Jump to content

நிறம் மாறும் உறவு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எமது சமூகத்தின் பேசாப்பொருளை பேசிய சுமோவுக்கு நன்றி. 14 வருடத்தில் தனது கணவரை பற்றி அறியாமல் எப்படி சாந்தினி வாழ்ந்தார். இவர் கொடுத்த இடங்களால் தான் அவரது கணவர் அளவுக்கு மீறி சுதந்திரத்தை எடுத்துக்கொண்டார் என எடுக்கலாமா É  ஆபத்து நேரும் வரை சாந்தினி பொறுத்திருந்தது பிழை. ஆரம்பத்திலேயே அவரது கணவரின் நடவடிக்கையை கட்டுப்படுத்தி இருக்க வேண்டும்.அவருக்கு மன நோய் எனில் அதற்கான இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்க (counsiling)வேண்டும்.ஆபத்து நிகழும் வரை காத்திருந்து பிள்ளைகளின் வாழ்க்கையை நாசமாக்கி விட்டார்.

 

 எம்மில் பலருக்கு மோசமான அனுபவங்கள் இல்லாமையால் நாம் எம்மைப் போன்றேபலரும் என நினைக்கிறோம். பெண்களை எடுத்துக் கொண்டால் தடைகள் தடைகள் தடைகள்தான். புலம்பெயர்ந்த எல்லோருமே என்னைப் போல் உங்களைப்போல் சுதந்திரமானவர்கள் அல்ல என்பதை நாம் உணரவேண்டும் நுணாவிலான்.

 

மேலை நாடுகளில் கணவனுக்கு தண்டனை கொடுபதற்கு பதிலாக மனநல ஆலோசனையே வழங்குவார்கள். இன்னும் இரண்டு ஒரு ஆண்டுகளில் கணவன் வெளியிலே வந்துவிடுவார். உண்மையில் கணவருக்கு இருப்பது மனநோயே. ஆனால் இந்த சம்பவங்களுக்கு பிறகு சாந்தினியும் குழந்தைகளும் ஒரு நல்ல மன நல வைத்தியரை அணுகி ஆலோசனைகள் பெறுவது நல்லது. இது போன்ற சம்பவங்கள் பிற்காலத்தில் அந்த பிள்ளைகளை பிழையான வழியில் செல்லவும் வழிவகுக்கும்.

சாந்தினிக்கும் பிள்ளைகளுக்கும் மனநல ஆலோசனை நடந்ததுதான். பின் அவர் வேறு இடத்திற்குச் சென்று தான் வசிக்கிறார். பிள்ளைகள் கூட வேறு பள்ளிக்குத்தான் செல்கின்றனர். நன்றி பகலவன்.

 

வெறும் தொலைபேசி அழைப்புகள் அதே விளைவுகளைக் கொடுக்குமா? :huh: பொறுத்திருந்து பாரப்போம்.. :D

யாழ்களத்தின் காளைகளுள் ஒன்று கல்யாணம் கட்டும்வரை ஒரு சிறிய விளம்பர இடைவேளை..! :D

 

தொலைபேசிச் சேவை ஒன்று நானே தொடங்க இருக்கிறேன் :D  

 

"கடந்த வாரம் இப்பிடித்தான் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தாள். இரண்டாவது மகள் தகப்பனின் அறைக்குள் இருந்து சிரித்தபடி ஓடிவந்தாள். இவள் ஏன் சிரிக்கிறீர்கள் என்று கேட்டதற்கு சின்ன மகள் சொல்லிவிட்டு ஓடிய வார்த்தைகளைக் கேட்ட   இவளுக்கு அதிர்ச்சியில் ஒன்றும் ஓடவில்லை".

தவறு நடக்கிறதோ என்று ஐயம் வந்த பின்னும் கூட அதைப் பற்றி கண்டு பிடிக்க அவவின் பதி பக்தி விடவில்லை. 

ஒரு மனிதத்தன்மை அற்ற யந்து விற்கும் ,  முட்டாள் பெண்ணுக்கும் குழந்தைகளை கொடுத்த ஆண்டவன் தான் குற்றவாளி .
 
இந்தக்கதைக்கு ஆன பின்னூட்டதில் கீழ்க்காணும் கருத்தும், இந்தகருத்தை ஆமோதித்து இடப்பட்ட கருத்துகளும் மனதிற்கு வேதனை தந்ததது. 

 
 "ஒரு ஆணுக்கு.........பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டும். குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது "
கு. சா. அண்ணா, புன்கையூரான், வந்தியத்தேவன், இசைக்கலைஞ்ஞன், சுண்டல் , 
குமாரசாமி அண்ணா சொன்னது ஒரு வாழ்க்கைத் தத்துவம்தான், அந்தக்காலத்தில் இருந்து சொல்வதுதான், இப்படியாகப் பெண் இருந்தால், குடும்பம் கலையாது.சஞ்சலப்படாதுதான்,
 
ஆனால் இந்தக்கதைக்கு எப்படி, இப்படி ஒரு கருத்து பொருந்தும் ?
தான் புளுகியத்தை கண்டு கொண்டு சொன்னதற்கே மனைவியை அடிக்கும் மிருகம், சோம்பேறி, வீட்டில் சும்மா இருந்தும் மனைவியை அடிமைபோல் தன் வேலை அனைத்தையும் செய்விப்பவன்,பெற்ற குழந்தை யோடு, ....... காமுகன், ஆண் என்ற உருவம் தனக்கு இருப்பதால் தான் ஆதிக்கம் செய்ய நினைப்பவன்.
இவனுக்கு அல்லது இவன் போன்றோருக்கு  ....பெண் என்பவள் அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்கவேண்டுமா ?. 
 
அப்படி புழுவாக இருந்து ஒரு பெண் குடும்பம் காக்க வேண்டுமா?
 
குமாரசாமி அண்ணா, யாழ் வாசகராக, நறுக்கென்று, திருக்குறளாக நீங்கள் எழுதும் கருத்துகளை யாழ் வாசகரான காலம் முதல் ரசித்து வாசிக்கும் நான், உங்களை குறை கூற இதை எழுதவில்லை.
இப்படி எழுதி விடீர்களே என்ற ஆதங்கத்தில் தான் எழுதினேன்.
 
ஒரு ஆண் அன்பான காதலனாக, நண்பனாக, மனிதத்தை மதிப்பவனாக இருந்தால் பெண்ணும்,அன்பில் தாயாகவும்.....ஆதரவில் சகோதரியாகவும்....படுக்கையில் வேசியாகவும் இருக்க குடும்பம் கலையாது.சஞ்சலப்படாது

நன்றி நீதிமதி. சிலபேர் மாடு சொன்னாக் கேட்க மாட்டார்கள். மணிகட்டிய மாடு சொன்னால் தான் கேட்பினம். :lol: :lol: :lol:

Link to comment
Share on other sites

  • Replies 61
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
ஒருவரும் எடுக்கத் துணியாத/விரும்பாத கருவை அடிப்படையாக வைத்து எழுதிய சுமோவுக்கு பாராட்டுக்கள்...இந்தக் கதையில் என்னைப் பொறுத்த வரை சாந்தினியில் தான் அரைவாசிப் பிழையும்...அவன் வேலைக்குப் போகாமல் வீட்டை நிற்கும் போதே இல்லை ஆம்பிள்ளையல் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று அவனை வேலைக்கு துர‌த்தி இருக்க வேண்டும் அல்லது தானும் வேலைக்குப் போகாமல் வீட்டில இருந்திருக்கோணும்...வளர்ந்த பொம்பிள்ளை பிள்ளையல் தகப்பனின்ட‌ அறையில் தனிய இருந்து கொண்டு என்ன செய்கினம் என்பதை அவதானித்திருகோணும்...கணவனில் தான் வித்தியாச‌ம் தெரியா விட்டாலும் அவ பெத்த பிள்ளைகளில் வித்தியாச‌த்தை காணாத தாய் என்ன தாய்?...இப்படிப் பல பெண்கள் எங்கட சமுதாயத்தில் இருக்கினம்.சமுதாயத்திற்கு பயந்து எல்லாத்தையும் மறைக்கிறது..எங்கட‌ பெண்கள் எல்லோரையும் ஓவராய் நம்புறதால தான் இந்த நிலை :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாதவூரான் ,

 ".அது தன் மகளாயிருந்தாலும்"

  :o  சீ ....ஆண்களே இந்தக் கருத்தை  ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.

 

அந்த கணவன் செய்தது பிழை தான் ஆனால் அதுக்கு அடிப்படையை ஆராயாமல் ஒட்ட நறுக்க வேணும் எண்ட வாதம் ஏற்றுக்கொள்ள முடியவில்லை

 என்ன ஒரு  இனப்பற்று  :D

 
 
தாம்பத்தியத்தை தொல்லை என்று நினைப்பது ஏன் என்று புலப்படவில்லை
தாம்பத்தியம் என்பது உடல் மட்டும் சம்மந்தப் பட்டதல்ல, மனதை புண்படுதுபவருடன் இணைவதைத்தான்  தொல்லை என்று நினைப்பது.
நீங்கள் நான் கூற வந்ததை சரியாக விளங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.எந்த பிழைக்கும் அடிப்படையை ஆராய்ந்து அதை குறைக்க வழி தேடாமல் இப்பிடி ஓட்ட நறுக்கி கொண்டிருந்தால் அதாலை பாதிக்கபடுபவருக்கு என்ன பிரயோசனம்.அன்பை பற்றி தான் அது தன் மகளாயிருந்தாலும் என்று கூறினேன்.நான் சொன்ன விதம் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

 

 

இப்படியான ஆண் ஜென்மங்களுக்கு வாழ்க்கைப்பட்டால் யாரும் பொறுப்பல்ல.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரதி அக்கா பெண்கள் நல்லவர்களை சந்தேகபடுவினம் ஆனால் கெட்டவர்களை  ம்கூம் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒருவரும் எடுக்கத் துணியாத/விரும்பாத கருவை அடிப்படையாக வைத்து எழுதிய சுமோவுக்கு பாராட்டுக்கள்...இந்தக் கதையில் என்னைப் பொறுத்த வரை சாந்தினியில் தான் அரைவாசிப் பிழையும்...அவன் வேலைக்குப் போகாமல் வீட்டை நிற்கும் போதே இல்லை ஆம்பிள்ளையல் கட்டாயம் வேலைக்குப் போக வேண்டும் என்று அவனை வேலைக்கு துர‌த்தி இருக்க வேண்டும் அல்லது தானும் வேலைக்குப் போகாமல் வீட்டில இருந்திருக்கோணும்...வளர்ந்த பொம்பிள்ளை பிள்ளையல் தகப்பனின்ட‌ அறையில் தனிய இருந்து கொண்டு என்ன செய்கினம் என்பதை அவதானித்திருகோணும்...கணவனில் தான் வித்தியாச‌ம் தெரியா விட்டாலும் அவ பெத்த பிள்ளைகளில் வித்தியாச‌த்தை காணாத தாய் என்ன தாய்?...இப்படிப் பல பெண்கள் எங்கட சமுதாயத்தில் இருக்கினம்.சமுதாயத்திற்கு பயந்து எல்லாத்தையும் மறைக்கிறது..எங்கட‌ பெண்கள் எல்லோரையும் ஓவராய் நம்புறதால தான் இந்த நிலை :(

 

கருத்துக்கு நன்றி ரதி.இதில் சாந்தினியில் நிறையத் தவறுகள் உள்ளனதான். அதை நான் மறுக்கவில்லை.

நீங்கள் நான் கூற வந்ததை சரியாக விளங்கி கொள்ளவில்லை என்று நினைக்கிறன்.எந்த பிழைக்கும் அடிப்படையை ஆராய்ந்து அதை குறைக்க வழி தேடாமல் இப்பிடி ஓட்ட நறுக்கி கொண்டிருந்தால் அதாலை பாதிக்கபடுபவருக்கு என்ன பிரயோசனம்.அன்பை பற்றி தான் அது தன் மகளாயிருந்தாலும் என்று கூறினேன்.நான் சொன்ன விதம் விளங்கவில்லை என்று நினைக்கிறேன் 

 

வாதவூரன் சில விடயங்கள் உலகில் நடைபெறாமல் இருப்பதற்கு, கடுமையான

சட்டங்களே காரணம். அதனால்த்தான் வெட்டவேண்டும் என்று ஒரு சட்டம் இருந்தால்

எவனும் அப்படியான தவறு செய்ய யோசிப்பான். மற்றப்படி எனக்கு யாரில் என்ன

கோபம்.

 

Link to comment
Share on other sites

சுமேயக்காவிற்கு முதலில் வாழ்த்துக்கள். கதைபற்றி நான் எழுத நினைத்த பல விடயங்கள் ஏற்கனவே பலரால் எழுதப்பட்டுள்ளது. இன்னும் இது போன்ற சொல்லாத கதைகளை எங்கள் சமூகம் சுமந்து திரிகிறது. வெளியில் வெள்ளையாய் தெரிகிற பலருள் பல்வகை நிறங்கள் பல்கிப் பெருகிக்கிடக்கிறது.

இக்கதையின் நாயகி பற்றியும் விமர்சனங்கள் எழுந்திருக்கிறது. ஒட்டாத ஒரு வாழ்வை வாழ்ந்து தொலைத்த அந்தத்தாய் போல பலரை தமிழ் கட்டுப்பாடுகளும் பண்பாடெனப்படும் சொல்லும் கட்டி வைத்திருக்கிறது. கட்டுகள் அறுபடும் வரை இவ்வித பிறழ்வுகளும் நடக்கவே செய்யும்.




 தொலைபேசிச் சேவை ஒன்று நானே தொடங்க இருக்கிறேன் :D  


 

வேண்டாமக்கோய் இந்த விசப்பரீட்சை. இன்னொரு அவச மருத்துவ சேவையும் நீங்கள் தொடங்க வேண்டி வரும். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=J77Mlhw_D1A

 

 

இப்படியான ஆண் ஜென்மங்களுக்கு வாழ்க்கைப்பட்டால் யாரும் பொறுப்பல்ல.

 

யாரும் பொறுப்பல்ல என்று எப்படியண்ணா கூறுவீர்கள்?? எங்கள் சமூகக் கட்டமைப்பும்,. நீண்ட  காலமாகப் பெண்ணை அடக்கி வைத்த எல்லோருமேதான் பொறுப்பு. 

 

நன்றி ரதி, நன்றி சாந்தி கருத்துக்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புருசன் குடிச்சுப்போட்டோ அல்லது குடிக்காமலோ மனைவியை அடிக்கிறான்,சின்ன வீடு வைத்திருக்கிறான்,அல்லது மனைவியை திருப்த்தி படுத்த முடியாதவன்(பணம் சம்பாதிப்பில்)மற்றும் இன்னும் இத்தியாதி பிழைகளை எழுதி வெளி உகற்க்கு கொண்டு வருதில் ஆயிரம் நன்மைகள் உண்டு.ஆனால் மனிதனே அல்லாத ஒரு மன நோயாளியின் கேடு கெட்ட நடத்தையை எழுதுவதின் மூலம் நீங்கள் சொல் வருவது என்ன :rolleyes: மனைவி மாரே தாய் மாரே உங்கள்  பெண் பிள்ளகளை தகப்பணுடன் தனிமையில் விடாதீர்கள்,எப்பவும் கணவனில் ஒரு கண் வைத்திருங்கள் என்றா சொல்ல வாறீங்கள்.யாரோ ஒரு மனயோளி நாய் செய்த மிருகத்தனமான செலுக்காக ஒட்டு மொத்த தந்தை மகள் பாசத்தை,உறவை கொச்சை படுத்தவா :unsure:  :(

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுவைப் பிரியன்,
உங்கள் கோபம் நியாயமானதுதான். அனால் பல பெண்களே தன்  கணவன் பற்றித் தெரியாமல், தமக்கே தெரியாது தன் கணவனுக்குத் துணை
போகின்றனர். ஒரு கேடு கெட்டவனைப் பற்றி எழுதினால் இன்னொரு கேடுகெட்டவன் தான் கோபம் கொள்ள வேண்டுமே தவிர, நல்ல தந்தை ஏன் கோபம் கொள்ளவேண்டும் என்று கேட்கிறேன்?????

இப்படியானவற்றை வெளியே கொண்டுவருவதால் யாரோ ஒருவருக்குத் தன்னும் பயன் ஏற்படும் என்பது என் தீராத நம்பிக்கை.
தீயனவற்றை மூடி மறைப்பதால் என்ன பயன்???

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

இப்படியான பல சகிக்கமுடியாத சம்பவங்கள் நடப்பதை செய்தி ஊடகங்கள் ஊடாக அறிகிறோம். அண்மையில் யாழ் மண்ணில் கூட இப்படியான ஒரு சம்பவம் நடதிருந்ததாக ஒரு செய்தியில் படித்திருந்தேன். 

சகிக்கமுடியாத,கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டிய மிருகத்தனமான  செயல் இது.

 

இவ்வாறான சம்பவத்தினை மையமாக வைத்து ஆக்கத்தை எழுதத் துணிந்த சுமி அக்காவுக்கு பாராட்டுக்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கவிதை கருத்துக்கு. ஆனால் எனக்குப் பிடித்த சுமே என்னும் பெயரை எதற்காக சுமியாக்குகிறீர்கள். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.