Jump to content

தமிழகத்தில் தலித்களின் நிலை


Recommended Posts

தமிழகத்தில் தலித்களின் நிலை

 

“நமது கடவுள் சாதியை காப்பாற்றும் கடவுள், நமது மதம் சாதியை காப்பாற்றும் மதம், நமது அரசாங்கம் சாதியை காப்பாற்றும் அரசாங்கம்” என தந்தை பெரியார் கூறுவார். அப்படிப்பட்ட சாதியை காப்பாற்றும் நட்வடிக்கையை காலம் காலமாக ஆளும் வர்க்கங்கள் பல வடிவங்களில் செய்து வருகின்றன. இந்தியாவில் இனக்குழுக்களுக்குள் அகமண முறைகள் நீடித்த்தன் தொடர்ச்சியாக சாதி ஒரு தனி வர்க்கமாக நிறுவப்பட்டது, சமூக உற்பத்தி உறவுகளிலும், நிலவுடைமைகளில் ஏற்பட்ட வளர்ச்சிப் போக்கில் வர்க்கங்கள் ஏற்பட்டதன் பின்னணியில் வர்க்கத்திற்குள் சாதி தன்னை நிலை நிறுத்திக் கொண்டதோடு அன்றிலிருந்து ஏற்பட்ட வேலைப்பிரிவினைகள் சாதியின் கட்டுமானத்தை உறுதி செய்தன. குறிப்பாக நில உறவுகளை அதிகம் கொண்ட இந்தியாவில் ஆளும் வர்க்கமாக திகழ்ந்த நிலப்பிரபுக்கள், ராஜாக்கள், மன்னர்கள் சாதிய பாகுபாட்டை உறுதிப் படுத்தி கட்டிக்காத்தனர்.

ஆரியர்களின் வருகைக்கு பின் வர்க்கத்திற்குள் இருந்தஏற்றத்தாழ்வு சாதியாக கெட்டிப்பட ஆரம்பித்த்து, பிராமணியம்ஆளும் வர்க்கத்தின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதாக இருந்த்து. அதுபுறமண முறை தடை செய்த்து. இன்று புறமண முறைக்கு ஆதரவானசட்டங்கள் இருந்தாலும், அகமண முறையே சாதியை நிலைத்திருக்கவைக்கும் காரணியாக இருப்பதால் அதனை பிராமணியம்வளர்த்தெடுக்க அனைத்து வித சதிகளையும் செய்த்து. அகமணமுறை நீடிக்க வேண்டுமாயின் ஆண், பெண் எண்ணிக்கையில்சமத்துவத்தை பேண வேண்டி வந்த்து. ஆண் எண்ணிக்கைகுறைந்தாலோ, பெண் எண்ணிக்கை குறைந்தாலோஇயற்கையாகவே புறம்ணத்தை நோக்கி தள்ளிவிடப்படுவார்கள்.இதை தடை செய்ய குறுக்கு வழிகளை பல நியதியின் பெயரில்கடைபிடிக்க ஆரம்பித்தார்கள்.

 

 1. விதவையை கணவன் உடலோடுஎரித்து விடுவது ( உடன்கட்டை ஏறுவது) 2. கணவனை இழந்தவரைமொட்டையடித்து, கட்டுப்பாடுகளை விதித்து விதவைக் கோலம்பூண வைப்பது 3. மனைவியை இழந்தவன் மீது பிரம்மச்சரியத்தைவிதிப்பது 4. பருவமெய்தாத சிறுமியை மணம் முடிப்பது (பால்யவிவாகம்). போன்ற நியதிகளின் அடிப்படையிலும்,தெய்வத்தின் பெயராலும் அகமண முறையை தக்க வைத்து ஒருஇனத்திற்குள்ளேயே சாதிய கட்டுமானத்தை கடந்த 3000ஆண்டுகளுக்கு மேலாக தக்க வைத்தனர். இந்த மோசடிப்பேர்வழிகளுக்கு எதிரான போராட்டம் தொடர்ந்து சித்தர்கள் மற்றும்லோகாய வாதிகளால் நடத்தப்பட்டு வந்துள்ளது. மேற்படிகட்டமைப்பை உறுதி செய்யும் நடவடிக்கைகள் மன்னர்கள்அரசாணைகள் மூலமும் இந்து மத்த்தின் தோற்றுவாயான சைவ,வைணவ மதங்களின் பெயராலும் நடைபெற்றது.

 

நில உடைமை சமூக அமைப்பிலிருந்து நவீன கருவிகளின்மூலம் சமூக உற்பத்தியை நோக்கி மாற்றங்கள் உருவாகிவரக்கூடிய காலத்திலும் தமிழகத்தில் சாதிய படிநிலைகளைபாதுகாக்கும் ஏற்பாடுகள் தொடர்கின்றன, இன்றும்கல்விநிலையங்கள், மருத்துவமனைகள், திருமணமண்ட்பங்கள்,வர்த்தக நிறுவனங்கள், ஊர்கள், சாலைகளின் பெயராலும், அகமண முறைகளின் உள்ளார்ந்த விசயங்களாலும்கட்டமைக்கப்படுகின்றன.

 

இந்திய விடுதலைப்போராட்ட காலத்திலும் சாதியபாகுபாட்டிற்கு எதிராகவும், சாதியின் பெயரால் நிகழும்தீண்டாமைக் கொடுமைக்கு எதிராகவும் வலுவான கலக குரல்கள்எழுப்ப்ப்பட்ட போதும் பிராமணியம் அதை அடக்கி ஒடுக்கஅனைத்துவிதமான நடவடிக்கையிலும் ஈடுபட்டது, இதற்கிடையில்இடை நிலை சாதிகளும் பிராமணியத்தின் உட்கூறுகளைஉள்வாங்கி கொண்டு தங்களையும் அதே போல் காட்டிக்கொள்ளும் நடவடிக்கையில் ஈடுபட்டன. அது குறிப்பிட்ட காலத்தில்பிராமணரல்லாத சாதிகள் என்ற நிலையை நோக்கியும்,பிற்படுத்தப்பட்ட சாதிகளில் தொழில் அடிப்படையில் உயர் சாதி,தாழ்ந்த சாதி என்ற பாகுப்பாட்டை வலுப்படுத்தும் ஏற்பாடும்நடந்த்து. தீண்டாமைக்கு எதிராக தாழ்த்தப்பட்ட மக்களுக்காக குரல்கொடுத்த தந்தை பெரியார் பலகட்ட போராட்டங்களை நடத்தினார்,நீதி கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இதில் முன்னின்றது.இதன் பின் தோன்றிய திராவிடர் கழகம் இதை உரக்க பேசியது.ஆனால் அதிலிருந்து உருவான திமுக, அதிமுக, மதிமுக போன்றஅமைப்புகள் எல்லாம் இது குறித்து எந்த சிந்தனையையும்செலுத்தியதாக தெரியவில்லை. 1967ல் ஆட்சிக்கு வந்த திமுகவும்அதன் பின் அதிமுகவும் மாறி மாறி ஆட்சியில் இருந்துவருகின்றன. பிராமணியத்திற்கு எதிரான போராட்டத்தைநடத்தியவர்கள் இதர சாதியினருக்குள் இருந்த உள்முரண்பாடுகளையும், பகைமைகளையும் களைய எந்த விதநடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தொடர்ந்து அதை தங்களுக்கு சாதகமான வாக்கு வங்கியாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

 

இன்றும் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உள்ள 129 அரசு பள்ளிகளில் தலித் மாணவர்கள் ஒருவர் கூட பயிலவில்லை. மேலும் 30 பள்ளிகளில் 5 சத தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். இதர பள்ளிகளில் 20 சத்த்திற்கும் குறைவான தலித் மாணவர்களே பயின்று வருகின்றனர். பள்ளிகளில் இன்றும் பல இடங்களில் தலித் மாணவர்களை கடைசி இருக்கையில் உட்கார வைப்பது. பாகுபாடு கடைபிடிப்பது போன்ற தீண்டாமையின் வடிவங்களும் இருந்து கொண்டு தான் வருகின்றன.

தலித் பகுதி மக்களின் மிக மோசமாக சந்திந்தித்துக் கொண்டு இருக்கும் பிரச்சனைகளில் ஒன்று கல்வி நிலையங்களில் படிப்பை பாதியில் நிறுத்துவது ஆகும்,. அருந்ததியர் சமூகத்தில் இந்த எண்ணிக்கை கூடுதலாக உள்ளது என அன்னை தெரசா கிராமப்புற வளர்ச்சிக்கட்டளையின் ஆய்வு கூறுகிறது, 5 ம் வகுப்பில் 60 சதவீதமும், 8ம் வகுப்பில் 45 சதவீதமும், 10ம் வகுப்பில் 20 சதம் என்ற அடிப்படையிலே செல்கின்றனர் என்ற வேதனையான விபரம் மனித மனங்களை உறைய வைக்கிறது,

 

ஆதி திராவிட நலத்துறையின் கீழ் இயங்கும் மாணவர் விடுதிகளின் நிலைமையோ இன்னும் கொடுமையாக உள்ளது, 1565 விடுதிகள் சேரிகளைப் போலவே காட்சியளிக்கிறது, தமிழக அரசு சிறைகைதிகளுக்கு கூட ஒரு நாள் உணவிற்கு ரூ 25 முதல் 30ம்., போலீஸ் நாய்க்கு 65 ரூபாயும் ஒதுக்குகிறது, ஆனால் கல்லூரியில் படிக்கும் தலித் மாணவனுக்கு 18 ரூபாய் ஒதுக்கிறது, இது உழைக்கும் மக்களாகிய தலித் மக்கள் குறித்த ஆட்சியாளர்களின் அக்கறை புரிய வைக்கிறது.

தமிழகத்தின் மக்கள் தொகையில் 19 சதம் தலித் மக்கள் உள்ளனர். ஆனால் சென்னை போன்ற பெரு நகரங்களில் ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்பிலும் தலித் மக்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது, நகர மேம்பாடு என்ற பெயரால் தலித் மக்கள் சேரிகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றனர். கூவம், பக்கிங்ஹாம் கால்வாய்., அடையாறு போன்றவற்றின் கரைகளில் பெரும் பகுதி தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கென்று குடிநீர், சாக்கடை, கழிப்பறை, சுகாதார வளாகங்கள் போன்ற அடிப்படை வசதிகள் கிடையாது. தலித் மக்களுக்கென்று கடந்த 38 ஆண்டுகளில் 72000 வீடுகள் மட்டுமே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியாத்தால் கட்டித் தரப்பட்டுள்ளது, குடிசையில்லா நகரம் என அறிவித்து அங்கிருந்த தலித் மக்களையெல்லாம் நகரை விட்டு அப்புறப்படுத்தும் நடவடிக்கையையே அரசு செய்தது, பாதுகாப்பின்மை காரணமாக தலித்துகள் தங்கள் சொந்த சமூக மக்களின் அருகாமையிலேயே வசிக்க விரும்புகின்றனர். இந்த மக்களுக்காக ஒதுக்கப்பட்ட சிறப்பு உட்கூறு திட்ட நிதியான ரூ 3821 கோடியை கடந்த திமுக அரசு வேறுபணிகளுக்கு திருப்பி விட்டது,

 

இந்தியாவின் அரசியல் சாசனம் உருவாக்கப்பட்டபோதே பட்டியல் சாதியினரின் நலனை பாதுகாக்க பல பிரிவுகள் உருவாக்கப்பட்டன, அதன்படி 1979ல் சிறப்பு உட்கூறுதிட்டம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டு பின்னர் 11 வது ஐந்தாண்டு திட்டத்தில் சப் பிளான் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது, இதன்படி ஒதுக்கப்படும் நிதிகள் அனைத்தும் தலித் மற்றும் பழங்குடியின மக்களின் உரிமை சார்ந்த மற்றும் உரிமையை பெறுவதற்கான திட்டமாக கொண்டு வரப்பட்டது, தமிழகத்தில் கடந்த 14 ஆண்டுகளில் (1995.-2010) 14298 கோடி ரூபாய்கள் மறுக்கப்பட்டுள்ளது என ஒரு புள்ளிவிபரங்கள் தெரிவிக்கிறது. இந்த நிதியில் சுமார் ஆயிரம் கோடி ரூபாயை தலித் மக்களுக்காக நில விநியோகத்திற்கு பயன்படுத்தியிருந்தால் ஓர் ஆண்டிற்குள் அனைவருக்கும் நிலத்தை வழங்கியிருக்க முடியும்.

தமிழகத்தில் மொத்த நில உடைமையாளர்கள் 78,98,932 பேர், இதில் 9,03,548 பேரிடம். அதாவது 11 சதமான தலித்களிடம் மட்டுமே நிலம் உள்ளது, ஆனால் உண்மையில் 4 லட்சம் பேரிடம் வெறும் 2 ஏக்கர் நிலம் அளவு மட்டுமே உள்ளது, இது மொத்தநிலப்பரப்பில் 7 சதம் மட்டுமே ஆகும், குறிப்பாக மேற்கு மண்டலத்தில் மிகக்குறைவான அளவே தலித்களிடம் நிலம் உள்ளது, ஈரோட்டில் 17 சதம் தலித் மக்கள் தொகைக்கு 2 சதம் நிலமும், கோவையில் 16 சதம் தலித் மக்கள் தொகைக்கு 1.38 சதமும், நீலகிரியில் 30 சதத்திற்கு 0.90 சதம் நிலமும் என உள்ளன. தமிழகத்தில் உள்ள கோயில் நிலங்களில் 5 லட்சம் ஏக்கர் நிலத்தில் 4 இலட்சம் ஏக்கர் உயர் சாதியினரிடமும், மீதி 1 லட்சம் ஏக்கர் நிலமே இதர சாதியினருக்கு ஏலம் விடப்படுகிறது.

 

ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்பு பீகாரிலும், மேற்கு வங்கத்திலும் சாதிய ஒடுக்குமுறையும், வன்முறைகளும் ஏராளமாக நிகழ்ந்த வண்ணம் இருந்தது. ஆனால் மேற்கு வங்க நிலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. இதற்கு அந்த மாநிலத்தின் இடதுசாரி அரசாங்கம் காரணமாகும். ஏனென்றால் 13 லட்சம் ஏக்கர் நிலத்தில் 7 லட்சம் ஏக்கர் நிலம் (54சதம்) தலித் மக்களுக்கு வழங்கப்பட்டு அவர்களின் வாழ்க்கை தரம் உயர்த்தப்பட்டுள்ள அவர்கள் கௌரவத்துடனும், மரியாதையுடனும் வாழும் நிலை உருவாக்கப்பட்டுள்ளது. என்பதை கவனிக்க வேண்டியுள்ளது, இது அந்த மாநிலத்தில் சமூக ஒடுக்குமுறை என்பதற்கு பதில் சமூக ஒற்றுமையை பேணி காத்தது. இதனால் தான் அங்கே தலித் பஞ்சாய்த்து தலைவர் மீதான வன்முறைகளோ, படுகொலைகளோ நடைபெறவில்லை.

பாரதியும், பாவேந்தனும், வள்ளலாரும், பெரியாரும் பிறந்த தமிழக கிராமங்களில் 100க்கும் மேற்பட்ட வடிவங்களில் தீண்டாமைக் கொடுமைகள் இன்றளவிலும் நீடித்து வருகின்றன. எவிடன்ஸ் அமைப்பு 12 மாவட்டங்களில் ஆய்வு நடத்தி விபரங்களை வெளியிட்டு உள்ளது, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகை, சேலம், நாமக்கல், விழுப்புரம், கடலூர், கோவை, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் 213 கிராமங்களில் அந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இதில் 70கிராமங்களில் ரேசன் கடைகளில் சாதிய பாகுபாடு உள்ளது. 23 கடைகளில் தலித்கள் பிறருடன் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 2 சத கடைகளே தலித் மக்களின் வசிப்பிடங்களில் உள்ளது. 2009ம் ஆண்டு கள்ளகுறிச்சி அருகில் தச்சூரில் காசியம்மாள் என்ற தலித் பெண்ணின் கை வரிசையில் நின்ற ஆதிக்க சாதி பெண் மீது பட்டுவிட்டது என கூறி பொது இடத்தில் அவர் மானபங்கப்படுத்தப்பட்டார்.

 

67 சத கிராமங்களில் சலூன் கடைகளில் முடிவெட்ட முடியாது. 68 சத கிராமங்களில் பொது குழாயில் நீர் எடுக்க தடையும் , 131 கிராமங்களில் தனித்தனி நீர் நிலைகளும் உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையங்களில் தலித் பெண்களுக்கு பிரசவத்தின் போது மருத்துவர்கள் தொடடு பார்ப்பதில்லை. மதுரை கீரிப்பட்டியில் வசந்தாமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலித் பெண் சேர்க்கப்பட்ட போது அங்கிருந்த ஊழியர் கொண்டை ஊசியால் பெண்ணின் பனிக்குடத்தை குத்தி சேதப்படுத்தியுள்ளார், தீண்டாமை ஒரு பாவச் செயல் என பாடப்புத்தங்களில் அச்சடித்து கொடுத்து விட்டு 29 கிராமங்களில் பள்ளிகளில் பாகுபாடும் காட்டப்படுகிறது. தலித் மாணவர்கள் துப்புறவு பணியில் ஈடுபடுத்தப்படுவதும், பயணங்களில் பாகுபாடு காட்டப்படுகிறது. அதே போல் பேருந்துநிறுத்தங்களில் அமருவதில், டீக்கடைகள், ஓட்டல்களில் தனி பெஞ்ச், டம்ளர்கள் எனவும் பாகுபாடு காட்டப்படுகிறது. தபால்நிலையங்களில் தலித்கள் நுழையக்கூடாது என்பதும், ஊராட்சி மன்றங்களில் தலித் தலைவர்களை இருக்கைகளில் அமரவிடாமல் தடுப்பதும் தொடர் கதையாக உள்ளது. மலம் அள்ளும் தொழிலில் இன்றும் தமிழகத்தில் 50000க்கும் மேற்பட்ட தலித் மக்கள் ஈடுபடுத்தப்படுவதாக விபரங்கள் கூறுகிறது.

 

திண்டுக்கல் மாவட்டம் ஒடைப்பட்டியில் கலையரங்கத்தில் தலித்கள் நுழைய தடையுள்ளது. பொது சுடுகாடுகளில் புதைக்க அனுமதிக்காத நிலையும் உள்ளது, பெரும் பகுதி தலித் மக்களுக்கான சுடுகாடுகள் ஓடைகளில் உள்ளன, மழைக்காலங்களில் அவைகளை பயன்படுத்த முடியாத நிலையில் எந்த வழியும் இல்லாது சாலை ஒரங்களில் புதைக்கும் கொடுமையும் நிகழ்ந்து வருகிறது, அதே போல் தலித் மக்களின் பிணங்களை ஆதிக்க சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக கொண்டு செல்ல முடியாத சூழலும் உள்ளது, தேனி மாவட்டம் கூழையனுர்ரில் எதிர்த்து கேட்ட சின்னாயி என்ற தலித் மூதாட்டி மீது இந்தாண்டு ஜனவரி மாதம் பெட்ரோல் குண்டு வீசி அவர் கொல்லப்பட்டார். கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் தலித் மக்கள் பொதுகுழாயில் தண்ணீர் பிடிக்கக்கூடாது என்கிற கட்டுபாட்டோடு பொது இடத்தில் செல்போன் பேசக்கூடாது, பைக் ஒட்டக் கூடாது என நவீன வடிவ தீண்டாமைகளும் நிகழ்ந்து வருகிறது.

 

நவீன காலத்தின் அறிவியல் வளர்ச்சிப் போக்கில் தீண்டாமை மாறும், மறைந்து போகும் என கருதப்பட்டு வந்தாலும், உண்மையில் தீண்டாமையும், சாதிய படிநிலைகளும் நவீன வளர்ச்சிக்கேற்ப தங்களது வடிவங்களை மாற்றிக் கொண்டு உயிர் வாழ்ந்து வருகின்றன. முதலாளித்துவம் தன்னுடைய நெருக்கடியில் இருந்து தப்பித்துக் கொள்ள அடையாளங்களின் பின்னால் ஒழிந்து கொள்ள முயற்சி செய்கிறது, அதன் பகுதியாக இனம், மொழி, சாதி, மதம் போன்றவற்றை தேவையான அளவு ஊதி பெருக்கி தனக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்கிறது.

 

தலித் மக்களின் பிரச்சனைகளுக்காக குரல் கொடுப்பதற்காக துவங்கப்பட்ட தலித் கட்சிகள் எல்லாம் இன்று தேர்தல் அரசியல், தமிழ் தேசியம், இன உணர்வு என பிரச்சனைகளை திசைத்திருப்புகின்றன. ஒரு பகுதி அரசியல் கட்சிகள் ஆதிக்க சாதியினரின் வாக்கு வங்கியை நம்பி தலித்களை கைவிடும் போக்கையே மேற்கொள்கின்றன. நாம் தற்போதைய நிகழ்வுகளை பார்த்தோமானால் தெளிவாக தெரியும், நாலுமூலைகிணறு, கொடியங்குளம், வாசர்த்தி, கோட்டைப்பட்டி, தாமிரபரணி, பரமக்குடி துப்பாக்கி சூடுகளும், காவல்துறை தாக்குதல்களும், திண்ணியம், காங்கேயனுர், மேலவளவு, உத்தபுரம், பாப்பாபட்டி, கீரிபட்டி, நாட்டார்மங்கலம், கொட்டகாச்சினேந்தல், சிதம்பரம் நடராஜர் கோவில் என நூற்றுக்கணக்கான இடங்களின் பெயரை சொல்ல முடியும், தலித்துகளுக்கு எதிரான நடவடிக்கைகள் என்று....

 

ஆரோக்கியமின்மை, தரமற்ற வாழ்க்கை, குடிநீர் பற்றாகுறை, பெருகும் மக்கள் தொகை அடர்த்தி, உள்கட்டமைப்பு வசதியின்மை போன்றவையும் தலித் மக்களுக்கு மிகுந்த நெருக்கடிக்களை கொடுத்து வருகின்றன. இந்த நிலையில் தான் சமத்துவபுரங்களை உருவாக்குகிறோம் என கடந்த திமுக அரசு பம்மாத்து செய்தது. ஊருக்கு வெளியே கட்டப்படும் சமத்துவபுரங்களால் மட்டும் சமத்துவம் வந்துவிடாது.. ஒவ்வொரு கிராமத்திலும் சமத்துவபுரங்கள் மலர வேண்டும், அதற்கு இன்றைய உத்தபுரம் எப்படிஉத்தமபுரமர்க மாறும் என அதிகார வர்க்கத்தின் ஒரு சிறுபகுதி மேற்கொண்ட முயற்சியால் சமூக ஒருபாட்டை நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின் உருவாக்கினார்களோ.. அதே போல் தமிழக ஆட்சியார்களும், காவல்துறையும் முழுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

 

தலித் மக்களுக்கு வழங்கபடும் திட்டங்கள் யாவும் சலுகைகளோ, இலவசங்ளோ அல்ல மாறாக அவை அவர்களின் உரிமை என்கிற கோணத்திலிருந்து ஆதிக்க சாதியினரும் பார்க்க வேண்டிய அணுகுமுறை தேவைப்படுகிறது, அதை நோக்கிய போராட்டத்தை தொடர்ந்து தமிழக மண்ணில் நடத்த வேண்டியுள்ளது. கால சக்கரத்தை முன்னோக்கி நகர்த்த தடையாக இருக்கும் தீண்டாமை, சாதிய ஒடுக்குமூறைகளை முற்றாக ஒழித்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது ஆட்சியாளர்களின் கடமை.. ஆனால் கல்விநிலையம் முதல் அரசு அலுவலகங்கள் வரை இன்றும் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி ஆண்டுக்காண்டு நடைபெற்றாலும், தீண்டாமை ஒரு மனிதத் தன்மையற்றது என பாடப்புத்தகங்களில் அச்சடித்து விநியோகம் செய்தாலும், ஆளும் வர்க்கத்தின் உறுதியான நடவடிக்கையிலேயே தீண்டாமை ஒழிப்பை சாத்தியபடுத்த முடியும். தலித் மக்களின் மேம்பாடு என்பது ஒட்டுமொத்த உழைப்பாளி மக்களின் மேம்பாட்டோடு இணைந்தது என்கிற அடிப்படையில் சாதிய பாகுபாடுகளும், ஒடுக்குமுறைக்கு எதிரான நடவடிக்கைகளையும் வேகப்படுத்த அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒன்றிணைய வேண்டும். அதே போல் இளைய தலைமுறையும் அகமண முறையில் இருந்து புறமண முறைக்கு மாற முயற்சி செய்ய வேண்டும். அது தான் சாதிய கட்டமைப்பை ஒரு பகுதி உடைத்தெறிய பயன்படும். சமூகத்தின் பொதுபுத்தியிலும் மாற்றம் வரவேண்டும்.

 

http://aravinthanmr.blogspot.in/2011/12/blog-post.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
    • இப்போது உள்ள‌ சூழ‌லில் ஈழ‌ உண‌ர்வு ம‌ன‌சில் இருக்க‌னும் அதை ஊரில் வெளிக் காட்டினால் அடுத்த‌ க‌ன‌மே ஆப்பு வைப்பாங்க‌ள்   ஊரில் ந‌ட‌க்கும் மாவீர‌ நாளுக்கு இன்னும் அதிக‌ ம‌க்க‌ள் க‌ல‌ந்து கொள்ளுபின‌ம் ஆனால் பின்விலைவுக‌ளை நினைச்சு வீட்டிலையே மாவீர‌ர் ப‌ட‌த்துக்கு பூ வைச்சு வில‌க்கு ஏற்றி விட்டு ம‌ன‌சில் இருக்கும் க‌வ‌லைக‌ளை க‌ண்ணீரால் போக்கி விட்டு அந்த‌ நாள் அதோடையே போய் விடும்   பெத்த‌ தாய் மாருக்கு தான் பிள்ளைக‌ளின் பாச‌ம் நேச‌ம் அன்பு ம‌ழ‌லையில் இருந்து வ‌ள‌ந்த‌ நினைவுக‌ள் தாய் மாரின் ம‌ன‌சை போட்டு வாட்டி எடுக்கும் என்ன‌ செய்வ‌து 2009க‌ளில் இழ‌க்க‌ கூடாத‌ எல்லாத்தையும் இழ‌ந்து விட்டோம்😞..............................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.