Jump to content

முயல் பிடிக்கிற நாயை......


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் கருவாடு பொரிச்ச எண்ணையை கைகாலெல்லாம் பூசிக் கொண்டு போனீங்கள் சரி, இப்ப சட்டியும் கிடச்சுட்டுது , இனி யார் யாரைப் பொரிச்சது....!

Link to comment
Share on other sites

  • Replies 57
  • Created
  • Last Reply

என்ர பெடியன் ஒருத்தனுக்கு நடேசண்ணையின் மகளில் ஒரு காதல் இருந்தது. இது நடேசண்ணைக்கு தெரியாமலே அரசால் புரசலாக சந்திப்புகளும் நடந்தது.

நடேசண்ணையின் மகளும் துவாரகாவும் நல்ல நண்பிகள். வீட்டிலே சொன்னால் எடுபடாது என்று தெரிந்த நடேசண்ணையின் மகள், துவராகாமூலம் அண்ணைக்கு தெரியபடுத்தினாள். ஏற்கனவே எனக்கும் நடேசண்ணைக்கும் ஆகாது. இதுக்கு பிறகும் நான் சொல்லவா வேணும். 

நடேசண்ணை சரத்தோட தான் வந்திருந்தார். படுக்கிற நேரத்தில் கூப்பிட்ட கோபமும் அவர் முகத்திலே தெரிந்தது. வந்து பார்த்தவுடனேயே அவருக்கு நிலைமை விளங்கி போட்டுது. என்னை முழங்காலிலே இருத்தி பின்னாலே கையை கட்டி வைச்சிருந்ததை பார்க்க அவரின் முகத்தில் தெரிந்த சந்தோசம் அந்த மங்கல் வெளிச்சத்திலேயும் எனக்கு நன்றாகவே தெரிந்தது. அடுத்த அண்ணையின்  சந்திப்பில் எடுத்து கொடுக்க ஒரு விஷயம் கிடைச்சிருக்கு என்று அவரது மனக்குரல் சொன்னதை என்னால் உணரமுடிந்தது.

கை முகம் எல்லாம் பொரிச்ச எண்ணை. இப்போ இருக்கிறமாதிரி செல்பி எடுக்கிற பழக்கம் அப்போ இருந்திருந்தால் நடேசண்ணை என்னோட ஒரு செல்பி நிச்சயமா எடுத்திருப்பார். 

என்ன இருந்தாலும் ஒரு NGO இற்கு முன்னால இயக்கத்தை விட்டுகொடுக்க அவருக்கு மனம் ஒப்பவில்லை போலும். எல்லாரையும் வாகனத்திலே ஏத்துங்கட என்று அவரது மெய்பாதுகாவலர்களுக்கு கட்டளையிட்டார். அவங்கள் எல்லாருக்கும் என்னை நல்லா தெரியும். இருந்தாலும் அந்த காட்சிக்கு பொருந்திற மாதிரி கழுத்திலே பிடிச்சு கொண்டு போய் வாகனத்துக்குள்ளே தள்ளிவிட்டு மன்னிப்பு கேட்டாங்கள்.

நடேசண்ணை நாங்கள் இவங்களை பார்த்து கொள்ளுகிறோம் என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட்டார்.

வாகனத்தின் கண்ணாடிகள் வழியே சட்டியை பார்த்தேன் 

மெல்லிய ஒளியில் பட்டுத்தெறித்த  சட்டி என்னை பார்த்து "டேய் களவெடுக்கிறதுக்கு எல்லாம் ஒரு மூஞ்சை வேணுமடா" என்று சொல்லுவது ஆணித்தரமாக எனக்கு கேட்டது.

இதுவரை இந்த கதையை வாசித்த நீங்கள் சொல்லுங்கள் 

என்ர மூஞ்சைக்கு என்ன குறை, ஏன் தான் என்னால ஒரு களவை கூட சரியாக செய்ய முடியவில்லை.

 

(முற்றும்)

 

 

நன்றி : இதுவரை இந்த ஆக்கத்துக்கு ஊக்கம் தந்த அனைத்து உறவுகளுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகலவன், நான் களவெடுத்தது இல்லை! களவெடுத்துப் பிடிபட்டவர்களின் முகங்கள் எப்படியிருக்கும் என்று தெரியும்! களவெடுத்துப் பிடி படாதவர்கள் முகங்களையும் பார்த்திருக்கிறேன்! அவர்களின் முகத்தில் ஒரு 'களை' இருக்கும்! களவெடுத்ததை அவர்கள் சொல்லித்தான் தெரியும்!கோழி பிடித்த களவுகள் இவற்றில் உள்ளடக்கப் படவில்லை!

ஆனால் எடுத்ததை...வெளியே கொண்டு போக ஒரு 'திட்டம்' வகுக்காதது...உங்கள் திட்டமிடலில் ஒரு பெரிய ஓட்டை உள்ளதை உறுதிப் படுத்துகின்றது!

ஒரு களவை வைத்து 'அபிப்பிராயம்' சொல்ல முடியாது!

இன்னும் குறைந்தது இரண்டாவது எழுதினால் உங்கள் மூஞ்சியில் என்ன குறை உள்ளது என்று உறுதியாகவும், அறுதியாகவும் முடிவு சொல்ல முடியும்!

எனவே தொடர்ந்து உங்கள் அனுபவங்களை எழுதுங்கள்!:unsure:

நன்றி...பகலவன்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ர மூஞ்சைக்கு என்ன குறை, ஏன் தான் என்னால ஒரு களவை கூட சரியாக செய்ய முடியவில்லை.

 

முதலாவது முறை சறுக்கல் ஏற்பட்டால் அதுக்காக மனம் தளரக் கூடாது. மீன்டும் மீன்டும் முயற்சி செய்ய வேண்டும். 

களவெடுப்பதை ஏதோ சிம்பிலாய் நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. அதற்கு நிறையத் தியாகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும். காரணம் அது ஒரு கலை.

-- முதலில் மானம் ரோசம் சூடு சொரனை அத்தனையையும் உதிர்த்து விட வேண்டும்.

-- எப்படி ஒரு டொக்டரின் பிள்ளை ஸ்டெதாஸ்கோப்புடன் விளையாடுகிறதோ, ஒரு வித்துவானின் பிள்ளை இசைக் கருவிகளுடன் விளையாடுகிறதோ அதைப் போன்றே சிறு பராயத்திலிருந்து இயல்பாகத் தொடங்க வேண்டும்.

-- அம்மா குசினியில் அங்கும் இங்கும் வைக்கும் சில்லறைகள் முதலாவது இலக்கு. ( சிலநாட்களில் அம்மாவுக்குத் தெரிந்து விடும் , ஆனால் கண்டு கொள்ள மாட்டாள். பிள்ளை எடுக்கட்டும் என்றும் சில சமயம் காசு வைத்து விடுவாள்.)

-- அடுத்து தங்கை... இவள் பொருளைக் காணவில்லை என்டதும் இரண்டு நாள் முழிசிக் கொண்டு திரிந்துவிட்டு எல்லோரையும் நச்சரிப்பாள். அப்பாவியாய் உங்களிடமும் கேட்பாள். மூளைக்கு செய்தி போகுமுன் நீங்கள் மறுத்து விடுவீர்கள். இது அனுபவத்தில்தான் வரமுடியும். அயினும் அவள் அடுத்து வைக்கும் பொறியில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். அப்போது கிடைக்கும் பாருங்கள் பாராட்டு... வானத்தில் சஞ்சரிக்கும் சனியன்,வனத்தில் வாழும் குரங்கு, பொதி சுமக்கும் கழுதை, வாலை ஆட்டும் நாய் எல்லாவற்றையும் அழைத்து முதன்முதலாக உங்களுக்கு மரியாதை செய்வாள். ( அப்போது மானம் டிக்கட் எடுத்து விடும்).

-- அடுத்து அக்கா.... ஜாமட்ரி பாக்ஸில் வட்டாரி இருக்குதோ இல்லையோ காசும், ஸ்கேலும் உப்பும் தூளும் இருக்கும். நீங்கள் கைவரிசை காட்டிய அன்றே மோப்பம் பிடித்து விடுவாள்.சமயம் பார்த்திருப்பாள். மாலையில் மல்லாந்து கிடந்து இளைய ராஜாவை ரசிக்கும்போது வளைச்சுப் பிடித்து வை ராசா வை என்று  னங்...னங் என்று குட்டி, ஸ்கேலால் மொழிகளில் கரண்ட் அடிக்கிறமாதிரி அடித்து, தொடையில் பச்சை நரம்பு ஓடக் கிள்ளி... ( சொரணையும் மானத்தைத் தேடிப் போயிடும்).

-- அடுத்து அப்பா...(இதுவரை நடந்தது எதுவும் மாநிலத்தில் நடப்பதால் மத்திக்குத் தெரியாது.) இவையாவும் ஓரளவு மறந்திருக்கும் காலத்தில் அப்பாவின் பக்கட்டில் (உங்களால்) கனம் குறையத் தொடங்கும். அவரும் அம்மாதான் எடுத்திருப்பாள் என்று அசண்டையீனமாய் இருப்பார். அதுவே உங்களுக்கு வாய்ப்பாக அமையும். உங்கள் கை கொஞ்சம் கூட நீண்டு ஒரு அமவ்ன்ட் லவட்டி விட்டீர்கள். ( உங்கள் விதி , அந்தப் பணம் அடுத்தநாள் அடைவு எடுப்பதற்கு அன்றிரவு அம்மாவும் அப்பாவுமாய் அம்பது தரம் எண்ணி வைத்த காசு.)

-- சிங்கன் சிக்கிட்டான்...! தங்கச்சி இதுவரை நடந்ததைப் பாட ,அக்கா ஒத்தூத, அம்மா தாளம் போட அப்பா ஆரோகணத்தில் சற்று நேரம் சஞ்சரித்து, மத்திமத்தில் நிலையெடுத்து அவரோகணத்தில் இறங்கி அக்கம் பக்கத்து  ரசிக சிகாமணிகள் பொட்டுக்களால் பார்க்க  சிங்கன் சயிக்கிலை விட்டிறங்காமல் படலையை இடித்துத் திறந்து வர எதிர்க்க வந்த ஜிம்மியை எட்டி உதைத்து வாசலில் ஏற , எதிர்பாராத மும்முனைத்தாக்குதலால் நிலைகுலைந்து சுதாகரிப்பதற்குள் கப்புடன் சேர்த்து நிராயுதபாணியாய் கட்டப் பட்டு நிக்கிறார். 

அடி பிச்சு உதறுது , தும்புத்தடி உடைஞ்சு, விளக்குமாறு நொருங்கி, இறுதியாய் அடுப்பில் இருந்த வந்த கரண்டியால் களவெடுத்த கைக்கு சூடும் விழுகுது . பழத்தை இழந்த பழனியாண்டவன்போல் கோவணத்துடன் நிக்கிறான் . புதுக் கிணற்று ஊற்றுப்போல் ரோசம் பொங்கி வருகிறது...! 

 தனியாக வீட்டுக்குள்ள களவெடுக்கவே இவ்வளவு பிரச்சனையாய்க் கிடக்கு , கூட்டாக கூரையில் சாட்டிலைட் புடுங்கிறதென்டால் எவ்வளவு பிரச்சனைகள் வரும். அதனால் இனிக் களவெடுப்பதில்லை என முடிவெடுக்கின்றான்.

ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிடும் என்று செல்லாத்தைக் கிழவி சொல்ல , அவவின் பேத்தி கனகாவைக் கட்டி வைக்கிறார்கள். பிறேக்கில்லாமல் ஓடிய வண்டி ஒரு மரத்திலோ , பாறையிலோ மோதி நின்றதுபோல் கலியாண வண்டியில் போய் கனாகாவோடு முட்டி நிக்கிறான். இப்ப கனகாதான் அவன் பர்ஸிலிருந்து களவெடுக்கிறாள்...!

நீதி: எடுத்த உடன பெருங் களவுகளில் ஈடுபட்டு தப்புறதுக்கு இது ஒன்றும் அரசியலில்லை...! படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும்....! tw_blush:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சொந்தக்கதையை,பகலவனுக்கு ஆலோசனையாக கூறிய சுவி அண்ணாவுக்கு நன்றிகள்(பச்சை நாளைக்குத்தான்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, suvy said:

என்ர மூஞ்சைக்கு என்ன குறை, ஏன் தான் என்னால ஒரு களவை கூட சரியாக செய்ய முடியவில்லை.

 

முதலாவது முறை சறுக்கல் ஏற்பட்டால் அதுக்காக மனம் தளரக் கூடாது. மீன்டும் மீன்டும் முயற்சி செய்ய வேண்டும். 

களவெடுப்பதை ஏதோ சிம்பிலாய் நினைத்து விட்டீர்கள் போலிருக்கு. அதற்கு நிறையத் தியாகம் செய்யத் தயாராய் இருக்க வேண்டும். காரணம் அது ஒரு கலை.

-- முதலில் மானம் ரோசம் சூடு சொரனை அத்தனையையும் உதிர்த்து விட வேண்டும்.

-- எப்படி ஒரு டொக்டரின் பிள்ளை ஸ்டெதாஸ்கோப்புடன் விளையாடுகிறதோ, ஒரு வித்துவானின் பிள்ளை இசைக் கருவிகளுடன் விளையாடுகிறதோ அதைப் போன்றே சிறு பராயத்திலிருந்து இயல்பாகத் தொடங்க வேண்டும்.

-- அம்மா குசினியில் அங்கும் இங்கும் வைக்கும் சில்லறைகள் முதலாவது இலக்கு. ( சிலநாட்களில் அம்மாவுக்குத் தெரிந்து விடும் , ஆனால் கண்டு கொள்ள மாட்டாள். பிள்ளை எடுக்கட்டும் என்றும் சில சமயம் காசு வைத்து விடுவாள்.)

-- அடுத்து தங்கை... இவள் பொருளைக் காணவில்லை என்டதும் இரண்டு நாள் முழிசிக் கொண்டு திரிந்துவிட்டு எல்லோரையும் நச்சரிப்பாள். அப்பாவியாய் உங்களிடமும் கேட்பாள். மூளைக்கு செய்தி போகுமுன் நீங்கள் மறுத்து விடுவீர்கள். இது அனுபவத்தில்தான் வரமுடியும். அயினும் அவள் அடுத்து வைக்கும் பொறியில் நீங்கள் மாட்டிக் கொள்வீர்கள். அப்போது கிடைக்கும் பாருங்கள் பாராட்டு... வானத்தில் சஞ்சரிக்கும் சனியன்,வனத்தில் வாழும் குரங்கு, பொதி சுமக்கும் கழுதை, வாலை ஆட்டும் நாய் எல்லாவற்றையும் அழைத்து முதன்முதலாக உங்களுக்கு மரியாதை செய்வாள். ( அப்போது மானம் டிக்கட் எடுத்து விடும்).

-- அடுத்து அக்கா.... ஜாமட்ரி பாக்ஸில் வட்டாரி இருக்குதோ இல்லையோ காசும், ஸ்கேலும் உப்பும் தூளும் இருக்கும். நீங்கள் கைவரிசை காட்டிய அன்றே மோப்பம் பிடித்து விடுவாள்.சமயம் பார்த்திருப்பாள். மாலையில் மல்லாந்து கிடந்து இளைய ராஜாவை ரசிக்கும்போது வளைச்சுப் பிடித்து வை ராசா வை என்று  னங்...னங் என்று குட்டி, ஸ்கேலால் மொழிகளில் கரண்ட் அடிக்கிறமாதிரி அடித்து, தொடையில் பச்சை நரம்பு ஓடக் கிள்ளி... ( சொரணையும் மானத்தைத் தேடிப் போயிடும்).

-- அடுத்து அப்பா...(இதுவரை நடந்தது எதுவும் மாநிலத்தில் நடப்பதால் மத்திக்குத் தெரியாது.) இவையாவும் ஓரளவு மறந்திருக்கும் காலத்தில் அப்பாவின் பக்கட்டில் (உங்களால்) கனம் குறையத் தொடங்கும். அவரும் அம்மாதான் எடுத்திருப்பாள் என்று அசண்டையீனமாய் இருப்பார். அதுவே உங்களுக்கு வாய்ப்பாக அமையும். உங்கள் கை கொஞ்சம் கூட நீண்டு ஒரு அமவ்ன்ட் லவட்டி விட்டீர்கள். ( உங்கள் விதி , அந்தப் பணம் அடுத்தநாள் அடைவு எடுப்பதற்கு அன்றிரவு அம்மாவும் அப்பாவுமாய் அம்பது தரம் எண்ணி வைத்த காசு.)

-- சிங்கன் சிக்கிட்டான்...! தங்கச்சி இதுவரை நடந்ததைப் பாட ,அக்கா ஒத்தூத, அம்மா தாளம் போட அப்பா ஆரோகணத்தில் சற்று நேரம் சஞ்சரித்து, மத்திமத்தில் நிலையெடுத்து அவரோகணத்தில் இறங்கி அக்கம் பக்கத்து  ரசிக சிகாமணிகள் பொட்டுக்களால் பார்க்க  சிங்கன் சயிக்கிலை விட்டிறங்காமல் படலையை இடித்துத் திறந்து வர எதிர்க்க வந்த ஜிம்மியை எட்டி உதைத்து வாசலில் ஏற , எதிர்பாராத மும்முனைத்தாக்குதலால் நிலைகுலைந்து சுதாகரிப்பதற்குள் கப்புடன் சேர்த்து நிராயுதபாணியாய் கட்டப் பட்டு நிக்கிறார். 

அடி பிச்சு உதறுது , தும்புத்தடி உடைஞ்சு, விளக்குமாறு நொருங்கி, இறுதியாய் அடுப்பில் இருந்த வந்த கரண்டியால் களவெடுத்த கைக்கு சூடும் விழுகுது . பழத்தை இழந்த பழனியாண்டவன்போல் கோவணத்துடன் நிக்கிறான் . புதுக் கிணற்று ஊற்றுப்போல் ரோசம் பொங்கி வருகிறது...! 

 தனியாக வீட்டுக்குள்ள களவெடுக்கவே இவ்வளவு பிரச்சனையாய்க் கிடக்கு , கூட்டாக கூரையில் சாட்டிலைட் புடுங்கிறதென்டால் எவ்வளவு பிரச்சனைகள் வரும். அதனால் இனிக் களவெடுப்பதில்லை என முடிவெடுக்கின்றான்.

ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிடும் என்று செல்லாத்தைக் கிழவி சொல்ல , அவவின் பேத்தி கனகாவைக் கட்டி வைக்கிறார்கள். பிறேக்கில்லாமல் ஓடிய வண்டி ஒரு மரத்திலோ , பாறையிலோ மோதி நின்றதுபோல் கலியாண வண்டியில் போய் கனாகாவோடு முட்டி நிக்கிறான். இப்ப கனகாதான் அவன் பர்ஸிலிருந்து களவெடுக்கிறாள்...!

நீதி: எடுத்த உடன பெருங் களவுகளில் ஈடுபட்டு தப்புறதுக்கு இது ஒன்றும் அரசியலில்லை...! படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும்....! tw_blush:

ஐயோ....ஐயோ.... ஆராவது ஓடி வாங்களேன்!

இப்படி பச்சைக் கள்ளரை வைச்சுக்கொண்டு யாழை எப்படிக் கொண்டிழுக்கிறது?

 

உங்களுக்கு இவ்வளவும் தானா நடந்தது? அல்லது மிச்சமும் இருக்கா?

எனக்குக் கண்ணுக்கு 'கொச்சிக்காய் தூள்' போடுற வரைக்கும் போயிருக்கு!

ஆனால்...அப்பா லெவல் வரைக்கும் போகேல்லை!

 

சுவியர் ...சத்தியமாய் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்!

எனக்கு எப்படிப் பச்சை களவெடுக்கிறது எண்டு மட்டும் சொல்லித் தாங்கோ!tw_blush:

Link to comment
Share on other sites

42 minutes ago, suvy said:

ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிடும் என்று செல்லாத்தைக் கிழவி சொல்ல , அவவின் பேத்தி கனகாவைக் கட்டி வைக்கிறார்கள். பிறேக்கில்லாமல் ஓடிய வண்டி ஒரு மரத்திலோ , பாறையிலோ மோதி நின்றதுபோல் கலியாண வண்டியில் போய் கனாகாவோடு முட்டி நிக்கிறான். இப்ப கனகாதான் அவன் பர்ஸிலிருந்து களவெடுக்கிறாள்...!

நீதி: எடுத்த உடன பெருங் களவுகளில் ஈடுபட்டு தப்புறதுக்கு இது ஒன்றும் அரசியலில்லை...! படிப்படியாகத்தான் முன்னேற வேண்டும்....! tw_blush:

நந்தன் பார்த்தீங்களா நான் அப்பவே சொன்னேனே, நான் கொஞ்சத்தை எழுத மிச்ச ஆட்கள் ஒன்று ஒன்றாக எடுத்துவிடுகினம்.

நன்றி சுவி அண்ணா, புங்கை அண்ணா, நந்தன். 

களவின் அத்தியாயமே பகவத்கீதையில் தான் தொடங்குகிறது.

எதை நீ எடுத்து கொண்டாயோ,
அது இங்கிருந்தே எடுக்கப்பட்டது.
எதை கொடுத்தாயோ,
அது இங்கேயே கொடுக்கப்பட்டது.
எது இன்று உன்னுடையதோ
அது நாளை மற்றொருவருடையதாகிறது
மற்றொரு நாள், அது வேறொருவருடையதாகும்.

- பகவத்கீதை 

 

Link to comment
Share on other sites

5 hours ago, பகலவன் said:

களவின் அத்தியாயமே பகவத்கீதையில் தான் தொடங்குகிறது.

அட பாவியளா, செய்யுறதையும் செஞ்சுபுட்டு துணைக்கு பகவத் கீதை வேறயா.:grin:

6 hours ago, suvy said:

ஒரு கால்கட்டு போட்டால் சரியாகிடும் என்று செல்லாத்தைக் கிழவி சொல்ல , அவவின் பேத்தி கனகாவைக் கட்டி வைக்கிறார்கள். பிறேக்கில்லாமல் ஓடிய வண்டி ஒரு மரத்திலோ , பாறையிலோ மோதி நின்றதுபோல் கலியாண வண்டியில் போய் கனாகாவோடு முட்டி நிக்கிறான். இப்ப கனகாதான் அவன் பர்ஸிலிருந்து களவெடுக்கிறாள்...!

ஆஹா சுவிஅண்ணை இது சொந்தக்கதை சோகக்கதை போலல்லவா இருக்குது. ஏதோ உங்களுக்கு கனகாவாவது  கிளைமாக்சில கிடைச்சா. நம்மட பாட்டை சொல்லி மாளாது. :grin:

5 hours ago, புங்கையூரன் said:

சுவியர் ...சத்தியமாய் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்!

எனக்கு எப்படிப் பச்சை களவெடுக்கிறது எண்டு மட்டும் சொல்லித் தாங்கோ!tw_blush:

நீங்க எங்க சுத்தினாலும் கடைசியில சுத்தி சுத்தி சுப்பரிண்ட கொல்லைக்குதான்  வருவீங்க எண்டு தெரியும்.:grin:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.