Jump to content

இனப்படுகொலையாளி ராசபக்சேவை தண்டிக்கக்கோரி தஞ்சாவூரில் 5000 மாணவர்கள் திரண்ட பிரம்மாண்ட பேரணி! (ஏனைய போராட்ட செய்திகளும் இங்கு உடனுக்குடன் இணைக்கப்படும்.)


Recommended Posts

ஒரு மனுசர் கொஞ்ச நேரம் சந்தோசமாக இருக்கும் போது அதை வந்து குழப்பப்கூடாது .

இது எங்கு எப்படி முடியும் என்று எனக்கு தெரியும் அதனால் பெரிதாக எடுக்கவில்லை .

Link to comment
Share on other sites

  • Replies 1.3k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

  • கருத்துக்கள உறவுகள்

tamilnaduuuuuuuuuuuuu.jpg

சென்னையில் உள்ள மத்திய வருமானவரி அலுவலகம் மாணவர்களால் முற்றுகை

14 03 2013

மாணவர் போராட்டம் தமிழகமெங்கும் வீறு எழும் இவ்வேளையில் மாணவர்கள் வரி கட்ட மாட்டோம் என்று இந்திய அரசின் வருமான வருமான வரி துறை அலுவலகத்தை மாணவர்கள் முற்றுகையிட்டனர்.

தமிழ்நாடு மக்கள் கட்சியின் மாணவர் அமைப்பான தமிழ்நாடு மாணவர் கூட்டமைப்பு இந்த முற்றுகை போரட்டத்தில் ஈடுபட்டது . சாஸ்தா பொறியியல் கல்லூரி, எஸ் ஆர் எம் பல்கலை, வேல்ஸ் டெக், நந்தனம் கலைக் கல்லூரி, லயோலா கல்லூரி போன்ற பல கல்லூரி மாணவர்கள் இப்போராட்டத்தில் பங்கு பெற்றனர் . சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அலுவலகத்தை நோக்கி மாணவர்கள் பேரணியாக முழக்கமிட்டவாறு நகர்ந்தனர். அப்போது காவல் துறை வழக்கம் போலவே மாணவர்களை தடுத்து நிறுத்தியது .மாணவர்களுக்கும் காவல்துறைக்கு வாக்குவாதம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. மாணவர்களை தொடர்ந்து இந்திய அரசை கண்டித்தவாறு முழக்கமிட்டனர் . பின்பு மாணவர்கள் ௨௦௦ போரையும் கைது செய்து காவல்துறை வாகனத்தில் ஏற்றி கிரீம்ஸ் சாலையில் உள்ள மண்டபத்தில் அடைத்து வைத்தது . இது குறித்து மாணவர் அருண் நமக்கு கூறுகையில் , இந்திய அரசு தான் தமிழினப் படுகொலையை இலங்கையோடு சேர்ந்து நடத்தியது . இன்று இலங்கையை காப்பாற்றவும் செய்கிறது .

தமிழர்களுக்கு வேறு அரசு இல்லை . இந்தியா தான் தமிழர்களையும் சேர்த்து ஆள்கிறது . இந்த அரசு தமிழர்களுக்கு எதிராக செயல்படுவதால் எங்களுக்கு இந்திய அரசு வேண்டாம் , இந்திய அரசின் சேவையும் வேண்டாம் . அதனால் இந்திய அரசுக்கு இனி நாங்கள் ஏன் வரி கட்ட வேண்டும் , வரியை கட்ட மாட்டோம் , இந்திய அரசு தனது வருமான வரி அலுவலகத்தை மூடிவிட்டு எங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறட்டும் .

தமிழருக்கு எதிரான ஒரு அரசு நிர்வாகம் எங்கள் மண்ணில் இருக்க வேண்டாம் . அதனால் தான் மாணவர்கள் நாங்கள் இந்த முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டோம் என்று கூறினார் . மாணவர்கள் இப்போது விழித்துக் கொண்டார்கள் . இனியும் இந்திய அரசு தமிழர்களை ஏமாற்ற முடியாது என்பது தெளிவாகிறது .

நன்றி தமிழ் இணையங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
thilpanannaaaaaaaaaaaaa.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ராஜபக்சே கொடும்பாவி எரிப்பு : 

புதுக்கோட்டை மாணவர்கள் ஆவேசம் ( படங்கள் )

புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி மாணவர்கள் இலங்கை அதிபர் ராஜபக்சே மீது போர்குற்ற நடவடிக்கை எடுக்க இந்திய அரசு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறத்தி  3 வது நாளாக தொடர் உண்ணாவிரதம் இருக்கிற்னர். இவர்களுக்கு ஆதரவாக சக மாணவர்களும் உண்ணாவிரதம் இருக்கின்றனர்.

  மேலும்,  மாணவர்கள் கொடும்பாவிகளை எரித்து எதிர்ப்புகளை காட்டினார்கள்.

 

mannargudirajapakse2.jpg

mannargudirajapakse1.jpg
Link to comment
Share on other sites

தமிழக உறவுகளுக்கு தலைசாய்த்து நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரி மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு வழங்கிய நடிகர் சிலம்பரசன்.

simbu.jpg

 
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

577276_593368507341845_376308394_n.jpg

திருச்சி அரச சட்டக் கல்லூரி மாணவர்களும் ,ஈ வே ரா கல்லூரி மாணவர்களின் போராட்ட களத்திலிருந்து 

இழுத்து பூட்டப்பட்ட பாரத ஸ்டேட் தலைமை வங்கி-

மாணவர்கள் எழுப்பிய வீர முழக்கங்கள் 

"ஆயுதம் ஏந்த புலிகள் நாங்கள் அடக்குமுறைக்கு அஞ்சமாட்டோம்
பிரபாகரன் தம்பிகள் நாங்கள் ஈழம் மலரும் வரை ஓயமாட்டோம்
இந்திய அரசே இந்திய அரசே எச்சரிக்கை இது எச்சரிக்கை "

தமிழீழத்திற்கான பொது வாக்கெடுப்பை ஐ .நா மன்றம் உடன் நடத்த மதிய அரசு நிர்பந்திக்க வேண்டும் என்றார்கள்.

 

FB

Link to comment
Share on other sites

திருவண்ணாமலையி்ல் பள்ளி, கல்லூரி மாணவர்கள் சாலைகளில் முழங்கால் போட்டு மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

487668_593700913975271_263394655_n.jpg

 

- முகநூல் -



"திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் விமானநிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் 14.3.2013 "

 

1888_441043269298038_1807893183_n.jpg

 

- முகநூல் -



இலங்கைக்கு எதிராக வலுவான நடவடிக்கை…போராட்டக் களத்தில் மாணவர்கள்

சென்னை லயோலா கல்லூரி மாணவர்கள் தொடங்கி வைத்த உண்ணாவிரதப் போராட்டம் இன்று தமிழகம் முழுவதும் பரவியுள்ளது. சென்னை, காஞ்சிபுரம், திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் கல்லூரி மாணவர்கள், இலங்கை அரசுக்கு எதிராக போராட்டங்களில் குதித்துள்ளனர்.

9 பேருக்கு வலுக்கட்டாயமாக சிகிச்சை: ஐநா மனித உரிமை மாநாட்டில் இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானம் கொண்டு வர வேண்டும்.போர்க் குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை வேண்டும்.இனப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண இலங்கையில் தமிழர்களிடையே பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளே கல்லூரி மாணவர்கள் நடத்தும் போராட்டங்களின் முக்கிய நோக்கமாக இருக்கிறது.

புதுச்சேரி சட்டக் கல்லூரி மாணவர்களில் 12 பேர் கடற்கரைச் சாலையில் அம்பேத்கர் மணிமண்டபம் அருகிலும், 9 பேர் புதிய பேருந்து நிலையம் முன்பும் கடந்த 11ம் தேதி முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பேருந்து நிலையத்தில் உண்ணாவிரதம் இருந்த 9 பேரின் உடல் நலம் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரையும் புதுச்சேரி காவல்துறையினர் வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர்.

மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி: புதுக்கோட்டையில் அரசு மன்னர் கல்லூரி மாணவர்கள் 12ம் தேதி முதல் உண்ணாவிரதம் இருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக பொன்னமராவதியில் கணேசர் கலை அறிவியல் கல்லூரி மாணவ-மாணவியர் 200 பேர் ஒருநாள் உண்ணாவிரதம் இருந்தனர். பிரபாகரன் மகன் பாலச்சந்திரனின் உருவப் படம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்: சென்னையில் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவருக்கு உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி விடுதி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இலங்கை அரசைக்கண்டித்து சென்னை புரசைவாக்கத்தில் உள்ள சட்டக்கல்லூரி விடுதியில் 30 மாணவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு வந்தனர். இதில் பழனிக்குமார் என்ற மாணவரின் உடல்நிலை மிகவும் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறி மாணவர்கள் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி டீன் ராமகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

மாநிலம் முழுவதும் பரவும் மாணவர்கள் உண்ணாவிரதம்: காஞ்சிபுரத்தில் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி மாணவர்கள் 200க்கும் மேற்படோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தஞ்சையில் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த தமிழ்ப் பல்கலைக் கழக மாணவர்கள் 11 பேர், போராட்டத்தை தற்காலிமாக முடித்துக் கொண்டனர். இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக மாற்றுவழியில் போராடப் போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். கும்பகோணம் அரசு கலைக் கல்லூரி மாணவர்கள் 50 பேர் 13ம் தேதி முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். உடல்நலம் பாதிக்கப்பட்ட முத்துக்குமார் என்ற மாணவர், சிகிச்சைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதேபோல், திருச்சி, கோவை, திருநெல்வேலி உள்பட தமிழகத்தின் முக்கிய நகரங்கள் பலவற்றிலும் இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்காக கல்லூரி மாணவர்கள் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

4வது நாள் போராட்டம் 3 மாணவர்கள் மயக்கம், ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதி

 

576238_10151290276551626_619530858_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

உண்ணாவிரதம் இருந்து வரும் பாளையங்கோட்டை சேவியர் கல்லூரி மாணவர்களின் பெற்றோரும் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றுள்ளனர்.

 

-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மாணவர்கள் நடத்தும் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் 2-ம் நாளான நேற்று புகைபடத்தில் இருக்கும் தோழர் ஜகதிஷ் (22 years) அவர்கள் காலை முதல் மாலை6.30 வரை தண்ணீர் கூட அருந்தாமல் போராட்டத்தில் ஈடுபட்டார். இவரால் நடக்கவோ, உட்காரவோ முடியாது. தோழர்களே, மாணவர்களே வாருங்கள் போராட்டத்திற்கு...

 

392959_593702747308421_1871915143_n.jpg

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
 
 

மாணவர் போராட்டம் இன்று அனைத்து இடங்களிலும் பரவி இருக்கின்றது. மாணவர் போராட்டத்தை பற்றி சமூக இணையத்தளங்களில் கருத்துகளை இடுவதன் மூலம் நமது கடமையை முடித்துக் கொள்ளாமல் நாம் அனைவரும் மாணவர்களுடன் சேர்ந்து அந்தபோராட்டத்தின் வீச்சினை இன்னமும் அதிகமாக்குவோம். 

பத்து பதினைந்து மாணவர்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க மற்ற அனைவரும் வீட்டில் இருந்து கொண்டு அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கிறோம் என்று கூறுவதனால் எந்த ஒரு பலனும் கிடைக்கப்போவதில்லை.

மாணவர்களின் போராட்டத்தை நீங்கள் உண்மையிலேயே ஆதரிக்கின்றீர்கள் என்றால், நீங்களும் மாணவர்களுடன் சென்று உண்ணாவிரத மேடைக்கு சென்று அவர்களுடன் ஒன்றாக இருந்து ஆதரவு தெரிவியுங்கள். அதற்காக நீங்கள் அதிக தூரம் போகத் தேவையில்லை. போராட்டம் இப்பொழுது அனைத்து பகுதிகளுக்கும் பரவி விட்டது. உங்கள் வீட்டிற்கு அருகிலேயே இது போன்ற போராடங்கள் நடக்கின்றன. உங்களால முடிந்த அளவு நேரில் சென்று போராட்டத்தில் கலந்து கொள்ளுங்கள் 

ஒருவர் போராடினால் அராஜக அரசாங்கம் மித்திக்கும். நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து போராடினால் அரசாங்கம் மிரளும். 

தமிழர்கள் அனைவரும் ஓரணியில் திரள்வோம் 
தமிழீழமே ஒன்றே இலக்கென முரசறைவோம்...!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
poraddam.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
thilipanannaaaaaaaaaaa.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போராட்டத்தில் இருந்த 3 மாணவர்கள் கடுமையாக உடல்நிலை பாதிக்கப்பட்டு திருச்சி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கடுமையான வாந்தி மற்றும் ரத்தவாந்தியால் அவதிப்படும் அவர்கள் தற்பொழுது "புதிய தலைமுறை" ஊடகத்தின் முன்பு தற்காலிகமாக தங்கள் போராட்டத்தை முடித்துக்கொள்ள உள்ளனர். உடல்நிலை சீரானதும் மீண்டும் போராட்டக் களத்தில் இறங்குவோம் என்று உறுதியுடன் தெரிவிக்கின்றனர்

 

manavreee.jpg

 
 
Link to comment
Share on other sites

மாணவர் விக்ரம் உண்ணாவிரத திடலில் மயங்கி விழுந்தார்..... @ பாரதியார் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர்

 

150396_593702447308451_1000917118_n.jpg



- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மாணவர்களின் உடல் நிலை மிகவும் கவலைக் கிடம்.. :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருவாரூர் திரு.வி.க. அரசு கலைக்கல்லூரியில் காலவரையற்ற பட்டினிப்போரில் ஈடுபட்டுள்ள மாணவர்கள்

poraddapadam.png

 
Link to comment
Share on other sites

கோவை சட்டக் கல்லுரி மற்றும் அரசு கலைக்கல்லுரி மாணவர்கள் இன்று மூன்றாவது நாளாக தொடர்ந்து உண்ணாநிலை அறப்போரை மதிமுக கட்சி அலுவலகத்தில் நடத்தி வருகிறார்கள்.... நேற்று மாலை கல்லுரி முதல்வர் பேசிப் பார்த்தும் அவர்கள் உண்ணா நிலை அறப்போரை வாபஸ் பெற மறுத்து விட்டார்கள்..,...

 

625428_593705410641488_215953203_n.jpg

 

--------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

போராட்டத்தில் திருச்சி தனலட்சுமி கல்லூரி மாணவ, மாணவிகள் புதுக்கோட்டை மன்னர் கல்லூரி மாணவர்கள் காரைக்குடி அழகப்பா கல்லூரி மாணவிகளின் போராட்டம்.

 

428_351928564926113_1722729025_n.jpg

 

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

தமிழ் ஈழ போராட்டத்தில் மதுரை மாணவர்கள் !

 

522705_593267487351947_1668280779_n.jpg

 

- முகநூல் -

 

Link to comment
Share on other sites

483870_593682437310452_192946409_n.jpg

 

ஒட்டுமொத்தமாக தமிழகம் எங்கும் அகிம்சை போர் நடத்தும் மாணவர்களின் போராட்டங்களை கொச்சை படுத்தி ,திசைதிருப்ப முயலும் ஊடகங்களுக்கு ,

 

எமது கோரிக்கைகளில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்கமட்டோம் .

ஊடகங்களுக்கு எமது வேண்டுகோள் !

எமது கோரிக்கை இதுவே . இந்த கோரிக்கையை முன் நிறுத்தியே
அனைத்து மாணவர்களும் போராடுகிறார்கள். அமெரிக்காவின் தீர்மானத்தை எந்த ஒரு மாணவர்களும் ஆதரித்து போராடவில்லை .

1. அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை வன்மையாக கண்டிக்கிறோம். ஐ.நா. சபையில் அமெரிக்க தீர்மானத்தை நிறைவேற்றாதே

2. இலங்கையில் நடைபெற்றது வெறும் போர்குற்றமோ மனித உரிமை மீறலோ மட்டுமல்ல அதுதிட்டமிடப்பட்ட இனப்படுகொலை.

3. சர்வதேசவிசாரணையும் பொதுவாக்கெடுப்புமே தமிழ்மக்களுக்கான ஒரேதீர்வு. சர்வதேச விசாரணையும் தனித்தமிழ் ஈழ பொதுவாக்கெடுப்பும் நடத்துவதற்கான தீர்மானத்தை இந்திய அரசுமுன்மொழிந்து கொண்டுவரவேண்டும்

4. சிங்கள இனவெறி அரசின் துணைத்தூதரகத்தை தமிழ் மண்ணில் இருந்து வெளியேற்ற தீா்மானம் கொண்டுவரவேண்டும். மேலும் இந்திய அரசு இலங்கை உடனான அனைத்து அரசாங்க உறவுகளையும் துண்டிக்கவேண்டும்.

5. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று இலங்கை அரசின் மீது இந்திய அரசு பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும்

6. உலகத்தமிழா்களின் பாதுகாப்பை உறுதிச்செய்ய தமிழ்நாடு அரசு சார்பாக வெளியுறவுத் துறையை உருவாக்க வேண்டும்.

7. ஆசியநாடுகள் எதுவும் சா்வதேச விசாரணைக்குழுவில் இடம்பெறக்கூடாது.

8. தமிழக மீனவர்கள் சுட்டுக்கொல்லப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்த வேண்டும்.

9. ஈழத் தமிழா் பிரச்சனைக்கு இந்திய அரசு தீர்வு காணாவிட்டால் தமிழகத்திலிருந்து எந்த வரியையும் செலுத்தமாட்டோம்.

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகம் முழுவதும் அரசு கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை!

சென்னை தமிழகம் முழுவதும் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில் இலங்கையின் போர்க்குற்றம் குறித்து இந்தியா தனித் தீர்மானம் கொண்டுவர வேண்டும், ராஜபக்சவை போர்க்குற்றவாளியாக அறிவிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் உண்ணாவிரதம், போராட்டம், ஆர்ப்பாட்டம், கொடும்பாவி எரிப்பு உள்ளிட்டவற்றை மாணவர்கள் நடத்தி வருகின்றனர்.

சென்னை, மதுரை, நெல்லை, திருச்சி, கோவை உள்பட தமிழகம் முழுவதும் மாணவர்களின் போராட்டம் நாளுக்கு நாள் வலுத்து வருகிறது. பல இடங்களில் உண்ணாவிரதம் இருந்து வரும் மாணவர்களின் உடல்நிலை பாதிக்கப்பட்டு வரும் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாக வரும் 18ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த மாணவர்கள் முடிவு செய்திருந்தனர்.

இதையடுத்து, அனைத்து அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை அளித்து தமிழக அரசு இன்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழக அரசின் இந்த செயலால் எங்களது போராட்டத்தை ஒடுக்க முடியாது என்றும் எங்களது போராட்டம் தொடரும் என்றும் மாணவர்கள் அறிவித்துள்ளனர்.

manavaree.jpg
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
47490502.png
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

v-trichynews4%20%282%29.jpg

photo.gifஈழத்தமிழர்களுக்கு நீதிகோரியும் பொது வாக்கெடுப்பை நடத்தக்கோரியும் திருச்சி சட்டக்கல்லூரி மாணவர்கள் நான்காவது நாளாகவும் சாகும்வரையான தமது உண்ணா மறுப்பு போராட்டத்தை தொடர்ந்துவருகின்றனர்.

தமிழகமெங்கும் தொடர் உண்ணாவிரத போராட்டங்களும் சாலைமறியல் போராட்டங்களும் அரச நிறுவனங்களுக்கு  பூட்டு போடும் போராட்டங்களும் மாணவர்களால் நடத்தப்பட்டுவருகிறது.v-trichynews4%20%283%29.jpgv-trichynews4.jpgv-trichynews4%20%284%29.jpg

Link to comment
Share on other sites

நந்தனம் கல்லூரி மாணவர்கள் தர்ணா போராட்டம்

இலங்கைப் பிரச்னை விவகாரத்தில், கல்லூரி மாணவர்களின் உண்ணாவிரதப் போராட்டங்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், அமெரிக்க தீர்மானத்தைக் கண்டித்தும் சென்னை நந்தனம் கலைக்கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்துக்குள்ளேயே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

- முகநூல் -

 

தர்ணா போராட்டம் என்றால் என்ன? :unsure:  யாரும் தெரிந்தவர்கள் கூறுங்கள்.

 

 



வரும் ஞாயிற்றுக்கிழமை (17/03/2013) ஹைதராபாத் நகரில் கண்டனப் போராட்டம்

 

தமிழகம் முழுவதும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். உண்ணாவிரதம், ஆர்ப்பாட்டம் என்று பல்வேறு வகையான போராட்டங்களில் மாணவர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாநிலம் முழுவதும்
கல்லூரி வளாகங்கள் போராட்டக் களங்களாக மாறியுள்ளன.

வரும் ஞாயிற்றுக்கிழமை(17/03/2013) தெலங்கானா மாநிலம் ஹைதராபாத் நகரில் (ஹைடெக் சிட்டி பகுதியில்) கண்டனப்போராட்டமும், ஒருநாள் அடையாள உண்ணாவிரதமும் நடத்துவதற்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.

ஹைதராபாத் நகரில் வசிக்கும் தமிழ் நண்பர்கள் கலந்து கொள்ள வேண்டுகிறோம். நமது கோரிக்கைகளை பிற மாநில நண்பர்களுக்குஎடுத்துச் செல்வோம். பிற மாநில நண்பர்களையும் அழைத்து வாருங்கள்.

தொடர்புக்கு:
வடிவேல் - 9052624014


---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடக்கவுள்ளது

 

சென்னை மெரீனாவில் இருந்து உயர்நீதிமன்றம் வரை ,17-3-2013 அன்று மாணவர்கள் அமைதி ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அனைத்து சட்ட, மருத்துவ, பொறியியல், கலை, அறிவியல் கல்லூரிகளுக்கும், ஞாயிற்றுகிழமை விடுமுறை என்பதால், 50,000 மாணவர்கள் வருவார்கள் என எதிர் பார்க்கிறோம்.

அனைத்து மாணவர்கள் போராட்ட ஒருங்கினைபாளருடனும் தொடர்பு கொண்டு வருகிறோம். "கடல் தாண்டிய நம் சொந்தங்களுக்காக, கடற்கரையில் இணைத்திடுவோம்"

தொடர்புக்கு:8056158515


- முகநூல் -

Link to comment
Share on other sites

மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள்.


தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள்.

1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம்.

2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம்.

3. நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.

4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுட­ன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம்,

5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்­டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்க­ள் நண்பர்களுக்கும்­ இதை தெரிய படுத்தலாம்.

இந்த எளிய போராட்டங்களுக்க­ு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே?

இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும்,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்.


- முகநூல் -

Link to comment
Share on other sites

மாணவர் போராட்டத்துக்கு உதவி செய்யும் பொருட்டு ஒரு அவசர வேண்டுகோள்.

தமிழ­்நாட்டில் நடந்து வரும் மாணவர் எழுச்சி தாங்கள் அறிந்ததே,நாற்பத­ு ஆண்டுகள் கழித்து மாணவர்கள் தமிழின பிரச்சனைக்காக வெளியே வந்துள்ளார்கள் அவர்களை ஊக்குவித்து உதவ வேண்டியது நமது கடமை,மாணவர்களின­் போராட்டங்களுக்க­ு உங்கள் பங்களிப்பை நீங்களும் தரலாம்,மாணவர் எழுச்சி பெரும் அளவில் இருப்பதால் ஒருங்கிணைப்பதில­் களத்தில் இருக்கும் தோழர்கள் பெரும் சவால்களை சந்தித்து வருகிறார்கள்,அவ­ர்களுடன் நீங்களும் கைகோருங்கள்.

1 . வெறும் நானூறு முதல் ஐநூறு ருபாய் மட்டு இருந்தால் போதும் உங்கள் அருகாமையில் நடக்கும் மாணவர் போராட்டங்களுக்க­ு உங்கள் வீட்டிலேயே தேநீர் தயாரித்து கொடுக்கலாம்,பிஸ­்கட் போன்றவற்றை வாங்கி மாணவர்களுக்கு விநயோகிக்கலாம்.

2.வெறும் நூறு ருபாய் இருந்தால் போதும் அவர்களுக்கு மோர்,அல்லது எலுமிச்சை ஜூஸ் போன்றவற்றை உங்கள் வீட்டிலிருந்து தயார் செய்து கொண்டு போய் கொடுக்கலாம்.

3. நகல் எடுக்க வெறும் இருபத்தி ஐந்து பைசா போதும் இருநூற்று ஐம்பது ருபாய் மட்டும் இருந்தால் ஆயிரம் துண்டறிக்கைகள் அடித்து கொடுத்து அவர்களுக்கு உதவலாம்.

4.அதுவும் முடியவில்லை என்பவர்கள் அவர்களுக்கு குறைந்தது பானையில் குளிர்ந்த நீரை தர ஏற்பாடு செய்து தரலாம்,அவர்களுட­ன் ஒன்றிணைந்து துண்டறிக்கைகள் விநயோகிக்கலாம்,

5.குறைந்தது நீங்கள் உங்கள் அருகில் நடக்கும்,போராட்­டங்களுக்கு உங்கள் குடும்பத்துடனோ அல்லது நண்பர்களுடனோ சென்று மாணவர்களை வாழ்த்தி உற்சாக படுத்தலாம்,உங்க­ள் நண்பர்களுக்கும்­ இதை தெரிய படுத்தலாம்.

இந்த எளிய போராட்டங்களுக்க­ு நம்முடைய எளிய பங்களிப்பை தரலாமே?

இதை இனப்பற்றுள்ள ஒவ்வொருவரும் அவசியம் பகிர வேண்டும்,உலக தமிழர்கள் மாணவர்கள் பின் நிற்பதை உறுதி செய்யுங்கள்.

- முகநூல் -

 

 

வெளிநாடுகளிலிருந்து பணம் அனுப்பத்தக்க விபரங்களையும் யாழில் பிரசுரிக்க வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.