Jump to content

பாரிஜாதம் - திரை விமர்சனம்


Recommended Posts

கத்தி இல்லை... இரத்தம் இல்லை... அவனைப் போட்டுர்றேன்... அவன் கையை வெட்டு, காலை வெட்டு.... ஏய்ய்ய்ய்ய்ய்ய்ய்...... டாய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்..

.. இரைச்சல் இல்லை..... முதலில் பாக்யராஜுக்கு கை கொடுக்க வேண்டும்.... ரவுடிக்களும், தாதாக்களும் ஆக்கிரமித்திருக்கும் தமிழ்த் திரையுலகை அழகான தனது ஸ்கிரிப்ட் கொண்டு மீட்டிருக்கிறார்....

ரொம்ப ரொம்ப சுமாரான ஒரு கதையை எப்படி சுவாரஸ்யமாக்குவது என்ற வித்தை பாக்யராஜுக்கு இன்னமும் கை கொடுக்கிறது.... சீதா வீட்டில் வேலைக்காரியாக இருக்கும் கதாநாயகியைத் அவர் மகனுக்கே திருமணம் செய்துவைக்க நினைக்கிறார் சீதா.... இதை கதாநாயகியிடம் மட்டுமே சொல்லுகிறார்.... தன் பையனுக்கும், கணவனுக்கும் சொல்லாமல் சஸ்பென்ஸ் மெயிண்டெயின் செய்கிறார்..... சொல்லுவதற்கு முன்பே உயிரை வேறு விட்டு விடுகிறார்..... உண்மை தெரிந்து கதாநாயகன் கதாநாயகியை கைபிடிப்பது என்ற ஒற்றை வரி கதை..... தன் ட்ரீட்மெண்டால் மிகவும் சுவாரஸ்யமான திரைப்படமாக இதை உருவாக்கியிருக்கிறார் பாக்யராஜ்....

குறிப்பாக ஹீரோயின் எழுதும் கதையில் வரும் கதாபாத்திரங்களை தன் மகனாகவும், ஹீராயினாகவும் சீதா கற்பனை செய்து கொள்ள விஷுவல் ட்ரீட்மெண்ட் சூப்பர்.... ஹீரோயின் சரண்யாவைப் பொறுத்தவரை குத்துவிளக்கு மாதிரி இருக்கிறார்.... சினிமாவுக்கு ஏற்றத் தோற்றம் அவருக்கு இல்லை... ஹீரோ பிருத்வி செம ஸ்மார்ட்டாக இருக்கிறார்..... இருக்காதா பின்னே? எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே?

இடைவேளைக்குப் பிறகே பாக்யராஜ் சம்பூர்ணம் என்ற கேரக்டராக உள்ளே நுழைகிறார் (விசு ஸ்டைல்?).... பாக்யராஜ் தான் எல்லாக் குழப்பங்களையும் தீர்த்து வைக்கிறாராம்.... பிரகாஷ்ராஜுக்கு ஏற்ற வெயிட் கேரக்டர் இல்லை.... அவருக்கு நடிக்க ஸ்கோப் ரொம்பவும் கம்மியாக இருக்கிறது.... ஹீரோ அப்படியே 20 வருஷத்துக்கு முன்னால் இருக்கும் பாக்யராஜை இமிடேட் செய்கிறார்..... படம் முழுவதும் இழைக்கப்பட்டிருக்கும் மெல்லிய நகைச்சுவை படத்துக்குப் பலம்.....

படத்தின் ஒரிஜினல் கதையை விட ஹீரோயின் (எழுத்தாளராம்) எழுதும் பாரிஜாதம் கதை சூப்பராக இருக்கிறது... அந்தக் கதையின் முடிவு ரொம்பவும் சோகம்....

ரொம்ப நாளுக்குப் பிறகு காதுக்கு இனிமையான பின்னணி இசை.... புதுமுக இசையமைப்பாளருக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது.... ஒரு பாடல் ரொம்பவும் அருமை.....

பாரிஜாதம் - நன்றாகவே மணக்கிறது....

(www.madippakkam.blogspot.com)

Link to comment
Share on other sites

டபுள்மீனிங் இருந்தால்தான்யா பாக்கியராஜ் கதை.. அது இல்லையெண்டால் இது பூர்னிமா மோளுக்காக எழுதிக்கொடுத்த கதை..

உங்களுடைய குடில் பார்த்தேன்.. சென்னைத்தமிழ் அகராதி என்னை மிகலும் கவர்ந்துள்ளது.. :idea:

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே? :roll:

Link to comment
Share on other sites

டபுள்மீனிங் இருந்தால்தான்யா பாக்கியராஜ் கதை.. அது இல்லையெண்டால் இது பூர்னிமா மோளுக்காக எழுதிக்கொடுத்த கதை..

பெரியவரே.... உங்களைப் போன்றவர்கள் ஜொள்ளு விட இந்தப் படத்திலும் ஒரு "சமாச்சாரம்" உண்டு.... :D:D:D

ஜெனரேட்டர் உபயோகப்படுத்தியது உண்டோ? இல்லையென்றால் படத்தைப் பாருங்க....

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் பேரன் ஆச்சே? :roll:

ஆமாம் தூயா.... பிருத்விராஜன் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் நேரடி பேரன்.... இது நிறைய பேருக்கு தெரியாது.....

Link to comment
Share on other sites

ஜேனறேற்றர் உபயோகிச்சாத்தான் லைற்று பத்தும் எண்ட நிலைக்கு இன்னும் போகேல்லை.. நச்சுறல் பவரியையே எல்லாம் பத்திது..

:P

பெரியவரே.... உங்களைப் போன்றவர்கள் ஜொள்ளு விட இந்தப் படத்திலும் ஒரு "சமாச்சாரம்" உண்டு.... :D:D:D

ஜெனரேட்டர் உபயோகப்படுத்தியது உண்டோ? இல்லையென்றால் படத்தைப் பாருங்க....

Link to comment
Share on other sites

ஆமாம் தூயா.... பிருத்விராஜன் எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் நேரடி பேரன்.... இது நிறைய பேருக்கு தெரியாது.....

ம்ம்ம்ம் எதிர்பார்க்கவேயில்லை...

ஏதோ ஒரு மலையால நடிகர் என நினைத்தேன்.

தகவலுக்கு நன்றி

Link to comment
Share on other sites

நன்றி லக்கி தகவலுக்கு :P

மதி தாத்தாக்கு நீங்க கொடுத்த விளக்கம் காணாது அப்படியே கருணா(ய்) டக்கு தேனி ஜனநாயகம் என்ற வார்த்தை சேர்க்காமல் எது பேசினாலும் அவரது அறிவுக்கு எட்டாது :wink: :P

இனிமல் தாத்ஸூக்கு இந்த வார்த்தைகள் போட்டு விளக்கம் குடுங்க :wink:

Link to comment
Share on other sites

ஜேனறேற்றர் உபயோகிச்சாத்தான் லைற்று பத்தும் எண்ட நிலைக்கு இன்னும் போகேல்லை.. நச்சுறல் பவரியையே எல்லாம் பத்திது..

:P

அது சரி.... நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்.... :D:D:D

Link to comment
Share on other sites

ம்.. பாக்கியராஜ் கதையிலை வேறையென்ன ஜெனறெட்டர் வரும்.. றெகமென்டேசன் செய்யுறீங்க.. கனகாலம் படம் பாக்கேல்லை பாத்துட்டாப்போச்சு..

அது சரி.... நெனைப்பு தான் பொழைப்பை கெடுக்குமாம்.... :D:D:D

Link to comment
Share on other sites

பெரியவரே!

இந்த ஜெனரேட்டர் பர்ஸ்ட் நைட் ஜெனரேட்டர்.... :D க்ளூ போதுமா?

ம்.. பாக்கியராஜ் கதையிலை வேறையென்ன ஜெனறெட்டர் வரும்.. றெகமென்டேசன் செய்யுறீங்க.. கனகாலம் படம் பாக்கேல்லை பாத்துட்டாப்போச்சு..
Link to comment
Share on other sites

படம் என்னவெண்டு ஞாபகமில்லை ஆனா கட்டம் ஞாபகமிருக்கிறதாலை சொல்லுறன்.. படத்தின்படி பாக்கியராஜ் ஏற்கெனவே படத்தை பாத்திட்டார்.. தங்கச்சி தம்பிமாரோடை ஆக்கினை தாங்கேலாமை அவையளையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கப்போறார்.. செக்ஸ் கட்டம்வர அதுகள் பாக்காமலிருக்க சில்லறைக்காசை வேணுமெண்டு கொட்டிப்போட்டு தேடுங்கோ எண்டு சொல்லுறார்.. அதுகளும் தேடுதுகள்;..அவர் படத்தை ரசிச்சு பார்க்கிறார்.. இப்படி பார்த்து ரசிச்சு தன்னை மறந்து ஒரு கட்டத்துக்கு காசு கீழைபோட மறந்திடுவார்.. அப்ப ஒரு பெடி அவருக்கு ஞாபகமூட்டுது.. அதெல்லாம் பாத்து சிரிச்சதை நினைவுட்டியிருக்கிறியள்.. அது அந்தக்காலம்..

இப்ப என்னடாண்டா பிள்ளையள் டிவிடி ஹயர்பண்ணி கொண்டுவந்து பாக்குதுகள்.. அதுகள் போட நாங்கள்தான் விட்டிட்டு வெளியாலை போகவேண்டியாயிருக்கு.. அதுகளுக்கு கூச்சமில்லாட்டிலும் எங்களுக்கு கூச்சமாயிருக்கு..அதுகளோடையிர

Link to comment
Share on other sites

ம்ம் படம் நல்லா இருக்கு..பிருதிவிராஜ் நல்லா நடிக்குறார்..கதையில் வரும் கதையில் அவரின் நடிப்பு ரொம்ப சிரிப்பா இருக்கும்..சரண்யாவும் நல்லா நடிக்குறாங்க..(அப்பா போல) குரல் சொந்த குரல் என்று நினைக்குறேன்..அது கூட நல்லா இருக்கு..அத்தோட பாட்டுக்களும் சூப்பர்..உன்னை கண்டேன் பாட்டு நல்லா இருக்கும் பார்க்க :P

Link to comment
Share on other sites

ம்ம்ம்ம் எதிர்பார்க்கவேயில்லை...

ஏதோ ஒரு மலையால நடிகர் என நினைத்தேன்.

தகவலுக்கு நன்றி

எம்.ஜி.ஆரின் தாய்மொழியும் மலையாளம் தான்... :( அவர் இலங்கையில் கண்டி என்ற ஊரில் பிறந்தவர் என்பதாவது தெரியுமா?

எம்.ஜி.ஆரின் அண்ணன் சக்ரபாணியின் மகள் வயிற்றுப் பேரன் தான் பிருத்விராஜ்.... பிருத்விராஜின் தந்தை பிரபல மலையாள நடிகர் சுகுமாரன்....

இந்த விமர்சனத்துக்குத் தொடர்பில்லாத எம்.ஜி.ஆர் பற்றிய செய்தி :- எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் என்றால் ரொம்ப பிரியம்.... தன் அண்ணன் குழந்தைகள் அனைத்தையும் செல்லம் கொடுத்து வளர்த்தவர் அவர் தான்.... எம்.ஜி.ஆருக்குப் பிறகு அவரது சொத்துக்களை காதுகேளா குழந்தைகள் இல்லத்துக்கும், எம்.ஜி.ஆரின் அண்ணன் வாரிசுகளுக்கும் தான் பிரித்து அளிக்கப்பட்டது....

எம்.ஜி.ஆருக்கு பல்கலைக் கழகத்தால் டாக்டர் பட்டம் வழங்கப்பட்டதே அவர் குழந்தைகள் மீது காட்டிய அன்புக்காகத் தான்.... அந்தப் பல்கலைக்கழகத்தில் செனட் உறுப்பினராக இருந்த திமுகவின் முக்கியஸ்தர் ஒருவர் டாக்டர் பட்டம் வழங்க எதிர்ப்பு தெரிவிக்க முனைந்தார்.... இதுகுறித்து கலைஞரிடம் அவர் பேசியபோது கலைஞர் அவருக்கு செம டோஸ் விட்டார்.... "ஏன்யா அரசியல்ல வேணும்னா நாம எதிர் எதிர் துருவத்துலே இருக்கலாம்.... அதுக்காக உண்மைய மறைக்க முடியுமா? எம்.ஜி.ஆருக்கு குழந்தைகள் மீது அன்பில்லைன்னு சொன்னா உலகத்துலே வேற எவனுக்குய்யா குழந்தைகள் மீது அன்பு" என்று கலைஞர் கேட்டார்.... கலைஞரின் மகள் கனிமொழி எம்.ஜி.ஆருக்கு ரொம்பவும் செல்லமாம்...

Link to comment
Share on other sites

படம் என்னவெண்டு ஞாபகமில்லை ஆனா கட்டம் ஞாபகமிருக்கிறதாலை சொல்லுறன்.. படத்தின்படி பாக்கியராஜ் ஏற்கெனவே படத்தை பாத்திட்டார்.. தங்கச்சி தம்பிமாரோடை ஆக்கினை தாங்கேலாமை அவையளையும் கூட்டிக்கொண்டு படம் பார்க்கப்போறார்.. செக்ஸ் கட்டம்வர அதுகள் பாக்காமலிருக்க சில்லறைக்காசை வேணுமெண்டு கொட்டிப்போட்டு தேடுங்கோ எண்டு சொல்லுறார்.. அதுகளும் தேடுதுகள்;..அவர் படத்தை ரசிச்சு பார்க்கிறார்.. இப்படி பார்த்து ரசிச்சு தன்னை மறந்து ஒரு கட்டத்துக்கு காசு கீழைபோட மறந்திடுவார்.. அப்ப ஒரு பெடி அவருக்கு ஞாபகமூட்டுது.. அதெல்லாம் பாத்து சிரிச்சதை நினைவுட்டியிருக்கிறியள்.. அது அந்தக்காலம்..

பெரியவரே... அது "தாவணிக் கனவுகள்"

சிவாஜியும் அந்தப் படத்தில் நடித்திருந்தார்....

Link to comment
Share on other sites

எம்.ஜி.ஆரின் தாய்மொழியும் மலையாளம் தான்...  :(  அவர் இலங்கையில் கண்டி என்ற ஊரில் பிறந்தவர் என்பதாவது தெரியுமா?...

இலங்கையில் பிறந்தவர் என்பது தெரியும்.... தகவலுக்கு நன்றி லக்கிலுக்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் - அமெரிக்க அதிகாரிகள் தகவல் 19 ஏப்ரல் 2024, 03:01 GMT புதுப்பிக்கப்பட்டது 6 நிமிடங்களுக்கு முன்னர் இரானின் எல்லைக்குள் இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல் நடத்தியிருப்பதாக இரு அமெரிக்க அதிகாரிகள் பிபிசியின் அமெரிக்க கூட்டு நிறுவனமான சிபிஎஸ்ஸிடம் இந்த தகவலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து ஏராளமான விமானங்களை ரத்து செய்திருப்பதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனம் கூறியுள்ளது. இஸ்ஃபஹான் பகுதியில் தாக்குதல் நடந்திருப்பதாக இரானிய ஊடகமான ஃபார்ஸ் தெரிவிக்கிறது. இஸ்பஹான் பகுதி இரானின் அணுசக்தித் தளங்கள் மற்றும் ராணுவ விமான தளம் உள்ளது ஆகியவற்றின் இருப்பிடமாகும். இதனிடையே இஸ்பஹான் அணுமின் நிலையங்கள் பாதுகாப்பாக இருப்பதாக இரான் அரசுத் தொலைக்காட்சி கூறியுள்ளது. இரானின் அரசு ஒளிபரப்பு நிறுவனமான IRIB, "நம்பகமான ஆதாரங்களை" மேற்கோள் காட்டி, இஸ்பஹானில் உள்ள அணுசக்தி நிலையங்கள் "முற்றிலும் பாதுகாப்பானவை" என்று கூறியிருக்கிறது. அதே நேரத்தில், இஸ்ரேலிய ராணுவத்தை மேற்கோள் காட்டி வடக்கு இஸ்ரேலில் சைரன்கள் ஒலித்ததாக ராய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் விவரங்கள் எதுவும் தற்போது இல்லை மற்றும் இஸ்ரேலிய இராணுவம் "இந்த நேரத்தில்" கருத்து தெரிவிக்கவில்லை என்றும் அந்தச் செய்தி கூறுகிறது. ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் இருந்து 350 கிமீ தெற்கே நான்கு மணிநேர பயணத்தில் உள்ள இஸ்பஹானில் வெடிப்புகள் நடந்திருக்கின்றன.   பிபிசி பெர்சியன் சேவைக்கு கிடைத்த காணொளி இரானின் இஸ்பஹான் மாகாணத்தில் வசிப்பவர்கள் பல வீடியோக்களை அனுப்பியுள்ளதாக பிபிசி பெர்சியன் சேவை தெரிவித்துள்ளது. பிபிசி பெர்சியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட ஒரு வீடியோவில், விமான எதிர்ப்பு அமைப்பின் சத்தம் கேட்கிறது. Instagram பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது Instagram பதிவின் முடிவு எண்ணெய், தங்கம் விலை உயர்வு இஸ்ரேலிய ஏவுகணை இரானைத் தாக்கியதாக அமெரிக்க அதிகாரிகள் கூறியதை அடுத்து உலகளாவிய எண்ணெய் மற்றும் தங்கத்தின் விலைகள் உயர்ந்து பங்குகள் சரிந்தன. வெள்ளிக்கிழமை காலை ஆசிய வர்த்தகத்தில், ப்ரெண்ட் கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு சுமார் 3% உயர்ந்து சுமார் 90 அமெரிக்க டாலர்களாக ஆக இருந்தது, அதே நேரத்தில் தங்கம் ஒரு அவுன்ஸ் 2,400 டாலர்களுக்கு மேல் புதிய உச்சமாக வர்த்தகம் செய்யப்பட்டது. ஜப்பான், ஹாங்காங் மற்றும் தென் கொரியாவில் பெஞ்ச்மார்க் பங்கு குறியீடுகளும் தாக்குதல் செய்திக்குப் பிறகு சரிந்தன. கடந்த வார இறுதியில் இரானின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலுக்கு பிறகு இஸ்ரேலின் எதிர்வினையை முதலீட்டாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றனர். இரானிய அமைச்சர் எச்சரிக்கை இஸ்ரேலிய தாக்குதலுக்கு உடனடி பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் வெளியுறவு அமைச்சர் எச்சரித்துள்ளார். "இஸ்ரேலின் எந்தவொரு பதிலடிக்கும் தனது நாட்டின் பதில் "உடனடியாகவும் அதிகபட்ச மட்டத்திலும்" இருக்கும்" என்று தற்போது வெளியாகியிருக்கும் செய்திகளுக்கு சில மணி நேரங்களுக்கு முன்பு, இரானின் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர்-அப்துல்லாஹியன் எச்சரித்தார். கடந்த சனிக்கிழமை இஸ்ரேலை நோக்கி இரான் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கப் போவதாக இஸ்ரேல் கூறி வந்ததது. அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட இஸ்ரேலின் நட்பு நாடுகள் இஸ்ரேல் பதிலடி தரக்கூடாது என்று வலியுறுத்தி வந்தன. பட மூலாதாரம்,GETTY IMAGES இப்போதைய தாக்குதலுக்கு என்ன காரணம்? சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸில் உள்ள இரானிய தூதரகக் கட்டடத்தின் மீது கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதி நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில், மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டதற்கு பதிலடியாக, கடந்த சனிக்கிழமை இரவு இஸ்ரேல் மீது குண்டுவீச்சு நடத்தப்பட்டது என்று இரான் கூறுகிறது. தூதரகத்தின்மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலுக்கு இஸ்ரேல் மீது இரான் குற்றம்சாட்டுகிறது. இது தன் இறையாண்மையை மீறுவதாக இரான் கருதுகிறது. அத்தாக்குதலுக்கு இஸ்ரேல் பொறுப்பேற்கவில்லை. அந்தத் தாக்குதலில் இரானின் உயர்நிலைக் குடியரசுக் காவலர்களின் (Iran's elite Republican Guards - IRGC) வெளிநாட்டுக் கிளையான குத்ஸ் படையின் மூத்த தளபதியான பிரிகேடியர் ஜெனரல் முகமது ரெசா ஜாஹேதி உட்பட 13 பேர் கொல்லப்பட்டனர். லெபனானின் ஷியா ஆயுதக் குழுவான ஹெஸ்பொலாவுக்கு ஆயுதம் வழங்க இரான் எடுத்துவரும் முன்னெடுப்புகளில் அவர் முக்கிய நபராக இருந்தார். இந்தத் தூதரகத் தாக்குதல், இரானிய இலக்குகளுக்கு எதிராக இஸ்ரேல் நடத்துவதாகப் பரவலாகக் கூறப்படும் வான்வழித் தாக்குதல்களை ஒத்திருக்கிறது. கடந்த சில மாதங்களில் சிரியாவில் நடந்த வான்வழித் தாக்குதல்களில் பல மூத்த இரானிய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர். உயர் ரக துல்லிய ஏவுகணைகள் உட்பட ஆயுதங்கள் மற்றும் உபகரணங்களை IRGC சிரியா வழியாக ஹெஸ்பொலாவுக்கு அனுப்புகிறது. இஸ்ரேல் இதைத் தடுக்க முயற்சிக்கிறது. அதே போல் இரான் சிரியாவில் தனது ராணுவ இருப்பை வலுப்படுத்துவதையும் இஸ்ரேல் தடுக்க முயல்கிறது. https://www.bbc.com/tamil/articles/c254j8gykgvo
    • சில நாட்களுக்கு முன் கொத்து ஒன்றுக்கு இல‌ங்கையர் ஒருவர் 1900 என விலை கூறியதற்கு, தலையங்கம் "சுற்றுலாப் பயணிகளை ஏமாற்றும் இலங்கையர்கள்"  இப்ப இதுக்கு என்ன தலையங்கம் கொடுக்கலாம்? இதற்கு அதிரடி தலையங்கம் கொடுக்கும் உறவுக்கு பரிசில் வழங்கப்படும்.
    • இஸ்ரேல் ஈரான் மீது ஏவுகணைகள மூலம், தமக்கெதிரான தாக்குதலுக்கு பதிலளிக்கும் முகமாக, தாக்குதல்களை ஆரம்பித்து இருப்பதாக அல் ஜசீரா மற்றும் மேற்குலக ஊடகங்கள் செய்திகளை சற்று முன் வெளியிட்டுள்ளன. https://www.aljazeera.com/news/liveblog/2024/4/19/live-israel-launches-missile-attack-in-response-to-iran-assault     https://www.bbc.com/news/live/world-middle-east-68830092?src_origin=BBCS_BBC  
    • திரும்பவும் வாண வேடிக்கை ஆரம்பமாகிவிட்டது. ☹️
    • இது நன்கு திட்டமிடப்பட்,  வன்முறை, அச்சுறுத்தல் எதுவும் பாவிக்கப்படாத  கொள்ளை Heist.   
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.