Jump to content

ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவிக்கக் கோரி கடலூரில் ஒருவர் தீக்குளிப்பு!


Recommended Posts

இவ்வாறான தீக்குளிப்புகள் வேண்டாம் தமிழக உறவுகளே... அதனால் எந்த பிரயோசனமும் கிடைக்கப்போவதில்லை. இழப்பு மட்டுமே எஞ்சும்... ஈழத்தை நேசிக்கும் உங்களை போன்றவர்கள் உயிருடன் இருந்து வேறுவழிகளில் போராடுங்கள்.

ஆழ்ந்த அனுதாபங்கள்..

Link to comment
Share on other sites

புலிக்கொடிகளின் மத்தியில் நிற்கும் படம்..

 

378372_615859805095781_521963947_n.jpg

 

- முகநூல் -

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சலிகள்.இனியும் இப்படியான உயிரிழப்புகள் வேண்டாம்.

Link to comment
Share on other sites


3.JPGஇலங்கை அதிபர் கொலைகார ராஜபக்சவை தண்டிக்க வேண்டும் எனவும், தமிழீழம் மலர வேண்டும் எனவும், அதற்கு இந்தியா துணை நிற்க வேண்டும் என வலியுறுத்தி
கடலூர் தமிழர் மணி தன்னையே தீக்கிரையாக்கினார்.

 அவரது உடல் சென்னை
மருத்துவனையில் இருந்து கடலூருக்கு எடுத்து செல்லப்பட்டது. மருத்துவனையில்
மதிமுக, நாம் தமிழர் கட்சி உட்பட பல கட்சி இயக்கத் தோழர்களும், தோழர்
மணிக்கு சிறப்பான வீர வணக்கத்தை செலுத்தினர். திரு பழ நெடுமாறன் , மதிமுக
மல்லை சத்தியா, நாம் தமிழர் ஆவல் கணேசன் மற்றும் பல தமிழர் அமைப்பு
தலைவர்களும் தங்கள் வீர வணக்கத்தை செலுத்தினர்.
 
கீழ்ப்பாக்கம்
மருத்துவமனை வாயில் வரை தமிழர்கள் வீர வணக்கம் செலுத்திய வண்ணம் ஊர்வலமாக
நடந்து வந்தனர். அதன் பின் காவல்துறை அவர்களை ஊர்வலம் நடத்த அனுமதி
மறுத்தது. தொடர்ந்து மணியின் உடல் அரசு ஊர்தியில் கடலூருக்கு பயணமானது.
கடலூரில் நடைபெறும் இறுதி சடங்கில் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான்
கலந்து கொள்ளவுள்ளார்.

1.JPG2.JPG3.JPG4.JPG5.JPG

http://www.dinaithal.com/index.php?option=com_content&view=article&id=13134:mani-kadalure&catid=36:tamilnadu&Itemid=102
Link to comment
Share on other sites

எனது ஆழ்ந்த இரங்கல்கள்.


இத்தகைய முடிவுகளைவிட்டு ஆக்கபூர்வமான செயல்வீரர்களாக நம்மவர்கள்
மாறவேண்டும்.நம்மிடையே இத்தகைய அரசியல்விழிப்புணர்வு உள்ளவர்கள்
குறைவு.எனவே அவர்கள் மற்றவர்களிடமும் இத்தகைய விழிப்புணர்வைப்
பரப்பிச் செயல்வீரர்களாவதே மேலான பணியாகும்.

 

தமிழர்களாய் ஒன்றுபடுவோம்
Link to comment
Share on other sites

 
மனிதநேயம் மிக்கவர் கடலூர் மணி: வைகோ கண்ணீர் அஞ்சலி
 
சென்னை: வாழும் போது போராளியாக வாழ்ந்து தனி ஈழம் மலர தீக்குளித்து
உயிரை மாய்த்த கடலூர் மணிக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வீரவணக்கமும்
கண்ணீர் அஞ்சலியும் செலுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளதாவது:

கடலூர் நல்லவாடு பகுதியைச் சேர்ந்த மணி இளம் வயதில் இருந்தே நாட்டு
நலனுக்காகவும் அநீதியை எதிர்த்தும் போராளியாகவே வாழ்ந்து உள்ளார்.

வளைகுடா நாட்டில் கப்பல் துறையில் பணியாற்றி உள்ளார். மனிதநேயம்
மிக்கவராகவே வாழ்ந்து, 26 முறை குருதிக்கொடை அளித்து உள்ளார். சுனாமி வீடு
கட்டும் திட்டத்தில் நடந்த முறைகேடுகளை எதிர்த்தும், அதிகார வர்க்கத்தை
எதிர்த்தும் தொடர்ந்து போராடி வந்தார்.

ஈழத் தமிழர்களுக்கு நேர்ந்த கொடுந்துயர் குறித்து மனம் உடைந்தவராக பல
கட்டங்களில் தன் வேதனையைப் புலப்படுத்தி உள்ளார். இளந்தளிர் பாலச்சந்திரன்
படுகொலை, அவரை முற்றிலும் நிலைகுலையச் செய்ததாக அவரது நண்பர்கள்
வருத்தத்தோடு கூறினார்கள். அதனால்தான், மார்ச் 4-ந்தேதியைத் தேர்ந்தெடுத்து
உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்து தீக்குளித்தார்.

"தமிழ் இனக்கொலை செய்த ராஜபக்சேவை தண்டிக்க வேண்டும்; தமிழ் ஈழம் தனி நாடாக
வேண்டும்" என்று அறிவித்து தன் உயிரை அர்ப்பணித்து உள்ளார். அவருக்கு எனது
வீரவணக்கம்.

பேரிடி தலையில் விழுந்த நிலையில், கதறித்துடிக்கும் அவரது
துணைவியாருக்கும், பிள்ளைகளுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் எனது கண்ணீர்
அஞ்சலியைத் தெரிவிக்கிறேன்.

தமிழ் ஈழ விடியலுக்காக வாழ்ந்து போராட வேண்டிய இளைஞர்கள் தங்கள் உயிரை
மாய்த்துக்கொள்ள வேண்டாம் என்றும் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/tamilnadu-vaiko-pays-tribute-cuddalore-mani-170979.html
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத் தமிழர்களுக்காகக்  கொடுக்கப்பட்ட கடைசிப் பலியாக இருக்கட்டும்


கண்ணீர்  அஞ்சலிகள்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
    • 🤣........ நீங்கள் சொல்வது போல அது ஒரு சடங்கு மட்டுமே. நாங்கள் அந்தச் சடங்கின் மேல் முழுப் பொறுப்பையும் ஏற்றி விட்டு, அது பிழைத்தால் எல்லாமே, மொத்த வாழ்க்கையுமே பிழைத்து விடும் என்று எங்களை நாங்களே வருத்திக் கொள்கின்றோம். இவ் விடயங்களை நாங்கள் கொஞ்சம் இலகுவாக எடுக்கலாம். சடங்குகள் பூரணமாக நடக்குதோ இல்லையோ, காலமும் வாழ்க்கையும் காத்துக் கொண்டிருக்கின்றன எவரையும் அடித்து வீழ்த்த..........😀  
    • நூறாவ‌து சுத‌ந்திர‌ தின‌த்தின் போது இந்தியா என்ற‌ நாடு இருக்காது என்று ப‌ல‌ர் சொல்லி கேள்வி ப‌ட்டு இருக்கிறேன்.............மோடியே போதும் இந்தியாவை உடைக்க‌............இந்தியாவில் வ‌சிக்கும் முஸ்லிம்க‌ளும் இந்திய‌ர்க‌ள் ஆனால் மோடி முற்றிலும் முஸ்லிம்க‌ளுக்கு எதிராக‌ இருக்கிறார் ......................நீங்க‌ள் சொன்ன‌து போல் சோவியத் யூனியன் ம‌ற்றும் முன்னால் யூகேசுலோவியா உடைந்த‌து போல் இந்தியாவும் உடையும்.......................இன்னும் 10வ‌ருட‌ம் மோடி என்ற‌ கேடி ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்து ஆட்சியை பிடித்தால் இந்திய‌ர்க‌ள் த‌ங்க‌ளுக்குள் தாங்க‌ள் ஆயுத‌ம் தூக்கி ச‌ண்டை பிடிப்பின‌ம் பிற‌க்கு ஜ‌ம்மு க‌ஸ்மீர் போல் எல்லா மானில‌மும் வ‌ந்து விடும்.......................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.