Jump to content

"தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்கள் மிகக் குறைவே"


Recommended Posts

இந்தியாவில் கலப்புத் திருமணங்கள், அதாவது, வெவ்வேறு சாதிகள் இடையே நடக்கும் திருமணங்கள், ஒட்டு மொத்த திருமணங்களில் 10 சதவீதமே இருப்பதாக அமெரிக்காவின் பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.

 

இதை விட,வெவ்வேறு மதப்பிரிவுகளிடையே நடக்கும் கலப்புத் திருமணங்கள் 2.1 சதவீதமாக இருப்பதாக அந்த ஆய்வு கண்டறிந்துள்ளது.

 

இந்தியாவில் 2005-06ல் நடத்தப்பட்ட தேசிய குடும்ப சுகாதார ஆய்வுத் தரவுகளை அடிப்படையாக்க் கொண்டு இந்த ஆய்வு, பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வாளர்களால் நட்த்தப்பட்டிருக்கிறது. இந்த தேசிய குடும்ப சுகாதார ஆய்வில், இந்தியாவில் 29 மாநிலங்கள் ஆய்வு செய்யப்பட்டன. இதில் 99,260 திருமணமான பெண்கள் குறித்த தரவுகள் கணக்கிலெடுத்துக்கொள்ளப்பட்டன.

 

இந்த பிரின்ஸ்டன் பல்கலைக்கழக ஆய்வு, இந்த தேசிய ஆய்விலிருந்து, 32160 இந்துப் பெண்கள் குறித்த தரவுகளை மட்டும் கணக்கில் எடுத்துகொண்டு ஆய்வு செய்திருக்கிறது.

இந்த ஆய்வின்படி, இந்தியாவின் சாதிகளுக்கிடையே நடைபெறும் திருமணங்களில், 4.97 சதவீத திருமணங்களில், பெண்கள் தங்களை விடக் குறைந்த்தாக்க் கருதப்படும் சாதி ஆண்களையும், 4.95 சதவீத பெண்கள், தங்களை விட மேலாக இருப்பதாக கருதப்படும் சாதிகளைச் சேர்ந்த ஆண்களையும் திருமணம் செய்திருப்பதாகத் தெரிகிறது.

 

'கலப்புமணங்கள் தமிழ்நாட்டில் குறைந்தது ஆச்சரியமளிக்கவில்லை'

கலப்பு மணங்கள் தமிழ்நாட்டில் குறைந்து காணப்படுவதாக வரும் ஆய்வு முடிவுகள் தனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று திராவிடர் கழக வழக்கறிஞர் அருள்மொழி கூறுகிறார்.

 

பொதுவாக பொருளாதார மற்றும் கல்வி முன்னேற்றம் இருந்தால், சாதிக் கட்டுப்பாடுகள் பலவீனமாகும் என்று கருதப்பட்டாலும், சமூகப் பொருளாதாரத் தளங்களில் இந்தியாவின் பிற பகுதிகளை விட முன்னேறியதாக்க் கருதப்படும் , தென் மாநிலங்களில் சாதிகளைக் கடந்த கலப்புத் திருமணங்கள் 9.71 சதவீதமாகவே இருப்பதாக இந்த ஆய்வு கூறுகிறது.

கலப்புத் திருமணங்கள் இந்தியாவின் மேற்குப் பிராந்திய மாநிலங்களில் அதிகமாக , அதாவது 17 சதவீதமாக இருப்பதாகவும் இது கூறுகிறது.

 

வட இந்திய மாநிலமான பஞ்சாபில் இது 22.36 சதவீதமாக இருப்பதாகவும். வடகிழக்கு மாநிலமான மேகாலயாவில் கலப்புத்திருமணங்கள் 25 சத்வீதமாகவும் , கோவாவில் 26.67 சதவீதமாக இருப்பதாகவும் , தென்னிந்திய மாநிலமான கேரளாவில் இது 21.35 சதவீதமாக இருப்பதாகவும் அது கூறுகிறது.

 

முற்போக்கு சிந்தனை இருப்பதாக் கருதப்படும் தமிழ் நாட்டில் கலப்புத் திருமணங்கள் 2.59 சதவீதமே என்று இந்த ஆய்வு கூறுகிறது.

 

மற்றொரு தென்னிந்திய மாநிலமான கர்நாடகாவில் கலப்புத் திருமணங்கள் 16.47 சதவீதமாக இருக்கின்றன.

இந்தியா இன்னும் பொதுவாக ஒரு பாரம்பரிய விழுமியங்கள் உள்ள சமுதாயமாகவே இருப்பதாக்க் கூறும் இந்த ஆய்வு, சாதி என்ற அமைப்பு இன்னும் ஒரு கடுமையான அமைப்பாகவே இருக்கிறது, திருமணம் என்ற நிறுவனத்தை, சாதி என்பதைத் தாண்டி சிந்திக்க பெரும்பாலான இந்தியர்களால் முடியவில்லை என்று கூறுகிறது.

 

ஆனால், இந்த 10 சதவீத கலப்புத் திருமணங்கள் கூட ஒரு வித்த்தில் நல்ல ஒரு தொடக்கம் , சாதி பலவீனப்படுகிறது என்பதை இது காட்டும் ஒரு சமிக்ஞை என்று இந்த ஆய்வு கூறுகிறது.

 

அருள்மொழி கருத்துதமிழ் நாட்டில் கலப்புத் திருமணங்கள் குறைவே என்பதாக வரும் இந்த ஆய்வு முடிவை தான் சந்தேகிக்கவில்லை என்று கூறுகிறார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள்மொழி.

 

1925லிருந்து 1990 வரை, திராவிட இயக்கங்களின் தாக்கத்தால், தமிழகத்தில் கலப்புத் திருமணங்கள் அதிக அளவில் நடந்து வந்ததாகக் கூறும் இவர், ஆனால் திராவிடக் கொள்கையை நீர்த்துப் போகச் செய்யுமளவுக்கு, அரசியல் கட்சிகள் சிலவும், அறிஞர்கள் சிலரும் திட்டமிட்டு செயல்பட்டு வருகின்றனர் என்றார் அவர். குறிப்பாக, தர்மபுரியில் காதல் திருமணம் ஒன்று சாதிக் கலவரத்தில் முடிந்ததை சுட்டிக்காட்டிய அவர் , மருத்துவர் ராமதாஸ் போன்ற , திராவிட இயக்கப் பின்னணியில் வந்த அரசியல் தலைவர்கள் , இந்த மாதிரி கலப்புத் திருமணங்களுக்கு எதிராகச் செயல்படுவதாகக் குற்றம் சாட்டினார்.

 

http://www.bbc.co.uk/tamil/india/2013/02/130212_indiaintercaste.shtml

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஓம்….இலங்கை டுயல் நேஷ்னாலிட்டி எடுத்தால் ஒரே செலவுடன் சமாளிக்கலாம். இல்லாட்டில் இந்த புதிய நடைமுறையின் கீழ் 9 மாதம் நிற்க இரு தடவையும், 6 மாதம் நிற்க ஒரு தரமும் வெளியே போய் வர வேண்டும் (ஒருதரம் சென்னை ரிட்டர்ண் மட்டும் £180). 
    • தலையைச் சுற்றி மூக்கைத் தொட்டாலும் இதனை எவ்வறு விளங்கிக் கொள்கிறீர்கள் ? Respondents were asked if they think Israel should respond to the Iranian attack on Saturday night, to which 52% answered that it is better not to respond to end the current round of conflict. In comparison,  48% answered that Israel should respond, even if it means that the price would be an extension of the current conflict.  செய்தியில் இஸ்ரெயில் தனது கூட்டு நாடுகளை மீறி ஈரான் மீது தாக்குவதை 74 வீதமானோர் விரும்பவில்லை என்று உள்ளது. இதற்கு கபிதான் பொதுமக்கள் போரை விரும்பவில்லை என்று கொள்கை விளக்கம் தந்துள்ளார். இஸ்ரெய்லிய மக்களில் அரைவாசிப் பேர் கூட்டு நாடுகள் தடுக்காவிட்டால் போரையே விரும்புகிறார்கள் என்பதுதான் சாரம்.
    • உக்கிரேன் ர‌ஷ்சியா பிர‌ச்ச‌னைக்கு பிற‌க்கு டென்மார்க் ஊட‌க‌ங்க‌ளும் எச்சைக் க‌ல‌ ஊட‌க‌ங்க‌ளாய் மாறி விட்டின‌ம் ந‌ண்பா......................உக்கிரேன் இஸ்ரேல் செய்வ‌து ச‌ரி என்று சொல்லுங்க‌ள் பார்த்தா ச‌ரியான‌ க‌டுப்பு வ‌ரும் ஆன‌ ப‌டியால் பார்ப்ப‌தை நிறுத்தி விட்டேன் போர் விதி மீற‌ல‌ இஸ்ரேல் செய்தும் அதை ச‌ரி என்று சொன்னால் இதை எப்ப‌டி ஏற்ப்ப‌து ந‌ண்பா.................... டென்மார்க் நாட்டின் அட‌க்குமுறை ப‌ற்றி யாழில் புது திரி திற‌ந்து உண்மை நில‌வ‌ர‌த்தை எழுத‌ போறேன் நேர‌ம் இருக்கும் போது வாசி ந‌ண்பா...........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.