Jump to content

டெசோ குறித்து விமர்சனம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

டெசோ குறித்து விமர்சனம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு!

சென்னை: அதிமுக உறுப்பினர் வைகை செல்வனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து சட்டசபையிலிருந்து 2 வது நாளாக திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது.

வைகைச் செல்வன் பேசுகையில், சிலர் தனது மகனுக்காகவும், பேரன், பேத்திக்காகவும் கருத்தரங்கம் நடத்துகிறார்கள் என்றார்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய வைகைச் செல்வன், "இலங்கையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இலங்கையில் மனித உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதை தடுக்க இவர்கள் எதுவும் செய்யவில்லை. கடிதம் மட்டும் எழுதிக் கொண்டு இருந்தார்கள். இப்போது டெசோ என்கிறார்கள்" என்று கூறியபோது, திமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

உடனே சபாநாயகர் தனபால், "உறுப்பினர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை, பொதுவாகத்தான் பேசுகிறார். எனவே அமருங்கள்" என்று கூறினார்.

பின்னர் திமுக கொறடா சக்கரபாணி வேண்டுமானால் இதற்கு விளக்கம் அளிக்கலாம் என்றார். ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை.

மீண்டும் அதிமுக உறுப்பினர் வைகை செல்வனை பேசும்படி சபாநாயகர் அழைத்தார்.இந்நிலையில் அவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

நேற்று காவிரி பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

http://news.vikatan.com/?nid=12326#cmt241

Link to comment
Share on other sites

நீண்ட கால உறுதிமொழியை மீறி விட்டார்: இலங்கை ஜனாதிபதி கருணாநிதி கடும் கண்டனம்

 

karunanithi1.gifஇலங்கை தீவின் 65-வது விடுதலை நாள் விழா, திரி கோணமலையில் நடை பெற்றபோது, அந்த நிகழ்ச்சியில் பேசிய இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, தமிழர்களுக்குத் தன்னாட்சி அதிகாரம் தர முடியாது. நாட்டை இன ரீதியாகப் பாகுபடுத்துவது என்பது நடைமுறைக்கு சாத்தியமில்லாதது என்று அறி வித்திருக்கிறார். மேலும் அவர் தனது உரையில், இனவேறு பாடுகளைப் பற்றியும், மதவேறு பாடுகளைப் பற்றியும், சிங்களர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் ஆகியோரின் உன்னத கலாச்சாரத்தைப் பற்றியும், ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று கேட்கு மளவுக்குப் பேசியிருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்களைப் படுகொலை செய்து லட்சக்கணக்கான தமிழர்களைத் தமது பூர்வீக பூமியான ஈழத்திலிருந்து பல்வேறு நாடுகளுக்கும் அகதிகளாகவும் அனாதைகளாகவும் புலம் பெயரச் செய்ததோடு, அவர்களுடைய வாழ்வாதாரத்தையும் கேள்விக்குறியாக்கி விட்டு, இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் தமிழர்களுக்குச் சொந்தமான வீடுகளையும், நிலங்களையும், தொழில் நிறுவனங்களையும் சிங்களர்கள் கைப்பற்றி வளமாக இருந்த தமிழர்களின் வாழ்வாதாரத்தை வற்றச் செய்து விட்டு, அவர்களது அடிப்படை ஜனநாயக உரிமைகளையும், வாழ்வுரிமைகளை யும் பறித்து விட்டு சுதந்திர மான நீதிப்பரிபாலன முறை களிலும், ஊடகங்களின் நட வடிக்கைகளிலும் தலையிட்டு நிர்வாகத்தையே தலைகீழாக மாற்றி ஒரே மொழி, ஒரே மதம் என்று இலங்கை நாட்டைச் சர்வாதிகாரப் பாதையில் செலுத்திக் கொண்டிருக்கும் ராஜபட்சேவை, மனித உரிமைகள், மனித நேயம் ஆகியவற்றுக்கு எதிராகப் பல்வேறு வகையான போர்க் குற்றங்களைப் புரிந்த சர்வதேசக் குற்றவாளியென உலக நாடுகள் பார்க்கின்றன.

சிங்களப் பேரினவாதத்தின் சின்னமான ராஜபக்சே, தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை வழங்குவதாக இந்தியாவுக்கும், மற்ற நாடுகளுக்கும் நீண்ட காலமாக அளித்து வந்த உறுதிமொழியை இப்போது செய்திருக்கும் அறிவிப்பின் மூலமாக மீறியிருக்கிறார் என்பது, உலகெங்கும் வாழும் தமிழர்களும், இந்தியாவும், சர்வதேச அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டிய ஒன்றாகும்.

சிங்களர்கள் சார்பில் ஈழத் தமிழினத்திற்கு கொடுக்கப்பட்ட எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றப் படவில்லை என்பது சரித்திரச் சான்றாகி விட்டது. 1925 ஜூன் 25-ம் நாள் யாழ்ப்பாணத்தில் இலங்கை தேசியக் காங்கிரஸ் தலைவர்கள், இலங்கைத் தமிழர் மகாஜன சபையுடன் செய்து கொண்ட உடன்பாடு முதன் முதலாக காற்றில் பறக்க விடப்பட்டது.

1956-ல் பண்டாரநாயகா பிரதமரானபோது, சிங்களம் மட்டுமே ஆட்சிமொழி என்ற சட்டத்தை நிறைவேற்றி, 1944-ல் சிங்களமும் தமிழும் ஆட்சிமொழிகள் என ஜெயவர்த்தனா தமிழ்ப் பிரதிநிதிகளின் கருத்தை ஏற்று நிறைவேற்றிய சட்டத்தை முறித்தார். 1965-ல் டட்லி சேனநாயகா பிரதமரானதும், மாவட்ட சபைகளை அமைத்து அதிகாரத்தைப் பரவலாக்க, தந்தை செல்வாவுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தினார். ஆனால் 1969லேயே டட்லி சேனநாயகா அந்த ஒப்பந்தத்தைக் கைவிட்டு விட்டதாக ஒருதலைப்பட்சமாக அறிவித்தார்.

1987-ல் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியுடன், இலங்கை நாடு ஒப்பந்தம் ஒன்றைச் செய்தது. ஆனால் அந்த ஒப்பந்தமும் 25 ஆண்டுகளுக்குப் பிறகும் இதுவரை நிறைவேற்றப்பட வில்லை. இப்படிச் சிங்கள அரசு செய்து கொண்ட பல்வேறு ஒப்பந்தங்களை நிறை வேற்றவில்லை என்பது மட்டுமல்லாமல், அவற்றை எல்லாம் மீறியே இலங்கையில் காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

இவ்வளவுக்கும் பிறகு, நமது இந்தியப் பேரரசு தற்போதாவது விழித்துக் கொண்டு, ராஜபக்சேவின் சுய உருவத்தையும் குணத்தையும் நோக்கத்தையும் புரிந்து கொண்டு, ஈழத் தமிழர்களின் வாழ்வுரிமையையும் வாழ்வாதாரத்தையும் ஜனநாயக உரிமைகளையும் உலக அமைப்புகளின் உதவியோடு காப்பாற்றிட முன்வர வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு கருணாநிதி கூறியுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி

 

Link to comment
Share on other sites

 
டெசோ குறித்து விமர்சனம்: சட்டசபையிலிருந்து திமுக வெளிநடப்பு!

சென்னை: அதிமுக உறுப்பினர் வைகை செல்வனின் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து  சட்டசபையிலிருந்து 2 வது நாளாக திமுக உறுப்பினர்கள் இன்று வெளிநடப்பு செய்தனர்.

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும்  தீர்மானத்தின் மீது விவாதம் நடந்தது. 

வைகைச் செல்வன் பேசுகையில், சிலர் தனது மகனுக்காகவும், பேரன், பேத்திக்காகவும்   கருத்தரங்கம் நடத்துகிறார்கள் என்றார்.

இதற்கு திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருப்பினும் தொடர்ந்து பேசிய வைகைச்  செல்வன், "இலங்கையில் அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.இலங்கையில்  மனித உரிமைகள் பறிக்கப்பட்ட போது அதை தடுக்க இவர்கள் எதுவும் செய்யவில்லை.  கடிதம் மட்டும் எழுதிக் கொண்டு இருந்தார்கள். இப்போது டெசோ என்கிறார்கள்" என்று  கூறியபோது, திமுகவினர் மீண்டும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

உடனே சபாநாயகர் தனபால், "உறுப்பினர் யாரையும் குறிப்பிட்டு பேசவில்லை,  பொதுவாகத்தான் பேசுகிறார். எனவே அமருங்கள்" என்று கூறினார்.

பின்னர் திமுக கொறடா சக்கரபாணி வேண்டுமானால் இதற்கு விளக்கம் அளிக்கலாம்  என்றார். ஆனால் அவர் எந்த விளக்கமும் அளிக்கவில்லை. 

மீண்டும் அதிமுக உறுப்பினர் வைகை செல்வனை பேசும்படி சபாநாயகர்  அழைத்தார்.இந்நிலையில் அவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர்.

நேற்று காவிரி பிரச்னை தொடர்பாக ஏற்பட்ட மோதலில் திமுக உறுப்பினர்கள்  வெளிநடப்பு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.