Jump to content

சட்டசபையில் அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ. மைக்கேல் ராயப்பனுக்கு தேமுதிக எம்.எல்.ஏக்கள் சரமாரி அடி-உதை


Recommended Posts

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவைப் புகழ்ந்து பேசியதோடு மட்டுமல்லாமல் தன்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் ஜெயலலிதா பாதைக்கு வர வேண்டும் என்று திட்டக்குடி தொகுதி தேமுதிக எம்.எல்.ஏ. தமிழழகன் பேசினார். இதனால் ஆத்திரமடைந்த தேமுதிக எம்.எல்.ஏக்கள் அவரை அடிக்கப் பாய்ந்தனர். அவர்களை ராதாபுரம் தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் தடுக்க முயன்றார். அப்போது அவருக்கு சரமாரியாக அடி விழுந்தது.

சில மாதங்களுக்கு முன்பு திட்டக்குடி தமிழழகன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், மதுரை மேற்கு சுந்தரராஜன், பேராவூரணி நடிகர் அருண் பாண்டியன் ஆகிய நான்கு தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வர் ஜெயலலிதாவை அடுத்தடுத்துப் பார்த்து அதிமுக ஆதரவாளர்களாக மாறினர்.

இதனால் தேமுதிக கடும் அதிர்ச்சி அடைந்தது. ஒருமுறை சட்டசபைக்குள் வைத்து சுந்தரராஜனை தேமுதிக எம்.எல்.ஏக்கள் மிகவும் அசிங்கமாகப் பேசி அவமானப்படுத்தினர்.

இந்த நிலையில் இன்று சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு திட்டக்குடி தமிழழகன் பேசினார். அப்போது நான் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து எனது தொகுதிப் பிரச்சினைகள், குறைகள் குறித்து முறையிட்டேன். பல கோரிக்கைளை வைத்தேன். அவற்றை முறையாகப் பரிசீலித்தார் முதல்வர், முடிந்தவரை நிறைவேற்றுவதாகவும் உறுதியளித்தார். முதல்வரைப் பார்தது விட்டு வந்த பின்னர்தான் எனது தொகுதிகளில் இப்போது பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நடந்து வருகின்றன.

எனவே என்னைப் போலவே மற்ற தேமுதிக எம்.எல்.ஏக்களும் முதல்வரைச் சந்திக்க வேண்டும், தங்களது குறைகளைக் கூற வேண்டு்ம். அவற்றை நிறைவேற்ற முதல்வர் காத்திருக்கிறார் என்றார். அவருக்கு ஆதரவாக ராதாபுரம் மைக்கேல் ராயப்பனும் பேசினார்.

இதைக் கேட்டதும் டென்ஷன் ஆனார்கள் தேமுதிக எம்.எல்.ஏக்கள். உடனடியாக தங்களது இருக்கைகளிலிருந்து எழுந்து தமிழழகனைத் தாக்க ஓடினர். இதைப் பார்த்த மைக்கேல் ராயப்பன் தமிழழகனை யாரும் அடித்து விடாமல் தடுக்க முயன்றார். அப்போது தேமுதிக எம்.எல்.ஏக்கள் கையில் சிக்கிக் கொண்டார் மைக்கேல் ராயப்பன். அவரை தேமுதிகவினர் சரமாரியாக அடித்து நொறுக்கி விட்டனர். இதனால் சட்டசபையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக அவைக் காவலர்களை அழைத்த சபாநாயகர் தனபால், தேமுதிக எம்.எல்.ஏக்கள் அனைவரையும் வெளியேற்றுமாறு உத்தரவிட்டார். இதையடுத்து அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏக்கள் தவிர மற்றவர்களை அவைக் காவலர்கள் வெளியேற்றினர். காயமடைந்த மைக்கேல் ராயப்பன் உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார்.

இந்த வன்முறைத் தாக்குதல் நடந்தபோது முதல்வர் ஜெயலலிதாவும் அவையில் இருந்தார்.

மைக்கேல் ராயப்பனும் திருப்பி அடித்தார்-அனகை சட்டை கிழிந்தது

இந்த சண்டைக் காட்சியை அத்தனை உறுப்பினர்களும் பரபரப்புடன் வேடிக்கை பார்த்தனர். தன்னைத் தாக்கிய தேமுதிக எம்.எல்.ஏக்களை மைக்கேல் ராயப்பனும் பதிலுக்குத் தாக்கினார். அப்போது அனகை முருகேசன் என்ற தேமுதிக எம்.எல்.ஏவின் சட்டை கிழிந்தது. இருந்தாலும் தேமுதிக எம்.எல்.ஏக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் மைக்கேலால் தனியாக சமாளிக்க முடியவில்லை. இதனால் அவருக்குத்தான் நிறைய அடிகள் விழுந்தன.

திமுக எம்எல்ஏக்கள் வரவேயில்லை:

நல்லவேளையாக இன்று திமுக எம்எல்ஏக்கள் யாரும் அவைக்கு வரவில்லை. தங்களுக்கு பேச அனுமதி தருவதில்லை, ஏதாவது பேசினால் குண்டுக்கட்டாக தூக்கி வெளியே போடுகிறார்கள் என்பதால் சட்டசபைக் கூட்டத் தொடரின் கடைசி நாளான இன்று அவைக்குப் போக மாட்டோம் என்று திமுக பொருளாளர் ஸ்டாலின் நேற்றே அறிவித்துவிட்டது நினைவுகூறத்தக்கது.

Thatstamil

Link to comment
Share on other sites

அனைவரும் எழுந்து எதிர்ப்பு

தமிழழகன் பேசியபோது தேமுதிக எம்.எல்.ஏக்கள் மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ந்து தமிழழகன் பேச முயன்றபோது சிலர் எழுந்து அவரை நோக்கி ஓடினர்.

அப்போது சில எம்.எல்.ஏக்கள் சத்தமாக ஏதோ சில வார்த்தைகளை சொல்லியபடி ஓடினர்.

சந்திரகுமாருக்கும், மைக்கேலுக்கும் வாக்குவாதம்

தேமுதிக கொறடா சந்திரகுமார் படு கோபமாக காணப்பட்டார். தமிழழகனை நோக்கி முன்னேறிய அவரை மைக்கேல் ராயப்பன் தடுத்து நிறுத்தினார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அது அப்படியே கைகலாப்பாக மாறியது.

அடிதடி - சட்டை கிழிப்பு

இதைத் தொடர்ந்து தேமுதிக எம்.எல்.ஏ.க்களும், அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ.க்களும் கைகலப்பில் ஈடுபட்டனர். சட்டையை பிடித்து இழுத்து அடித்தனர். இதனால் சட்டசபையில் பரபரப்பு ஏற்பட்டது. கூச்சல், அமளியாக இருந்தது.

சபாநாயகர் பேச்சைக் கேட்கவில்லை

சபாநாயகர் தனபால் அனைவரையும் சமரசம் செய்ய முயன்றார். ஆனால் நிலைமை கட்டுக்குள் அடங்கவில்லை. இதனால் தேமுதிக எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் சட்டசபையில் இருந்து வெளியேற்ற காவலர்களுக்கு உத்தரவிட்டார். உடனே அவை காவலர்கள் ஓடி வந்து தேமுதிக. எம்.எல்.ஏ.க்கள் அனைவரையும் கூண்டோடு வெளியேற்றினார்கள்.

துரோகிக்கு ஆதரவாக அதிமுக

பின்னர் வெளியே வந்த சந்திரகுமார் உள்ளிட்டோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். சந்திரகுமார் கூறுகையில், தேமுதிகவுக்கு துரோகம் செய்த தமிழழகன் எம்.எல்.ஏ. அதிமுகவினர் எழுதி கொடுத்ததை வாசித்தார். துணைக் கேள்வி கேட்கும்போது, விவாதம் போல அவர் விளக்கம் அளிக்கிறார்.

சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பாக இல்லை

முதல்வரைப் புகழ்ந்து பேசி அவர் செய்த துரோகத்தை நியாயப்படுத்துகிறார். அதை தட்டிக் கேட்டால் ஆளும் கட்சியினர், துரோகிகளுக்கு ஆதரவாக எங்களைத் தாக்க வருகிறார்கள். சபாநாயகர் எங்களுக்கு பாதுகாப்பு கொடுப்பார் என்று நினைத்தால், அவர் எங்களை தாக்குபவர்களுக்கு ஆதரவாக செயல்படுகிறார்.

காகிதங்களை வீசுகிறார்கள்

எங்கள் மீது புத்தகங்களையும், காகித கட்டுக்களையும் எடுத்து வீசுகிறார்கள். ஜன நாயகம் படுகொலை செய்யப்படுகிறது. தி.மு.க. ஆட்சியின்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த ஜெயலலிதாவை அவமானப்படுத்தி விட்டதாக சட்டசபைக்கு வெளியில் வந்து கூறினார். இப்போது எங்களையே தாக்கி அவை காவலர்களை வைத்து வெளியேற்றுகிறார்கள்.

ஹைலைட்... அமைதியாக வெளியேறிய பண்ருட்டி...

தேமுதிக எம்.எல்.ஏக்கள் அத்தனை பேரையும் அவைக் காவலர்கள் வெளியேற்றிய நிலையில் மூத்த உறுப்பினரும், தேமுதிக துணைத் தலைவருமான பண்ருட்டி ராமச்சந்திரன் மிகுந்த அமைதியோடு, தானாக வெளியில் நடந்து சென்றார்.

Thatstamil

Link to comment
Share on other sites

இவ்வளவும் நடக்கும்போது விஜயகாந்த் எங்கே? தண்ணியடிச்சிட்டு கவுந்திட்டாரா? :D

Link to comment
Share on other sites

அடிவாங்கினதால மைக்கல் ராஜப்பனுக்கு அம்மாவின் கடைக்கண் பார்வை கிடைச்சு அமைச்சு பதவியோ இல்லை விலை உயர்ந்த காரோ பரிசாக கிடைக்கலாம்

ஆனாலும் பணத்திற்காக விலை போன இவருக்கு நல்ல ஒரு பாடம் செம சாத்துப்படி :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.