Jump to content

திமுக இபோதும் எங்களுடன் கூட்டணியில் உள்ளனர் - ப.சிதம்பரம், அந்தோணி சந்தித்து பேச முடிவு .


Recommended Posts

ஜெனிவாவில் நடைபெற்று வரும் ஐ.நாவின் மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் அமெரிக்கா இலங்கைக்கு எதிராக கொண்டு வரும் தீர்மானத்தில் மாற்றம் கொண்டு வர இந்தியா நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு கொடுத்து வரும் ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று   கலைஞர் அறிக்கை விடுத்தார்.

இந்த நிலையில் உத்திரப்பிரதேச மாநிலம் லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித், இலங்கைக்கு எதிரான தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த இன்னும் காலஅவகாசம் உள்ளது. இப்போதைக்கு எந்த முடிவும் எடுக்கவில்லை. திமுக எங்களுடன் கூட்டணியில் உள்ளனர். அவர்களுடன் இதுதொடர்பாக பேசுவோம் என்றார்.

இதனையடுத்து மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கை குறித்து கலைஞரிடம் தெளிவாக எடுத்து கூறும் வகையில் மத்திய அமைச்சர்கள் சிதம்பரம் மற்றும் அந்தோணி ஆகியோர் அவரை சந்தித்து பேச உள்ளனர் என செய்திகள் வெளியாகி உள்ளன.

Share this post

 

 

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13420:dmk-meeting&catid=36:tamilnadu&Itemid=102

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.