Jump to content

குஷ்பு வீடு மீது மர்ம நபர்கள் தாக்குதல்!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை: நடிகை குஷ்பு வீடு மீது இன்று சுமார் 20 பேர் கொண்ட கும்பல் தாக்குதல் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது..

சென்னை பட்டினப்பாக்கத்தில் அவரது வீடு உள்ளது. வீட்டின் எதிரில் 10 ஆண்களும், 10 பெண்களும் திரண்டார்கள். அவர்கள் குஷ்புவுக்கு எதிராக கோஷமிட்டனர். திடீரென்று வீட்டின் மீது சரமாரியாக கல் வீசி விட்டு ஓடி விட்டனர்.

இந்த தாக்குதலில் குஷ்பு வீட்டுக்குள் நிறுத்தி வைத்திருந்த கார் கண்ணாடிகள் உடைந்தன. மதில் சுவரில் இருந்த விளக்குகளின் கண்ணாடிகளும் உடைந்தன. கல் வீசியவர்கள் யார் என்று தெரியவில்லை.

தாக்குதல் நடந்தபோது, வீட்டில் குஷ்புவோ அல்லது அவரது கணவர் சுந்தர் சி.யோ வீட்டில் இல்லை. குழந்தைகள் மட்டும் வீட்டிலிருந்ததாக கூறப்படுகிறது.

இதனிடையே ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்திருந்த நடிகை குஷ்பு,"திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

அவரது இந்த பேட்டி திமுகவினரிடையே சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்நிலையில் குஷ்பு வீடு தாக்கப்பட்டுள்ளது.

திருச்சியில் குஷ்பு மீது தாக்குதல்

இதனிடையே குஷ்பு திருச்சி சென்றுள்ள நிலையில், அங்கு அவர் மீது இன்று செருப்பு வீசி தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்நிலையில் தாக்குதல் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, மேற்கூறிய பேட்டி தொடர்பாக சிலர் தவறாக புரிந்துகொண்டுள்ளதாகவும், தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று தெரியவில்லை என்றும் கூறினார்.

http://news.vikatan.com/index.php?nid=12343#cmt241

Link to comment
Share on other sites

கருணாநிதி போனால் தமிழ் நாட்டு முதலமைசர் பதவிக்கு முன்னால் கொண்டுவருவததற்கு  தகுதி உள்ளவர் ஒருவரை யாரோ தேடுகிறார்கள். குஸ்புவின் தமிழர் அல்லாத பிறபியல்பு ஆட்சி பீடம் ஏற முதலாவது தகமை.



அதே நேரம் கருணாநிதி ராஜபக்சாவை வைத்து அரசியல் செய்கிறார்.

Link to comment
Share on other sites

இதனிடையே ஆனந்த விகடனுக்கு பேட்டியளித்திருந்த நடிகை குஷ்பு,"திமுகவுக்கு அடுத்த தலைவர் ஸ்டாலின்தான் என்று நாமே ஒரு முடிவுக்கு வந்து விடக்கூடாது. திமுக தலைவர் பதவிக்கு பொருத்தமானவர் யார் என்பதை பொதுக்குழுதான் முடிவு செய்யும். தலைவர் மட்டுமே முடிவு எடுத்துவிட்டதால் அடுத்த தலைவர் தளபதியாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம்" என்று கூறியிருந்தார்.

இதுக்கு குண்டெறியாமல் விட்டார்களே என்று சந்தோசப்பட வேண்டியது தான். :D  குஸ்பு தேவையில்லாமல் எல்லாவற்றுக்குள்ளும் மூக்கை நுழைப்பதால் இம்முறை கல்லெறியுடன் தப்பிக்கொண்டார்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குஷ்பு மீது திடீரென ஏன் கொந்தளிக்கிறது திமுக...??

 
 

சென்னை: நடிகை குஷ்புவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கட்சி திமுக. திமுக தலைவர் கருணாநிதிக்கு நிகராக அவருக்கும் போராட்டக் களங்களில் முக்கியத்துவம் கொடுத்த கட்சி திமுக. பிரசார பீரங்கியாகவும் அவரை உயர்த்தி வைத்து அழகு பார்த்தது. இப்போது ஸ்டாலினுக்கு பாதகமான முறையில் பேசியதாக வந்த செய்தியைத் தொடர்ந்து திமுகவினர் குஷ்புவுக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.

ஆனால் குஷ்புவை சமீப காலமாகவே திமுக தலைமை ஒதுக்கி வைத்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் உள்ளன. என்ன காரணம் என்று சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கூட அவரை திமுக தலைமை ஓரம் கட்ட ஆரம்பித்தது உண்மை என்று சொல்கிறார்கள்.

குஷ்பு அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து போலத்தான். ஆனால் இது திட்டமிட்ட விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

 
Link to comment
Share on other sites

சென்னை: நடிகை குஷ்புவை தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடிய கட்சி திமுக. திமுக தலைவர் கருணாநிதிக்கு நிகராக அவருக்கும் போராட்டக் களங்களில் முக்கியத்துவம் கொடுத்த கட்சி திமுக. பிரசார பீரங்கியாகவும் அவரை உயர்த்தி வைத்து அழகு பார்த்தது. இப்போது ஸ்டாலினுக்கு பாதகமான முறையில் பேசியதாக வந்த செய்தியைத் தொடர்ந்து திமுகவினர் குஷ்புவுக்கு எதிராகக் கிளம்பியுள்ளனர்.

ஆனால் குஷ்புவை சமீப காலமாகவே திமுக தலைமை ஒதுக்கி வைத்து வருவதாக அரசல் புரசலாக செய்திகள் உள்ளன. என்ன காரணம் என்று சரியாக கணிக்க முடியாவிட்டாலும் கூட அவரை திமுக தலைமை ஓரம் கட்ட ஆரம்பித்தது உண்மை என்று சொல்கிறார்கள்.

குஷ்பு அரசியலுக்கு வந்ததே ஒரு விபத்து போலத்தான். ஆனால் இது திட்டமிட்ட விபத்து என்றுதான் சொல்ல வேண்டும்.

கற்புப் பேச்சால் கண்ணீர் விட்ட குஷ்பு

அது 2005ம் ஆண்டு. அப்போது அதிமுக தரப்புடன் சற்றே நெருக்கமாக இருந்தார் குஷ்பு. இந்த நேரத்தில்தான் கற்பு குறித்து அவர் பேசப் போக அது பெரும் சர்ச்சையாக வெடித்தது. இதையடுத்து அவர் ஜெயா டிவியில் கண்ணீர் மல்க மன்னிப்பு கேட்டார்.

கற்பு பேச்சை எதிர்த்து தமிழகம் முழுவதும் குஷ்பு மீது சரமாரியாக வழக்குகள் போடப்பட்டன. இதனால் கதிகலங்கிப் போனார் குஷ்பு.

இந் நிலையில் காங்கிரஸில் சேரப் போவதாக செய்திகள் வெளியாகின. ராகுலை சந்திக்கப் போகிறார் என்று செய்தி வந்தது.

உச்சநீதிமன்றத்தில் கிடைத்த எதிர்பாராத வெற்றி

தன் மீது தொடரப்பட்ட வழக்குகளை எதிர்த்து உச்சநீதி்மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார் குஷ்பு. அந்த வழக்குகளை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச், குஷ்பு பேசியது சரியே என்று கூறி அவர் மீதான அத்தனை வழக்குகளையும் ஒரே தீர்ப்பில் ரத்து செய்து உத்தரவிட்டார்.

அதிரடியாக திமுகவுக்குத் தாவிய குஷ்பு

இந் நிலையில் காங்கிரஸில் சேருவார் குஷ்பு என்று எதிர்பார்க்கப்பட்ட குஷ்பு திடீரென யாரும் எதிர்பாராத வகையில் திமுகவில் போய்ச் சேர்ந்தார் குஷ்பு.

ஜெயா டிவியிலிருந்து நீக்கம்

குஷ்பு இப்படி திமுகவில் போய்ச் சேர்ந்ததால் கடுப்பான ஜெயா டிவி நிர்வாகம் அவரை ஜாக்பாட் நிழ்ச்சியிலிருந்து தூக்கியது.

திமுகவின் பிரசார பீரங்கியானார்

திமுகவில் சேர்ந்த குஷ்பு அங்கு முக்கியத்துவம் பெறலானார். அவரைச் சுற்றி ஒரு கூட்டம் கூடியது. திமுகவின் முக்கியப் பேச்சாளராக, பிரசார பீரங்கியாக வலம் வ்நதார்.

கருணாநிதிக்கு சமமாக

கிட்டத்தட்ட கருணாநிதிக்கு நிகரான முறையில் குஷ்புவை தூக்கி வைத்துக் கொண்டாடினர். திமுகவின் போராட்டங்களின்போது கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின் ஆகியோருக்கு அடுத்து குஷ்புவின் பெயரையும் சேர்க்க ஆரம்பித்தனர்.

கையைப் பிடித்து இழுத்த திமுகவினர்

இப்படி எல்லாமே சுமூகமாக போய்க் கொண்டிருந்த நிலையி்ல்தான் சென்னையில் நடந்த திமுக கூட்டத்திற்கு வந்திருந்த குஷ்புவின் கை மற்றும் இடுப்பை சிலர் பிடித்து விட்டதாக பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் குஷ்பு பெரும் அதிர்ச்சி அடைந்தாராம்.

ஓரம் கட்ட ஆரம்பித்த திமுக தலைமை

இந்த சம்பவத்திற்குப் பி்ன்னர் திமுக கூட்டங்களுக்குப் போவதை குறைக்க ஆரம்பித்தார் குஷ்பு. இருப்பினும் முக்கிய நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே போய் வந்தார். இந் நிலையில் திமுக தலைமையும் குஷ்புவை ஓரம் கட்ட ஆரம்பித்தது. கோபாலபுரம் வீட்டுக்கு வர அவருக்கு தடை போடப்பட்டதாகவும் தகவல்கள் வந்தன.

அழகிரி மீது காட்டிய பாசம் காரணமா?

இந் நிலையில் திடீரென மு.க.அழகிரி கோஷ்டி பக்கமாக சமீபகாலமாக குஷ்பு சாய ஆரம்பித்ததாகவும் தகவல்கள் வந்தன. இதனால் ஸ்டாலின் தரப்பினரின் அதிருப்திக்கு உள்ளார்.

சொந்தக் கட்சியினரே தாக்கும் அவலம்

தற்போது போகும் இடமெல்லாம் சொந்தக் கட்சியினராலேயே தாக்கப்படும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார் குஷ்பு. வாகை சந்திரசேகரின் காட்டமான அறிக்கைக்குப் பின்னரே குஷ்பு வீடு தாக்கப்பட்டது. அவரையும் திருச்சியில் வைத்து தாக்கியுள்ளனர். செருப்பும் வீசப்பட்டுள்ளது.

திமுகவிலிருந்து விலகுவாரா?

திமுகவினரின் செயலால் குஷ்பு அதிர்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. தனது வீட்டை திமுகவினர் தாக்கியதும் அவரை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. எனவே அவர் திமுகவிலிருந்து விலகுவாரா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

Thatstamil

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்திய‌ அள‌வில் ஏவிம் மிசினுக்கு எதிர்ப்பு கூடுதே அண்ணா அது எத‌ற்காக‌.................ப‌ல‌ர் ஊட‌க‌ங்ளில் நேர‌டியா சொல்லுகின‌ம் ஏவிம் மிசினில் குள‌று ப‌டி செய்ய‌லாம் என்று ஏன் அவ‌ர்க‌ள் மீது தேர்த‌ல் ஆனைய‌ம் வ‌ழ‌க்கு போட‌ வில்லை................இப்ப‌டி கேட்க்க‌ ப‌ல‌ இருக்கு...............யாழிலே வ‌ய‌தில் மூத்த‌வ‌ர்க‌ள் எழுதி விட்டின‌ம் இந்தியாவில் தேர்த‌ல் என்ப‌து க‌ண்துடைப்பு நாட‌க‌ம் என்று அப்ப‌ புரிய‌ வில்லை இப்ப புரியுது...............இப்ப இருக்கும் தேர்த‌ல் ஆனைய‌ம் கிடையாது மோடியின் ஆனைய‌ம்..............ப‌ல‌ருக்கு ப‌ல‌ ச‌ந்தேக‌ம் வ‌ந்து விட்ட‌து த‌மிழ் நாட்டு தேர்த‌ல் ஆனைய‌ம் மேல்..........................
    • வைகோ தனது மகனை அரசியிலில் முன்னிறுத்துவதற்காக நீண்டகாலம் வைகோவிற்கு விசுவாசமாக இருந்த கணேசமூர்த்த்திக்கு  தேர்தலில் இடங் கொடுக்கவில்லை.. திமுக ஒரு இடம்தான் கொடுக்குமென்றால் அதிமுகவுடன் கூட்டணி அமைந்திருந்தால் அவர்கள் கட்டாயம் 2 இடம் கொடுத்திருப்பார்கள்.கூட்டணிமாறுவது வைகோவுக்கு புதிதில்லை.வைகோவைக் திமுகவில் இருந்து வெளியேற்றியதற்காக எத்தனையோ போர் தீக்குளித்தார்கள். வாரிசு அரசியலை எதிர்த்து கட்சி தொடங்கியவர் அதே வாரிசு அரசியலைக் கையில் எடுத்தது மட்டுமல்ல யாரை எதிர்த்து கட்சி தொடங்கினாரோ அவரின் காலடியில் கிடக்கிறார். கணேசகமூர்த்தியின் சாவுக்கு வைகோவே பொறுப்பு.
    • தமிழ் தேசியத்தை தனது கட்சியின் கொள்கையாக கொண்டுள்ள சீமான் பிள்ளைகளை தமிழ்வழி கல்வியில் சேர்க்காதது தவறான முன்னுதாரணம்.. படிப்பது தேவாரம் இடிப்பது சிவன் கோவில் என்று வாழும் திராவிடகட்சிகளுக்கும் தனக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்பதை தனது சில அண்மைக்கால நடவடிக்கைகள் மூலம் சீமான் வெளிப்படித்தி வருகிறார்.. அவரை நம்பி பின்தொடரும் பல லட்சம் இளைஞர்கள் திராவிட கட்சிகளுக்கு மாற்றாக நாம் தமிழர் இருக்கும் என்று வந்தவர்கள்.. இலட்சிய பிடிப்புள்ளவர்கள்.. இப்படியான செயல்களை அவர்களை வெறுப்பேற்றும்.. நமக்கெதுக்கு வம்பு.. நம்மூர் அரசியலே நாறிக்கிடக்கு.. தமிழக உறவுகள் தம் அரசியலை பார்த்துக்கொள்வார்கள்..
    • சாந்தனின் இறுதி ஊர்வலத்தில் தமிழ் தேசியம் இன்னமும் உயிருடன் இருப்பது போலவே உணர முடிந்ததே?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.