Jump to content

வடகொரியா அணு ஆயுத மிரட்டல்: எதிர்ப்பு ஏவுகணைகளை நிறுத்தியது அமெரிக்கா!


Recommended Posts

அமெரிக்கா பயந்து போனார்கள் போல? :(

Link to comment
Share on other sites

  • Replies 58
  • Created
  • Last Reply

இது எதிர் பார்த்ததுதான். புதிய தலைவர் ஒருபக்கமும் போகமுடியாத்தபடி செய்தவர்கள் தந்தையும் மேற்கு நாடுகளும். இதனால் அவர் ஒரு மிரட்டலை முயன்றார். அதனால் ஒரு புதிய முடிவும் வரப்போவத்தில்லை. முதலில் சம்பந்த பட்ட ஆறு நாடுகளும் நிபந்தனை எதுவும் இல்லாமல் ஒரு தடவை கூட வேண்டும். அதில் யார் முதலில் விட்டுக்கொடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். 

Link to comment
Share on other sites

வடகொரியா அணு ஆயுதத்தை கைவிட மறுப்பு

 

அணு ஆயுதத்தை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம், ஆயுதக் குறைப்பு குறித்து வேண்டுமானால் பேச்சு நடத்தத் தயார் என்று வடகொரியா அறிவித்துள்ளது.

தென்கொரியா மற்றும் அமெரிக்காவுக்கு எதிராக போர் நடத்த வடகொரியா தயாராகி வருவதாலும் கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது. ஏற்கெனவே அணு ஆயுதங்களை வைத்துள்ள வடகொரியா சமீபத்தில் மீண்டும் அணு ஆயுத சோதனை மேற்கொண்டு தனது அணு ஆயுத வலிமையை அதிகரித்துக் கொண்டுள்ளது.

அந்நாடு அணு ஆயுதத்தைப் பயன்படுத்தினால் பேரழிவு ஏற்படும் என்ற அச்சமும் நிலவி வருகிறது. இதனிடையே பிரச்னையை தீர்த்துக் கொள்ள பேச்சு நடத்த வேண்டுமென்று சீனா உள்ளிட்ட வடகொரியாவின் நட்பு நாடு மூலம் அந்நாட்டு சர்வதேச அளவில் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இதையடுத்து, அமெரிக்காவின் வலியுறுத்தலால் தங்கள் நாடு மீது ஐநா விதித்துள்ள பொருளாதாரத் தடைகளை நீக்க வேண்டும் கோரியுள்ளது.

இந்நிலையில் பேச்சுவார்த்தை நடத்துவது தொடர்பாக அந்நாட்டின் முக்கிய நாளிதழ் ஒன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில், "ஆயுதங்களைக் குறைத்துக் கொள்வது தொடர்பாக அமெரிக்காவுடன் எத்தனை முறை வேண்டுமானாலும் பேச வடகொரியா தயாராக இருக்கிறது. ஆனால் அணு ஆயுதங்களை எந்த சூழ்நிலையிலும் கைவிடமாட்டோம். இது விஷயத்தில் நாங்கள் தெளிவாக இருக்கிறோம். உலகத்தில் உள்ள அனைத்து நாடுகளும் எப்போது அணு ஆயுதங்களைக் கைவிடுகிறதோ, அப்போது வடகொரியாவும் ஆணு ஆயுதங்களைக் கைவிடும் என்று கூறப்பட்டுள்ளது.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/20/1130420035_1.htm

 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

வட கொரியா மற்றும் தென் கொரியா இடையே பதற்றம்:கேசாங் தொழிற்பூங்கா மூடல்

ஏப்ரல் 28, 2013

 

south-koreans-workers-go-to-the-paji-som

 

 

வட கொரியா மற்றும் தென் கொரியா இணைந்து நடத்தும் கேசாங் தொழிற்பூங்கா நிரந்தரமாக மூடப்பட்டுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ளது. இதற்கு தென்கொரியாதான் காரணம் என்றும் வடகொரியா குற்றம்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று தென்கொரியா இறுதியாக தனது ஊழியர்களை தொழிற்பூங்காவிலிருந்து திரும்பப்பெற்றுள்ளது.

பேச்சுவார்த்தை நடத்த தென்கொரியா விடுத்த அழைப்பை வடகொரியா நிராகரித்துவிட்டது. இதனால் தென்கொரியா தொழிற்பூங்காவை விட்டு 170 ஊழியர்களை வெளியேற்றியுள்ளது. இந்த தொழிற்பூங்கா மூடப்பட்டுள்ளதால் சமரசம் நடப்பதற்கான இருந்த இறுதி வாய்ப்பும் பறிபோனதாக பார்க்கப்படுகிறது.

ஆண்டிற்கு 90 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஈட்டித் தருவதால் வடகொரியாவின் மிகச்சிறந்த பொருளாதார திட்டமாக இத்தொழிற்பூங்கா கருதப்படுகிறது. இந்த திட்டத்திற்கு கணிசமான தொகையை மாதாமாதம் தென் கொரியாவும் அளித்து வந்தது. வடகொரியா போர் எச்சரிக்கை விடுத்திருந்ததையடுத்து இந்த தொழிற்பூங்கா மூடப்பட்டது. இது நிரந்தரமான முடிவு என தற்போது வடகொரியா தெரிவித்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/tension-between-north-korea-and-south-korea-kecan-industrial-park-closures

 

Link to comment
Share on other sites

படைகள் பின் வாங்காது : தென் கொரிய அரசு அறிவிப்பு

ஏப்ரல் 29, 2013 

வட கொரியா ராணுவம் தாக்குதல் நடத்தினால் அதை எதிர்கொள்ள தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதி ஜப்பான் நாளிதழ் ஒன்று, வட கொரியா தன் எல்லைப் பகுதியில் வைத்துள்ள ஏவுகணைகளைப் பயன்படுத்தப் போவதில்லை என செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால், வட கொரியா தன் ஆயுதங்களை முற்றிலும் விலக்கிக் கொள்ளாத வரை, தென் கொரிய ராணுவம் பின் வாங்காது என்றும், எல்லைப் பகுதியைக் கண்காணிக்கும் பணியில் தொடர்ந்து ஈடுபடும் என்றும் தென் கொரிய அரசு தெரிவித்துள்ளது.

 

http://puthiyathalaimurai.tv/south-korea-will-not-take-back-its-army-says-south-korean-government

Link to comment
Share on other sites

பணியாத வடகொரியா! எரிச்சலில் அமெரிக்கா!!
29 ஏப்ரல் 2013

 

தென்கொரியாவுடன் அமெரிக்கா இணைந்து ராணுவ பயிற்சியில் ஈடுபடுவதை உடனடியாக நிறுத்த வேண்டும்; வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். இரண்டையும் செய்தபிறகு பேச்சுவார்த்தையைத் தொடங்கலாம் என்று வடகொரியா தனது நிலைப்பாட்டை இன்று மீண்டும் தெளிவுபடுத்தியுள்ளது.

வடகொரியாவிலிருந்து வெளியாகும் Rodong Sinmun செய்தித்தாளில் வெளியிட்டுள்ள ராணுவ செய்திக் குறிப்பில், வடகொரியா அணுஆயுத சோதனைகளைக் கைவிட வேண்டும் என்ற அமெரிக்காவின் அழுத்தங்கள் ஏற்கத்தக்க ஒன்றல்ல. வடகொரியாவை அணுஆயுத நாடாக அங்கீகரிக்க வேண்டும். அணு ஆயுத நாட்டுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமெனில் வடகொரியாவும் அணுஆயுத நாடாக அறிவிக்கப்பட்ட பிறகே சாத்தியப்படும். அதுவரை எந்தப் பேச்சுவார்த்தையும் சாத்தியமில்லை என்று முகத்தில் அறைந்தாற்போல் வடகொரியா மீண்டும் தெளிவுபடுத்தி விட்டது.

வடகொரியாவை அணு ஆயுத நாடாக அங்கீகரிக்க முடியாது என்பதில் அமெரிக்காவும் உறுதியாக இருப்பதால் கொரிய தீபகற்பத்தில் போர்மேகங்கள் விரைவில் விலகாது என்றே தெரிகிறது. இருநாடுகளுமே முரண்டு பிடித்து வரும் நிலையில் சியோல்,பெய்ஜிங் மற்றும் டோக்கியோவு சுற்றுப்பயணம் சென்றிருந்த அமெரிக்க வெளியுறவுத் துறைசெயலர் ஜான்கெரி,வடகொரியா அணுஆயுத திட்டங்களைக் கைவிடுவதில் சீரியசாக இருப்பதை நிரூபிக்க வேண்டும் என்றார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/international/1304/29/1130429023_1.htm

 

Link to comment
Share on other sites

ஒன்று வட கொரிய விட்ட மிரட்டலுக்கு சமமாக இது வரையில் எதுவும் செய்யவில்லை. 

 

எல்லையில் தென் கொரிய முதலீட்டில் வட கொறிய தொழிலாளிகள் தொழில் செய்து வந்தார்கள். தென்கொறிய இப்படியான ஆலைகளை வைத்து நிரந்தரமாக தொழில் செய்ய முடியாது என்று ஏற்கனவே தனது பங்கை விலத்திவிட்டது. முட்டாள் தனமாக தொழில்சாலைகளில் கையை போட்ட வட கொறியா தனது கடைசி வேலைக்காரரை இவ்வளவு நாளும் வைத்திருந்து பார்த்தது தென் கொரியா திரும்பி வருமா என்று. அது எல்லைப்பகுதி தொழில் சாலைகளை திறக்காது. ஏற்பட்ட நட்டங்களுக்கு தனது முதலாளிகளுக்கு ஏதாவது நட்ட ஈடு கொடுக்காலாம். ஆன 3000 மேற்பட்ட வட கொறியர் நிரந்தரமாக வேலையை இழந்துவிட்டார்கள்.

 

Link to comment
Share on other sites

தென் கொரியாவும், அமெரிக்காவும் நடத்திய போர் பயிற்சிகள் நிறைவு

ஏப்ரல் 30, 2013

 

joint-war-exercises-of-South-Korean-and-

 

தென் கொரியாவும், அமெரிக்காவும் இணைந்து நடத்தி வந்த தொடர் போர் பயிற்சிகள் நிறைவு பெறுகின்றன. இருப்பினும், தென் கொரியா தனது ராணுவத்தை உஷார் நிலையிலேயே வைத்திருக்கும் என அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த பயிற்சிகளில் 10,000 தென்கொரிய படைகளும், 3,500 அமெரிக்க படைகளும் பங்கேற்றன. மார்ச் மாதம் துவங்கிய 2 மாத கால பயிற்சிகள் தற்போது நிறைவடைகின்றன.

இந்த பயிற்சிகளால் தென் கொரியாவின் ராணுவ பலத்தை அறிந்துகொள்ள உதவியாக இருந்தது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

வடகொரியா அணு ஆயுத சோதனைகளில் ஈடுபட்டதும், தென் கொரியா அமெரிக்காவுடன் இணைந்து போர் பயிற்சிகள் மேற்கொண்டது. இதனால் கொரியத் தீபகற்பத்தில் போர்ப் பதற்றம் ஏற்பட்டது.

 

http://puthiyathalaimurai.tv/joint-war-exercises-of-south-korean-and-american-forces-ended

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அமெரிக்கா பயந்து போனார்கள் போல? :(

 

 

இல்லையென்றே நினைக்கின்றேன்....அமெரிக்க அரசியலில் நாடுகளுடன் போர்தொடுத்து பணத்தையெல்லாம் விரயமாக்குவது ஒருகட்சி.மற்றைய கட்சி தன்னாட்டு நலன்களுடன் சண்டை சச்சரவில்லாமல் பிரச்சனைகளை தீர்க்கப்பார்ப்பார்கள். :)
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: RAJEEBAN   29 MAR, 2024 | 12:22 PM   உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னணியில் உள்ள விடயங்களை கண்டுபிடிப்பதற்கான முக்கிய தடையாக முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே காணப்படுகின்றார் என கத்தோலிக்க திருச்சபையின்  பேச்சாளர் அருட்தந்தை சிறில் காமினி பெர்ணான்டோ தெரிவித்துள்ளார். ஊடகமொன்றிற்கு வழங்கிய பேட்டியில் இதனை அவர் தெரிவித்துள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று  பலமாதங்ளின் பின்னர் ஜனாதிபதியான பின்னர் கோட்டாபய ராஜபக்ச செய்த எடுத்த முதல் நடவடிக்கை உயிர்த்தஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட உண்மையை கண்டறியும் ஆணைக்குழுவை செயல்இழக்கச்செய்ததே என அவர் குறிப்பிட்டுள்ளார். உயிர்த்தஞாயிறுதாக்குதல் சூத்திரதாரிகள்யார்  என்பது யார் தனக்கு தெரியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருப்பது குறித்து கருத்து தெரிவித்துள்ள  அருட்தந்தை  சுயாதீன ஆணைக்குழுவை நியமித்தால் மாத்திரமே உண்மை வெளிவரும் என குறிப்பிட்டுள்ளார். ஷானி அபயசேகர தலைமையிலான ஆணைக்குழுவை மீண்டும் நியமிக்கவேண்டும் சர்வதேசஅளவில் விசாரணை இடம்பெறவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதனை செய்தால் மைத்திரிபாலசிறிசேன அதன் முன்னிலையில் தோன்றி சூத்திரதாரி யார் என்ற உண்மையை தெரிவிக்க முடியும் எனவும் அருட்தந்தை தெரிவித்துள்ளார்.  நீங்கள் கோட்டாபய ராஜபக்சவை சூத்திரதாரி என தெரிவிக்கின்றீர்களா என செவ்வி காண்பவர் கேள்விஎழுப்பியவேளை அருட்தந்தை சிறில் ஆம் அது தெளிவான விடயம் என குறிப்பிட்டுள்ளார். உயிர்த்த ஞாயிறுதாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டதை எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர்கள் வாக்குகளை பெறுவதற்காக பயன்படுத்தக்கூடும் என தெரிவித்துள்ள அருட்தந்தை சிறில்பெர்ணான்டோ ஆட்சிமாற்றத்தின் போது அரசியல் வஞ்சகர்கள் மீண்டும் தெரிவு செய்யப்பட்டால் அது ஏற்கனவே பொருளாதார நெருக்கடி சட்டமொழுங்கின்மையினால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாட்டிற்கு மேலும் பேரழிவாக அமையும் எனவும் குறிப்பிட்டுள்ளார். அமைப்புமுறையில் பாரிய மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும் அமைப்பு முறை மாற்றம் ஏற்படுவதற்கு அரசியல் நிர்வாகம் முற்றாக மறுசீரமைக்கப்படுவது அவசியம் எனவும் அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179961
    • அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் விடுத்த கோரிக்கை! ஆசியாவிற்கான BOAO மன்றத்தின் வருடாந்த மாநாட்டில் பிரதமர் தினேஷ் குணவர்தன பங்கேற்றுள்ளார். சீனாவின் ஹைனான் நகரில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் விசேட உரை ஒன்றை நிகழ்த்தினார். வருமானத்தை சமமாகப் பகிர்ந்தளிக்கும் வறுமையற்ற ஆசியாவைக் கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு அனைத்து ஆசிய நாடுகளிடமும் பிரதமர் தினேஷ் குணவர்தன கோரிக்கை விடுத்துள்ளார். விவசாய வளர்ச்சி மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதிப்படுத்த புதிய முயற்சிகள் தேவை என்றும், இது வறுமையை ஒழிப்பது மட்டுமல்லாமல் சமூக நல்லிணக்கம் மற்றும் அமைதியை உறுதி செய்யும் என்றும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே கொழும்பு துறைமுகம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் கொழும்பு துறைமுக நகரத்தை விஸ்தரிப்பது தொடர்பில் பிரதமர் விளக்கமளித்ததாகவும் பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/297561
    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.