகத்திலிருந்து வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது.

பாரதிராஜா பேசுகையில், “ஈழம் கிடைக்கும், இனிமேல் தமிழன் என்பவன் ஈழத்தமிழன், இந்தியத் தமிழன், மலேசியத் தமிழன், கனடாத்தமிழன்... பிரித்துப் பார்க்காதீர்கள்.  தமிழன் எல்லோரும் அவன் எங்கிருந்தாலும் ஒரு குடையின் கீழ் இருக்கிறோம்..”.என்று தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து பிரதமர் வாசஸ்தலம் நோக்கி நகரத் தொடங்கிய எழுச்சிப் பேரணி, மாலை 4 மணியளவில் நிறைவு பெற்றது.

நிறைவு செய்யப்பட்ட பொழுது எழுச்சிப் பேரணியில் இழுத்துச் செல்லப்பட்ட சிங்கள அரசின் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் கொடும்பாவியும் எரிக்கப்பட்டது.

நிறைவு நிகழ்ச்சியின் போது தமிழகத்திலிருந்து மாணவரர் பிரிட்டோ வழங்கிய உரையின் ஒலிப்பதிவும் இடம்பெற்றது. தமிழக மாணவர் புரட்சியின் தொடர்ச்சியை இப்பேரணி பறைசாற்றியிருப்பதாகப் பலரும் கருத்துத் தெரிவித்தனர்.

 

http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=96245

Link to comment
Share on other sites

தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் செய்தி-ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி video

 

ஒருங்கிணைப்பாளர்கள், தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அவர்கள் தமிழ்நாட்டில் இருந்து பேரணிக்கு அதரவாக நேரடியாக குரல் கொடுத்தார் தமிழர்களே தமிழர்களின் தலைவிதியை தீர்மானிக்கவேண்டும்.ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரனான தினேஷ் அவர்களின் செய்தி

 

for video 

http://www.vivasaayi.com/2013/04/video_5.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தோற்றாலும் வென்றாலும் அரசியல் தனித்தன்மையோடு தனித்து நிற்கும்.. அண்ணன் சீமானின் முடிவு வரவேற்கத்தக்கது. மேலும்.. மைக் சின்னத்தில்.. சம பால்.. சமூக பகிர்வுகளோடு.. அண்ணன் தேர்தலை சந்திக்க வாழ்த்துக்கள்.  வீரப்பனின் மகளுக்கு அளித்த வாய்ப்பு நல்ல அரசியல் முன்னுதாரணம். வீரப்பன் ஒரு இயற்கை வள திருடல் குற்றவாளி ஆகினும்.. அதில் அவரின் அப்பாவி மகளுக்கு எந்தப் பங்களிப்பும் இல்லாத நிலையில்.. அவர் அரசியல்.. சமூகப் புறக்கணிப்புக்கு உள்ளாவது ஏற்கக் கூடியதல்ல. நாம் தமிழர் அதனை தகர்த்திருப்பது நல்ல முன் மாதிரி. 
    • அப்படி நடந்தால் சீமான் தம்பிகளில் பாதி கீல்பாக்கத்துக்கும் அடுத்த பாதி ஏர்வாடியிலும் தங்களுக்கு தாங்களே கரண்டு பிடித்துகொண்டு நிக்கும்கள் இது தேவையா 😀
    • RESULT 9th Match (N), Jaipur, March 28, 2024, Indian Premier League Rajasthan Royals      185/5 Delhi Capitals.         (20 ov, T:186) 173/5 RR won by 12 runs
    • //நான் ஒப்பிட்டு பார்த்தவரையில் 2016 பிரெக்சிற் பின்னான, 2024 வரையான யூகேயின் வாழ்க்கைத்தர வீழ்ச்சியை விட, குறைவான வாழ்க்கைத்தர வீழ்ச்சியையே 2019இன் பின் இலங்கை கண்டுள்ளது.//   அருமையான மிகச்சரியான ஒப்பீடு.. எனக்கென்ன ஆச்சரியம் எண்டால் விசுகர் போல ஜரோப்பிய அமெரிக்க நாடுகளில் உக்ரேனிய சண்டையின் பின் சுப்பர் மாக்கெற்றுகளில் அரிசி மா எண்ணெய்கூட சிலபல வாரங்களுக்கு இல்லாமல் போனபோதும் வாழ்ந்தவர்கள் பெற்றோல் தொடங்கி அத்தியாவசிய சாமான் வரை அதிகரிக்க சம்பளம் அதுக்கேற்ற மாதிரி அதிகரிக்காதபோதும் வரிக்குமேல் வரிகட்டி குடிக்கும் தண்ணீரில் இருந்து குளிக்கும் தண்ணீர் வெளியால போறது வரைக்கும் குப்பை எறியக்கூட காசுகட்டி வாழ்பவர்கள் ஊரில் சொந்தவீட்டில் கிணத்து தண்ணி அள்ளி குடிச்சு காணிக்க வாற மாங்கா தேங்காவித்து வீட்டுத்தேவைக்கு மரக்கறி தோட்டம்கூட வச்சு வாழும் மக்களை பார்த்து கேட்கிறார்கள் ஒரு ரூபாய் வரவுக்கு அஞ்சு ரூபாய் செலவு செய்து எப்படி வாழ்கிறார்கள் என்று. பொருளாதார தடைக்குள்ள ரயர் எரித்து விளக்கு கொழுத்தி வாழ்ந்த மக்களுக்கு இதெல்லாம் யானைக்கு நுளம்பு குத்தினமாதிரி.. இந்த வருடத்துடன் ஒப்பிடும்போது உண்மையை சொன்னால் ஜரோப்பா நடுத்தர வருமானம் பெறும் மக்கள்தான் இலங்கை மக்களை விட அதிகமாக பொருளாதர பாதிப்பை எதிர்நோக்குகிறார்கள்..
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.