Jump to content

"டெசோ-வால் தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறியது"


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

"டெசோ-வால் தான் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேறியது"

 

img1130329029_1_1.jpg

 

 

ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், டெசோ மாநாட்டில் நிறைவேற்றிய
தீர்மானங்களையொட்டித்தான் உள்ளது என தி.மு.க. தலைவர் கருணாநிதி
கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள கேள்வி-பதில் அறிக்கையில் கூறியதாவது,

கேள்வி
:- இலங்கையில் நடைபெறவுள்ள “காமன்வெல்த்” மாநாட்டை வேறு நாட்டில்
நடத்துவதற்கான முன் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மத்திய
அமைச்சர் ஜி.கே. வாசன் பேட்டி அளித்திருக்கிறாரே?

பதில்
:- நாம் பாராட்ட வேண்டிய ஒரு அறிவிப்பு இது. ஆனால் அவர் இந்த அறிவிப்பை
தனிப்பட்ட கருத்து என்று தெரிவித்திருக்கிறார். இது அவருடைய தனிப்பட்ட
கருத்தாக மட்டுமில்லாமல், அவருடைய கட்சியின் பொது கருத்தாக அமையுமேயானால்,
அப்போது தான் நம்முடைய பாராட்டு முழுமை பெறும்.

கேள்வி
:- ஈழத்தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அமைச்சரவையிலிருந்து விலகியதோடு, கூட்டணிக்கு அளித்து வந்த ஆதரவையும்
திரும்பப் பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள். அதற்குப் பிறகும் மத்தியில் உள்ள
ஆட்சியைக் கவிழ்க்க துணை போக மாட்டோம், வெளியிலிருந்து ஆதரவு என்றெல்லாம்
பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றனவே; அதைப் பற்றி என்ன
சொல்கிறீர்கள்?

பதில்
:- இந்தக் கருத்துக்கள் எல்லாம் வேண்டுமென்றே திரித்து வெளியிடப்படும்
விஷமத்தனங்கள். “ஈழத் தமிழர்களுக்கு எந்த வகையிலும் பயன்படாத சூழ்நிலைகளே
உருவாக்கப்பட்டுள்ள நிலையில் இனியும் பதவியில் நீடிப்பது தமிழினத்திற்கே
இழைக்கப்படும் பெரும் தீமை என்பதால், ஐக்கிய முற்போக்குக் கூட்டணி
அமைச்சரவையிலிருந்து தி.மு. கழகம் உடனடியாக விலக முடிவு செய்து” கழகத்தின்
சார்பில் 19௩௨013 அன்று அறிவிக்கப்பட்டது.

அப்போதே
செய்தியாளர்கள் என்னிடம் “அமைச்சரவையில் பங்கேற்காமல், வெளியே இருந்து
அரசுக்கு ஆதரவு தரப்படுமா?” என்று கேட்டனர். அதற்கு நான் “எதுவும்
கிடையாது” என்று தான் பதிலளித்தேன். தொடர்ந்து செய்தியாளர்கள் “நீங்கள்
ஆதரவைத் திரும்பப் பெறுவதால் மதவாத சக்திகள் ஆட்சிக்கு வரக்கூடும் அல்லவா?”
என்று கேட்ட நேரத்தில்கூட, “அதற்கு நாங்கள் பொறுப்பாளி அல்ல” என்று
பதிலளித்திருக்கிறேன்.

ஜெயலலிதாவின்
அ.தி.மு.க. ஆட்சியினால் தடைசெய்யப்பட்டு, பிறகு நீதி மன்றத்தில் அனுமதி
பெற்று சென்னையில் நடைபெற்ற “டெசோ” மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள் -
ஈழத் தமிழர் பிரச்சினையில் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலிருந்து வெளியே
வரும்போது மேற்கொண்ட தீர்மானம் - தொடர்ந்து கழகச் செயற்குழுவில்
எடுக்கப்பட்ட முடிவுகளான; “இலங்கையில் “காமன்வெல்த்” மாநாட்டினை
நடத்தக்கூடாது” என்ற வேண்டுகோளுடன்; இலங்கை அரசின் போர்க்குற்றங்கள் -
இனப்படுகொலை குறித்து விசாரணை செய்ய நம்பகத் தன்மை வாய்ந்த, சுதந்திரமான
பன்னாட்டு விசாரணை ஆணையம் அமைத்தல் போன்றவைகளை மத்தியில் எந்த ஆட்சி
அமைந்தாலும் அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது தான் எங்கள் நிலைப்பாடு.

மேலே
சொன்ன இந்தக் கருத்துகளை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ஏற்றுக் கொள்ள
முன்வராத நிலையில் தான், நாங்கள் அந்தக் கூட்டணியில் இருந்தே விலகி வெளியே
வந்து விட்டோம்.

கேள்வி :- இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையில் ஜெயலலிதா அரசு சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியிருக்கிறதே?

பதில்
:- ஈழத் தமிழர் பிரச்சினை குறித்த பேரவைத் தீர்மானம், நாங்கள் ஏற்கனவே
“டெசோ” மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களையொட்டித்தான் வந்துள்ளது.
அதனால் தான் தமிழர் தலைவர் வீரமணியும், திருமாவளவனும் அதை
வரவேற்றிருக்கிறார்கள். இன்னும் சொல்லப் போனால், ஜெயலலிதா அரசால் தடை
செய்யப்படவிருந்த “டெசோ” மாநாட்டுத் தீர்மானங்களால் தான் அ.தி.மு.க. அரசு
பேரவையிலே ஒரு தீர்மானத்தைக் கொண்டு வந்து இப்போது நிறைவேற்றியுள்ளது.

என்று விளக்கமளித்தார்.

 

http://tamil.webdunia.com/newsworld/news/tnnews/1303/29/1130329029_1.htm

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
    • அத்துடன் மாவீரர் நாளில் மிகுந்த சனத்தை  பார்க்க கூடியதாக இருந்தது. (வன்னியில் என நினைக்கிறேன்)      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.