Jump to content

''தத்தித்தரிகிடதோம்''...தொழிலதிபருடன் சமரசமானார் பவர்ஸ்டார்.. கேஸ் வாபஸ்!


Recommended Posts

சென்னை: செக் மோசடி வழக்கைத் தொடர்ந்த நாமக்கல் தொழிலதிபருடன் பவர்ஸ்டார் சீனிவாசன் சமரசமாகி விட்டார். பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டார். இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் வழக்கை வாபஸ் பெறுவதாக கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா நகரில்வசித்து வரும் பவர் ஸ்டார் சீனிவாசன், கடும் முயற்சி மற்றும் செலவுகளுக்குப் பின்னர் தற்போது நடிகராக அவதாரம் எடுத்து பிசியாக நடித்து வருகிறார். இவரது பல்லழகும், பவர்புல் கலரும் ரசிகர்களிடம் மட்டுமல்லாமல் சினிமாக்காரர்களிடமும் கூட செம கிராக்கியை ஏற்படுத்தியுள்ளது.

தன்னைத் தானே பவர் ஸ்டார் என்று அழைக்க ஆரம்பித்த சீனிவாசனை இப்போது அனைவருமே அன்போடு பவர் ஸ்டார், பவர் ஸ்டார் என்று அழைத்து வருகின்றனர். அவரது பெயரே பவராகி விட்டது. சீனிவாசனை அத்தனை பேரும் மறந்து விட்டனர்.

இப்படியாப்பட்ட பவர் ஸ்டார், நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டைச் சேர்ந்த பிரபல தொழில் அதிபரும், ரிக் உரிமையாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவருமான பொன்னுச்சாமி என்பவரிடம் ரூ 2 லட்சம் கடன் பெற்றார். இதற்காக கடந்த 2009-ம் ஆண்டு தொடக்கத்தில் செக் கொடுத்தார். அந்த செக் பணம் இல்லாமல் பாங்கியில் இருந்து திரும்பி வந்து விட்டது.

இதனால் பொன்னுச்சாமி சார்பில் அவரது மேலாளர் வெங்கடாசலம் பவர் ஆப் அட்டர்னி பெற்று நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் மீது நாமக்கல் முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் வக்கீல் கிருஷ்ணன் என்பவர் மூலம் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு விசாரணைக்கு நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தொடர்ந்து ஆஜர் ஆகவில்லை. இதனால் 2009-ம் ஆண்டு இறுதியில் அவருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. எனினும் அவர் கைது செய்யப்படாமல் இருந்து வந்தார்.

இந்த நிலையில் மீண்டும் அவரை கைது செய்ய வலியுறுத்தி வெங்கடாசலம் மீண்டும் மனு கொடுத்தார். இந்த மனுவை ஏற்று கடந்த மாதம் 15-ந் தேதி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி ஜோதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து பவர் ஸ்டார் சீனிவாசனை கைது செய்ய நாமக்கல் போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

போலீஸாரும் அவரை வலை வீசி தேடி வந்தனர். அவர் அந்தமான் பக்கம் போய் விட்டதாக ஒரு தகவல் லீக் ஆனது. ஆனால் போலீஸார் சினிமாப் பட இயக்குநர் போல பவரிடமே பேசி அவர் எங்கே இருக்கிறார் என்பதை அவரது வாயிலிருந்தே வாங்கி விட்டனர். இதனால் வேறு வழியில்லாமல் போலீஸாருக்கு ஒத்துழைப்பு கொடுக்க முன்வந்தார்.

மறுபக்கம், சீனிவாசனின் வக்கீல் நாமக்கல்லில் உள்ள வக்கீல் கிருஷ்ணனுடன் பேசினார். பணத்தை கொடுக்க நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் தயாராக இருப்பதாகவும், வழக்கை வாபஸ் பெறுமாறும் கூறினார்.

இது தொடர்பாக நாமக்கல் வக்கீல் கிருஷ்ணனுடன் பேச்சு நடத்த சென்னை வக்கீல் நாமக்கல் விரைந்தார். பேச்சு நடத்தி முடித்து பணத்தைக் கொடுத்து விட்டால் புகாரை வாபஸ் பெற பொன்னுச்சாமி தயாராக இருந்தார்.

இதையடுத்து பவர் தரப்பு, தொழிலதிபரை சந்தித்து உரிய பணத்தைக் கொடுத்து விட்டது. இதையடுத்து தொழிலதிபர் தரப்பில் கோர்ட்டில் ஒரு மனு செய்யபப்பட்டது. அதில், பவர் மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீது இன்று நீதிபதி உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.

கேஸ் வாபஸாகி வழக்கிலிருந்து மீள்வதால் அதை ஒரு வெற்றி விழாவாக பவர்ஸ்டாரும் அவரது 'விழுது'களும் கொண்டாடுவார்களா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது... நடந்தாலும் நடக்கலாம், இதுதான் கலியுகமாச்சே!

Thatstamil

:D :d

மச்சி சுபேஷ் உடைடா அந்த போத்தல.....(coke ) :D

எங்களுக்கு இணைக்கு தான் தீபாவளி....

யாழ் கள பவர் ஸ்டார் ரசிகர் மன்றம்.....

தலைவர் செயல் தலைவர்

சுபேஷ் சுண்டல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.