Jump to content

ஒருங்கிணையும் மாணவர்கள் :வலுப்பெறும் போராட்டம்


Recommended Posts

சென்னை: இலங்கை தமிழர் பிரச்னையில் அரசியலை துளியும் அண்டவிடாமல் தமிழகத்தில் அனைத்து கல்லூரி மாணவர்கள் ஒருங்கிணைப்பு போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.இலங்கையில் நடந்த இனப்படுகொலையை கண்டித்தும் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரியும், ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டுவர வழியுறுத்தியும், சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் இம்மாதம் 11-ம் தேதி உண்ணாவிரதம் இருந்தனர்.இந்த போராட்டத்திற்கு ஆதராவாக தமிழகம் முழுவதும்கல்லூரி மாணவர்களிடம் தூண்டுதலாக அமைந்தது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் அரசு சட்டக்கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக பல்வேறு சட்டக்கல்லூரிமாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை துவக்கியுள்ளனர்.நேற்று சென்னையில் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டமும், பேரணியும் நடத்தி வருகின்றனர். சென்ன மெரீனா கடற்கரையிலும் மாணவர்கள் உண்ணாவிரதப்போராட்டத்தினை நடத்தினர். அவர்களை போலீசார் கைது செய்தனர்.

அரசியல் சார்பற்ற போராட்டம்

இந்த போராட்டத்தில் அரசியலை துளியும் கலக்கவிடாமல் தன்னெழுச்சியாக இந்த நடத்தி வந்த போராட்டத்தினை .கோவை, திருச்சி, நெல்லை, வேலூர் , கடலூர், சேலம் ஆகிய மாவட்டங்களில் சட்டக்கல்லூரி மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டுவருகின்றனர்.. இலங்கை அரசு மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும். ராஜபக்ஷேயை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் என்பதுதான் இவர்களின் கோஷமாக இருந்தது.இந்த உண்ணாவிதப் போராட்டத்தில் சில மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டது.அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீவிரமடைந்துவரும் போராட்டத்தால் பல கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சில கல்லூரிகளில் பட்டமளிப்பு விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.இது குறித்து மாணவர் ஒருவர் கூறியதாவது: சென்னையில் 25 கல்லூரிகளை ஒருங்கிணைந்து மாபெரும் பேராட்டத்தை நடக்க திட்டமிட்டுள்ளோம். இலங்கையில் இனப்படுகெலை நடத்தியதில் இந்திய அரசுக்கும் பங்குண்டு.இதனை கண்டித்து எங்களின் போராட்டம் தொடரும் என்றார். சென்னையில் ஐ.ஐ.டி. மாணவர்களும் ‌பங்கேற்றனர். அவர்கள் இலங்கை அரசை கண்டித்து முழக்கங்களை எழுப்பினர்.மும்பை, பெங்களுரூ, ஐதரபாத் நகரங்களிலும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாற்‌றத்தை தரும்

மாணவர்கள் போராட்டம் குறித்து நாது கடந்த தமிழ் ஈழத்தைச் சேர்ந்த முருகையா சுகிந்தன் கூறுகையில், ‌மாணவர்கள் போராட்டம் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும்.இந்தியாவின் கொள்கையிலும் மாற்றம் வரும் என்றார்.

Dinamalar

தினமலரில் இப்பிடி ஒரு செய்தி போட்டிருப்பதே மிகப்பெரிய ஆச்சரியம்.....

அன்க்குள்ள உண்மை நிலையை உணர்த்தி நிக்குது....

போதுவாவே தினமலர் தமிழர் போராட்டத்திற்கு எதிரான ஒரு பார்பனிய பத்திரிக்கை

Link to comment
Share on other sites

Quote:"தினமலரில் இப்பிடி ஒரு செய்தி போட்டிருப்பதே மிகப்பெரிய ஆச்சரியம்....."

 

சந்தர்ப்பவாத வியாபரி
 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.