Jump to content

ஜெனீவா தீர்மானம்: இனிமேல்தான் முடிவு


Recommended Posts

""ஜெனீவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் குறித்து அமெரிக்காவுடன் இலங்கை அரசு பேச்சு நடத்திய பிறகு, அந்தத் தீர்மானத்தை ஆதரிப்பதா, வேண்டாமா என்பது குறித்து மத்திய அரசு முடிவு செய்யும்'' என்று வெளியுறவு அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

 

 

இலங்கை போர்க்குற்றங்கள் தொடர்பாக ஜெனீவா கூட்டத்தில் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று திமுக, அதிமுக, இடதுசாரிக் கட்சிகள் மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன.


இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கடந்த மூன்று தினங்களாக அக்கட்சிகளின் உறுப்பினர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.

 

இது குறித்து, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் சல்மான் குர்ஷித் புதன்கிழமை கூறியதாவது:


ஜெனீவாவில் நடைபெற்றுவரும் ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கைக்கு எதிராகத் தீர்மானம் கொண்டு வரப்படும் என அமெரிக்கா கூறியுள்ளது.

 

அந்தத் தீர்மானம் தொடர்பாக அமெரிக்காவுடன் பேச்சு நடத்தி சுமுகத் தீர்வு எட்டும் வாய்ப்பை ஆராயும்படி இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி.எல். பெரிûஸ கேட்டுக் கொண்டுள்ளேன்.

கடந்த ஆண்டு நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் கவுன்சில் கூட்டத்தில் இலங்கை போர்க் குற்றங்கள் தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

அந்தத் தீர்மானம் எந்த அளவுக்குச் செயல்படுத்தப்பட்டுள்ளது, மேற்கொண்டு என்ன செய்யப்படும் என்பன போன்றவற்றை அமெரிக்காவிடம் இலங்கை விளக்க வேண்டும்.

அத்துடன், தனக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழியாமல் அமெரிக்காவை தடுக்கும் வாய்ப்புகளை இலங்கை அரசு ஆராய வேண்டும்.

 

இலங்கை போர்க்குற்றங்கள் குறித்த விவகாரம் மனிதாபிமானத்துடன் தொடர்புடையது. இந்த விஷயத்தில் யார் பெரியவர், யார் சிறியவர் என்று பார்க்காமல் பரஸ்பரம் பேசித் தீர்வு காண வேண்டும் என்று ஜி.எல். பெரிûஸ கேட்டுக் கொண்டுள்ளேன். அதன் பிறகே இந்தியாவின் நிலை தெளிவுபடுத்தப்படும். அதுவரை சம்பந்தப்பட்டவர்கள் காத்திருக்க வேண்டும் என்று சல்மான் குர்ஷித் கூறினார்.

 

http://dinamani.com/india/article1491461.ece

Link to comment
Share on other sites

இப்போதும் மதில் மேல் பூனையாக தான் இந்தியா உள்ளது.இதனால் தான் இவர்களை நண்பனாக சிறிய நாடோ பெரிய நாடோ ஏற்பதில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுப்பிரமணியன் சுவாமியைப் பாத்துக் கொண்டு இருக்கினம் போல கிடக்கு! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சு.சாமி..நேரே ஒபாமாவை சந்திதிருப்பார்.....(ஒபாமாவுடன் போட்டோ எடுப்பதற்கு சில ஆயிரங்கள் போது...அப்புறம் படம் காட்டி அரசியல் நடத்தலாம்)அப்படியே ..நேரை வந்து சோனியாவை சந்திக்கலாம்..நாய் வால் கிந்தியங்கள்...ஊழல் பெருச்சாளிகள்...திருதவே முடியாத ஜென்மங்கள்...இவங்களுக்கு தோல்வி நிச்சயம்...இப்ப இலங்கயை சாட்டிவிட்டு தப்ப நினைக்கிறங்கள்...ஏனெனில் எப்படியோ ஏதொ ஒர் தீர்மானம் வரப்போகுது...அது பெரும்பன்மை வாக்கால் நிறைவேறப்போகுது.....அதுதான் உண்மை..

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.